Thursday, February 10, 2011

மரமேறி தாண்டி வந்த நாடார்கள்

திருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலியின் உண்மையான அர்த்தம் 'புகழ்மிகும் நெல்லின் வேலி'.
இந்தப்பகுதி தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் அகண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் இருந்ததால் இந்தப்பகுதி மக்களை முதலில் பார்த்துவிடலாம்.


சோழநாட்டிலுள்ள காவேரிப்குதி, மதுரை, தென் திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் இந்த நாடார் இன மக்கள் உருவானதாக கூறப்படுகிறது. ஈழத்து வரலாற்றில் தென்னிந்திய கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எளிதாக புலம் பெயர்ந்து ஈழத்தை நோக்கி நகரத் தொடங்கினர்.  ஆனால் 'உள்ளே வெளியே' என்பதாக ஈழத்துக்குள் சென்றவர்களும் திரும்பவும் இங்கேயே வந்தவர்களும் உண்டு.  அது போல ஈழத்தில் வடக்கு கடற்கரையோரத்தில் வாழ்ந்து வந்தவர்களின் ஒரு பகுதியினர் தான் இவர்கள் என்றும் கூறப்படுகிறது.  தொடக்கத்தில் சான்றார் என்று அழைக்கப்பட்டு பிறகு சாணார் என்று மருவியது. யாழ்பாணத்தில் இருந்து வந்தவர்கள் இந்த பனைவிதைகளை கொண்டு வந்து இங்கே பனை மரங்களை உருவாக்கினார்கள் என்று நம்புகிறார்கள்.

நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போதே நம் கண்களுக்கு பனைமரம் ஏராளமாகத் தெரியும்.  கேரளாவைப் போலவே கண்களுக்கு குளிர்ச்சி தரும் பச்சைபசேலுக்குத் தேவையான சீதோஷ்ண நிலை எங்கும் நிலவும். இராமநாத புரத்தை வறப்பட்டிக்காடு என்பது போல மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள தென்மாவட்டங்கள் குறிப்பாக நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் போன்றவைகள் வறண்ட பூமியாக கண்ணுக்கு எட்டியவரையில் பொட்டல்காடாகவே தெரியும்.  

மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாக, கருங்கற்கள் நிறைந்த, செம்மண் நிறைய மொத்தத்தில் பனைமரங்கள் வளர்வதற்கு ஏற்ற பூமியாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள பூமியில் ஆழத்தில் சிவந்த களிமண் இருந்த போதிலும் மேல்மட்டத்தில் உள்ள தளர்ச்சியான மணல் ஒவ்வொரு காற்று வீசும் பருவத்திலும். தென் மேற்கு சுழற்சி காற்றால் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த காற்றும், நகரும் மணல் துகள்களும் மக்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் ஏராளமான பிரச்சனைகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில் வயல்வெளிகள், கிராமங்கள் கூட அமிழ்ந்து போயுள்ளன.  இது போன்ற பூமியில் தான் இங்கு நாம் பார்க்கப்போகும் நாடார்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

இந்தியாவில் உள்ள மொத்த சாதிகள் உருவான கதைக்கு ஆயிரத்தெட்டு புராண இதிகாச சம்பவங்களைக் கூறினால் இந்த சாதி என்ற மூலக்கூறு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.  பொருளாதாரம் மற்றும் அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை அடிப்படையாக வைத்து தான் இந்த சாதி ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாப்பிடியாக நகர்ந்து கொண்டு வந்தது.  நாடார் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் இதற்குள்ளும் ஏராளமான கிளைநதிகள் உண்டு.  குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் பார்க்கலாம்,

சுருக்கு பட்டையர்

பனைத் தொழிலை சார்ந்து வாழ்ந்தவர்கள். நாடார் சமூகத்தில் 80 சதவிகிதத்தினர் இந்த சுருக்கு பட்டையராகத் தான் இருக்கின்றனர்.

மேல் நாட்டார்,

தென் திருவாங்கூரிலும், நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலும் வசிக்கின்றனர். இந்த வகையினர் பெரும்பான்மையாக அம்பாசமுத்திர பகுதியிலும், சொல்லக்கூடிய வகையில் தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம்,,நாங்குநேரி போன்ற பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

நட்டாத்தி

நெல்லை மாவட்டத்தில் சாயர்புரத்திற்கருகில் நட்டாத்தி கிராமத்தைச் சுற்றிலும் இந்த நாடார்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் சொற்பமாகவே இருக்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுப்பது, மற்ற வாணிபம், விவசாயம் போன்றவை இவர்களின் தொழிலாகும். ஆனால் காலப்போக்கில் இந்த வகையில் உள்ளவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டனர்.

கொடிக்கால்

வெற்றிலை பயிரிட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற இடங்களில் அதிகமாக வாழ்பவர்கள்.


இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களை விட சற்று மேம்பபட்ட வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு இந்த பனை மரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில் ஜெயித்தும் காட்டியுள்ளனர்.  தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்கு கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது.  இதைப்போலவே நாடர்களின் தொடக்க பாரம்பரிய கதைகளிலும் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்.

ஏழு தேவகன்னிகைகள் பூமியில் வந்து குளித்துக் கொண்டிருக்கும் போது இந்திரன் ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.  இறுதியில் "எல்லாமே" சுபமங்களமாக முடிய ஏழு ஆண் குழந்தைகள் உருவானது.  இந்த குழந்தைகளை பூமியில் விட்டு விட்டு கன்னிகையர்கள் தேவலோகத்திற்கு சென்றுவிட பெண் தெய்வமான பத்ரகாளி இந்த குழந்தையை வளர்த்து வந்தாள். மதுரை நகரில் வைகைநதி பெருக்கெடுத்து ஓட பாண்டிய மன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நாள் வந்து கூடையில் மண் சுமந்து வர வேண்டும் என்று உத்திரவிட ஏழு பயபுள்ளைங்களும் "நாங்கள் ஆளப் பிறந்தவர்கள்.  கூடை சுமக்கமாட்டோம்" என்று எதிர்த்து நின்றனர்.  மன்னர் கோபமடைந்து ஏழு பேர்களையும் தலைமட்டும் மண்ணுக்கு வெளியே தெரியும்படி புதைத்து யானையை விட்டு தலையை இடறச் செய்தார். யானை கால் கொண்டு எத்தித்தள்ள முதலாவரின் தலை உருண்ட போது விடாதும் கோஷம் போட்டுக் கொண்டே நகர்ந்தது. இரண்டாவது தலையும் அதே போல் பேச பேசியதைக் கண்ட மன்னன் மற்ற ஐந்து இளைஞர்களை விடுவித்து மரியாதை செய்தான்,


இந்த ஐந்தில் தொடங்கியது தான் நாடார் இனம் என்று கதை திரைக்கதை வசனம் ஒன்று சரித்திரங்களில் இருக்கிறது. ஆனால் பெண்கள் ரவிக்கை போடக்கூடாது,  நாடார் இன மக்கள் ஆலயங்களில் நுழையக்கூடாது போன்ற பல கேவலங்களைத்தாண்டி இன்று இந்த சமூக மக்கள் வந்துள்ள உச்சம் மெச்சத்தகுந்ததே.

124 comments:

ப.கந்தசாமி said...

நாடார்களின் வளர்ச்சி மிகவும் பாராட்டுதற்குரியது. என்னுடைய ஒரு கேள்வி: ஏன் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களும் இவ்வாறு முன்னேறவில்லை? இத்தனைக்கும் இன்றுள்ள பொருளாதார சூழ்நிலையில் அவர்களும் நன்றாகவே பொருளீட்டுகிறார்கள். ஏன் அவர்களுக்கு ஒரு நல்ல தலைமை அமையவில்லை?

ஜோதிஜி said...

வணக்கம் அய்யா. இந்த காலை வேலையில் வந்து விழுந்த உங்கள் முதல் விமர்சனம் ஆச்சரியமே. உங்கள் விமர்சனத்தைப் பார்த்து மற்றவர்கள் சொரிய வருவார்கள். உங்கள் கேள்விக்குள்ளே பதிலும் இருக்கிறது.

குடுகுடுப்பை said...

நாடார்களின் வெற்றி மகத்தானது, இன்றைய தாழ்த்தப்பட்ட மக்களும் அப்படி ஒரு நிலையை அடைந்தால் ஒரு சமநிலை உருவாகிவிடும், அதற்கான பலதரப்பும் உழைக்கவேண்டும்/விட்டுத்தரவேண்டும்

எண்ணங்கள் 13189034291840215795 said...

புதிய தகவல்கள் பல தெரிந்துகொண்டேன் ஜோதிஜி..

நாடார்கள் கடுமையான உழைப்பாளிகள் மட்டுமல்ல , எளிமையானவர்களும்..

சிவகாசி நாடார்கள் வீட்டில் பணக்கார பெண்மணிகளும் கூட தீப்பெட்டி போடும் பழக்குமுண்டு என கேள்விப்பட்டுள்ளேன்..

உழைப்பே மூலதனம்..

shanmugavel said...

ஆம்.மெச்சத்தகுந்ததே

Anonymous said...

//ஏன் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களும் இவ்வாறு முன்னேறவில்லை? இத்தனைக்கும் இன்றுள்ள பொருளாதார சூழ்நிலையில் அவர்களும் நன்றாகவே பொருளீட்டுகிறார்கள். ஏன் அவர்களுக்கு ஒரு நல்ல தலைமை அமையவில்லை?//

எனது கேள்வியும் தான். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. நாடார்களைப் போல, மற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது இனத்துக்கு என்று பாடுபடுவதில்லை. பொருளாதாரத்தில் முன்னேறி நகரத்தில் வாழும் என்னுடைய நண்பர்கள் கிராமத்தில் வறிய படிப்பறிவற்ற குடிசையில் வாழும் உறவினர்களோடு சரிவரப் புழங்குவதில்லை. தங்களது இனத்துக்கென்று வலுவான கூட்டமைப்பு மற்றும் தலைமை ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். திருமாவளவனைப் போன்ற அரசியல் அமைப்பாக இல்லாவிட்டாலும் கூட, கூட்டுறவாக செயல்பட்டு பின்தங்கியவர் வறியவர் முன்னேற்றத்துக்கு வழி செய்ய வேண்டும். தரங்கெட்ட அரசியல்வாதிகளை நம்பிக் கொண்டிருக்காமல், தாங்களே அந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

Indian said...

//என்னுடைய ஒரு கேள்வி: ஏன் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களும் இவ்வாறு முன்னேறவில்லை? இத்தனைக்கும் இன்றுள்ள பொருளாதார சூழ்நிலையில் அவர்களும் நன்றாகவே பொருளீட்டுகிறார்கள். //

Defying Manu: Rise of the Dalit capitalist

Rathnavel Natarajan said...

தங்கள் பதிவுக்கு நன்றி.
நான் நாடார் இனத்தைச் சார்ந்தவன். தற்போது அது பற்றிய புத்தங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். (தமிழக நாடார் வரலாறு, மறுபக்கம், தோல் சீலை கழகம், ரத்தம் ஒரே நிறம் (சுஜாதா) -
நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் (கோவிலுக்குள் முன்பு அனுமதியில்லை) எங்களுக்கு என நந்தவனம் (தண்ணீர் பொது கிணற்றிலிருந்து எடுக்கமுடியாது), எங்களுக்கு என பள்ளி, கல்லூரி, எங்களுக்கு என தனியாக நாவிதர், சவரத் தொழிலாளி என அமைத்துக் கொண்டோம். எங்களுக்கு என பத்திரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் என அமைத்துக் கொண்டோம். பிரபல திருவிழாக்கள் நடக்கும் சமயம் எங்கள் ஊரில் உள்ள எங்கள் கோவில்களில்
சிறப்பாக எங்கள் மக்களுக்காக திருவிழாக்கள் நடத்தினோம். உழைப்பிலும். படிப்பிலும், முழுக் கவனைத்தை செலுத்தினோம். எனவே முன்னேறினோம்.
தங்களிடம் நாடார் பற்றிய புத்தகங்கள் இருந்தால், அல்லது என்னென்ன புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்ற குறிப்புக்கள் இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எனது முகவரி.
N,.Rathnavel,
7-A, Koonangulam Devangar North St.,
Srivilliputtur. 626 125 (Virudhunagar Dt) Ph 04563 262380 Cell 94434 27128
Email id: rathnavel_n@yahoo.co.in
ratnavel.natarajan@gmail.கம
குறிப்பு: எந்த ஜாதியிடமும் கசப்பு உணர்ச்சி வளர்த்துக் கொள்வது கிடையாது. எல்லோரிடமும் நல்ல மனதுடன் பழகுவோம். எங்களது முன்னேற்றத்திற்கு இதுவெல்லாம் ஒரு காரணம். உங்களது பாராட்டுகிறேன்.
நன்றி. வணக்கம்.

