Friday, October 30, 2020

நம்பிக்கைத் துரோகம் நடத்தும் பாடமிது

இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைத் துரோகம் நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறியுள்ளது. தப்பித்துப் பிழைத்துக் கொள் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதனை நாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அது எப்போதும் போலவே அதன் வேலையை நடத்திக் கொண்டே தான் இருக்கின்றது.

நாம் தான் அதனைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை.


Wednesday, October 28, 2020

உயிரைப் பறித்த சொந்த வீட்டுக் கனவுகள்

தங்களுக்கென்று ஓர் சொந்த வீடு என்பது வெறும் கனவல்ல. அது நடுத்தரவர்க்கத்தின் லட்சியம், சமூக அங்கீகாரம். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் மாட்டிக் கொண்டு அவஸ்த்தைப்படுபவர்கள் தான் அதிகம். அவஸ்த்தைப்பட்டு தடம் மாறியவரின் உண்மைக் கதையிது. மனைவியை இழந்து, தொழில் இழந்து, மொத்த வாழ்க்கையையும் இழந்த ஒரு மனிதனின் கதையிது.



 

Tuesday, October 27, 2020

கவனிக்கும் கற்றுக் கொடுக்கும் கண்காணிக்கும்

சில்வியா பிளாத்

" கடவுள் நம்பிக்கைகள், பிற நம்பிக்கைகள் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துவது விடக் காலத்தின் மீது நம்பிக்கை வைப்பது எளிது"

காலம் -

கவனிக்கும்

கற்றுக் கொடுக்கும்

கண்காணிக்கும்

காத்திருக்கச் சொல்லும்

//


Monday, October 26, 2020

என் நம்பிக்கை. என் விருப்பம்.

ஒரு முழம் செவ்வந்திப் பூ ரூபாய் 50, மல்லி, முல்லை ரூபாய் 60. சாதாரண உதிரிப்பூக்கள் முதல் எல்லாவிதமான பூக்களும் ஐம்பது ரூபாய்க்குக் குறைவாக இல்லை. மாவிலை தொடங்கி வாழையிலை வரைக்கும் உண்டான முறை சாரா தொழில்கள் மூலம் அடையும் சாதாரண மனிதர்கள் பெறும் லாபங்கள் ஒரு பக்கம். மதம் சார்ந்த பண்டிகைகள் வரும் போது மக்களின் மகிழ்ச்சியும் ஒன்றிணையும் தன்மையும் துயரங்களை மறந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்வதாகவே ஒவ்வொரு பண்டிகைகளும் உள்ளது.


Saturday, October 24, 2020

ஆவணப் பேச்சுகள்


தொடர்ந்து கனடாவில் வாழும் தமிழரசன் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தால் செப்டம்பர் 7 2020 அன்று யூ டியூப் பக்கம் ஜோ பேச்சு உருவானது.  இதுவரையிலும் 1,702 பேர்கள் 88.7 மணி நேரம் ஜோ பேச்சைக் கேட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் நண்பர் சுவாமி அறிமுகம் செய்து வைத்த காரணத்தால் செய்தியோடை அறிமுகம் ஆனது. ஜோதிஜி பேச்சு என்ற JothiG Pechu Podcast அக்டோபர் 6 2020 அன்று பயணம் தொடங்கியது. மொத்தம் 53 பத்து நிமிடப் பேச்சுகள். இதுவரையிலும் 1000 பேர்கள் கேட்டு உள்ளனர்.  சில தினங்களுக்கு முன் ஆப்பிள் தன் ஐ ட்யூன் வழியாகக் கேட்க அங்கீகாரம் கொடுத்துள்ளது.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களை என் ஓய்வு நேரங்களை ஒழுங்காக செலவழித்துள்ளேன்.

JothiG Pechu Podcast மூலம் இந்தியச் சுதந்திர வரலாற்றை அதன் அடிப்படை விசயங்களை 44 அத்தியாயங்கள் மூலம் முழுமையாகப் பதிவு செய்து முடித்து விட்டேன்.

 

Thursday, October 22, 2020

7.5 - அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ ஒதுக்கீடு

இதனை நீங்கள் எப்படி உச்சரிப்பீர்கள்? ஏழு புள்ளி ஐந்து அல்லது மருத்துவ இட ஒதுக்கீட்டுக்குத்  தமிழக அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள் பலன் பெறும் திட்ட சதவிகிதம் அல்லது ஏழரை.

ஆனால் கடைசி வார்த்தை தான் இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது? ஏன்?

தமிழக சட்ட மன்றத்தில் செப்டம்பர் 15 அன்று இந்தச் சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. 40 நாட்கள் அருகே வரப் போகின்றது. முடிவு தெரியவில்லை? என்ன காரணம்?

