Thursday, December 31, 2020

2020 - சில வார்த்தைகள்

ங்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பாதீர்கள். அனைவரும் பாராட்டினால், பாராட்டிக் கொண்டேயிருந்தால் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சொந்த வாழ்க்கையில் உங்கள் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தாதீர்கள். மனைவிக்குக்கூட உங்களைப் பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. இணைய வாழ்க்கை அதற்கு வசதி செய்து தந்துள்ளது. வாசிப்பவர்களுக்கு வெறுப்பாக இருந்தாலும் மனதளவில் இது உண்மை தான் என்று அவர் மனம் எண்ணக்கூடும்.


Tuesday, December 29, 2020

7.5 மருத்துவ இட ஒதுக்கீடு.

 பக்கா கிரிமினல் பயங்கர கிரிமினல் -  வித்தியாசம் என்ன?

முத்துக்குமரன் கமிட்டி உருவாக்கிய முழுமையாக விசயங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் சமச்சீர்க் கல்வி என்பது இன்றைக்கு மெட்ரிகுலேசன் சிபிஎஸ்சி முதலாளிகளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்திருக்க வாய்ப்புண்டு. கஞ்சித்தண்ணீர் மாதிரி அதனை நீர்த்துப் போகச் செய்து அலங்கோலமாக்கி செயல்வடிவத்திற்குக் கொண்டு வந்த வரலாற்றுச் சாதனைகளை விபரம் புரிந்த தமிழ்ப் பிள்ளைகள் அறிந்திருக்கக்கூடும்.

ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ள 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உரியது என்பது இன்னும் சில வருடங்களில் ஊழல் மிகுந்ததாக மாறக்கூடிய அத்தனை அம்சங்களையும் இதற்கு உள்ளே வைத்துள்ளார்கள்.

அரசு பள்ளிக்கூடம் சாதா தோசை. அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஸ்பெஷல் தோசை. ஆனால் தனியார் பள்ளிக்கூடம் ரோஸ்ட். இப்படித்தான் நம் மக்கள் கருதுகின்றார்கள். 

7.5 விசயத்தில் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களைக் கழட்டிவிட்டனர். அதற்குப் பதிலாகத் தனியார்ப் பள்ளிகளில் அரசு நிதி மூலமாகப் படித்த (Right to Education Act) மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்து இருந்தாலும் இது போன்ற மறை பொருள் சமாச்சாரங்கள் உள்ளே பொதிந்துள்ளது.  

ஊடகங்கள் இந்த இடம் வரும் போது நைஸாக மடை மாற்றி வேறு பக்கம் வண்டியைத் திருப்புகின்றார்கள்.

இவர்கள் யோக்கியவான்கள் என்றால் ஒன்று முதல் 12 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்களுக்கு மட்டும் என்று ஒற்றை வாக்கியத்தில் இதனைக் கொண்டு வந்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும்.  

இந்த வருடம் தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 40 சதவிகிதம் இருக்கை மட்டுமே நிரம்பி உள்ளது. மற்ற கல்லூரிகள் எல்லாம் காத்தாடுது. ஒருவரும் திரும்பிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை. விளம்பரங்கள் செய்து கல்வி முதலாளிகள் காசை இழந்தது தான் மிச்சம். 

இன்னும் சில வருடங்களில் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படும் இருக்கைகளில் உள்ள ஊழல் தான் ஊடகங்களுக்குத் தலைப்பு மற்றும் விவாதமாக மாறும். இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனாலும் இந்த வருடம் அரசு வழங்கிய 7.5 இடஒதுக்கீடு வாயிலாக மருத்துவர்களாக உள்ளே நுழைந்த அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுக்க எடப்பாடியாரை தங்கள் தெய்வமாக வணங்குவார்கள்.  

மேலும் அரசு கல்லூரிக்கட்டணம் வரைக்கும் கட்டியுள்ள சூழலில் அனைத்து நல்ல கிரகங்களும் ஒரே சமயத்தில் பார்த்து வீபரித ராஜயோகத்தை வழங்கியுள்ளது. பத்து வருடங்கள் இது தொடர்ந்தால் போதும்.  4000 மருத்துவர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைப்பார்கள்.

ஜோ பேச்சு யூ


Sunday, December 27, 2020

மனைவி என்பவள் தெய்வமாகலாம்.

