Saturday, July 31, 2021

மகாராணி மஞ்சுளா

 

முதல் பகுதி வாசிக்க

****

(2)

நாலைந்து மாதங்களுக்கு முன்னால் மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் குட்டி நாய் ஒன்று எங்கள் வீட்டின் முகப்பு பகுதியில் பயத்துடன் ஒதுங்கித் தடுமாறிக் கொண்டிருந்தது. சபாநாயகர் எதிர்ப்பையும் மீறி உள்ளே அழைத்து வந்து துடைத்து பெண்கள் நலக்கூட்டணிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். சில தினங்கள் கழித்து மஞ்சுளா என்ற பெயரும் வைத்தேன். மகள் ஒருவர் காரணம் கேட்டார். 


Friday, July 30, 2021

2029

கேள்வி...

இங்கு எல்லாமே பத்து ஆண்டுகளுக்குள் தனியார் மயம் ஆகும் வெளிப்படையாக. 



Wednesday, July 28, 2021

தமிழக மத நல்லிணக்கம் + தமிழக இளைஞர்களின் தொழில் ஆர்வம் = 50 ஆண்டு கால ஆட்சி

என் யூ டியூப் சேனலில் கடந்த ஒரு வருடத்தில் அரசியல் சார்பான எந்த காட்சி வடிவத்தையும் நான் பதிவேற்றவில்லை. இங்கு தொடர்ந்து வாசித்து வருகின்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

நான் பாஜக வின் ஆதரவாளன். அதனையும் வெளிப் படையாகவே அறிவித்து உள்ளேன். அது சார்ந்து தொடர்ந்து எழுதி வருகிறேன். இன்னமும் எழுதுவேன். 

எந்த இடத்தில் அரசியல் பேச வேண்டும்? யாருடன் அரசியல் பேச வேண்டும்? ஏன் அரசியல் பேச வேண்டும் என்பதனை நான் நன்றாக அறிந்தவன் என்ற முறையில் இது நாள் வரைக்கும் முடிந்தவரைக்கும் நாகரிகத்தை கடைப்பிடித்தே வந்துள்ளேன். ஆனால் நெருங்கிய நண்பர்கள் தெரிந்தே இங்கே நடக்கும் அவலங்களைப் பதிவு செய்ய மறுப்பதும், மட்டையடியாக பாஜக எதிர்ப்பு தளத்தில் செயல்படுவதும், படித்தவர்கள் கூட பல படிகள் கீழ் இறங்கி தன்னை ஏமாற்றிக் கொள்வதோடு எதிர் காலத் தமிழ்ச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள் என்பதனை நினைத்து நினைத்து வருத்தப்படுகின்றேன். 

நீங்கள் நிகழ் கால சமூகத்தை எழுதாமல் தவிர்க்கும் உங்கள் செயல்பாடுகள் உங்களை சாவு வரைக்கும் துரத்தும் என்பதனை நன்றாக நினைவில் வைத்திருக்கவும். 

படித்தவர்களின் கள்ள மௌனம் என்பது மிக மிகக் கொடுமையானது. 

சமூக சீரழிவுக்கு அதுவே முக்கிய காரணமாகவும் அமைந்து விடுகின்றது. 

கடந்த 10 வார திமுக ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் எதிர்கால நம் தலைமுறைகளின் வாழ்க்கையோடு தொடர்புடையது. 

ஊடக மௌனம், பத்திரிக்கையாளர்களின் பாரபட்சம், அரசு ஊழியர்களின் அமைதி என்று எல்லாப் பக்கமும் இருட்டாகவே உள்ளது. 

லியோனி போன்றோர்களைப் பாட நூல் நிறுவனத்தில் கொண்டு அமர்த்திய பின்பு அப்படிப்பட்ட ஓர் அமைப்பே இங்கே தேவையில்லை என்பதே என் கருத்து. ஏற்கனவே அதிமுக வளர்மதி இருந்த போதும் இதையே சொன்னேன். 

சென்ற வாரத்தில் அருமனை என்ற ஊரில் நடந்த விழாவில் ஒரு பாதிரியார் பேசிய பேச்சை நீங்கள் வலைதளங்கள் வாயிலாக கேட்டு இருக்க வாய்ப்புண்டு. 

திருப்பூர் ஏற்றுமதியாளர் கொடுத்த பேட்டி. 

இவை இரண்டு கடந்த ஒரு வாரத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்தது. 

ஏன் திமுக அரசு பாதிரியாரைக் கைது செய்ய உத்தரவிட்டது என்பதற்குப் பதில்? 

