Thursday, March 19, 2020

1000

2009 ஜூலை  2020 மார்ச்
10 வருடங்கள் 8 மாதங்கள்
1000 பதிவுகள்

10 வருடங்கள் - கற்றதும் பெற்றதும்


முன் கூட்டிய எச்சரிக்கை 

இது பத்து வருடக் கதை. மிக நீண்ட பதிவு. உங்களால் பத்து நிமிடங்களில் வாசிக்க முடியாது. ஆனால் உங்களை விருப்பத்துடன் வாசிக்க வைக்க முயன்றுள்ளேன்.

முன் தகவல் அறிக்கை

(இணையத்தில் தொடர்ந்து செயல்படுவதும், விட்டு விலகியிருப்பதும், வேடிக்கை மட்டும் பார்ப்பது என் வாடிக்கையாக இருப்பதால் அடுத்த முப்பது நாட்கள் எனக்கு வேடிக்கை நாட்கள். வீட்டில் "பெண்கள் நலக் கூட்டணி"க்கு அடுத்த அறுபது நாட்கள் கொண்டாட்ட நாட்கள்.  வீட்டுச் சபாநாயகரும் அப்பாடா என்று காலையில் தாமதமாக எழும் நாட்கள். இருதயம் பலகீனமானவர்கள், மதப்பற்று உள்ளவர்கள், அதி தீவிர கட்சி விசுவாசிகள், மோடி எதிர்ப்பாளர்கள் வாசிப்பதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது)

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக நீண்ட பதிவு)

1000 குறித்து?

மதுரைத் தமிழன், கிருஷ்ணமூர்த்தி, கிரி போன்றவர்கள் பல மடங்கு கடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். துளசி டீச்சர் 2000 கடந்து சென்று இருக்க வாய்ப்புண்டு. நான் அவவ்ப்போது வனவாசம் சென்று விடுவதுண்டு. கடந்த பத்தாண்டுகளில் திரட்டி உலகம், திரட்டிகள் இல்லாத உலகம், ஃபேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் போன்ற தலைமுறைகளைக் கடந்து இன்னமும் எழுத வாய்ப்பு அமைந்துள்ளது. வீட்டுச் சபாநாயகரும், பெண்கள் நலக் கூட்டணியினரும் என்னை  அனுமதித்து உள்ளனர் என்று அர்த்தம். என் ஆர்வம் இன்னமும் மாறாமல் அப்படியே உள்ளது.

ஏன் எழுதுகிறேன்?

கணினி முன்னால் அமர்ந்திருக்க வேண்டிய பணியின் காரணமாகவும், தமிழ் தட்டெழுத்து நல்ல பயிற்சி இருப்பதாலும். 

எழுதும் காரணம்?

சமூக வலைதளங்களில், அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளில், வார இதழ்களில் கிடைக்கும் செய்திகள் மூலம் ஏதோவொன்று உத்வேகத்தை உருவாக்கும்.  ஒரு வார்த்தை அல்லது வாசகம் கிடைக்கும். எண்ணங்கள் சிந்தனையில் தத்தளிக்கும். முழுமையாக எழுதி விட முடிகின்றது..

எழுதாமல் இருந்தால்?

ஒன்றும் ஆகாது. பொழுது வெட்டியாய் நகரும். வாசித்த, பார்த்த விசயங்கள் எனக்குள்ளே இருக்கும். மன உளைச்சல் உருவாகும். எழுதுவதால் இரவில் படுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட முடிகின்றது.


Friday, March 13, 2020

எதற்காகவும் பயப்படாதீர்கள்



மற்றவர்களின் மீது பழி சொல்லாமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள் .

வாழ்க்கை என்பது முழுவதுமாக நீங்கள் அதை எந்தக் கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளதே நடப்பதற்கெல்லாம் மற்றவர்கள் மட்டும் பொறுப்பாக மாட்டார்கள் உங்கள் பங்கும் அதில் உள்ளது என்பதனை உணருங்கள்

மற்றவருடன் பேசும்போது அதிகமாய் கூர்ந்து கவனிப்பதின் அருமையை உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஆச்சர்யமாய் உணர்வீர்கள். அது உங்கள் பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூடத்தான்

உங்கள் கோட்பாடுகளுக்கும் மற்றும் வாழ்க்கை முறைக்கும் சேர்ந்து வராத நபர்களிடம் பழக நேர்ந்தாலும் அவர்களுடைய உறவை வெட்டிக்கொள்ள வேண்டாம் ஏனெனில் அவர்களும் நமக்கு ஒருநாள் வேண்டும் தான் .இந்த உலகம் வேடிக்கையானது மட்டுமல்ல சிறியதும் கூட .

