Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, February 13, 2013

டாலர் நகரம் (இனி) கனவு தேசமா? கண்ணீர் தேசமா?



டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா மலருக்காக நான் எழுதிய கட்டுரை.

வணக்கம்.

இந்த விழா மலரின்  வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  

நீங்கள் திருப்பூரின் மண்ணின் மைந்தரா? பிழைப்பு தேடி வந்தவரா? பக்கத்து ஊரில் இருந்து வந்து இங்கே வாழத் தொடங்கியவரா? தொழில் அதிபரா? அதிபராக மாறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுருப்பவரா? ஏற்றுமதி நிறுவனங்களில் மேலாளார் பதவியில் இருப்பவரா? மேலான உழைப்பை காட்டி விட்டேன். ஆனால் என்னால் இன்னமும் முன்னேற முடியவில்லை என்று புலம்புவரா? 

வாருங்கள் நானும் உங்களைப் போலத்தான். 

புலம்பியிருக்கின்றேன். மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டு இருக்கின்றேன். என்னை என் திறமையை உணராமல் பல காலம் வாழ்ந்தும் இருக்கின்றேன். அதன் பாதிப்புகளை பக்குவமாக மனதில் சுமந்து வைத்திருந்தேன்.  இன்று இந்த டாலர் நகரம் புத்தகத்தில் இறக்கி வைத்துள்ளேன்.

இது நீங்கள் வாசிக்க வேண்டிய நூல மட்டுமல்ல. சுவாசிக்க வேண்டிய கருத்துக்களும் அடங்கிய நூலும் கூட. கருத்து கந்தசாமி கணக்காக உங்களின் தற்போதைய வேதனைகளை ரணமாக்கும் முயற்சி அல்ல. அந்த ரணத்திற்கு மேல் மருந்து போடும் நூல் இது.  வாழ்ந்து கெட்டவனின் வீட்டுச் சுவற்றில் காதைக் கொண்டு போய் வைத்தால் கூட கதை சொல்லுமாம்.  ஆனால் நான் உங்கள் காதை கேட்கவில்லை. உங்கள் கண்களை இரவலாக கேட்கின்றேன்.  அந்த கணகள் வாசிக்கும் வார்த்தைகள் உங்கள் மனதை மாற்றும் அல்லது புதிய நம்பிக்கைகளை உருவாக்கும்.  நம்பி கை வை என்பதன் மற்றொரு பெயர் தான் நம்பிக்கை என்பதை நீங்கள் அறிவீர்களா?

உங்களைப் பற்றித்தான் எழுதியிருக்கின்றேன். உங்களில் ஒருவனாக நானும் இந்த கட்டுரைகளில் கதைகளில் கற்பனை வடிவத்தில் வாழ்ந்து இருக்கின்றேன். 

கண்ணீர் சிந்தாமல், ஏராளமான உழைப்பை இந்த ஊரில் பிழைப்பதற்காக சிந்தியிருக்கின்றேன். ஒரு முறை வாசித்துப் பாருங்கள். உங்களின் ஆன்மா பல கேள்விகளை எழுப்பும். அட நானும் இப்படித்தான் என்று உங்கள் மனம் குதுகலிக்கும். அட இதை நாம் கவனித்தது இல்லையே? என்று பார்வை விரியும். பக்கவாட்டு மனிதர்களை கண்டுகொள்ளாமல் இத்தனை நாளும் இங்கே வாழ்ந்து இருக்கின்றோமோ? என்ற கேள்விகள் இயல்பாக எழும். 

சாயத்தண்ணீரை கடந்து வந்து இருப்போம். நள்ளிரவில் ஆடைகளுக்கிடையே பல நாட்கள் படுத்து உறங்கியிருப்போம்.  வாகனத்தில் பெட்டிகள் ஏறும் வரைக்கும் உண்டான பிரசவ வேதனை அனுபவித்து இருப்போம்.  ஆனால் ஜெயித்த திருப்தியில் பல நாட்கள் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருப்போம். இந்த ஆடைத் தொழிலில் அடிப்படைகள் என்னவென்று தெரியாமல் உள்ளே வந்து அத்தனையும் கற்று நாமும் ஒரு நிர்வாகத்தின் உயர்பதவியில் வந்துள்ளோம் என்று ஊர்முழுக்க பறைசாற்றியிருப்போம்.

காரணம் நம் உழைப்பு. அந்த உழைப்பு உருவாக்கிய திறமை. திறமை உருவாக்கிய விடாமுயற்சி. 

முயற்சித்தவர்கள் அத்தனை பேர்களும் இங்கே ஜெயித்தவர்களின் பட்டியலில் தான் இருக்கின்றார்கள். அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உண்டா? ஆனால் ஜெயித்தவர்கள் உருவாக்கிய பாதை, இன்று நாம் வந்து சேர்ந்த பாதை தான் நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. இறுகிய முகமாய், குழப்ப ரேகைகளை முகத்தில் வைத்துக் கொண்டு முயற்சித்துக் கொண்டேயிருக்கின்றோம்.

நானும் நம்பிக்கையோடு இந்த திருப்பூருக்குள் வந்தேன்.  ஆனால் என் கனவுகள் காட்டிய பாதையின் முடிவு மட்டும் எனக்கு புலப்படவில்லையே? என்று யோசிப்பவரா? 