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் என்றால் என்ன? 

தமிழ்ப்பிள்ளைகள், வளர்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் பெற்ற சிறப்பான தகுதி? 

இந்த மூன்றையும் அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின்பு யாராவது 2021 ல் தமிழகம் எப்படி இருந்தது என்பது பற்றி யோசித்துத் தேடிப் பார்த்தால் பார்வையில் பட வேண்டும் என்பதற்காக நான் பதிவேற்றி உள்ளேன். 

மதுரையில் இருக்கும் என் பொன்மனச் செல்வன், சொல் ஆற்றல் மிகுந்த கருணாநிதியின் வளர்ப்பு மகன், பாஜக வந்துரும் என்ற சங்கத்தின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் இந்த மூன்றையும் பார்த்து இங்கே விமர்சனம் எழுதுவார் என்று நம்புகிறேன். 
 
    






Tuesday, July 27, 2021

மின்சார (திருத்தம்) மசோதா 2021

மீன்பிடித்தல் தொடர்பான புதிய மசோதா மற்றும் மின்சாரத் துறை சார்ந்த மசோதா இரண்டும் இப்போது பொது விவாதம் ஆகி உள்ளது.

இப்போது மின்சார (திருத்தம்) மசோதா 2021 பார்க்கலாம்.

Sunday, July 25, 2021

வயது 13

தேவியர் இல்லம் 12 ஆண்டுகள் முடிந்து 13 ஆம் ஆண்டில் தொடங்குகின்றது. உடன் பயணிக்கும், ஆதரிக்கும், விமர்சிக்கும் அனைவருக்கும் நன்றி.


Friday, July 23, 2021

மகள் செய்த சாதனை 19 ஜுலை 2021

இதுவரையிலும் வாழ்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உறவாடிய விதமும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழில் நுட்ப உலகம் உருவாக்கிய மாற்றங்களுக்குப் பின்பு தங்கள் குழந்தைகளுடன் உறவாடும் விதமும் முற்றிலும் மாற்றம் பெற்றுள்ளது என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்தே இருக்கக்கூடும். 

இதை உணராதவர்கள் பெருந்துன்பத்தைப் பெற்று அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம்.

நொடிக்கு நொடி செய்திகள், விரல் நுனியில் உலகம், உண்மைகள் எங்கே உள்ளது? என்பதனை தேடித்தான் பார்க்க முடியும்? என்கிற அளவுக்கு எத்தனை விதமான கற்பனைகள் உண்டோ அத்தனையும் நம் கண்ணில் தெரிந்து நம்மைக் கதற வைத்துக் கொண்டு இருக்கின்றது.

அனுபவம் இருப்பவர்களுக்கே உருவான, உருவாகிக் கொண்டு இருக்கும் மாற்றங்கள் அனைத்தும் சவாலாக இருக்கும் போது 15 முதல் 25 வயதுள்ள முதல் தலைமுறைக்கு எப்படியிருக்கும்.

மொழி, நாகரிகம், கலாச்சாரம் என்று எல்லாமே மாறியுள்ளது.

பிழைப்பதே முக்கியம் என்பதாக வாழ்க்கை தத்துவம் ஒவ்வொருவருக்கும் உணர்த்தியுள்ளது. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதும் மாறியுள்ளது. 

இதற்கிடையே தான் உங்கள் குழந்தைகள் உங்களுக்குப் பல பாடங்கள் நடத்துகின்றார்கள்.

மகளைப் பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்துக் கொண்டிருந்த தனியார்ப் பள்ளியிலிருந்து நகர்த்தி புதிய அரசுப் பள்ளியில் சேர்த்த போது அவரிடம் சேர்த்த தினத்தில் சொன்னேன்.

"இங்கு உனக்குப் புதிய அங்கீகாரம் தேடி வரும். மாவட்ட கல்வி அதிகாரி உன்னைத் தேடி வந்து பார்ப்பார். பத்திரிக்கையாளர் உன்னிடம் பேட்டி எடுத்து பத்திரிக்கையில் பிரசுரம் செய்வார்கள்" என்றேன்.

அது அப்படியே நடந்துள்ளது.

வாய்ப்பு இருந்தால் இந்த வலையொளியைக் காண அன்போடு அழைக்கின்றேன்.

மாதா, பிதா இவர்களுக்குப் பின்பு தான் ஆசிரியர். அதற்குப் பின்பு தான் தெய்வம்.