இங்கு அனைவரும் குடும்ப வாழ்க்கை வாழத் தான் செய்கின்றார்கள். எத்தனை பேர்கள் அழகான குடும்ப வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று பட்டியலிட்டால் இரண்டு கை விரல்கள் எண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம். 

எனக்குத் தெரிந்த ஒருவர் தன் மனைவியுடன் 19 வருடங்களாகப் பேசிக் கொள்வதில்லை. இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றார்கள். மகள் மகனுக்குத் திருமணம் ஆகி விட்டது. மனைவி சமைத்து வைத்து விடுவார். இவர் பணத்தை டப்பாவில் வைத்து விடுவார். இன்னமும் மாறவில்லை.  அவரவர் தரப்பில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. இதுவொரு உதாரணம். 

இதே போல இங்கே குடும்ப வாழ்க்கை என்பது கட்டாயத்தின் அடிப்படையில் வாழ்வது போலவே பலருக்கும் உள்ளது. இந்திய கலாச்சாரம், புனிதம் போன்ற அனைத்தும் கட்டுடைக்கப்பட்டு விட்டது. வெளியே தெரிவது கொஞ்சம். உள்ளே புழுங்குவது அதிகம்.

பொருந்தாக் காதல், வயதுக்கு மீறிய காதல், வயதுக்குத் தொடர்பில்லாத காதல், காமத்திற்காகக் காதல், கௌரவத்திற்காகக் காதல், வயதாகியும் ஈகோ, விட முடியாத அதிகார மனப்பான்மை, அசிங்க எண்ணங்கள், புரிதலற்ற உளறல்கள், தலைமுறைகள் வளர்ந்தும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் தறி கெட்டும் வாழும் வாழ்க்கை என்று ஒவ்வொரு குடும்பத்திற்குள் ஓராயிரம் காரணங்கள் உண்டு. ஒவ்வொரு காரணத்திற்குள்ளும் காமத்தில் உள்ள அத்தனை மூலக்கூறுகளும் இங்கே உள்ளது.  தகுதிக்கு மீறிய ஆசைகள் உண்டு. உழைப்பில்லாமல் உயர்ந்து விடும் நோக்கமுண்டு. பொறாமையே முக்கிய குணமாகக் கொண்டு வாழ்பவர்களும் உண்டு.

இது தான் தொடக்கம் என்று உறுதியாக சொல்ல முடியாத அளவிற்கு இன்றைய சூழலில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் மனிதர்களை மாற்றுகின்றது. உருவாகும் வெவ்வேறு சூழல்கள் அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகிறது.. இதுவே பத்திரிக்கைகளுக்கு செய்தியாகவும் இறுதியில் வந்து விடுகின்றது. யூ டியூப் வரையிலும் உள்ள அனைத்து விதமான சமூக வலைதளங்களிலும் மேலே எழுதிய பட்டியலையிட்டு தேடிப் பாருங்கள். 

பல லட்சம் பார்வையாளர்கள் முழுமையாகப் பார்த்திருப்பார்கள். 

இது போன்ற தலைப்புகள் சமூக வலைதள மக்கள் விரும்புகின்றார்கள். (இதன் காரணமாகவே 100 பேர்கள் பார்த்தாலே போதுமானது. இயல்பான வாழ்க்கைச் சூழலை, நடந்த நடக்கும் நிஜ கால வாழ்க்கையை பதிவு செய்ய எனக்கு எண்ணம் உருவானது) 

அலைபேசியை மட்டும் முழுமையாக பயன்படுத்துபவர்கள் வாசிக்க மனமின்றி கிடைக்கும் காட்சி வடிவங்களில் தங்களை இழந்து விடுகின்றார்கள். இதன் காரணமாகவே அசிங்கமான விசயங்கள் கூட சிங்கம் போல ட்ரெண்ட்டிங் என்ற வட்டத்திற்குள் மேலேறி வந்து நிற்கின்றது. போதையாக மாறி பார்ப்பவர்கள் அதன் பின்னால் அலைகின்றார்கள். அதை வழங்குபவர்களும் தலைப்புகளில் சூடேற்றி அதனை சந்தைப் பொருளாக மாற்றுகின்றார்கள்.

