Friday, December 31, 2021

அரசு பள்ளிக்கூட மாணவர்களின் கனவு 7.5 சதவிகிதம் - திமுக ஏன் அழிக்க விரும்புகின்றது

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள சிறிய புள்ளியைத் தொடங்கி வைத்தவர்களாக என் கண்ணுக்குத் தெரிகின்றார்கள்.  இட ஒதுக்கீடு என்ற விசயத்தில் முறையே 50 சதவிகிதம் கடைசியாக ஜெயலலிதா உருவாக்கிய 69 சதவிகிதம் என்பது இங்கே மிகப் பெரிய சமூக மாறுதல்களை உருவாக்கியது. 



எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History

இதனை இங்கே குறிப்பிட்டு எழுதக் காரணம் கருணாநிதி போல ஒவ்வொன்றிலும் தனக்கு என்ன ஆதாயம்? என்பதனைப் பார்க்காமல் அந்தப் பிரச்சனை தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கிரிமினல் தனம் செய்யாமல் முறைப்படி சட்டப் பாதுகாப்பு செய்து வைத்த காரணத்தால் இட ஒதுக்கீடு விசயத்தை எவராலும் கை வைக்க முடியவில்லை.

Thursday, December 30, 2021

காலம் மாறும்.

நீங்கள் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள குற்றவாளிகள் என்று யாராக இருந்தாலும் நீதிமன்றம் 15 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைத்து விசாரித்து விட்டு மீண்டும்  கூட்டி வாருங்கள் என்றே அறிவுறுத்தும்.  



Wednesday, December 29, 2021

5 மணி நேரம் (2021 கற்றதும் பெற்றதும்)

அமேசான் கிண்டில் சார்பாக ஒரு போட்டி நடந்தது. அதற்காக ஒரு வாரத்தில் இரவு நேரத்தில் தினமும் மூன்று மணி நேரம் என்கிற ரீதியில் 5 முதலாளிகளின் கதை என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி ( மின் நூல் வடிவம்) வெளியிட்டேன். பரவலாகச் சென்றது. விமர்சனம் 100 க்கும் மேல் வந்தது. வெற்றிக்கான ஆடு புலி ஆட்டத்திற்குள் நுழைய முடியவில்லை. 



Monday, December 27, 2021

2021 கற்றுத் தந்த பாடங்கள்

கற்றுக் கொடுத்தது 2021

1. கடந்த இரண்டு வருடங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் நல்ல தரமான நிர்வாகம் நடத்தும் தனியார் நிறுவனங்கள் தவிர மற்ற அனைவரின் வாழ்க்கையிலும் பொருளாதாரக் குறைபாடுகள் இருந்தது.  நாங்களும் விதிவிலக்கல்ல.  அளவீடுகள் மட்டும் வித்தியாசமுண்டு.  

Sunday, December 26, 2021

காசி புனித ஸ்தலம் (மோடி ஒரு கருவி)

"நாங்கள் அதிகாலையில் கங்கையில் மூழ்கி எழுந்த போது குளிரை விட நாற்றமும் சகித்த முடியாத வாடையும் கஷ்டமாக இருந்தது.  அதை விட லேசாக வெளிச்சம் வந்த பின்பு ஆற்றைப் பார்த்தேன். குழந்தை பிணம் பாதி எரிந்து மீதி எரியாமல் மிதந்து போனது.  அங்கங்கே தலை வேறு முண்டம் வேறு கிடந்தது".

இப்படித்தான் நான் சிறுவனாக இருந்த போது என் அம்மா காசி சென்று வந்த பயணம் பற்றி என்னிடம் கூறினார்.  அந்த சமயத்தில் (1984) அப்பாவும் அம்மாவும் தாஜ்மஹால் முன் எடுத்து வந்த படத்தை வேடிக்கை பார்த்தோம். பாடத்தில் படித்த மும்தாஜ் குறித்து சுவராசியமாக பேசிக்கொண்டோம்.

2014 முதல் தவம் போல படிப்படியாக நகர்ந்து இன்று வாரணாசி முழுக்க அங்கு வாழும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து விசயங்களையும் அந்தத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியில் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்துள்ளார்.  

நான் கடந்த 30 வருடங்களாக காசி குறித்த செய்திகளைக் கவனித்து வருகின்றேன். மதம் மற்றும் இறைவன் சார்ந்த ஆர்வம் என்பதனை விட ஒரு புனித நகரத்தை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எப்படி சூறையாட முடியும் என்பதனை அங்கு சென்று வந்த பலர் மூலம் அறிந்தே வைத்துள்ளேன்.

பல நண்பர்கள் தனிப்பட்ட உரையாடலின் போது மோடி மிகவும் சிலாகித்துப் பேசுகின்றார்கள். அரசு நடக்கும் விதத்தை ஆச்சரியத்துடன் பேசுகின்றார்கள்.  அவர்கள் இணையத்தில் எழுதும் கட்டுரையில் எப்போதும் போலத் தூற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.  ஏன் என்று கேட்டேன்.

பிழைப்பு முக்கியம் பாஸ் என்று சிரித்துக் கொண்டே சொல்கின்றார்கள்.

மோடி என்பவர் நமக்குப் பிரதமர்.  அவர் காசி விஸ்வநாதருக்கு ஒரு கருவி என்றே நான் நினைக்கின்றேன்.  அடுத்த சில வருடங்களில் அயோத்தி மற்றும் காசி இது தவிர வட இந்தியாவில் உள்ள இந்து புனித தலங்கள் அனைத்தும் தொடர்ந்து ஒரே புள்ளியில் (ரயில் மார்க்கமாக) இணைக்கப்பட்டு வருகின்றது.

அஷ்டலக்ஷ்மிகளும் அருள்பாலிக்கப் போகின்றார்கள்.

இனி வரும் இந்து மக்களின் ஆன்மீகப் பயணம் அதிகரிக்கும் என்பது ஒரு பக்கம். 

அரசுக்கு வரக்கூடிய வருமானம் பல மடங்கு கூடும் என்பது மறு பக்கம்.

(மூன்று பகுதிகள் காசி குறித்த காணொளி கீழே இணைப்பில் உள்ளது)

https://youtu.be/Mbk_ZG7CwUI

https://youtu.be/VW0lHR7bBqA

https://youtu.be/UxKzqQ8vrkg

Saturday, December 25, 2021

வரலாற்று நாயகர் வாஜ்பாய்

மறைந்த பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் டிசம்பர் 25. 13 நாட்கள். 

Friday, December 24, 2021

ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பு (முழுமையான விபரங்கள்)

நீங்கள் மத்திய மாநில அரசுகளை எப்படிப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது? கட்சி ரீதியாக? கொள்கை ரீதியாக? அல்லது அவர்கள் செய்யும் நிர்வாக ரீதியாக.  நான் எப்போதும் நான் பணிபுரிந்த வருடம் 100 கோடி வரவு செலவு செய்த நிறுவனத்தோடு மாநில அரசையும், 3000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ள மற்றொரு நிறுவனத்தை மத்திய அரசுடன் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதுண்டு.  

நிர்வாக அமைப்பு வேறு. எதிர்பார்ப்புகளும் வேறு.  




Thursday, December 23, 2021

Letter to Thol.Thirumavalavan அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கடிதம்..

Letter to Thol.Thirumavalavan

அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கடிதம்..

என் பிரியத்துக்குரிய திருமா அண்ணன் அவர்களுக்கு

Thol.Thirumavalavan நீங்க இந்த ஐடி யில் இருப்பீர்களா? அல்லது இது உங்கள் பார்வைக்கு வருமா? என்பது குறித்து எனக்கு கவலையில்லை.  நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்று ஓய்வாக இருக்கும் போது பட்டியல் இட்டுப் பார்த்தேன்.  அப்போது தான் இந்த துண்டுச்சீட்டு என் பார்வையில் பட்டது.



Tuesday, December 21, 2021

மோடி - அவர் ஒரு கருவி.

"இத்தனை கோடி இத்துகளின் புனிதத் தலமிது. ஏன் இப்படி அசுத்தமாக இருக்கின்றது"?



Sunday, December 19, 2021

கர்மா என்ற வார்த்தை

"மோடி இந்தியாவை இரண்டாக பிளக்கின்றார். இதுவரை இருந்த பிரதமர்கள் செய்யாதவற்றைச் செய்கின்றார்" என்று டெலிகிராப் ஆங்கில நாளிதழ் அலறுகின்றது.  இது வடக்கே.  

இங்கே நடப்பது மொத்தத்திலும் வித்தியாசமானது.  



Saturday, December 18, 2021

நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

லோக மான்ய பாலகங்காதர திலகர் காலத்தோடு கரைந்த பின்பு அடுத்த சுடரொளி ஏந்தி ஓடத் தொடங்கியவர் மோகன் தாஸ் கரம் சந்த்.  

பின்னாளில் தான் மகா ஆத்மா காந்தியாக மாறினார்.

முன்னவர் கேட்டது "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை".


Wednesday, December 15, 2021

எதற்கும் துணிந்தவன்.

