Thursday, December 31, 2020

2020 - சில வார்த்தைகள்

ங்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பாதீர்கள். அனைவரும் பாராட்டினால், பாராட்டிக் கொண்டேயிருந்தால் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சொந்த வாழ்க்கையில் உங்கள் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தாதீர்கள். மனைவிக்குக்கூட உங்களைப் பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. இணைய வாழ்க்கை அதற்கு வசதி செய்து தந்துள்ளது. வாசிப்பவர்களுக்கு வெறுப்பாக இருந்தாலும் மனதளவில் இது உண்மை தான் என்று அவர் மனம் எண்ணக்கூடும்.


Tuesday, December 29, 2020

7.5 மருத்துவ இட ஒதுக்கீடு.

 பக்கா கிரிமினல் பயங்கர கிரிமினல் -  வித்தியாசம் என்ன?

முத்துக்குமரன் கமிட்டி உருவாக்கிய முழுமையாக விசயங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் சமச்சீர்க் கல்வி என்பது இன்றைக்கு மெட்ரிகுலேசன் சிபிஎஸ்சி முதலாளிகளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்திருக்க வாய்ப்புண்டு. கஞ்சித்தண்ணீர் மாதிரி அதனை நீர்த்துப் போகச் செய்து அலங்கோலமாக்கி செயல்வடிவத்திற்குக் கொண்டு வந்த வரலாற்றுச் சாதனைகளை விபரம் புரிந்த தமிழ்ப் பிள்ளைகள் அறிந்திருக்கக்கூடும்.

ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ள 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உரியது என்பது இன்னும் சில வருடங்களில் ஊழல் மிகுந்ததாக மாறக்கூடிய அத்தனை அம்சங்களையும் இதற்கு உள்ளே வைத்துள்ளார்கள்.

அரசு பள்ளிக்கூடம் சாதா தோசை. அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஸ்பெஷல் தோசை. ஆனால் தனியார் பள்ளிக்கூடம் ரோஸ்ட். இப்படித்தான் நம் மக்கள் கருதுகின்றார்கள். 

7.5 விசயத்தில் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களைக் கழட்டிவிட்டனர். அதற்குப் பதிலாகத் தனியார்ப் பள்ளிகளில் அரசு நிதி மூலமாகப் படித்த (Right to Education Act) மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்து இருந்தாலும் இது போன்ற மறை பொருள் சமாச்சாரங்கள் உள்ளே பொதிந்துள்ளது.  

ஊடகங்கள் இந்த இடம் வரும் போது நைஸாக மடை மாற்றி வேறு பக்கம் வண்டியைத் திருப்புகின்றார்கள்.

இவர்கள் யோக்கியவான்கள் என்றால் ஒன்று முதல் 12 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்களுக்கு மட்டும் என்று ஒற்றை வாக்கியத்தில் இதனைக் கொண்டு வந்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும்.  

இந்த வருடம் தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 40 சதவிகிதம் இருக்கை மட்டுமே நிரம்பி உள்ளது. மற்ற கல்லூரிகள் எல்லாம் காத்தாடுது. ஒருவரும் திரும்பிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை. விளம்பரங்கள் செய்து கல்வி முதலாளிகள் காசை இழந்தது தான் மிச்சம். 

இன்னும் சில வருடங்களில் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படும் இருக்கைகளில் உள்ள ஊழல் தான் ஊடகங்களுக்குத் தலைப்பு மற்றும் விவாதமாக மாறும். இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனாலும் இந்த வருடம் அரசு வழங்கிய 7.5 இடஒதுக்கீடு வாயிலாக மருத்துவர்களாக உள்ளே நுழைந்த அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுக்க எடப்பாடியாரை தங்கள் தெய்வமாக வணங்குவார்கள்.  

மேலும் அரசு கல்லூரிக்கட்டணம் வரைக்கும் கட்டியுள்ள சூழலில் அனைத்து நல்ல கிரகங்களும் ஒரே சமயத்தில் பார்த்து வீபரித ராஜயோகத்தை வழங்கியுள்ளது. பத்து வருடங்கள் இது தொடர்ந்தால் போதும்.  4000 மருத்துவர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைப்பார்கள்.