காரணம் தேடுபவர்களும், இது போன்ற விசயங்களை விரும்பிப் பார்ப்பவர்களும் வாழ்க்கையை வாழும் விதங்களில் அனுபவிக்க விரும்புவதில்லை. தங்களின் தறிகெட்ட கற்பனைகளில், அடக்க முடியாத சிந்தனைகளில், அடிப்படை நாகரிகம் தெரியாத வாழ்வியலை  வாழ விரும்புவதன் மூலம் மட்டுமே அவரவர் வாழ்க்கையை வாழ விரும்புகின்றார்கள். அதுவே நாளடைவில் பழக்கமாக மாறி அதற்கு அடிமையாகிவிடுகின்றார்கள். 

கடைசியில் மனைவி ஒரு பக்கம். மகள் மகன் வெவ்வேறு பக்கம் என்று வாழ்க்கைப் பாதை மாறி விடுகின்றது. ஒரு வீட்டுக்குள் வெவ்வேறு முகத்துடன் வாழ்கின்றார்கள். வீட்டுக்குள் ஒவ்வொருவர் வைத்திருக்கும் அலைபேசிகளும் சூறாவளி அலையை உருவாக்கி விடுகின்றது. கடைசியாக வாழ்க்கை அவர்களை மாற்றியும் விடுகின்றது.

ஒரு ஆணின் யோக்கிய தனத்தை உலகம் சொல்வதை விட அவனின் மனைவி எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் இங்கு வாழும் எந்த மனைவியும் கடைசி வரைக்கும் வாயைத் திறக்காமல் இருந்து விடுவதால் மகாத்மா, புனிதர், வள்ளல், தியாகி, உத்தமர், நல்லவர், ஆன்மீகவாதி, அமைதியானவர், சிந்தனையாளர் என்று பல பெயர்களில் ஆண்களால் வாழ முடிகின்றது.

எப்படித் தொழில் செய்ய வேண்டும்? என்று எண்ணத்தை மட்டுமே எனக்கு வைத்திருந்த தொடக்க காலத்தில் எப்படிக் குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும்? என்ற எண்ணம் உருவாகாமலிருந்த போது தாமதமாகத் திருமணம் ஆனது. குறிப்பிட்ட கொள்கைகள், சித்தாந்தங்கள், வாழ்க்கை முறைகள் என்பது போன்ற பலரின் பார்வைக்குப் பழமைவாதியாகவே தெரிந்தேன், எது நம் பாதை என்று தெரியாமல் புரியாமல் வாழ்ந்த எனக்குத் தொடக்க காலத்தில் குடும்ப வாழ்க்கை குறித்த புரிதல் உருவாகவில்லை. 

மகள்கள் வளர வளர கற்றுக் கொண்டே ஆக வேண்டிய சூழலைக் காலம் உருவாக்கியது. கால மாற்றத்தில் மலைகள் உடையும். பாறைகள் கூட சில்லு சில்லாக மாறும். இறுதியில் மணலாக மண்ணாக மாறுமென்பது இயற்கை உருவாக்கிய விதி. நானும் அப்படித்தான் மாறினேன். மாற்றிக் கொண்டேன்.

நீங்கள் கொண்டாடக்கூடிய பிரபல்யங்கள் 95 சதவிகித மக்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை இழந்தவர்கள். அதன் பாதிப்பை தங்கள் கடைசிக் காலத்தில் தண்டனையாகப் பெற்று மறைந்தவர்கள். மற்றும் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். நான் உணர்ந்த போது சுதாரித்துக் கொண்டேன்.

நெருங்கிய நண்பர்கள் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்கும் கேள்விகள் எப்படி எழுத முடிகின்றது? நான் வந்து படிப்பதற்குள் அடுத்த நான்கு தலைப்புகள் எழுதி முடித்து விடுகிறீர்கள்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஒரே பதில் என் மனைவி தான்.  ஆனால் இந்த வருடம் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும், அதனை நான் வெற்றி கொண்டு வந்த விதமும், அமைதியாக வாழ்ந்த வாழ்க்கைக்கும், அனுசரணையாக என்னுடன் இருந்த, இருக்கும் மனைவிக்கு நன்றிக்கடன் செய்யும் பொருட்டு இன்றே இதனை இங்கே எழுதி வைத்திடத் தோன்றியது.

