Monday, June 29, 2020

ரஜினியை மாற்றிய காலம்

ஒரு முக்கியமான புத்தகம் எழுதத் தொடங்கியுள்ளேன். சம கால இருபது வயது உள்ள இளைய சமூகத்திற்கு அடுத்த பத்து வருடங்களுக்கு தேவைப்படும் தமிழக அரசியல் வரலாறு. ஓய்வு நேரங்களில் அதிகமான புத்தகங்கள் அது தொடர்பான ஆதாரங்கள் என்று ஒவ்வொன்றாகப் பழைய குப்பைகளைப் புரட்டிக் கொண்டிருந்த போது ப.திருமாவேலன் அவர்களின் இந்தக் கட்டுரை என் கண்ணில் பட்டது. பாதிக்கும் மேற்பட்ட விசயங்கள் நான் அறியாதது. 

இதை இங்கே பதிப்பிக்கச் சிறப்பான காரணங்கள் எதுவுமில்லை. எப்போதும் நான் சொல்வது தான். காலம் சல்லடை போட்டு ஒவ்வொருவரையும் சலித்து எடுத்து விடும். நம்மை நமக்கே அடையாளம் காட்டிவிடும். 

கொரானா விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், இதைக் கொண்டே கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் மூலம் தமிழகம் பெறும் இம்சைகளைக் கடந்து உங்களுக்கு நேரம் இருந்தால் சுவராசியத்திற்காகவே மட்டும் இதனை வாசிக்கலாம். இணையம் இருப்பதால் இப்போது எல்லாமே எழுத்து மற்றும் காட்சி வடிவமாக ஆவணமாக எங்கும் கொட்டிக் கிடக்கின்றது. இதன் மூலம் ரஜினியை நேசிக்கும் நண்பர்களை சங்கடப் படுத்த வேண்டும் என்பதோ? ரஜினியின் தகுதியை தரம் இழக்கச் செய்வதோ என் நோக்கமல்ல. 

மனிதர்கள் எப்போதும் மாறிக் கொண்டேயிருப்பார்கள். அந்தந்த சந்தர்ப்பங்கள் தான் அவர்களின் நேர்மையைத் தீர்மானிக்கும் என்பதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குடும்பம் என்று வந்தவுடன், அரசியல்வாதிகளுக்குக் கொள்கை மறந்துவிடுவதைப் போல நடிகர்களும் அப்படித்தான் என்பதனை புரிந்து கொள்வதற்காகவே இதனை இங்கே வெளியிடுகிறேன். இவர் சரியானவரா? அவர் சரியானவரா? என்று கேட்க வேண்டாம். இன்று இது என் பார்வைக்கு வந்தது. மீண்டும் வேறொருவர் பற்றி என் பார்வைக்கு வரும் பட்சத்தில் அதனையும் வெளியிடுவேன். 

மிக நெருங்கிய நண்பர்கள் கூடக் கட்சி ரீதியாக எழுதும் போது, அவரவர் விரும்பும் நடிகர்கள், ஆளுமை குறித்து காரசாரமாக எழுதும் போதும் என் தொடர்பிலிருந்து மெது மெதுவாக விலகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை உணர்ந்தே இருக்கின்றேன். கற்றுக் கொடுப்பது என் வேலை. அது என் கடமை. அதற்காக அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. இவர்கள் நம்மை மறந்து விட்டார்களே என்று எண்ணிக் கொள்வதும் இல்லை. காலம் தீர்மானிக்கும். 

நீங்களும் நானும் காலத்தின் துகள்கள். உணர்ந்த காரணத்தால் உள்வாங்கிய அனுபவத்தினால் உற்சாகமாகத் தொடர்ந்து செயல்பட முடிகின்றது. 

****** 

ஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா? 

ப.திருமாவேலன் 

March 10, 2018 

எந்திரன் ரஜினி இப்போது ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர் பக்தியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார் என்பது புரிய வில்லை. அரசியல் ஆசை அவரை எம்.ஜி.ஆர் தொப்பியை அணியத் தூண்டியிருக்கிறது. 

‘‘அரசியல்ல ஜெயிக்கணும்னா திறமை, புத்திசாலித் தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசியலுக்கு நான் வந்திருக்கணும்னா 1996-லயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லாவா இருக்கும்? வரணும்னு நினைச்சா நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன். ஆனா, அவன் சொல்லணும்” என்று 2008-ல் சொன்னார் ரஜினி. 

இதோ இப்போது ‘அவன்’ சொல்லி விட்டான் போல!