சமூக நீதி

இது நடந்தது 21 வருடங்களுக்கு மேல் இருக்கும். துல்லியமாகச் சொல்லப் போனால் பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்டு மிகப் பெரிய கலவரம் ஒரிசா மாநிலம் (1999 ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர்) முழுக்க நிகழ்ந்தது.

அப்போது தற்போதைய ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் (பெரும்பாலும் பழங்குடியினர்) வாழ்ந்த குடும்பங்கள் கொத்து கொத்தாக இடம் பெயர்ந்தனர். குறிப்பாக அங்குள்ள ஒவ்வொரு சர்ச் ம் அடைக்கலம் கொடுத்தது. பாதுகாப்பு வழங்கியது.

Thursday, March 12, 2020

கடன் பட்டார் நெஞ்சம் போல...


பிஎஸ்என்எல் விவகாரம் குறித்து எழுதும் போதெல்லாம் வலையுலக பொருளாதார முதலாளித்துவ அறிஞர் மற்றும் அங்காளி பங்காளிகள் அனைவரும் தவறாமல் பின்வரும் விசயங்களைக் குறிப்பிட்டு வாதிடுகின்றனர்.

தனியார் நிறுவனங்களில் ஆட்கள் குறைவு. சம்பளம் குறைவு.

சரியான நிர்வாகம். சரியான கட்டமைப்பு,

அழகான சந்தைப்படுத்துதல், போட்டிச் சூழலைக் கையாளுதல்

என்று பலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் தான் இந்தியர்கள் அனைவரும் இன்று தடையற்று 24 மணி நேரமும் பேசு.. பேசு... பேசிக்கொண்டேயிரு என்ற புதிய கலாச்சாரத்தை உருவாக்கிய மக்களை இடைவெளி தூரமின்றி ஒன்றிணைத்துள்ளனர் என்கிறார்கள்.


Wednesday, March 11, 2020

டெல்லியில் நடந்த கலவரம்?

"கூட்டணி தர்மம் என்கிறார்கள். கூட்டணி என்றாலே தர்மத்திற்குத் தொடர்பில்லாதது. மதச் சார்பின்மை கூட்டணி என்பார்கள். ஆனால் கூட்டணியில் சாதிக்கட்சியும் இருக்கும். என் அரசியல் வாழ்நாளில் இது போன்ற விடைகளுக்குப் பதில் தெரியாமல் இருக்கின்றேன்" என்றார் வாழப்பாடி இராமமூர்த்தி. தான் நினைத்ததை அப்படியே பேசிவிடக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள் இரண்டு பேர்கள். ஒன்று வாழப்பாடி மற்றொருவர் இளங்கோவன். வாழப்பாடி மகன் சிங்கப்பூரில் இருந்தார். இப்போது என்ன செய்கின்றார் என்று தெரியவில்லை. இளங்கோவன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இருவர் காலத்திலும் காங்கிரஸ் தினமும் தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டேயிருக்கும். எது சாத்தியமோ? எது உண்மையோ அதை உரக்கச் சொல்வார்கள். தலைமை தவறான வழியில் சென்றாலும் தலை வணங்க மாட்டார்கள். எத்தனை பேர்களுக்கு இதெல்லாம் தெரியும்?

அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் இப்படிப்பட்ட ஒருவராவது இருக்கின்றார்களா? திமுக, அதிமுக வில் கூட தாங்கள் நினைத்ததைப் பேசி விடக் கூடிய நிலையில் உள்ளனர். தேசியக் கட்சி தேயுமா? தேயாதா? எதிர்த்து நின்று களம் காண வேண்டிய கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டுமா? கூடாதா?

TASMAC கடைகள் 24 மணி நேரமும் இங்கு இயங்கும்


தமிழகத்தில்  சுதந்திர காலத்திற்கு முன்பே மது விற்பனை நடந்துள்ளது. 1930ம் ஆண்டு  இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மகாத்மா காந்தி  அறிவித்தார். சாராயம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டங்களின் விளைவாக  அன்றைய காலக்கட்டத்தில் 9 ஆயிரம் சாராயக்கடைகளை ஏலம் எடுக்க ஆள் இல்லாத  நிலை உருவானது. இதனால் 6 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டது. 