என் பார்வையில் எல்லா நாளும் திருமண நாளே. எல்லா நாட்களும் பிறந்த நாளே. ஆனால் பெண்கள் பார்வையில் தனித்த விருப்பங்கள் இருந்தாலும் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவர்களின் விருப்பங்களை மறுப்பதும் இல்லை. 

பல விதமான கட்டளைகள், கட்டுப்பாடுகள், சோதனைகளைக் கடந்த இந்த வருடம் மூத்த மகளுக்கு தனியாக அலைபேசி வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன் என்ற  என் நிலைமை தனிக் கதை. 

காரணம் இவர்கள் பள்ளியின் இணைய வகுப்புக்கு 20க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் குரூப் இருப்பதும், தொடர்ந்து யாராவது ஒருவர் என் அலைபேசியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதுமாக இருந்த காரணத்தால் கடந்த மூன்று மாதங்களாக என் அலைபேசி என் கைக்கு வருவதே இல்லை. நான் அலைபேசி இல்லாமல் தான் வெளியே சென்று வந்தேன். வேறு வழியே இல்லாமல் புதிதாக வாங்கிய போது "சில நாட்களுக்கு என் அலைபேசியை நீங்கள் பார்க்க அனுமதி இல்லை" என்றார். 

பயமாக இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. காரணம் கேட்ட போது "23 நவம்பர் முதல் பார்க்கலாம்" என்றார்.

குழப்பமாக இருந்தது. 

உலகில் குறுக்கும் நெடுக்கும் பயணிக்கும் எனக்கு இவரின் புதிர் பேச்சைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அமைதியாக ஒதுங்கி விட்டேன்.  

"குடும்ப வாழ்க்கையில் ஆண் தோற்று விடுவது எப்போதும் நல்லது" என்ற பொன்மொழி எனக்குள் ஓடிக் கொண்டேயிருப்பதால் இப்போதெல்லாம் பெரிய வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுவதும் உண்டு.

கடந்த நவம்பர் இறுதியில் திருமண நாளில் எடுக்கப்பட்ட படத்தை என்னிடம் வந்து கொடுத்தார்கள். எங்கள் திருமண நாள் புகைப்படத்தை உருவாக்கி இவர்களே தயார் செய்து வழங்கினார்கள். தேவையான பணத்தை இவர்கள் சேமிப்பிலிருந்து எடுத்துச் செலவழித்து உள்ளனர்.  

என் எழுத்துக்கள் உங்களைத் திருப்திப் படுத்துகின்றது என்றால் அதற்கு நான் அல்ல. என் திறமை அல்ல. என் மனைவி எனக்கு நேரம் வழங்குகின்றார். என் பாதையில் குறுக்கிடாமல் இருக்கின்றார். என்னை அங்கீகரித்துள்ளார். அவர் தன் ஆசைகளை தனக்குள் வைத்துள்ளார். என்னைப் போலவே வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ கற்றுக் கொண்டுள்ளார் என்று அர்த்தம்.

நீங்கள் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் கடந்த காலத்தில் யாருக்கு நல்லது செய்தேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் வாழும் காலத்தில் எனக்கு நல்லது செய்யவே என்னுடன் பயணிக்கின்றார் என் மனைவி. 

மகள்களும் மனைவியும் நல்லவிதமாக அமைந்து விட்டால் போதும். 

வாழும் போதே சொர்க்கத்தைப் பார்த்து விடலாம் என்பது உண்மை தானே?

மனிதர்களைத் தவிர.தெய்வங்கள் வேறில்லை 

விதைகள் பழுதில்லை

"சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்"

கொஞ்சம் உழைப்பு. அதிக வைராக்கியம் 2020

இணைய உலகம் 2020

மீண்டும் தொடங்கவும்.


Friday, December 25, 2020

விதைகள் பழுதில்லை

பெற்றோர்கள் அனைவருக்கும் அவரவர் குழந்தைகள் சிறப்பு தான். எளிய வார்த்தைகளில் குறிப்பிட்டால் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" தான்.

ஆனால் இன்று காலம் குழந்தைகள் பெற்றோர்களுக்கு வில்லனாக மாற்றியுள்ளது. தூக்கிச் சுமக்க வேண்டிய சுமையாகவும் மாற்றியுள்ளது.

Thursday, December 24, 2020

தெய்வங்கள் வேறில்லை மனிதர்களைத் தவிர.

சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் நான் வாசித்த செய்திகளில் சொத்து தகராறு சார்ந்த செய்திகள் மிக அதிகம். அதுவும் ஒரே குடும்பத்திற்குள் நடந்த நிகழ்வுகள் கடைசியில் வெட்டுக் குத்து வரைக்கும் சென்றுள்ளதைக் கவனித்தேன். "என்னை கடைசி வரைக்கும் காப்பாற்றுகிறேன்" என்று சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு என்னை அனாதையாக வெளியே விட்டு விட்டான் என்று மகன் மேல் குற்றச்சாட்டு சொல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அழுத பெண்மணியைப் பார்த்தேன். 



Tuesday, December 22, 2020

உன்னதமான மனிதர் 2020

உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் என்பது சதவிகித மக்களுக்குத் தொடர்பே இல்லாத துறைகள் அரசியல் மற்றும் தொழில். விவசாயம் மற்றும் முறைசாராத் தொழில்களை இந்தப் பட்டியலில் கொண்டு வர வேண்டாம். வளர்ந்த நிறுவனங்கள். சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்று பல பட்டியல்கள் உண்டு.

இந்த இரண்டு துறைகளில் இருக்கும்  20 சதவிகித மக்கள் காரண காரியமின்றி பேசவே மாட்டார்கள். அனைத்து துறைகளிலும் தொடர்பு வைத்திருப்பார்கள். அனைவருடனும் நல்லுறவு பேணுவார்கள். ஆனால் தொடர்பு இல்லாதவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். பிரிவினை கோடு போட்டு வாழ்வார்கள். தங்களை எதிரியாக மாற்றிக் கொள்வார்கள். வாழ்ந்த சுவடு தெரியாமல் மறைந்தும் விடுவார்கள். 

காலம் காலமாக இப்படித்தான் இந்தப் பூமிப் பந்து சுழன்று வந்து கொண்டேயிருந்தது.  



Monday, December 21, 2020

பறவைகளுடன் வாழ்ந்த ஆண்டு 2020

நான் வசிக்கும் இடத்திற்கு அருகே காந்தி நினைவாலயம் உள்ளது. காந்தியின் அஸ்தி இந்தியா முழுக்க குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டு அங்கு அவருக்கு ஒரு நினைவு இல்லம் உருவாக்கப்பட்டது.  



கொஞ்சம் உழைப்பு. அதிக வைராக்கியம் 2020

இந்த வருடம் யூ டியூப் பக்கம் சென்றேன். அதுவும் சில மாதங்களுக்கு முன்பு தான் உள்ளே நுழைந்தேன். ஆனால் ஜிமெயில் கணக்கு திறந்த 2007 முதல் எப்போதும் போல இதிலும் கணக்கு இருந்தது. நான் சென்றதே இல்லை.  2018 முதல் 2020 வரைக்கும் உள்ள மூன்று வருடங்களில் தான் யூ டியுப் பக்கம் அதிகம் சென்று உள்ளேன். 

எப்போதும் நாமும் இதில் நம் தரப்பு விசயங்களைப் பதிவு செய்வோம் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. வேர்ட்ப்ரஸ் ல் திடீரென எழுதத் தொடங்கியது போல இதுவும் கிடைத்த ஓய்வில் உருவாக்கிக் கொண்ட பாதையிது.

குறள் சித்தருக்கு(ம்) அந்த நண்பரைத் தெரியும். அவர் யூ டியூப் கில்லாடி என்றும் எவரும் அவரை நெருங்க முடியாத வலைப்பின்னல் போட்டுக் கொண்டு உளவாளி போல வாழ்ந்து வருபவர் என்றும் சொல்லப்பட்டவரிடம் இது குறித்து அழைத்துக் கேட்டேன். அன்று காணாமல் போனவர் தான். 

இப்போதும் இங்கே வந்து படித்துக் கொண்டிருப்பார்.

அப்போது மனதில் வைத்திருந்தேன். ஏன் இது நம்மால் முடியாதா? 

சில தினங்களுக்கு முன்பு உன் தேர்ச்சி அறிக்கை இது தான் என்று அனுப்பி வைத்துள்ளார்கள்.  அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுவது எளிது. ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது சாத்தியம் தான். ஆனால் தொடர் உழைப்பு முக்கியம். நம் சொந்த வாழ்க்கை உழைப்போடு விருப்பம் சார்ந்த துறைகளில் ஈடுபடும் போது நம்மைப் போன்றவர்களுக்கு இரவு நேரம் தான் கிடைக்கும். அவசியம் இதற்காகத் தூக்கத்தைத் தியாகம் செய்தாக வேண்டும்.