1. நீட் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் கபடி ஆடிக்கொண்டிருப்பதைத் தடுக்க வேண்டும். அதிமுகவிற்கு இன்னமும் கிராம ஓட்டுச் சதவிகிதம் அப்படியே தான் உள்ளது.  கிராமப்புற மாணவர்கள் அரசுப்பள்ளியில் படித்தாலும் மருத்துவத்துறை சார்ந்த கனவு காண்பது அரிது. இன்றைய சூழலில் படிப்படியாக அந்த எண்ணம் அரசு பள்ளிக்கூட மாணவர்களிடம் பல்வேறு விதங்களில் விதைக்கப்பட்டாலும் நீட் குறித்து ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட எதிர்மறை சிந்தனைகளாலும், நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த புரிதலற்ற தன்மையினாலும், கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களுக்குத் தொடர்பு இல்லாத தன்மையினாலும்,  நீட் பரிட்சைக்கு முன்னும் பின்னும் நடக்கும் அலோங்கோல காட்சிகள் உருவாக்கிய தாக்கத்தினாலும் நாம் இந்தப் பக்கமே போகத் தேவையில்லை என்பதாகத்தான் பெரும்பாலான கிராமப்புற அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மனத்தில் அச்சம் இன்னமும் விலகாமல் உள்ளது. வெற்றி பெறக்கூடியவர்களும் முதல் முறை எழுதி வெல்பவர்கள் குறைவு. இதற்கு மேலாகத் தனிப்பட்ட முறையில் கோச்சிங் சென்டர் செல்லாமல் எழுதி வெல்பவர்களும் மிகவும் குறைவு என்ற பல காரணிகள் இதற்குப் பின்னால் உள்ளது.  

2. மொத்தத்தில் நம்பிக்கையை விதைப்பவர்களும் யாருமில்லை. தமிழக அரசுக்கும் அதற்காகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் கவலையில்லை. அப்படியே செய்யக்கூடிய முயற்சிகளையும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்துச் செல்வதும் இல்லை. ஒரு பக்கம் வழியிருந்தால் பத்துப் பேர்களாவது வெல்ல முடியும். எட்டுத் திசைகளையும் மூடி வைத்த பின்பு கடைசி ஆயுதமாக விவசாயி இந்த ஏழரையைக் கொண்டு வந்தார்.

3. இந்த ஏழரை கிராமப்புற மாணவர்கள் மேல் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டது அல்ல. ஏற்கனவே தண்டச் செலவாக வருடந்தோறும் 300 முதல் 350 கோடி வரை அரசுப் பள்ளிக்கூட மாணவர்களை தனியார் பள்ளியில் அரசே பணம் கட்டி சேர்க்கும் அசிங்கங்கள் இங்கே வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஏழரைக்குள் அப்படி தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் சலுகை உண்டு என்ற சிறப்பு விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.  என்ன காரணம்? ஆண்டவனுக்குத் தான் தெரியும்?

4. இப்போது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது. ஆனால் ஆளுநருக்கு யார் உத்தரவு கொடுப்பார்கள் என்பதனை இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள். அவர்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களைச் சந்திப்பதாக எண்ணமும் இல்லை என்பதாகத்தான் தெரிகின்றது. என்ன செய்யலாம் என்று யோசித்து அடுத்த ஆயுதமாக அனுமதி வழங்கும் வரை கலந்தாய்வுக் கூட்டத்தை நிறுத்தி வைக்கின்றோம் என்று வாணவேடிக்கையை நிகழ்ச்சியுள்ளனர்.

5. இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? தமிழக சட்டமன்றத் தேர்தல் மிக அருகில் வர இருக்கும் நிலையில் பேரங்கள் என்பது வெளியே தெரிந்து தெரியாமல் எல்லாப் பக்கங்களிலும் பலவிதமான காய்கள் நகர்த்தப்படும். காரியம் சாதிக்க விரும்புபவர்கள் ஒவ்வொரு சூழலையும் தங்களுக்குச் சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். அரசியலில் சூழல் முக்கியம். தவறவிட்டால் மீண்டு எழ அடுத்த ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். பாஜக என்ன எதிர்பார்க்கக்கூடும்?

6. பத்து சதவிகித இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மதிய நேரத்தில் உடனே ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி அடுத்த நாளே அரசு ஆணையாக வெளியிடப்பட்டு உடனே அமுலுக்கும் வந்துவிட்டது. ஆனால் தமிழகம் இங்கு வாய்ப்பு இல்லை என்று கதவைச் சார்த்தி வைத்துள்ளது. வாய் மொழி உத்தரவாகச் சான்றிதழ் வழங்கக்கூடாது என்பது தான் இன்று வரையிலும் இங்கே உள்ளது. எங்களுக்கும் வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார்கள். இப்போது வைத்துச் செய்யக் காத்திருந்த நேரம் இப்போது கிடைத்துள்ளது. இது தவிரக் கூட்டணி பேரங்கள் என்பது தனிப் பாதையில் செல்லக்கூடியது. ஆட்சி அமையும் பட்சத்தில் என்ன வேண்டும் என்பதும், தேர்தலின் போது என்ன எதிர்பார்க்கின்றோம் என்பது போன்ற பல விசயங்கள் ஊடகங்களுக்கு நிச்சயம் தெரிந்து இருந்த போதிலும் எந்தப் பக்கமும் வலிக்காத மாதிரியே வேறு விவகாரங்களை வைத்தே விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