இது வரப்போகின்ற திரைப்படத்தின் பெயர் என்று தானே நீங்கள் நினைப்பீர்கள்? 


Monday, December 13, 2021

தாயம் 1 (முதல் பொது மேடை)

கோவையில் இருக்கும் நண்பர் பழனிச்சாமி அழைத்து டிசம்பர் 12 அன்று கோவையில் நடக்கும் கூட்டத்தில் பேசுங்க. பெயர் ஏற்கனவே கொடுத்து விட்டேன் என்றார். கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் முடிந்தது விட்டது. பேசி விட்டு வந்தேன்.

Thursday, December 09, 2021

விஜயன் திருமணம் டிசம்பர் 8.

டிசம்பர் 7 அன்று இராமேஸ்வரம் சென்று இருந்தேன். தம்பி விஜயன் திருமணம் டிசம்பர் 8.  


Monday, December 06, 2021

கதை சொல்லும் நேரமிது - Podcast

பாட்காஸ்ட் குறித்து நண்பர்களுக்குப் பெரிய குழப்பம் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. பலருக்கும் அதனைப் பற்றி அதன் முக்கியத்துவம் குறித்துப் புரியவில்லை என்றே நினைக்கின்றேன். 

சில தினங்களுக்கு முன் அமேசான் கிண்டில் செயலி குறித்து விளக்கமாக எழுதி இருந்தேன். கோவையிலிருந்து தம்பி தரவிறக்கம் செய்து வாட்ஸ்ஆப் வாயிலாக உறுதிப் படுத்தி இருந்தார். மகிழ்ச்சி.

நாம் மனத்தடைகளுடன் இருப்பதால் எதைப் பார்த்தாலும் பயம். உள்ளூர இருக்கக்கூடிய அச்ச உணர்வு புதிய வாய்ப்புகள் பக்கம் நம்மை நகர விடாமல் குண்டுச் சட்டிக்குள் கழுதை மேய்க்க வைத்துக் கொண்டே இருக்கின்றது என்பதனை உணரும் போது வயது அறுபது ஆகி விடுகின்றது. கடைசியில் என்ன? கழிவிரக்கத்துடன் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமையுடன் புலம்பி கடைசியில் போய்ச் சேர வேண்டியது தான்.

வானொலி இருந்த வரைக்கும் நாம் செய்து கொண்டு இருந்த வேலைகள் நிற்காது. அதே சமயத்தில் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நாம் நம் கடமையைச் செய்து கொண்டே இருந்தோம். தொலைக்காட்சி பரவலாக அறிமுகம் ஆனதும் அதன் முன்னால் அமர்ந்து நாம் நம் கடமைகளைத் தியாகம் செய்து நேரம் ஒதுக்கி யாருக்காகவே அழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம்.

ஆனால் பாட்காஸ்ட் என்பது உங்கள் நேரத்தைத் திருடாது. இதுவும் வானொலி போலத் தான்.  இதனைத் தமிழில் செய்தியோடை என்கிறார்கள்.

பலவிதமான செய்தியோடைகள் உள்ளது.  

1. கூகுள் 2. ஸ்பாட்டிபை 3. ஆங்கர் 

இவை மூன்று உலகம் முழுக்க அதிகமான பேர்களுக்குத் தெரிந்த செயலி ஆகும்.  ப்ளே ஸ்டோரில் சென்று உங்கள் அலைபேசியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.  உங்கள் மின் அஞ்சல் முகவரி அல்லது பெயர் மற்றும் கடவுச் சொல். எப்போதும் போல.

பாடல்கள் பேச்சுகள், உரையாடல்கள் (அனைத்து மொழிகளும் உண்டு) என்று பயணம் செய்யும் போது மற்ற வேலைகள் செய்து கொண்டு இருக்கும் போது கேட்கலாம்.   கட்டணத்துடன் பிரிமியம் சேவைகளும் உண்டு. 

இலவசச் சேவைகளில் பெரும்பாலான அனைத்தும் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.

(பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் கடித வரிகளை ஏன் பாட்காஸ்ட் ல் தொடர்ந்து வலையேற்றி வருகின்றேன் என்பதற்கு ஒரே காரணம் அது வெறுமனே அரசியல்வாதிகள் எப்போதும் எழுதும் கடிதம் அல்ல. அதில் சமூகவியல், சர்வதேச அரசியல், தேசிய மற்றும் மாநில அரசியல் போன்ற அனைத்துத் துறைகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது)

ஃபேஸ்புக், ட்விட்டர் என்பது ஒரு அளவுக்கு மேல் உங்கள் சிந்தனைகளை வளர்க்காது. அதை விட்டு வெளியே செல்லவும் உங்களுக்கு மனமும் வராது. காட்சி ஊடகம் பக்கம் சென்றால் மொத்தமும் காலி. அது பேஸ்புக் காணொளி, ரீல்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ், படங்கள் கடைசியாக யூ டியூப்.  முடிந்தது ஜோலி.  

சினிமா... சினிமா... இது தான் கடைசி வரைக்கும் உங்கள் மண்டைக்குள் இருக்கும்.

சில மாதங்கள் கழித்து உங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள்.  கட்டாயம் தமிழக தொலைக்காட்சி விவாதங்களை பார்க்கவே பார்க்காதீர்கள். அரை மெண்டல் ஆகி விடுவீர்கள்.

உங்களை உங்களுக்கே பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. மனரீதியாக பல மாறுதல்களும் உருவாகி இருக்கும்.

முக்கியமான மூன்று பாட்காஸ்ட் இணைப்பு கொடுத்து உள்ளேன்.  உலகம் முழுக்க அத்தனை வளர்ந்து நாடுகளிலும் இந்த சேவை தான் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கின்றது.  

இதன் தொடர்ச்சியாக ஆடியோ புத்தகங்கள் வந்து கொண்டு இருப்பதை நீங்கள் அறிந்து இருக்க வாய்ப்புண்டு.

நாமும் மாறித்தான் ஆக வேண்டும்.

முந்திக் கொள்ளுங்களேன். முடிந்தால் உங்கள் நண்பர்களிடமும் தெரியப்படுத்துங்கள்.

()()()

06 December 2021

தமிழக பாஜக தலைவர் திரு. கு. அண்ணாமலை அவர்களின் ஒவ்வொரு உரையும் அறிவார்ந்த ஆச்சரியப்படத் தக்க வகையில் அமைந்துள்ளது. இது போன்ற உரை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் சென்று அடைய வேண்டும். கேட்கும் ஒவ்வொருவரும் இதனை கடமையாகச் செய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் கல்வி அறிவு மூலம் தங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனை உணர்ந்து அம்பேத்கார் உருவாக்கிய உண்மையான கொள்கைகளையும், அம்பேத்கார் என்ற பெயரை வைத்து ஓட்டு அரசியல் செய்து தங்களையும், தங்கள் அதிகார வெறிக்காக பட்டியல் இன சகோத சகோதரிகளை காலம் முழுக்க அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றவர்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள திரு. அண்ணாமலை அவர்கள் பின்னால், பாஜக பின்னால் நிற்பது அவசியம். 

06 December 2021 

Annamalai Kuppusamy Nov 28 பாஜக பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒலிவடிவம்

Listen to "அம்பேத்கார் வகுத்து தந்த மக்கள் பாதை மகத்தான பாதை (கு. அண்ணாமலை)" by ஜோதிஜி பேச்சு JothiG Pechu. 


Saturday, December 04, 2021

நல்ல சரக்கு வழங்கு.

 பாஜக ஆட்சியின் நிரந்தர வருகையை எதிர்பார்த்து



Wednesday, December 01, 2021

இந்தியா 1989-2014 - ஒரு முன்னுதாரண மாற்றம்

 PART I   #2014மோடிக்குமுன்பின்

இந்தியா 1989-2014  - ஒரு முன்னுதாரண மாற்றம்

சீனாவின் வளர்ச்சியைத் தொட இந்தியாவிற்கு இன்னும் 40 வருடங்கள் ஆகலாம் என்று ஒவ்வொருவரும் ஒப்பிட்டு பெருமையுடன் சீனாவைப் பார்க்கின்றார்கள்.



Monday, November 29, 2021

200 நாட்கள்


இன்று முதல் இந்த மின்னூல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 புதிய நண்பர்களுக்காக இந்த தகவல்



Thursday, November 25, 2021

பழங்குடியினர் - மத்திய அரசின் வெற்றி பெற்ற திட்டங்கள்

ஒரு திரைப்படம் பழங்குடியினர் மேல் பரிதாபப்பட வைத்துள்ளது. அதிகம் பேர்களை எழுத வைத்துள்ளது. ஆனால் கடைசியில் வெங்காயம் உரித்தால் என்ன மிஞ்சுமோ அதே போல வித்தியாசமான பல உண்மை விவகாரங்களை படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக இப்போது வெளியே கொண்டு வந்து கொண்டே இருக்கின்றது. 

