Showing posts with label தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள். Show all posts
Showing posts with label தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள். Show all posts

Thursday, March 12, 2020

கடன் பட்டார் நெஞ்சம் போல...


பிஎஸ்என்எல் விவகாரம் குறித்து எழுதும் போதெல்லாம் வலையுலக பொருளாதார முதலாளித்துவ அறிஞர் மற்றும் அங்காளி பங்காளிகள் அனைவரும் தவறாமல் பின்வரும் விசயங்களைக் குறிப்பிட்டு வாதிடுகின்றனர்.

தனியார் நிறுவனங்களில் ஆட்கள் குறைவு. சம்பளம் குறைவு.

சரியான நிர்வாகம். சரியான கட்டமைப்பு,

அழகான சந்தைப்படுத்துதல், போட்டிச் சூழலைக் கையாளுதல்

என்று பலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் தான் இந்தியர்கள் அனைவரும் இன்று தடையற்று 24 மணி நேரமும் பேசு.. பேசு... பேசிக்கொண்டேயிரு என்ற புதிய கலாச்சாரத்தை உருவாக்கிய மக்களை இடைவெளி தூரமின்றி ஒன்றிணைத்துள்ளனர் என்கிறார்கள்.


Saturday, February 22, 2020

கேள்விக்குறியாகிறதா நீதித்துறையின் அதிகாரம்?

நேற்று தூங்கிக் கொண்டிருந்த போது நம் அன்புக்குரிய நிதியமைச்சர் என்னை எழுப்பி பொருளாதார பாடங்களை கற்றுக் கொடுத்தார். கனவில் வந்த பெண்மணி காணாமல் போய்விட்டார்.

குறிப்பாகத் தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கட்ட வேண்டிய ஒரு லட்சத்து நாற்பத்து ஏழு லட்சம் கோடி ரூபாய் என்பது ஊடகம் ஊதிப் பெருக்கி நடந்து கொண்டிருக்கும் நல்லாட்சியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். டேட்டா புரட்சியை ஏற்படுத்திய, ஏற்படுத்தக் காரணமாக இருந்த தனியார் நிறுவனங்களை நாரசாரமாய் ஏசுகின்றார்கள் என்று புள்ளி விபரங்களைத் தந்து இருந்தார். (இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்).

"நாங்கள் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா? இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? நாங்கள் சொல்வது இறுதியான தீர்ப்பு என்பது கூட இவர்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்குக் கூடத் தெரியாதா? எந்த அரசாங்கமாவது வசூலிக்கத் தேவையில்லை. ஒத்தி வையுங்கள் என்று சொல்வார்களா?" என்று புலம்பித் தீர்த்தவர் வேறு யாருமில்லை. நம் உச்ச மன்ற நீதிமான்.

நிச்சயம் இது போன்ற பஞ்சாயத்துக்கள் நம் மோடி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று என் பக்கத்து வீட்டுக்காரர் பக்குவமாக எனக்கு எடுத்துரைத்தார். நானும் நம்பிவிட்டேன்.