காந்தி  தொடங்கி வைத்த மதுவிலக்கு போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது  குடிப்பவர்களை புறக்கணிக்கும் நிகழ்வுகளும் நடந்தது. அன்றைய கால கட்டத்தில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு  தரப்பினர் அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து முன்னாள் முதல்வர்  கருணாநிதி 1973ம் ஆண்டு ஜூலை 30ம்தேதி கள்ளுக்கடைகளும், 1974ம் ஆண்டு  செப்டம்பர் 1ம் தேதி சாராயக்கடைகளும் மூடப்படும் என்று அறிவித்தார்.  அதன்படி மதுவிலக்கு அவரது ஆட்சி காலத்திலேயே அமலுக்கு  வந்துவிட்டது.

பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபிறகும், மதுவிலக்கை  அமல் படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதை நடைமுறைப்படுத்துவதில்  பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. அவற்றை எதிர்கொள்ள பல்வேறு  சட்டத்திருத்தங்களை கொண்டு வந்தார். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. அதே நேரத்தில் கள்ளச்சாராயச்சாவுகள்  அதிகரித்தன. இந்த சூழலில் எம்ஜிஆர், 1981ம் ஆண்டு மே 1ம் தேதி மீண்டும்  கள்ளுக்கடைகள், சாராயக்கடைகளை திறக்க உத்தரவிட்டார். 

கள்ளுக்கடைகளும்,  சாராயக்கடைகளும் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது.  இந்நிலையில் 2003ம் ஆண்டு முதல்  டாஸ்மாக் வழியாக அரசே மதுவை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியது. அரசு மது  விற்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் டாஸ்மாக் மது விற்பனைக்காக  சென்னை,கோவை, மதுரை, திருச்சி, சேலம் என்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டது. 

இப்போது 33 வருவாய் மாவட்டங்களுக்கும் ஒரு மேலாளர் என நியமிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தற்போது 5,152 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. 41 டாஸ்மாக் சேமிப்பு கிடங்குகளும் உள்ளது. 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.



Tuesday, March 10, 2020

CAA குடியுரிமை போராட்டங்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா சென்ற வாரம் நடந்தது. அப்போது எடப்பாடி, 

"சிறுபான்மை மக்களுக்கு அரணாக எங்கள் அரசு திகழும்".

எனக்கென்னவோ "கவுண்டர் அட்டாக்" என்பது அவர் சார்ந்த சாதியைக் குறிக்காமல் தமிழக அரசியலை சசிகலாவிடம் இருந்து எடப்பாடியார் கற்றுக் கொண்ட வித்தையைக் காட்டிக் கொண்டு இருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

•••••

சென்ற வாரம் இந்து முன்னணி "புஷ்பா திரையரங்கம் அருகே "சிஏஏ ஆதரவு கூட்டம்" நடத்தினார்கள். மகளுடன் சென்ற போது அவர் கேட்க வேண்டும் என்பதற்காக சில நிமிடம் ஓரமாக நிறுத்தினேன். பயந்து விட்டார். "என்னப்பா இப்படிப் பேசுகின்றார்கள்?" என்றார். ஆயிரம் வருடத்தைத் தோண்டித் தோண்டி எடுத்துக் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தனர். குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் சாலை ஓரத்தில் கூட்டம் நடத்தக் காவல் துறை அனுமதி வழங்கியிருந்தனர். போக்குவரத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களும் பேசிக் கொண்டேயிருந்தார்கள். ஷாமியானா பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியே கடந்து போய்க் கொண்டேயிருந்தவர்கள் எந்தச் சலனமின்றி கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.