இந்த சமயத்தில் பழங்குடியினர் வாழ்க்கையில் மத்திய அரசு என்ன சாதனைகள் செய்து உள்ளனர்? என்பதனை யாராவது விபரம் புரிந்தவர்கள் பேசினால் நன்றாக இருக்குமே என்று யோசித்த போது நண்பர் சிவா இவரை அறிமுகம் செய்து வைத்தார்.  தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடிகள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் திரு எம் நாகலிங்கம் அவர்கள் (துணை பேராசிரியர்) முக்கால் மணி நேரம் பேசி முழுமையாக புரிய வைத்தார்.  

மபி உள்ள மலைப் பிரதேசத்தில் இருக்கும் அவர் இணையத் தொடர்பில்  சிக்கல் உருவானாலும் முடிந்தவரைக்கும் ஆதாரப் பூர்வத் தகவல்களை அளித்துள்ளார்.

சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தியா முழுக்க இருக்கும் பழங்குடியினர் வாழ் மக்களுக்கு மத்திய அரசாங்கத்தில் 40 துறைகள் தொடர்ந்து செயல்படுகின்றன.  பல ஆயிரம் கோடிகள் அவர்களின் நல்வாழ்வுத் திட்டத்திற்காகத் தொடர்ந்து செலவழிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் துறையில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் இணையம் வழியே கண்காணிக்கப்படுகின்றது. எவர் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் இரண்டு பிரச்சனைகள்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையிலிருந்து நாகரிக வாழ்க்கை வரத் தயாராக இல்லை.
மீதி உள்ள மக்களுக்குச் செல்ல வேண்டிய நிதி மாநிலம் வாரியாக அரசியல் சூழல் பொறுத்து மாறுபடுகின்றது.

இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
நல்ல பேச்சு. அவசியம் கேளுங்கள்.  

  
தமிழக பாஜக தலைவர் கு அண்ணாமலை எழுதும் கடிதம் ஒலி வடிவில்

இன்று நான் எனக்கு வரும் கடிதங்களைப் பற்றி உங்களுடன் சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல.

கடிதங்கள் வரலாற்றையே மாற்றி எழுதி இருக்கின்றன. கடிதங்கள் அரசாங்கங்களைப் புரட்டிப் போட்டு இருக்கின்றன. கடிதங்கள் மன்னர்களை எல்லாம் மண்டியிட வைத்திருக்கின்றன. உறவுகளுக்குப் பாலமாகவும்... உணர்வுகளுக்கு வடிகாலாகவும்...

வரலாற்றின் பதிவுகளாகவும்... 
கருத்துக்களை அறிவிக்கும் கல்வெட்டுக்களாகவும்... 
கடிதங்கள் வரலாற்றுப் பொக்கிஷங்களாக, 
காலப் பெட்டகக் கருவூலமாகத் திகழ்கின்றன.

ஆகவே நான் எனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும் மிகுந்த கவனத்துடன் கையாள்வதற்காக ஒரு தனி குழுவை நியமித்து இருக்கிறேன் 

*ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!*

*ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!*

1.முதன் முதலில் *computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.*

Monday, November 22, 2021

விவசாய மசோதா விலக்கம் குறித்து:

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, மிக அத்தியாவசியமான விவசாய சட்டத்திருத்தத்தை பா.ஜ.க. திரும்பப் பெற்றது குறித்தான பல கோபமான எதிர்வினைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நானும் ஒரு விவசாய குடும்பத்துப் பின்னனியில் இருந்து வந்தவன்தான். உயிரைக் கொடுத்து உழைத்த விவசாயியை எப்படி இடைத்தரகர்களும், அரசாங்கமும் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பதனையெல்லாம் கண்கூடாகக் கண்டவனும் கூட.



Saturday, November 20, 2021

நீர் வழி போக்குவரத்து

2022 வருடம் என்பது இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் முடியப் போகின்றது.

மூன்று முக்கிய விசயங்கள்.

மோடி அரசு சாதித்த சாதனைகளில் மிக மிக முக்கியமானது.



Thursday, November 18, 2021

திராவிட கட்சிகளின் இந்து ஆலய அபகரிப்பு அரசியல் - ஹெச் ராஜா - H.Raja

எங்கள் குழுவினர் அழைத்த போது மறுக்காமல் உடனே ஏற்று வந்து பேசினார் மரியாதைக்குரிய ஹெச். ராஜா அவர்கள். 

எனக்கு இந்தத் தலைவர் பிடிக்கும். பிடிக்காது என்று சொல்லக்கூடியவர்கள் அனைவரும் இந்த உரையைப் பொறுமையாக கேட்க வேண்டும்.  

பத்திரிக்கையாளர்களுடன் எப்போதும் மல்லுக்கட்டும் திரு. ராஜா அவர்கள் இந்தப் பேச்சில் ஞானி போல ரிஷி போல ஆசிரியர் போல அமைதியாக பேசி உள்ளார். 

கட்சி பாரபட்சம் இன்றி கோவில்கள், அதன் அமைப்பு, சொத்துக்கள் எப்படிச் சூறையாடப்பட்டது என்பதனை அழகாக புரிய வைத்துள்ளார். 

பக்தியை நம்பக்கூடியவர்கள் அவசியம் இந்த உரையை முழுமையாக கேட்க வேண்டும். 

தமிழகம் முழுக்க எத்தனை கோவில்கள் உள்ளன? 
அதற்கு எத்தனை ஆயிரம் லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளன? 
தற்போது என்ன நிலையில் உள்ளன? 
ஏன் சிலைகள் திருடப்படுகின்றது? 
யார் காரணம்? 
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன செய்கின்றார்கள்? 
மேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கோவில்கள் மூலம் சூறையாடப்பட்ட சொத்துக்களின் அளவு சுமார் 10 லட்சம் கோடி 

என்றால் நம்ப முடிகின்றதா? கேட்டுப் பாருங்களேன்.

Wednesday, November 17, 2021

உயிருடன் நடமாடுவது முக்கியமா? வாழ்வது முக்கியமா?

ஒரு நாள் முழுமையாக முடியும் போது குறைந்த பட்சம் இணையத்தில் ஏதேனும் ஒரு பெரிய கட்டுரை வாசிக்க வேண்டும். 



மலைவாழ் மக்களால் போற்றப்படும் தலைவர் பிர்சா முண்டா

மலைவாழ் மக்களால் போற்றப்படும் தலைவர் பிர்சா முண்டா

இன்று நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருப்பது 25 வயதில் மரணமெய்திய பழங்குடியின மக்களின் ஒப்பற்ற தலைவனைப் பற்றிய செய்தி. ஆம் மிக குறுகிய காலமே இம் மண்ணில் வாழ்ந்திருந்தாலும், தன் மக்களுக்காகவும், பாரம்பரியத்திற்காகவும் அதன் வீரம் செறிந்த வரலாற்றைக் காக்கவும் உயிர் நீத்த "பிர்சா முண்டா"வைப்பற்றித்தான். வாக்காளர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் என்று சென்ற வாரம் நடந்து முடிந்ததைப் போல வருகின்ற வாரம் நடப்பதை தவற விட வேண்டாம்.  தலைவர் அண்ணாமலை அவர்களின் விளக்கமான கடிதம் ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும். 
(கடிதஎண்47)

 

Saturday, November 13, 2021

ஜெய்பீம் த.செ.ஞானவேல்

கடந்த பத்து வருடங்களில் எவனெல்லாம் இயல்பாக பொத்துனாப்ல நல்லவன் போல அமைதியாக இருந்தானோ அவனின் உண்மையான முகத்தை இப்போது தொடர்ந்து பார்த்து ரசித்து வருகின்றேன்.. 

அவனுக்குள் இருந்த அகங்காரம் எனக்குப் பலவற்றைப் புரியவைக்கின்றது.

Friday, November 12, 2021

அசோக் ராஜா திருமணம்

முதல் அக்காவின் மகன் திருமணத்திற்கு நான் நேற்று (11.11.2021) ஊருக்குச் சென்று வந்தோம். ஊடகங்கள் தொடர்ந்து மழை குறித்துப் பயமுறுத்திக் கொண்டே இருந்தன.  திருமணம் தேவகோட்டையில் உள்ள சிவன் கோவிலில் நடக்க இருந்த காரணத்தால் மனதிற்குள் பயம் இருந்து கொண்டே இருந்தது.

Wednesday, November 10, 2021

'சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்' மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

 'சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்' மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

'கோயம்புத்தூர் கியர் மேன்' என்று அன்புடன் அழைக்கப்படும் சுப்ரமணியன், சாந்தி கியர்ஸ் நிறுவனர் மற்றும் ஆதரவற்றோருக்கான இலவச மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் சாந்தி சமூக சேவை என்ற அறக்கட்டளைக்கு மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி காலமானார்.