Anonymous said...

//குறிப்பு: எந்த ஜாதியிடமும் கசப்பு உணர்ச்சி வளர்த்துக் கொள்வது கிடையாது. எல்லோரிடமும் நல்ல மனதுடன் பழகுவோம். எங்களது முன்னேற்றத்திற்கு இதுவெல்லாம் ஒரு காரணம். உங்களது பாராட்டுகிறேன்.//

எனக்கும் இது சரி என்று தான் தோன்றுகிறது.

எஸ்.கே said...

தொடரட்டும் தகவல்கள்! இனிதே செல்கிறது!

'பரிவை' சே.குமார் said...

நாடார் இனத்தவர்கள் குறித்து நல்ல தகவல்கள்... அவர்கள் உழைக்கத் தயங்குவதில்லை... மேலும் அவர்களுக்குள் உதவிக் கொள்ளவும் யோசிப்பதுமில்லை... அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணம்.

arasan said...

அரிய தகவல்கள்

Anonymous said...

நாடார்கள் என்னும் இனக்குழு மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு, தமிழ் மரபுவழி சாதியினர் என்பது மட்டுமில்லாமல், நாடார்களின் புறத்தோற்றம் அவர்கள் கலப்பு குறைந்த தமிழ் சாதி என அடையாளம் காட்டுகிறது. நாடார்கள் தமிழகத்தின் தெற்கிலும், கேரளாவிலும் இலங்கையிலும் வாழ்கிறார்கள். நாடார்கள் கேரளாவின் ஈழவரும் ஒரே சாதியினர் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆதிக் காலங்களில் இலங்கையில் குடியேறிய தமிழ் சாதியும் இவர்களே ! வேடுவர்களுக்கு அடுத்து இலங்கையில் குடியேறிவர் மீனவரும், நாடாருமே ஆகும். காலப் போக்கில் அவர்கள் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து கேரளம் வந்தததால் என்னவோ அவர்கள் ஈழவர் எனவும் தீயார், தீவார் என அழைக்கலாயினர். அது மட்டுமில்லாமல் இலங்கையின் நழவர் என்னும் பிரிவும் நாடார் இனமாக இருக்கக் கூடும். இலங்கையின் உணமை வரலாறாய் ஆய்வு செய்ய நாடார்களின் இன ஆராய்சி மிக அவசியமாகும்.

நாடார்கள் தான் தென் தமிழ்நாட்டின் நிலத்தின் சொந்தக் காரர்கள் ஆவார்கள் ! பின்னாளில் அங்கு குடியேறிய வேற்று சாதி வேளாளர், நாயர், நாயக்கர் போன்றோர் அவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை இழி நிலைக்கு தள்ளியது. இருப்பினும் இன்று அவர்கள் முன்னேற்றம் அடைந்து சமூக அந்தஸ்தைப் பெற்று இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களில் பலர் கிருத்துவத்தை தழுவியதும், அதனால் அவர்கள் பெற்ற ஆங்கில கல்வியும், உழைப்பும் ஒரு காரணம்.

சாதிகளை ஆதரிப்பவன் இல்லை நான், இருப்பினும் தமிழ் வரலாறை ஆய்வு செய்ய தமிழ் சாதிகளைப்பற்றி ஆய்வு செய்வது மிக அவசியமான ஒன்று.

Chitra said...

புதிய தகவல்கள். very interesting.....பகிர்வுக்கு நன்றிங்க...

ஊரான் said...

நாடார் இன் மக்கள் ஆகப் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்களாக இருப்பதால் பிறரை நேசிக்கும் பண்பு இயல்பாகவே இருக்கிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் பண்பு.

எனக்கு நாடார் இன நண்பர்கள் அதிகம் உண்டு. ஆனால் தான் நாடார் என்று எப்பொழுதும் இவர்கள் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. இதுதான் இவர்களின் சிறப்பு.

பல ஆண்டுகள் ஒன்றாய்ப் படித்தும் பணி செய்த போது ஒன்றாய் ஒரே வீட்டில் தங்கியிருந்தும் எனது நண்பன் நாடார் எனத் தெரியாது. இவ்வாறு பழகுவதுதானே இளைஞர்களின் இயல்பு.

சாயல்குடி போன்ற பகுதிகளில் நான் சில மாதங்கள் இருந்துள்ளேன். அறிமுகமில்லாதவர்கள்கூட புதியவர்களிடம் இனிமையாகப் பழகக்கூடியவர்கள்.

ஆனால் கள்ளங் கபடமற்ற இம்மக்களையும் இந்து முன்னணி போன்ற மதவெறி அமைப்புகள் கனிசமான நாடார் இன உழைக்கும் மக்களை நஞ்சாக்கியுள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. அதே போல சில சாதிச் சங்கத் தலைவர்களும் இம்மக்களிடையே சாதி வெறியை வளர்த்துள்ளனர் என்பதும் உண்மையே.

"பள்ளனத் தொட்டா தீட்டு, ஆனால் சாணானைப் பார்த்தாலே தீட்டு" என்று சனாதனிகளால் உருவாக்கிய தீண்டாமைக் கொடுமையை வீழ்த்திய வீர மரபு கொண்டவர்கள் இம்மக்கள்.

ஒட்டு மொத்த நாடார் இனமக்களும் முன்னேறிவிட்டது போன்ற கருத்துப் பரிமாற்றங்களில் எனக்கு உடன் பாடில்லை. சாயல்குடி போன்ற பகுதிகளில் பள்ளிக் கூரைகளைப் பார்க்காமல் பணந்தோப்பின் பணங்கூரைகளில் மட்டுமே வாழும் ஏராளமான சாணார் இனக் குழந்தைகளை நான் பார்த்துள்ளேன்.

வளரட்டும் நாடார் இன மக்களின் மனிதப் பண்பு.

Anonymous said...

இதில்குறிப்பிட்டு சொல்லவேண்டியவர்
சரவணபவன் ஓட்டல் ஓனர் ராஜகோபால் நாடார். இவருக்கு ஊரறிய 12 மனைவிகள் உண்டு.கருணாநிதிக்கு அடுத்தபடியாக இவருக்கே மனைவிகள் அதிகம்.இவர் மண்ணாசையும் பெண்ணாசை மிகவும் கொண்டவர்.கிருபானந்த வாரியார் படத்தை வைத்து ஊரை ஏமாற்றுவார். பன்றி குட்டிகள் போடுவதைப்போல பார்க்கும் பெம்மனாட்டிகளை எல்லாம் ஒழுத்து ,தனதாக்கி குட்டிகளாக ஈனுவார்.மற்றொருவர் சரவணா ஸ்டோர்ஸ் செல்வரத்தினம் நாடார்,இவர் மண்ணாசை கொண்டவர்.இவரும் தன் தொழிலாளிகளை சக்கையாக பிழிந்து ரத்தம் உறிவார்.இவர்கள் வீட்டில் இன்னமும் காக்கா கறி தின்கிறார்கள் என்றால் நம்புவீர்களா?

Unknown said...

அறியாத தகவல்கள்!
அறிய தந்தமைக்கு நன்றி !

Unknown said...

//Anonymous said...

இதில்குறிப்பிட்டு சொல்லவேண்டியவர்
சரவணபவன் ஓட்டல் ஓனர் ராஜகோபால் நாடார். இவருக்கு ஊரறிய 12 மனைவிகள் உண்டு.கருணாநிதிக்கு அடுத்தபடியாக இவருக்கே மனைவிகள் அதிகம்.இவர் மண்ணாசையும் பெண்ணாசை மிகவும் கொண்டவர்.கிருபானந்த வாரியார் படத்தை வைத்து ஊரை ஏமாற்றுவார். பன்றி குட்டிகள் போடுவதைப்போல பார்க்கும் பெம்மனாட்டிகளை எல்லாம் ஒழுத்து ,தனதாக்கி குட்டிகளாக ஈனுவார்.மற்றொருவர் சரவணா ஸ்டோர்ஸ் செல்வரத்தினம் நாடார்,இவர் மண்ணாசை கொண்டவர்.இவரும் தன் தொழிலாளிகளை சக்கையாக பிழிந்து ரத்தம் உறிவார்.இவர்கள் வீட்டில் இன்னமும் காக்கா கறி தின்கிறார்கள் என்றால் நம்புவீர்களா?
//

இந்த பதிவுக்கும் உமது கருத்துக்கும் என்ன சம்மந்தம்?
இது ராஜகோபால் நாடரையோ இல்லை செல்வரத்தினம் நாடரையோ பற்றிய பதிவு அல்லவே!
உமக்கு ஏன் இந்த சாதிக்காழ்ப்புணர்ச்சி?!?!

பாப்பானே ஒழிந்துபோ said...

அடேய் கேடுகெட்ட நாத்தவாய் அனானி
நாங்க நாடார்கள் அரிவா எடுத்து வெட்டுனா நுங்கும் சிதறும், தலையும் சிதறும்டா. அயோக்கியப்பயலே,நீ ஒரு பாப்பானா தான் இருக்கனும்டா பொறுக்கிப்பயலே. உங்க குடுமி பூணுலையெல்லாம் மறுபடியும் அறுக்க நேரம் வந்துடுச்சுடா,பொச்ச மூடிக்கிட்டு சமர்த்தனா கருத்து எழுது.எங்க இனத்துல வீரன் தான்,பொட்டையே கிடையாது

Thekkikattan|தெகா said...

நிறைய புதிய தகவல்கள். அறிந்து கொள்ள கொள்ள மேலும் தமிழக வரலாறு தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் கூடுகிறது.

கட்டுரைக்கு நன்றிம்மோய்!

ஹே! அனானிகளா இடத்தை அசிங்கம் பண்ணிக்காம வீட்டை திறந்து விட்டுருக்கிறதுக்கு மரியாதை கொடுங்கப்பா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அந்த அனானியின் கருத்தை இதனுள் ஏன் அனுமதித்தீர்கள்.

தமிழக நாடார் இனத்தவர்கள் ஈழம் சார்ந்தவர்கள் என்பது புதிய தகவல். அத்துடன் இந்தப் பனம் விதையை கொண்டு சென்று பனைகளை உருவாக்கியதென்பது உண்மையாக இருக்கலாம்.
கிளிநொச்சி குடியேற்றத் திட்டத்தில் காடுவெட்டி நிலம் கண்டதும் எல்லைக்குப் நட்ட பனம் விதைகள்
இன்று பார்க்குமிடமெங்கும் பெரும் பனைகளாக உள்ளன.இந்த குடியேற்றத்திட்டத்தில் குடியேறியோர்
யாழ்பாணத்தார் அதுவும் பனையின் பலனை அனுபவித்த எல்லாச் சாதியோருமென்பதைக் குறிப்பிட்டே
ஆக வேண்டும்.

சி.பி.செந்தில்குமார் said...

புதிய தலைமுறை கட்டுரைக்கு வாழ்த்துக்கள் சார்.. ( சாரி ஃபார் லேட் விஷ்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுவராசியமான தகவல் சார்!

krishnamoorthy s p said...

WHO IS' GRAMANI 'CASTE OF NORTH TAMILNADU ?NADAARS OR SAANARS?

Unknown said...

வளரட்டும் நாடார் இன மக்களின் மனிதப் பண்பு

Anonymous said...

tirunelveli nadar ..thanks for support .. i proud of this

நாடோடிப் பையன் said...

Informative post. Thank you.

vinthaimanithan said...

அனானிப்பன்றிகள் மலம் கழிக்கத்தான் செய்கின்றன. அதற்காக மீண்டும் பின்னூட்டப்பெட்டிக்குப் பூட்டுப் போட்டுவிடவேண்டாம்.

மக்கள் கூட்டம் நடமாடும் பொதுவெளியிலுங்கூட கூச்சநாச்சமில்லாமல் கழிவதற்கு உட்காரும் நாய்கள் எதைப் பிடுங்குவதற்காக இங்கு கருத்து என்ற பெயரில் வாந்தி எடுத்திருக்கின்றன? நற்குடிப்பிறப்பு என்றால் அடையாளம் காட்டி நிமிர்ந்துநின்றிருக்கும். அர்த்தராத்திரியில் அடையாளம் தெரியாமல் பிறந்ததுகள்போல !