ஜோ பேச்சு யூ


Sunday, December 27, 2020

மனைவி என்பவள் தெய்வமாகலாம்.

இங்கு அனைவரும் குடும்ப வாழ்க்கை வாழத் தான் செய்கின்றார்கள். எத்தனை பேர்கள் அழகான குடும்ப வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று பட்டியலிட்டால் இரண்டு கை விரல்கள் எண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம். 

எனக்குத் தெரிந்த ஒருவர் தன் மனைவியுடன் 19 வருடங்களாகப் பேசிக் கொள்வதில்லை. இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றார்கள். மகள் மகனுக்குத் திருமணம் ஆகி விட்டது. மனைவி சமைத்து வைத்து விடுவார். இவர் பணத்தை டப்பாவில் வைத்து விடுவார். இன்னமும் மாறவில்லை.  அவரவர் தரப்பில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. இதுவொரு உதாரணம். 

இதே போல இங்கே குடும்ப வாழ்க்கை என்பது கட்டாயத்தின் அடிப்படையில் வாழ்வது போலவே பலருக்கும் உள்ளது. இந்திய கலாச்சாரம், புனிதம் போன்ற அனைத்தும் கட்டுடைக்கப்பட்டு விட்டது. வெளியே தெரிவது கொஞ்சம். உள்ளே புழுங்குவது அதிகம்.

பொருந்தாக் காதல், வயதுக்கு மீறிய காதல், வயதுக்குத் தொடர்பில்லாத காதல், காமத்திற்காகக் காதல், கௌரவத்திற்காகக் காதல், வயதாகியும் ஈகோ, விட முடியாத அதிகார மனப்பான்மை, அசிங்க எண்ணங்கள், புரிதலற்ற உளறல்கள், தலைமுறைகள் வளர்ந்தும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் தறி கெட்டும் வாழும் வாழ்க்கை என்று ஒவ்வொரு குடும்பத்திற்குள் ஓராயிரம் காரணங்கள் உண்டு. ஒவ்வொரு காரணத்திற்குள்ளும் காமத்தில் உள்ள அத்தனை மூலக்கூறுகளும் இங்கே உள்ளது.  தகுதிக்கு மீறிய ஆசைகள் உண்டு. உழைப்பில்லாமல் உயர்ந்து விடும் நோக்கமுண்டு. பொறாமையே முக்கிய குணமாகக் கொண்டு வாழ்பவர்களும் உண்டு.

இது தான் தொடக்கம் என்று உறுதியாக சொல்ல முடியாத அளவிற்கு இன்றைய சூழலில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் மனிதர்களை மாற்றுகின்றது. உருவாகும் வெவ்வேறு சூழல்கள் அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகிறது.. இதுவே பத்திரிக்கைகளுக்கு செய்தியாகவும் இறுதியில் வந்து விடுகின்றது. யூ டியூப் வரையிலும் உள்ள அனைத்து விதமான சமூக வலைதளங்களிலும் மேலே எழுதிய பட்டியலையிட்டு தேடிப் பாருங்கள். 

பல லட்சம் பார்வையாளர்கள் முழுமையாகப் பார்த்திருப்பார்கள். 

இது போன்ற தலைப்புகள் சமூக வலைதள மக்கள் விரும்புகின்றார்கள். (இதன் காரணமாகவே 100 பேர்கள் பார்த்தாலே போதுமானது. இயல்பான வாழ்க்கைச் சூழலை, நடந்த நடக்கும் நிஜ கால வாழ்க்கையை பதிவு செய்ய எனக்கு எண்ணம் உருவானது) 

அலைபேசியை மட்டும் முழுமையாக பயன்படுத்துபவர்கள் வாசிக்க மனமின்றி கிடைக்கும் காட்சி வடிவங்களில் தங்களை இழந்து விடுகின்றார்கள். இதன் காரணமாகவே அசிங்கமான விசயங்கள் கூட சிங்கம் போல ட்ரெண்ட்டிங் என்ற வட்டத்திற்குள் மேலேறி வந்து நிற்கின்றது. போதையாக மாறி பார்ப்பவர்கள் அதன் பின்னால் அலைகின்றார்கள். அதை வழங்குபவர்களும் தலைப்புகளில் சூடேற்றி அதனை சந்தைப் பொருளாக மாற்றுகின்றார்கள்.