Monday, March 09, 2020

கொரானா வைரஸ் COVID -19

தற்போது பாரபட்சமின்றி அகில உலகத்தையும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பகவான் 'கோவிட் 19' என்று நாமகரணம் சூட்டப்பட்ட பக்தர்களால் பயத்துடன் உச்சரிக்கப்படும் மந்திரமான 'கொரானா' குறித்துக் கடந்த சில நாட்களாக வாசித்து வரும் செய்திகளை எழுதவே சங்கடமாக உள்ளது. உண்மையை எழுதினால் அரசாங்கக் குற்றம் ஆகி "ஏம்பா பீதியைப் பரப்புகின்றாய்?" என்று சிரத்சேதம் செய்து விடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து வந்தேன். சிங்கப்பூரில் (சின்ன நாடு என்று கம்பைத் தூக்கிக் கொண்டு வரவேண்டாம்) மொத்த அரசு எந்திரங்களும் கொரானா பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். நான்கு பக்கமும் பாத்தி கட்டிவிட்டார்கள். வெளியே போவதைத் தவிர்த்து விடுங்கள் என்று கட்டளையிட்டுள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் இரண்டு முறை சுவாசச் சோதனை நடத்துகின்றார்கள்.

தனியார் நிறுவனங்களை 'நீங்கள் உங்களிடம் பணியாற்றுபவர்களுக்குச் செய்தே ஆக வேண்டும்' என்று கட்டளையிட்டுள்ளனர்.

இந்தியா இன்னமும் விழித்துக் கொள்ளாமல் இருக்கின்றதே? என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்த போது நம் நாட்டில் இருக்கும் 'வெயில்' என்ற பெரிய பகவான் நம்மைச் சாத்தானிடமிருந்து காப்பாற்றி விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

நேற்று மத்திய அரசு தூக்கத்திலிருந்து விழித்துள்ளது. கொட்டாவியை அடக்கிக் கொண்டு கூட்டம் போட்டுப் பேசியுள்ளனர். நம்பிக்கையளித்துள்ளனர். தமிழகத்தில் சுகாதாரத்துறைச் செயலாளரும், அமைச்சரும் இரவு பகல் பாராது "கண் துஞ்சாது பணி செய்து கொண்டிருப்பது" நாம் அனைவரும் அறிந்ததே.

ஒரு பக்கம் சீனா உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவில் மட்டுமல்ல? உலக நாடுகளில் உள் நாட்டு உற்பத்தி எந்த லட்சணத்தில் உள்ளது என்பதனை எடுத்துக் காட்டத் துவங்கியுள்ளது. இப்போது தான் இங்கே வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது. இன்னும் 60 நாட்கள் இப்படியே தொடர்ந்தால் சிஏஏ, என்பிஆர் எல்லாவற்றையும் மறந்து மளிகைக்கடை வாசலில், மருத்துமனைகளில், முகமூடி விற்கும் கடைகளில் மக்கள் பேரணியாக இருப்பார்களோ? என்று தோன்றுகின்றது.

தங்களைக் காப்பாற்றிக் கொண்டால் போது. மதம், உரிமை போன்றவற்றை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று மாறுமோ? என்று பயப்பட வேண்டியதாக உள்ளது.

இதை இப்போது எழுதக் காரணம் நம்மவர்களின் மனநிலை எப்படியுள்ளது? என்பதற்கு இந்த உதாரணத்தை வைத்தே புரிந்து கொள்ளுங்கள். இவர்களையெல்லாம் மாற்ற வாய்ப்புள்ளதா? என்பதனையும் உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.

Sunday, March 08, 2020

திரெளபதி Draupathi



புனிதம், பெருமை என்ற வார்த்தைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். தனி மனிதர்களுக்குப் பிரச்சனையில்லை. இணையம் வந்த பிறகு அரசியல்வாதிகளுக்குத் தான் பிரச்சனையாக உள்ளது.

ஒரு பக்கம் தலைவர் என்பவர்களை மறுபக்கம் தறுதலை என்கிறார்கள். எது உண்மை? எது பொய்? என்பதற்கு அப்பாற்பட்டு முழுமையாக மாலையாக கோர்த்து தொங்கவிட்டு அஞ்சலி செலுத்துகின்றார்கள். எழுத்தை வாசிக்கும் போதே நாறுகின்றது.

ட்விட்டரில் முகமில்லாமல் 90 சதவிகித போராளிக்கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் ஆதி மொழி தான் அங்கே தொகுக்கவே முடியாத தமிழ் அகராதியாக உள்ளது.