மன்னிக்கவும் ஜோதிஜி! இம்மாதிரியானவர்களை மனித மரியாதைக்குட்பட்டுப்பேச எனக்குத் தோன்றவில்லை.

லெமூரியன்... said...

வணக்கம் நண்பா...
வெகு நாட்களுக்கு பிறகு வலைப் பக்கம் வருகிறேன் .....
நாடார் இன மக்களின் வளர்ச்சி என்னை நிஜமாகவே வியப்பில் ஆழ்த்தியது....
அதற்க்கு காரணம் அவர்களின் ஒற்றுமை மற்றும் சக இனத்துக்காரர்களுக்கு உதவிக் கொள்வதெல்லாம்
ஒரு புறம் என்றாலும்....
பார்ப்பனை தவிர மற்றய சாதிக் காரர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களின் தொழிலும் அமைந்து போனது....
யோசித்து பாருங்கள்....அவர்கள் முதல் போட்டு தொழில் ஆரம்பித்த காலங்களில் தினக் கூலி கூட அன்றி வாழ்ந்தவர்கள்தான்
தலித்துகள்.....
மேலும் இன்று வரை சமுதாயம் அவர்களை தங்களில் ஒருவராக பார்க்கவில்லை.....
பள்ளர்கள் என்றால் பள்ளத்தில் தேங்கிய நீரை பயன்படுத்தி விவசாயம் செய்த இனத்திற்கு உண்டான பெயர்....
அவர்களுக்கு வேறு தொழில்களில் அனுமதியும் இல்லை..
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நாடார்கள் பொருளீட்டிய வேகம் அசாத்தியமானது....
இப்பொழுதுதான் சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ள தலித்துகளை கண்டிப்பாக நாடார்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடுவது
மடத்தனம்.....
மேலும் தென்னக பகுதியுலுள்ள அனைத்து இனங்களும் இலங்கைக்கு இடம்பெயர்ந்தவர்கல்தாம்.....
நாடார் இனத்திற்கென்று அப்பொழுது ஒரு தொழில் இல்லாத காரணத்தால் அவர்களின் இடப் பெயர்ச்சி அதிகமாக நடந்திருக்கிறது
தலித்துகள் விவசாயக் கூலிகளாக இருந்ததினால் இடப் பெயர்ச்சி எங்கும் பெரிதாக நடக்கவில்லை...
மேலும் தமிழகத்தில் உள்ள இனங்கள்தான் ஆதி இனம்....
அதிலும் பள்ளர்களும் பறையர்களும் தங்களுகென்று வரலாறு வைத்து கொள்ளாத மூத்தகுடிகள்....
அவர்களின் வசிப்பிடம் கூட த்ன்னகமாகத்தான் இருந்தது....
மண்ணின் மைந்தர்கள் எனக் கொள்ளலாம்....

Unknown said...

இன்றைக்கு தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார சக்தி நாடார்களின் வசம்தான் இருக்கிறது.. கடுமையான உழைப்பாளிகள் அவர்கள் ..

Unknown said...

சென்னையை பொறுத்தவரைக்கும் நான் அவர்களது பிசினெஸ் நெட் வொர்க்கை பார்த்து வியந்திருக்கிறேன். வியாபார விசயத்தில் செட்டியார் சமூகத்திற்கு அடுத்த நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நிறைய புது விசயங்கள்.. பகிர்வுக்கு நன்றி பாஸ்..

”உழைப்பே உயர்வு தரும் ”

http://thavaru.blogspot.com/ said...

அறி(ரி)ய தகவல்கள் அன்பின் ஜோதிஜி அனானிகளின் அட்டகாசத்தை கொஞ்சம் கவனிக்க கூடாது.

http://thavaru.blogspot.com/ said...

கூடாது இல்ல அன்பின் கூடாதா...

krishnamoorthy s p said...

NADAAR CASTE IN VIRUTHUNAGAR DISTRICT SHOULD BE PUT IN THE FORWARD CASTE CATEGORY

ஜோதிஜி said...

கிருஷ்ணமூர்த்தி நீங்க சொல்லியிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே. பொருளாதார ரீதியிலும் சமூக வாழ்க்கையிலும் இவர்கள் இன்று இப்படித்தான் மற்றவர்கள் பார்வையில் உள்ளார்கள்.

நண்பா தவறு. நீங்கள் எதுவும் தவறாக சொல்லவில்லை. புரிந்து கொண்டேன்.

பட்டாபட்டி தொடர்ந்து விடாம வந்துகிட்டு இருப்பீங்க போலிருக்கே. நன்றி தல.

செந்தில் என்னுடைய ஆச்சரியமும் இது தான். நான் திருமணமான புதிதில் வீட்டுக்கு அருகே ஒண்டு இடுக்கில் குடியிருந்தவர்கள் மூன்று வருடத்தில் பல்லடத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொந்த வீடு கடைக்கு குடி பெயர்ந்தார்கள். மொத்த குடும்பமும் உழைத்தது.

நண்பா லெமூரியா நீண்ட நாளைக்குப் பின் வந்தாலும் சில விசயங்களை உங்கள் பதில் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி நண்பா.

ஜோதிஜி said...

ராசாப்பா ஏன் இத்தனை கோபம்? விடுங்க அவங்களுக்கு தோன்றியதை சொல்லியிருக்காங்க. எல்லாருமே ஒரே மாதிரி யோசித்தால் மாற்றுக் கருத்துக்களை நாம் எப்போது தெரிந்து கொள்வது. இப்போது அல்ல எப்போதும் மூடி வைக்கும் எண்ணம் இல்லை. மனம் அலைபாய வேண்டிய அவஸ்யமில்லை அல்லவா?

வருக நாடோடி பையன். பெயரே நன்றாக உள்ளது.

வருக ஜெகதீஷ். கிருஷ்ணமூர்த்தி இப்போது தான் இவர்களின் பெயர் மாறிவிட்டதே?

வாங்க ஆபிசர். செந்தில் வருகை பதிவேட்டை குறித்துக் கொண்டேன்.

உண்மைதான் யோகன்.

ஜோதிஜி said...

தெகா உருவிமல்லாதவர்களின் விமர்சனத்தை பார்த்து சிரித்து விட்டேன். ஆதங்கத்தை அவர்களுக்கு தெரிந்த வார்த்தைகளில் வாந்தி போல அவசரத்தில் துப்பி விட்டார்கள். உங்கள் வார்த்தைகள் யோசிக்க வைத்தது.


இது ராஜகோபால் நாடரையோ இல்லை செல்வரத்தினம் நாடரையோ பற்றிய பதிவு அல்லவே!

கரிகாலன் புரிந்துணர்வை உருவாக்கியதற்கு மிக்க நன்றிங்க.

ஊரான் நம்முடைய பல நண்பர்களைப் போலவே உங்கள் பதிவு எழுதுக்களை விட உங்களின் விமர்சனம் மிகக்கூர்மையாக உள்ளது. நன்றிங்க.

ஜோதிஜி said...

சித்ரா ஏதோவொரு அவசரத்தில் வந்து இருப்பீங்க போலிருக்கே?

ஆரோண்ன்


சாதிகளை ஆதரிப்பவன் இல்லை நான், இருப்பினும் தமிழ் வரலாறை ஆய்வு செய்ய தமிழ் சாதிகளைப்பற்றி ஆய்வு செய்வது மிக அவசியமான ஒன்று.

உங்களின் விமர்சனத்தை என் நண்பர் பழமைபேசிக்கு சமர்ப்பிக்கின்றேன்

ஜோதிஜி said...

அவர்களுக்குள் உதவிக் கொள்ளவும் யோசிப்பதுமில்லை... அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணம்

குமார் இது தான் சரியான பார்வை.

நன்றி எஸ்கே அரசன்.

ரத்னவேல் அய்யாவுக்கு உங்கள் வயது உங்கள் ஆர்வம் உங்கள் தொலைபேசி உரையாடல் போன்றவற்றைப் பார்க்கும் உங்கள் ஆர்வம் என்னை வியப்படைய வைத்தது. மிக்க நன்றிங்க.

ஜோதிஜி said...

குடுகுடுப்பை

என்ன இப்படி சொல்லிட்டீங்க. தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை இன்று கிடைத்துள்ள வசதிகள் வாய்ப்புகள் என்று பார்க்கும் போது இதை விட பொற்காலம் வேறு ஏதும் உண்டா?

நன்றி சாந்தி. நீங்கள் சொல்வது உண்மை. திருப்பூருக்குள் பல குடும்பத்தை பார்த்துக் கொண்டு இருப்பதால் தைரியமாக சொல்ல முடிகின்றது.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

நாடார்கள் போல மற்ற சமுதாயத்தினர் தன் மக்களை கூட்டி வந்து தன்னுடனேயே முன்னேற வைப்பதில்லை - இது தான் என்னுடைய தாழ்மையான கருத்து....

அனானிகள் ஜாக்கிரதை said...

அனானிகளின் பெயரைக்கெடுக்கவே இப்படி ஆபாச கருத்துக்களை போடுகின்றனர்.பதிவுலகில் நாடார்கள் ஒன்று திரள்வோம்.இது குறித்து நான் உங்களை போனில் அழைக்கிறேன்.உங்களைபோல வயது முதிர்ந்த பதிவர்கள்,எம் போன்ற சிறியார்களை முன்னிறுத்தி வழிநடத்த வேண்டுமாய் வேண்டிக் கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில், வியப்பும் மேலிடுகிறது, சபைக்கூச்சம் காரணமாக நானும் என் பெயரை வெளியிடவில்லை, என்றே இச்சபையில் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. புரியாத பின்னூட்டம் என்று யாரேனும் சொன்னால் நான் பொறுப்பல்ல, என்று சொல்லிக்கொண்டு விடை பெறுகிறேன் சார்.எனக்கு ஒரு பழமொழி சிறப்பாக நினைவுக்கு வருவதை தடுக்க இயலவில்லை.காற்றுள்ள போதே தூற்றிக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பதே அது.

ஜோதிஜி said...

பதிவுலகில் நாடார்கள் ஒன்று திரள்வோம்.இது குறித்து நான் உங்களை போனில் அழைக்கிறேன்.உங்களைபோல வயது முதிர்ந்த பதிவர்கள்,எம் போன்ற சிறியார்களை முன்னிறுத்தி வழிநடத்த வேண்டுமாய் வேண்டிக் கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில், வியப்பும் மேலிடுகிறது,

அண்ணா விட்டுடுங்கண்ணா. வடிவேல் கண்க்கா அழுதுடுவேன்னு நினைக்கிறேன். தெரிந்த நபர் என்று மட்டும் புரிகின்றது. ஏதோ லந்து செய்றீங்கன்னு நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

நாடார்கள் போல மற்ற சமுதாயத்தினர் தன் மக்களை கூட்டி வந்து தன்னுடனேயே முன்னேற வைப்பதில்லை

இது தான் என் ஆதார கருத்துமே.

krishnamoorthy s p said...

PANAIYERI NAADAARGAL THAAN POLYNESIA THEEVUKALIL VASIPPAVARGAL ENDRU KOORUKIRAARGAL. IS IT TRUE?

சீ.பிரபாகரன் said...

உங்கள் ஆய்வு தொடர வாழ்த்துக்கள்.

சாணார்கள், நாடார்கள் இவர்களுக்குள் ஏதாவது வேறுபாடு உண்டா? அவர்களுக்குள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விவரிக்கவும்.

நல்லவர்கள்-கெட்டவர்கள், உழைப்பாளிகள்-சோம்பேறிகள் என்று அனைத்து சமூகத்திலும் இருக்கிறார்கள். அதனால் கெட்டவர்களை ஒருசமூகத்தின் அளவுகோலாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை.

தமிழினத்தின் ஒரு அடையாளம் நாடார்கள். அவர்களின் அனைத்துக்கூறுகளையும் பதிவு செய்யவேண்டியது தமிழர்களின் கடமை.

Anonymous said...

சென்ற நூற்றாண்டில் நாடார் சமுகத்தின் நிலை மிக உயர்வாக இல்லை, அனால் சில குடும்பங்கள் நில கிளர்களாக இருந்துள்ளனர்...

- குறிப்பாக நட்டாத்தி என்ற ஊரை 1892 வரை ஆண்டு வந்தவர் நட்டாத்தி ஜமிந்தர்கள்,
இந்த ஊரின் கடைசி ஜமின்தார் வைகுண்ட திருவளழுதி நாடார்.


- திருச்சந்தூர் ஆதித்த நாடார்கள் பரம்பரை நில கிழார்கள்.

