Tuesday, January 29, 2013

டாலர் நகரம் விழா - நன்றியை காணிக்கையாக்குகின்றேன்


"ஒரு அடியாவது எடுத்து வை."

இது மகாத்மா காந்தியின் பிரபல்யமான வாசகம். 

அடிக்கடி நானே எனக்குச் சொல்லிக் கொள்ளும் வாசகமும் கூட.  

27.1.2013 திருப்பூரில் டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா இனிதாக நடந்து முடிந்தது.

இந்த விழா மூலம் நான் நினைத்து வைத்திருந்த அத்தனை விசயங்களும் சிறப்பாக நடந்தது. இது குறித்து விரைவில் விரிவாக எழுதுகின்றேன்..

இந்த பதிவில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. மலைநாடன்
4 tamilmedia.com நிறுவனர் ஆசிரியர்.

நான் வலைதளத்தில் எழுத வந்தது (2007 மே) ஒரு எதிர்பாரத நிகழ்வு.  ஒரு மிகப்பெரிய தோல்வியில் இருந்து மீண்டு வர அப்போது மனதிற்கு மாறுதல் தேவைப்பட்டது.

தமிழ் தட்டெழுத்துப் பயிற்சியென்பது பள்ளி முதல் இன்று வரையிலும் மிக நன்றாக தெரிந்த காரணத்தால் இணைய எழுத்துப் பயணம் தொடர்ந்தது. இன்று வரைக்கும் தொடர்கின்றது. 

வருகின்ற 2013 ஜுலை மாதம் ஐந்தாம் ஆண்டு முடியப்போகின்றது.  ஐந்து வயது முடியும் போது முதல் வகுப்பில் அடி எடுத்து வைப்பது போல நானும் டாலர் நகரம் என்ற புத்தகம் எழுதி 4 தமிழ் மீடியா குழுமம் வெளியிட்டுள்ளது.

எழுத்துலகில் என்னைப் பொறுத்தவரையிலும் இது முதல் ஆண்டு.

எனக்கு ஆசிரியராக வாய்த்தவர் திரு. மலைநாடன்.  கண்டிப்பு வாத்தியார்.  இவர் அகராதியில் சமரசம் என்ற வார்த்தையே இல்லை.  தரம் மட்டுமே குறிக்கோள். ஆனால் எப்போதும் வேகத்திலேயே பயணித்துக் கொண்டு இருப்பவனை எதற்கும் அடங்காதவனை தன் வார்த்தைகளால் வசமாக்கி என்னையும் அவர் 4 தமிழ்மீடியா தளத்தில் வெளியிடும் மனமே வசப்படு என்பது போல மாற்றியவர். இலக்கணத்திற்குள் அடங்காத என் வார்த்தைகளை, எழுத்துக்களை, வாசிக்க உகந்ததாக மாற்றியவர். 

இன்று நானும் திருப்பூரில் உள்ள தொழில் துறை சார்ந்த நண்பர்களிடம் வேறொரு வகையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றேன் என்பதற்கு இந்த வாத்தியரே காரணம். 

இவரைப் பற்றி இவருடன் உண்டான தொடர்பு குறித்து தனியாக எழுதுகின்றேன்.

கற்றுக் கொண்ட பாடம்  

உழைப்புக்குண்டான பலன் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. ராஜராஜன். சென்னை.

ஈழம் தொடர்பான பதிவுகள் எழுதத் தொடங்கிய போது எனக்கு மின் அஞ்சல் வாயிலாக அறிமுகம் ஆனவர்.  ஈழம் தொடர்பாக எழுதிய முதல் தலைப்பின் போது உருவான அறிமுகம் இன்று வரை நல்ல புரிந்துணர்வோடு தொடர்கின்றது.. அப்போது இவர் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தற்போது சென்னையில் இருக்கின்றார். 

இவர் குடும்பத்திற்கு சென்னையில் இருக்கும் வசதிகளைப் பார்த்தால் மிரண்டு போய்விடுவீர்கள். அது என் அப்பா சம்பாரித்த சொத்து.  என்னுடையது அல்ல என்பார். 

எது குறித்தும் எவரிடமும் சொல்ல மாட்டார்.  தனது கொள்கை ரீதியான சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கின்றார்.  ஆனால் ஆயிரம் மடங்கு நம்பமுடியாத கொள்கை பிடிப்பாளர். கடந்த நான்கு வருடங்களாக கடவுள் என்ற வார்த்தையை விட மனிதன் என்ற வார்த்தையை நாம் அதிகம் நம்புகின்றேன். மிக முக்கிய காரணம் இவர் தான். 

மனிதர்களிடத்தில் எத்தனை குறைகள் இருந்தாலும் நான் சந்திக்கும், பழகும் ஒவ்வொரு மனிதரையும் கடவுளாகத் தான் பார்க்கின்றேன். காரணம் இவர்கள் தான் எனக்கு கற்றுக் கொடுக்கும் கடவுளாக இருக்கின்றார்கள். பல சமயம் சோர்ந்து போன சமயங்களில் என்னை தூக்கி சுமந்து கொண்டு செல்லும் கடவுளாக இருக்கின்றார்கள்.

நான் வலையுலகில் வெற்றியடைந்துள்ளேன் என்பதற்கு இவர் என் மேல் வைத்துள்ள மரியாதை, அக்கறையும் முக்கிய காரணமாக இருக்கிறது. தேவியர் இல்லம்  இவருக்கு நிறைய கடமைப்பட்டுள்ளது. நான் இன்று இந்த அளவுக்கு தொழில் வாழ்க்கையில் உயர்ந்து நிற்பதற்கு, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றார்.

இவரின் நன்றிக்கடனை தீர்க்க வேண்டும் என்று முயற்சிகளை எடுப்பேன்.  ஆனால் கட்டை போட்டு தடுத்து விட்டு ஒரு நக்கல் சிரிப்பை உதிர்ப்பார்.

நாங்கள் இருவரும் எல்லாவிதங்களிலும் நேரெதிர் கருத்து கொண்டவர்கள்.  சண்டை போடாத நாளே இல்லை. ஆனால் இரட்டையர் போல ஏதோவொரு புள்ளியில் ஒவ்வொரு முறையும் இணைந்து கொண்டே இருக்கின்றோம். கடந்த நான்கு ஆண்டுகளில் இவர் எனக்கு செய்த உதவிகளை பட்டியலிட்டால் எவராலும் நம்ப முடியாது. 

டாலர் நகரம் புத்தகம் அச்சாகி திருப்பூர் கொண்டு வந்து சேர்ந்தது வரை, திருப்பூருக்குள் பலருக்கும் கொண்டு சேர்த்தது வரைக்கும் இவரின் உழைப்பு பற்றி வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. டாலர் நகரம் விழாவுக்கென்று சென்னையில் இருந்து கிளம்பி வந்து இந்த விழாவுக்காக உழைத்து விட்டு சென்றவர். 

நான் இவரைப்பற்றி முழுமையாக எழுதினால் சென்னையில் திருப்பூருக்கு வந்து என்னை அடிக்ககூடிய உரிமையுள்ளவர். 

தனது வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைத்து விட்டு எனக்காக திருப்பூர் வந்தவர்.  

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவை திரு. ராஜராஜனுக்கு காணிக்கையாக்குகின்றேன்.

கற்றுக் கொண்ட பாடம் 

மனிதர்கள் தான் கடவுள் உருவத்தில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வீடு சுரேஷ் குமார்

திருப்பூரில் ஒரு சொந்தமான வடிவமைப்பு (யுவா கிராபிக்ஸ்) என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அசாத்தியமான திறமைசாலி, படைப்பாளி.