‘‘எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. சினிமாவிலிருந்து அவரைப் போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள். சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. அவர் ஒரு யுக புருஷர். பொன்மனச் செம்மல். மக்கள் திலகம். நூறு அல்ல, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரைப் போல யாரும் வரமுடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு. எம்.ஜி.ஆரைப் போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால், அவனைவிட பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமான்ய மக்களுக்கான ஆட்சி,மத்தியஸ்த குடும்பத்தாருக்கான ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” 

என்று எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில் சொன்னதன் மூலமாக... ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்று முள்ளும் மலரும் படத்தில் கையை விரித்த ரஜினி - ‘ஒரு கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம்’ என்று ராஜாதி ராஜாவில் அலட்சியம் காட்டிய ரஜினி - ‘கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு’ என்று முத்து படத்தில் லந்து காட்டிய ரஜினி - மொத்தப் பாடல்களையும் பொய்யாக்கி ‘பொன்மனச் செம்மல்’ ஆக முயல்கிறார். 

‘எம்.ஜி.ஆர் எனக்குச் செய்த உதவிகள்’ என்று ரஜினிகாந்த் அந்த விழாவில் வெளியிட்ட நிகழ்வுகள் பலருக்கும் புதியவை. அதே எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் நடந்த சில சம்பவங்களை ரஜினி சொல்லவில்லை. 

‘காலம் மறந்திருக்கும், நாமும் மறப்போம்’ என்று நினைத்திருக்கலாம். இப்போது மாதிரி அல்ல, அப்போது ரஜினி. நிஜத்திலும் பாட்ஷா மாதிரி இருந்த காலம் அது. 

அவர்மீது சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ‘மூக்குத்தி’ பத்திரிகை ஆசிரியர் ஜெயமணி ஒரு புகார் கொடுத்தார். ‘என்னை ரஜினி மிரட்டினார்’ என்பதுதான் புகார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்டினும் இந்தப் புகாரை விசாரித்தார்கள். 1979-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார். 

‘ஜெயமணி என்னைத் தாக்கி எழுதினார். காரில் போய்க்கொண்டு இருந்த நான், ரோட்டில் அவரைப் பார்த்தேன். அதுபற்றிக் கேட்க விரும்பி காரைப் பின்பக்கமாகச் செலுத்தினேன்.அவர் செருப்பைக் கழற்றினார். நான் அவரது சட்டையைப் பிடித்தேன்’ என்று ரஜினி வாக்குமூலம் கொடுத்ததாக அன்றைய ‘மாலை முரசு’ நாளிதழ் செய்தி வெளியிட்டது. அன்று கைது செய்யப்பட்ட ரஜினி, உடனடியாக ஜாமீன் பெற்றார். 

இதேபோலத்தான் ஹைதராபாத் விமான நிலையத்திலும் ஒரு நிகழ்வு நடந்தது. அந்த ரஜினி இப்போது எவ்வளவோ மாறிவிட்டார். அவரை மாற்றியது, அவர் இப்போது சொல்லி வரும் ஆன்மிகமாகவும் இருக்கலாம்! ஆன்மிகமும் அவரிடம் பிற்காலத்தில் சேர்ந்ததுதான். 

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் (1981 பிப்ரவரி 26) மிகமிக எளிமையாக நடந்தது. அந்த திருமணத்துக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தான் ரஜினி அழைத்திருந்தார். திருப்பதி கிளம்பிச் செல்வதற்கு முன்னதாக நிருபர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்துப் பேசினார் ரஜினி.

‘நீங்கள் யாரும் வர வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது, ‘‘சிறு வயது முதல் எனக்குச் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. திருமணம் என்றால் பல மணி நேரம் மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை நம்ப வில்லை. என்ன செய்தாலும் தாலி கட்டுவது, மாலை மாற்றுவது எல்லாம் இரண்டு நிமிடங்களில் முடிந்துவிடும். திருமணத்தில் முக்கியமான சடங்கே இதுதான். இது என் கல்யாணத்திலும் உண்டு. சிக்கனமாகக் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் போதும்’’ என்று சொன்னார். 

சடங்கு, சம்பிரதாயங்களில் பெரிய நம்பிக்கை இல்லாத ரஜினிதான், இன்று ஆன்மிக அரசியலுக்குத் தேர் செலுத்த ஆரம்பித்துள்ளார். ‘‘ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான சாதி மதச் சார்பற்ற அறவழியில் நடப்பதுதான் ஆன்மிக அரசியல். தூய்மை தான் ஆன்மிகம். எல்லா ஜீவன்களும் ஒன்றுதான். அனைத்துமே பரமாத்மா. இறைநம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்’’ என்று ரஜினி சொல்லியிருப்பது எம்.ஜி.ஆர் சொன்ன ‘அண்ணாயிச’த்தைவிட அதிகக் குழப்பத்தை உண்டாக்குகிறது. 