- முட்டம் நாடான் மார்கள்(நாடார்கள்) பரம்பரை பரம்பரையாக வரி வசூல் செய்ய தகுதி பெற்றவர்கள்.

- travancore state manual இன் படி, அகதீஸ்வரம் நாடான் மார்கள் (நாடார்கள்) கோட்டை, மற்றும் 100 போர் சேவகர்கள் கொண்டு ஆண்டு அந்த ஊரை ஆண்டு வந்தவர்கள், தோள் சீலை கழகத்தில் பொழுது , இந்த நாடார் குடும்பத்தினர்களுக்கு எந்த அடக்குமுறையும் செலுத்தப்படவில்லை.

- பொறையார் நாடார் குடும்பம் பழம் பெரும் குடும்பம், அரியலூர் ஜமின் கிராமத்தை சென்ற நூற்றாண்டில் ஏலத்தில் எடுத்த பெருமை, பண பலம் அவர்களுக்கு உண்டு.

- திருவதான்கூர் சமஸ்தானத்தின் படை தளபதி ஆனந்த பத்பநாப நாடார், இன்றும் அவர்களிடம் மன்னர் கொடுத்த பல ஏக்கர் நிலங்களும், பரிசாக கொடுத்த மன்னருடைய வாழும் அவர்கள் வசம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வாழ் தற்போதய மன்னருக்கு பரிசாக அளிக்க பட்டது.

ஜோதிஜி said...

நண்பரே இன்னும் நிறைய பதிவுகள் எழுதியுள்ளேன். உங்கள் பார்வையில் நேரம் கிடைக்கும் போது படித்து விட்டு இது போல உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்க.

Dr. சாரதி said...

உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு கடந்த 50 வருடங்களுக்குள் முன்னேறிய இனம்....அருமையான பதிவு......

sukumar said...

venkatesh pannaiar
is great

Anonymous said...

தோல் சீலை போராட்டம் பிரமண நம்பூதிரிகள் ஆண்ட திருவிதாங்கூர் பகுதியில் மட்டுமே.அடுத்து பனை குமரிகண்டம் மட்டும் அல்ல பாரத நாடு முழுவதும் 10,000 வருட வரலாறு உண்டு.ஈழம் குமரி கண்டத்தில் இருந்து கடல் அழிவில் பிரிந்த பகுதி.பனை ஆழி பேரலையை தடுக்க கூடியதுஎன கண்டறிந்தது வரலாற்று பதிவு.

வரண்டியவேலன் said...

நாடார் இனம் தமிழகத்தின் தொன்மையான இனம். தமிழகத்தில் நாடார் சாணார், கிராமணியார் போன்ற பெயர்களில் கிட்டத்தட்ட ஒன்றரைக்கோடி மக்கள் வாழ்கிறார்கள். இது தவிர கேரளத்தில் நாடார்கள். ஈழவர்கள் போன்ற பெயர்களிலும்,
கர்நாடகத்தில் ஈடிகர்கள், பில்லவர்கள், தீயர்கள் என்ற பெயரிலும், மராட்டியத்தில் பண்டாரிகள் என்ற பெயரிலும் இன்னும் பல பெயர்களில் கிட்டத்தட்ட 250 வகை சாதிகளாக இந்தியா முழுவதிலும் சுமார் 10 கோடி நாடார் இன மக்கள் வாழ்கிறார்கள். மும்பை, சென்னை, போன்ற பெருநகரங்களின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும்அளவுக்கு வலுவான இனமாக இருந்தும் தமிழகத்திலும் மத்திய அரசிலும் ஒரு மந்திரி கூட பலம்மிக்க நாடான் மந்திரி இல்லை.

வரண்டியவேலன் said...

நாடார்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்பது முற்றிலும் தவறான கருத்து. நாயக்க மன்னர்களால் அடித்து விரட்டப்பட்டவர்கள். அவர்களின் கொடுமை தாங்காமல் நாடார்கள் பட்ட அவலம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு நாட்டை வெல்லும் அரச வம்சம் தோல்வியடைந்தவர்களை என்ன செய்யும் என்பதை நாம் தற்போதைய ஈழத்தில் நடக்கும் சம்பவங்களில் இருந்தே புரிந்து கொள்ளலாம். சகோதர சண்டையால் பாண்டியர்கள் விஜயநகர அரசர்களை இங்கு இழுத்து வந்து அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். தெலுங்கர்களாகிய உங்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று விடுதலை வேட்கையால் மறுத்த பாண்டியர்களும் அவர்கள் ஆதரவாளர்களான நாடார்களும் அவர்கள் இருந்த நிலையை விட்டு கீழாக்கப்பட்டனர். அவர்களிடம் யாரும் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது என்று அடக்கி ஒடுக்கப்பட்டனர். தெலுங்கர்களை ஆதரித்த தமிழர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பாளையக்காரர்கள் ஆக்கப்பட்டனர். அவர்களுடன் மற்ற தெலுங்கு பாளையங்களும் இணைந்து நாயக்கர் ஆட்சியில் மலர்ச்சியுற்றன. நாடார் இனம் ஓட ஓட விரட்டப்பட்டது. அவர்களிடம் சமாதானம் செய்து தெலுங்கர்களை

வரண்டியவேலன் said...

நாடார் இனம் ஓட ஓட விரட்டப்பட்டது. அவர்களிடம் சமாதானம் செய்து தெலுங்கர்களை சகித்துக்கொண்ட தமிழ் சாதிகளை அவர்கள் வசதிக்கேற்ப சேனாதிபதிகளாகவோ, மந்திரிகளாகவோ, ஊழியர்களாகவோ வைத்துக்கொண்டனர். மற்ற அனைவரையும் அடித்து விரட்டினர். தற்போது எப்படி ஈழத்தில் கருணா கும்பலுக்கு வாழ்வு கிடைத்ததோ அப்படி தமிழகத்தில் தெலுங்கர்களை ஆதரித்த தமிழர்கள் நல்வாழ்வு பெற்றனர். மக்களாட்சி நிகழும் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகள் என்றால் அந்த காலத்தை சிந்தித்துப்பாருங்கள். கொற்கை மண்டலத்தில் இருந்த நாடார் கிராமங்கள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டன. நில உடைமையாளர்களாக இருந்த வர்கள் நிலங்கள் அனைத்தும் ஆற்றுப்பாசன நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் தேரி வனாந்திரத்துக்குள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்களின் செந்தூர் கோவிலும் மற்ற கோவில்களும் பறித்துக்கொள்ளப்பட்டு அவர்கள் நுழைய கட்டியிருந்த மேற்கு வாசல் அடைக்கப்பட்டது. அவர்களின் நல்ல

வரண்டியவேலன் said...

அவர்களின் நல்ல நிலங்கள் அனைத்தும் தெலுங்கர்களுக்கும் அவர்களை ஆதரித்த மற்ற சாதியினருக்கும் வழங்கப்பட்டன. அவர்கள் முருகனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தது எல்லாவற்றையும் மறைத்து அது அய்யன் கோவில் என வழிபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குரும்பூர் நாட்டில் இந்த கொடுமை அதிகம் இருந்தது. கட்டபொம்மன் என்ற தெலுங்கு கொள்ளையன் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் வசம் இருந்த ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் தாலுகாக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அங்கு உள்ள நாடார்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கர்களை ஆதரித்த தமிழ் சாதிகளை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. திருவைகுண்டத்தில் 12 மறவர்களை கொலை செய்து நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டனர். குரும்பூரை ஆண்ட நாடார்கள் அனைவரும் காட்டுக்குள் விரட்டப்பட்டனர். சுண்டங்கோட்டை, மேலப்புதுக்குடி ஊரைச்சேர்ந்தவர்கள் குரும்பூரில் இருந்து விரட்டப்பட்டவர்கதான்.

வரண்டியவேலன் said...

அவர்கள் கோவிலான ஆதிநாராயண பெருமாள் கோவிலில் நுழைய அவர்கள் தடுக்கப்பட்டனர். காயாமொழி ஆதித்தர்களுடன் கட்டபொம்மன் போர் செய்தான். திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள் சமாதானம் செய்துவைத்தனர். நட்டாத்தி ஜமீன்தார் மட்டும் கட்டபொம்மனுடன் சமரசம் செய்து கொண்டதால் அவரை விட்டு விட்டு மற்ற அனைத்து நாடார் ஊர்களையும் தெலுங்கர்கள் தங்கள் வசப்படுத்திக்கொண்டனர். இதன் காரணமாக நாடார்கள் நட்டாத்தியர்களை தங்கள் சாதியில் இருந்தே புறக்கணிக்கும் நிலை வந்தது. இவ்வளவு கொடுமைகள் நடந்ததால் பலர் நாடார்கள் என்ற பெயரை மறைத்து வேறு சாதி பெயரைக்கூட சொன்னதாக வரலாறு உண்டு 5 வருடம் ஆட்சி மாறும் போதே அடுத்த கட்சி ஆட்சியை தாங்க முடியாமல் கரை வேட்டியை மாற்றி கட்டும் இந்த காலத்தில் 800 வருடங்களாக நாடார்கள் பட்ட அவலத்தை சிந்தித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடார்கள் ஈழத்துக்கு செல்ல வாய்ப்பு இருந்து இருக்கலாம். மற்றபடி பனைவிதையை எடுத் து இங்கு வந்தார்கள் என்ற தகவல் ஆங்கில அதிகாரிகளின் அறைகுறை ஆராய்ச்சி முடிவாகும். சாதாரணமாக சிந்தித்துப்பார்த்தாலே புரியும் ஒரு பனை வளர்ந்து பலன் தர குறைந்தது 20 வருடம் ஆகும் யாராவது அதுவரை பனையை வளர்த்து அதன் பலனில் மட்டுமே காலம் கழிக்க முடியுமா? அவர்கள் சோற்றுக்கு எதை தின்பார்கள்? ஏற்கனவே தேரிக்காட்டுக்குள் இயற்கையாக இருந்த பனைமரங்களைத்தான் அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். அல்லது முன்பு அங்கு இருந்த சமூகத்தினருடன் சேர்ந்து தெலுங்கர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்து கொண்டு தாங்களும் பனையேறி என்று வாழ்ந்து இருக்க வேண்டும். இதுதான் நடந்தது. பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட

வரண்டியவேலன் said...

பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.
மகாபாரத்தில் வரும் பீஷ்மர் சிறந்த நீதிமான் பெருந்தலைவர் காமராஜரைப்போல அவரும் திருமணம் ஆகாமல் நாட்டுக்காக உழைத்தவர் அவருடைய கொடியில் இருந்த சின்னம் பனைமரம், இந்திய பட்டாளத்தின் மதராஸ் ரெஜிமென்டின் ஒரு படைப்பிரிவு பல்மேரா அதன் சின்னம் தங்கப்பனை, சேர மன்னர்களின் மாலை பனம்பூமாலை இப்படி பல்வேறு புகழ்களுடன் நாடார்குல சின்னமாக விளங்கும் பனையை ஏதோ இலங்கையில் இருந்துதான் இந்தியாவுக்கு கொண்டு வந்து கொட்டை போட்டு முளைக்கவைத்தனர் என்ற வீண் கற்பனையை 2 ஆங்கில மடையர்கள் எழுதினார்கள் என்பதற்காக இந்தியாவில் தெலுங்கர்கள் வருகைக்கு முன்பு பனையே இல்லை என்று தமிழர்கள் நினைத்து விடக்கூடாது. நாடார்களின் மீது தெலுங்கர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைக்கு இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன தேவைப்பட்டால் தருகிறேபீ.
நன்றியுடன் வரண்டியவேலன்.

ஜோதிஜி said...

நன்றி நண்பரே.

Rathnavel Natarajan said...

நன்றி திரு வரண்டியவேலன். நிறைய புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். இது பற்றிய புத்தகங்கள் இருந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தர வேண்டுகிறேன்.
rathnavel.natarajan@gmail.com

SiSulthan said...

பூமணி எழுதிய அஞ்ஞாடி எனும் நூலில் ஏராளமான நாடார் சரித்திரக்குறிப்புகள் இருக்கின்றன. தற்போது பொன்னீலன் எழுதிய மறுபக்கம் எனும் நாவலை படித்துக்கொண்டு இருக்கிறேன். அதிலும் ஏராளமான நாடார் இன சரித்திரக்குறிப்புகள் இருக்கின்றன. பொன்னீலனின் தாயார் எழுதிய கவலை எனும் வாழ்க்கை வரலாறு புத்தகமும் நாடார் இன வாழ்வியல் குறித்து படிக்கவேண்டிய புத்தகம்.