விழா அழைப்பிதழ் முதல் வடிவமைப்பு சார்ந்த அத்தனை வேலைகளுடன் மற்றும் விழா மலர் உருவாக்கம் வரைக்கும் உழைத்தவர் தம்பி வீடு சுரேஷ் குமார். 

நாங்கள் உருவாக்கிய விழா மலர் அவசரத்தில் உருவாக்கியது. காரணம் என்னால் இரவு நேரங்களில் மட்டுமே இந்த வேலைகளில் ஈடுபட முடிந்தது. (தனியாக எழுத வேண்டிய விசயங்கள் உள்ளது) விழா மலர் அச்சு வடிவத்தில் உருவாக்கிய பிறகு உருவான சில பிழைகளைக் கூட எங்களுக்கு மாற்ற நேரம்  கிடைக்கவில்லை. யோசிக்கக்கூட அவகாசம் இல்லாது ஓடிக் கொண்டேயிருந்தோம்.

டாலர் நகரம் சிறப்பு விழா மலரை பிடிஎஃப் கோப்பாக மாற்றி இணையத்தில் ஏற்றும் போது அந்த தவறுகளை முடிந்தவரைக்கும் மாற்ற முயற்சித்துள்ளோம். 

வீடு சுரேஷ் குமார் இன்று (29 1 2013) தருகின்றேன் என்று சொல்லி உள்ளார். இவர் என் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்ற போதிலும் தனது ஆடைத்தொழில் வடிவமைப்பு பணிகளுக்குகிடையே பல நாட்கள் நள்ளிரவு வரை என்னோடு ஒத்துழைத்து இந்த விழாவின் கடைசி நிகழ்வு வரைக்கும் மனம் நோகாமல் காட்டிய ஈடுபாடு என்பது மகத்தானது.

கற்றுக் கொண்ட பாடம்.

வடிமைப்பு சார்ந்த பெரும்பாலான விசயங்களை, மற்றும் கிரியேட்டிவிட்டி என்பதன் முழு அர்த்தத்தையும் நான் கற்றுக் கொண்டேன். ஏற்றுமதி துறை தவிர மற்றொரு புதிய தொழில் என் கைவசம் இருக்கிறது என்ற நம்பிக்கை இன்று எனக்கு உருவாகியுள்ளது.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
செண்பகம் மக்கள் சந்தை நிறுவனர் திரு. ஈஸ்வரன் சீனிவாசன்.

இவர் நிறுவனத்தில் பணிபுரிபவர் தம்பி அருண். 

தனது சுய முயற்சியால் ஒட்டி என்ற திரட்டியை உருவாக்கும் அளவிற்கு தொழில் நுட்பத்தில் முன்னேறி வந்து ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றார்.

பல சாதனைகளை சப்தம் இல்லாது செய்து கொண்டு இருக்கின்றார். தம்பி அருண் வாழ்வில் பல உயரங்களை தொடுவார் என்று நம்புகின்றேன்.

மக்கள் சந்தை.காம், ஒட்டி என்ற திரட்டி, உறவோடு,  தொழிற்களம் போன்ற அத்தனையும் திரு சீனிவாசன் அவர்களின் ஆதரவோடு தம்பி அருண் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.   

திருப்பூர் போன்ற ஊரில் ஒரு வணிக (மளிகைப் பொருட்கள் முதல் மற்ற அத்தனை பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ள பிரமாண்டமான நிறுவனம் தான் செண்பகம் மக்கள் சந்தை) நிறுவனத்தின் முதலாளி தமிழ் இணையத்தில் கவனம் செலுத்தியதோடு பல நல்ல சமூக காரியங்களை சப்தம் போடாமல் செய்து கொண்டு இருக்கின்றார்.  திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த் தமிழ் பள்ளி என்பது இவர்கள் மூலம் தான் எனக்கு அறிமுகம் ஆனது.

இதைப்பற்றி விரிவாக விரைவில் எழுதுகின்றேன். 

திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் செண்பகம் மக்கள் சந்தை நிறுவனம் வைத்துள்ள (என் புத்தகம் குறித்த) ப்ளெக்ஸ் போர்டு என்பது ஒரு பெரிய பிரபல்யமான எழுத்தாளருக்கு உரிய மரியாதையைப்  போல உருவாக்கியதோடு, டாலர் நகரம் விழா முடியும் வரைக்கும் பல உதவிகளை செய்து இது எங்கள் நிறுவனத்தின் விழா என்று சொல்லி எனக்கு பல உதவிகளை செய்து கொடுத்தார். 

திரு. சீனிவாசன் அவர்களின் துணைவியார் கூட விழாவில் கொடுத்த பழச்சாறு என்பதை தனது நேரிடையான கவனத்தில் எடுத்துக் கொண்டு செய்து கொடுத்து அனுப்பினார் என்பதை கேட்ட போது  மகிழ்ச்சியாக இருந்தது. தனது நிறுவனத்தில் எனது புத்தகத்திற்காக தனியாக ஒரு நபரை போட்டு அவர் மூலம் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

திரு. அருண் அலைபேசி எண் 95 66 66 12 14

திரு. ஈஸ்வரன் சீனிவாசன் அலைபேசி எண் 98 94 86 76 43

கற்றுக் கொண்ட பாடம்.  

மனிதர்களை நேசிக்க கற்றுக் கொண்டால் ஒவ்வொரு மனிதரும் கடவுள் தான். செண்பகம் மக்கள் சந்தை நிறுவனத்திற்கு நான் தனிப்பட்ட முறையில் எந்த உதவிகளையும் பெரிய அளவில் செய்து விட வில்லை.  என்னை என் ஆலோசனைகளை பல விதங்களிலும் தம்பி அருணும்திரு. சீனிவாசன் அவர்களும் கேட்பார்கள் என்பது மட்டுமே நான் செய்த உதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
நிகழ்காலததில் சிவா.

சொந்தமாக ஒரு ஏற்றுமதி நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

இவரும் பல ஆண்டுகளுக்கு முன் ஒரே நிறுவனத்தில் வெவ்வேறு துறையில் பணியாற்றினோம். ஆனால் அப்போது பெரிய அளவில் தொடர்பு இல்லை.  ஆனால் இணையம் மூலம் எனக்கு அறிமுகம் ஆனது முதல் இன்று வரையிலும் என்னை என் வேகத்தை, என் சிந்தனைகளை, என் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டவர்.  பல சமயங்களில் வேகத்தடையை போடுவதோடு உரிமையோடு தன் மனதில் பட்டதை அப்பட்டமாக எடுத்து வைத்து இவர் தளத்தில் எழுதும் மனம் சார்ந்த கருத்துக்களைப் போல எடுத்துச் சொல்லி என்னை எனக்கே புரியவைப்பார். 

தேவியர் இல்லத்தின் குடும்ப அங்கத்தினர். 

டாலர் நகரம் புத்தக உருவாகத்தின் தொடக்கம் முதல் விழா முடிந்து நண்பர்கள் அறை காலி செய்து சென்றது வரைக்கும் தொடர்ந்து தனது அசுரத்தனமாக உழைப்பை காட்டியவர். டாலர் நகரம் புத்தகத்தில் வந்துள்ள ஏற்றுமதி நிறுவனம் சார்ந்த படங்கள் அனைத்தும் இவரின் சொந்த நிறுவனத்தில் எடுத்தது. மிகச் சிறந்த படைப்பாளி. இவரின் அணிந்துரை டாலர் நகரம் புத்தகத்தில் வந்துள்ளது. ஆனால் இவரின் முழுத் திறமையை இவர் இன்னமும் உணரவில்லை என்று அடிக்கடி இவரிடம் கோவித்துக் கொள்வதுண்டு. 