நாம் இறப்பதற்கு முன் இணையத்தை விட்டுக் குறைந்த பட்சம் ஐந்து வருடம் ஒதுங்கியிருக்க வேண்டும். அதுவரையிலும் நம்மோடு பழகிக் கவனித்துக் கண்காணித்துக் கொண்டிருந்தவர்கள் உள்ளே வைத்திருந்தவற்றைத் துப்புவதை நமக்குப் பின்னால் நம் மகன் மகள் பார்க்கும் துணிச்சலை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து மறைய வேண்டும். 😔


Friday, March 06, 2020

இப்போது முதல் இலவசமாக

1990க்கு பிறகு தான் "அவர்" இந்தியாவிற்கு அறிமுகமானார். தயாரிப்பாளர் திரு. பிவி நரசிம்மராவ். இயக்குநர் திரு. மன்மோகன்சிங் அவர்கள்.

அவர் தான் உண்மையான "உலக நாயகன்". ஆனால் அவரை "திருநிறைச் செல்வன் சர்வதேச அரசியல்" என்று அழைத்தனர். இந்தியாவின் பார்வை மாறத் தொடங்கியது. மாற்றங்களும் இங்கே உருவாகத் தொடங்கியது. திருநிறைச் செல்வனைச் சிலர் ஆரோக்கியத்துடன் வளர்த்தனர். அவர்களில் முக்கியமான மூன்று பேர்களை உங்களுக்கு அடையாளம் காட்ட முடியும்.

International Monetary Fund IMF (சர்வதேச நிதியம்)
World Trade Organization (WTO) உலக வணிக அமைப்பு
General Agreement on Tariffs and Trade (GATT) கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொதுவான ஒப்பந்தம்.

சுருக்கமாகச் சொன்னால் வணிகம், வணிக நலன், லாபம்.

ஆனால் இதனை வேறு விதமாக அழைத்தனர். உலகளாவிய பார்வை. உலகமே ஒரு கிராமம். வர்த்தகத்திற்குத் தடையே இல்லை. தடைகளை உடை. வளர். வாழ். வாழ வை என்றும் அழைத்தனர்.


Thursday, March 05, 2020

வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலவச கிண்டில் புத்தகத்தின் விலை 0.00 என்று இருக்கும். இதில் பை நவ் என்பதை க்ளிக் செய்வதை விட்டுவிட்டு, ரீட் ஃபார் ஃப்ரீயை அழுத்துவது வெட்டி முட்டாள்தனம். அப்படி அழுத்தினால் இப்படி கார்டு கேட்பான். கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்தபின் பை நவ் அழுத்தினால் தானே டெலிவராகிவிடும் (விமலாதித்த மாமல்லன்)

*********

06.03.2020 மதியம் 1.30 (இந்திய நேரம்) அமேசான் தளத்தில் ஈழம் - படிக்க மறந்த குறிப்புகள் (1000 வருட ஈழத்தின் வரலாறு, ஈழ அரசியல்வாதிகள், பிரபாகரன், சர்வதேச அரசியல், இறுதிக்கட்டப் போர் வரைக்கும்) எளிய இயல்பாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்ட மின்னூலை இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும். உங்கள் அலைபேசியில் கிண்டில் செயலியைத் தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதுமானது. 

Tuesday, March 03, 2020

அள்ளிக் கொண்டு போவார்கள்.

வருமான வரிச் சோதனை என்பது அரசியல் சார்புடையது, சார்பற்றது என்பதற்கு அப்பாற்பட்டு அந்தத் துறை இயங்கும் விதங்களைத் தணிக்கையாளர் நண்பர் சொன்ன போது வியப்பாகவே இருந்தது.

பழநி பஞ்சாமிர்த முதலாளியின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகள் மற்றும் அதற்காக அதிகாரிகள் கடைப்பிடித்த வழிமுறைகளைக் கேட்ட போது மனதிற்குள் கிலியடித்தது.

குறிப்பிட்ட தகவல்கள், வந்து சேரும் தகவல்கள், பத்திரிக்கை செய்திகள், அறிவிப்புகளிலிருந்து திரட்டப்படும் தகவல்கள் என்று நான்கு திசைகளையும் பார்த்து, சோதித்து, படிப்படியாக வட்டமாக்கி, வட்டத்தைச் சுருக்கிக் கொண்டே வருதல் என்பது முதல்படி.

நேரிடையான களப்பணி இரண்டாவது படி.

மறைமுகமாகத் துப்புத் துலக்குதல், இதற்காகக் குழுவினர் பல மாதங்களாக சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று ஆதாரப்பூர்வமான தகவல்களைத் திரட்டுதல் என்பது மூன்றாவது படி.