ரஜினி சொல்லும் உண்மை, நேர்மை, அறவழி, தூய்மை ஆகியவைதான் அரசியலுக்கே அடிப்படையானவை. இவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதில் கூடுதலாக ஒரு வார்த்தையைச் சொல்கிறார் ரஜினி. 

அதாவது, ‘இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்’ என்கிறார். தமிழ்நாட்டு முதலமைச்சர் நாற்காலியில் இருந்த ஓமந்தூர் ராமசாமி, ஒரு நாளைக்கு ஆறு தடவை இறைவழிபாடு செய்யக் கூடியவர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் பக்தர்தான் பி.எஸ்.குமாரசாமி ராஜா. இராஜாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பக்தி நாடு அறியும். அண்ணாவும் கருணாநிதியும் மட்டும்தான் நாத்திகர்கள். இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழுத்த ஆன்மிக வாதி. இன்னும் கட்டப்படாத கோயில் தவிர அனைத்துக்கும் சென்று வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். 

இதில் என்ன புதிதாகச் சொல்லவருகிறார் ரஜினி? அவர் சொல்லாமல் விட்டது, பி.ஜே.பி-யின் முதலமைச்சர் வேட்பாளர் தான்தான் என்பதை. ‘நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’ என்றால், யாரோடு சேர்ந்து? பி.ஜே.பி-தான் அவரது வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறது. அந்தப் பாதையை முன்கூட்டியே அறிவிப்பது தனக்கு நல்லதல்ல என்று ரஜினி நினைப்பது மட்டுமல்ல, ‘தனக்கும் நல்லதல்ல’ என்று பி.ஜே.பி நினைக்கிறது. க்ளைமாக்ஸ் நேரத்தில் அந்த மர்மம் வெளிப்படும். அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடாது என்பதால், முன் கூட்டியே சொல்லப்படுவது தான் ‘ஆன்மிக அரசியல்’ என்ற முழக்கம். 

பொதுவாகவே மத்திய அரசோடு நட்பில் இருப்பார் ரஜினி. அது எந்த மத்திய அரசாக இருந்தாலும், பகைத்துக் கொள்ள மாட்டார். 1986-ல், ‘ராஜீவ் காந்தி மிகச் சிறந்த அரசியல்வாதி’ என்று பேட்டி அளித்தவர் அவர். அதன்பிறகு 1990-களில் பிரதமராக இருந்த நரசிம்மராவைச் சென்று சந்தித்தவர். பிரதமர் வாஜ்பாயும், துணைப் பிரதமர் அத்வானியும் அவரை அடிக்கடி சந்தித்துள்ளார்கள். இன்றைய பிரதமர் மோடி, அவரது வீட்டுக்கே வந்துள்ளார். ‘சிஸ்டம் சரியில்லை’, ‘அரசியல் வெற்றிடம்’ என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ள ரஜினி, மத்திய சிஸ்டம் பற்றி வாய் திறப்பது இல்லை. பி.ஜே.பி-க்கு எதிரான எதிர்க்கட்சி அந்தஸ்து வெற்றிடம் பற்றியும் அவர் கவலைப்படுவது இல்லை. 

இப்போது தமிழ்நாட்டைக் குறிவைக்கும் காரணத்தை அவரே சொல்லிவிட்டார்... 

‘ஜெயலலிதா இறந்துவிட்டார், கருணாநிதி உடல்நலமில்லாமல் இருக்கிறார். அதனால்தான் நான் வருகிறேன்’ என்று. அதற்காகத்தான் ரஜினி, ரஜினியாக இல்லாமல் பி.ஜே.பி ஆசைப்படி எம்.ஜி.ஆராக வருகிறார். இரட்டை இலையை வைத்திருந்தாலும் எடப்பாடியோ பன்னீரோ எம்.ஜி.ஆரின் வாக்குகளை அள்ள முடியாது என்பதை பி.ஜே.பி தலைமை உணர்ந்துள்ளது. அதனால்தான் எந்த வேஷம் போட்டாலும் பொருந்தக்கூடிய சூப்பர் ஸ்டாரை அழைத்து வருகிறார்கள். சொந்த முகமாக இல்லாமல் இரவல் முகமாக இருப்பதுதான் இடிக்கிறது. ஏனென்றால், பல டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்களைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துச் சலித்து விட்டார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அவர்களை அழைத்து வருவதும் தமிழ்நாட்டுக்குப் புதுசு அல்ல. அதில் நின்று நிலைத்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு யாருமில்லை. 

