Thursday, July 30, 2020

OMR - கொரானா உருவாக்கிய மாற்றங்கள்

நண்பர் பகிர்ந்துள்ள செய்தி.

*கொரானா பாதிப்பில் சென்னை OMR IT COMPANY மற்றும் அதை நம்பியுள்ள தொழில்களும்:*

ஐடி துறையில் வொர்க் ஃப்ரம் ஹோம் நிறைய பிசினசுக்கு ஆப்பு வச்சுடுச்சுன்னு தான் சொல்லனும்.

இந்த ஐடி துறையை நம்பிதான் சென்னை ஓஎம்ஆர் சாலை முழுக்க வானுயர்ந்த கட்டிடங்கள் வணிக வளாகங்கள்ன்னு கடந்த 20 வருஷத்துல எக்கச்சக்கமா வளர்ந்துச்சு.

Sunday, July 26, 2020

பெரோஸ் காந்தி முதல் வதேரா வரை

ராகுல் அவர்கள் பிவி நரசிம்மராவ் க்கு புகழ் மாலை சூட்டிய ஒரு கடிதத்தைக் கண்டேன். அது குறித்து பழைய கதைகளை எழுதி சோனியின் புகழைப் பரப்புவதைவிட அதற்கு முந்தைய பழைய கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வந்தால், எரிச்சல் வந்தால் நான் பொறுப்பல்ல. படித்து முடித்தவுடன் ஒரு சொம்பு தண்ணீர் குடித்து ஆற்றாமையை போக்கிக் கொள்ளவும். இரா. செழியன் தினமணியில் எழுதிய கட்டுரையிது.

#வரலாறுமுக்கியம்அமைச்சரே

ஒரு குடும்ப அளவில் பார்த்தால், ஜவஹர்லால் நேரு, (1947-64), இந்திரா காந்தி (1966-77, 1980-84) ராஜீவ் காந்தி (1984-89) ஆகியவர்கள் பிரதமர்களாக இருந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றித்தான் இந்தியாவின் அரசியல் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இன்றும் இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை இருந்தாலும், கடந்த நானூறு ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சபைக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட நிலைமையில்தான் ஆட்சிமுறை அங்கு நிலவுகிறது.


Friday, July 24, 2020

ஜுலை 2020 கொரானா கால நினைவுகள்

நேற்று அவினாசியிலிருந்து தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் வந்த ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பாவுடன் இரண்டு பசங்களும் இருந்தார்கள். மாருதி ஆம்னி முன்னும் பின்னும் வேப்பிலைக் கட்டியிருந்ததைக் கவனித்து டிரைவரிடம் கேட்டேன்.

"முன்னால் கண்ணாடியில் மறைக்கிறதே? கஷ்டமாக இல்லையா"?

"இப்படிக் கொத்துக் கொத்தாக நான்கு பக்கமும் சொருகாமல் வந்தால் அய்யன் வெளியே வண்டியை எடுக்க விட மாட்டார்" என்றார்.

உள்ளே முண்டியடித்து உட்கார்ந்து வந்தவர்களுக்கு, தாடைக்குக் கீழே தொங்கிக் கொண்டிருக்கும் துணி முகக் கவசத்தை வெறித்துப் பார்த்தேன். தமிழகம் தனி மனிதர்களின் சிந்தனையில் தன்னிகரற்ற மாநிலம் என்பதனையும் உணர்ந்து கொண்டேன்.

Wednesday, July 22, 2020

பக்கோடா 2020 ஜுலை


தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் "எந்த விசயத்திலும் திட்டமிட்டு தொலைநோக்குப் பார்வையோடு தான் செயல்படுவார்கள்" என்பதற்கு சமீப உதாரணம் ஒன்றைக் குறிப்பிட முடியுமா?

முடியும். இன்று ஞாயிற்றுக் கிழமை பொது ஊரடங்கு என்பதால் நேற்று டாஸ்மாக் ன் ஒரு நாளின் மொத்த விற்பனை 183 கோடி ரூபாய்.🙃

*****

Friday, July 17, 2020

காமராஜர் படித்தா ஆட்சி செய்தார்?

ஏறக்குறைய 14 வகையான பொருட்கள் தமிழகக் கல்வித்துறையால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுகின்றது. சென்ற ஆண்டு கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 29 000 கோடி. பிரச்சனை அதுவல்ல.