உங்கள் கைகளில் தான் எல்லாமே உள்ளது.  

Wednesday, July 21, 2021

அருள்

கேள்வி

பாஜக வந்தால் எல்லாம் மாறிவிடும்  என்று சொல்லி உள்ளீர்கள்.. இது எல்லாக் கட்சிகளும் சொல்வது தான். தனி மனிதர்கள் மாறாது இங்கு எதுவும் மாறப் போவதில்லை.. 

ஆனால் மனிதனை மாற்றும் சக்தி இயற்கைக்கு மட்டுமே உண்டு. மாறாவிட்டால் இயற்கையே அதற்குப் பதில் சொல்லும். இன்னும் 15 வருடங்கள் உலகத்தில் உயிரோடு இருப்பதே சவாலாக இருக்க போகிறது. அரசியல், மதம் இரண்டையும் வணிகம் பின்னால் இருந்து ஆட்டி வைக்கும்... 

இது நன்மையா தீமையா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்...

பதில்

நேற்று அருள் என்பவர் இந்த விமர்சனத்தைத் தனிப்பட்ட முறையில் அனுப்பியிருந்தார். நன்றி. நான் எழுதுவது ஒரு வழிப் பாதையல்ல. எனக்கு எந்த முன் முடிவுகளும் இல்லை. நான் எழுதுவது மட்டும் சரி என்ற பிடிவாதமும் இல்லை. நாகரிகமான ஆக்கப்பூர்வமான உரையாடல்களை விரும்பவே செய்கின்றேன். நிச்சயம் அதற்கு உரியப் பதில் அளிப்பேன்.

1. என்னுடன் உரையாடும் மிக நெருங்கிய நண்பர்கள் மோடி என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு உரையாடத் தொடங்கும் போது பக்கத்து வீட்டில் தீ பிடித்த அவசரம் போலவே பேசத் தொடங்குகின்றார்கள். நிதானம் இல்லை. உள்வாங்கி உணர்ந்து பேசும் பொறுமை இல்லை. அவர்களின் பதட்டத்தை ரசிப்பேன். நான் பதட்டப்படுவதில்லை. காரணம் தமிழ் நாட்டில் நடந்த நடந்து கொண்டிருக்கும் விசயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினால் அவர்கள் அமைதியாகி விடுவார்கள். அதற்கு அவர்கள் பதில் அளிக்க முன்வருவதில்லை என்பதனை நான் அறிந்தே வைத்துள்ளேன். 

மதம் கொடுமையானது என்று வாதிட விரும்புகின்றவர்கள் சாதி குறித்து எதுவும் பேசுவதில்லை. மதம் மூலம் ஆட்சியைப் பிடிக்கின்றார்கள் என்று வாதிட விரும்புகின்றவர்கள் சாதி மூலமாகத்தான் இங்கே அதிகாரம் தீர்மானிக்கப்படுகின்றது என்பதனை பேச விரும்புவதில்லை. ஏன்?

சமூக நீதி என்ற வார்த்தையைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் எந்தச் சமூகத்திற்கான உண்மையான நீதி என்பதனை ஏன் பேச விரும்புவதில்லை. தாழ்த்தப்பட்ட சமூகம் முன்னேற வேண்டும் என்று சொல்கின்றவர்கள் ஏன் அவர்களுக்கு இன்னமும் சமூகம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவர்களை சுய மரியாதை உள்ளவர்களாக மாற்ற அதற்கான காரணக் காரியங்களைச் செய்வதில்லை என்பதனை யோசிப்பதே இல்லை.

நான் யோசிப்பது என்னளவில் என் குடும்பத்திற்கும் அரசாங்கத்திற்கும் உண்டான தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என்பதனையே முதலில் பார்க்கின்றேன். ஜனநாயகம் என்ற போர்வையில் தேர்ந்து எடுக்கப்பட்ட சார்பாளர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதனைத்தான் நான் கருத்தில் கொள்கிறேன். அதன் அடிப்படையில் தான் நான் கட்சி அரசியல் அதன் கொள்கைகளைப் பார்க்கின்றேன்.

1. இன்று நான் வாங்கும் நியாயவிலைக்கடைகளில் வந்துள்ள அனைத்து விதமான நவீனத் தொழில் நுட்ப வசதிகளும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு கட்டாயத்தின் அடிப்படையில் தான் புகுத்தப்பட்டது.