பிஎஸ்என்எல் இணைய இணைப்பு வந்து வந்து போகும். ஒரு பேச்சை யூ டியூப் ல் ஏற்றுவதற்குக் குறைந்த பட்சம் 3 மணி நேரம் ஆகும். பொறுமை முக்கியம். அதனை நண்பர்களுக்குக் கொண்டு சேர்ப்பது அதனை விட முக்கியம்.

இன்றைய காலகட்டத்தில் யூ டியூப் என்றால் கழிப்பறை போல அசிங்கங்கள் நிறைந்து வழியும் மலக்கூடமாக இருக்கும் இடத்தில் நம்மைப் போன்றவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் கோட்பாடுகள் அங்கே எடுபடாது என்று தெரிந்தும் என் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் சாதனைப் பட்டியல் சொல்லும் அளவிற்குச் சிறப்பாகவே உள்ளது. இதன் முக்கால்வாசிப் பெருமை என் மகளுக்கே சேரும். அவர் தான் உழைத்துள்ளார்.







ஜோ பேச்சு







Sunday, December 20, 2020

இணைய உலகம் 2020

2020/5

என் 33 வயதில் கணினியும் இணையமும் அறிமுகமானது. 35 வயதில் சொந்தமான கணினி வாங்கி பயன்படுத்தும் நிலை உருவானது. அன்றைய விலை ரூபாய் 1,25,000. உறவினர்கள் முதல் நண்பர்கள் அனைவரும் சிரித்தனர். மகள்களுக்கு நகை சேர்க்காமல் எதை வாங்குகிறான்? என்றனர். என் ஆசை என் விருப்பம் இதுவாகவே இருந்தது. 40 வயதில் இணையம் குறித்த புரிதல் உருவானது. கடந்த 11 வருடமாக முழுமையாக உள்ளும் புறமும் பார்த்து விட்டேன்.



"சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்"

நான் என் மகள்களிடம் திரும்பத் திரும்ப ஒரு விசயத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வின் போது சொல்லிக் கொண்டேயிருப்பேன். "சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று.  காரணம் "உங்கள் கல்வி வேறு. வாழப் போகின்ற வாழ்க்கை வேறு. இது யாராலும் உங்களுக்கு கற்றுத் தர முடியாது. நீங்கள் தான் உணர வேண்டும். உள் வாங்க வேண்டும். உணர்ந்ததைப் புரிந்து கொள்ள வேண்டும். தவறு நடக்கும். மாற்றிக் கொள்ள வேண்டும்".


Friday, December 18, 2020

மீண்டும் தொடங்கவும்.

 




2020 / 3

நம்பமுடியாத பேரழிவு நடந்து முடிந்த நாட்டில் கவனித்துப் பாருங்கள். அதன் பிறகு அங்கு வாழ்ந்த மக்களின் மனோநிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் உருவாகும். நல்ல உதாரணம் ஜப்பான்.  கொரானா அதிகம் பாதிக்காத நாடுகளில் ஜப்பானும் ஒன்று. காரணம் மக்களின் மனோபாவம். அரசு அறிவிப்பதற்கு முன்பே தங்கள் கடமைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டார்கள்.  முதிர்ந்த எண்ணங்களை நாம் பக்குவம் என்று அழைக்கின்றோம்.



Thursday, December 17, 2020

டார்லிங் மஞ்சுளா

மூன்று வாரங்களுக்கு முன்பு அதிகாலை ஐந்து மணிக்கு நடைப்பயிற்சியைத் தொடங்க வெளிக் கதவைத் திறந்த போது இவள் அறிமுகமானார். பார்த்தவுடன் தெரிந்து விட்டது "அவள்" என்று. 

கதவின் அருகே படுத்து இருந்தாள். என்னைக் கண்டதும் நடுங்கிக் கொண்டே பயத்தில் தள்ளி நின்று என்னைப் பாவமாகப் பார்த்தாள். யாருடி நீ? என்று சிரித்துக் கொண்டே நான் கடந்து நடந்து சென்று விட்டேன். 