7. விவசாயிக்கு என்ன லாபம்? எதிர்க்கட்சிகள் நீட் குறித்து இனி பேச முடியாது. நாங்கள் சட்டம் கொண்டு வந்து விட்டோம். நிச்சயம் கிராமப்புற மாணவர்கள் 300 முதல் 350 மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று ஓங்கி அடிக்க முடியும்.  பாருங்கள் இதற்கும் காரணம் பாஜக என்று தான் திசைகாட்டியைத் திருப்பி தொடர்ந்து அரசியல் களத்தைச் சூடாகவே வைத்திருக்க முடியும். காரணம் அரசியலில் ஒரு விசயத்திற்கு தீர்வு கிடைத்து விட்டது என்பது முக்கியமல்ல. நாங்கள் இலக்கை அடைந்து விட்டோம் என்பது முக்கியம் என்றாலும்  அதைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கக் கூடிய சூழலை உருவாக்கத் தெரிய வேண்டும் என்பது மிக முக்கியம். அது தான் இங்கே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஆளுநர் ஒப்புதல் அளித்தால் நாங்கள் வென்றோம்

ஒப்புதல் அளிக்காவிட்டால் பாஜக அரசு காரணம்

எதிர்க்கட்சிகள் இது போன்ற திட்டங்களை அவர்கள் ஆட்சியில் கொண்டு வந்தார்களா?

பல பக்கம். பல விசயங்கள். வலிக்காமல் தொடர்ந்து குத்துவது  என்பது சிலருக்கு கை வந்த கலை. 

விவசாயி எளிய விவசாயி அல்ல. கார்ப்பரேட் விவசாயி. லாபம் பெறுவதை விட வேறு எவரும் பேரம் பேசும் சூழலை அனுமதிக்க விடாமல் தன் லாபத்தில் குறியாக இருப்பவரை நீங்கள் வேறு எந்தப் பெயர் சொல்லி அழைப்பீர்கள்?

தூண்டுதல் | Self Motivation

தாழ்வு மனப்பான்மை | Inferiority Complex Vs Superiority Complex

விலகி நில்லுங்கள் | Stay Away

கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்த கொரோனா

ஏன் இங்கே இத்தனை கற்பழிப்புகள்? | Why so many rapes here?

Tuesday, October 20, 2020

கனத்த தோல் கொண்ட தமிழகக் கல்வித்துறை அமைச்சகத்திற்கு


கனத்த தோல் கொண்ட தமிழகக் கல்வித்துறை அமைச்சகத்திற்கு

2020 பெருந்தொற்று என்பது மறுக்க முடியாத உண்மை. பள்ளிக்கூடம் திறக்கப்பட்டால் நிச்சயம் பாதிப்பு உருவாகி பரவும் கூடவே அது மரணங்களை அதிகப்படுத்தும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதனைக் காரணமாக வைத்துக் கொண்டு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய மறப்பது நியாயமா? 


Saturday, October 17, 2020

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தான் இப்போது தமிழகத்தின் எம்.என். நம்பியார். இந்தச் சமயத்தில் ஒன்று இரண்டு எம்ஜிஆர் இல்லை. எந்தப்பக்கம் பார்த்தாலும் பல நூறு எம்ஜிஆர் கள் முளைத்து உள்ளனர். நேற்று வந்த காளான்கள் முதல் நாளை வரப் போகும் தேர்தலில் தன் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக இன்ஸ்டண்ட் வியாதியஸ்தர்களும் இதற்குள் அடக்கம்.

சரி நாம் நம்பியார் தவறானவர் என்றே இப்போதே ஒரு முடிவுக்கு வந்து விடுவோம்.

Friday, October 16, 2020

சாதிக்கப் போகும் ஸ்வர்ணலதா - கடிதம்

நாம் சில ஆவணங்களைப் பத்திரப்படுத்த இப்போது எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் சிலவற்றைப் பொதுவெளியில் வைப்பது நல்லது. காரணம் இது எனக்கு கிடைத்த அங்கீகாரம் அல்ல.  

இந்தக் கடிதத்திற்குப் பின்னால் ஒரு சிறிய கதை உள்ளது.