Unknown said...

விஜய நகர பேரரசு காலத்தில் தான் நாடார்கள் ஒடுக்கப்பட்டனர் அதற்கு முன் வர்த்தகம் அரசு நிர்வாகம் ஆகியவற்றில் .சிறந்து விளங்கினர் ஒடுக்கப்பட்ட காலத்திலும் வெயில் தலையில் படும் கொத்தடிமை வேலைக்கு உடன்படவில்லை ஆயுதம் எடுத்து போராடவில்லை அறிவு சார்ந்த போராட்டத்தின் அடையாளமே முத்துக்குட்டி நாடாரின அய்யா வழி மதமாகும் தலையில் மண்கூடை சுமக்க மறுத்து கரிகாலனால் யானையால் இடறிக்கொல்லப்பட்ட புரட்சி சமுதாயம்
மற்ற திராவிட இனங்கள் போரில் தோற்கடிக்கப்பட்டு ஆயுதம் பறிக்கப்பட்டு கொத்தடிமை ஆக்கப்பட்டவர்கள் இன்றைய நிலையிலும் தங்களுக்கு தலித் முத்திரை யில் சலுகை பெற்று வாழநினைக்கிறார்கள் கிறிஸ்தவ மதத்தை கைவிட்டு அடிமைத்தனத்தை வகுத்த இந்து மதத்தில் இருக்க விரும்புகிறார்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கலவரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நாடார்கள் கடினமான உழைப்பால் நாயர்கள் நாயக்கர்கள் அபகரித்த நிலங்களை விலைக்கு வாங்கினர் அபகரிக்கவில்லை அறிவுசார் எழுச்சி மட்டுமே ஒரு சமுதாயத்தை முன்னேற்றும்

jeya said...

http://www.thevarthalam.com/thevar/?p=2808

Unknown said...

Nadar endrume ulaippal uyarnthavargal

மதகைபிரபு நாடார் said...

உண்மை அண்ணாச்சி

Unknown said...

please send your contact my contact S.Siva Bala Solanki, Research Scholar,
Department of Physics, SSN College of Engineering,
Kalavakkam, Chennai-603 110,
Tamilnadu (india).
Mob:+919976915413

Unknown said...

unmaithan nanpa

paramasivan said...

இதில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பாரதம் முடித்து ஸ்ரீரங்கம் நோக்கி வரும்போது ஏழு கன்னிமார் சிவனை தினமும் வழிபாடு செய்து வருகின்றனர். அதைக்கண்ட மகாவிஷ்ணு ஒரு பண்டார வடிவம் எடுத்து அவர்களிடம் கேட்கிறார் தினமும் சிவனை வழிபட்டு வருகிறிர்கவருகிறார்களே, அது போல எனக்கும் பூஜை செய்யுங்கள் என கூறுகிறார். அதற்கு கன்னிகள் ,சிவனை தவிர வேறு யாருக்கும் பூஜை செய்வதில்லை ஏன் அந்த பாற்கடலில் பள்ளிக்கொள்ளும் பரந்தாமன் வந்தால் கூட இல்லை ஆண்டி உனக்கா பூஜை செய்வோம் என ஆணவமாக பேசுகின்றனர். அதனால் அவர்களுக்கு கடும் குளிரை கொடுத்து அனலாக நின்று எரிந்து கொண்டிருக்கிறார் மகாவிஷ்ணு. குளிர் தாங்கமுடியாமல் அனலை அனைக்கும் போது ஏழு கன்னிமார்களுக்கும் ஏழு குழந்தைகள் பிறக்கின்றன. தவறாக குழந்தை பிறந்ததை எண்ணி குழந்தைகளை விட்டிட்டு சிவனை நோக்கி தவம் இருக்க செல்கின்றனர். பிறகு அந்த குழந்தைகளை எடுத்து மகாவிஷ்ணு வளர்க்கிறார்.பின்னர் அவரால் வளர்க்க முடியாமல் அன்னை பத்ரகாளியிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறார்.குழந்தைகளை ஒப்படைக்கும் போது பெயர் சூட்டிக்கொடுக்கிறார் .முதல் பெயரை சிவபெருமான் ,தோண்றாத பொருளை தொடர்ந்து கண்ட மன்னவர்க்கு "சாணார்" என சூட்டினார்.பின்னர் பிரம்மன் "சான்றோர்" என சூட்டுகிறார்.மூன்றாவதாக மகாவிஷ்ணு "நாடாள்வார்"என நாமம் சாற்றி பத்ரகாளியிடம் ஒப்படைக்கிறார்.
__________சான்று_______
அகிலதிரட்டு அம்மானை

Alocius Johnson said...

நாடார் என்ற தமிழனத்தின் குறித்த பகிர்வுகள் நன்று. நாடார்களி Slogan விடுபட்டுள்ளது.

“உண்மை ! உழைப்பு !! உயர்வு !!!”

பெரும்பாலான நாடார் சமுதாயத்தினரின் விளம்பர போர்டுகளில், புத்தகங்களில், கல்விநிறுவனங்களில் நாம் இதனைக் காணலாம்.

Unknown said...

நீங்கள் எழுதிய நாடார் வரலாறு தவரானது.மரம் மட்டும் ஏறவில்லை.,தமிழ்நாட்டை ஆண்ட அரசகுலத்தை சேர்ந்தவர்கள் நாடார்கள்
ஆதரம் இதோ.நாடார் இனம் எப்படி அழிந்தது,எப்படி ஒடுக்கப்பட்டது,நாடர்கள் ஏன் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கொடுமை படுத்த பட்டனர்.இதெற்கெல்லாம் யார் காரணம் ,
நாடாண்ட மன்னர்களாகிய நாம் ஏன் கொடுமை படுத்த பட்டோம்.எப்படி நம்மை கீழ் ஜாதியுடன் சேர்த்தனர் இதற்கெல்லாம் பதிலறிய நாம்
நாம் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

Unknown said...

இங்கிலாந்தின் வட அயர்லாந்து பகுதியில், ஒரு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் (ஒருமை என்று கருத வேண்டாம். இந்த மரியாதையே அதிகம்.) தான் கால்டுவெல். லண்டன் மிஷன் சொசைட்டி என்ற மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உதவியோடு தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முடித்தான்.
1838ல் கால்டுவெல்லை சர்சு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Society of Propagation of the Gospel கால்டுவெல்லை, மதமாற்றம் செய்யும் பொருட்டும், திருநெல்வெலியில் உள்ள இளையான்குடி பகுதிக்கு அனுப்பி வைத்தது. திருநெல்வெலியும் சரி, அதன் அருகில் தென் கோடியில் அமைந்துள்ள குமரியும் சரி - இவ்விரண்டு மாவட்டங்களும் நாடார் சாதி மக்களை அதிகமாக கொண்ட பகுதிகள். ஆதலால், கால்டுவெல்லின் மதமாற்றும் கண்கள் நாடார்கள் மீது விழுந்தது.
கிறித்துவ மதம் நாடார்களை பிரித்தது என்பதற்கு சாட்சி இதோ!
நாடார்களை எப்படி மதம் மாற்றுவது?
நாடார்கள் தங்களை தாங்களே இழிவாக கருத வேண்டும். அந்த இழி நிலைக்கு இந்து சமயமே காரணம் என்று திரிக்க வேண்டும். இதன் மூலம், இந்து சமயத்தின் மீது ஒரு வெறுப்புணர்வை நாடார்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை எளிதாக மதமாற்றிவிடலாம். ஆனால், இவை நடக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? அதற்கு, முதலில் நாடார்களின் பூர்வீக வரலாறு குறித்த பெருமிதத்தை அழிக்க வேண்டும். அதை தான் கால்டுவெல்லும் செய்தான்!

Unknown said...

இதன் முதற்கட்டமாக, 1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினான். இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தில் கால்டுவெல், நாடார்களை தரைகுறைவாக காட்டுமிராண்டிகளாக சித்தரித்து இருந்தான். "நாடார்களின் பூர்விகம் தமிழகம் அல்ல என்றும், அவர்கள் இலங்கையில் இருந்து பனையெறிப் பிழைக்க வந்த வந்தேறிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், நாடார்கள் கடவுளுக்கு பயப்படுகின்றவர்கள் அல்ல(ஏசுவை நினைத்து எழுதப்பட்வையாக இருக்கலாம்!) என்றும், நாடார்கள் மந்த புத்திகாரர்கள், அடிமைகள், மூர்க்கர்கள், எழுத்தறிவு அற்றவர்கள், மிகவும் தரைகுறைவான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்றும், கால்டுவெல் தன் புத்தகத்தில் குறிப்பிட்டான்.
கால்டுவெல்லின் இந்த பொய் பிரச்சாரம் பல வகைகளில் எதிரொலித்தன. எதிரொலிக்கின்றன. இன்று, CBSE பாட புத்தகத்தில் நாடார்களை இழிவு படுத்தியதாக கூறி நாடார் சாதி அமைப்புகள் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றது. ஆனால், அவர்கள் உண்மையில் எதிர்த்து போராட வேண்டியது, கால்டுவெல்லையும், மிஷனரிகளையும் தான். ஏன் என்றால், இவர்கள் பரப்பிய கட்டுக்கதைகளைத் தான் வரலாற்று அவனங்களாக கருத்தில் கொண்டு, CBSE புத்தகத்தில் நாடார்கள் குறித்தான இழிவான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மஷ"நரி"களின் நாடார்கள் பற்றிய பொய் பிரச்சாரம் பிற இந்து சாதியினர் மத்தியிலும் பல வினைகளை உருவாக்கியது. அதப்பற்றி பார்ப்பதற்கு முன், நாடார்கள் இழிவானவர்களா? அடிமைகளா? என்பதை பற்றி பார்போம்.

Unknown said...

1921ல் தான் "நாடார்" என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அரசு மூலம் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன் நாடார்கள் சாணார்கள் என்றே அழைக்கப்பட்டனர். சாணார் என்ற சொல், சான்(றோ)றார் என்ற சொல்லின் திரிந்த பேச்சு வழக்காகும். சான்றோர் என்பதின் பொருள், அறப்போர் மரபிலும், ஆட்சிக் கலையிலும் தேர்ந்த தலைமக்கள் என்பதாகும். நாடார் என்பதின் அர்த்தம் கூட, நாட்டை ஆள்பவர்கள் என்பது தான். கால்டுவெல் கூறுவதை போல, நாடார்கள் மூர்கர்களாகவோ, அடிமைகளாகவோ இருந்திருந்தால், அவர்கள் "சான்றோர் குலத்தவர்" என்று அழைக்கப்பட்டிருப்பரா?
மிஷனரிமார்கள் தங்கள் மதமாற்ற சுயநலத்திற்காக "சாணார்" என்ற சொல்லை இழிவானதாக பிரச்சாரம் செய்ததன் எதிரொலி, சாணார்கள் அப்பெயரை வெறுத்து, தாங்கள் இனி "நாடார்கள்" என்றே அழைக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அது அரசால் 1921ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
உண்மையிலேயே நாடார்கள் சேர, சோழ, பாண்டிய நாட்டின் அரச குலத்தை சார்ந்தவர்கள். அரச குலம் என்றால், போர்த் தொழிலையும், குடிகாவலையும் தன் பரம்பரை உரிமையாக கொண்ட குலம் என்று பொருள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பேஷ்கராக இருந்த நாகம் அய்யா கூட, தனது Travancore State Manual என்ற நூலில், "சான்றோர் சாதியினர், முற்காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள்" என்றே குறிப்பிட்டுள்ளார்.
இப்போ சொல்லுங்க நாடாரை பிரிசது கிறித்துவ மதம் தானே,,இப்படி பட்ட கேவலமான கிறிஸ்துவ மதத்தை நாம் அளிக்கனுமா வேண்டாமா சொல்லுங்க நாடார்களே? என்றும் அன்புடன் தமிழ் செல்வி நாடார்,மேலும் நாடார்கள் பற்றி அறிய தகவல்கள் அறிய facebook la "நாடார்கள் தமிழ் நாட்டின் மன்னர்கள்" குரூப் ல இணையுங்கள்

Unknown said...