தற்போதுள்ள தொழில் சூறாவளி வாழ்க்கையின் காரணமாக இவரின் உண்மையான பல திறமைகளை வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையிலும் என் பார்வையில் தெளிவான உண்மையான சிந்தனை உள்ள நண்பர்.

கற்றுக் கொண்ட பாடம். 

இவருக்கு நான் செய்ய வேண்டிய நன்றி என்பது கடனாக இருக்கின்றது. 
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

இரவு வானம்  தம்பி சுரேஷ். 

ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் மனித வளத்துறையில் உயர் பொறுப்பில் இருக்கின்றார்.

அலுவலகம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளின் காரணமாக  விழா நடக்க இருந்த கடைசி இரண்டு நாளில் தான் இவரால் டாலர் நகரம் விழாவில் கவனம் செலுத்த முடிந்தது.  அப்போதும் கூட குடும்பம் சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகள் இருந்த போதிலும் அதனை ஒத்தி வைத்து விட்டு நான் பார்த்துக் கொள்கின்றேன். நீங்க ஓய்வெடுங்க என்று உரிமையோடு கண்டித்து என்னை வீட்டில் உட்கார வைத்தவர். 

இரண்டு மாதமாக தொடர்ந்து புத்தகத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கடைசி மூன்று நாளில் உடம்பு ஒத்துழைக்க மறுத்தது. என் ஆரோக்கிய நிலையின் காரணமாக என்னால் நகர முடியாத சூழ்நிலையில்  தம்பி சுரேஷ் மொத்த வேலைகளையும் தானே எடுத்துக் கொண்டு சிறப்பாக செயலாற்றினார். 

விழா நடக்க இருந்த கடைசி அந்த இரண்டு நாளிலும் தேங்கிக் கிடந்த மொத்த வேலைகளையும் சூறாவளி போல செயல்பட்டு உழைத்து விழாவின் இறுதி வடிவமைப்புக்கு கொண்டு வந்து முக்கிய பங்காற்றினார். என்னை முழுமையாக புரிந்து கொண்டவர்.  தேவியர் இல்லத்தின் ஒரு அங்கத்தினர்.

கற்றுக் கொண்ட பாடம்  

இளைஞர்களை வழிநடத்துவதை விட வழி காட்டி விட்டு ஒதுங்கினால் போதுமானது. அவர்களின் அளப்பறிய திறமையை நாம் கண்டு கொள்ள முடியும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

வெயிலான் ரமேஷ்
தலைவர். சேர்தளம். 

திருப்பூரில் வலைபதிவர்களுக்கு ஒரு அமைப்பை முதன் முதலாக உருவாக்கியவர் வெயிலான் ரமேஷ்.  இவர் முயற்சியால் சேர்தளம் என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் தலைவராக இருக்கின்றார்.

ஏறக்குறைய தமிழ் இணையத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக எல்லோராலும் அறியப்பட்டவர். நான் வேர்ட்ப்ரஸ் (2007) எழுதத் தொடங்கிய போது என்னை தொடர்பு கொண்டார்.  அப்போது நான் எழுதிய அவசரங்களைக் கூட அசராமல் பாராட்டியவர். திருப்பூரில் இவர் நடத்திய பல விழாக்களுக்கு, நிகழ்வுகளுக்கு எனக்கு அழைப்பு விடுப்பார்.  என்னுடைய சூழ்நிலை என்பது அப்போது எனக்கு சாதகமாக இல்லை. ஒரு முறை ஒரு ஹோட்டலில் நடக்க இருந்த முக்கிய விழா ஒன்றிக்கு நடக்கத் தொடங்கும் அந்த நேரத்தில் கூட என்னை அழைத்து கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று முயற்சித்தவர்.  ஆனால் நான் புறக்கணித்து விட்ட கொடுமையெல்லாம் உண்டு. 

பல முறை இது போன்ற விசயங்களை மனதிற்குள் அசைபோட்டு இவரை படுத்தி எடுத்தியிருக்கிறாம் என்று மனம் வருந்தியது உண்டு. டாலர் நகரம் விழாவின் தொகுப்புரைக்கு இவரைத் தவிர வேறு எவரையும் போட்டு இருந்தால் நிச்சயம் அது சொதப்பலாகத்தான் முடிந்து போயிருக்கும். 

ஆனால் விழா நடக்க இருந்த முதல் நாள் நள்ளிரவு வரைக்கும் நான் பலரையும் வேலை வாங்கியது போல என்னையும் இவர் எழுப்பி இணையத்தில் உட்கார வைத்து வேலை வாங்கியவர். இருவரும் சம வயது என்றாலும் என் மரியாதைக்குரியவர். 

வலையில் அத்தனை சீக்கிரம் எழுத மாட்டார். எழுதினால் அதில் நாம் கற்றுக் கொள்ள ஏதோவொன்றை விட்டு வைத்திருப்பார். ஆனால் தமிழ் இணையத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் அமைதியாக அசராமல் கவனித்துக் கொண்டு இருப்பார்.  இவரிடம் இருந்து இன்று வரை நான் பத்து சதவிகிதம் தான் கற்றுள்ளேன்.

நண்பர்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றபோது மனைவி கொடுத்த விருந்து ஏதும் இல்லாத எங்களுக்கான இயல்பான சாப்பாட்டையே 
பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்.

கற்றுக் கொண்ட பாடம். பெருந்தன்மை. 

டாலர் நகரம் விழா அழைப்பிதழை இவருக்கு நேரிடையாக கொண்டுப் போய் சேர்க்காமல் மின் அஞ்சல் வழியே அனுப்பிய போதிலும். இவரும் சேர்தளம் நண்பர்கள் அத்தனை பேர்களும் அதனை பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டு ஒத்துழைத்த விதம் மறக்க முடியாத ஒன்று. பரிசல்காரன் கிருஷ்ணகுமார் சொன்னபடியே விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தையும் (பணம் கொடுத்து) வாங்கிக் கொண்டு என்னை பெருமைபடுத்தினார்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. வரதராஜன் மற்றும் திரு பூபதி.

இவர்கள் இருவரும் என் துறையான ஏற்றுமதி தொழில் சார்ந்த நணபர்கள். ஒரு பெரிய அச்சு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்கள். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பில் இருப்பவர்கள். இவர்கள் மூலம் திருப்பூரில் நான் இருக்கும் அவினாசி சாலை பக்கம் உள்ள வீடுகளுக்கு புத்தகம் பற்றிய சுவரொட்டிகளை அடித்துக் கொடுத்து உதவினார்கள். இவர்களும் வாய் வழியே டாலர் நகரம் புத்தகம் குறித்துச் சொல்லி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கினார்கள்.

இவர்களுக்கு நான் எழுதுவது தெரியாது. நம்ப மாட்டேன் என்றார்கள்.  இணையத்தில் உள்ள என் தளத்தை திறந்து காட்டிய போது அதன் பிறகே இருவரும் பல விதங்களிலும் பம்பரமாக (மின் தடை கொடுமையைத் தாண்டி) செயல்பட்டு உதவி புரிந்தார்கள். 