Wednesday, December 16, 2020

2020

2020 ல் கடந்த எட்டு மாதங்களில் நான் பார்த்த பழகிய உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள். மனம் மற்றும் பணம் இவை இரண்டும் முக்கியமானதாக இருந்தது. ஆனால் பணம் இருந்தவர்கள், இல்லாதவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வினோதமான ஆண்டாக 2020 அமைந்து விட்டது.  

கொரானா அல்லது கோவிட் அல்லது தொற்று நோய் என்ற வார்த்தைகள் அனைவருக்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்து விட்டது. 

இப்போது ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்கிறேன்.

Monday, December 14, 2020

கு. காமராஜர் மின்னூல்

 தமிழ் நாட்டின் ஆசான். 

கு. காமராஜர் 

இப்போது முதல் இலவசமாக வாசிக்க (கீழே இணைப்பில்)

#Share    #Comments    #Star Rating



Saturday, December 12, 2020

ஞான மார்க்கம் - கர்ம மார்க்கம் - பக்தி மார்க்கம்

ஆன்மீகம் என்பது மனிதர்களின் வாழ்வியல் தத்துவமாக இருந்தது. இன்று அதிகாரத்தை அடைய ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. கடவுள் என்பது இன்று சந்தைப் பொருள். புனிதம் என்பது அதன் பிராண்ட். மக்கள் தங்களின் அங்கீகாரத்திற்கு உரிய பொருளாகவே கோவிலைப் பார்க்கின்றார்கள். 

தன்னை அறிவதும் இல்லை. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்களின் விளைவுகளைப் பற்றியும் யோசிக்கக்கூட இன்று எவருக்கும் விருப்பம் இல்லை. மனிதன் மாறிவிட்டான்.


 

உங்களுக்கு, உங்கள் தலைமுறைக்கு அவசியம் தேவையுள்ள மூன்று புத்தகங்கள்.





Friday, December 11, 2020

கோவை Shanthi Social Service திரு.சுப்ரமணியம் காலமானார்.


இன்று தான் இவரின் புகைப்படத்தைப் பார்க்கிறேன். அதுவும் முழுமையான படமல்ல. அவர் பார்க்காத சமயத்தில் வேறு எவரோ எடுத்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.  நான் முதல் முதலாக இவரின் சாந்தி சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை வழியாக நடத்திக் கொண்டிருக்கும் மருத்துவப் பரிசோதனை நிலையத்திற்குச் சென்ற போது இவரின் படம் எங்கேயாவது மாட்டியிருக்குமா? என்று அந்த வளாகம் முழுக்க பல முறை சுற்றிச் சுற்றி வந்த ஞாபகம் இப்போது வருகின்றது. எங்கும் இல்லை.


Wednesday, December 09, 2020

வணிக சூத்திரங்கள் 5

அலிபாபா. அமேசானையே விரட்டி அடித்த பிரம்மாண்ட இ காமர்ஸ் நிறுவனம். இதன் நிறுவனர் ஜாக் மாவிடம் தொழில் பற்றிக் கேட்டால் எப்போதும் ஓர் உதாரணத்தைச் சொல்வார். "ஒரு குழந்தைக்கு முன்னால் ஓர் ஐஸ்கிரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அது ஐஸ்கிரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அந்தக் குழந்தைக்கு 2,000 ரூபாயில் எத்தனை ஐஸ்கிரீம்களை, எத்தனை வகையான ஐஸ் க்ரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது". "அதே போல, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் மற்றும் ஒரு நல்ல Business-க்கான ஐடியாவைக் கொடுத்தால், அவர்கள் நல்ல வேலையைத் தான் தேர்வு செய்கிறார்கள், அந்தப் பச்சைக் குழந்தையைப் போல" என்கிறார் ஜாக் மா.



Tuesday, December 08, 2020

வணிக சூத்திரங்கள் 4

1990க்கு முன்னால் பிறந்தவர்களிடையே நடந்த உரையாடலில் ஏதோவொரு சமயத்தில் இந்த வாக்கியம் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். "ஆமா இவர் பெரிய டாடாவாக்கும்".? டாடா என்ற சொல் கோடீஸ்வர சொல்லாக இங்கே உச்சரிக்கப்பட்டது. அதுவே கடந்த 25 ஆண்டுகளில் "ஆமா இவர் பெரிய அம்பானி பரம்பரையாக்கும்"? என்பதில் வந்து முடிந்துள்ளது. 