நாடார் இனம் எப்படி அழிந்தது,எப்படி ஒடுக்கப்பட்டது,நாடர்கள் ஏன் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கொடுமை படுத்த பட்டனர்.இதெற்கெல்லாம் யார் காரணம் ,
நாடாண்ட மன்னர்களாகிய நாம் ஏன் கொடுமை படுத்த பட்டோம்.எப்படி நம்மை கீழ் ஜாதியுடன் சேர்த்தனர் இதற்கெல்லாம் பதிலறிய நாம்
நாம் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.1814ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்து பகுதியில், ஒரு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் (ஒருமை என்று கருத வேண்டாம். இந்த மரியாதையே அதிகம்.) தான் கால்டுவெல். லண்டன் மிஷன் சொசைட்டி என்ற மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உதவியோடு தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முடித்தான்.
1838ல் கால்டுவெல்லை சர்சு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Society of Propagation of the Gospel கால்டுவெல்லை, மதமாற்றம் செய்யும் பொருட்டும், திருநெல்வெலியில் உள்ள இளையான்குடி பகுதிக்கு அனுப்பி வைத்தது. திருநெல்வெலியும் சரி, அதன் அருகில் தென் கோடியில் அமைந்துள்ள குமரியும் சரி - இவ்விரண்டு மாவட்டங்களும் நாடார் சாதி மக்களை அதிகமாக கொண்ட பகுதிகள். ஆதலால், கால்டுவெல்லின் மதமாற்றும் கண்கள் நாடார்கள் மீது விழுந்தது.
கிறித்துவ மதம் நாடார்களை பிரித்தது என்பதற்கு சாட்சி இதோ!
நாடார்களை எப்படி மதம் மாற்றுவது?
நாடார்கள் தங்களை தாங்களே இழிவாக கருத வேண்டும். அந்த இழி நிலைக்கு இந்து சமயமே காரணம் என்று திரிக்க வேண்டும். இதன் மூலம், இந்து சமயத்தின் மீது ஒரு வெறுப்புணர்வை நாடார்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை எளிதாக மதமாற்றிவிடலாம். ஆனால், இவை நடக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? அதற்கு, முதலில் நாடார்களின் பூர்வீக வரலாறு குறித்த பெருமிதத்தை அழிக்க வேண்டும். அதை தான் கால்டுவெல்லும் செய்தான்!
இதன் முதற்கட்டமாக, 1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினான். இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தில் கால்டுவெல், நாடார்களை தரைகுறைவாக காட்டுமிராண்டிகளாக சித்தரித்து இருந்தான். "நாடார்களின் பூர்விகம் தமிழகம் அல்ல என்றும், அவர்கள் இலங்கையில் இருந்து பனையெறிப் பிழைக்க வந்த வந்தேறிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், நாடார்கள் கடவுளுக்கு பயப்படுகின்றவர்கள் அல்ல(ஏசுவை நினைத்து எழுதப்பட்வையாக இருக்கலாம்!) என்றும், நாடார்கள் மந்த புத்திகாரர்கள், அடிமைகள், மூர்க்கர்கள், எழுத்தறிவு அற்றவர்கள், மிகவும் தரைகுறைவான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்றும், கால்டுவெல் தன் புத்தகத்தில் குறிப்பிட்டான்.

Unknown said...

நாடார் இனம் எப்படி அழிந்தது,எப்படி ஒடுக்கப்பட்டது,நாடர்கள் ஏன் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கொடுமை படுத்த பட்டனர்.இதெற்கெல்லாம் யார் காரணம் ,
நாடாண்ட மன்னர்களாகிய நாம் ஏன் கொடுமை படுத்த பட்டோம்.எப்படி நம்மை கீழ் ஜாதியுடன் சேர்த்தனர் இதற்கெல்லாம் பதிலறிய நாம்
நாம் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.1814ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்து பகுதியில், ஒரு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் (ஒருமை என்று கருத வேண்டாம். இந்த மரியாதையே அதிகம்.) தான் கால்டுவெல். லண்டன் மிஷன் சொசைட்டி என்ற மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உதவியோடு தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முடித்தான்.
1838ல் கால்டுவெல்லை சர்சு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Society of Propagation of the Gospel கால்டுவெல்லை, மதமாற்றம் செய்யும் பொருட்டும், திருநெல்வெலியில் உள்ள இளையான்குடி பகுதிக்கு அனுப்பி வைத்தது. திருநெல்வெலியும் சரி, அதன் அருகில் தென் கோடியில் அமைந்துள்ள குமரியும் சரி - இவ்விரண்டு மாவட்டங்களும் நாடார் சாதி மக்களை அதிகமாக கொண்ட பகுதிகள். ஆதலால், கால்டுவெல்லின் மதமாற்றும் கண்கள் நாடார்கள் மீது விழுந்தது.
கிறித்துவ மதம் நாடார்களை பிரித்தது என்பதற்கு சாட்சி இதோ!
நாடார்களை எப்படி மதம் மாற்றுவது?
நாடார்கள் தங்களை தாங்களே இழிவாக கருத வேண்டும். அந்த இழி நிலைக்கு இந்து சமயமே காரணம் என்று திரிக்க வேண்டும். இதன் மூலம், இந்து சமயத்தின் மீது ஒரு வெறுப்புணர்வை நாடார்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை எளிதாக மதமாற்றிவிடலாம். ஆனால், இவை நடக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? அதற்கு, முதலில் நாடார்களின் பூர்வீக வரலாறு குறித்த பெருமிதத்தை அழிக்க வேண்டும். அதை தான் கால்டுவெல்லும் செய்தான்!
இதன் முதற்கட்டமாக, 1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினான். இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தில் கால்டுவெல், நாடார்களை தரைகுறைவாக காட்டுமிராண்டிகளாக சித்தரித்து இருந்தான். "நாடார்களின் பூர்விகம் தமிழகம் அல்ல என்றும், அவர்கள் இலங்கையில் இருந்து பனையெறிப் பிழைக்க வந்த வந்தேறிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், நாடார்கள் கடவுளுக்கு பயப்படுகின்றவர்கள் அல்ல(ஏசுவை நினைத்து எழுதப்பட்வையாக இருக்கலாம்!) என்றும், நாடார்கள் மந்த புத்திகாரர்கள், அடிமைகள், மூர்க்கர்கள், எழுத்தறிவு அற்றவர்கள், மிகவும் தரைகுறைவான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்றும், கால்டுவெல் தன் புத்தகத்தில் குறிப்பிட்டான்.

Unknown said...

நாடார் இனம் எப்படி அழிந்தது,எப்படி ஒடுக்கப்பட்டது,நாடர்கள் ஏன் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கொடுமை படுத்த பட்டனர்.இதெற்கெல்லாம் யார் காரணம் ,
நாடாண்ட மன்னர்களாகிய நாம் ஏன் கொடுமை படுத்த பட்டோம்.எப்படி நம்மை கீழ் ஜாதியுடன் சேர்த்தனர் இதற்கெல்லாம் பதிலறிய நாம்
நாம் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.1814ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்து பகுதியில், ஒரு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் (ஒருமை என்று கருத வேண்டாம். இந்த மரியாதையே அதிகம்.) தான் கால்டுவெல். லண்டன் மிஷன் சொசைட்டி என்ற மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உதவியோடு தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முடித்தான்.
1838ல் கால்டுவெல்லை சர்சு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Society of Propagation of the Gospel கால்டுவெல்லை, மதமாற்றம் செய்யும் பொருட்டும், திருநெல்வெலியில் உள்ள இளையான்குடி பகுதிக்கு அனுப்பி வைத்தது. திருநெல்வெலியும் சரி, அதன் அருகில் தென் கோடியில் அமைந்துள்ள குமரியும் சரி - இவ்விரண்டு மாவட்டங்களும் நாடார் சாதி மக்களை அதிகமாக கொண்ட பகுதிகள். ஆதலால், கால்டுவெல்லின் மதமாற்றும் கண்கள் நாடார்கள் மீது விழுந்தது.
கிறித்துவ மதம் நாடார்களை பிரித்தது என்பதற்கு சாட்சி இதோ!
நாடார்களை எப்படி மதம் மாற்றுவது?
நாடார்கள் தங்களை தாங்களே இழிவாக கருத வேண்டும். அந்த இழி நிலைக்கு இந்து சமயமே காரணம் என்று திரிக்க வேண்டும். இதன் மூலம், இந்து சமயத்தின் மீது ஒரு வெறுப்புணர்வை நாடார்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை எளிதாக மதமாற்றிவிடலாம். ஆனால், இவை நடக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? அதற்கு, முதலில் நாடார்களின் பூர்வீக வரலாறு குறித்த பெருமிதத்தை அழிக்க வேண்டும். அதை தான் கால்டுவெல்லும் செய்தான்!
இதன் முதற்கட்டமாக, 1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினான். இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தில் கால்டுவெல், நாடார்களை தரைகுறைவாக காட்டுமிராண்டிகளாக சித்தரித்து இருந்தான். "நாடார்களின் பூர்விகம் தமிழகம் அல்ல என்றும், அவர்கள் இலங்கையில் இருந்து பனையெறிப் பிழைக்க வந்த வந்தேறிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், நாடார்கள் கடவுளுக்கு பயப்படுகின்றவர்கள் அல்ல(ஏசுவை நினைத்து எழுதப்பட்வையாக இருக்கலாம்!) என்றும், நாடார்கள் மந்த புத்திகாரர்கள், அடிமைகள், மூர்க்கர்கள், எழுத்தறிவு அற்றவர்கள், மிகவும் தரைகுறைவான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்றும், கால்டுவெல் தன் புத்தகத்தில் குறிப்பிட்டான்.

Unknown said...

நாடார் இனம் எப்படி அழிந்தது,எப்படி ஒடுக்கப்பட்டது,நாடர்கள் ஏன் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கொடுமை படுத்த பட்டனர்.இதெற்கெல்லாம் யார் காரணம் ,
நாடாண்ட மன்னர்களாகிய நாம் ஏன் கொடுமை படுத்த பட்டோம்.எப்படி நம்மை கீழ் ஜாதியுடன் சேர்த்தனர் இதற்கெல்லாம் பதிலறிய நாம்
நாம் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.1814ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்து பகுதியில், ஒரு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் (ஒருமை என்று கருத வேண்டாம். இந்த மரியாதையே அதிகம்.) தான் கால்டுவெல். லண்டன் மிஷன் சொசைட்டி என்ற மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உதவியோடு தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முடித்தான்.
1838ல் கால்டுவெல்லை சர்சு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Society of Propagation of the Gospel கால்டுவெல்லை, மதமாற்றம் செய்யும் பொருட்டும், திருநெல்வெலியில் உள்ள இளையான்குடி பகுதிக்கு அனுப்பி வைத்தது. திருநெல்வெலியும் சரி, அதன் அருகில் தென் கோடியில் அமைந்துள்ள குமரியும் சரி - இவ்விரண்டு மாவட்டங்களும் நாடார் சாதி மக்களை அதிகமாக கொண்ட பகுதிகள். ஆதலால், கால்டுவெல்லின் மதமாற்றும் கண்கள் நாடார்கள் மீது விழுந்தது.
கிறித்துவ மதம் நாடார்களை பிரித்தது என்பதற்கு சாட்சி இதோ!
நாடார்களை எப்படி மதம் மாற்றுவது?
நாடார்கள் தங்களை தாங்களே இழிவாக கருத வேண்டும். அந்த இழி நிலைக்கு இந்து சமயமே காரணம் என்று திரிக்க வேண்டும். இதன் மூலம், இந்து சமயத்தின் மீது ஒரு வெறுப்புணர்வை நாடார்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை எளிதாக மதமாற்றிவிடலாம். ஆனால், இவை நடக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? அதற்கு, முதலில் நாடார்களின் பூர்வீக வரலாறு குறித்த பெருமிதத்தை அழிக்க வேண்டும். அதை தான் கால்டுவெல்லும் செய்தான்!
இதன் முதற்கட்டமாக, 1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினான். இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தில் கால்டுவெல், நாடார்களை தரைகுறைவாக காட்டுமிராண்டிகளாக சித்தரித்து இருந்தான். "நாடார்களின் பூர்விகம் தமிழகம் அல்ல என்றும், அவர்கள் இலங்கையில் இருந்து பனையெறிப் பிழைக்க வந்த வந்தேறிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், நாடார்கள் கடவுளுக்கு பயப்படுகின்றவர்கள் அல்ல(ஏசுவை நினைத்து எழுதப்பட்வையாக இருக்கலாம்!) என்றும், நாடார்கள் மந்த புத்திகாரர்கள், அடிமைகள், மூர்க்கர்கள், எழுத்தறிவு அற்றவர்கள், மிகவும் தரைகுறைவான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்றும், கால்டுவெல் தன் புத்தகத்தில் குறிப்பிட்டான்.

Unknown said...