சுப்ரமணியன், அல்லது பி சுப்ரமணி, 1960 களில் PSG பாலிடெக்னிக்கில் டிப்ளமோ பட்டதாரி ஆவார். அவர் 1960 களின் பிற்பகுதியில் PSG பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக சேர்ந்தார். அங்கு பணிபுரியும் போது, ​​இயந்திரங்கள் மீதான ஆர்வத்தைத் தொடர ஒரு பட்டறையைத் தொடங்கினார். இது 1969 ஆம் ஆண்டில் சிறிய கியர்களை உற்பத்தி செய்வதற்காக கோயம்புத்தூரில் சாந்தி இன்ஜினியரிங் மற்றும் டிரேடிங் கோவை நிறுவ அவரைத் தூண்டியது. 

1972 ஆம் ஆண்டில், சுப்ரமணியன் அதை சாந்தி கியர் புராடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனமாக மாற்றினார், இது ஜவுளித் துறைக்கு சேவை செய்ய கியர்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தியது. 200களில் கியர்ஸ் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக அவர் நிறுவனத்தை வளர்த்தார். இந்த நிறுவனம் பவர் ஸ்டீல் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற தொழில்களுக்கான கியர்களை உற்பத்தி செய்தது. 

பின்னர் 2012ல் முருகப்பா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சுப்ரமணியன் தனது முழு ஆற்றலையும் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற லாப நோக்கமற்ற, தொண்டு அறக்கட்டளையை நடத்தி, 1996 இல் தொடங்கினார். இந்த அறக்கட்டளை தேவைப்படுபவர்களுக்கு மருந்துகள், ஆம்புலன்ஸ் சேவைகளுடன் தரமான சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க உதவியது. இந்த முயற்சியால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர், இன்னும் பலர் இந்த முயற்சியின் பலனை அறுவடை செய்து வருகின்றனர்.

வணிகர்கள் - உலகத்தை ஆட்சி செய்கின்றார்கள்.

எங்குத் திரும்பினாலும் காசு. எதைத் தொட்டாலும் காசு

திராவிட கூலிப்படை

இது தவிர, மற்றவர்களுக்கு பெயரளவு விலைக்கு உணவை விற்பனை செய்வதைத் தவிர, ஒவ்வொரு நாளும் 300 மூத்த குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் கேன்டீனையும் அறக்கட்டளை நடத்துகிறது. இந்த அறக்கட்டளை ஒரு நோயறிதல் மையம், இரத்த வங்கி, கண் பராமரிப்பு மையம் மற்றும் எல்பிஜி தகனம் ஆகியவற்றையும் நடத்துகிறது. சுப்பிரமணியன் டிசம்பர் மாதம் தனது கடைசி மூச்சு வரை, இந்த தொண்டு நிறுவனத்திற்காக அயராது உழைத்தார்.


Tuesday, November 09, 2021

திராவிட கூலிப்படை

 முல்லைப் பெரியாறு விசயத்தில் அப்பா செய்த தவறுகளை இப்போது மகனும் செய்து கொண்டு இருக்கின்றார். அப்பாவுக்கு எல்லாமே தெரியும். ஆனால் மகனுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது? எதனை எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்பது தெரியாது. 



நிஜமான நிர்வாகம் தெரிந்த,   

தமிழக மக்களைப் பற்றித் தெரிந்த,  மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற,  

எந்த முதல்வரும் பேருந்தில் ஏறிச் சோதிப்பதில்லை. மக்களிடம் கேட்பது இல்லை. ஒரு பரிசோதகர் செய்ய வேண்டிய வேலையது. போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் சொன்னால் போதும்.

கடந்த 1992 முதல் 2005 வரை திருப்பூரிலிருந்து காரைக்குடிக்குப் பொங்கல் தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் போது நான் பட்ட அவஸ்தைகளை இன்னமும் மனதில் வைத்து இருக்கின்றேன். 

பேருந்து வாசல்படியில் உட்கார்ந்தபடி பாதித் தூக்கத்தில் அதிகாலையில் ஊருக்குச் சென்று சேர்வதுண்டு. 

அவ்வளவு கூட்டம்.  

இந்த தீபாவளிக்கு முந்திய இரண்டு நாட்கள் அதே காட்சியைப் பார்த்தேன்.

புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என்று இரண்டு பகுதிகள் உண்டு. இவர்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காக பத்து கிலோமீட்டர் கடந்து மற்றொரு இடத்தை உருவாக்கி வைத்து இருந்தார்கள். மக்கள் யாரும் செல்லவில்லை.

திருப்பூர் முழுக்க அங்கங்கே அனைத்துச் சாலைகளிலும் குடும்பத்துடன், கை குழந்தைகளுடன் பல ஆயிரம் மக்கள் நின்று கொண்டு இருந்ததைப் பார்த்தேன். வலித்தது.

மகளிடம் காட்டி விரிவாக சொன்னேன். இவையெல்லாம் திமுக அரசுக்குத் தெரியுமா? தெரியாதா?

திருமா போன்றவர்கள் கம்யு கட்சிக்காரர்கள் இதைப் பற்றி தானே பேச வேண்டும்.   

100 நாள் வேலைத் திட்டம் அவசியம் என்பதனை ப சிதம்பரம் முதல் உள்ளூர் கம்யு மக்கள் வரை பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். 

ஆனால் அண்ணாமலை ஒருவர் தான் அதில் உள்ள ஊழலை வெளியே கொண்டு வந்து உள்ளார். வேறு எவரும் வாயைத் திறக்கவே இல்லையே?

வீடு கட்ட காசு கொடுத்தால் அதில் திருடுவது.  பயிர் காப்பீடு என்றாலும் திருடுவது.  மத்திய அரசு தரும் பணம் என்பது தங்களுக்கு உரியது என்பது போலவே இந்த இரண்டு பங்காளிகளும் நினைப்பது தான் வருத்தமாக உள்ளது.

திருமா  நினைத்தால் இவற்றைப் பற்றி பேசி மாற்றலாமே?

பாஜக பேசியதும் திருமா வந்து கிறிஸ்தவ வள்ளுவர் எனப் பேசுவது தற்செயல் என்போர் திராவிட அரசியலின் அரிச்சுவடி அறியாத அப்பாவிகள் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.



ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைக்க வேண்டிய திருமா அவர்கள் இப்படித் திராவிட கூலிப்படையாக ஆவது வருத்தத்துக்குரிய விஷயம்...


எங்குத் திரும்பினாலும் காசு. எதைத் தொட்டாலும் காசு


Monday, November 08, 2021

எங்குத் திரும்பினாலும் காசு. எதைத் தொட்டாலும் காசு

ஜெயலலிதா ஆட்சியின் இறுதிக் காலத்தில் தமிழகத்தில் எப்போதும் போல புகையிலை சார்ந்த பலவிதமான பொருட்கள் எளிய விலையில் கிடைத்துக் கொண்டே தான் இருந்தன. எவ்வித கெடுபிடியும் இல்லை.  விஜயபாஸ்கர் கருணாநிதி அவர்களைச் சக்கர நாற்காலியில் வருவதை வைத்து அசிங்கமான கவிதை பாடி அமைச்சர் பதவி பெற்ற போது புகையிலைப் பொருட்களின் விலை சற்று ஏறியது.   


ஜெ இறந்து எடப்பாடி அமர்ந்து மீண்டும் விஜயபாஸ்கர் வானாளவிய அதிகாரம் படைத்தவராக மாறத் தொடங்கிய போதும் கூட அதிக விலைக்கு எந்தப் புகையிலைப் பொருட்களும் விற்கவில்லை என்பதனை நினைவில் வைத்திருக்கவும்.

ஆனால் ரெய்டு, கோர்ட்டு, கேஸ், எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் என்று மாறி மாறி காட்சிகள் மாறியது. 3 ரூபாய் விற்றுக் கொண்டிருந்தவை 10 ரூபாய்க்குச் சென்று எடப்பாடி ஆட்சி இறுதிக் காலத்தில் 30 ரூபாயில் வந்து நின்றது.  

விற்பவர்கள் எப்போதும் போல விற்றுக் கொண்டே தான் இருந்தார்கள். காவல்துறையினர் கச்சிதமாக எந்தந்த கடைகளில் பெரிய அளவுக்கு விற்பனை ஆகின்றதோ அங்கே தினசரி, வாரம், மாதம் என்று கணக்கு வைத்து வசூலித்துக் கொண்டு இருந்தனர். அடி மட்ட போலிஸ் மக்கள் சின்னச் சின்ன கடைகளில் அதிக பட்சம் சிகரெட் வாங்கிக் கொண்டு இருபது ரூபாய் டிப்ஸ் வாங்கிக் கொண்டு இருந்தனர்.

ஆட்சி மாறியது. எந்த மாறுதலும் தெரியவில்லை.

ஆனால் டிஜிபி சைலேந்திரபாபு வந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை?  தமிழகத்தைப் புரட்டிப் போட்டார்.  

அரசியல்வாதிகளைக் குறை சொல்வதை விட இந்த விசயத்தில் காவல் துறை மனசு வைத்தால் தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று அனைவருக்கும் தெரிந்தது தான்.  மூன்று மாதங்கள் மூச்சு விட முடியாமல் கடைக்காரர்கள் தவித்தார்கள்.  

நடைப்பயிற்சியின் போது பல்வேறு தருணங்களில் பல கடைகளைக் கவனித்துக் கொண்டே வந்தேன்.