புத்தக விற்பனையை தாங்களாகவே எடுத்துக் கொண்டார்கள். எனது சொந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் இவர்களது பங்கு முக்கியமானது.  இன்று வரையிலும் இவர்களின் தொடர்பு என்பது பணத்திற்கு அப்பாற்பட்ட என் வளர்ச்சி சார்ந்த அத்தனை விசயங்களிலும் ஆர்வத்தோடு தங்களால் முடிந்த பங்களிப்பை காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

பெருமாநல்லூர் சாலையில் 60 அடி சாலை பிரியும் இடத்தில் கரூர் வைஸ்யா வங்கி பின்புறம் இவர்களது நிறுவனம் உள்ளது.

கற்றுக் கொண்ட பாடம்.  

பத்துவருடங்களுக்கு மேல் பல நிறுவனங்கள் நான் மாறிய போதும் நம்மிடம் உள்ள நேர்மையான எண்ணங்கள், குணாதிசியங்கள் நிச்சயம் நல்ல மனிதர்களை நம்மிடம் தக்க வைக்கும்.

திரு. வரதராஜன் அலைபேசி எண்  98 422 08 330

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. விஜய்
(www.techmedia.in) 
நான் முதன் முதலாக கணினி வாங்கியது (12 வருடங்களுக்கு முன்) முதல் இன்று வரை என்னுடைய மிக நல்ல நட்பு ரீதியான தொடர்பில் இருப்பவர்.

இவரின் இயல்பான வளர்ச்சி இன்று டெக் மீடியா என்ற பெரிய ஆலமரம் போன்ற ஒரு கணினி சார்ந்த விற்பனை நிறுவனத்தை உருவாக்க முடிந்துள்ளது. விழாவில் காட்சிகளை நேரிலையாக கொண்டு வந்தவர். (இதில் உள்ள குழப்பங்களைப் பற்றி தனியாக எழுதுகின்றேன்) 

யூ டியூப் ல் காணொளி காட்சியாக கொண்டு வர தற்போது உழைத்துக் கொண்டிருக்கின்றார்.  விரைவில் வெளியிடப்படும். 

திரு. மலைநாடன் இவரைச் சந்தித்து விட்டு சென்ற போது நான் தமிழ்நாட்டில் சந்தித்த மிக நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர் என்று என்னிடம் பாராட்டிவிட்டுச் சென்றார்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. முத்து.
பிரகாஷ் நியூஸ் எஜென்ஸி,
பெரியார் காலணி, திருப்பூர்.

இவர் முகத்தை கூட நான் மறந்து விட்டேன். என் மனைவிக்குத்தான் இவரைத் தெரியும். காரணம் நான் இதற்கு முன்னால் இருந்த இரண்டு வீட்டிற்கு செய்தி தாள்களை கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர்.  அவர் அலைபேசி எண் மட்டும் வைத்திருந்தேன். புத்தகத்தை சந்தைப்படுத்துதல் என்ற நோக்கத்தை பலரையும் அழைத்துப் பேசி விட இவரையும் அழைத்தேன். என்னை மறந்திருப்பார் என்று நினைத்து முதலில் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.  

இரட்டைக்குழந்தையின் அப்பாதானே? என்று தானே என் ஜாகத்தையே சொல்லி நேரே வரச் சொன்னார். நயா பைசா எதிர்பார்க்காமல், பல விசயங்களை செய்தார். செய்து கொண்டு இருக்கின்றார்.

அவினாசி சாலை பெரியார் காலணி பெட்ரோல் பங்க் அருகே உள்ள சந்தில் இவரின் பிரகாஷ் நியூஸ் ஏஜென்ஸி இருக்கிறது. புத்தகங்களை இவர் தொடர்பில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நேரிடையாக கொண்டு போய் சேர்த்துக் கொண்டு இருக்கின்றார்.

அலைபேசி எண்  97 89 477 979

கற்றுக் கொண்ட பாடம்.  

வாழ்வில் எத்தனை பண ரீதியான பிரச்சனைகள் இருந்த போதிலும் 1ந் தேதி முதல் 10ந் தேதிக்குள் முந்தைய மாதம் கொடுக்க வேண்டிய பணத்தை சம்மந்தப்பட்ட அத்தனை பேர்களையும் அழைத்து கொடுத்து விடுவதுண்டு. அல்லது நேரில் கொண்டு போய் கொடுத்து விடுவதுண்டு.  நம்முடைய நேர்மை தான் பல ஆண்டுகள் கழிந்தாலும் பலரின் மனதிலும் நம்மை நிலை நிறுத்தி வைக்கும்.

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. ராஜேஷ்
சாப்ளின் வாட்ச் ஹவுஸ், ஆர். ஏ. டவர்ஸ்,
மேட்டுப்பாளையம் பேரூந்து நிறுத்தம், திருப்பூர்.

நான் வாழ்ந்த கூட்டுக்குடித்தன வாழ்க்கையைப் போல சாப்ளின் வாட்ச் ஹவுஸ் என்று டைட்டான் ஷோரூம் நிறுவனத்தை அண்ணன் தம்பி இருவர் நடத்தி வருகின்றனர். இதில் தம்பி ராஜேஷ் என்னுடன் நெருக்கமாய் பழகிக் கொண்டிருப்பவர். 

வேறொரு நண்பர் மூலம் பத்து வருடங்களுக்கு முன் அறிமுகம் ஆனார்கள்.  இன்று வரையிலும் என் வீழ்ச்சி வளர்ச்சி அனைத்தையும் பார்த்தவர்கள். புத்தகம் குறித்து சொன்ன போது பல உதவிகள் செய்தார்கள். இவர்களுக்கு நான் எழுதுவது சமீப காலமாகத்தான் தெரியும். விழாவில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு இவர்களின் நிறுவனம் வழங்கியது. புத்தக விற்பனையிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திரு. ராஜேஷ் அலைபேசி எண்  98 94 777 278

கற்றுக் கொண்ட பாடம்.  

நட்பு என்பது ஒரு முறை கிடைத்துவிட்டால் அதை கடைசி வரைக்கும் காப்பாற்றிக் கொள்வது நமது நடத்தையின் அடிப்படையிலேயே உள்ளது.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திருப்பூரில் சேர்தளம், தமிழ்ச்செடி, உறவோடு, தொழிற்களம் போன்ற அமைப்புகளைப் போல இணையத்தில் கழுகு என்றொரு அமைப்பு உள்ளது. அதில் உள்ள தம்பி தேவா இணையத்தில் டாலர் நகரம் விழா குறித்து பரப்புரையை தனது கடமையாக வைத்திருந்தார். ஞானாலயாவிற்காக தனது பங்களிப்பை காட்டிக் கொண்டு இருப்பவர்களின் இவர் முக்கியமானவர்.

தம்பி தேவா அவர்கள் என் முகம் பார்க்காமல் பல உதவிகள் தொடக்கம் முதல் செய்து கொண்டு இருக்கின்றார். ஞானாலயா வலைதளத்தை வெகு ஜனத்திற்கு கொண்டு செலுத்த உதவிய கழுகு குழும நண்பர்கள் அத்தனை பேர்களுக்கும் என் சார்பாகவும் நிகழ்காலத்தில் சிவா சார்பாகவும் தேவாவுக்கு நன்றியை இங்கே எழுதி வைக்கின்றேன்.

கற்றுக் கொண்ட பாடம்  

முகம் தெரியாது, பழக்கம் இருக்காது. நம்மைப் பற்றி முழுமையாகக்கூட தெரியாது. ஆனால் இணக்கமான நட்பு உருவாகும். அது தான் தமிழ் இணையம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

வெட்டிக்காடு ரவி.