நாடார் இனம் எப்படி அழிந்தது,எப்படி ஒடுக்கப்பட்டது,நாடர்கள் ஏன் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கொடுமை படுத்த பட்டனர்.இதெற்கெல்லாம் யார் காரணம் ,
நாடாண்ட மன்னர்களாகிய நாம் ஏன் கொடுமை படுத்த பட்டோம்.எப்படி நம்மை கீழ் ஜாதியுடன் சேர்த்தனர் இதற்கெல்லாம் பதிலறிய நாம்
நாம் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.1814ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்து பகுதியில், ஒரு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் (ஒருமை என்று கருத வேண்டாம். இந்த மரியாதையே அதிகம்.) தான் கால்டுவெல். லண்டன் மிஷன் சொசைட்டி என்ற மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உதவியோடு தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முடித்தான்.
1838ல் கால்டுவெல்லை சர்சு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Society of Propagation of the Gospel கால்டுவெல்லை, மதமாற்றம் செய்யும் பொருட்டும், திருநெல்வெலியில் உள்ள இளையான்குடி பகுதிக்கு அனுப்பி வைத்தது. திருநெல்வெலியும் சரி, அதன் அருகில் தென் கோடியில் அமைந்துள்ள குமரியும் சரி - இவ்விரண்டு மாவட்டங்களும் நாடார் சாதி மக்களை அதிகமாக கொண்ட பகுதிகள். ஆதலால், கால்டுவெல்லின் மதமாற்றும் கண்கள் நாடார்கள் மீது விழுந்தது.
கிறித்துவ மதம் நாடார்களை பிரித்தது என்பதற்கு சாட்சி இதோ!
நாடார்களை எப்படி மதம் மாற்றுவது?
நாடார்கள் தங்களை தாங்களே இழிவாக கருத வேண்டும். அந்த இழி நிலைக்கு இந்து சமயமே காரணம் என்று திரிக்க வேண்டும். இதன் மூலம், இந்து சமயத்தின் மீது ஒரு வெறுப்புணர்வை நாடார்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை எளிதாக மதமாற்றிவிடலாம். ஆனால், இவை நடக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? அதற்கு, முதலில் நாடார்களின் பூர்வீக வரலாறு குறித்த பெருமிதத்தை அழிக்க வேண்டும். அதை தான் கால்டுவெல்லும் செய்தான்!
இதன் முதற்கட்டமாக, 1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினான். இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தில் கால்டுவெல், நாடார்களை தரைகுறைவாக காட்டுமிராண்டிகளாக சித்தரித்து இருந்தான். "நாடார்களின் பூர்விகம் தமிழகம் அல்ல என்றும், அவர்கள் இலங்கையில் இருந்து பனையெறிப் பிழைக்க வந்த வந்தேறிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், நாடார்கள் கடவுளுக்கு பயப்படுகின்றவர்கள் அல்ல(ஏசுவை நினைத்து எழுதப்பட்வையாக இருக்கலாம்!) என்றும், நாடார்கள் மந்த புத்திகாரர்கள், அடிமைகள், மூர்க்கர்கள், எழுத்தறிவு அற்றவர்கள், மிகவும் தரைகுறைவான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்றும், கால்டுவெல் தன் புத்தகத்தில் குறிப்பிட்டான்.

கவிதை வானம் said...

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக வந்தப் பிறகுதான் நாடார் இனம் உயர்வு அடைந்ததாக பலர் நினைக்கிறார்கள் கடினமான உழைப்பும் மனிதாபிமானமும் சாதி மத வேறுபாடு இல்லாமையுமே அந்த இனத்தின் வெற்றியாகும்
உங்கள் பதிவில் நாடார் இனம் எப்படி உயர்வடைந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம் ஆனாலும் தங்கள் பதிவு பாராட்டத்தக்கது நண்பரே

pazhani said...

நாடார் இல்லா ஊருக்கு அழகு பாழ்

Unknown said...

நாடார் வம்சத்தில் பிறந்ததற்கு பெருமைப்படுகின்றேன்
மேலும் ஓர் உதவி தேவைப்படுகிறது.
கொங்குநாடார்,பாலன் குலம்.
எங்களது குலதெய்வம் என்னவென்று தெரியப்படுத்தவும். நன்றி..

Unknown said...

ஐயா
எனது வலைத்தள முகவரி
vaishujgv@gmail.com
Ph no;9894438087

Unknown said...

சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

Unknown said...

சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

Unknown said...

சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

Unknown said...

சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

Unknown said...

உங்களது பதிவுகளில் 20% உண்மை உள்ளது. வரலாற்றை நனறாக ஆராய்ந்து தேடி கண்டு பிடித்து அதன் பின் இது போன்ற பதிவுகள் போடவும். இந்த பதிவின் தலைப்பிலேயே உங்கள் காழ்ப்புணர்ச்சி தெள்ளத்தெளிவாகின்றது.

Unknown said...

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

Unknown said...

சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

Unknown said...

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

Unknown said...

பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.

பனை ஓலையில் தான் சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்டன மறந்துவிட்டீர்களா? இந்த அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படியென்றால் பனை இழைகள் இலங்கையிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டு. அதை சந்தையில் வாங்கி அறிஞர்கள் இலக்கியம் இயற்றினார்களா?

அந்த இலங்கை பனையதான் பலராமன் கொடியாகக் கொண்டானா?
“அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்”

“வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப்
பானிற வண்ணன்” –(கலித்தொகை 104-7,8)
(நாஞ்சில் – கலப்பை ; கலப்பை ஆயுதத்தையும் பனைக்கொடியையும் உடைய பலராமன்)

Unknown said...

பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.

பனை ஓலையில் தான் சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்டன மறந்துவிட்டீர்களா? இந்த அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படியென்றால் பனை இழைகள் இலங்கையிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டு. அதை சந்தையில் வாங்கி அறிஞர்கள் இலக்கியம் இயற்றினார்களா?

அந்த இலங்கை பனையதான் பலராமன் கொடியாகக் கொண்டானா?
“அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்”

“வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப்
பானிற வண்ணன்” –(கலித்தொகை 104-7,8)
(நாஞ்சில் – கலப்பை ; கலப்பை ஆயுதத்தையும் பனைக்கொடியையும் உடைய பலராமன்)

Unknown said...

பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.

பனை ஓலையில் தான் சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்டன மறந்துவிட்டீர்களா? இந்த அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படியென்றால் பனை இழைகள் இலங்கையிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டு. அதை சந்தையில் வாங்கி அறிஞர்கள் இலக்கியம் இயற்றினார்களா?

அந்த இலங்கை பனையதான் பலராமன் கொடியாகக் கொண்டானா?
“அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்”

“வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப்
பானிற வண்ணன்” –(கலித்தொகை 104-7,8)
(நாஞ்சில் – கலப்பை ; கலப்பை ஆயுதத்தையும் பனைக்கொடியையும் உடைய பலராமன்)

Unknown said...

பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.

பனை ஓலையில் தான் சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்டன மறந்துவிட்டீர்களா? இந்த அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படியென்றால் பனை இழைகள் இலங்கையிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டு. அதை சந்தையில் வாங்கி அறிஞர்கள் இலக்கியம் இயற்றினார்களா?

அந்த இலங்கை பனையதான் பலராமன் கொடியாகக் கொண்டானா?
“அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்”

“வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப்
பானிற வண்ணன்” –(கலித்தொகை 104-7,8)
(நாஞ்சில் – கலப்பை ; கலப்பை ஆயுதத்தையும் பனைக்கொடியையும் உடைய பலராமன்)
பாண்டிய நாட்டின் அரச மரம் பனை மரம்.
சான்றோர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அல்லர்.
இவர்கள் அரசாட்சி காலத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் பங்கு கொண்டவர்கள் ஆவர் (இப்பொழுதும் மார்த்தாண்டத்தின் அருகில் தச்சன் விளாகம் என்ற ஊரில் மார்த்தாண்ட வர்ம மகாராஜாவின் தளபதியான அனந்த பத்ம நாடாரின் கல்லறை இருக்கின்றது,(வேணாட்டின் (வேணாடு) 108 களரிகளின் தலைமை வகித்தவர் ) இதில் ஒரு களரி ஆசான் தான் எனது பாட்டன் "பொன்னையன் களரி ஆசான்".)
அந்த காலத்தில் நாடுவிட்டு நாடு படையெடுத்து சென்று கைபற்றும் இடங்களை தக்க வைத்து கொள்வதர்காக ஒரு குறிப்பிட்ட படையை அங்கே நிலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தபடும் வீர‍ர்கள் அதிகமானோர் அங்கேயே செட்டில் ஆவார்களாம்.அப்படி நிலை நிறுத்தபடவர்கள் தான் இலங்கை சான்றோர்களும்.இதுதான் சான்றோர்கள் ஈழத்தில் இருப்பதர்க்கான உண்மையான வரலாறு.
உதாரணம்: இப்பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்துர், போன்ற இடங்களில் நாயுடு (தெலுங்கர்கள்)வசிப்பதும், பேங்களூர்,கர்நாடகா, ஹைதராபாத், மற்றும் வடமாநிலங்களிலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிப்பதும் இதுவேதான் காரணமல்லாமல்...வய்ற்று பிழைப்பு தேடி குடி பெயர்ந்தவர்கள் அல்லர்.
இல்லாமல் இங்கே மதமாற்ற வந்த கால்டு வெல்லும், காழ்ப்பணர்ச்சி காரணமாக சான்றோரை வாய்க்கு வந்தபடி வரலாற்றை திரித்து பேசும் ஆரானும்...ஊரானும் இந்த சான்றோர்களின் அத்தாரிட்டிகள் அல்லர்.

உழைப்பும்,முன்னேற்றமும், சுறுசுறுப்பும், வீரமும், விவேகமும், தைரியமும், எந்த இனத்துக்கும் இடைலேயே கிடைத்து விடாது.
அது ஒவ்வொரு சான்றோனின் மரபிலும்..ஜீனிலும்...வாழையடி வாழையாக ஊறி வருகின்றது...
இது கடையில் விற்க்கும் பொருட்கள் அல்ல இடையில் வாங்கி சொருகுவதர்க்கு.
அடியில் குழி பறித்து அமுக்கினாலும், அடிமையாக அமுங்கி கிடக்காமல்...ஆர்ப்பரித்து எழுபவர்கள் தான் சான்றோர்கள்.

வழிப்போக்கன் said...

பத்திரிக்கைத் தொழில் ஜாம்பவானான சி.பா. ஆதித்தனாரைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையே. ஏன்? தந்தி நாளிதழ் தவிர, சன் பேப்பர் மில்ஸ் தொடங்கி பலருக்கு வாழ்வளித்தவர். நான் அவரிடம் பணியாற்றியதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.

குமார் said...

நான் சான்றோர் அல்லது சான்றார் அல்லது சானார் குலத்தை சார்ந்தவன் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்தந்த வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம் இது எதற்காக என்றால் வாசகர்கள் பதிவுகள் அனைத்திர்க்கும் உங்களின் நேர்த்தியான பதில் என்னை வியக்க வைக்கிறது யார் மனதும் காய படாமல் உள்ளது உங்கள்பதில் நான் எத்தனையோ பதிவை பார்த்து கொண்டு இருக்கின்றொன் நீங்கள் பதில் சொல்வது போல் யாரையும் பாதிக்ஙகாமல் யாரும் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து

leo said...

super anna.. unka kita nadar pathiya books iruka.
na padikanum niraiya.. nama history therinchikanum
.. pdf file vachirukinkala

ஜோதிஜி said...

நன்றி வழிப்போக்கன்......... நான் மேலோட்டமாகத்தான் எழுதி உள்ளேன். இது மிகப் பெரிய களம்.

ஜோதிஜி said...

நிச்சயம். மனம் இருந்தால் நிச்சயம் ஏதோவொரு சமயத்தில் நம்மால் வெல்ல முடியும் என்பதற்கு நாடார்கள் வாழ்க்கை ஒரு உதாரணம். நன்றி.

ஜோதிஜி said...

அது தலைப்பின் கவர்ச்சிக்காக வைத்த பெயர்.

ஜோதிஜி said...

புதிய செய்தி. நன்றி. வரலாற்றில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இருப்பதற்கு மகிழ்ச்சி.

ஜோதிஜி said...

மன்னிக்கவும். அது குறித்து எதுவும் தெரியவில்லை மோகன் குமார்.

ஜோதிஜி said...

நன்றி

Unknown said...

https://m.facebook.com/groups/239658926606863?view=permalink&id=377219802850774&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100007965674244%253AVK%253A377219802850774%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dfalse%26perm%26loc%3Dpermalink&mdf=1

Nanjil Siva said...