காரணம் தேடுபவர்களும், இது போன்ற விசயங்களை விரும்பிப் பார்ப்பவர்களும் வாழ்க்கையை வாழும் விதங்களில் அனுபவிக்க விரும்புவதில்லை. தங்களின் தறிகெட்ட கற்பனைகளில், அடக்க முடியாத சிந்தனைகளில், அடிப்படை நாகரிகம் தெரியாத வாழ்வியலை  வாழ விரும்புவதன் மூலம் மட்டுமே அவரவர் வாழ்க்கையை வாழ விரும்புகின்றார்கள். அதுவே நாளடைவில் பழக்கமாக மாறி அதற்கு அடிமையாகிவிடுகின்றார்கள். 

கடைசியில் மனைவி ஒரு பக்கம். மகள் மகன் வெவ்வேறு பக்கம் என்று வாழ்க்கைப் பாதை மாறி விடுகின்றது. ஒரு வீட்டுக்குள் வெவ்வேறு முகத்துடன் வாழ்கின்றார்கள். வீட்டுக்குள் ஒவ்வொருவர் வைத்திருக்கும் அலைபேசிகளும் சூறாவளி அலையை உருவாக்கி விடுகின்றது. கடைசியாக வாழ்க்கை அவர்களை மாற்றியும் விடுகின்றது.

ஒரு ஆணின் யோக்கிய தனத்தை உலகம் சொல்வதை விட அவனின் மனைவி எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் இங்கு வாழும் எந்த மனைவியும் கடைசி வரைக்கும் வாயைத் திறக்காமல் இருந்து விடுவதால் மகாத்மா, புனிதர், வள்ளல், தியாகி, உத்தமர், நல்லவர், ஆன்மீகவாதி, அமைதியானவர், சிந்தனையாளர் என்று பல பெயர்களில் ஆண்களால் வாழ முடிகின்றது.

எப்படித் தொழில் செய்ய வேண்டும்? என்று எண்ணத்தை மட்டுமே எனக்கு வைத்திருந்த தொடக்க காலத்தில் எப்படிக் குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும்? என்ற எண்ணம் உருவாகாமலிருந்த போது தாமதமாகத் திருமணம் ஆனது. குறிப்பிட்ட கொள்கைகள், சித்தாந்தங்கள், வாழ்க்கை முறைகள் என்பது போன்ற பலரின் பார்வைக்குப் பழமைவாதியாகவே தெரிந்தேன், எது நம் பாதை என்று தெரியாமல் புரியாமல் வாழ்ந்த எனக்குத் தொடக்க காலத்தில் குடும்ப வாழ்க்கை குறித்த புரிதல் உருவாகவில்லை. 

மகள்கள் வளர வளர கற்றுக் கொண்டே ஆக வேண்டிய சூழலைக் காலம் உருவாக்கியது. கால மாற்றத்தில் மலைகள் உடையும். பாறைகள் கூட சில்லு சில்லாக மாறும். இறுதியில் மணலாக மண்ணாக மாறுமென்பது இயற்கை உருவாக்கிய விதி. நானும் அப்படித்தான் மாறினேன். மாற்றிக் கொண்டேன்.

நீங்கள் கொண்டாடக்கூடிய பிரபல்யங்கள் 95 சதவிகித மக்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை இழந்தவர்கள். அதன் பாதிப்பை தங்கள் கடைசிக் காலத்தில் தண்டனையாகப் பெற்று மறைந்தவர்கள். மற்றும் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். நான் உணர்ந்த போது சுதாரித்துக் கொண்டேன்.

நெருங்கிய நண்பர்கள் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்கும் கேள்விகள் எப்படி எழுத முடிகின்றது? நான் வந்து படிப்பதற்குள் அடுத்த நான்கு தலைப்புகள் எழுதி முடித்து விடுகிறீர்கள்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஒரே பதில் என் மனைவி தான்.  ஆனால் இந்த வருடம் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும், அதனை நான் வெற்றி கொண்டு வந்த விதமும், அமைதியாக வாழ்ந்த வாழ்க்கைக்கும், அனுசரணையாக என்னுடன் இருந்த, இருக்கும் மனைவிக்கு நன்றிக்கடன் செய்யும் பொருட்டு இன்றே இதனை இங்கே எழுதி வைத்திடத் தோன்றியது.