நண்பர் கிரி மூலம் அறிமுகம் ஆனவர் நண்பர் (இப்போது வளைகுடா நாட்டில் இருக்கின்றார்) 

Tuesday, October 13, 2020

தமிழக கல்வித்துறை

தென் இந்திய  மாநிலங்களில் உள்ள கல்வித்துறை எப்படிச் செயல்படுகின்றது?  என்பதற்கும்  நம் தமிழ்ப்பிள்ளைகள் நிர்வாகத்தில் நடக்கும் தமிழ்நாட்டு நிர்வாகத்திற்கும் உண்டான அடிப்படை விசயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாமே  தலைகீழ் மாற்றம். கேரளாவில் மத்திய அரசின் அனைத்து கல்வி சார்ந்த நிதிகளை, திட்டங்களை அப்படியே பெற்று விடுகின்றார்கள். மத்திய மனித வளத்துறை இப்போது கல்வி அமைச்சகமாக மாறியுள்ள நிர்வாகம் என்ன எதிர்பார்க்கின்றார்களோ அதனை நிறைவேற்றி கூடுதலாக கல்வி  மாவட்டங்களைப் பிரித்து அதிகமாகவும் வாங்கி விடுகின்றார்கள். 


Monday, October 12, 2020

Jo Pechu - விலகி நில்லுங்கள் - Stay Away

நாம் ஒரு படைப்பை எளிதாக உருவாக்க முடியும். ஆனால் நம் படைப்பு வெற்றி என்பது அதனை உள்வாங்குபவர்கள் அளிக்கும் விமர்சனம் தான் அதற்கு மகுடம் சூட்டும். நான் எப்போதும் "வலையுலக சுஜாதா" என்று கொண்டாடும் முரளி அளித்த விமர்சனமிது.

***

Thursday, October 08, 2020

சமூகத்தை உங்கள் பார்வையில் பதிவு செய்யுங்கள்

மதம்,சாதி,கட்சி என்பதற்குள் நின்று ஆடவேண்டிய களம் ஃபேஸ்புக். கூட்டம் அதிகம். உணர்தல் குறைவு. அழுத்தம் தாங்கமுடியாது என்பவர்கள் இன்னமும் வலைபதிவுகளை விட்டு வெளியே வரவில்லை. யூ டியூப் சமாச்சாரம் ஆழ்கடலில் இருட்டுக்குள் நின்று பவளப்பாறையைக் கண்டடைவது போன்றது. நடிகர், நடிகைகள், இது தவிர சட்டமன்றத் தேர்தல் அருகே வந்து கொண்டிருப்பதால் அதகளமாக களமாக மாறியுள்ளது. (நடிகையின் மச்சம் மறைந்த மாயம்?. சட்டமன்றத் தேர்தலில் வெல்லப்போவதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் சேர்த்த சொத்துக்கள்)

கவர்ச்சித் தலைப்புகள் தலைதெறிக்க நம்மைப் போன்றவர்களை ஓட வைக்கின்றது. அது தான் பலரையும் ஓடி வரவும் வைக்கின்றது.

திடீர் தொழில் நுட்ப வல்லுநராக உருமாறியுள்ள மகளார் அவர்களை ஒரு புண்ணியவான் Ramachandra Krishnamoorthy  கொடுத்த அறிவுரையை வேதாவாக்காக பற்றிக் கொண்டு எனக்கு இனி ஒரு யூ டியூப் செய்து முடிக்க முன் பணம் இவ்வளவு தேவை என்று கறார் காட்டுவதால் கொரானா பயத்தின் காரணமாகப் பலவிதங்களில் வெளியே அலைய வேண்டிய பயணத்தைக் குறைத்துக் கொண்டிருப்பதைப் போல மகளைச் சமாளிக்க முடியாமல் என் பர்ஸ் வேகமாகக் காலியாகிவிடுகின்றது. என் வேகம் அவருக்கு லாபம்.

கடவுள் இந்த ஏழை எளிய தமிழ்ப்பிள்ளையின் மேல் கருணை காட்டி ஆஸ்திரேலியாவிலிருந்து Swamy Madike ஒருவரைப் பேச வைத்து வழிகாட்டி இந்தப் பக்கம் திருப்பினார். நானே ராஜா நானே மந்திரி. என் வேகத்திற்கு உகந்த எளிய தொழில் நுட்பம்.

மேலை நாட்டுக் கிறிஸ்துமஸ் என்பது திருப்பூருக்கு வசந்த காலம். ஆனால் முழுமையான கொரானா பயம் விலகாத காரணத்தாலும், அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டம் தரும் அச்சம், தனியார் மருத்துவமனைகள் செய்யும் "பணச் சேவை"கள் அனைத்தும் பயணத்தை, வேலைகளைக் குறைத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்கிற நிலையில் முடங்க வைத்துள்ளது. அலைபேசி உரையாடல் வழியே அனைத்தையும் முடித்து ஆக வேண்டிய நிலைக்கு வாழ்க்கை மாற்றியுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்னால் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கிய இந்த ஆங்கிலப் பொக்கிஷப் புதையலை (புத்தகப் பட்டியலைக் கீழே கொடுத்துள்ளேன்) மகள்களுக்கு அறிமுகம் செய்து வைத்த போது மீள் வாசிப்பு செய்து பார்த்தேன். பத்து நிமிடமாகத் தொடர் வாசிப்பாக இதனை இளையர்களுக்குக் கொடுத்தே ஆக வேண்டும் என்று இன்று முதல் தொடங்கியுள்ளேன்.