நான் இவரின் தளத்தின் தீவிர வாசகன்.  மண்ணின் மைந்தன் என்றே இவருக்கு பெயர் வைத்துள்ளேன்.  சீனா பற்றிய தொடர் எழுதிய போது நான் நினைத்தபடியே அவரின் உண்மையான எழுத்து திறமை வெளியே வரத் தொடங்கியது.  ஒரு சராசரி வாசகனாக அறிமுகம் ஆனேன். வலைச்சரத்தில் இவரை சென்ற முறை அறிமுகம் செய்து வைத்தேன்.  ஆனால் படிப்படியாக இருவரின் நட்பும் ஒரு நல்ல புரிந்துண்ர்வோடு தொடர்ந்து கொண்டே இருந்தது. அலைபேசி பேச்சு மட்டும் தான்.  விழாவில் தான் சந்தித்துக் கொண்டோம். அதன் பிறகு விழா முடிந்த மாலையில் ஹோட்டல் அறையில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இருவரும் சம வயது. நிச்சயம் இவரைப் போன்ற இளைஞர்களால் எதிர்கால இந்தியாவிற்குத் தேவைப்படும் இளம் தொழில் முனைவோர்களை அதிக அளவு உருவாக்க முடியும் என்பது என் எண்ணம். அசாத்தியமான திறமைசாலி. அளவு கடந்த பொறுமைசாலி.  என் விழாவிற்காக பெங்களூரில் இருந்தபடியே நிறைய உதவிகள் வழிகாட்டுதலை செய்துள்ளார்.  

திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் . பின்னல், மகேஸ்வரி புத்தக நிலையத்தில் டாலர் நகரம் கிடைக்கின்றது நானும் ரவியும் புத்தக கண்காட்சி சென்ற போது அங்கு இவரின் நண்பரின் நிறுவனமான நூல் உலகம் (ஜீவா புத்தகாலயம்) என்ற கண்காட்சி கடையில் அங்கிருந்தே நண்பரிடம் பேசி புரிந்துணர்வை உருவாக்கி அந்த கடையில் என் புத்தகத்தை இடம் பெறச் செய்தார்.

அதற்கு மேலாக நான் இந்த விழாவின் மூலம் செய்ய நினைத்த இரண்டு முக்கிய காரியங்களுக்கு தொடக்க விதையை ஊன்றியுள்ளார்.  நிச்சயம் மரமாகும் என்ற நம்பிக்கை உண்டு.  காரணம் கல்விக்கு அப்பாற்பட்டு, பதவிக்கு அப்பாற்பட்டு மனம் முழுக்க சமூகம் சார்ந்த மனிதர்கள் மேல் கொண்ட அக்கறை கொண்ட அதிக சிந்தனைகள் இருப்பதால் அந்த காரியங்கள் ஜெயிக்கும் என்று நம்புகின்றேன்.  

நூறு சதவிகிதம் நேர்மையான மனிதராக இருக்கின்றார்.

நிச்சயம் இவர் குடும்பம் எந்நாளும் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன். புதுக்கோட்டை சென்றதும் ஞானாலயா திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் இவரைப் பற்றி பேசிய போது ஒரு வாசகம் சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது. 

உங்கள் முகம் கூட தெரியாமல் எத்தனை பெரிய பதவிகளில் இருந்தவர்களை உங்கள் எழுத்துக்கு வாசகராக கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அத்தனை பேர்களும் வந்து கலந்து கொண்டது நிச்சயம் உங்கள் மேல் உள்ள மரியாதையை எனக்கு அதிகமாக்கியது என்றார்.

கற்றுக் கொண்ட பாடம்.  

உன் நண்பர்கள் வழியே உன்னைப் பற்றி அறிய முடியும். உன் எழுத்துக்கள் வழியே உன் நோக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. சங்கர நாராயண்ன். ஒரிஸ்ஸா 
(சொந்த ஊர் திண்டல் ஈரோடு)

இவர் அனுப்பும் படங்களைத்தான் கூகுள் பளஸ் ல் பகிர்ந்து கொண்டு வருகின்றேன். இவரைப்பற்றி ஒரு தனி பதிவே எழுத வேண்டும்.  

ஒடிஷா (தற்போதைய பெயர்) வில் இருந்து கொண்டே எனக்கு வழிகாட்டுதல் போன்ற பல உதவிகளை செய்தவர். 

குறிப்பாக டாக்டர் ஜெ. ஜீவானந்தம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். இவர் ஒடிஷா வில் ஒரு மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராக இருக்கினறார். என் மேல் அதிக அக்கறை கொண்டவர்.  ஒரே ஒரு முறை மட்டும் இவரை சந்தித்துள்ளேன்.  

கடைசி வரைக்கும் விழா குறித்த அக்கறையை அழைத்து கேட்டுக் கொண்டே இருந்தார். விழாவிற்கு முக்கியமான சிலரை வரவழைத்து கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல், தொழில் அதிபர்கள்  சமூக ஆர்வலர்கள், பெரிய இயக்கங்களின் தலைவர்கள் என்று அத்தனை பேர்களுக்கும் நன்கு அறிமுகம் ஆனவர். இவர் மூலம் தான் தி ஹிண்டு வில் என்னைப் பற்றி விபரமான விளக்கமான டாலர் நகரம் புத்தகம் குறித்த தகவல் வந்தது.

கற்றுக் கொண்ட பாடம்.  

மனிதர்களின் உண்மையான ஆர்வம் சார்ந்த அன்பு கொண்ட அக்கறை என்பதற்கு வயது என்பது பொருட்டல்ல.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. கிருஷ்ணகுமார்

விழா மலர் கொண்டு வந்ததில் இவரின் அக்கறை முக்கியமானது. திருப்பூரில் ஒரு நிறுவனத்தின் பங்குதாராக இருக்கின்றார். தேவியர் இல்லத்தின் மேல் அதிக அக்கறை கொண்டவர். நான் எழுதிய சாயப்பட்டறை சம்மந்தப்பட்ட அத்தனை விசயங்களும் அதன் பலன் அனைத்தும் முறைப்படி இவருக்கே போய்ச் சேர வேண்டும்.  

அத்துடன் டாலர் நகரம் மொத்த புத்தகங்களையும் பெற்று மொத்தமான சந்தைபடுத்தும் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருப்பவர்.  பல்லடம் சாலை வித்யாலயம் பேரூந்து நிறுத்தம் அருகே இவர்களது நிறுவனம் உள்ளது.  அங்கேயிருந்தபடியே இவர்கள் தொடர்பில் உள்ள அத்தனை பேர்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியை செய்து கொண்டிருக்கின்றார்.

இவருடன் பணியாற்றும் திரு. மகேஷ் செய்து கொண்டிருப்பது மகத்தான் உதவி. முகம் சுழிக்காமல் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சொல்லும் நபர்களுக்கு தனது வேலைக்கிடையே கொண்டு போய் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.

திரு கிருஷ்ணகுமார் அலைபேசி எண்  944 26 39 703
திரு. மகேஷ்குமார் அலைபேசி எண்  97 89 311 666

கற்றுக் கொண்ட பாடம்.  

பணத்தை தேடும் உலகில் மனத்தை தேடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ராமச்சந்திரன்


இவருக்கு திரு என்று போட்டு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் அது தேவையில்லை என்பதாக வெறுமனே ராமச்சந்திரன் என்று எழுதியுள்ளேன்.  காரணம் இவரும் தேவியர் இல்லத்தின் ஒரு அங்கத்தினர். வளைகுடா நாடுகளில் நீண்ட காலம் பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவளத் துறையில் உயர் பதவியில் இருந்தவர். தற்போது தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் சென்று தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தன் முனைப்பு முகாம் நடத்திக் கொண்டு இருக்கின்றார். இருவரும் சமவயது. தேவியர் இல்லத்தின் நீண்ட நாள் வாசகர். நான் எழுதியது மட்டுமல்ல. வலையில் வந்த முக்கியமான ஆக்கபூர்வமான அத்தனை கட்டுரைகளையும் படித்து விடுவார். வலைதளத்தில் எழுதுவதை விட தற்போது கூகுள் கூட்டலில் மட்டும் அவ்வப்போது வந்து களேபரத்தை உருவாக்கி விட்டுச் செல்வார். 