என் பார்வையில் எல்லா நாளும் திருமண நாளே. எல்லா நாட்களும் பிறந்த நாளே. ஆனால் பெண்கள் பார்வையில் தனித்த விருப்பங்கள் இருந்தாலும் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவர்களின் விருப்பங்களை மறுப்பதும் இல்லை. 

பல விதமான கட்டளைகள், கட்டுப்பாடுகள், சோதனைகளைக் கடந்த இந்த வருடம் மூத்த மகளுக்கு தனியாக அலைபேசி வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன் என்ற  என் நிலைமை தனிக் கதை. 

காரணம் இவர்கள் பள்ளியின் இணைய வகுப்புக்கு 20க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் குரூப் இருப்பதும், தொடர்ந்து யாராவது ஒருவர் என் அலைபேசியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதுமாக இருந்த காரணத்தால் கடந்த மூன்று மாதங்களாக என் அலைபேசி என் கைக்கு வருவதே இல்லை. நான் அலைபேசி இல்லாமல் தான் வெளியே சென்று வந்தேன். வேறு வழியே இல்லாமல் புதிதாக வாங்கிய போது "சில நாட்களுக்கு என் அலைபேசியை நீங்கள் பார்க்க அனுமதி இல்லை" என்றார். 

பயமாக இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. காரணம் கேட்ட போது "23 நவம்பர் முதல் பார்க்கலாம்" என்றார்.

குழப்பமாக இருந்தது. 

உலகில் குறுக்கும் நெடுக்கும் பயணிக்கும் எனக்கு இவரின் புதிர் பேச்சைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அமைதியாக ஒதுங்கி விட்டேன்.  

"குடும்ப வாழ்க்கையில் ஆண் தோற்று விடுவது எப்போதும் நல்லது" என்ற பொன்மொழி எனக்குள் ஓடிக் கொண்டேயிருப்பதால் இப்போதெல்லாம் பெரிய வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுவதும் உண்டு.

கடந்த நவம்பர் இறுதியில் திருமண நாளில் எடுக்கப்பட்ட படத்தை என்னிடம் வந்து கொடுத்தார்கள். எங்கள் திருமண நாள் புகைப்படத்தை உருவாக்கி இவர்களே தயார் செய்து வழங்கினார்கள். தேவையான பணத்தை இவர்கள் சேமிப்பிலிருந்து எடுத்துச் செலவழித்து உள்ளனர்.  

என் எழுத்துக்கள் உங்களைத் திருப்திப் படுத்துகின்றது என்றால் அதற்கு நான் அல்ல. என் திறமை அல்ல. என் மனைவி எனக்கு நேரம் வழங்குகின்றார். என் பாதையில் குறுக்கிடாமல் இருக்கின்றார். என்னை அங்கீகரித்துள்ளார். அவர் தன் ஆசைகளை தனக்குள் வைத்துள்ளார். என்னைப் போலவே வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ கற்றுக் கொண்டுள்ளார் என்று அர்த்தம்.

நீங்கள் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் கடந்த காலத்தில் யாருக்கு நல்லது செய்தேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் வாழும் காலத்தில் எனக்கு நல்லது செய்யவே என்னுடன் பயணிக்கின்றார் என் மனைவி. 

மகள்களும் மனைவியும் நல்லவிதமாக அமைந்து விட்டால் போதும். 

வாழும் போதே சொர்க்கத்தைப் பார்த்து விடலாம் என்பது உண்மை தானே?

மனிதர்களைத் தவிர.தெய்வங்கள் வேறில்லை 

விதைகள் பழுதில்லை

"சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்"

கொஞ்சம் உழைப்பு. அதிக வைராக்கியம் 2020

இணைய உலகம் 2020

மீண்டும் தொடங்கவும்.


Friday, December 25, 2020

விதைகள் பழுதில்லை

பெற்றோர்கள் அனைவருக்கும் அவரவர் குழந்தைகள் சிறப்பு தான். எளிய வார்த்தைகளில் குறிப்பிட்டால் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" தான்.