மாநிலத்தில் தர்மயுத்தம் நிலைமை நாளை மதியம் தெரியும்.

மத்தியில் அக்கா தம்பி பாசத்தின் அடுத்த நிலை விரைவில் தெரியும்.

நடப்பதைப் பற்றி உண்மைகளைப் பேசினால் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் காந்தி பெயர் கொண்டவர்களுக்கு காந்திக்கும் உண்டான வித்தியாசங்களை இந்தப் பேச்சு மூலம் பலவிதமாக உங்களால் உள்வாங்க முடியும். சுவாரசியமாக கிராமத்து மொழியில். 

மறைக்கப்பட்ட இந்தியச் சுதந்திர வரலாற்றின் அடி முதல் நுனி முதல் ஐந்து ஐந்து பேச்சாக ஒரு நாள் இடைவெளி விட்டு இந்தத் தளத்தில் வெளிவரும். ஒவ்வொன்றும் பத்து நிமிடப் பேச்சு.

இதில் Follow Button உள்ளது. எத்தனை நாட்களுக்குத் தான் அரசியல் விவாதங்களைத் தொடர்ந்து கேட்டுக் கண்காணித்துக் கவலைப்பட்டு மன அழுத்தம் உருவாகி, மீளமுடியாமல் ஆரோக்கியம் இழந்து.....

சரித்திரம் இங்கே அனைவரையும் பதிவு செய்யும்.

காலச்சக்கரம் நிகழ்வுகளை மறைக்காது. ஒழித்து வைக்கவும் விடாது.

என் கடன் பணி செய்து கிடப்பதே. Passion என்பது நம் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. மன அழுத்தத்தைத் தீர்க்கும் மாமருந்து.

இந்தியச் சுதந்திரம்:- மறைக்கப்பட்ட உண்மைகள் - Hidden truth details about India's Independece Story 1-2-3-4-5

https://anchor.fm/jothig


Wednesday, October 07, 2020

திருப்பூர் மொழி பேச்சு வடிவில்

ஆனந்த ரங்கம் பிள்ளை டைரிக் குறிப்புகள் புத்தக வடிவில் வந்துள்ளது. இப்போது பதினோராம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் ஒரு பாடமாக வந்துள்ளது. நேற்று மகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பல ஆச்சரியங்களை உள்வாங்க முடிந்தது. ஏறக்குறைய தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 25 வருடங்கள் அவர் எழுதியது தான் தென்னிந்திய வரலாற்றின் பதினெட்டாம் நூற்றாண்டின் முழுமையான சித்திரத்தை ஓரளவுக்கு உள்வாங்க முடிகின்றது. ஆனால் இன்று நாம் பெற்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள் என்பதனை பதிவு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. 

ஆனந்தரங்கம் பிள்ளை அடுத்த 300 வருடத்திற்குப் பின்பு பேசப்படுவோம் என்று நினைத்து எழுதியிருக்க மாட்டார். அவர் தன் சுயத் திருப்திக்காகவே, மன உளைச்சலை போக்குவதற்காகவே எழுதியிருப்பார் என்றே நினைக்கிறேன். 

பேச்சுக்கலையை விரும்புபவர்களுக்கு நிச்சயம் இதன் பலனளிக்கும். ஆப்பிள் ஐ போன் வரைக்கும் இந்தப் பேச்சு சென்று சேர்கின்றது இதன் தனித்தன்மை.😇

திருப்பூர் மொழி

https://anchor.fm/jothig



Monday, October 05, 2020

நீங்களும் கோடீஸ்வரர் தான்.

வேலையிழப்பு, தொழில் மந்தம், தொழில் நிறுத்தம், இழப்புகள், நிறைவேற்ற நினைத்த கனவுகள் நிராசையான வருத்தங்கள் என்று கொரானா கொடுத்த பாடத்திலிருந்து இன்னமும் தெளிய முடியாமல் இருப்பவர்களுக்கு நண்பர் உரையாடலில் தெரிவித்த கருத்துகள் உத்வேகமாக இருக்கக்கூடும்.

"கையில் கையுறை, ஹெல்மெட் போல கண்ணாடி கவசம் போட்டு அதற்குள் முககவசம் அணிந்து என் இருக்கையை விட்டு நகராமல் என் அறைக்கு எவரையும் வர விடாமல் கடந்த இரண்டு மாதமாக அலுவலகம் சென்று வந்த எனக்கும் எப்படி கொரானா வந்தது என்றே தெரியவில்லை. என்னை விட வீட்டில் அதிகம் பயந்த காரணத்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால் அங்குள்ள நெருக்கடியான சூழலை, சுகாதாரமற்ற செயல்பாடுகளை, அலட்சியமாக நடத்திய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களைப் பார்த்து வேறு வழியே தெரியாமல் கோவை தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிய சூழல் உருவானது".