அதன் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? விதியா? மதியா? அரசாங்கமா? நிறுவனமா? என்று உங்களை யோசிக்க வைக்கும். உழைப்பதற்கு மேலும் இந்த உலகில் கவனிக்கப்பட வேண்டிய விசயங்களை எத்தனை இருக்கிறது என்பதை உங்கள் மனம் பட்டியலிட்டு பார்க்கும். 

பட்டியலின் இறுதியில் உங்கள் மனதிற்குள் பயம் வருகின்றதா? இல்லை நம்பிக்கை பிறக்கின்றதா? என்பது போன்ற பல கேள்விகளை இந்த புத்தகம் உங்களுக்கு உருவாக்கும்.

நம்பிக்கை என்ற விதைகளை இங்கு வாழ்ந்த மூத்த தலைமுறைகள் விதைத்து விட்டு சென்றார்கள். நம்பிக்கை நாணயத்தை இரு கண்களாக பாவித்தார்கள். ஆனால் நாம் நாற்றை வளர்த்து இறுதியில் மரமாக்கினோமா? இல்லை மரம் வளர்வதற்குள் அவசரத்தில் உலுக்கி மரத்தை பாழாக்கினோமா? என்பது பல விசயங்களை உங்களுக்கு எளிதாக புரியவைக்கும்.

படித்தவன் மட்டும் தான் வாழ்வில் முன்னேற முடியுமா? இங்கே வாழ்ந்த படிப்பறிவு இல்லாதவர்கள் இங்கே அனுபவத்தை துணை கொண்டு அது தந்த பாடங்களை வைத்து எப்படி இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தினார்கள்? எப்படி வளர்த்தார்கள்? 

ஆனால் வளர்த்து தந்து விட்டு சென்றவர்களிடம் வாங்கியவர்களின் முரண்பாடான புரிதலில் எங்கே தவறு நிகழ்ந்தது? என்ன காரணங்கள் போன்றவற்றை உங்களுக்கு புரியவைக்கும்.

பணம், மனம் இந்த இரண்டுக்கும் எல்லை என்பது இல்லை என்பதை உங்களுக்கு உணர்த்திக் காட்டும். ஆனால் பணம் மட்டுமே பிரதானம் என்று வாழும் வாழ்க்கையில் தனி மனிதன் எவற்றையெல்லாம் இழக்க வேண்டியிருக்கிறது? நம்மை சுற்றியுள்ளவற்றை எப்படியெல்லாம் மாற்ற முடிகின்றது என்பதையும் உங்களுக்கு உணர்த்திக் காட்டும் நூல் தான் இந்த டாலர் நகரம்.

டாலர் கொட்டுகின்றது? வந்தால் அள்ளிக் கொண்டு ஊருக்கும் திரும்பலாம் என்று தொழிலாளியும் திருப்பூருக்குள் வருவதில்லை. வாழ்ந்தே ஆக வேண்டிய வாழ்க்கைத் தேடி தான் இங்கே தினந்தோறும் பலரும் வந்து இறங்கிக் கொண்டிருந்தார். ஆமாம் இது இறந்த காலம்.  ஆனால் தற்போது?

இங்கே வாழ வந்தவர்கள் இனி இங்கே பிழைக்க வழியில்லை என்பதாக கருதிக் கொண்டு தங்கள் அத்தனை ஆவணங்களையும் மாற்றிக் கொண்டு திருப்பூரை விட்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றார்கள். காரணம் என்ன?

வார நாட்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து சின்னாபின்னமாகி நிறுவனத்திற்குள் வந்து சேர்ந்த காலம் மலையேறி போய்விட்டது. தினந்தோறும் ஞாயிற்றுக் கிழமையோ? என்று தான் இன்றைய திருப்பூர் யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது?

ஏனிந்த மாறுதல்?

காரணங்களை தேடுவதை விட அதைப் பற்றி பேசியே புலம்பிக் கொண்டுருப்பதை விட இனி இந்த திருப்பூர் வாழ்க்கை என்பது டாலர் நகரம் என்ற பெயரை தக்க வைக்குமா? இல்லை கண்ணீரில் மிதக்கும் ஏற்றுமதி நிறுவனங்களில் பாதையில் மறுமலர்ச்சியை உருவாக்குமா? கொஞ்சம் யோசிக்க என் அனுவத்தை வாசிக்க வாருங்கள்.

இது என் அனுபவம் மட்டுமல்ல. இங்கே வாழ்ந்த ஒவ்வொருவரின் அனுபவத்திற்காக என்னை நான் இங்கே முன்னிறுத்திருக்கின்றேன்.  உங்கள் வாழ்க்கையை, உங்கள் பாடுகளை நான் பாட்டாக, வார்த்தையாக, வாக்கியமாக இந்த புத்தகத்தில் எழுதியிருக்கின்றேன். .

இன்று உலகமே சுருங்கி விட்டது என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். உலகத்தில் உள்ள எந்த நாட்டின் மூலைக்கும் நவீனம் தந்த தொழில் நுட்பத்தில் நொடிப் பொழுதியில் பேசி, ஒப்பந்தங்களை உருவாக்கிய நாம் ஓரமாய் விழுந்து கிடக்கின்றோம். ஆனால் உழைப்பது என்பது என்னவென்றே தெரியாதவர்களும், இந்த ஆடைத் தொழிலைப் பற்றி அறியாதவர்களும் எப்படி இந்த தொழிலை முடக்கினார்கள் என்பதை உங்களுக்கு படம் போட்டுக் காட்டும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு உயர்வைக் காட்டுகின்றோம் என்று சொல்லிவிட்டுச் சென்றவர்களும், உறுதி மொழிகள் தந்தவர்கள், தந்து கொண்டு இருப்பவர்களின் வார்த்தைகளில் உள்ள நம்பகத்தன்மை நமக்குத் கிடைத்ததா? அதன் பலனை நாம் அனுபவிக்கின்றோமா?

