Monday, November 29, 2021

200 நாட்கள்


இன்று முதல் இந்த மின்னூல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 புதிய நண்பர்களுக்காக இந்த தகவல்



Thursday, November 25, 2021

பழங்குடியினர் - மத்திய அரசின் வெற்றி பெற்ற திட்டங்கள்

ஒரு திரைப்படம் பழங்குடியினர் மேல் பரிதாபப்பட வைத்துள்ளது. அதிகம் பேர்களை எழுத வைத்துள்ளது. ஆனால் கடைசியில் வெங்காயம் உரித்தால் என்ன மிஞ்சுமோ அதே போல வித்தியாசமான பல உண்மை விவகாரங்களை படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக இப்போது வெளியே கொண்டு வந்து கொண்டே இருக்கின்றது. 

இந்த சமயத்தில் பழங்குடியினர் வாழ்க்கையில் மத்திய அரசு என்ன சாதனைகள் செய்து உள்ளனர்? என்பதனை யாராவது விபரம் புரிந்தவர்கள் பேசினால் நன்றாக இருக்குமே என்று யோசித்த போது நண்பர் சிவா இவரை அறிமுகம் செய்து வைத்தார்.  தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடிகள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் திரு எம் நாகலிங்கம் அவர்கள் (துணை பேராசிரியர்) முக்கால் மணி நேரம் பேசி முழுமையாக புரிய வைத்தார்.  

மபி உள்ள மலைப் பிரதேசத்தில் இருக்கும் அவர் இணையத் தொடர்பில்  சிக்கல் உருவானாலும் முடிந்தவரைக்கும் ஆதாரப் பூர்வத் தகவல்களை அளித்துள்ளார்.

சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தியா முழுக்க இருக்கும் பழங்குடியினர் வாழ் மக்களுக்கு மத்திய அரசாங்கத்தில் 40 துறைகள் தொடர்ந்து செயல்படுகின்றன.  பல ஆயிரம் கோடிகள் அவர்களின் நல்வாழ்வுத் திட்டத்திற்காகத் தொடர்ந்து செலவழிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் துறையில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் இணையம் வழியே கண்காணிக்கப்படுகின்றது. எவர் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் இரண்டு பிரச்சனைகள்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையிலிருந்து நாகரிக வாழ்க்கை வரத் தயாராக இல்லை.
மீதி உள்ள மக்களுக்குச் செல்ல வேண்டிய நிதி மாநிலம் வாரியாக அரசியல் சூழல் பொறுத்து மாறுபடுகின்றது.

இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
நல்ல பேச்சு. அவசியம் கேளுங்கள்.  

  
தமிழக பாஜக தலைவர் கு அண்ணாமலை எழுதும் கடிதம் ஒலி வடிவில்

இன்று நான் எனக்கு வரும் கடிதங்களைப் பற்றி உங்களுடன் சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல.

கடிதங்கள் வரலாற்றையே மாற்றி எழுதி இருக்கின்றன. கடிதங்கள் அரசாங்கங்களைப் புரட்டிப் போட்டு இருக்கின்றன. கடிதங்கள் மன்னர்களை எல்லாம் மண்டியிட வைத்திருக்கின்றன. உறவுகளுக்குப் பாலமாகவும்... உணர்வுகளுக்கு வடிகாலாகவும்...

வரலாற்றின் பதிவுகளாகவும்... 
கருத்துக்களை அறிவிக்கும் கல்வெட்டுக்களாகவும்... 
கடிதங்கள் வரலாற்றுப் பொக்கிஷங்களாக, 
காலப் பெட்டகக் கருவூலமாகத் திகழ்கின்றன.

ஆகவே நான் எனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும் மிகுந்த கவனத்துடன் கையாள்வதற்காக ஒரு தனி குழுவை நியமித்து இருக்கிறேன் 

*ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!*

*ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!*

1.முதன் முதலில் *computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.*

Monday, November 22, 2021

விவசாய மசோதா விலக்கம் குறித்து:

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, மிக அத்தியாவசியமான விவசாய சட்டத்திருத்தத்தை பா.ஜ.க. திரும்பப் பெற்றது குறித்தான பல கோபமான எதிர்வினைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நானும் ஒரு விவசாய குடும்பத்துப் பின்னனியில் இருந்து வந்தவன்தான். உயிரைக் கொடுத்து உழைத்த விவசாயியை எப்படி இடைத்தரகர்களும், அரசாங்கமும் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பதனையெல்லாம் கண்கூடாகக் கண்டவனும் கூட.



Saturday, November 20, 2021

நீர் வழி போக்குவரத்து

2022 வருடம் என்பது இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் முடியப் போகின்றது.

மூன்று முக்கிய விசயங்கள்.

மோடி அரசு சாதித்த சாதனைகளில் மிக மிக முக்கியமானது.



Thursday, November 18, 2021

திராவிட கட்சிகளின் இந்து ஆலய அபகரிப்பு அரசியல் - ஹெச் ராஜா - H.Raja

எங்கள் குழுவினர் அழைத்த போது மறுக்காமல் உடனே ஏற்று வந்து பேசினார் மரியாதைக்குரிய ஹெச். ராஜா அவர்கள். 

எனக்கு இந்தத் தலைவர் பிடிக்கும். பிடிக்காது என்று சொல்லக்கூடியவர்கள் அனைவரும் இந்த உரையைப் பொறுமையாக கேட்க வேண்டும்.  

பத்திரிக்கையாளர்களுடன் எப்போதும் மல்லுக்கட்டும் திரு. ராஜா அவர்கள் இந்தப் பேச்சில் ஞானி போல ரிஷி போல ஆசிரியர் போல அமைதியாக பேசி உள்ளார். 

கட்சி பாரபட்சம் இன்றி கோவில்கள், அதன் அமைப்பு, சொத்துக்கள் எப்படிச் சூறையாடப்பட்டது என்பதனை அழகாக புரிய வைத்துள்ளார். 

பக்தியை நம்பக்கூடியவர்கள் அவசியம் இந்த உரையை முழுமையாக கேட்க வேண்டும். 

தமிழகம் முழுக்க எத்தனை கோவில்கள் உள்ளன? 
அதற்கு எத்தனை ஆயிரம் லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளன? 
தற்போது என்ன நிலையில் உள்ளன? 
ஏன் சிலைகள் திருடப்படுகின்றது? 
யார் காரணம்? 
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன செய்கின்றார்கள்? 
மேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கோவில்கள் மூலம் சூறையாடப்பட்ட சொத்துக்களின் அளவு சுமார் 10 லட்சம் கோடி 

என்றால் நம்ப முடிகின்றதா? கேட்டுப் பாருங்களேன்.

Wednesday, November 17, 2021

உயிருடன் நடமாடுவது முக்கியமா? வாழ்வது முக்கியமா?

ஒரு நாள் முழுமையாக முடியும் போது குறைந்த பட்சம் இணையத்தில் ஏதேனும் ஒரு பெரிய கட்டுரை வாசிக்க வேண்டும். 



மலைவாழ் மக்களால் போற்றப்படும் தலைவர் பிர்சா முண்டா

மலைவாழ் மக்களால் போற்றப்படும் தலைவர் பிர்சா முண்டா

இன்று நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருப்பது 25 வயதில் மரணமெய்திய பழங்குடியின மக்களின் ஒப்பற்ற தலைவனைப் பற்றிய செய்தி. ஆம் மிக குறுகிய காலமே இம் மண்ணில் வாழ்ந்திருந்தாலும், தன் மக்களுக்காகவும், பாரம்பரியத்திற்காகவும் அதன் வீரம் செறிந்த வரலாற்றைக் காக்கவும் உயிர் நீத்த "பிர்சா முண்டா"வைப்பற்றித்தான். வாக்காளர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் என்று சென்ற வாரம் நடந்து முடிந்ததைப் போல வருகின்ற வாரம் நடப்பதை தவற விட வேண்டாம்.  தலைவர் அண்ணாமலை அவர்களின் விளக்கமான கடிதம் ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும். 
(கடிதஎண்47)

 

Saturday, November 13, 2021

ஜெய்பீம் த.செ.ஞானவேல்

கடந்த பத்து வருடங்களில் எவனெல்லாம் இயல்பாக பொத்துனாப்ல நல்லவன் போல அமைதியாக இருந்தானோ அவனின் உண்மையான முகத்தை இப்போது தொடர்ந்து பார்த்து ரசித்து வருகின்றேன்.. 

அவனுக்குள் இருந்த அகங்காரம் எனக்குப் பலவற்றைப் புரியவைக்கின்றது.