"மொத்தம் 13 நாட்கள். முதலாளியிடம் வாங்கிய கடன் தொகை 3 லட்சம். என் கையில் இருந்த 4 நான்கு லட்சம். வீட்டுக்கு நான் வந்து சேர்ந்த போது பண இழப்பு, அதிகரித்த கடன், எல்லாவற்றையும் விட வழிகாட்ட ஆள் இல்லாமல் பணம் இல்லாதவர்கள் படும் பாடும், அரசின் அலட்சியமும், மேலிருந்து கீழ் வரைக்கும் இதனைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளை போன்றவற்றை முழுமையாகப் பார்த்த பின்பு நான் எப்படி உயிரோடு திரும்பி வந்தேன் என்பதே எனக்கே வியப்பாக உள்ளது".

"அரசு மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளில் எந்தத்தந்த வகைகளில் எப்படியெல்லாம் பணம் சாம்பாதிக்கலாம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு சுவாசிக்கும் கருவிகளைத் தலையில் கட்ட அவர்கள் செய்யும் பயமுறுத்தல்கள், வாங்க மறுத்தால் வாடகைக்கு நீங்க எடுத்துக் கொண்டு போகலாம் என்று முன் பணம் கட்டச் சொல்லும் அவலம் பார்த்து என் புத்தியே பேதலித்து விட்டது. நான் வைத்திருந்த காப்பீடு அனைத்தும் இவர்களிடம் செல்லுபடியாகவே இல்லை. பணத்தைக் கட்டு என்பதில் தான் குறியாக இருக்கின்றார்கள். எல்லாவற்றையும் கடந்து வந்து பின்பு என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்று தான்".

"கடந்த ஐந்து மாதத்தில் வருமானம் ஒன்றுமே இல்லையே தினமும் வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக் கொள்வதை விட தங்களைக் காப்பாற்றிக் கொண்டு கொரானா வராமல் வாழ்ந்தாலே போதுமானது. ஐந்து லட்சம் பத்து லட்சம் பணத்தையும் செலவளித்து இத்தனை அவமானத்தைப் பெறாமல் இருக்கின்றோமே என்று சந்தோஷமாக இருங்கள். திருப்பூரில் உள்ள முக்கிய முதலாளிகள் தெளிவாகக் கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொடுக்க வேண்டிய நபர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து தனி அறை வாங்கி ஜாலியாக குடும்பத்தோடு இருக்கின்றார்கள். மாநில அரசின் மருத்துவமனைக்கும் மத்திய அரசின் மருத்துவமனைக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்த போது நான் எவ்வளவு பெரிய தப்பு செய்துள்ளேன் என்பதே எனக்கு திருப்பூர் வந்த பிறகு தான் தெரிந்தது. நான் விசாரித்த ஒரு நபர் கூட கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனைபற்றி எனக்குச் சொல்லவே இல்லை. முப்பது வருடமாகப் பல்லாயிரம் கோடி வருமானம் உள்ள திருப்பூரில் ஏன் இவர்கள் ஈஎஸ்ஐ மருத்துவமனை திறக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு முயலாமல் இருக்கின்றார்கள் என்பதே அங்கே சென்று பார்த்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது".

••••

மொத்தத்தில் பத்து சதவிகித தனியார் பள்ளிக்கூடங்கள் மட்டுமே கொரோனா உருவாக்கிய நெருடிக்கடிகளை சமாளிக்கும் அளவிற்கு தொழில் நுட்ப வசதிகளை கொண்டு இருந்தது.  மற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் முதல் பணம் பறிக்க நடத்தப்படும் தனியார் பள்ளிகள் அனைத்தும் கொரோனா உருவாக்கிய அதிரடி மாற்றங்களை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். தடுமாறிக் கொண்டும் இருக்கின்றார்கள். இதன் பாதிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும். 2020 கல்வியாண்டில் மொத்தம் 15 லட்சம் பேர்கள் அரசு பள்ளிக்கூடம் பக்கம் வந்து சேர்ந்து உள்ளனர். 

சென்ற வருடத்தை விட 4 லட்சம் அதிகமான மாணவர்கள் வந்து உள்ளனர்.

இதுவரையிலும் அடையாத உச்சமிது.

#JoPechu

Sunday, October 04, 2020

கொரானா 5.0

 சம்பவம் 1


அவர் உள்ளூரில் சாயப்பட்டறையில் உயர் பதவியில் இருக்கின்றார். 20 வருடமாக நெருக்கமான தொடர்பில் இருந்தாலும் கொரானா தொடங்கியது முதல் அவர் மற்றொரு புனிதப் பணியைத் தொடங்கித் திக்குமுக்காட வைத்தார். உலகில் நடந்த அனைத்து கொரானா தொடர்பான விபரங்கள் முதல் உள்ளூரில் அரசு மருத்துவமனைகளில் நடக்கும் சமாச்சாரங்கள் வரைக்கும் உண்டான அனைத்துத் தகவல்களையும் ஃபார்வேர்டு செய்திகளை அனுப்பத் தொடங்கினார். மறுத்துப் பார்த்து, கெஞ்சிப் பார்த்தும் மசியவில்லை. காலையில் எழுந்ததும் ஐந்து நிமிடம் சுத்தம் செய்வது தான் முதல் பணியாக இருந்தது.