2. இன்று நான் பயன்படுத்தும் மின்சாரம் என்பது பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு தான் கிடைத்து வருகின்றது. இவர்களின் கொள்ளையின் மூலம் மூட வேண்டிய தமிழக மின்சார வாரியம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

3. இன்று நான் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலை அனைத்தும் கடந்து ஏழு ஆண்டுகளில் தான் தமிழகம் எங்கும் அதிகமாக போடப்பட்டுள்ளது.

4. இன்று நான் பார்த்து ஆச்சரியப்படும் ரயில்வே துறை என்பது பாஜக அரசின் மூலமே சாத்தியப்பட்டுள்ளது. 

5. பாஜக விற்கு தமிழகம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அனுப்பத் தயாராக இல்லை என்பதனை நினைவில் வைத்திருக்கவும்.

6. கற்றுக் கொள் களத்தில் இறங்கு குழுமம் வலைளொளிக்காட்சியை உங்கள் கட்சி கண்ணோட்டத்தை நீக்கி வைத்து விட்டு நேரம் இருந்தால் பொறுமையாக முழுமையாக ஒன்றன்பின் ஒன்றாக கேட்டுப் பாருங்கள். 

புள்ளி விபரங்கள் துறை சார்ந்து இந்தியா சாதித்த சாதனைகள் உங்களுக்குப் புரிய வாய்ப்புண்டு.

7. நிர்வாகத்தில் கீழ் முதல் மேலே உள்ள பதவிகள் வரைக்கும் நான் இருந்தவன் என்ற முறையில் ஒரு திட்டமிட்ட நிர்வாகம் எப்படி நடக்க வேண்டும் என்பதனை நான் மனதில் வைத்து இருந்தேனோ அப்படித்தான் என் பார்வையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. 

இரண்டு மின் நூலில் ஆவணப்படுத்தி உள்ளேன். ஆதாரங்கள் கொடுத்துள்ளேன். எதுவும் புனைவு அல்ல. கற்பனைகளை சேர்க்கவில்லை. எதிர்க்கட்சிகளும் மறுக்க முடியாத விசயங்கள் உள்ளது. 

8. மதம் வணிகத்தை கட்டுப்படுத்த முடியாது. வணிகம் மதத்தை உள்வாங்கி செறித்து விடும். அமேசான் பத்தாயிரம் ரூபாய் அலைபேசியை எட்டாயிரம் ரூபாய்க்கு கொடுத்தால், அதுவும் தரமானது எனில் மூன்று மதங்கள் மட்டுமல்ல அனைத்து மற்ற மத மக்களும் வாங்காமல் இருப்பார்களா? விற்பவர் கிறிஸ்துவர் என்று மற்றவர்கள் புறக்கணிப்பார்களா?

9. இணையம் வழியே நிர்வாகம் என்பதனை பாஜக அரசு தான் முன்னெடுத்து வந்துள்ளது. என்னால் இன்று வரையிலும் மாநில அரசில் உள்ள ஒரு அதிகாரி, அமைச்சர், சமஉ ஒருவரைக்கூட இயல்பாக தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் 3000 கிமீ தொலைவில் உள்ள மிகப் பெரிய அதிகார வர்க்கத்தை என்னால் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடிகின்றது. என் சுயமரியாதையைக் காப்பாறுகின்றார்கள்.

நான் எழுதிய 100 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாறு இதில் இணைத்துள்ளேன். 

நான் ஏன் இவர்களை ஆதரிக்க மறுக்கின்றேன் என்பதற்கு அத்தனை காரணங்களும் அதில் உள்ளது. நான் அரைகுறை அரசியல் ஆர்வலர் அல்ல. இவர்களுக்கு அதிகாரம் என்பது பணம் சம்பாதிக்க உதவும் ஒரு கருவி. இவர்கள் தங்கள் சொந்த மக்களை விலைபேசும் வேடத்தில் வாழும் அற்ப மானிட பிறப்புகள். 

ஆனால் நீங்கள் சொல்வது உண்மை. 

இவர்கள் ஆட்சியில் இருந்தால் அடுத்த 15 வருடம் அல்ல. அதற்குள் நமக்கு மட்டுமல்ல நம் வாரிசுகளும் இங்கே தமிழ் நாட்டில் வாழ முடியாத நிலையே உருவாகும். உருவாக்கிக் கொண்டும் இருக்கின்றார்கள். இரண்டு கட்சிகளும் முடிந்தால் மட்டுமே அது தமிழகத்திற்கு சுதந்திர தின நாள். அது பாஜக அல்லது புதிய நபர்கள் யார் வேண்டுமானாலும் இருப்பதை நான் ஆதரிப்பேன்.