Monday, December 07, 2020

வணிக சூத்திரங்கள் 3

இந்திய தொழில் சமூகத்திற்குள் நாம் நுழைவதற்கு முன்பு உலகத்தை ஒரு முறை வலம் வந்து விடுவோம்.  காரணம் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திம பகுதியில் இங்கே மாற்றங்களை உருவாக்கக் கூடிய மனிதர்கள் அரிதாகவே இருந்தார்கள். காரணம் வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் வெளியே தெரியாமல் இருந்தார்கள். அதனையும் மீறி அவர்களுடன் ஒத்துழைத்து நம் இந்திய தொழில் சமூகத்தில் 1839 ல் ஜாம்ஷெட்ஜி (Jamsetji Nusserwanji Tata) உருவாக்கிய பாதை ரத்தன் டாடா என்ற ரத்த உறவைக் கடந்து இன்று நம் தமிழ் மகன் நடராஜன் சந்திரசேகரன் வரைக்கும் மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைப் பயண சுகமான அனுபவத்தை உருவாக்கியுள்ளது.



Sunday, December 06, 2020

வணிக சூத்திரங்கள் 2

வளர்ச்சி என்பதனை நீங்கள் எப்படி பார்ப்பீர்களோ? எனக்குத் தெரியாது.  ஆனால் அந்த வார்த்தையுடன் கொஞ்சம் மசாலா அயிட்டங்களைச் சேர்த்துப் பார்ப்பதுண்டு. வளர்ச்சி என்றால் அதன் மறுபெயர் மாற்றம் தானே? மாற்றத்தின் விளைவுகள் என்ன? அதன் தாக்கம் என்ன? இவற்றைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. நாம் வளர்ச்சி என்பதனை நம் குடும்பத்தை வைத்து அளவிடுகின்றோம். நம் அரசின் கொள்கைகள் நம் வாழ்க்கையை நேரிடையாக மறைமுகமாகப் பாதிப்பை உருவாக்குகின்றது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறீர்கள்?



Saturday, December 05, 2020

வணிக சூத்திரங்கள்

பணம், லட்சம், கோடி என்ற வார்த்தைகளை நான் உச்சரிக்கும் போது, வாசிக்கும் போது இன்றும் என் நினைவில் சில பேர்கள் வருவார்கள். என் அம்மா, அப்பா. இப்போது என் மனைவி. காரணம் இவர்கள் இயல்பாகவே பதட்டப்படுகின்றார்கள்.  "நேற்று ஒரு கோடி ரூபாய் சரக்கு லாரியில் சென்றது" என்பது எனக்குச் சாதாரண வார்த்தை. அதுவே இவர்களைப் பதட்டப்படுத்தும் செய்தி. ஒரு கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியாதவர்கள் நம்மவர்கள் என்பதனை தாமதமாகவே புரிந்து கொண்டேன். 


Friday, December 04, 2020

ஆன்மீக அரசியல் கடந்து வந்த பாதை

ஆன்மீகம் என்பது புதிரானது தானா? புனிதம் என்று வரையறைக்கப்பட்ட கோட்பாடுகளை அவசியம் நாம் கடைபிடிக்கத்தான் வேண்டுமா?  எங்கிருந்து தொடங்கியது? எப்படி தொடங்கப்பட்டது?    

Wednesday, December 02, 2020

2020 பென் டூ பப்ளிஷ் அமேசான் போட்டி

 வலையுலக நண்பர்களே

இந்த வருடம் அமேசான் நடத்தப் போகும் பென் டூ பப்ளிஷ் 2020 போட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது.  வலைபதிவு வழியாக எழுதியவர்கள், எழுதக் கற்றுக் கொண்டவர்கள் வெற்றிகரமாக தனபாலன் அறிவுரையை ஏற்று பலரும் அமேசானில் மின் புத்தகங்களாகக் கடந்த ஒரு வருடமாகப் பதிப்பித்து உள்ளீர்கள். வாழ்த்துகள்.  


Tuesday, December 01, 2020

புனிதமா? கடமையா?

புனிதம் என்ற பெயரில் கடமையை மறந்து செயல்படுவதும், கடமைகளை புனிதமாகப் பார்த்து வாழ்க்கையை குழப்பிக் கொள்ளும் மனிதர்களின் கதையிது.