ஆனால் இன்று காலம் குழந்தைகள் பெற்றோர்களுக்கு வில்லனாக மாற்றியுள்ளது. தூக்கிச் சுமக்க வேண்டிய சுமையாகவும் மாற்றியுள்ளது.

Thursday, December 24, 2020

தெய்வங்கள் வேறில்லை மனிதர்களைத் தவிர.

சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் நான் வாசித்த செய்திகளில் சொத்து தகராறு சார்ந்த செய்திகள் மிக அதிகம். அதுவும் ஒரே குடும்பத்திற்குள் நடந்த நிகழ்வுகள் கடைசியில் வெட்டுக் குத்து வரைக்கும் சென்றுள்ளதைக் கவனித்தேன். "என்னை கடைசி வரைக்கும் காப்பாற்றுகிறேன்" என்று சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு என்னை அனாதையாக வெளியே விட்டு விட்டான் என்று மகன் மேல் குற்றச்சாட்டு சொல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அழுத பெண்மணியைப் பார்த்தேன். 



Tuesday, December 22, 2020

உன்னதமான மனிதர் 2020

உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் என்பது சதவிகித மக்களுக்குத் தொடர்பே இல்லாத துறைகள் அரசியல் மற்றும் தொழில். விவசாயம் மற்றும் முறைசாராத் தொழில்களை இந்தப் பட்டியலில் கொண்டு வர வேண்டாம். வளர்ந்த நிறுவனங்கள். சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்று பல பட்டியல்கள் உண்டு.

இந்த இரண்டு துறைகளில் இருக்கும்  20 சதவிகித மக்கள் காரண காரியமின்றி பேசவே மாட்டார்கள். அனைத்து துறைகளிலும் தொடர்பு வைத்திருப்பார்கள். அனைவருடனும் நல்லுறவு பேணுவார்கள். ஆனால் தொடர்பு இல்லாதவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். பிரிவினை கோடு போட்டு வாழ்வார்கள். தங்களை எதிரியாக மாற்றிக் கொள்வார்கள். வாழ்ந்த சுவடு தெரியாமல் மறைந்தும் விடுவார்கள். 

காலம் காலமாக இப்படித்தான் இந்தப் பூமிப் பந்து சுழன்று வந்து கொண்டேயிருந்தது.  



Monday, December 21, 2020

பறவைகளுடன் வாழ்ந்த ஆண்டு 2020

நான் வசிக்கும் இடத்திற்கு அருகே காந்தி நினைவாலயம் உள்ளது. காந்தியின் அஸ்தி இந்தியா முழுக்க குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டு அங்கு அவருக்கு ஒரு நினைவு இல்லம் உருவாக்கப்பட்டது.  



கொஞ்சம் உழைப்பு. அதிக வைராக்கியம் 2020

இந்த வருடம் யூ டியூப் பக்கம் சென்றேன். அதுவும் சில மாதங்களுக்கு முன்பு தான் உள்ளே நுழைந்தேன். ஆனால் ஜிமெயில் கணக்கு திறந்த 2007 முதல் எப்போதும் போல இதிலும் கணக்கு இருந்தது. நான் சென்றதே இல்லை.  2018 முதல் 2020 வரைக்கும் உள்ள மூன்று வருடங்களில் தான் யூ டியுப் பக்கம் அதிகம் சென்று உள்ளேன். 

எப்போதும் நாமும் இதில் நம் தரப்பு விசயங்களைப் பதிவு செய்வோம் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. வேர்ட்ப்ரஸ் ல் திடீரென எழுதத் தொடங்கியது போல இதுவும் கிடைத்த ஓய்வில் உருவாக்கிக் கொண்ட பாதையிது.

குறள் சித்தருக்கு(ம்) அந்த நண்பரைத் தெரியும். அவர் யூ டியூப் கில்லாடி என்றும் எவரும் அவரை நெருங்க முடியாத வலைப்பின்னல் போட்டுக் கொண்டு உளவாளி போல வாழ்ந்து வருபவர் என்றும் சொல்லப்பட்டவரிடம் இது குறித்து அழைத்துக் கேட்டேன். அன்று காணாமல் போனவர் தான். 