இவர்கள் இன்னமும் தங்கள் சுய லாபத்துக்காக வழங்கிக் கொண்டிருக்கும் விஷ சாரயத்தை குடித்து வாழும் ஆண்கள் ஆண்மையிழந்தவர்களாக, உழைக்க முடியாதவர்களாக, செயல்பட முடியாதவர்களாக மாறியிருப்பார்கள்.  

காசு பார்ப்பதையே முழு நேரத் தொழிலாக மாற்றிக் கொண்ட காட்சி ஊடகங்கள் அனைத்து பெண்களை பொறாமைப் பேய்களாக மாற்றியிருப்பார்கள்.

ஆங்கிலமும் தமிழும் முழுமையாக தெரியாத புரியாத புதிய தலைமுறை உருவாகி தியாகத்தை கொச்சைப்படுத்துவதையே நாகரிகம் என்பதாக கருதி வாழ்வார்கள்.

காரணம் இவர்களின் நோக்கம் செயல் எல்லாமே விழிப்புணர்வு இல்லாத தலைமுறை, போட்டிகளை வெறுக்கும் தலைமுறை, தேடல் இல்லாத தலைமுறை என்று ஒரு பெருங்கூட்டத்தை இங்கே இப்படியே இருக்க வேண்டும் என்பதனை 50 ஆண்டுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளனர். அதையே சரியென்று நம்ப வைத்துருப்பதும் இவர்களின் தனிப்பட்ட வெற்றி தானே?

காரணம் காமராஜர், பக்தவச்சலம், அண்ணாத்துரை என மூன்று பேர்கள் அரசியல் தலைவர்களாக இங்கே வாழ்ந்தார்கள். அதற்குப் பின்னால் வந்த அத்தனை பேர்களும் அரசியல் வியாதியாகவே வாழ்ந்தனர் என்பதனை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.

நான் வியாதியஸ்தர்களை ஆதரிக்கவும் மாட்டேன். பெருமைப்படுத்தவும் மாட்டேன்.


Tuesday, July 20, 2021

முகங்கள் மாறும் என்பது இயற்கை விதி

கட்சியாக இருக்கும் போது செய்ய வேண்டிய அரசியல், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு செய்யும் அரசியல் என இந்த இரண்டையும் நீங்கள் புரிய முற்பட்டால் உங்களிடம் பதட்டம் இருக்காது.  

தொழில் செய்பவர்களுக்கு லாபம் தான் முக்கியம். அரசியல்வாதிகளின் இறுதி இலக்கு அதிகாரம். 

இரண்டு இடங்களிலும் கொள்கை தேவை. ஆனால் நூறு சதவிகித அக்மார்க் சுத்தமான நயமான கொள்கை என்று நம்பாதீர்கள். 


Saturday, July 17, 2021

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கோரத்தாண்டவம்

கடந்த ஏழெட்டு வாரங்களில் வாசித்த பல கட்டுரைகளில் அதிகம் பாதித்த, மன உளைச்சலை ஏற்படுத்தியவை எனில் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கோரத்தாண்டவம். 


Thursday, July 15, 2021

அண்ணாமலை Annamalai Kuppusamy

தமிழக அரசியல் நகர்வுகளில் எது முக்கியமானதோ இல்லையோ? யார் வரும் போது எவரெல்லாம் வாழ்த்து சொல்கின்றார்கள்? என்பது உங்களுக்குப் புரிந்தால் போதும்? மீதியுள்ளவற்றை உங்களால் யூகித்துக் கொள்ள முடியும்?



Monday, July 12, 2021

கிறுக்குக்கூட்டம்

வளர்ச்சி என்பதற்கு அடையாளமே தமிழகம் தான் என்று இன்று வரையிலும் ஒரு பெரிய கிறுக்குக்கூட்டம் இன்று வரையிலும் அலப்பறை செய்து கொண்டு இருக்கின்றது.



Friday, July 09, 2021

மனித உரிமைகள் என்பது தீவிரவாதிகளுக்கு கொடூரமான ஆயுதம்.

சிலவற்றை எழுதும் போது அது பெரிதாக உள்ளது என்பதனை நான் பார்ப்பதில்லை. ஆவணங்களை உடனே முழுமையாக வாசிப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் நாளை எவரேனும் உரையாடும் போது இந்த உண்மைகள் உரக்கப் பேசும்.