இப்போது?  ஆட்சி ஆறு மாதங்களைக் கடக்கப் போகின்றது?

என்ன மாறுதல்கள் உருவாகியுள்ளது?

ஒரு பொட்டலம் ரூபாய் 70 ரூபாய்.  

ஒரு பொட்டலத்தில் இருக்கும் ஒரு ரூபாய் பெறுமானம் இல்லாத புகையிலை வஸ்துக்கு இன்று சந்தையில் 70 ரூபாய் விற்றாலும் சக்கைப்போடு போட்டுப் போய்க் கொண்டே தான் இருக்கின்றது.  

இது இங்குள்ள விலை.  ஒவ்வொரு ஊருக்கும் விலை ஏற்றம் இறக்கம் இருக்கலாம்.  காரணம் ஏழை, நடுத்தரவர்க்கம், உயர் நடுத்தரவர்க்கம் காவல்துறை ஆய்வாளர்களின் கணக்குகளைப் பொறுத்து மாறும் என்றே நினைகின்றேன்.

கோமாளி ஆட்சியில் கூடுதலாக ஒன்று கிடைக்கின்றது.  

கேரளாவிலிருந்து இயங்கும் பரிசுச்சீட்டு தொழில் திருப்பூரில் சக்கைப் போடு போடுகின்றது.  

எங்குத் திரும்பினாலும் காசு.

எதைத் தொட்டாலும் காசு.


Sunday, November 07, 2021

வணிகர்கள் - உலகத்தை ஆட்சி செய்கின்றார்கள்.

நான் விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடிப் பொழுதிலும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில், நான் பார்க்கும் படிக்கும் உணரும் விசயங்களில் என்ன மாதிரியான வணிகம் இருக்கின்றது என்பதனை கூர்மையாக கவனிப்பேன். இங்கு வணிகம் என்பது உடனடி லாபம் என்பதாக புரிந்துள்ளனர். இதன் காரணமாக எளிதில் சோர்வுக்கு வந்து சேர்ந்து விடுகின்றனர்.


Friday, November 05, 2021

கு. அண்ணாமலை எனும் நான்/ ஜோதி கணேசன்

குடும்பம், தேசம், அரசாங்கம் ஆகிய அமைப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு இத்தகைய பிணைப்பு சார்ந்த பிரக்ஞை அவசியம். இத்தகைய புரிதலைக் கொண்டே இயற்கையையும் பூமியையும் கூட நாம் பேரழிவிலிருந்து காக்க முடியும். (உலக அளவில் சுற்றுச்சூழல் இயக்கமே பெரிதாகத் தொடங்கியிராத 1960களில் தீன்தயாள்ஜி இக்கருத்தை வைத்தது குறிப்பிடத் தக்கது.)  

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் மதிப்பிற்குரிய கு. அண்ணாமலை அவர்கள் முன்னால் இருக்கும் சவால்கள். இதுவரையிலும் செய்த சாதனைகள். அதிகாரத்தை அடைய நாம் செய்ய வேண்டிய முயற்சிகள்.
 
இந்தியாவின் பொருளாதார அமைப்பு அறத்தின் அடிப்படையில் பாரதியப் பண்பாட்டை அடியொற்றி அமையவேண்டும். மையத்தில் அதிகாரம் குவிக்கப்படாததாகவும் (decentralized), 
பஞ்சாயத்துகள் போன்ற அமைப்புகள் சுதந்திரத்துடன் இயங்க வழிசெய்வதாகவும் இருக்கவேண்டும். 

அடிப்படைத் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் அப்பால், மேற்கத்திய பாணியிலான அதீத நுகர்வுக் கலாசாரம் ஊக்குவிக்கப்படக்கூடாது. 

****

பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல் அமைப்பு சட்டத்தில் (BJP Party Constitution) அதன் அதிகாரபூர்வக் கொள்கையாக ‘ஒருங்கிணைந்த மானுடவாதம்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தீனதயாள் உபாத்யாவின் ஏகாத்ம மானவ வாதம் எனப்படும் ஒன்றுபட்ட மனிதநேயம் என்ற கோட்பாடு இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதுவே தங்கள் தனித்துவ சித்தாந்தம் என இன்றைய பாஜக தலைவர்களும் பெருமையுடன் கூறுகின்றனர்.

அரசின் சலுகைகள் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் தன்னிறைவு அடையச் செய்வதுடன் அவர்கள் யாரையும் நம்மி இருக்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வழி காட்டுதல்.


Wednesday, November 03, 2021

2021 தீபாவளி வாழ்த்துகள்

04.11.2021


நாளைய தினம் தீபாவளி (2021). 

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.


Tuesday, November 02, 2021

தளபதிகள் நண்பர்களாக , நண்பர்களே தளபதி

நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் தான் அரசியல் தரும் பரிசு என்பார்கள்.  

ஆனால் மோடி அவர்களுக்கு தளபதிகள் நண்பர்களாக இருக்கின்றார்கள். நண்பர்களே தளபதியாகவும் உடன் பயணிக்கின்றார்கள்.  கடந்த 7 வருடங்களில் மோடி அவர்களின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணங்களிலும் நடந்த, நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வுகளை கவனித்து வருகிறேன்.

நிர்வாகம் தெரிந்தவர்களுக்குத் தான் தெரியும். 

திட்டமிடுதலின் உச்சம்.  

பார்த்துப் பார்த்து அலங்கரிக்கும் சிற்பி யாரோ  இருக்கின்றார்கள் என்றே நினைத்துக் கொள்வதுண்டு.  

இதற்கு முன்னால் இப்படி நடந்ததே இல்லை.  மன்மோகன் சிங் அரசாங்கத்தில் கொத்து கொத்தாக கொத்தவால்சாவடிக்கு டவுன்பஸ் ல் செல்லும் கூட்டம் போலவே சென்று வந்தார்கள்.


@annamalai_k  எழுதும் கடிதம் ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும்.

இது கூடத் தெரியலையா?

பெயர் வைத்த நாள் எப்படிப் பிறந்தநாளாகும்! - 39

1953-ல் பிறந்த தமிழகத்திற்கு, 1967ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டின் பிறந்தநாள் தற்போது சர்ச்சையாக்கப் பட்டுள்ளது. வரலாற்றுப்படி பார்த்தால் தமிழ்நாடு உருவாக்கப்படவே இல்லை. தென்னக மாநிலங்கள் ஒன்றாக மதராஸ் ராஜதானியாக தொடர்ந்தபோது,  ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்தது. 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, அவை மொழிவாரியாக பிரிக்கப்பட்டபோது சென்னை மாகாணம் பிறந்தது.

தமிழகம் தனியாக வரையறுக்கப்பட்ட நாள் (01.11.1956.) 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அப்படியாக வரையறுக்கப்பட்ட நாளை அனைத்து மாநிலங்களும் நவம்பர் ஒன்றாம் தேதியைக் கொண்டாடும் போது பெயர்மாற்றம் செய்த நாளை பிறந்தநாளாகக் கொண்டாடு வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, வரலாற்றுப் பிழை.




Sunday, October 31, 2021

கு. அண்ணாமலை எனும் நான்

#கற்றுக்கொள்களத்தில்இறங்கு அமர்வில்  

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை "கு. அண்ணாமலை எனும் நான்" என்ற தலைப்பில் நான் ஒரு மணி நேரம் பத்து நிமிடம் பேசினேன்.  இந்த தகவல் எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை.  நாளை காட்சி வடிவம் கிடைக்கலாம். 

பேசிய முக்கிய தகவல்களை இங்கு எழுதி வைக்கின்றேன்.  


Saturday, October 30, 2021

இந்த பாவம் நின்று கொல்லும்

எனக்கு இந்த ஆட்சியின் மேல் எந்த வருத்தமும் இல்லை. விருப்பமும் இல்லை. காரணம் பத்திரிக்கையுலகமும் நீதிமன்றங்களும் திருந்தாத வரைக்கும் அரசியல்வாதிகள் அக்மார்க் வியாதிகளாகத்தான் இருப்பார்கள்.  

1. உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் போகின்ற இடமெல்லாம் அற்புதமாக பேட்டி கொடுத்துக் கொண்டே வருகின்றார்.  ஆனால் பத்துப் பைசாவிற்கு பெறுமானம் இல்லை. இதை  நான் காழ்ப்புணர்வுடன் எழுதவில்லை.

2. ஒரு சின்ன உதாரணம் தருகின்றேன்.  கல்வி அமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு நேர்முக உதவியாளர் ஏழெட்டு வாரங்களுக்கு முன் சேர்ந்தார். அவரை பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இப்போதைய முதன்மைச் செயலாளர் ஜெயச்சந்திரன் உடன் ஏற்கனவே பணியாற்றியவர். அவர் தான் கல்வி அமைச்சர் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.  தனித் தேர்வர்கள் குறித்து நண்பர் கேட்டுக் கொண்டே இருந்தார் என்று அவரை அழைத்துக் கேட்டேன். அப்படிங்களா? அந்த விபரம் தெரியவில்லையே? என்று சொன்ன போது அதிர்ந்து போனேன்.  அதாவது துறையில் நடப்பது என்னவென்றே அமைச்சர் முதல் அவரைச் சுற்றியுள்ள எவருக்கும் தெரியவில்லை. ஆணையர் நந்தகுமார் அவர்களை வேறொரு நண்பர் மூலம் தொடர்பு கொண்டு தகவல் பெற்றேன்.