"ரொம்ப பெரும்மைய்யாயா இருக்கு"

Unknown said...

அரசாங்கத்திடம் கையேந்தவில்லை

VILMEENKODI said...

துளு படையெடுப்பு

கி.பி 1120 இல் சேர நாடு பாணப்பெருமாள்(பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசரின் படையெடுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னர் கவி அலுபேந்திராவின் (கி.பி 1110 முதல் கி.பி 1160 வரை) சகோதரர் பாணப்பெருமாள் ஆவார். 350000 எண்ணிக்கையிலான நாயர்களின் வலுவான படையுடன் பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார். இது கடலோர கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு துளு-நேபாள நாயர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆகும்.

நாயர்கள் அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். நம்பூதிரிகள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து வந்த பிராமணர்கள் ஆவர். கடம்ப மன்னர் மயூரா வர்மா 345 கி.பி யில் அஹிச்சத்திரத்தில் இருந்து ஆரியர்களையும் நாகர்களையும் கொண்டு வந்தார்.


துளு இளவரசர் பாணப்பெருமாள் அரபு ராணுவத்தின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் பாணப்பெருமாள் தனது தலைநகரை நிறுவினார். வில்லவர் சேர வம்சம் கொடுங்கல்லூரிலிருந்து கொல்லத்திற்கு மாறியது. பின்னர் பாணப்பெருமாள் கொடுங்கலூரை ஆக்கிரமித்து, அங்கிருந்து 36 ஆண்டுகள் 1120 கி.பி முதல் 1156 கிபி வரை ஆட்சி புரிந்தார். பின்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத்தழுவி அரேபியாவுக்குச் சென்றார். அவரது மகன் உதயவர்மன் கோலாத்திரி 1156 ஆம் ஆண்டில் கோலாத்திரி வம்சத்தை நிறுவினார்.

இவ்வாறு வடக்கு கேரளா துளு-நேபாள மக்களால் ஆளப்பட்டது. கிபி 1310ல் டெல்லி சுல்தானால் பாண்டியன் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அனைத்து கேரளமும் துளு-நேபாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துளு வம்சத்திற்கு அரேபியர்களின் மற்றும் டெல்ஹி சுல்தானேட்.டின் ஆதரவு இருந்தது.


கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா மற்றும் நம்பூதிரிகளுக்கு வழங்கப்பட்டது.

கிபி 1335 ல் நான்கு மருமக்கள்வழி ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன.
அவை

1. கண்ணூரின் கோலாத்திரி வம்சம்
2. கோழிக்கோடு சாமுதிரி வம்சம்
3. கொச்சியின் பெரும்படப்பு ஸ்வரூபம்
4. வேணாட்டின் ஆற்றிங்கல் ஸ்வரூபம்



தமிழ் வில்லவர்கள் மேலும் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கேரளாவின் வில்லவர்கள் கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளை கட்டினர். சோழர்கள் களக்காட்டில் கோட்டையை கட்டினர். பாண்டியர்கள் கல்லிடைகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர். வில்லவர் குலங்களின் இந்த கோட்டைகள் 1600 வரை இருந்தன.

துளு பிராமணர்கள் கி.பி 1335 க்குப் பிறகு தம்மை நம்பூதிரிகள் என்று அழைக்கத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் துளு-நேபாள இராச்சியங்களைப் பாதுகாத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மிஷனரிகள் மலையாளத்தில் சுமார் மூவாயிரம் நேபாள வார்த்தைகளைச் சேர்த்தனர். நாடார்கள் அடக்கப்பட்டனர். அவர்களின் மொழியாகிய மலயாண்மை மொழி அழிக்கப்பட்டது. அவர்களின் பெண்கள் தோளுக்கு மேலே துணி அணிய அனுமதிக்கப்படவில்லை. உயர்குடி பெண்கள் மட்டுமே தோள் சீலை அணிய முடியும். நாடார் பெண்கள் 1600 வரை தோள் சீலை அணிந்திருந்தனர்.

கேரள நாடார்கள் ஒரு நில பிரபு வர்க்க மக்கள். ஆனால் பத்து ஏக்கருக்கு மேல் நிலங்களை நாடார்கள் சொந்தமாக்க முடியாத வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் கி.பி 1807 இல் நாடார்களுக்காக ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். தெக்கன் களரி என்னும் போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள். நாடார்கள் இரட்டைக்குழல் கைத்துப்பாக்கிகளை பதிநேழாம் நூற்றாண்டிலும் பயன்படுத்தினர்.

பிரிட்டிஷ் காரர்கள் திருவாங்கூரின் பாதுகாவலர்களாக மாறிய பின்னரே, திருவிதாங்கூர் மன்னர்களுக்கு திமிர்பிடித்தது.

1696 ஆம் ஆண்டில் பேப்பூரிலிருந்து ஒரு குறுநில மன்னரின் இரண்டு மகன்கள் பிரிட்டிஷ் பாதுகாப்பின் கீழ் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

அனந்த பத்மநாபன் நாடார் 1729 ஆம் ஆண்டில் மார்த்தாண்டா வர்மா என்ற ஒரு ராஜாவைக் காப்பாற்றினார். அனந்த பத்மநாபன் நாடார் சுமார் முப்பது குறுப்பு மற்றும் நாயர் வீரர்களை ஒற்றைக்கு கொன்றார். ஆனால் நன்றியற்ற மார்த்தாண்ட வர்மா ராமைய்யன் என்ற பிராமண மந்திரியின் ஆலோசனைப்படி அனந்தபத்மநாபன் நாடாரை விருந்துக்கு அழைத்து கொன்றார். மார்த்தாண்ட வர்மா நாடார்களை இராணுவ சேவையில் இருந்து நீக்கிவிட்டார். தர்மராஜா என்று அழைக்கப்படும் அடுத்த மன்னர் நாடார்களை ஊழியம் என்ற அடிமை வேலை செய்ய கட்டாயப்படுத்தினார்.

நாயர்கள் துளு- நேபாள வம்சாவளியைக் கொண்டுள்ளனர் மற்றும் இன ரீதியாக தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அவர்களின் நேபாள தோற்றம் காரணமாக நாயர்கள் ஒரு வெள்ளை - மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளனர். மற்றும் நாயர்கள் சற்று மங்கோலிய முக அம்சங்களைக் கொண்டுள்ளனர்.



VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்
____________________________________

பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

வில்லவர் குலங்கள்

1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்

வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

4. மீனவர்

பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

வில்லவர் பட்டங்கள்
______________________________________

வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்

அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

முக்கியத்துவத்தின் ஒழுங்கு

1. சேர இராச்சியம்

வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்

2. பாண்டியன் பேரரசு

வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்

3. சோழப் பேரரசு

வானவர்
வில்லவர்
மலையர்

பாணா மற்றும் மீனா
_____________________________________

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

அசாம்

சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

மஹாபலி

பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

ஹிரண்யகர்பா சடங்கு

வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

VILMEENKODI said...

துளு படையெடுப்பு

கி.பி 1120 இல் சேர நாடு பாணப்பெருமாள்(பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசர் படையெடுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னர் கவி அலுபேந்திராவின் (கி.பி 1110 முதல் கி.பி 1160 வரை) சகோதரர் பாணப்பெருமாள் ஆவார். 350000 எண்ணிக்கையிலான நாயர்களின் வலுவான படையுடன் பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார். இது கடலோர கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு துளு-நேபாள நாயர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆகும்.

நாயர்கள் அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். நம்பூதிரிகள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து வந்த பிராமணர்கள் ஆவர். கடம்ப மன்னர் மயூரா வர்மா 345 கி.பி யில் அஹிச்சத்திரத்தில் இருந்து ஆரியர்களையும் நாகர்களையும் கொண்டு வந்தார்.

பாணப்பெருமாளுக்கு அரபு ஆதரவு

துளு இளவரசர் பாணப்பெருமாள் அரபு ராணுவத்தின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் பாணப்பெருமாள் தனது தலைநகரை நிறுவினார். வில்லவர் சேர வம்சம் கொடுங்கல்லூரிலிருந்து கொல்லத்திற்கு மாறியது. பின்னர் பாணப்பெருமாள் கொடுங்கலூரை ஆக்கிரமித்து, அங்கிருந்து 36 ஆண்டுகள் 1120 கி.பி முதல் 1156 கிபி வரை ஆட்சி புரிந்தார். பின்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத்தழுவி அரேபியாவுக்குச் சென்றார். அவரது மகன் உதயவர்மன் கோலத்திரி 1156 ஆம் ஆண்டில் கோலத்திரி வம்சத்தை நிறுவினார்.

மஹோதயபுரம் சேரரின் தலைநகர் மாற்றம்

கி.பி 1075 முதல் அலுபா இராச்சியத்தின் துளு படையினரால் கேரளா தாக்கப்பட்டது, கடைசி கொடுங்கலூர் தமிழ் சேர மன்னர ராமவர்மா குலசேகரப்பெருமாள் தமது தலைநகரத்தை கொல்லத்திற்கு மாற்றுமாறு கட்டாயப்படுத்தியது. ராமவர்மா சேரா-ஆய் வம்சத்தின் ராஜாவாக ராமர் திருவடியாக மாறினார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை ஒருபோதும் பிரிக்கவில்லை. கொல்லத்தின் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார். இது பிற்கால சேர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வில்லவர் குலங்கள் கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தன.

கி.பி 1310 இல் பாண்டியன் இராச்சியத்துடன் மாலிக் காஃபூரின் போர்

இவ்வாறு வடக்கு கேரளா துளு-நேபாள மக்களால் ஆளப்பட்டது.
இரண்டு பாண்டிய இளவரசர்களுக்கிடையில் நடந்த போரில் டெல்லி சுல்தானேட் தலையிட அழைக்கப்பட்டார். 2 லட்சம் வலுவான டெல்ஹி இராணுவத்தின் தளபதி மாலிக் கஃபூர், 50000 போர்வீரரகளை மட்டுமே கொண்டிருந்த பாண்டிய நாட்டை ஆக்கிரமித்தார். பாண்டிய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது மற்றும் மதுரை துருக்கி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. தோல்விக்குப் பிறகும் வில்லவர்கள் டெல்ஹி படைகளால் வேட்டையாடப்பட்டனர்.

கிபி 1310ல் டெல்லி சுல்தானால் பாண்டியன் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அனைத்து கேரளமும் துளு-நேபாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துளு வம்சத்திற்கு அரேபியர்களின் மற்றும் டெல்ஹி சுல்தானேட்.டின் ஆதரவு இருந்தது.

துளு சாமந்தா ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கேரளா

கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா மற்றும் நம்பூதிரிகளுக்கு வழங்கப்பட்டது.

கிபி 1335 ல் நான்கு மருமக்கள்வழி ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன.
அவை

1. கண்ணூரின் கோலத்திரி வம்சம்
2. கோழிக்கோடு சாமூதிரி வம்சம்
3. கொச்சியின் பெரும்படப்பு ஸ்வரூபம்
4. வேணாட்டின் ஆற்றிங்கல் ஸ்வரூபம்

கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு தமிழ் வில்லவர் இடம்பெயர்வு

தமிழ் வில்லவர்கள் மேலும் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கேரளாவின் வில்லவர்கள் கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளை கட்டினர். சோழர்கள் களக்காட்டில் கோட்டையை கட்டினர். பாண்டியர்கள் கல்லிடைகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர். வில்லவர் குலங்களின் இந்த கோட்டைகள் 1600 வரை இருந்தன.

வேளாளர் நாயருடன் சேர்ந்தனர்

கி.பி 1335 இல் துளு ஆட்சி நிறுவப்பட்டபோது
வேளாளர் மருமக்கத்தாயம் மற்றும் பெண்வழி வாரிசுரிமை என்னும் நாயர் பழக்கவழக்கங்களை ஏற்றுகொண்டனர். பல கணவருடைமை சம்பந்தம் என்னும் சம்பிரதாயங்ஙளையும் கடைப்பிடித்து வந்தனர்.
நாயர் தாய்மார்களின் குடும்பப் பெயர்களைப் பயன்படுத்துவதால், இப்போது பல நாயர்களில் வெள்ளாளரின் பிள்ளை குடும்பப்பெயர் உள்ளது.

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்


நாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________

கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்

இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________

பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

வில்லவர்களின் முடிவு

1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________

கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

ஆந்திரபிரதேச பாணர்கள்

ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.

பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________

முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு

பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு