Wednesday, November 03, 2021

2021 தீபாவளி வாழ்த்துகள்

04.11.2021


நாளைய தினம் தீபாவளி (2021). 

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.



அரசியல் கலப்பு இல்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்து பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக பொறுமையாக படித்தேன். அதில் உள்ள பல நூறு விமர்சனங்களைப் படித்தேன்.

அதில் உள்ளவர்களின் தற்போது நாலைந்து பேர்கள் இப்போது என் தொடர்பில் உள்ளனர்.  இது கடந்த பத்து வருடக் கதை.  பலர் காலத்தோடு கரைந்து விட்டனர்.  அடுத்த பத்து வருடங்களில் என்ன மாற்றங்கள் நிகழுமோ?

மகள்கள் இருவர் ஓட்டளிக்கத் தயாராக உள்ளனர்.
கல்லூரி வாழ்க்கை தொடங்கியுள்ளது.
என் உடல் நிலையில் அதிக மாறுதல்கள் உருவாகியுள்ளது.

இதுவரையிலும் இல்லாத அதீத பொறுமை, கட்சி அரசியல் சார்ந்த பேசுபவர்களை அமைதியாக கவனிக்கும் பாங்கு என்று வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது.

கடந்த இருபது மாதங்களில் தொழில் துறை முற்றிலும் நசுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் கொரேனா நோய்த் தொற்று என்ற புதிய பெயர் அறிமுகம் ஆகியுள்ளது.

காந்திய வாழ்க்கை வாழத் தெரியாதவர்களின் வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியாக கேலிக்குரியதாக மாறியுள்ளது.

என் வாழ்க்கையில் மேடைப் பேச்சு அறிமுகம் ஆகியுள்ளது. வாரந்தோறும் பேச்சுக்கலையை வளர்த்துக் கொள்ளத் தொழில் நுட்ப வசதிகள் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. உலகம் முழுக்க அறிந்த பிரபலங்களுடன் உரையாட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

மாற்றங்கள் புதிய பாதையில் அழைத்துச் செல்கின்றது.

இனிய தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள் (2021)

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

// அரசியல் கலப்பு இல்லாமல்... //

உங்களுக்கு சிரமம் தான்... ஆனாலும் தொடர்க... அவற்றை வாசித்தாலும் கருத்து சொல்வதில்லை - நட்பு தொடர வேண்டும் எனும் முக்கிய எண்ணமே முதன்மை... மற்றவை திருக்குறள்...!

நன்றி...