1984 - 1989 காலகட்டத்தில் என்ன நடந்ததோ, அதுதான் இப்போதும் நடக்கிறது. ‘பாக்யராஜ் என் வாரிசு’ என்று எம்.ஜி.ஆர் அறிவித்ததும், தி.மு.க-வில் டி.ராஜேந்தர் சேர்ந்ததும் ஒரே ஆண்டில்தான் நடந்தது. அதே ஆண்டில்தான் தீவிரமாக அ.தி.மு.க-வில் செயல்படத் தொடங்கினார் ஜெயலலிதா. ‘‘எம்.ஜி.ஆருக்கு அடுத்து எனக்குத்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் கடிதம் எழுதுகிறார்கள்’’ என வெளிப்படையாகவே சில்க் பேட்டி அளித்தார். ‘காக்கி சட்டை’ பட வெற்றி விழாவை மதுரையில் நடத்த கமல் வெளியில் கிளம்பினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து சிவாஜி விலகினார். தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கினார். ஜானகியும் அரசியலுக்கு வந்தார். முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவைச் சந்தித்து ராமராஜன், அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுபோலவே இப்போது நடக்கிறது... 

ரஜினி, கமல் என்று. ரஜினியைச் சூழ்நிலையும் நெருக்கடியும் சேர்ந்து உள்ளே தள்ளிவிடுகின்றன. நெருக்கடி என்பது ஏற்கெனவே சொன்ன பி.ஜே.பி நெருக்கடிகள். சூழ்நிலை என்பது கமல் உருவாக்கியது. அவர்கள் இருவரும் நண்பர்களாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர்களைச் சமூகம் நண்பர்களாகப் பார்க்கவில்லை. இருக்கவிடுவதும் இல்லை; விடப்போவதும் இல்லை. திரையில் இருந்த போட்டி இதோ அரசியலிலும். ‘ரஜினி வந்துவிடுவார்’ என்பதே கமலின் அவசரத்துக்கான தூண்டுதல். ‘கமலே வந்து விட்டாரே’ என்பதுதான் ரஜினியின் வேகத்துக்கான தூண்டுதல். ‘‘இதற்கு மேலும் வராமல் இருந்தால், பயந்து விட்டேன் என்பார்கள்” என்று சொல்கிறாராம் ரஜினி. 

அவரது பயத்தை பி.ஜே.பி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது. 1986-ம் ஆண்டு ஓர் ஆங்கில இதழுக்கு பேட்டி கொடுத் திருந்தார் ரஜினி. 

சினிமாவில் நடிப்பதை விட கண்டக்டர் வாழ்க்கைதான் தனக்கு அதிகம் பிடித்தது என்று ரஜினி அப்போது சொன்னார். ‘‘நீங்கள் சினிமா துறையில் நீண்ட நாள் நிலைத்து நிற்க விரும்பவில்லையா?’’ என்று கேட்டபோது, ‘‘நிச்சயமாக ஒரு சினிமாக்காரனாகச் சாவதை நான் விரும்பவில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்’’ என்று சொன்னார். 

‘‘அப்படியானால் அரசியலில் இறங்குவீர்களா?’’ என்று கேட்டபோது ரஜினி மறுத்தார். ‘‘அரசியலா? அது ஒரு குப்பைமேடு. நெருப்பில் குதிப்பதற்குச் சமமானது. என்னை ஒரு அரசியல்வாதியாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்று சொல்லி விட்டு ஓர் அதிர்ச்சி தரும் வாசகத்தைச் சொன்னார் ரஜினி. 

அதை அவரால் மட்டும்தான் திருப்பிச் சொல்ல முடியும்!

Wednesday, June 24, 2020

சீனாவை ஒதுக்க முடியுமா?

சீனாவிற்கு எதிராக இருக்கும் நாடுகள் ஒன்று சேர்ந்து சீனாவை ஓரங்கட்ட முடியுமா?

(ஆங்கிலத்தில் வாசித்ததை மொழி மாற்றம் செய்துள்ளேன்)

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் கூறுவார்கள். You can like me!, you can hate me!, but you can never ignore me. இதன் தமிழாக்கம் நீங்கள் என்னை விரும்பலாம்!அல்லது வெறுக்கலாம் !ஆனால் என்னைத் தவிர்க்க இயலாது. இதுதான் சீனா. இங்கு நாம் கோபத்தினால் சீன பொருட்களை அனைத்துத் தேசங்களும் தடை செய்ய வேண்டும் என்று கூறலாம் ஆனால் இது எத்தனை தூரம் சாத்தியம் என்று இப்பொழுது பார்க்கலாம். கீழ்வரும் அட்டவணையில் சைனாவிலிருந்து முக்கியமான 15 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் சதவிகிதம் மற்றும் அதன் மதிப்பைப் பார்ப்போம்.