இவரை பங்காளிங்க அத்தனை பேர்களும் பிகேஆர் என்றும் காக்கி டவுசர் என்றும் அழைப்பார்கள். ஆனால் படத்தில் உள்ளதைப் போல ஒரு புன்னகையோடு கடந்து சென்றுவிடுவார். நான் வலையில் எழுதிய பல அரசியல் ரீதியான சமூகம் சந்தப்பட்ட பல கட்டுரைகளுக்கு பின்புலமாக இருந்தவர். அற்புதமான நினைவாற்றல். ஆங்கிலத்தில் ஷார்ப் என்று சொல்லும் வார்த்தைக்கு இவரைத்தான் என்னால் உதாரணம் காட்ட முடியும். புத்தகப்புழு. சங்க இலக்கியம் முதல் சங்கட இலக்கியங்கள் வரைக்கும் மனிதர் பேசத் தொடங்கினால் புள்ளி விபரத்தோடு பொளந்து காட்டுவார்.  

வலையுலகில் ஆலமரத்தின் அத்தனை விழுதுகளுக்கும் இவரை நன்றாகவே தெரியும். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தன்மைகளை, அவர்களின் நலன்களை, கடந்து வந்த பாதையை, எதிர்மறை நேர்மறை சிந்தனைகளை, பின்புலமாக இருந்து சுயநலத்தோடு இருப்பவர்களை எனக்கு அடையாளம் காட்டி தனது ஆக்கபூர்வமான அறிவை பல சமயங்களில் எனக்கு கடனாக தந்து உதவிக் கொண்டிருப்பவர்.

டாலர் நகரம் என்ற நூலை உருவாக்கியவர் திரு.மலைநாடன். ஆனால் அதை உருவமாக மாற்றியவர் இவர். இன்று பலரின் கைகளில் கொண்டு சேர்க்க பின்புலமாக இருந்தவர் ராமு. 

இவரின் செல்வாக்கு சொல்வாக்கு பற்றி பலருக்கும் தெரியாது. எதையும் வெளியே காட்டிக் கொள்வதில்லை என்பது தான் இன்று வரையிலும் எனக்குள் இருக்கும் தீராத ஆச்சரியம்.

இவர் செய்த உதவி என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது ஒன்று. இதை படித்தவுடன் அழைத்து திட்டுவார். பரவாயில்லை. விழாவிற்கு வேட்டியில் வந்திருந்தார். எனக்கு அடையாளம் தெரியவில்லை. யாரோ மாப்பிள்ளை பொண்ணு பார்க்க வந்துருப்பாங்க போலிருக்கு என்று பயத்தோடு அவர் அழகை சைட் அடித்தேன்.

மீதி அடுத்த பதிவில்,,,,,,,,,

Saturday, January 26, 2013

டாலர் நகரத்தில் புதுகை அப்துல்லா

நிகழ்காலத்தில் சிவா இடுகையில் எழுதப்பட்ட விசயங்களை இங்கே மறுபதிப்பு செய்கிறேன். 

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து

நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில், சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும், குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்.


விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல், பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939


திருப்பூர் பழைய் பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/aYfP1

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/vsvuI

திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து அரங்கை வந்தடைய - http://goo.gl/maps/gwN4m





நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233


4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திற்காக சிலரை பேட்டி கண்டோம். அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகிறேன்.

இது ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. 

இந்த சுயபுராணத்தை பொருத்தருள்க.





விழா நாளை காலை 9.00 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.

டாலர் நகரம் விழாவுக்கு வந்தவர் வருகை தரப் போகின்றவர்கள் - தகவல்கள்

4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திறக்காக சிலரை பேட்டி கண்டது. அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகின்றேன்.

இது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வருகின்ற ஞாயிறு (27.1.2013) டாலர் நகரம் விழாவில் உரையாற்றுகின்றார்.

திருப்பூர் வருகின்ற நண்பர்கள் கவனத்திற்கு.

தங்கும் வசதி திருப்பூரில் உள்ள எஸ் எஸ் ஹோட்டல் என்ற தங்குமிடம் நண்பர்களுக்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு காலையில் வந்து சேர முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் மற்றும் இந்த விழாவில் தங்கள் மேலான ஒத்துழைப்பை உழைப்பை தேவியர் இல்லத்திற்காக பல வகையிலும் தந்து உதவிக் கொண்டிருப்பவர்களை கீழ் கண்ட அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளவும். 

தங்களுக்கு தேவையான உதவிகளை, வழிகாட்டுதலை,அழைத்து வருதல் போன்றவற்றில் உதவி புரிவார்கள்.

சேர்தளம் தலைவர்.

வெயிலான் ரமேஷ் 9 44 22 35 602 

தமிழ்ச்செடி அங்கத்தினர்கள்

வீடு சுரேஷ் குமார் 98 439 41  916

இரவு வானம் சுரேஷ்  860 86 910  55

வாகன போக்குவரத்து ஒருங்கிணைப்பு மற்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகள் செய்தவர் செய்து கொண்டிருப்பவர்

நிகழ்காலத்தில் சிவா 97 900 36 233

எனது உடன்பிறப்பு போல கடந்த நான்கு ஆண்டுகளாக என் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவியர் இல்லத்தின் மேல் அக்கறை கொண்டு சென்னையில் இருந்து திருப்பூர் வந்து இந்த விழாவுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்

ராஜராஜன்  99 411 43 821

புத்தகம் தொடர்பாக உங்கள் வீடு தேடி வர தொடர்புக்கு, மற்றும் மொத்த புத்தகத்தையும் வாங்கி சந்தைப்படுத்துதல் என்ற மகத்தான் உதவியை செய்து கொண்டிருக்கும் ஒரு பிரபல நிறுவனத்தின் பங்குதாரர் தன்னுடைய பெயரை எந்த இடத்திலும் போடக்கூடாது என்று கட்டளையோடு தேவியர் இல்லத்தின் மேல் அதிக அக்கறை கொண்டிருப்பவர். அவரின் பணியாளர் அலைபேசி எண்

திரு. மகேஷ் அலைபேசி எண் 97 89 311 666

இங்கே குறிப்பிட்ட எந்த அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளும் போது விழாவில் கலந்து கொள்ள, உங்கள் வருகையை உறுதிப்படுத்தும் போது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கின்றார்கள்.

27 1 2013 காலை 9.30  மணிக்கு விழா தொடங்குகின்றது.  

காலை 9  மணிக்கு அரங்கத்தில் இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். 

தாய்த்தமிழ் பள்ளி குழந்தைகளின் அற்புத பாடல் நிகழ்ச்சிகளை நீங்கள் அவசியே கண்டு களிக்க வேண்டும்.  தமிழ் இலக்கியம் சார்ந்த, மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், மற்றும் தந்தை பெரியார் பெருமையை பறைசாற்றும் பாடல்கள் என் நீங்கள் இது வரையிலும் கேட்டிராத பல அற்புத பாடல்களை தங்களது அசாத்தியமான திறமைகளால் உங்களை மகிழ்விப்பார்கள்.