இனி அவலம் தான் இங்கு நாம் வாழப் போகும் வாழ்க்கையா? இருண்டு கிடக்கும் மனதில் ஒளி விளக்கை ஏற்றப் போவது யார்? சர்வதேச நிறுவனங்கள் நம்மை வாழ் வைத்தார்கள். நாம் முறையாக பயன்படுத்திக் கொண்டோமா? 

இதுவரைக்கும் நான் (நாம்) என்ன கற்றுக் கொண்டோம்? என்ற கூட்டல் கழித்தல் பெருக்கல் வாய்ப்பாடுகளை உங்களுக்காக நான் இந்த நூலில் போட்டுப் பார்த்து இருக்கின்றேன்.

இதன் விடைகளைக் காண இந்த புத்தகத்தை படிக்க வாருங்கள் என்று உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

நட்புடன்
ஜோதிஜி

டாலர் நகரம் புத்தகம் முதல் பல புத்தகங்களை வாங்க 4 தமிழ் மீடியா தளம் தனியாக ஒரு தளத்தை உருவாக்கியுள்ளார்கள்.  இங்கே சொடுக்கவும்.








டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் 


டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் 


டாலர் நகரம் நூல் விழாவில் 

Saturday, January 26, 2013

டாலர் நகரத்தில் புதுகை அப்துல்லா

நிகழ்காலத்தில் சிவா இடுகையில் எழுதப்பட்ட விசயங்களை இங்கே மறுபதிப்பு செய்கிறேன். 

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து

நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில், சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும், குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்.


விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல், பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939


திருப்பூர் பழைய் பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/aYfP1

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/vsvuI

திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து அரங்கை வந்தடைய - http://goo.gl/maps/gwN4m





நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233


4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திற்காக சிலரை பேட்டி கண்டோம். அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகிறேன்.

இது ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. 

இந்த சுயபுராணத்தை பொருத்தருள்க.





விழா நாளை காலை 9.00 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.

டாலர் நகரம் விழாவுக்கு வந்தவர் வருகை தரப் போகின்றவர்கள் - தகவல்கள்

4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திறக்காக சிலரை பேட்டி கண்டது. அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகின்றேன்.

இது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வருகின்ற ஞாயிறு (27.1.2013) டாலர் நகரம் விழாவில் உரையாற்றுகின்றார்.

திருப்பூர் வருகின்ற நண்பர்கள் கவனத்திற்கு.

தங்கும் வசதி திருப்பூரில் உள்ள எஸ் எஸ் ஹோட்டல் என்ற தங்குமிடம் நண்பர்களுக்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு காலையில் வந்து சேர முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் மற்றும் இந்த விழாவில் தங்கள் மேலான ஒத்துழைப்பை உழைப்பை தேவியர் இல்லத்திற்காக பல வகையிலும் தந்து உதவிக் கொண்டிருப்பவர்களை கீழ் கண்ட அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளவும். 

தங்களுக்கு தேவையான உதவிகளை, வழிகாட்டுதலை,அழைத்து வருதல் போன்றவற்றில் உதவி புரிவார்கள்.

சேர்தளம் தலைவர்.

வெயிலான் ரமேஷ் 9 44 22 35 602 

தமிழ்ச்செடி அங்கத்தினர்கள்

வீடு சுரேஷ் குமார் 98 439 41  916

இரவு வானம் சுரேஷ்  860 86 910  55

வாகன போக்குவரத்து ஒருங்கிணைப்பு மற்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகள் செய்தவர் செய்து கொண்டிருப்பவர்

நிகழ்காலத்தில் சிவா 97 900 36 233

எனது உடன்பிறப்பு போல கடந்த நான்கு ஆண்டுகளாக என் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவியர் இல்லத்தின் மேல் அக்கறை கொண்டு சென்னையில் இருந்து திருப்பூர் வந்து இந்த விழாவுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்

ராஜராஜன்  99 411 43 821

புத்தகம் தொடர்பாக உங்கள் வீடு தேடி வர தொடர்புக்கு, மற்றும் மொத்த புத்தகத்தையும் வாங்கி சந்தைப்படுத்துதல் என்ற மகத்தான் உதவியை செய்து கொண்டிருக்கும் ஒரு பிரபல நிறுவனத்தின் பங்குதாரர் தன்னுடைய பெயரை எந்த இடத்திலும் போடக்கூடாது என்று கட்டளையோடு தேவியர் இல்லத்தின் மேல் அதிக அக்கறை கொண்டிருப்பவர். அவரின் பணியாளர் அலைபேசி எண்

திரு. மகேஷ் அலைபேசி எண் 97 89 311 666

இங்கே குறிப்பிட்ட எந்த அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளும் போது விழாவில் கலந்து கொள்ள, உங்கள் வருகையை உறுதிப்படுத்தும் போது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கின்றார்கள்.

27 1 2013 காலை 9.30  மணிக்கு விழா தொடங்குகின்றது.  

காலை 9  மணிக்கு அரங்கத்தில் இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். 

தாய்த்தமிழ் பள்ளி குழந்தைகளின் அற்புத பாடல் நிகழ்ச்சிகளை நீங்கள் அவசியே கண்டு களிக்க வேண்டும்.  தமிழ் இலக்கியம் சார்ந்த, மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், மற்றும் தந்தை பெரியார் பெருமையை பறைசாற்றும் பாடல்கள் என் நீங்கள் இது வரையிலும் கேட்டிராத பல அற்புத பாடல்களை தங்களது அசாத்தியமான திறமைகளால் உங்களை மகிழ்விப்பார்கள்.

என்னுடைய புத்தக அறிமுகம், வெளியீடு அறிமுகம் என்பதை விட பல நண்பர்களை இதன் சந்திக்க வாய்ப்பு என்பதாக கருதியுள்ளேன். 

இது தவிர வலைபதிவர்களை மேடையில் பேச வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.  

தாய்த்தமிழ் பள்ளி, ஞானாலயா வை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். தமிழ் இணையம் மற்றும் திரட்டிகள் குறித்த அறிமுகத்தை திருப்பூரில் உள்ள பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.

விழா மலர் மூன்று பகுதியாக கொண்டு வந்துள்ளோம். 

குறிப்பாக தமிழ்மணம் உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் அவர்களின் உழைப்பை இந்த உலகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்ச்செடி அமைப்பாளர்களில் ஒருவரான திரு வீடு சுரேஷ்குமார் பிடிஎஃப் கோப்பாக தனது அற்புத வடிவமைப்பு திறமையின்  மூலம் உருவாக்கியுள்ளார். 

விழா அன்று அந்த கோப்பு இணையத்தில் வெளியிடப்படும்.  

எளிமையான அந்த விழா மலர் விழா அரங்கத்தில் வெளியிடப்படும். 

25.1.2013 அன்று புத்தக கண்காட்சியில் பின்னல் அறக்கட்டளை மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையம் என்ற இரண்டு கடையில் டாலர் நகரம்  புத்தகத்தை கொண்டு போய் நண்பர்கள் கொடுத்தார்கள். 

திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் குறித்த ஒரு ப்ளக்ஸ் போர்டு வைத்துள்ளார்கள். 

மாதிரி டாலர் நகரம் புத்தகங்களை பின்னல் மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையத்திற்கு நண்பர்கள்  கொண்டு போய்ச் சேர்ந்த அந்த நிமிடத்தில் காத்திருந்த ஒருவர் உடனடியாக வாங்கிக் கொண்டு சென்றதை நண்பர்கள் அழைத்துச் சொன்ன போது என்னை விட என் தம்பிமார்கள் அதிக மகிழ்ச்சியில் அழைத்துச் சொன்னார்கள். .  

நாலைந்து பேர்கள் டாலர் நகரம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்றதை பார்த்த போது தான் எனக்கே உங்கள் புத்தகம் கடைகளுக்கு வந்து விட்டது என்று தெரிந்தது என்று வெயிலான் ரமேஷ் அழைத்துச் சொன்னார்.

உள்ளுரில் பத்திரிக்கையுடன் கொடுக்கப்பட்ட சுவரொட்டி விளம்பரங்கள் மூலம் முன்பதிவு செய்ய என்ற தகவலை என் மேல் அக்கறை டெக் மீடியா (கணினி துறை) நண்பர் விஜய் மற்றும் விகேஆர் பிரிண்ட்டிங்,  செண்பகம் மக்கள் சந்தை, சாப்ளின் வாட்ச் ஹவுஸ், ப்ரகாஷ் நியூஸ் ஏஜென்ஸி போன்றவர்கள் தங்களின் மகத்தான் உதவிகள் மூலம் விளம்பரம் என்பதையும், நேரிடையான சந்தைப்படுத்துதல் என்ற புதிய சாதனையை உருவாக்கி காட்டியுள்ளனர்.

நிச்சயம் இந்த புத்தகம் திருப்பூர் முழுக்க சென்று சேரும் என்று நம்புகின்றேன். 

வெட்டிக்காடு ரவி பெங்களூரில் இருந்து திருப்பூர் வந்து சேர்ந்து தற்போது எஸ் எஸ்  ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றார். இவர் இந்த விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு வாரமாக அவரது தினசரி கடமைகளில் ஒன்றாக அழைத்து பேசி உதவிகள் பல செய்து தன் பங்களிப்பை செய்து உள்ளார். 

முகம் தெரியாமல் பழகி இதயத்தால் இணைவது தான் இணைப்பது தான் இந்த தமிழ் இணையம். 

எழுத்தாளர் சிந்தனையாளர், பத்திரிக்கையாளர் என் ஆசான் திரு. ஞாநி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு எஸ் எஸ் ஹோட்டல் வந்து சேர்கின்றார்.

திரு. அப்துல்லா, திரு. ஜோசப் பால்ராஜ் (சிங்கப்பூர்) இருவரும் இன்று மாலை திருப்பூரில் இருக்கின்றார்கள்.

மீதியுள்ள விபரங்கள் இன்று அடுத்த வெளியிடப்படும் அடுத்த பதிவில் வெளியிடுகின்றேன்.

வாருங்கள் நண்பர்களே.







Friday, January 25, 2013

திருப்பூர் கேபிகே அழைப்பு.(டாலர் நகரம்)

4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திறக்காக சிலரை பேட்டி கண்டது. அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகின்றேன்.

இது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. எங்கள் வீட்டு சேர சோழ பாண்டிய மன்னர்கள் இன்று வெளியீட்டே ஆக வேண்டும் என் அன்புக் கட்டளை இட்டார்கள். 

பெரியவர்கள் இந்த சுயபுராணத்தை மன்னித்தருள்க.








Friday, September 17, 2010

நியூசிலாந்து -- துளசி கோபால் புத்தக விமர்சனம்.

இரண்டு பாகமாக இதுவரையிலும் நியூசிலாந்து குறித்து பொதுவான் விசயங் களைப் பார்த்தோம். இப்போது மொத்தமாக புத்தக விமர்சனமும் நியூசிலாந்து உருவான தலபுராணமும்..

நாம் பெருமைபடக்கூடிய மற்றும் பொறாமைடக்கூடிய நாடாக இருப்பதால் நீள் பதிவாக இருப்பதில் தப்பில்லை.

ஹேமா சமீபத்தில் சொன்ன ஒரு விடயம்.. " நாடுகள் மற்றும் அது சார்ந்த நடை முறை பழக்க வழக்கங்களைப் பற்றி படிப்பதில் தான் இப்போது ஆர்வம் அதிகமாக இருக்கிறது.  காரணம் சரித்திரம் பல விசயங்களை எனக்கு புரிய வைக்கிறது "  என்றார்.
இந்த நியூசிலாந்தின் தல புராணத்தைப் பற்றி படிக்கும் போது அவர் சொன்ன விசயங்கள் தான் நினைவில் வந்தது.  காரணம் இன்றைய நியூசிலாந்து சொர்க்கம் போல் இருக்கிறதே என்று அங்கலாய்ப்பவர்கள் இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் நம்ப முடியாத அளவிற்கு   நமக்குத்தந்துள்ள இத்தனை வரலாற்றுத் தகவல்களை படிக்கும் போது "இந்த சொர்க்கம் சும்மா வரவில்லை" என்று நினைக்கத் தோன்றுகிறது. 

நூலாசிரியருக்கு அமைந்த அதிர்ஷட வாய்ப்பான பார்த்த நூலகப் பணி என்பது
பலவிதங்களிலும் படிப்பவர்களுக்கு தவமில்லாமல் கிடைத்த வரம் போல உதவியாய் உள்ளது.

1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகமா கடல்பயணத்தின் மூலம் இந்தியாவைக் கண்டு கொண்ட பிறகு தான் தூர தேசங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்ற உந்து சக்தி உருவாக ஆரம்பித்தது.  ஒரே காரணம் வியாபாரம் மற்றும் அதிக லாப ஆசைகள் கொண்ட நேரிடையான கொள்முதல். 

16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்ததும் பக்கத்தில் ஈழத்திற்குள் சென்றதும் இதன் அடிப்படையில் தான் நடந்தது.  இந்த கதை தான் நியூசிலாந்திலும் நடந்துள்ளது.

1200 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து என்று இன்று அழைக்கப்படும் நாட்டிற்குள் உள்ளே வந்தவர்களின் பெயர் பாலினீஷீயன்கள்.   உள்ளே நுழைந்தவர்களின் வாழ்க்கைக் காலம் 30 முதல் 40வரைக்கும் இருந்தாலும் குழுவாக அங்கங்கே பிரிந்து வாழ்ந்து கொண்டு எளிதாக எங்கும் எளிதில் நகர்ந்துவிடக் கூடியதாய் உள்ள வகையில் அமைந்த வீடுகளை கட்டிக் கொண்டு வாழத் தொடங்குகிறார்கள். 

இதற்கு முன்னால் உள்ள புராணங்கள் புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதற்குப் பிறகு தான் நம்ம ஏழரை பகவான் ஆங்கிலே யர்கள் உள்ளே வருகிறார்கள். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு முன்பு வாழ்ந்த வர்களின் ஆயிரம் வருட வாழ்க்கையில் போட்டிகளும் பொறாமைகளுடன் வேறொன்றும் இருந்தது.  அது தான் சென்ற வாரங்களில் நியூசிலாந்தை புரட்டிப்போட்ட பூகம்பம் மற்றும் இதன் இலவச இணைப்பாக எரிமலைத் தாக்குதல்.
மூடநம்பிக்கைகள் என்பது இன்றைக்கு தான் உருவானதா?

இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல உலக நாகரிகம் வளர வளர பஞ்சபூதமான நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,வாயு போன்றவற்றை வணங்கிக் கொண்டுருந்த மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் நிறைய மாறுதல்கள் உருவாகத் தொடங்கியது. தொடக்கத்தில் உருவான எரிமலைக் குழம்பு மொத்தத்தையும் புரட்டிப் போட்டு விட உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த பழங்குடியினர் மிக எளிதாக ஒரு முடிவுக்கு வந்தனர்.

இதற்கு காரணம் நாம சூன்யக்காரின்னு சொல்லிக்கிட்டுருக்க ஹினோபாவ் (பாய், துணி முடைவதில் ரொம்ப கெட்டிகாரி) தான் காரணம்ன்னு ஏற்கனவே உள்ளே வைத்துக் கொண்டுருந்த பொறாமையால் எளிதாக ஒரு முடிவுக்கு வந்து ஊரை விட்டு துரத்தி விட்ட பிறகு தான் உள்ளே இருந்த பெண்களுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.  

காரணம் வேறொன்றுமில்லை.  நம்ம ஹினோபாவ் பார்க்கிறதுக்கு 60 கிலோ தாஜ்மஹால் ஐஸ்வர்யா போல் கண்களில் லென்ஸ் பொருத்தமலே சும்மா அம்சமா இருப்பாங்க.

உலகத்தில் நாகரிகம் தோன்றியதற்கு முக்கிய காரணம் பொறாமை.  மாற்றுக் கருத்து உண்டா? இந்த பொறாமை உருவாக்கியதே ஆசைகள். இந்த ஆசைகள் உருவாக உருவாக வளர்ந்த விஞ்ஞானத்தின் காரணமாக இன்று ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நீங்கள் இதை படித்துக் கொண்டு இருக்கீங்க.......

இப்படித்தான் இந்த நியூசிலாந்தின் தொடக்ககால தலபுராணத்தை வெகு சிரத்தையாக நுலாசிரியர் கோர்வையாக கொண்டு போய்க் கொண்டுருக்கிறார். தொடர்ந்து வரும் மாவோரியர்கள் வரைக்கும் பல ஆதாரபூர்வ தகவல்களுடன் தொண்டையில் நழுவிக் கொண்டு செல்லும் பால் பாயசம் போல செல்கிறது. . இந்த தொடக்க கால பொறாமையில் உருவான நியூலாந்து நாட்டின் வளர்ச்சி இன்று எங்கே வந்து நிற்கிறது தெரியுமா?  

அதுக்கும் நாம பொறாமைபட்டுத்தான் ஆகனும்.  ஆமாம் உலகில் ஊழல் குறைந்த நாட்டின் தரவரிசையில் நியூசிலாந்து இருப்பது இரண்டாவது இடம்.  நியூக்ளியர் இல்லாத நாடு..  இன்னும் பலப்பல அதிர்ச்சிகள் இந்த நூல் முழுக்க இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் " சூரியன் மறையாத நாட்டை ஆண்டவர்கள் " என்று சரித்திரம் படிக்கிற அத்தனை பேர்களும் தெரிஞ்ச சமாச்சாரத்திற்கு முன்பு வேறொரு கதையும் உண்டு.  எல்லாமே வணிகம் சார்ந்த ஆசைகள். 

தொடக்கத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருந்த வணிகர்களை பீதியை கிளப்ப வைத்தவர்கள் டச்சு மக்கள். ஆங்கிலேயர்களெல்லாம் சும்மா டம்மி.  இவங்க தான் சும்மா கில்லி மாதிரி ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் புகுந்து சுனாமி மாதிரி வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. இந்தியாவில் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு வந்த டச்சு மக்கள் சந்தைக்கு வருவது போல கப்பலில் வருவாங்க. சாமான்களை வாங்குவாங்க. ஒன்னுக்கு பத்தா குறைத்தும் கொடுப்பாங்க. இதுக்கு மேலே மதம் மாற வைப்பாங்க.  உச்சகட்டமாய் பெரிசா தர்றேன்னு சொல்லி நடுக்கடல்ல கொண்டு போய் தூக்கி எறிஞ்சுட்டு போயிடுவாங்க. டச்சு மக்களை பார்த்தாலே தொடக்க கால இந்தியாவில் டச்சு பண்ணக்கூடாதுன்னு ஓட்டமா ஓடியிருக்காங்க.  அந்த ஐயாமாருங்க தான் நியூசிக்குள்ளேயும் தங்கள் புனித காலை எடுத்து வச்சுருக்காங்க.

1642 ஆம் ஆண்டு ஏற்கனவே வியாபாரம் செய்துக்கிட்டுருந்த டச்ச மக்கள் ஜாவா (இந்தோனேசியா) வில் இருந்து கிளம்பி ஆறுமாசம் பிரயாணம் செய்து  நியூசிலாந்தின் உள்ளே வந்தா நம்ம இந்தியா மாதிரி வாங்க ராசா, வாங்க தொரைமாருங்களான்னு எவரும் வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடாம வேறொரு காரியம் செய்தாங்க.

கும்மாங்குத்து கேள்விபட்டுருக்கீங்களா?

வந்து இறங்கிய மாவோரியர்கர்கள் குத்தின குத்துல துண்டக் காணோம் துணியை காணோம்ன்னு ஓட்டம் பிடிக்க ஆரம்பிச்சாங்க. கப்பலை ஒவ்வொரு இடமா நகர்த்தி, அப்படியே எவ்னாவது இளிச்சவாயன் சிக்குவானான்னு பார்த்து பயத்தோடு இறங்கிய இடம் தான் STATEN LAND.

டச்சு மக்கள் வைத்த பெயர் தான் பிறகு ஐரோப்பாவில் நோவா ஸீலான்டியா என்று மாறியது. . ஏற்கனவே கூட வந்த நாலு பேரையும் இழந்து கஷ்டப்பட்டு வந்து இறங்கி பெயர் சூட்டும் விழாக்கூட வைக்காமல் திரும்பி போயிட்டாங்க. 

இதுவே தான் ஆங்கிலேயர் இங்கு வருவது வரைக்கும் நடந்துக்கிட்டு இருந்து இருக்கு. ஒவ்வொரு நாட்டிலும் இருந்து நியூசிக்கு வருவாங்க.  மாவோரிகளின் எதிர்ப்பு தாங்க முடியமா பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடிடுவாங்க.  இந்த எதிர்ப்பு எந்த அளவுக்கு இருந்துச்சு தெரியுமா?  1772 ல் உள்ளே வந்த .பிரஞ்சுகாரர் (MARION DU FRESNE)  உடன் வந்த 15 மாலூமிகளை கொன்றதோடு மட்டுமல்லாமல் மசாலா எதுவும் சேர்க்காமல் மொத்த மக்களையும் அப்படியே சாப்பிட்ட பிறகு தான் மாவேரிகளுக்கு கோபம் அடங்கியது.

ஆனால் நம்ம ஆங்கிலேயே பகவான் எப்பவும் கொஞ்சம் வித்யாசமானவங்க தானே?

ஒரு நாட்டுக்குள் உள்ளே நுழைய அவர்களின் மதம் முதலில் உள்ளே வரும்.  அப்புறம் மக்களும் மதம் பிடிக்க வச்சுடுவாங்க. இதைப் போலத்தான் இங்கு உள்ள வந்த (1814) மிஷனரி சார்பாக வந்தவர் பெயர் சாமுவேல் மார்ஸ்டன். ஆனால் இந்தியா போல அவ்வளவு சீக்கிரம் இவங்க பப்பு மாவோரிகளிடம் வேகவில்லை.

கிட்டத்தட்ட 11 வருசம் மாறி மாறி ஒவ்வொரு பாதிரிமாருகளும் உள்ளே வந்து பாதிதான் கரைக்க முடிந்தது. எழுத படிக்க கற்றுக் கொடுத்தது எப்படி தெரியுமா?  நாங்க சொல்றத கேட்டா ஆளுக்கு ஒரு துப்பாக்கி இனாம்ன்னு கூவிக்கூட
பார்த்துருக்காங்கன்னா பாத்துக்கங்களேன்.

துப்பாக்கி கையில வாங்கினவுங்க என்ன செய்வாங்க?. ஒவ்வொரு குழுவும் அடுத்த குழுவோட மோத ஆரம்பித்த நிலமெல்லாம் ரத்தம் தான்.  நல்லவேளை ஆங்கிலேயர்கள் துப்பாக்கியை அறிமுகம் செய்யாமல் இருந்து இருந்தால் இவங்களும் மாவேரியர்களுக்கு மசாலா சோக்காத இறைச்சியா மாறிப் போயிருப்பாங்க.

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம்

பெரிதான வியாதிகள் இல்லாமல் வாழ்ந்த மாவோரியர்களின் வாழ்க்கையில் இந்த ஆங்கிலேயர்கள் உள்ளே வந்த போது இலவச இணைப்பாக வேறொரு விசயமும் உள்ளே வந்தது.?
அம்மை தொடங்கி சளி நோய்கள் கண்டகருமாந்திர நோய்கள் வரைக்கும் அத்தனையும் உள்ளே வந்து விட அதில் இறந்த மாவோரியர்கள் அநேகம்.

அப்புறமென்ன?  ஏற்கனவே வியாபாரத்தின் மூலம் வளங்களை கடத்த தொடங் கிய மாதிரி மாவேரிகளின் கட்டமைப்பு சிதைய ஆரம்பித்தது.  மெதுவா அவங்க மதமான கிறிஸ்துவம் பரவ ஆரம்பிக்க இப்ப பண்ட மாற்று முறை மாறி காசு பணமெல்லாம் புழங்க......................

ஆட்டம் பாட்டம் தான்.

மாவோரிகள் மேட் இன் ஆங்கிலேயர்களாக மாறிப்போன காலமிது. 

ஆங்கிலேயர்கள் உள்ளே இருந்தாலும் மாவோரியர்கள் குழுபோல் தான் உள்ளே தீவு முழுக்க பரவியிருந்தாங்க.  இப்படித்தான் 1833 ல் மாட்சிமை தாங்கிய மகாராணியின் ஆளுமைக்குள் உள்ள நாடுன்னு இந்த தொடக்க கால நியூசிலாந்தை மாற்ற வைக்க ஏற்பாடு நடந்தது. . 

இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னன்னா மாவோரிகளின் வாழ்க்கையில் உள்ள பழக்க வழக்கங்களும் இந்தியப் பழக்கவழக்களும் பல இடங்களில் ஓரே மாதிரித்தான் இருக்கு.  ஒரே ஒரு பெரிய வித்யாசம் மட்டும் உண்டு.  

நாம் எப்போதும் மத்தவங்களை வந்து முதுகு மேலேயும் உட்கார்ந்துக் கப்பான்னு சொல்லுவோம். ஆனால் மாவோரியர் அந்த விசயத்தில மட்டும் ரொம்பவே வித்யாசமா இருக்காங்க.  முதுகு மட்டுமல்ல உள்ளே வந்த மற்ற நாட்டு மக்களின் முட்டிக்காலையும் சேர்த்து சூப்பு வச்சு குடிச்சுருக்காங்க.

1975 ல் கடன் வாங்கி கல்யாணம் மாதிரி சுயதேவைகள் பூர்த்தி செய்ய கடன் வாங்கித் தான் நாட்டை மேலே கொண்டு வந்துருக்காங்க. தொடக்கத்தில் இது அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்தாலும் தம் கட்டி கொஞ்ச கொஞ்சமா மேலே வரத் தொடங்க நம் கண்களுக்குத் தெரிவது தான் நியூசிலாந்து நாட்டின் இன்றைய வளர்ச்சி. 

ஆனால் நம்ம தலைவர்கள் மக்கள் நலம் என்பதை தன் குடும்ப நலம் என்று நினைத்துக் கொண்டவர்கள்.  நியூசிலாந்து தலைவர்கள் பொது மக்கள் நலம் என்று பார்க்க இன்றைக்கு இந்தியாவின் கடவுச்சீட்டை காகித தாள் போல மற்ற நாடுங்க பார்க்கின்ற நிலைமை.

நியூசிலாந்தில் வெள்ளையர்கள் மட்டுமே குடியுரிமை பெற தகுதியுடைவர்கள் என்கிற நிலைமையை உடைத்த இந்தியர்கள் யார் தெரியுமா? நம்ம குஜராத் மக்கள்.

உள்ளே நுழைந்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் வைத்து தங்களை வளர்த்துக் கொண்டது முதல் காரமான சமோசா சாப்பிடுவது வரைக்கும் மக்கள் சும்மா ஜம்முன்னு தங்களை ஆழ அகல நிலைநிறுத்திக்கிட்டாங்க. 

இப்பக்கூட பாருங்க.  ஆஸ்திரேலியாவில் ஒரு குஜராத் மாணவன் அடி வாங்கி னான் என்றால் எப்படி பொங்குறாங்க?  ஆனால் நம்ம தமிழர்கள் எங்கேயாவது அடிவாங்கினா நம்மாளுங்க கடிதப் போக்குவரத்தை ஆரம்பிச்சுடுறாங்க?
என்ன செய்வது. நம்ம தமிழர்கள் போற இடத்தில் சொத்துக்களை சேர்க்கிறதும் இல்லை.  சொகமான வாழ்க்கையையும் எதிர்பார்க்கிறதும் இல்லை.                       

" இன்றைக்கு செத்தா நாளைக்கு பால்ன்னு " நடிகர் விவேக் சொன்ன தத்துவத்தை கெட்டியா பிடிச்சுக்கிட்டு வாழ்ந்து செத்தும் போயிடுறாங்க.

1987 பிஜீத் திவில் ராணுவப் புரட்சி நடக்க உள்ளேயிருந்த 51 சதவிகித இந்தியர் கள் கனடா இங்கிலாந்து ஆஸ்திரேலியா முதல் இந்த நியூசிலாந்து வரைக்கும் புலம் பெயர ஆரம்பித்தனர். யாரு வேண்டுமானாலும் உள்ளே வாங்க ஆனால் ஒரே ஒரு நிபந்தனை? .  உள்ளே வந்தா கையில் 250 000 டாலர் உங்க கையில வச்சுருக்கனும்ன்னு நியூசி அரசாங்கம் அறிவிப்பு செய்ய வேறு யாருக்கிட்ட காசு இருக்கும்., 

குஜராத் மக்கள் குஜாலா செட்டிலாக ஆரம்பிச்சாங்க.

1997 ஹாங்காங் சீனா கைக்கு போன போது அரை மில்லியன் டாலர் முதலீடு செய்யத் தயாராய் இருக்குறவுங்க இங்கே வரலான்னு சொல்ல சப்பைக்கு பயந்த மக்கள் தட்டு முட்டு சாமானோடு நியூஸிக்கு வர ஆரம்பிக்க இன்னும் கொஞ்சம் ஜனத்தொகை கூட ஆரம்பித்தது.

இதைப் போலவே கொரியா ஜப்பான் என்று தொடங்கி சப்பை மூக்கு சீனா வரைக்கும் உள்ளே நுழைந்து இன்றைக்கு உலக முக்கிய மொத்த தொழில் துறைகளையும் சப்பையாகவே நசுக்கி விட்டுட்டாங்க..


இந்த நாட்டுல வடக்கு தெற்குன்னு ரெண்டு தீவு உண்டு.  

ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எந்திரப் படகுகள் மூலமாத்தான் பயணம் செய்யனும்.. விளையாட்டுல சுற்றுலாவுல , இயற்கையை நேசிக்க அதிக ஆர்வம் செலுத்துற நியூஸி மக்கள் நியூசிலாந்து என்ற சொர்க்கத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

தனி மனிதனும் தன்னை உணர்ந்து அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதும் ஒரு காரணம்.  தேர்ந்தெடுத்து வரும் தலைவர்களும் மக்களை ஏமாற்றாமல் நாட்டை முன்னெடுத்துச் செல்வதும் மற்றொரு காரணம்.

 டபுள் என்ஜின் படகு என்றாலே காற்றை கிழித்துக் கொண்டு தானே செல்லும்.  அது தான் நியூசிலாந்து இந்தியாவை விட பல மடங்கு வருடங்கள் முன்னால் சென்று கொண்டுருக்கிறது.

இந்த நியூசிலாந்து நாட்டில் நீங்க படகு மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகும் போது உங்களோட இன்னோரு நண்பரும் கூடவே வருவாங்க. வேறு யாரு நாம் டால்பின் பங்களாளிங்க தான். 

தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு நம்ம சரோஜாதேவியம்மா கண்க்கா பாட்டுபடிக்கிட்டு பக்கத்தில் தொடர்ந்து வரும் டால்பீன் மீனகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு போனா எப்படியிருக்கும்-

நினைச்சுப்பாருங்க. 

புத்தகத்தை ஒரு முறை படிச்சு பாத்துட்டு பொட்டி சட்டிகளை கட்டிகிட்டு புள்ளகுட்டிகள கூட்டிக்கிட்டு பொஞ்சாதியோட செல்வோமா??

விமர்சனம் முதல் பகுதி

நூலாசிரியர் வலைதளம்

சந்தியா பதிப்பகம் வலைதளம்

சந்தியா பதிப்பக முகவரி

சந்தியா பதிப்பகம்
ப,எண் 57 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
தொலைபேசி 044 24 89 69 79
விலை 200 ரூபாய்.
பக்கங்கள் 352