Sunday, June 21, 2020

இந்தியா சீனா ஊடல்

13 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்புக்கு ஒரு லட்சம் கோடி.

சீனா 76 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்திய அலைபேசி சந்தை என்பதனை சீனா தன் அக்குள் வைத்துள்ளது. மின்னணு தொடர்பான அனைத்து அடிப்படை உபகரணங்களும் அவர்களை நம்பி இருந்து பழகிவிட்டோம். மேக் இன் இந்தியா செல்ப் எடுக்காமல் இருப்பதற்குப் பின்னால் உள் காரணத்தை நண்பர்கள் எழுத வேண்டும்?

ஆனால் இந்தியா சீனா ஊடல் தொடங்கிய சில மாதங்களில் தற்போது 6 பில்லியன் டாலர் அடிவாங்கியுள்ளது. அதாவது ஊரடங்கு சமயத்தில் இறக்குமதி அதிகமாக இருந்தது. இப்போது ஏற்றுமதி அதிகமாகியுள்ளது. இந்த ஆடு புலியாட்டம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

இராணுவம் தொடர்பான செய்திகள் என்பது 98 சதவிகிதம் கிளர்தெழுச் செய்யும் உணர்வுகளுடன் கூடிய செறிவூட்டப்பட்ட செய்திகளும், உள்ளே இரண்டு சதவிகிதம் உண்மைச் செய்திகளும் தான் இருக்கும். ரொம்பவும் உணர்ச்சி வசப்படாதீர்கள்.

இப்போது இந்தியாவும் சீனாவும் இங்கி பாங்கி விளையாட்டு விளையாண்டு கொண்டு இருக்கின்றார்கள். இது போருக்கான ஒத்திகை அல்ல. நான் உன்னிடம் இருந்து இவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறேன்?. நீ இப்படியெல்லாம் எனக்கு எதிராக இந்நத்த இடங்களில் பேசக்கூடாது? நான் தெற்கு ஆசியாவில் அண்ணாத்தே. நீ எப்போதும் என் சின்னத்தம்பி தான் என்பது போன்ற மறைமுக நிர்ப்பந்தங்களை அளிக்கவே இந்த டகால்டி வேலையை லடாக் பகுதியில் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் அவர்களின் கனவுத்திட்டமாக ஒரே ரோடு, ஒரே சாலை, ஒரே இணைப்பு என்ற ஆப்ரிக்கா வரைக்கும் சென்று சேர்வது கனவாக மாறி போட்ட காசு வாய்க்கரிசியாக மாறிவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. இந்தச் சமயத்தில் கூட அமெரிக்கா தான் வேகமாகச் சீனா ஜவான்கள் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்று வெளியிடுகின்றது.

சீன அதிகாரத்திற்கு மக்கள் மேல் கூட அக்கறையில்லை. தன் ஆளுமை சீன மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போல உலக மக்களும் இனி ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று தான் மாமல்லபுரம் வந்த மகான் மறைமுகமாகச் சொல்ல வருகின்றார்.

தற்போது இந்தியாவிற்கு இருக்கும் ஒரே பலம் சீனா மேல் உலக நாடுகளில் முக்கால்வாசி நாடுகள் கொலை காண்டாக உள்ளது. எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எவரும் வாயைத் திறக்க முடியாத அளவிற்குச் சீனாவை நம்பித்தான் ஒவ்வொரு நாடும் தத்தமது உற்பத்தித்துறைகளைப் படு மோசமாக வைத்துள்ளது.

சீனாவிற்கு எப்போதும் பணம் மட்டும் தான் முக்கியம். சாதி, மதம், கடவுள் என்பது எல்லாமே சீனர்களைப் பொறுத்தவரைப் பணம் மட்டுமே. கொள்கை என்பதோ அறம் என்பதோ, உபதேசம் போன்ற விசயங்களோ அவர்கள் தின வாழ்க்கையில் இல்லை. அரசியல் தலைகளிடம் அப்படியெல்லாம் இந்த உலகில் வார்த்தைகள் உண்டா? என்று கேட்கும் அளவிற்கு நல்லவர்கள்.

செயல்பாடுகளும், உழைப்பும் இத்துடன் அபகரிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற தொல்லை நோக்குப் பார்வையும் கொண்டவர்கள் சீனர்கள். சீனப் பொருட்கள் இறக்குமதியாகுவதில் இந்தியாவில் கொல்கத்தா துறைமுகத்தின் வாயிலாகத்தான் 20 சதவிகிதம் வந்த கொண்டிருக்கிறது.


கருமுத்து தியாகராஜன் செட்டியார்


Friday, June 19, 2020

கருமுத்து தியாகராஜன் செட்டியார்

கருமுத்து #தியாகராஜன்_செட்டியார், 

June  16, 1893 -July  29, 1974)

கருமுத்து தியாகராஜன் செட்டியார் கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர்.

வித்தகத்தால், வியத்தகு செயலால் ,
மேன்மை தரும் அறிவால்,
மேதினியில் நின் பெயர் நிலைத்திட்டது.

Thursday, June 18, 2020

எனக்கு இல்லையா கல்வி ஆவணத்திரைப்படம் பாரதி கிருஷ்ணகுமார் A Documenta...


  • உங்கள் வீட்டின் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களுடன் இந்தப் படத்தை பொறுமையாகப் பார்க்கவும்.  கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நான் பேசி வெளிவர வேண்டிய தமிழக கல்வித்துறை குறித்து காணொளிக் காட்சி தவிர்க்க முடியாத காரணத்தால் வருகின்ற ஞாயிறு அன்று வருகின்றது.  இந்தக் காணொளிக் காட்சி நேற்று தான் பார்த்தேன்.  எங்கள் வீட்டில் மகள்களுடன் அமர்ந்து பார்த்தோம்.



Wednesday, June 17, 2020

கொரானா நினைவுகள் - June 2020

சுய ஊரடங்கு 5.0 - 73

Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் ஜுன் 30  வரை)

கொரோனா தொற்று நோயினால் அரசாங்கம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இந்த நேரத்தில் தளர்வு இருந்த போதிலும் இது போன்ற சமயங்களில் நடக்கும் மரணம் என்னுள் அதிகப் பாதிப்புகளை உருவாக்குகின்றது.

சமூகத்தில் பிரபல்யம், அதிகப் பொருளாதார வசதிகள் கொண்டவர் என்ற பாரபட்சமின்றி அனைவரும் அனாதை போலவே மாறுகின்றார்கள். வசதிகள் இல்லாத வீட்டில் ஈமச் சடங்கு எப்படியிருக்குமோ? அப்படித்தான் உள்ளது. வீட்டுக்கருகே மிகப் பெரிய கோடீஸ்வரன் குடும்பத்தில் ஒரு பெண்மணி சில தினங்களுக்கு முன் இறந்தார். வகைவகையான வெளிநாட்டுக் காரர்கள் வந்து கொண்டேயிருந்தது. வந்தார்கள். வெளியே நின்றார்கள். தூரமாக நின்று கொண்டார்கள். முகத்தில் கட்டியுள்ள முகக் கவசத்துடன் நான் வந்தேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடமே பறந்து சென்று விட்டார்கள்.

பிணம் ஏற்றப்பட்ட வாகனத்தில் உள்ளே எவரும் அமர முடியாது. பின்னால் சில நபர்கள் மட்டுமே செல்கின்றார்கள். குறுகிய நேரத்திற்குள் மொத்த வீட்டையும் மருத்துவமனையைச் சுத்தம் செய்வது போலவே செய்கின்றார்கள். நம்மோடு வாழ்ந்தவர், நம்மோடு ஒன்று கலந்து இருந்தவரின் உடல் என்பது கொரானா பயத்தால் எடுத்தால் போதும் என்கிற அளவிற்குக் கணவனை, மனைவியை, சகோதரர்களை, மற்ற உறவினர்கள் அனைவரும் மாற்றிவிடுகின்ற சோகத்தைப் பல இடங்களில் பார்த்தேன்.

***

கொரானா காலத்தில் நான் வியந்த மற்றொரு விசயம் முகக் கவசம். அரசாங்கம் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்கிறார்கள். அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் என்கிற வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். ஆனால் இந்த முகக் கவசம் படும் பாடு சொல்லி மாளாது. எதில் தயாரிக்கின்றார்கள் என்பது முதல் எதற்காக அணிகின்றோம் என்பதனைப் பற்றி துளியும் கவலைப்படாமல் மக்கள் முகக் கவசத்தையும் கையாள்வதைப் பார்க்கும் சிரிக்கத் தான் தோன்றுகின்றது.

1. பத்து ரூபாய்க்கு மூன்று என்கிற ரீதியில் விற்கப்படுகின்றது. அந்தத் துணி கவசமே ஆரோக்கியமாக இருக்குமா? என்பதே பெரிய கேள்விக்குறி.

2. தரமான முகக் கவசம் என்பதனைப் பற்றி எவருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் ரூபாய் 100க்கு மேல் அதனை வாங்கி அணிய எவரும் விரும்பவில்லை.

3. முகத்தில் பாதுகாப்பு (முக) கவசம் உள்ளது என்கிற பெயரில் வாய்க்குக் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது.