என்னுடைய புத்தக அறிமுகம், வெளியீடு அறிமுகம் என்பதை விட பல நண்பர்களை இதன் சந்திக்க வாய்ப்பு என்பதாக கருதியுள்ளேன். 

இது தவிர வலைபதிவர்களை மேடையில் பேச வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.  

தாய்த்தமிழ் பள்ளி, ஞானாலயா வை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். தமிழ் இணையம் மற்றும் திரட்டிகள் குறித்த அறிமுகத்தை திருப்பூரில் உள்ள பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.

விழா மலர் மூன்று பகுதியாக கொண்டு வந்துள்ளோம். 

குறிப்பாக தமிழ்மணம் உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் அவர்களின் உழைப்பை இந்த உலகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்ச்செடி அமைப்பாளர்களில் ஒருவரான திரு வீடு சுரேஷ்குமார் பிடிஎஃப் கோப்பாக தனது அற்புத வடிவமைப்பு திறமையின்  மூலம் உருவாக்கியுள்ளார். 

விழா அன்று அந்த கோப்பு இணையத்தில் வெளியிடப்படும்.  

எளிமையான அந்த விழா மலர் விழா அரங்கத்தில் வெளியிடப்படும். 

25.1.2013 அன்று புத்தக கண்காட்சியில் பின்னல் அறக்கட்டளை மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையம் என்ற இரண்டு கடையில் டாலர் நகரம்  புத்தகத்தை கொண்டு போய் நண்பர்கள் கொடுத்தார்கள். 

திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் குறித்த ஒரு ப்ளக்ஸ் போர்டு வைத்துள்ளார்கள். 

மாதிரி டாலர் நகரம் புத்தகங்களை பின்னல் மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையத்திற்கு நண்பர்கள்  கொண்டு போய்ச் சேர்ந்த அந்த நிமிடத்தில் காத்திருந்த ஒருவர் உடனடியாக வாங்கிக் கொண்டு சென்றதை நண்பர்கள் அழைத்துச் சொன்ன போது என்னை விட என் தம்பிமார்கள் அதிக மகிழ்ச்சியில் அழைத்துச் சொன்னார்கள். .  

நாலைந்து பேர்கள் டாலர் நகரம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்றதை பார்த்த போது தான் எனக்கே உங்கள் புத்தகம் கடைகளுக்கு வந்து விட்டது என்று தெரிந்தது என்று வெயிலான் ரமேஷ் அழைத்துச் சொன்னார்.

உள்ளுரில் பத்திரிக்கையுடன் கொடுக்கப்பட்ட சுவரொட்டி விளம்பரங்கள் மூலம் முன்பதிவு செய்ய என்ற தகவலை என் மேல் அக்கறை டெக் மீடியா (கணினி துறை) நண்பர் விஜய் மற்றும் விகேஆர் பிரிண்ட்டிங்,  செண்பகம் மக்கள் சந்தை, சாப்ளின் வாட்ச் ஹவுஸ், ப்ரகாஷ் நியூஸ் ஏஜென்ஸி போன்றவர்கள் தங்களின் மகத்தான் உதவிகள் மூலம் விளம்பரம் என்பதையும், நேரிடையான சந்தைப்படுத்துதல் என்ற புதிய சாதனையை உருவாக்கி காட்டியுள்ளனர்.

நிச்சயம் இந்த புத்தகம் திருப்பூர் முழுக்க சென்று சேரும் என்று நம்புகின்றேன். 

வெட்டிக்காடு ரவி பெங்களூரில் இருந்து திருப்பூர் வந்து சேர்ந்து தற்போது எஸ் எஸ்  ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றார். இவர் இந்த விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு வாரமாக அவரது தினசரி கடமைகளில் ஒன்றாக அழைத்து பேசி உதவிகள் பல செய்து தன் பங்களிப்பை செய்து உள்ளார். 

முகம் தெரியாமல் பழகி இதயத்தால் இணைவது தான் இணைப்பது தான் இந்த தமிழ் இணையம். 

எழுத்தாளர் சிந்தனையாளர், பத்திரிக்கையாளர் என் ஆசான் திரு. ஞாநி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு எஸ் எஸ் ஹோட்டல் வந்து சேர்கின்றார்.

திரு. அப்துல்லா, திரு. ஜோசப் பால்ராஜ் (சிங்கப்பூர்) இருவரும் இன்று மாலை திருப்பூரில் இருக்கின்றார்கள்.

மீதியுள்ள விபரங்கள் இன்று அடுத்த வெளியிடப்படும் அடுத்த பதிவில் வெளியிடுகின்றேன்.

வாருங்கள் நண்பர்களே.







Friday, January 25, 2013

திருப்பூர் கேபிகே அழைப்பு.(டாலர் நகரம்)

4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திறக்காக சிலரை பேட்டி கண்டது. அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகின்றேன்.

இது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. எங்கள் வீட்டு சேர சோழ பாண்டிய மன்னர்கள் இன்று வெளியீட்டே ஆக வேண்டும் என் அன்புக் கட்டளை இட்டார்கள். 

பெரியவர்கள் இந்த சுயபுராணத்தை மன்னித்தருள்க.








Wednesday, January 23, 2013

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்



என்னுடைய பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப் பருவம வரையிலும் என் வாழ்க்கையில், என் சிந்தனையில் அதிகம் தாக்கத்தை உருவாக்கியவர் மதிப்பிற்குரிய எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார். திரு. உதயமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

மக்கள் சக்தி இயக்கம் சிவகங்கை மாவட்ட முக்கியப் பொறுப்பில் இருந்த போது மதுரையில் நடந்த மாநாட்டில் ஒரு மணி நேரம் தனிப்பட்ட உரையாடலுடன் இவர் தொடர்பு உருவானது. 

நல்லவற்றை மட்டும் சிந்தித்த, செயலில் காட்டிய, இளைஞர்களின் வாழ்க்கையில் அக்கறை செலுத்திய, தனது வசதியான அமெரிக்கா வாழ்க்கையை விட்டு வெளியே வந்து தமிழகத்திற்காக எண்ணிய இவரது எண்ணங்கள் அனைத்தும் இங்கிருக்கின்றவர்களின் தந்திர மூளைக்கு முன் எடுபடாமல் போனாலும் இன்று வரையிலும் இவர் மேல் உண்மையான அக்கறையும் அன்பும் மரியாதையும் கொண்ட ஏராளமான இளைஞர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்.

மிகப் பெரிய இழப்பு.


தமிழ் மக்களின் குமுகம் புதிய எழுச்சியுடன் வளர வேண்டும் என்று கருதிய
குமுக ஆர்வலரும் எழுத்தாளருமான எம்.எசு. உதயமூர்த்தி  அவர்கள்
மாரடைப்பால் இன்று காலமானார். 

இவர் எழுதிய தன்முன்னேற்ற உதவிநூல்கள்  புகழ்பெற்றவை.

`எண்ணங்கள்`,`உன்னால் முடியும் தம்பி`, 'நீதான் தம்பி முதலமைச்சர்`.

இவருடைய எழுத்துகளை முதன் முதல் ஆனந்தவிகடனில் படித்தேன், 

ஆனால் இவருடைய நூல்களை முழுவதுமாகப் படிக்கவில்லை. 

மிகவும் நல்ல முயற்சிகளை முன்னெடுத்தார், ஆனால் இன்று நம்மிடையே இருந்து  பிரிந்துவிட்டார். 

அவர் புகழ் வாழ்க! அவருடைய நற்தொண்டை மேலும் பரவச் செய்வோம், 

அது நம் கடமை!