கொடூரமான செய்திகள் கூட அவருக்கு அல்வா துண்டு போலவே தெரிந்த காரணத்தின் உளவியலை இன்று வரைக்கும் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு வாரமாக செய்திகள் எதுவும் வரவில்லை. அழைத்துக் கேட்ட போது கொரானா தாக்குதலால் தலைகீழாக மாறிப் போயிருந்தார். இங்குள்ள அரசு மருத்துவமனைச் சென்று அவஸ்தைகள் பட்டு உள்ளுர் தனியார் மருத்துவமனை சென்று 25000 வரைக்கும் செலவழித்துக் கடந்த ஒருவாரமாகக் கோவை பெரிய தனியார் மருத்துவமனையில் சேர்ந்து நேற்று வரைக்கும் 3 லட்சம் செலவளித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களாம். உயிர்பிழைத்த பின்பு ஐந்து லட்சம் புராணம் பாடத் தொடங்கியுள்ளார்.

சம்பவம் 2

உறவினர். ஒரே மகன். அம்மாவுக்கு கொரானா. அனைவரும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பரிந்துரைக்க மறுத்து காரைக்குடி, மதுரை (மதுரை மீனாட்சி மிசன் உள்ளே நுழையத் தொடக்கத்தில் 50 000 அதன் பிறகு மற்ற செலவுகள் தனி. வேலம்மாள் தொடக்கமே ஐந்து இலக்கம்) சென்று பல லட்சங்கள் இழந்து நகைகளை அடகு வைத்துப் பல பேர்கள் அடிக்கப் போய் கடைசியாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து இப்போது அபாயக் கட்டத்தைக் கடந்துள்ளார். செலவு ஒன்றுமே இல்லை. அங்கு வழங்கும் சாப்பாடு வகைகளும் அருமை என்றார்கள்.

தீர்ப்பு

1. அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் (கல்வித்துறை, மருத்துவத்துறை) தொடர்பே இல்லை. சொல்லப் போனால் அரசு இவர்களிடம் எதையும் திணிக்க முடியாது. நாங்கள் உங்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையே? வந்தால் வா. வராவிட்டால் அழுக்கு அரசு மருத்துவமனைக்குப் போ. (இதுவே தான் கல்வித்துறையும்) சிம்பிள் லாஜிக். கௌரவம் பார்க்கும் எளிய தமிழ்ப் பிள்ளைகள் இருப்பதை எல்லாம் இழந்து விட்டு இது நோயா இல்லை நம்மைச் சுவைத்துப் பார்க்க வந்த காயா? என்று கதறுகின்றார்கள்.

2. கட்டாயம் தமிழ்நாட்டில் அரசு எட்டுக் கோடி தமிழ்ப்பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் எதையும் நல்லமுறையில் செய்து கொடுக்க வாய்ப்பில்லை. கட்டமைப்பு இல்லை. நம்மவர்கள் உணர்வதும் இல்லை. திமிர் எடுத்து தடித் தாண்டவராயர்கள் இ பாஸ் இல்லை என்றவுடன் அடுத்த நாளே கொடைக்கானலுக்குப் படையெடுத்துச் செல்லுக்கும் பக்கிகளை எந்த இபிகோ வைத்துத் திருத்த முடியும்?

கொரானா பாகம் 2 படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


நீச்சல்காரன் - இணையவானில் தமிழ் எழுத்துரு நட்சத்திரம்


5G - ஊழல் முதல் வளர்ச்சி வரை


எப்போது உழைப்பை நிறுத்துவது?


Saturday, October 03, 2020

நீச்சல்காரன் - இணையவானில் தமிழ் எழுத்துரு நட்சத்திரம்


7 செப்டம்பர் 2020

இந்தத் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கனடாவிலிருந்து தமிழரசன் அழைத்து இருந்தார். தோன்றும் போது நேரம் கிடைத்தால் அழைப்பார். இணைய உலகில் சுடுதண்ணி வலைபதிவு தெரியாதவர்கள் மிகவும் குறைவு. தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களை ஜனரஞ்சகமாக எழுதிப் பல ஆயிரம் வாசகர்களைப் பெற்றவர். அவரும் காரைக்குடியைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் ஐடி துறையில் பணிபுரிகின்றார்.




Friday, October 02, 2020

ஏன் இங்கே இத்தனை கற்பழிப்புகள்? | Why so many rapes here?

ட்விட்டர், டெலிகிராம் வாயிலாகப் பத்திரிக்கைகள், வார இதழ்கள், செய்தி ஊடகங்களின் முக்கியமான செய்திகளைப் பார்வையிட்டாலும் ஓரளவுக்கு (கள்ளக்காதல் செய்திகள் இன்றி) நாகரிகமான செய்திகளைத் தந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறை செய்திகளை யூ டியூப் வாயிலாக சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்லைன் மற்றும் சேமிக்கப்பட்ட செய்திகளை இடைவெளி விட்டுப் பார்ப்பதுண்டு.