4. முகக் கவசத்தை விட அருகே செல்லாதே. தொட்டுப் பேசாதே என்பது தான் முக்கியம் என்பதனை மறந்து வாகனங்களில் மூன்று பேர்கள் நெருக்கியடித்துப் பயணிக்கின்றார்கள்.

5. என்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிமிடம் வரைக்கும் கொரானா குறித்து, வைரஸ் குறித்து, எப்படிப் பரவுகின்றது, என்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதனைப் பற்றி அறிந்தவர்கள் பத்து சதவிகிதம் கூட இருப்பார்களா? என்பது சந்தேகமே.

6. முகக் கவசம் தயாரிப்பு என்பது மிகப் பெரிய தொழிலாக மாறியுள்ளது. இதில் உருவான இடைத் தரகர் கூட்டம் என்பது மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

7. சீனாவுடன் முட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சமயம் வரைக்கும் தரமான முகக் கவசமென்பது சீனாவை நம்பித்தான் இந்தியச் சந்தை உள்ளது தான் முக்கியமான ட்விஸ்ட்.😏

***
தற்போதைய நீதிமான்களுக்கு இபிகோ விற்கும் தொடர்பில்லை என்பது போல அவர்களின் தீர்ப்புகளுக்கும் பொது மக்களின் உண்மையான வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்பதாகத்தான் சமீப டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்ற உத்தரவும், ஆன் லைன் வழியாக விற்பனை செய்வதை மாநில அரசாங்கமே முடிவு செய்து கொள்ளலாம் என்பதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் தமிழக அரசு ஊரடங்கு சமயத்தில் மதுக்கடைகளைத் திறந்தது? 
1. கள்ளச்சாராயம் விற்பனை உருவாகத் தொடங்கியது. 
2. அரசு நிர்வாகத்திற்குப் பணம் தேவை. 
3. மது ஆலைகள் இயங்க வேண்டும். 
4. சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முக்கியம். 
5. அரசியல்வாதிகளின் மறைமுக வருமானம் பாதிக்கப்படக்கூடாது 
என்பது போன்ற பல விசயங்களை அடுக்க முடியும்.

ஆனால் மதுக்கடைகளைத் திறக்கும் போது நீதிமன்றம் போட்ட ஒவ்வொரு உத்தரவுகளும் இப்போது நகைப்புக்குரியதாக மாறிவிட்டது. 
1. இந்த நேரத்தில் தான் கடை திறக்க வேண்டும். 
2. ஆதார் அட்டை எண் வாங்க வேண்டும். 
3. வயதுக்குத் தகுந்தாற் போல ஒதுக்கப்பட்ட நேரத்தில் மது வழங்க வேண்டும். 4. குடைபிடித்து வர வேண்டும். 
5. இரவு ஏழு மணிக்கு மேல் விற்பனை கூடாது.
ஆனால் நடைமுறைச் சிக்கல் பின்வருமாறு உள்ளது.

1. பார் திறக்கக்கூடாது என்ற காரணத்தால் கூட்டமில்லை. 
2. வாங்கிச் செல்லும் மதுப் பாட்டில்களை இருட்டாக இருக்கும் இடங்களில் கும்பலாக உட்கார்ந்து அங்கேயே அருந்தி அங்கேயே தூக்கி எறிந்து விட்டுச் செல்லும் போக்கு உருவாகியுள்ளது. 
3. இரவு 7 மணிக்கு மேல் பார் களில் பணிபுரிந்த நபர்கள் மூலமாக ஒரு பாட்டிலுக்கு 50 முதல் 100 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யும் போக்கு.
அரசாங்கத்திற்கு வரக்கூடிய வருமானம் அனைத்தும் தனிநபர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

மதுக்கடைகளுக்கு அருகே இருக்கும் பெட்டிக்கடைகள் ஸ்டாக் வைக்கும் இடமாக மாறியுள்ளது. எந்த மதுக்கடைகளிலும் செயல்படும் நேரங்களில் கூட்டம் இல்லை என்பதற்கு முக்கியக் காரணம் அதனை வாங்கிக் கொண்டு சென்று அருந்துவதற்குள் பாதிப் போதை இறங்கி விடுகின்றது என்கிறார்கள் மதுப்பிரியர்கள்.

பிரியமான நீதிமான்களே உங்களின் பார்வையும், நீங்கள் வாழும் வாழ்க்கையும் நிஜமான இந்தியக் குடிமகன்களுக்குத் தொடர்பில்லாத சமாச்சாரம் என்பதால் எப்போதும் போல கோக் பெப்ஸி பானங்களைத் தடைசெய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர் மேல் 5 லட்சம் அபராதம் என்று சொல்லி எவரும் இந்தப் பக்கம் இனி வருவீர்களா? என்பது போலவே இருக்கட்டும்.

