மூன்று வாரங்களுக்கு முன்பு அதிகாலை ஐந்து மணிக்கு நடைப்பயிற்சியைத் தொடங்க வெளிக் கதவைத் திறந்த போது இவள் அறிமுகமானார். பார்த்தவுடன் தெரிந்து விட்டது "அவள்" என்று.
கதவின் அருகே படுத்து இருந்தாள். என்னைக் கண்டதும் நடுங்கிக் கொண்டே பயத்தில் தள்ளி நின்று என்னைப் பாவமாகப் பார்த்தாள். யாருடி நீ? என்று சிரித்துக் கொண்டே நான் கடந்து நடந்து சென்று விட்டேன்.