2. கல்வி அமைச்சர் என்ன சொல்கின்றார்? 

பள்ளி வரலாம். வராமலும் இருக்கலாம். பெற்றோருடன் வரலாம். வெளியே காத்திருக்கலாம். அனுமதி உண்டு. தேர்வு எழுதலாம். எழுதாமலும் இருக்கலாம். டிசம்பர் முதல் தேர்வு வைக்க எண்ணம் உண்டு. அடுத்த மூன்று மாதங்களில் பொதுத் தேர்வு உண்டு.

3. ஒரு மாணவ மாணவியர் கூடப் படிக்கத் தயாராக இல்லை. ஆசிரியைகள் செத்து சுண்ணாம்பு போல ஆகிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு மாணவர்களும் இந்த வருடமும் தேர்வு வைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இன்று வரையிலும் இருக்கின்றார்கள். அடிக்கக்கூடாது. பேசக்கூடாது. திட்டக்கூடாது. இன்னும் ஆசிரியர்கள் கழுவிவிட வில்லை. அதுவும் செய்தால் குழந்தைகள் போல ஆகி விடுவார்கள். பல ஆசிரியைகள் கதறுகின்றார்கள்.  

4. ஒரு பக்கம் ஆணையர் ஆப்பு அடித்து நகர்த்திக் கொண்டே இருக்கின்றார்.  அந்தப் பயத்தில் ஆசிரியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் படு வேகமாக இருக்கின்றார்கள். ஆனால் அமைச்சர் என்ற பதவியில் இருப்பவர் பேசும் பேச்சு அனைத்தும் சிரிப்பைத் தருகின்றது. ஏற்கனவே ஒரு புத்திசாலி பள்ளம் தோண்டி வைத்து விட்டுப் போனார். இவர் பாதாளக்குழியை உருவாக்குவார் என்றே நினைக்கின்றேன்.

5. அமைச்சர் மற்றொரு விசயத்தைச் சொல்கின்றார்.  சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் என்கிறார்.  காரணம் என்ன? ஆசிரியர்கள் பற்றாக்குறை? போட மனம் இல்லை. வகுப்பறை பற்றாக்குறை? உருவாக்க மனம் இல்லை. காசு இல்லை என்பார்கள்.  ஆனால் சுடுகாட்டை அலங்கரிக்க காசு இருக்கின்றது. மதுரையில் நூலகம் கட்ட பணம் இருக்கின்றது?

பயங்கர கேவலமாக பள்ளிக்கல்வித்துறை சென்று கொண்டு இருக்கின்றது.

மாறிய தொழில் நுட்ப உலகில் கல்வித்துறைக்கு வரக்கூடிய அமைச்சருக்கு அடிப்படை உலக அறிவு, இந்திய அளவில் உள்ள ஒப்பீடு அறிவு அல்லது குறைந்த பட்சம் நிஜமான அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் இதில் யாரையோ ஒருவரைப் போட்டுத் தான் ஆக வேண்டும் என்ற சூழலில் தமிழகக் கல்வித்துறை திமுக மற்றும் அதிமுக பினாமிகள் வேட்டைக்காடாகவே இன்னமும் உள்ளது.

கடைசியாக...

நீட் குறித்து திராவிட திருடர்கள் பொதுவெளியில் எப்படிப் பேசுகின்றார்கள்? எப்படி மடை மாற்றுகின்றார்கள்? எப்படி நாடகம் போடுகின்றார்கள் என்பதனை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.  சென்ற வருடம் அந்தப் புண்ணியவான் கடைசி வரைக்கும் கமிஷன் பிரச்சனையில் நீட் தேர்வுக்குத் தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வந்த ஒருவரையும் அனுமதிக்காமல் அலைக்கழித்து அவமானப்படுத்தி ஏனோ தானோ என்று மாணவர்களை மன உளைச்சல் அடைய வைத்தது தான் மிச்சம்.


இப்போது இன்று வரையிலும் அதற்கான ஏற்பாடுகள் ஒரு துளி கூட நடக்கவில்லை என்பதனை ஆதரிப்பவர்கள் யாராவது கல்வி அமைச்சர் அவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.  

இந்த பாவம் நின்று கொல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

-----

(பசும்பொன் தேவர் திருமகனார்) நினைவு அஞ்சலி. ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும்.

Listen to "மீண்டும் பிறந்து வர மட்டாரா? கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா? - 38" 

by ஜோதிஜி பேச்சு JothiG Pechu. ⚓ https://anchor.fm/jothig/episodes/--38-e19gtiq 



நான் கடந்த சில நாட்களாக வையாபுரிக்கு கட்சியை தானம் வழங்கியது.  துரை வைகோ என்று பெயர் மாற்றியது தொடங்கி 28 வருடங்கள் பல ஆயிரம் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்த வெட்கமின்றி இன்றும் உயிரோடு நடமாடும் இவரை நினைத்து ஆச்சரியமாக உள்ளது.

--------------

இதனைப் படித்து விட்டு ஆதி தமிழிலில் மிக அழகாக அடுக்கடுக்காக எழுத விரும்புகின்றேன்.  தப்புங்களா பாஸ்?  நான் தூங்கிக் கொண்டு இருக்கும் போது திட்டுவிங்களா பாஸ்?

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காமராஜர் ஒருவர் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கும் போது இறந்தார். வலி இல்லாமல் ஆன்மா பிரிந்தது. எப்போது இறந்தார் என்பதே அவர் உதவியாளர் வைரவனுக்கே தெரியவில்லை.  வாழ்க்கை என்றால் இது தான் வாழ்க்கை.  வாழ்ந்த வாழ்க்கைக்கு இயற்கை இறைவன் கொடுத்த பரிசு.   

அய்யா செ. பாலாஜி ஆத்துமணல் தொடங்கி சரளை மண் வரைக்கும், டாஸ்மாக் ஹாலோகிராம் அச்சடிப்பது தொடங்கி ஸ்பிரிட் தனியாக வாங்கி தனி ஆவர்த்தனம் நடத்துவது வரைக்கும் எல்லோரும் செய்தது தான்.

விரைவில் நத்தம் விசு போல இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்க வாழ்த்துகிறேன்.

தொடரட்டும் உங்கள் பணி.


"விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது


இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களின் விபரம்

Wednesday, October 27, 2021

திருட்டு திராவிடத்தின் ஊழல் மகாராஜாக்கள்

நீட் தேர்வு குறித்து இன்னமும் தங்கள் குரலை உயர்த்திக் கொண்டே இருக்கும் நம் சமூகநீதி காவலர்கள் இந்த ஆண்டு (2021) பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் சேர்க்கை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.  என்ன சாதித்து உள்ளோம்? என்பதனையும் புரிந்து கொண்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தமிழ்ப்பிள்ளைகளின் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

1. இந்த ஆண்டு 1, 51, 871  இருக்கைகளுக்கு நிரம்பிய எண்ணிக்கை என்பது  95,069.  அதாவது 62.6 சதவிகிதம்.  52,802 அரசு இருக்கைகள் நிரப்பப்படவில்லை என்பதனை விட இந்த முறை 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்ற அறிவிப்பு வந்தும் இந்த நிலைமை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2. கடந்த இரண்டு வருடங்களில் உள்ள எண்ணிக்கையை விட இந்த ஆண்டு 14.4 சதவிகிதம் அதிகரித்து உள்ளதற்கு ஒரே காரணம் மாமா நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் வாழும் புலிகேசியின் புகழ்பாடிகளுக்குத் தான் அந்த பெருமை.

****
@annamalai_k கடிதம் ஒலி வடிவில்

Listen to 

"விடா முயற்சியால் வெற்றியை விளைவித்த வித்தகர் தாதாசாகேப் பால்கே விருதாளர் ரஜினிகாந்த்' 


இன்ஜினியரிங் படிப்பில் 95,000 இடங்கள் நிரம்பின. கடந்த 5 ஆண்டுகளை விட மாணவர் சேர்க்கை அதிகம். சரி ஆனா 2016ல் 525 கல்லூரி 2021ல் 440  கல்லூரி தான் அதுவும் 71 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைத்துள்ளது. 







திருட்டு திராவிடத்திற்கு வசூல் செய்து கொடுக்க அமைச்சராக அமர்ந்துள்ள செந்தில் பாலாஜியை வாழ்த்துங்கள். இத்துடன் திருட்டு பரம்பரைக் கோஷ்டிகளை முடிவு கட்ட உதவக்கூடியவர் என்று மனமார நம்புங்கள்.  விரைவில் முட்டுச் சந்துக்குள் நிறுத்துவார் என்று நம்பிக்கை வையுங்கள். 
இவர் எதிர்கால சிறப்பான தமிழகத்திற்கு தேவையற்ற கிருமிகளை அழிக்க உதவுவார் என்று நம்புங்களேன்




Tuesday, October 26, 2021

இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களின் விபரம்

2009 முதல் 2021 வரை இணைய தளத்தில் செயல்பட்டு வருகின்றேன். தொடக்கத்தில் நண்பர் சீனிவாசன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் இலவச மின் நூல் தளத்தில் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டு வந்தேன்.  கூகுள் ப்ளஸ் ல் விமலாதித்த மாமல்லன் மூலம் அமேசான் அறிமுகம் ஆனது.  அதில் புத்தகமாக வெளியிட்டு வந்தேன்.  



Sunday, October 24, 2021

அட்டைப்படம் பார்த்துக் கதை எழுது.(DMK-Corruption-Collection)

1. புலிகேசி ஆட்சி அமைந்ததும் வெளிநாட்டில் வாழும் நண்பர் கொரோனா நிதி அனுப்பி விட்டு என்னையும் அனுப்பச் சொன்னார். நான் 48 000 கோடி ஒரு கணக்கிலும் மற்றொரு கணக்கில் 6 ஆயிரம் கோடி வைத்திருக்கின்றார்கள். வருகின்ற வட்டியை வைத்து என்னவெல்லாம் இப்போது செய்து கொண்டு இருக்கின்றார்கள்? உங்களுக்குத் தெரியுமா? என்று விளக்கினேன்.  இது தனி. செய்துள்ள முதலீடு தனி. பினாமி பெயரில் உள்ளது தனி என்று விளக்கினேன். அவர் சமாதானம் ஆகவில்லை.



2. இந்த நண்பர் மற்றொரு தகவல் சொன்னார். அற்புதமான நேர்மையான அதிகாரிகள் ஒவ்வொரு துறையிலும் போடப்பட்டதால் இனி அனைத்தும் அற்புதம் என்றார்.  இப்போது நடந்து கொண்டு இருக்கும் தகவல்களைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். உலக புத்திசாலி இறையன்பு ஒகே என்று கையெழுத்துப் போட மட்டும் கோப்புகள் போகின்றது என்று அவர் பக்கம் புலம்பும் புலம்பல்களை மற்றொரு பத்திரிக்கை கிசுகிசு பாணியில் எழுதியுள்ளது. ஆக மொத்தம் இணை துணை முதன்மைச் செயலாளர்கள் முதல் தலைமைச் செயலாளர்கள் வரைக்கும் அவர்களின் கட்டத்தைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தொடக்கத்தில் எழுதி இருக்கின்றேன்.  நீங்கள் தான் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. சில வாரங்களுக்கு நக்கீரன் இதழில் லேசாக எழுதத் தொடங்கி உள்ளனர்.  "கோட்டைக்குள் பி.ஏ போடும் ஆட்டம்" என்கிற ரீதியில் சுவரொட்டியில் இருப்பதைச் சாலையில் சென்ற போது பார்த்தேன்.  

4. மற்றொருவர் சொன்னார். புலிகேசி மகன் பதவிக்கு வரும் வரை எந்த ஊழலும் இருக்கக்கூடாது என்பது உத்தரவு. அனைவரும் பயந்து சாகின்றார்கள் என்றார்.  என்ன ஆயிற்று? தற்போது புலிகேசி பேருந்துகளில் ஏறி இறங்கி ஆய்வு வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றார். புலிகேசி மகன் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றார். தமிழக மக்கள்?  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாங்கிய 500 ரூபாயை வைத்து செலவழித்து முடித்து புறங்கையை நக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

5. பத்திரிக்கைகள் எவரையும் தொடர்ந்து புகழ மாட்டார்கள். முடியாது. வாய்ப்பில்லை. வாசிப்பவர்களுக்குத் தெரிந்து விடும். வாசக வட்டம் குறைந்து விடும்.  என்ன தான் உருட்டல் மிரட்டல் அன்பளிப்பு எது என்றாலும் தேன் நிலவு காலம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் தான்.

6. ஆறு மாதங்கள் இன்னமும் முடியவில்லை.  குடும்ப நிதி. கட்சி நிதி. அமைச்சர் நிதி. எடுப்பு நிதி. தொடுப்பு நதி என்று பலவாறாகப் பிரிந்து கொண்டே செல்ல எங்கிருந்து தொடங்கி எங்கே இந்தப் பாதை முடியும் என்பதே தெரியவில்லை.

கடைசியாக

மோடி ஒவ்வொரு பெரிய திட்டங்களையும் அறிவிக்கும் போது பத்து அல்லது பதினைந்து துறைகளை ஒன்று சேர்த்து மொத்த நிதி ஆதாரம், இணைத்த விபரங்கள், காரணங்கள், நோக்கங்கள், திட்டங்கள், இலக்கு, கால அளவு என்று உடனே வந்து விடுவதைப் பார்க்கலாம்.  அதே போல அந்தத் திட்டம் முடிந்தவுடன் அது சார்ந்த விபரங்களும் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றது.  ஏன் துறைகளைக் கட்டாயம் இணைக்கின்றார் என்றால் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒன்றைக் காரணம் காட்டி மற்றொன்றைக் குறை சொல்லக்கூடாது. இங்கே நிலைமை எப்படி உள்ளது?

இதை இங்கே எழுதக் காரணம்

ராஜகண்ணப்பன் ஆவின் இனிப்பு வாங்கிக் கொடுக்க மனம் இல்லாமல் மகன் மூலம் 30 சதவிகிதம் வாங்கும் இனிப்பு மூலம் கொள்ளையடிக்க முடிகின்றது என்றால், கஜானாவில் காசே இல்லாத போது செந்தில் பாலாஜி திருடத் தயாராக இருக்கின்றார் என்றால், ஒவ்வொரு அமைச்சர்களும் அவரவர்களுக்கு உகந்த வரையில், முடிந்த வரையும் திருடுவதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் இப்போதைய சூழலில்,  இவர்களுக்கு ஏன் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்?.

தமிழ்நாட்டிற்கு இறுதிச் சடங்கு செய்யும் இவர்களைப் போன்ற வெட்டியான்களுக்கு மரியாதை தேவையா?

கரப்ஷன், கமிஷன், கலெக்சன்

Saturday, October 23, 2021

"விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது


22/10/2021 கோவையில், "விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
"இங்க விருது வாங்குன மத்தவங்கள்ளாம் ஊடக துறையில ஒரு நீண்ட கால அனுபவம் உள்ளவங்க, ஆனா வலைமனைகளிலும், சமூக ஊடகங்களிலும் எழுதிகிட்டிருக்க என்னை போன்றவர் களையும் கவுரவிச்சு விருது வழங்குனது பெருமை.

மொதல்ல நான் பொதுவான பல விஷயங்களை பத்தி தான் எழுதிட்டிருந்தேன்.  அப்புறம் இந்த மோடிங்கற மனிதர் பத்தி தெரிஞ்சுக்க  ஆரம்பிச்சு, அவரோட அசாத்திய செயல்களாள ஈர்க்கப்பட்டு, ஏன் இவருக்கு எதிரா தமிழ்நாட்ல மட்டும் இப்படி ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்யறாங்க என யோசிக்க ஆரம்பிச்சேன்.  

ஒரு சாமானியனா, ஒரு இந்திய குடிமகனா இவரை ஆதரிக்கறது என் கடமைனு உணர ஆரம்பிச்சு அவரோட சாதனைகள் பத்தி நிறைய எழுத ஆரம்பிச்சேன்.  

எனக்கு விருது வாங்க தகுதியிருக்கானு தெரியல.  ஆனா இனிமே அந்த தகுதிய வளர்த்திக்க கடுமையா உழைப்பேன்.




**************

சென்ற வருடம் 2020 ஜனவரி 6 அன்று நான் 1 முதல் 8 வரை படித்த பள்ளியில் அழைத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்புரை பேச வைத்து அங்கீகரித்தார்கள்.  என் எழுத்தைத் தொடர்ந்து படித்து வந்த பள்ளி தாளாளர் மகன் அப்பாவிடம் சொல்லி அதன் பிறகு நான் பள்ளியில் படித்த பழைய மாணவன் என்று அறிந்து ஆச்சரியப்பட்டனர்.  எதிர்பாராத நிகழ்வு. 1922 முதல் நடந்து வரும் பள்ளி. அரசு உதவி பெறும் பள்ளி. அடுத்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகும் பள்ளி.  அடுத்த வருடமும் பேச அழைத்து உள்ளனர்.  ஆனால் சென்ற வாரம் தாளாளர் உடல் நலக்குறைவால் வயது முதிர்வால் காலமானார். வருத்தமாக இருந்தது.

இந்த வருடம் இந்த விருது மற்றும் அங்கீகாரம். 