இப்போதும் இங்கே வந்து படித்துக் கொண்டிருப்பார்.

அப்போது மனதில் வைத்திருந்தேன். ஏன் இது நம்மால் முடியாதா? 

சில தினங்களுக்கு முன்பு உன் தேர்ச்சி அறிக்கை இது தான் என்று அனுப்பி வைத்துள்ளார்கள்.  அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுவது எளிது. ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது சாத்தியம் தான். ஆனால் தொடர் உழைப்பு முக்கியம். நம் சொந்த வாழ்க்கை உழைப்போடு விருப்பம் சார்ந்த துறைகளில் ஈடுபடும் போது நம்மைப் போன்றவர்களுக்கு இரவு நேரம் தான் கிடைக்கும். அவசியம் இதற்காகத் தூக்கத்தைத் தியாகம் செய்தாக வேண்டும்.

பிஎஸ்என்எல் இணைய இணைப்பு வந்து வந்து போகும். ஒரு பேச்சை யூ டியூப் ல் ஏற்றுவதற்குக் குறைந்த பட்சம் 3 மணி நேரம் ஆகும். பொறுமை முக்கியம். அதனை நண்பர்களுக்குக் கொண்டு சேர்ப்பது அதனை விட முக்கியம்.

இன்றைய காலகட்டத்தில் யூ டியூப் என்றால் கழிப்பறை போல அசிங்கங்கள் நிறைந்து வழியும் மலக்கூடமாக இருக்கும் இடத்தில் நம்மைப் போன்றவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் கோட்பாடுகள் அங்கே எடுபடாது என்று தெரிந்தும் என் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் சாதனைப் பட்டியல் சொல்லும் அளவிற்குச் சிறப்பாகவே உள்ளது. இதன் முக்கால்வாசிப் பெருமை என் மகளுக்கே சேரும். அவர் தான் உழைத்துள்ளார்.







ஜோ பேச்சு







Sunday, December 20, 2020

இணைய உலகம் 2020

2020/5

என் 33 வயதில் கணினியும் இணையமும் அறிமுகமானது. 35 வயதில் சொந்தமான கணினி வாங்கி பயன்படுத்தும் நிலை உருவானது. அன்றைய விலை ரூபாய் 1,25,000. உறவினர்கள் முதல் நண்பர்கள் அனைவரும் சிரித்தனர். மகள்களுக்கு நகை சேர்க்காமல் எதை வாங்குகிறான்? என்றனர். என் ஆசை என் விருப்பம் இதுவாகவே இருந்தது. 40 வயதில் இணையம் குறித்த புரிதல் உருவானது. கடந்த 11 வருடமாக முழுமையாக உள்ளும் புறமும் பார்த்து விட்டேன்.



"சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்"

நான் என் மகள்களிடம் திரும்பத் திரும்ப ஒரு விசயத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வின் போது சொல்லிக் கொண்டேயிருப்பேன். "சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று.  காரணம் "உங்கள் கல்வி வேறு. வாழப் போகின்ற வாழ்க்கை வேறு. இது யாராலும் உங்களுக்கு கற்றுத் தர முடியாது. நீங்கள் தான் உணர வேண்டும். உள் வாங்க வேண்டும். உணர்ந்ததைப் புரிந்து கொள்ள வேண்டும். தவறு நடக்கும். மாற்றிக் கொள்ள வேண்டும்".


Friday, December 18, 2020

மீண்டும் தொடங்கவும்.

 




2020 / 3

நம்பமுடியாத பேரழிவு நடந்து முடிந்த நாட்டில் கவனித்துப் பாருங்கள். அதன் பிறகு அங்கு வாழ்ந்த மக்களின் மனோநிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் உருவாகும். நல்ல உதாரணம் ஜப்பான்.  கொரானா அதிகம் பாதிக்காத நாடுகளில் ஜப்பானும் ஒன்று. காரணம் மக்களின் மனோபாவம். அரசு அறிவிப்பதற்கு முன்பே தங்கள் கடமைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டார்கள்.  முதிர்ந்த எண்ணங்களை நாம் பக்குவம் என்று அழைக்கின்றோம்.