Friday, November 12, 2021

அசோக் ராஜா திருமணம்

முதல் அக்காவின் மகன் திருமணத்திற்கு நான் நேற்று (11.11.2021) ஊருக்குச் சென்று வந்தோம். ஊடகங்கள் தொடர்ந்து மழை குறித்துப் பயமுறுத்திக் கொண்டே இருந்தன.  திருமணம் தேவகோட்டையில் உள்ள சிவன் கோவிலில் நடக்க இருந்த காரணத்தால் மனதிற்குள் பயம் இருந்து கொண்டே இருந்தது.

Wednesday, November 10, 2021

'சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்' மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

 'சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்' மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

'கோயம்புத்தூர் கியர் மேன்' என்று அன்புடன் அழைக்கப்படும் சுப்ரமணியன், சாந்தி கியர்ஸ் நிறுவனர் மற்றும் ஆதரவற்றோருக்கான இலவச மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் சாந்தி சமூக சேவை என்ற அறக்கட்டளைக்கு மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி காலமானார்.



சுப்ரமணியன், அல்லது பி சுப்ரமணி, 1960 களில் PSG பாலிடெக்னிக்கில் டிப்ளமோ பட்டதாரி ஆவார். அவர் 1960 களின் பிற்பகுதியில் PSG பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக சேர்ந்தார். அங்கு பணிபுரியும் போது, ​​இயந்திரங்கள் மீதான ஆர்வத்தைத் தொடர ஒரு பட்டறையைத் தொடங்கினார். இது 1969 ஆம் ஆண்டில் சிறிய கியர்களை உற்பத்தி செய்வதற்காக கோயம்புத்தூரில் சாந்தி இன்ஜினியரிங் மற்றும் டிரேடிங் கோவை நிறுவ அவரைத் தூண்டியது. 

1972 ஆம் ஆண்டில், சுப்ரமணியன் அதை சாந்தி கியர் புராடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனமாக மாற்றினார், இது ஜவுளித் துறைக்கு சேவை செய்ய கியர்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தியது. 200களில் கியர்ஸ் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக அவர் நிறுவனத்தை வளர்த்தார். இந்த நிறுவனம் பவர் ஸ்டீல் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற தொழில்களுக்கான கியர்களை உற்பத்தி செய்தது. 

பின்னர் 2012ல் முருகப்பா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சுப்ரமணியன் தனது முழு ஆற்றலையும் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற லாப நோக்கமற்ற, தொண்டு அறக்கட்டளையை நடத்தி, 1996 இல் தொடங்கினார். இந்த அறக்கட்டளை தேவைப்படுபவர்களுக்கு மருந்துகள், ஆம்புலன்ஸ் சேவைகளுடன் தரமான சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க உதவியது. இந்த முயற்சியால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர், இன்னும் பலர் இந்த முயற்சியின் பலனை அறுவடை செய்து வருகின்றனர்.

வணிகர்கள் - உலகத்தை ஆட்சி செய்கின்றார்கள்.

எங்குத் திரும்பினாலும் காசு. எதைத் தொட்டாலும் காசு

திராவிட கூலிப்படை

இது தவிர, மற்றவர்களுக்கு பெயரளவு விலைக்கு உணவை விற்பனை செய்வதைத் தவிர, ஒவ்வொரு நாளும் 300 மூத்த குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் கேன்டீனையும் அறக்கட்டளை நடத்துகிறது. இந்த அறக்கட்டளை ஒரு நோயறிதல் மையம், இரத்த வங்கி, கண் பராமரிப்பு மையம் மற்றும் எல்பிஜி தகனம் ஆகியவற்றையும் நடத்துகிறது. சுப்பிரமணியன் டிசம்பர் மாதம் தனது கடைசி மூச்சு வரை, இந்த தொண்டு நிறுவனத்திற்காக அயராது உழைத்தார்.


Tuesday, November 09, 2021

திராவிட கூலிப்படை

 முல்லைப் பெரியாறு விசயத்தில் அப்பா செய்த தவறுகளை இப்போது மகனும் செய்து கொண்டு இருக்கின்றார். அப்பாவுக்கு எல்லாமே தெரியும். ஆனால் மகனுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது? எதனை எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்பது தெரியாது. 



நிஜமான நிர்வாகம் தெரிந்த,   

தமிழக மக்களைப் பற்றித் தெரிந்த,  மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற,  

எந்த முதல்வரும் பேருந்தில் ஏறிச் சோதிப்பதில்லை. மக்களிடம் கேட்பது இல்லை. ஒரு பரிசோதகர் செய்ய வேண்டிய வேலையது. போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் சொன்னால் போதும்.

கடந்த 1992 முதல் 2005 வரை திருப்பூரிலிருந்து காரைக்குடிக்குப் பொங்கல் தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் போது நான் பட்ட அவஸ்தைகளை இன்னமும் மனதில் வைத்து இருக்கின்றேன். 

பேருந்து வாசல்படியில் உட்கார்ந்தபடி பாதித் தூக்கத்தில் அதிகாலையில் ஊருக்குச் சென்று சேர்வதுண்டு. 

அவ்வளவு கூட்டம்.  

இந்த தீபாவளிக்கு முந்திய இரண்டு நாட்கள் அதே காட்சியைப் பார்த்தேன்.

புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என்று இரண்டு பகுதிகள் உண்டு. இவர்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காக பத்து கிலோமீட்டர் கடந்து மற்றொரு இடத்தை உருவாக்கி வைத்து இருந்தார்கள். மக்கள் யாரும் செல்லவில்லை.

திருப்பூர் முழுக்க அங்கங்கே அனைத்துச் சாலைகளிலும் குடும்பத்துடன், கை குழந்தைகளுடன் பல ஆயிரம் மக்கள் நின்று கொண்டு இருந்ததைப் பார்த்தேன். வலித்தது.

மகளிடம் காட்டி விரிவாக சொன்னேன். இவையெல்லாம் திமுக அரசுக்குத் தெரியுமா? தெரியாதா?

திருமா போன்றவர்கள் கம்யு கட்சிக்காரர்கள் இதைப் பற்றி தானே பேச வேண்டும்.   

100 நாள் வேலைத் திட்டம் அவசியம் என்பதனை ப சிதம்பரம் முதல் உள்ளூர் கம்யு மக்கள் வரை பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். 

ஆனால் அண்ணாமலை ஒருவர் தான் அதில் உள்ள ஊழலை வெளியே கொண்டு வந்து உள்ளார். வேறு எவரும் வாயைத் திறக்கவே இல்லையே?

வீடு கட்ட காசு கொடுத்தால் அதில் திருடுவது.  பயிர் காப்பீடு என்றாலும் திருடுவது.  மத்திய அரசு தரும் பணம் என்பது தங்களுக்கு உரியது என்பது போலவே இந்த இரண்டு பங்காளிகளும் நினைப்பது தான் வருத்தமாக உள்ளது.

திருமா  நினைத்தால் இவற்றைப் பற்றி பேசி மாற்றலாமே?

பாஜக பேசியதும் திருமா வந்து கிறிஸ்தவ வள்ளுவர் எனப் பேசுவது தற்செயல் என்போர் திராவிட அரசியலின் அரிச்சுவடி அறியாத அப்பாவிகள் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.



ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைக்க வேண்டிய திருமா அவர்கள் இப்படித் திராவிட கூலிப்படையாக ஆவது வருத்தத்துக்குரிய விஷயம்...


எங்குத் திரும்பினாலும் காசு. எதைத் தொட்டாலும் காசு


Monday, November 08, 2021

எங்குத் திரும்பினாலும் காசு. எதைத் தொட்டாலும் காசு

ஜெயலலிதா ஆட்சியின் இறுதிக் காலத்தில் தமிழகத்தில் எப்போதும் போல புகையிலை சார்ந்த பலவிதமான பொருட்கள் எளிய விலையில் கிடைத்துக் கொண்டே தான் இருந்தன. எவ்வித கெடுபிடியும் இல்லை.  விஜயபாஸ்கர் கருணாநிதி அவர்களைச் சக்கர நாற்காலியில் வருவதை வைத்து அசிங்கமான கவிதை பாடி அமைச்சர் பதவி பெற்ற போது புகையிலைப் பொருட்களின் விலை சற்று ஏறியது.   


ஜெ இறந்து எடப்பாடி அமர்ந்து மீண்டும் விஜயபாஸ்கர் வானாளவிய அதிகாரம் படைத்தவராக மாறத் தொடங்கிய போதும் கூட அதிக விலைக்கு எந்தப் புகையிலைப் பொருட்களும் விற்கவில்லை என்பதனை நினைவில் வைத்திருக்கவும்.

ஆனால் ரெய்டு, கோர்ட்டு, கேஸ், எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் என்று மாறி மாறி காட்சிகள் மாறியது. 3 ரூபாய் விற்றுக் கொண்டிருந்தவை 10 ரூபாய்க்குச் சென்று எடப்பாடி ஆட்சி இறுதிக் காலத்தில் 30 ரூபாயில் வந்து நின்றது.  

விற்பவர்கள் எப்போதும் போல விற்றுக் கொண்டே தான் இருந்தார்கள். காவல்துறையினர் கச்சிதமாக எந்தந்த கடைகளில் பெரிய அளவுக்கு விற்பனை ஆகின்றதோ அங்கே தினசரி, வாரம், மாதம் என்று கணக்கு வைத்து வசூலித்துக் கொண்டு இருந்தனர். அடி மட்ட போலிஸ் மக்கள் சின்னச் சின்ன கடைகளில் அதிக பட்சம் சிகரெட் வாங்கிக் கொண்டு இருபது ரூபாய் டிப்ஸ் வாங்கிக் கொண்டு இருந்தனர்.

ஆட்சி மாறியது. எந்த மாறுதலும் தெரியவில்லை.

ஆனால் டிஜிபி சைலேந்திரபாபு வந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை?  தமிழகத்தைப் புரட்டிப் போட்டார்.  

அரசியல்வாதிகளைக் குறை சொல்வதை விட இந்த விசயத்தில் காவல் துறை மனசு வைத்தால் தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று அனைவருக்கும் தெரிந்தது தான்.  மூன்று மாதங்கள் மூச்சு விட முடியாமல் கடைக்காரர்கள் தவித்தார்கள்.  

நடைப்பயிற்சியின் போது பல்வேறு தருணங்களில் பல கடைகளைக் கவனித்துக் கொண்டே வந்தேன்.

இப்போது?  ஆட்சி ஆறு மாதங்களைக் கடக்கப் போகின்றது?

என்ன மாறுதல்கள் உருவாகியுள்ளது?

ஒரு பொட்டலம் ரூபாய் 70 ரூபாய்.  

ஒரு பொட்டலத்தில் இருக்கும் ஒரு ரூபாய் பெறுமானம் இல்லாத புகையிலை வஸ்துக்கு இன்று சந்தையில் 70 ரூபாய் விற்றாலும் சக்கைப்போடு போட்டுப் போய்க் கொண்டே தான் இருக்கின்றது.  

இது இங்குள்ள விலை.  ஒவ்வொரு ஊருக்கும் விலை ஏற்றம் இறக்கம் இருக்கலாம்.  காரணம் ஏழை, நடுத்தரவர்க்கம், உயர் நடுத்தரவர்க்கம் காவல்துறை ஆய்வாளர்களின் கணக்குகளைப் பொறுத்து மாறும் என்றே நினைகின்றேன்.

கோமாளி ஆட்சியில் கூடுதலாக ஒன்று கிடைக்கின்றது.  

கேரளாவிலிருந்து இயங்கும் பரிசுச்சீட்டு தொழில் திருப்பூரில் சக்கைப் போடு போடுகின்றது.  

எங்குத் திரும்பினாலும் காசு.

எதைத் தொட்டாலும் காசு.


Sunday, November 07, 2021

வணிகர்கள் - உலகத்தை ஆட்சி செய்கின்றார்கள்.

நான் விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடிப் பொழுதிலும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில், நான் பார்க்கும் படிக்கும் உணரும் விசயங்களில் என்ன மாதிரியான வணிகம் இருக்கின்றது என்பதனை கூர்மையாக கவனிப்பேன். இங்கு வணிகம் என்பது உடனடி லாபம் என்பதாக புரிந்துள்ளனர். இதன் காரணமாக எளிதில் சோர்வுக்கு வந்து சேர்ந்து விடுகின்றனர்.


Friday, November 05, 2021

கு. அண்ணாமலை எனும் நான்/ ஜோதி கணேசன்

குடும்பம், தேசம், அரசாங்கம் ஆகிய அமைப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு இத்தகைய பிணைப்பு சார்ந்த பிரக்ஞை அவசியம். இத்தகைய புரிதலைக் கொண்டே இயற்கையையும் பூமியையும் கூட நாம் பேரழிவிலிருந்து காக்க முடியும். (உலக அளவில் சுற்றுச்சூழல் இயக்கமே பெரிதாகத் தொடங்கியிராத 1960களில் தீன்தயாள்ஜி இக்கருத்தை வைத்தது குறிப்பிடத் தக்கது.)  