Tuesday, July 06, 2021

ஒன்றியம் என்ற வார்த்தை

தொடர்ந்து எழுதுவதற்குக் காரணம் எழுத நேரமுள்ளது. நேரத்தை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளேன். நிறைய வாசிக்கின்றேன். கணினி முன்னால் அதிக நேரம் அமர வேண்டும் என்ற சூழல் இயல்பாகவே உள்ளது. தமிழ் தட்டெழுத்து பயிற்சி உண்டு. இவற்றை விட சில நல்ல தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பவர்களுக்கு உதவும் என்பதற்காக மட்டுமே.

தம்பிமார்கள் இருவர் கடந்த சில நாட்களில் ஆமோதித்து இருந்தார்கள். புதுப்புது தம்பிகள் அவ்வப்போது சொல்கின்றார்கள். ஆனால் கட்டாயம் உங்களுக்கு உங்கள் தலைமுறைக்கு மின்னிலக்க வாசிப்பை அறிமுகம் செய்து வையுங்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

அமேசான் கிண்டில் செயலியை உங்கள் அலைபேசியில் தரவிறக்கம் செய்து அமேசான் மூலமாக இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள். தினமும் அரை மணி நேரமாவது எதையாவது ஒன்றை வாசிக்க முயலுங்கள் என்று சொல்லி வருகிறேன்.

நண்பர் வாசிப்பு என்பதனை எப்படி கடைப்பிடிக்கின்றார் என்பதற்கு உதாரணமாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள். படுக்கையறை, அலுவலகம், வாகனம், வரவேற்பறை என்று அனைத்து இடங்களிலும் ஏதோவொரு புத்தகம் இருக்க பல துறைகளை ஒவ்வொரு நாளும் சில பக்கங்கள் வாசித்து முடித்து விடுவேன் என்பது போல உங்களை நீங்களே திட்டமிட்டு வளர்த்துக் கொள்ள முடியுமா? என்று பாருங்கள். 

வாசிப்பு என்பது உங்கள் சீர்படுத்தும் என்பதனை நினைவில் வைத்திருங்கள். உங்கள் மகன் மகளுக்கு வாசிப்பதை நீங்கள் அறிமுகம் செய்து வைக்காத பட்சத்தில் அதன் எதிர்விளைவுகளை அடுத்த ஐந்து வருடங்களில் நீங்கள் பெறுவீர்கள் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள். அவர்கள் குப்பை போலச்  சமூகத்தில் மிதக்கும் சூழல் உருவாகும்.

கடந்த சில வாரங்களில் ஒன்றியம் என்ற வார்த்தை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் ஆனது. ஜூலை மாதத்தில் இணையத்தில் எழுதியவற்றில் முக்கியமானவற்றை இதில் தொகுத்துள்ளேன். இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும்.

முயன்று பாருங்கள். 

மின்னூல் பெற


Monday, July 05, 2021

VISTA Project - புதிய பாராளுமன்றக் கட்டிடம்

தமிழக அரசியல்வாதிகளால் மோடி வீடு என்று சொல்லப்படும் புதிய பாராளுமன்றக் கட்டிடம் ஏன் இந்த சமயத்தில் கட்டப்படுகின்றது? 

என்ன காரணம்? 

என்ன முக்கியத்துவம்? 

எத்தனை தடைகளைக் கடந்து கட்டப்பட்டு வருகின்றது?

யாருக்குப் பிரச்சனை? 

அதன் பின்னால் உள்ள காரணம் என்ன? 

மாதம் தோறும் டெல்லி முழுக்க 51 அமைச்சக கட்டிடங்கள் யாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் இப்போது உள்ளது? 

புதிய பாராளுமன்றக் கட்டிடம் செயல்படத் தொடங்கும் போது அவர்களுக்கு உருவாகும் வருமானப் பிரச்சனை என்ன?

Thursday, July 01, 2021

குடிகார சமூகத்தை வளர்க்கும் பாவிகள்

தமிழகத்தின் மதுபான சந்தை உத்தேசமாக 50 000 கோடி முதல் 60 000 கோடி வரைக்கும் உள்ளது என்று பத்திரிக்கை யாளர்களிடம் பேசும் போது தமிழக நிதியமைச்சர் அறிவித்தார். ஆனால் நமக்கு வர வேண்டிய கலால் வரிகள் அரசுக்கு வருவதில்லை என்றும் கூறினார். என்ன? எப்படி? ஏன் என்ற கேள்வியை மூனா கானாவும் கேட்கவில்லை. அவரும் அது குறித்துப் பேசவும் இல்லை.