நான்காவது படியாக அதிகாரவர்க்கத்தின் உச்சத்தின் பார்வைக்குச் செல்கின்றது. அதிகாரவர்க்கம் எப்படிச் செயல்படுகின்றார்கள் என்பது தான் பொதுவில் விமர்சனத்திற்கு உள்ளாகின்றது. அதன் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மறைபொருளாக மாறுகின்றது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று எளிதான தத்துவம் மூலம் மடை மாற்றப்படுகின்றது.

கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியனைத் திரை உலகத்தில் வெறுக்காதவர்கள் எவருமே இருக்க முடியாது. ஆனால் அவரை விரும்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இருக்கின்றார்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தென்னக ராஜாதி ராஜா தான்.

ஏஜிஎஸ் நிறுவனம் ட்விட் தான் இந்த வருமானவரிச் சோதனைக்கு அடித்தளம். சும்மா கிடங்கை ஊதிக் கொடுத்துள்ளார்கள்.

தான் சம்பாரிக்கும் மொத்தத் தொகையில் 30 சதவிகிதத்தை அரசாங்கத்திற்குக் கொடுத்தாக வேண்டும் என்பதனை எம்ஜிஆர் முதல் இன்றைய விஜய் வரைக்கும் கடைப்பிடிக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றாலும் இன்று வரையிலும் இது போன்ற உளுத்துப் போன சட்ட வரைவுகளை எவரும் மாற்ற முன்வருவதே இல்லை.

நடிகர்களுக்கு அறக்கட்டளை சேவை பிடிக்காது. ஆனால் அறிவுரை சொல்ல மட்டும் பிடிக்கும்.

அரசாங்கத்திற்கு பிரபல்யம் பொதுவிடங்களில் அளவுக்கு மீறிப் பேசக்கூடாது.
படம் ஓட எதையாவது பேசித்தான் ஆக வேண்டும் என்பது நடிகர்களுக்குப் பிடிக்கும்.

சிக்கல் ஒரு பக்கமில்லை. ஒவ்வொரு அடியிலும் சிக்கல் தான்.

விஜயகாந்த் க்கு ஒரு பிரேமலதா.
விஜய்க்கு ஒரு சந்திரசேகர்.

அள்ளிக் கொண்டு போவார்கள்.
இரு பக்கமும் அமைதியாக இருந்து விடுவார்கள்.

காரணம் இது ஜனநாயக நாடு.


Monday, March 02, 2020

சாந்தி சோஷியல் சர்வீஸஸ்


கோவை சிங்காநல்லூரில் இயங்கும் ’சாந்தி சோஷியல் சர்வீஸஸ்’ பற்றி லதானந்த்

சாதம், முருங்கை சாம்பார், ரசம், கீரைக்கூட்டு, முள்ளங்கிப் பொறியல், கோவைக்காய்ப் புளிக்குழம்பு, பாசிப்பயறு குருமா, சப்பாத்தி, ஜவ்வரிசிப் பாயாசம், தயிர் இந்த மெனு கொண்ட அன்லிமிடட் மீல்ஸ் இன்றைய தேதியில் எவ்வளவு விலை இருக்கும்? அதுவும் மிக உயர்ந்த சுகாதாரச் சூழலில், சுவையோடு வழங்கப்படும்போது? நூறு அல்லது நூற்ற்றிருபது ரூபாய் இருக்கும்தானே? வெறும் இருபதே ரூபாய்தான்! நம்புங்கள். எங்கே? கோவை சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் நடத்தும் உணவகத்தில்தான்!

பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் அமலுக்கு நடைமுறையாகும் என்ற அறிவிப்பு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நாள் விடியற்காலையில் பெட்ரோல் போட்டாலும் அதிகரிக்கப்பட்ட விலையில்தானே கிடைக்கும்? ஆனால் இப்படி ஓர் அறிவிப்பைப் பார்த்திருக்கிறீர்களா?

“பழைய ஸ்டாக் இருக்கும்வரை பழைய விலையிலேயே (அதாவது விலையேற்றத்துக்கு முந்தைய குறைந்த விலையிலேயே) விற்கப்படும்.” ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? எங்கே இந்த அதிசயம்? கோவை சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில்தான். தரமான பெட்ரோல் போடுவதுடன் தேவைப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் இல்லாமல் நைட்ரஜன் கேஸ் பிடித்தும் தருகிறார்கள்.

இவைமட்டும் அல்ல… இன்னும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது இந்த நிறுவனம்.