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் மதிப்பிற்குரிய கு. அண்ணாமலை அவர்கள் முன்னால் இருக்கும் சவால்கள். இதுவரையிலும் செய்த சாதனைகள். அதிகாரத்தை அடைய நாம் செய்ய வேண்டிய முயற்சிகள்.
 
இந்தியாவின் பொருளாதார அமைப்பு அறத்தின் அடிப்படையில் பாரதியப் பண்பாட்டை அடியொற்றி அமையவேண்டும். மையத்தில் அதிகாரம் குவிக்கப்படாததாகவும் (decentralized), 
பஞ்சாயத்துகள் போன்ற அமைப்புகள் சுதந்திரத்துடன் இயங்க வழிசெய்வதாகவும் இருக்கவேண்டும். 

அடிப்படைத் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் அப்பால், மேற்கத்திய பாணியிலான அதீத நுகர்வுக் கலாசாரம் ஊக்குவிக்கப்படக்கூடாது. 

****

பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல் அமைப்பு சட்டத்தில் (BJP Party Constitution) அதன் அதிகாரபூர்வக் கொள்கையாக ‘ஒருங்கிணைந்த மானுடவாதம்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தீனதயாள் உபாத்யாவின் ஏகாத்ம மானவ வாதம் எனப்படும் ஒன்றுபட்ட மனிதநேயம் என்ற கோட்பாடு இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதுவே தங்கள் தனித்துவ சித்தாந்தம் என இன்றைய பாஜக தலைவர்களும் பெருமையுடன் கூறுகின்றனர்.

அரசின் சலுகைகள் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் தன்னிறைவு அடையச் செய்வதுடன் அவர்கள் யாரையும் நம்மி இருக்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வழி காட்டுதல்.


Wednesday, November 03, 2021

2021 தீபாவளி வாழ்த்துகள்

04.11.2021


நாளைய தினம் தீபாவளி (2021). 

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.


Tuesday, November 02, 2021

தளபதிகள் நண்பர்களாக , நண்பர்களே தளபதி

நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் தான் அரசியல் தரும் பரிசு என்பார்கள்.  

ஆனால் மோடி அவர்களுக்கு தளபதிகள் நண்பர்களாக இருக்கின்றார்கள். நண்பர்களே தளபதியாகவும் உடன் பயணிக்கின்றார்கள்.  கடந்த 7 வருடங்களில் மோடி அவர்களின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணங்களிலும் நடந்த, நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வுகளை கவனித்து வருகிறேன்.

நிர்வாகம் தெரிந்தவர்களுக்குத் தான் தெரியும். 

திட்டமிடுதலின் உச்சம்.  

பார்த்துப் பார்த்து அலங்கரிக்கும் சிற்பி யாரோ  இருக்கின்றார்கள் என்றே நினைத்துக் கொள்வதுண்டு.  

இதற்கு முன்னால் இப்படி நடந்ததே இல்லை.  மன்மோகன் சிங் அரசாங்கத்தில் கொத்து கொத்தாக கொத்தவால்சாவடிக்கு டவுன்பஸ் ல் செல்லும் கூட்டம் போலவே சென்று வந்தார்கள்.


@annamalai_k  எழுதும் கடிதம் ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும்.

இது கூடத் தெரியலையா?

பெயர் வைத்த நாள் எப்படிப் பிறந்தநாளாகும்! - 39

1953-ல் பிறந்த தமிழகத்திற்கு, 1967ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டின் பிறந்தநாள் தற்போது சர்ச்சையாக்கப் பட்டுள்ளது. வரலாற்றுப்படி பார்த்தால் தமிழ்நாடு உருவாக்கப்படவே இல்லை. தென்னக மாநிலங்கள் ஒன்றாக மதராஸ் ராஜதானியாக தொடர்ந்தபோது,  ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்தது. 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, அவை மொழிவாரியாக பிரிக்கப்பட்டபோது சென்னை மாகாணம் பிறந்தது.

தமிழகம் தனியாக வரையறுக்கப்பட்ட நாள் (01.11.1956.) 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அப்படியாக வரையறுக்கப்பட்ட நாளை அனைத்து மாநிலங்களும் நவம்பர் ஒன்றாம் தேதியைக் கொண்டாடும் போது பெயர்மாற்றம் செய்த நாளை பிறந்தநாளாகக் கொண்டாடு வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, வரலாற்றுப் பிழை.