சென்ற வருடம் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. தரம் குறித்துக் குறை சொல்ல விரும்பவில்லை. உத்தேச விலை 13 000 அளவுக்கு அதில் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் மூலம் அறிந்து கொண்டேன். ஏற்கனவே ஹில்லாரி கிளின்டன் சென்னையில் ஜெ உயிருடன் இருக்கும் போது சந்தித்த போது பேச்சோடு பேச்சாக அரசு வழங்கும் மடிக்கணினியில் விண்டோஸ் (மைக்ரோசாப்ட் மென்பொருள்) போட்டு விடுங்கள் என்று பில்கேட்ஸ் தூதராக வந்து கோரிக்கை வைக்க ஒரு வெள்ளைத்தாய் மனதைத் தமிழகத் தாய் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?

Tuesday, July 14, 2020

தமிழக Online கல்வியும் Offline கல்வித்துறையும்



  • முன்பு கல்வித்துறையில் ஒரு திட்டம் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றால் அதிகாரவர்க்கத்தின் பல படிகளைக் கடந்து வரும். பல இடங்களில் ஆலோசனைகள் கேட்கப்படும். அதன் பிறகே கல்வித்துறை செயலாளர் பார்வைக்கு வந்து சேரும். இறுதியில் தலைமைச் செயலாளர் மூலம் கல்வி அமைச்சரின் அனுமதிக்குக் கோப்பு செல்லும். ஆனால் இப்போது கல்வி அமைச்சர் என்ன விரும்புகின்றாரோ அதுவே அந்தச் சமயத்தில் ஆணையாக மாற்றப்படுகின்றது.  இதன் காரணமாகவே பரவசமாக இருக்க வேண்டிய கல்வித்துறை இன்று பரிதாபமாக மாறியுள்ளது.

  • கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மூடுவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், ஆய்வக வசதிகள், அனைத்துப் பாடத்திற்கும் ஆசிரியர் இல்லாமை, போதிய வகுப்பறை இல்லாதது என அரசுப் பள்ளிகள் திண்டாடி வருகிறது. 


Wednesday, July 08, 2020

கொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)


1 மதுக்கடைக்கு அருகே புத்தகக் கடை வைத்திருக்கும் கடைக்காரர் முகத்தில் எல்ஈடி பல்பு வெளிச்சம் தெரிந்தது. காரணம் கேட்டேன். உள்ளே நின்று கொண்டே பாரில் குடிக்கின்றார்கள். கூட்டம் அதிகமாக வருகின்றது. எனக்கும் வியாபாரம் பரவாயில்லை என்றார்.

2, அழைக்க மறந்த நண்பர்களைத் திடீரென்று அழைத்துப் பேசலாம் என்று அழைக்கும் போது அவர்கள் தொடர்ந்து எடுக்காமலிருந்தால் மனதில் பயம் வருகின்றது. சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் குடும்பமே கொரானாவில் தாக்கி அப்பா இறந்த தகவல் ஒரு வாரம் கழித்துத் தான் தெரியவந்தது. வேறு யாருடனுமாவது தொடர்பு கொண்டு அவர்கள் குடும்பத்தில் அனைவரும் நலம் தானே? என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதாக உள்ளது.

Sunday, July 05, 2020

சிங்கங்கள் பாதையை மாற்றிக் கொள்வதில்லை

மின்னூல்களைப் படிக்கின்றார்களா? என்று நண்பர் சென்ற வாரம் அழைத்துக் கேட்டார். யூ டியூப் பிரியர்கள், ஃபேஸ்புக்கில் அரட்டை அடிப்பதை மட்டும் கொள்கையாகக் கொண்டவர்கள் வாசிப்பதை விரும்புவதே இல்லை. கட்சி, மதம், சாதி அரசியலைக் கடந்து லைக் அரசியல், ஷேர் அரசியலைக் கடந்து வரப் புரிதல் இருக்க வேண்டும். இத்துடன் ஆதரவு அளிப்பவர்களின் உளப்பாங்கைப் பகுத்தறியத் தெரிந்து இருக்க வேண்டும்.இது புரியாதவர்கள் தான் அவசரக் குழந்தைகள்.

Thursday, July 02, 2020

செங்கோட்டையனும் நம் கல்வித்துறையும்

அன்புள்ள செங்கோட்டையன் அவர்களுக்கு

நீங்கள் ஒவ்வொரு முறையும் கோபி வரும் போது கட்டாயம் நம்பியூரில் இருந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதை நான் அறிந்ததே. நீங்கள் தான் தமிழகத்தின் கல்வி அமைச்சர் என்பதனையும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சமீப காலமாக அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.