இந்தியாவில் கடைசி நம்பிக்கையாக இருக்கும் உங்கள் கட்டிடம் இன்றைய நிலையில் நீதி என்ற வார்த்தைக்கும் நிதி என்ற வார்த்தைக்கும் இடையே தொங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.


பத்தாம் வகுப்பு - Corona Batch 2020



Monday, June 15, 2020

திருமதி பீலா ராஜேஷ்



பீலா ராஜேஷ் மாற்றம்; தமிழகச் சுகாதாரத்துறைச் செயலராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது ஏன்?

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 44999 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். 399 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். தினமும் சுமார் 1,999 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். சென்னையில் மட்டும் 29999 நோயாளிகளுக்கு மேல் இருக்கிறார்கள்.

Saturday, June 13, 2020

பத்தாம் வகுப்பு - Corona Batch 2020

சுய ஊரடங்கு 5.0 - 72



Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் ஜுன் 30  வரை)

கொரானா குறித்து 71 பதிவுகள் எழுதி முடித்த போது ஐந்தாவது ஊரடங்கு தொடங்கியது.  தொடங்கி இன்றோடு 13 நாட்கள் முடியப் போகின்றது. குரல் வழிப் பதிவு என்றொரு புதிய பாதை அறிமுகம் ஆனதால் தொடர்ந்து எழுதாமல் இருந்த விசயங்களை இப்போது பதிவு செய்து விடுகின்றேன்.

இந்த வருடம் கிண்டில் போட்டியில் கலந்து கொள்ளும் போது நிச்சயம் நம் கல்வித்துறை, கல்விமுறை, ஏற்கனவே இருந்த அமைப்பு, மாறிய அமைப்பு, சாதகம், பாதகம், எதிர்பார்ப்புகள் போன்ற அனைத்தையும் ஆவணப்படுத்தி பெரிய புத்தகமாக எழுத நினைத்து இருந்தேன்.  ஆனால் இந்த வாரம் குரல் பதிவில் ஆன் லைன் கல்வியும் ஆஃப் லைன் தமிழகக் கல்வித்துறையும் என்ற தலைப்பில் இந்த வாரத் தலைப்புச் செய்தியாகப் பேசியுள்ளேன். ஞாயிறு அல்லது திங்கள் அன்று வெளிவரும்.


Monday, June 08, 2020

அச்சு ஊடகங்களை அலற வைத்த கொரோனா Tamilnadu Head line news



கொரானாவின் நான்காவது ஊரடங்கின் போது தமிழகத்தில் ஒரு அதிசயம் நடந்தது. தமிழகத்திலிருந்து வெளிவரும் அச்சு ஊடக முதலாளிகள் ஒன்று சேர்ந்து பாரபட்சமின்றி தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் சில முதலாளிகள் அதில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். ஒரு நூற்றாண்டுக் காலப் பாரம்பரியம் கொண்டு மக்கள் விருப்பத்தில் முன்னிலையில் இருக்கும் தினசரி பத்திரிக்கைகள் முதல் வாரம் தோறும் சில லட்சம் பிரதிகள் விற்கும் வார இதழ்கள் வரைக்கும் கடந்த பத்து வாரத்தில் மிகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்து விட்டன. 

அச்சடித்த பத்திரிக்கைகளும், இதழ்களும் அச்சகத்திலேயே இருக்கும் சூழல் உருவானது. தடைகளைத் தாண்டி தமிழகம் எங்கும் வந்த போதிலும் கொரானா பயத்தால் விநியோகிப்பவர் யாருமில்லாமல் பத்திரிக்கைகள் அங்கங்கே விநியோகிக்காமல் தேங்கிப் போயின.  பல முதலாளிகள் அழாத குறையாகப் பேட்டி கொடுத்தனர்.


Friday, June 05, 2020

ஐந்தாவது கொரானா ஊரடங்கு என்பது ...........



17 நாட்கள்  என்று இயல்பாகத் தொடங்கியது. அடுத்தடுத்து தொடர்ந்து இன்று ஐந்தாவது ஊரடங்கு தொடங்கியுள்ளது. மூன்று அட்டைப்படங்கள் உருவாக்கியிருந்தேன். கடைசியாக 68 நாட்கள்.  அறிவிப்பைக் கேட்டவுடன் எரிச்சலுடன் சிரிப்பு வந்து விட்டது.  ஆர்வம் போய்விட்டது.  அடுத்த மாதத்திற்குப் பின்பு இது தொடருமா? இல்லையா என்பது இப்போது உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. காத்திருப்போம்?