Thursday, December 17, 2020

டார்லிங் மஞ்சுளா

மூன்று வாரங்களுக்கு முன்பு அதிகாலை ஐந்து மணிக்கு நடைப்பயிற்சியைத் தொடங்க வெளிக் கதவைத் திறந்த போது இவள் அறிமுகமானார். பார்த்தவுடன் தெரிந்து விட்டது "அவள்" என்று. 

கதவின் அருகே படுத்து இருந்தாள். என்னைக் கண்டதும் நடுங்கிக் கொண்டே பயத்தில் தள்ளி நின்று என்னைப் பாவமாகப் பார்த்தாள். யாருடி நீ? என்று சிரித்துக் கொண்டே நான் கடந்து நடந்து சென்று விட்டேன். 


Wednesday, December 16, 2020

2020

2020 ல் கடந்த எட்டு மாதங்களில் நான் பார்த்த பழகிய உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள். மனம் மற்றும் பணம் இவை இரண்டும் முக்கியமானதாக இருந்தது. ஆனால் பணம் இருந்தவர்கள், இல்லாதவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வினோதமான ஆண்டாக 2020 அமைந்து விட்டது.  

கொரானா அல்லது கோவிட் அல்லது தொற்று நோய் என்ற வார்த்தைகள் அனைவருக்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்து விட்டது. 

இப்போது ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்கிறேன்.

Monday, December 14, 2020

கு. காமராஜர் மின்னூல்

 தமிழ் நாட்டின் ஆசான். 

கு. காமராஜர் 

இப்போது முதல் இலவசமாக வாசிக்க (கீழே இணைப்பில்)

#Share    #Comments    #Star Rating



Saturday, December 12, 2020

ஞான மார்க்கம் - கர்ம மார்க்கம் - பக்தி மார்க்கம்

ஆன்மீகம் என்பது மனிதர்களின் வாழ்வியல் தத்துவமாக இருந்தது. இன்று அதிகாரத்தை அடைய ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. கடவுள் என்பது இன்று சந்தைப் பொருள். புனிதம் என்பது அதன் பிராண்ட். மக்கள் தங்களின் அங்கீகாரத்திற்கு உரிய பொருளாகவே கோவிலைப் பார்க்கின்றார்கள். 

தன்னை அறிவதும் இல்லை. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்களின் விளைவுகளைப் பற்றியும் யோசிக்கக்கூட இன்று எவருக்கும் விருப்பம் இல்லை. மனிதன் மாறிவிட்டான்.


 

உங்களுக்கு, உங்கள் தலைமுறைக்கு அவசியம் தேவையுள்ள மூன்று புத்தகங்கள்.





Friday, December 11, 2020

கோவை Shanthi Social Service திரு.சுப்ரமணியம் காலமானார்.


இன்று தான் இவரின் புகைப்படத்தைப் பார்க்கிறேன். அதுவும் முழுமையான படமல்ல. அவர் பார்க்காத சமயத்தில் வேறு எவரோ எடுத்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.  நான் முதல் முதலாக இவரின் சாந்தி சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை வழியாக நடத்திக் கொண்டிருக்கும் மருத்துவப் பரிசோதனை நிலையத்திற்குச் சென்ற போது இவரின் படம் எங்கேயாவது மாட்டியிருக்குமா? என்று அந்த வளாகம் முழுக்க பல முறை சுற்றிச் சுற்றி வந்த ஞாபகம் இப்போது வருகின்றது. எங்கும் இல்லை.


Wednesday, December 09, 2020

வணிக சூத்திரங்கள் 5

அலிபாபா. அமேசானையே விரட்டி அடித்த பிரம்மாண்ட இ காமர்ஸ் நிறுவனம். இதன் நிறுவனர் ஜாக் மாவிடம் தொழில் பற்றிக் கேட்டால் எப்போதும் ஓர் உதாரணத்தைச் சொல்வார். "ஒரு குழந்தைக்கு முன்னால் ஓர் ஐஸ்கிரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அது ஐஸ்கிரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அந்தக் குழந்தைக்கு 2,000 ரூபாயில் எத்தனை ஐஸ்கிரீம்களை, எத்தனை வகையான ஐஸ் க்ரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது". "அதே போல, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் மற்றும் ஒரு நல்ல Business-க்கான ஐடியாவைக் கொடுத்தால், அவர்கள் நல்ல வேலையைத் தான் தேர்வு செய்கிறார்கள், அந்தப் பச்சைக் குழந்தையைப் போல" என்கிறார் ஜாக் மா.