என் எழுத்துப் பணியைக் கவனித்து அழைத்துப் பேசினார்கள். அப்போது நான் சென்னையில் இருந்தேன்.  தகவல் சொன்னதும் "நீங்கள் தவறாக அழைத்து உள்ளீர்கள். நான் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை" என்று சொல்லிவிட்டு அலைபேசியை நிறுத்த முயன்ற போது மேலும் பல தகவல்கள் சொன்ன போது சற்று நம்பினேன்.

சிறிது நேரத்தில் நண்பர் குறுஞ்செய்தி அனுப்பினார்.  அதன் பிறகு தான் புரிந்தது.  யாரிடமும் சொல்லவில்லை.  சொல்வதற்கு என்ன இருக்கின்றது? என்றே தோன்றியது.  இப்போது வரைக்கும் அந்த எண்ணம் தான் மனதில் உள்ளது.  இந்தப் படத்தை இங்கே போடலாமா? வேண்டாமா? என்ற எண்ணம் மாறி மாறி வர சில தகவல்களைத் தெரிவிக்கும் பொருட்டு இதனை இங்கே போட்டே ஆக வேண்டும் என்று தோன்றியது.



என்னுடன் நிற்கும் பெண்மணி தி ஹிந்து வில் பணிபுரிபவர்.  மற்றொருவர் தமிழ் இந்து திசையில் பணிபுரிபவர்.  

ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கும் இந்தப் பத்திரிக்கைகளும் தொடர்பு இல்லையே என்று உங்களுக்குத் தோன்றும்.  

கள அரசியல் வேறு.  எதார்த்த அரசியல் வேறு.  

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த, நடத்திய, வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

*************

Listen to "பெருமிதம் கொள்கிறது தேசம். மோடி அவர்களின் மக்கள் நேசம் - 33" by JothiG ⚓


*******

மோடி அரசின் காப்பீடு திட்டங்கள்-பகுதி 2- கேசவன் சிதம்பரம்

Wednesday, October 20, 2021

October 18 - மகளின் கல்லூரி வாழ்க்கைப் பயணம் தொடங்கியது

நான் சென்னைக்கு முதல் முறையாக கல்லூரி முடித்து ஒரு வருடத்தில் சென்றேன். பள்ளித் தோழன் சொக்கலிங்கம் எனக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தான். எழும்பூரில் இன்னமும் பிரபல்யமாக இருக்கும் ஆம்னி பேரூந்து அலுவலகத்தில் அதிகாலையில் சென்று சேர்ந்தேன். விடியாமல் இருந்தது. சொக்கலிங்கம் வருகைக்காகக் காத்திருந்தது இன்னமும் என் நினைவில் உள்ளது.  



Tuesday, October 19, 2021

தமிழகத்தில் மின்சார ஊழல் தொடங்கப் போகின்றது


2021 தமிழக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-வை 1446 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகத்தான வெற்றி பெற்ற திருமதி.ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அவர்கள்


அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் மின்சார ஊழல் தொடங்கப் போகின்றது என்பதனை கோடிட்டு காட்டியுள்ளார்.  

இவர்களைத் தான் நான் ஆதரிப்பேன் என்று கங்கணம் கட்டி மனசாட்சியை அடகு வைத்து விட்டு வாழும் ஜீவன்கள் கீழே உள்ள படத்தை லேமினேட் செய்து வீட்டில் வைத்திருப்பது நல்லது.



தலைவர் கடிதம் - 30 - பூத்தது தாமரை பொலிவுடன் மாநிலம் முழுவதும் பாஜக விற்கு மக்கள் பிரதிநிதிகள்

Listen to "தலைவர் கடிதம் - 30 - பூத்தது தாமரை பொலிவுடன் மாநிலம் முழுவதும் பாஜக விற்கு மக்கள் பிரதிநிதிகள்" by JothiG ⚓ https://anchor.fm/jothig/episodes/--30---e190nbc/a-a6ntjva 


மோடி அரசின் காப்பீட்டுத் திட்டங்கள் - கேசவன் சிதம்பரம்

Thursday, October 14, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது

உள்ளாட்சித் தேர்தல் என்பது கட்சிகளோடு தொடர்பற்றது. எந்தக் கட்சியும் வேட்பாளர்களை மிரட்ட முடியாது. பணிய வைக்கவும் முடியாது.  வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்னை வா? என்று அழைக்க முடியாது. பணம் கட்டு பார்க்கலாம் என்று சம்பாதிக்க முடியாது. இது முழுக்க உண்மையான மக்களுக்கான தேர்தல். அடித்தட்டு மக்களின் ஜனநாயகப் புரட்சி சார்ந்த முன்னெடுப்பு என்று தான் சொல்ல வேண்டும். 

இந்த விசயத்தில் அமரர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு ஒவ்வொரு கிராம வாசிகளும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.  ஆனால் அவர் ஆசைப்பட்டார். அவர் கட்சிக்காரர்கள் அவர் இருப்பதையே விரும்பவில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஆனால் மோடி அவர்கள் ஒவ்வொரு மாநிலமும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தான் நிதி என்று கடிவாளம் போட்டு இன்று மாநில அரசுகள் விரும்பாத இந்தத் தேர்தல் நடக்க காரணமாக இருக்கின்றார் என்பதனை நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

இது சார்ந்த விதவிதமான காட்சிகளைத்தான் இப்போது நாம் தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தோம். தனி நபர்கள், அவர்களின் செல்வாக்கு, செல்வாக்கு, பண பலம், சமூக பலம், சாதியச் சார்பு, மதம் சார்ந்த ஆதரவு இவைகள் தான் முக்கிய இடத்தைப் பிடித்தன.  

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் இல்லை. 

மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளை நகரச் செயலாளர்கள் வரைக்கும் பங்கு பிரித்துப் பக்குவமாக ஆட்களைப் பார்த்து, எதார்த்தம் புரிந்து, நிஜத்தை உணர்ந்து இதில் வேட்பாளராக நிறுத்த உதவி புரிந்தனர். வார்த்தைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள். எவரும் நீ தான் நிற்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனக்குத் தகுதி இருக்கிறது. நான் நிற்கிறேன் என்று வந்து சொன்னவர்களை ஒவ்வொரு கட்சியும் அரவணைத்து தங்கள் கட்சி வேட்பாளர்கள் போலக் காட்டிக் கொண்ட தேர்தல் இது.

இந்த வெற்றிக்காக திமுக எப்போதும் போது அதற்குண்டான அனைத்துக் கேவலமான ஜனநாயக நெறிமுறைகளை மீறி பணத்தை இறைத்து, ஆட்களைக் கடத்தி, மிரட்டி, பணிய வைத்து, அரசு வேலைகள் தருகிறேன், 

ஒப்பந்தம் தருகின்றோம் என்று ஒவ்வொரு நபருக்கும் விலை பேசி கடைசியில் ஊடகங்கள் மூலம் ஐந்து மாத ஆட்சிக்கு உண்டான வெற்றி என்பது கட்டியக்காரர்கள் போலக் காட்சி ஊடகங்களில் சிரிப்பு மூட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மதிப்பிற்குரிய தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் ஒன்று உண்டு. என் எண்ணப்படி இன்னும் சில தினங்களில் நடந்தேறும் என் உள்மனம் சொன்னாலும் நான் மனதில் நினைப்பதை இங்கே இப்போதே எழுதி வைத்து விடுகின்றேன்.

பாஜக வில் இருப்பவர்கள் மூன்று விதமான நபர்கள்.

1. திமுக வழங்கும் சலுகைக்காகக் கட்சியைக் காவு கொடுப்பவர்கள்.

2. அதிமுக வுடன் பழகிய பாவத்திற்கு அங்காளி பங்காளியாக தொழில் கூட்டாளியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

3. கட்சி வளர்ந்தால் தன் இருப்பு போய் விடும் என்ற எண்ணத்தை எவையெல்லாம் செய்யக்கூடாதோ அதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நபர்கள்.

4. கருத்துக்களைப் பரப்ப வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் பகடிப்படங்களைப் பரப்பும் நபர்களாக இருந்து கொண்டு தாங்கள் செய்யும் பாவங்களை இன்னதென்று அறியாமல் அப்படியே அதன் வழியே பயணித்து கட்சியைக் காட்சிப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கும் தகுதியற்ற நபர்கள்.

இந்த நான்கு திசைகளில் உள்ள அசுத்தக் காற்றை உறிஞ்சும் குழல் ஒன்றைத் தயார் செய்யுங்கள் தலைவரே. 

தேவையில்லாதவற்றை  நீக்கினால் போதும். 
சிலை  பார்வைக்குத் தெரியும். 
காரணம் உங்கள் உழைப்பு வீணாகிப் போய் விடக்கூடாது.  
லடாக் முனை கைவசமானது போலக் குமரி முனை உங்கள் உழைப்பு சாத்தியப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அதற்கு பாரத்தைக் குறையுங்கள். பயணம் இனி இனிதானதாக மாறும்.

வலிமையான பாரதம் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - PART -1   நிதி ஆலோசகர் திரு. ஷ்யாம் சேகர்
 

 வலிமையான பாரதம் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - PART -2    நிதி ஆலோசகர் திரு. ஷ்யாம் சேகர்