குழும மின் அஞ்சலில் திரு. செல்வகுமார்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

இவரது முழக்கமான உன்னால் முடியும் தம்பி என்பது (கமலால்) திரைப்படம் ஆனது இவரது  உரைகளின் வெற்றிக்கு அடையாளம். 

தன்னம்பிக்கை யாளர்கள் அவரது எண்ணங்களை மேலும் பரப்புவதே அவரது தொண்டின் தொடர்ச்சிக்கு அடையாளமாக நிலைக்கும்

திருவள்ளுவன் இலக்குவனார் 


மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் எம்.எஸ். உதயமூர்த்தியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்:

அமெரிக்காவில் ஆற்றிய பணி, வசதியான வாழ்க்கையைத் துறந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்குத் தன்னால் இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.

உன்னால் முடியும் தம்பி என்ற அவரது நூல் 1980-களில் தமிழக இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. உன் திறமைகளை வளர்த்துக் கொள், பொருளாதாரத்தில் முன்னேறு, சமுதாயத்துக்கு தொண்டாற்று என்பதை வலியுறுத்தி இளைஞர்களிடம் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தார்.

எண்ணங்கள், நீதான் தம்பி முதல் அமைச்சர், ஆத்ம தரிசனம் என இவர் எழுதிய 10 நூல்களும் நம்பிக்கை முத்துக்கள். 1988-ல் மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கி நதிநீர் இணைப்பு, கிராம முன்னேற்றம், மதுவிலக்கு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். 

அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மக்கள் சக்தி இயக்கத்தினருக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வைகோ தெரிவித்துள்ளார்

Tuesday, January 15, 2013

திருப்பூர் 2013 புத்தகத் திருவிழா


திருப்பூர், பின்னல் புத்தக அறக்கட்டளை தொடங்கியது முதல், அதன் வேராக இருந்து செயல்பட்ட தி.மு.ராசாமணி, பி.ராமமூர்த்தி இருவருக்கும், எங்கள் இதய அஞ்சலி. உங்கள் நினைவுகளோடு, ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக்க உறுதியேற்கிறோம்.

 "இயந்திர வாழ்க்கையிலிருந்து இதயங்களை மீட்போம் ..." 

என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் & சென்னை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் திருப்பூர் புத்தகக் கண்காட்சி, கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.



திருப்பூர் சார்ந்த நண்பர்கள் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்ட கோடிங் வார்த்தைகளை பயன்படுத்தி திருப்பூர் புத்தக கண்காட்சியை பலருக்கும் சென்று சேர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.



<iframe src="http://files.bannersnack.com/iframe/embed.html?hash=bu9yx00s&wmode=transparent&t=1358237514" width="728" height="90" seamless="seamless" scrolling="no" frameborder="0" allowtransparency="true"></iframe>




பங்கேற்கும் பதிப்பகங்கள் !
01:19  பின்னல் - பாரதி  

அகர வரிசையில்:

1, 2) ஏகம் பதிப்பகம்
3) ஆனந்த நிலையம்
4) அனிதா பதிப்பகம்
5,6) அபெக்ஸ் ஏஜென்சீஸ் (சிடி)
7, 8) ஆசியன் புக் செண்டர்
9, 10) பாலாஜி புத்தக விற்பனையாளர்கள்
11, 12) பாரதி புத்தகாலயம்
13, 14) பஸ்ஸர் சிடி
15) குரோமோசோம் விற்பனையாளர்கள்
16, 17) டி.கே பதிப்பகம்
18) டிஜிட்டல் மீடியா
19, 20) டவ் மல்டி மீடியா
21, 22) ஈஸ்வர் புக் செண்டர்
23, 24) எதிர் வெளியீடு
25) யுரேகா புக்ஸ்
26) கங்காராணி பதிப்பகம்
27) ஹயக்ரீவா பதிப்பகம்
28) இஸ்கான்
29) இஸ்லாமிக் புக் செண்டர்
30) இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட்
31) ஜீவா புத்தகாலயம்
32, 33) காலச்சுவடு
34, 35) கனிமொழி புத்தக விற்பனையாளர்கள்
36, 37) கண்ணப்பன் பதிப்பகம்
38, 39) கார்த்திக் பதிப்பகம்
40, 41) கிழக்கு பதிப்பகம்
42) குமுதம்
43) எல்.கே.எம். பதிப்பகம்
44, 45) லியோ புத்தக விற்பனையாளர்கள்
46) லோட்டஸ் மல்டி மீடியா
47) மகேந்திரா புத்தக விற்பனையாளர்
48, 49) மகேஸ்வரி புத்தக நிலையம்
50, 51) மணியம் பதிப்பகம்
52) மயிலவன் பதிப்பகம்
53, 54) மெர்க்குரி சன் பதிப்பகம்
55, 56) நாதம் கீதம்
57, 58) நியூ சென்சுரி புத்தக நிலையம்
59) நிழல்
60, 61) ஓம் சக்தி புத்தக நிலையம்
62) உதகை உலர் பழங்கள்
63) பாடம் பதிப்பகம்
64) பெரியார் புத்தக நிலையம்
65) பின்னல் புத்தகாலயம்
66) ராஜ ராஜ சோழன் புக்ஸ்
67, 68) ராம்கா புக்ஸ்
69, 70) சாகித்ய அகாதமி
71) சக்தி பதிப்பகம்
72) சாந்து அறிவியல்
73) சஞ்சீவியார் பதிப்பக்ம்
74, 75) சங்கர் பதிப்பகம்
76) சாட் வாட் இன்போ சோல்
77) ஸ்கூல் ரோம்
78) ஸ்கூல் ரோம் சிடி
79) அறிவியல் பூங்கா
80, 81) சீசன்ஸ் பப்ளிசிங்
82) ஸ்ரீ ஜி கல்வி உலகம்
83) சிவா புத்தகாலயம்
84, 85) சிவகுரு பதிப்பகம்
86, 87) சிவம் புக்ஸ்
88) சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்
89) சாப்ட் வியூ
90) ஸ்ரீ பாலகங்கை பதிப்பகம்
91, 92) புத்தக களஞ்சியம்
93) விவேகானந்த சேவாலயம்
94) சுபத்ரா புக்ஸ்
95, 96) சக்ஸஸ் புக் செல்லர்
97, 98) சுதா புக்ஸ்
99, 100) சுரா காலேஜ் ஆப் காம்பெட்டீசன்
101) தமிழினி
102) திருமகள் நிலையம்
103) திக் சாப்ட்
104, 105) டைகர் புக்ஸ்
107) உரிமை பதிப்பகம்
108, 109) வள்ளலார் புத்தகக் கடை
110, 111) விகடன் மீடியா


111 அரங்கங்கள் எந்த வரிசையில் அமையும் என்பது குலுக்கல் செய்தே முடிவு செய்யப்படும. 

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்து அமைந்திருக்கும் கண்காட்சி என்பதால், இந்த ஆண்டின் எல்லா புதிய தலைப்புக்களும், புத்தகங்களும் எதிர்பார்க்கலாம். சிறப்புக் கழிவு 10 சதவீதம் உண்டு. ரூ.250க்கு மேல் புத்தகம் வாங்கினால், திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் அங்கீகாரமும் நிச்சயம்.



விளம்பரக் குழு ஒருங்கிணைப்பாளர் - 94433 57147

தேவியர் இல்லம் திருப்பூர் உங்களை அன்போடு வரவேற்கின்றது.

புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் புத்தகம் கிடைக்கும் .