Thursday, October 01, 2020

5G - ஊழல் முதல் வளர்ச்சி வரை

வேலையிழப்பு, தொழில் மந்தம், தொழில் நிறுத்தம், இழப்புகள், நிறைவேற்ற நினைத்த கனவுகள் நிராசையான வருத்தங்கள் என்று கொரானா கொடுத்த பாடத்திலிருந்து இன்னமும் தெளிய முடியாமல் இருப்பவர்களுக்கு நண்பர் உரையாடலில் தெரிவித்த கருத்துகள் உத்வேகமாக இருக்கக்கூடும்.

"கையில் கையுறை, ஹெல்மெட் போல கண்ணாடி கவசம் போட்டு அதற்குள் முககவசம் அணிந்து என் இருக்கையை விட்டு நகராமல் என் அறைக்கு எவரையும் வர விடாமல் கடந்த இரண்டு மாதமாக அலுவலகம் சென்று வந்த எனக்கும் எப்படி கொரானா வந்தது என்றே தெரியவில்லை. என்னை விட வீட்டில் அதிகம் பயந்த காரணத்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால் அங்குள்ள நெருக்கடியான சூழலை, சுகாதாரமற்ற செயல்பாடுகளை, அலட்சியமாக நடத்திய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களைப் பார்த்து வேறு வழியே தெரியாமல் கோவை தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிய சூழல் உருவானது".

"மொத்தம் 13 நாட்கள். முதலாளியிடம் வாங்கிய கடன் தொகை 3 லட்சம். என் கையில் இருந்த 4 நான்கு லட்சம். வீட்டுக்கு நான் வந்து சேர்ந்த போது பண இழப்பு, அதிகரித்த கடன், எல்லாவற்றையும் விட வழிகாட்ட ஆள் இல்லாமல் பணம் இல்லாதவர்கள் படும் பாடும், அரசின் அலட்சியமும், மேலிருந்து கீழ் வரைக்கும் இதனைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளை போன்றவற்றை முழுமையாகப் பார்த்த பின்பு நான் எப்படி உயிரோடு திரும்பி வந்தேன் என்பதே எனக்கே வியப்பாக உள்ளது".

"அரசு மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளில் எந்தத்தந்த வகைகளில் எப்படியெல்லாம் பணம் சாம்பாதிக்கலாம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு சுவாசிக்கும் கருவிகளைத் தலையில் கட்ட அவர்கள் செய்யும் பயமுறுத்தல்கள், வாங்க மறுத்தால் வாடகைக்கு நீங்க எடுத்துக் கொண்டு போகலாம் என்று முன் பணம் கட்டச் சொல்லும் அவலம் பார்த்து என் புத்தியே பேதலித்து விட்டது. நான் வைத்திருந்த காப்பீடு அனைத்தும் இவர்களிடம் செல்லுபடியாகவே இல்லை. பணத்தைக் கட்டு என்பதில் தான் குறியாக இருக்கின்றார்கள். எல்லாவற்றையும் கடந்து வந்து பின்பு என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்று தான்".

"கடந்த ஐந்து மாதத்தில் வருமானம் ஒன்றுமே இல்லையே தினமும் வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக் கொள்வதை விட தங்களைக் காப்பாற்றிக் கொண்டு கொரானா வராமல் வாழ்ந்தாலே போதுமானது. ஐந்து லட்சம் பத்து லட்சம் பணத்தையும் செலவளித்து இத்தனை அவமானத்தைப் பெறாமல் இருக்கின்றோமே என்று சந்தோஷமாக இருங்கள். திருப்பூரில் உள்ள முக்கிய முதலாளிகள் தெளிவாகக் கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொடுக்க வேண்டிய நபர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து தனி அறை வாங்கி ஜாலியாக குடும்பத்தோடு இருக்கின்றார்கள். மாநில அரசின் மருத்துவமனைக்கும் மத்திய அரசின் மருத்துவமனைக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்த போது நான் எவ்வளவு பெரிய தப்பு செய்துள்ளேன் என்பதே எனக்கு திருப்பூர் வந்த பிறகு தான் தெரிந்தது. நான் விசாரித்த ஒரு நபர் கூட கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனைபற்றி எனக்குச் சொல்லவே இல்லை. முப்பது வருடமாகப் பல்லாயிரம் கோடி வருமானம் உள்ள திருப்பூரில் ஏன் இவர்கள் ஈஎஸ்ஐ மருத்துவமனை திறக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு முயலாமல் இருக்கின்றார்கள் என்பதே அங்கே சென்று பார்த்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது".

()()()

2025 இந்தியா 5G தொழில் நுட்பத்திற்குள் மாறி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சவால்கள் என்ன? சங்கடங்கள் என்ன? தடங்கல்கள் என்ன? என்ன மாற்றங்கள் இங்கே நிகழப் போகின்றது?