Tuesday, December 08, 2020

வணிக சூத்திரங்கள் 4

1990க்கு முன்னால் பிறந்தவர்களிடையே நடந்த உரையாடலில் ஏதோவொரு சமயத்தில் இந்த வாக்கியம் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். "ஆமா இவர் பெரிய டாடாவாக்கும்".? டாடா என்ற சொல் கோடீஸ்வர சொல்லாக இங்கே உச்சரிக்கப்பட்டது. அதுவே கடந்த 25 ஆண்டுகளில் "ஆமா இவர் பெரிய அம்பானி பரம்பரையாக்கும்"? என்பதில் வந்து முடிந்துள்ளது. 


Monday, December 07, 2020

வணிக சூத்திரங்கள் 3

இந்திய தொழில் சமூகத்திற்குள் நாம் நுழைவதற்கு முன்பு உலகத்தை ஒரு முறை வலம் வந்து விடுவோம்.  காரணம் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திம பகுதியில் இங்கே மாற்றங்களை உருவாக்கக் கூடிய மனிதர்கள் அரிதாகவே இருந்தார்கள். காரணம் வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் வெளியே தெரியாமல் இருந்தார்கள். அதனையும் மீறி அவர்களுடன் ஒத்துழைத்து நம் இந்திய தொழில் சமூகத்தில் 1839 ல் ஜாம்ஷெட்ஜி (Jamsetji Nusserwanji Tata) உருவாக்கிய பாதை ரத்தன் டாடா என்ற ரத்த உறவைக் கடந்து இன்று நம் தமிழ் மகன் நடராஜன் சந்திரசேகரன் வரைக்கும் மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைப் பயண சுகமான அனுபவத்தை உருவாக்கியுள்ளது.



Sunday, December 06, 2020

வணிக சூத்திரங்கள் 2

வளர்ச்சி என்பதனை நீங்கள் எப்படி பார்ப்பீர்களோ? எனக்குத் தெரியாது.  ஆனால் அந்த வார்த்தையுடன் கொஞ்சம் மசாலா அயிட்டங்களைச் சேர்த்துப் பார்ப்பதுண்டு. வளர்ச்சி என்றால் அதன் மறுபெயர் மாற்றம் தானே? மாற்றத்தின் விளைவுகள் என்ன? அதன் தாக்கம் என்ன? இவற்றைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. நாம் வளர்ச்சி என்பதனை நம் குடும்பத்தை வைத்து அளவிடுகின்றோம். நம் அரசின் கொள்கைகள் நம் வாழ்க்கையை நேரிடையாக மறைமுகமாகப் பாதிப்பை உருவாக்குகின்றது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறீர்கள்?



Saturday, December 05, 2020

வணிக சூத்திரங்கள்

பணம், லட்சம், கோடி என்ற வார்த்தைகளை நான் உச்சரிக்கும் போது, வாசிக்கும் போது இன்றும் என் நினைவில் சில பேர்கள் வருவார்கள். என் அம்மா, அப்பா. இப்போது என் மனைவி. காரணம் இவர்கள் இயல்பாகவே பதட்டப்படுகின்றார்கள்.  "நேற்று ஒரு கோடி ரூபாய் சரக்கு லாரியில் சென்றது" என்பது எனக்குச் சாதாரண வார்த்தை. அதுவே இவர்களைப் பதட்டப்படுத்தும் செய்தி. ஒரு கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியாதவர்கள் நம்மவர்கள் என்பதனை தாமதமாகவே புரிந்து கொண்டேன். 


Friday, December 04, 2020

ஆன்மீக அரசியல் கடந்து வந்த பாதை

ஆன்மீகம் என்பது புதிரானது தானா? புனிதம் என்று வரையறைக்கப்பட்ட கோட்பாடுகளை அவசியம் நாம் கடைபிடிக்கத்தான் வேண்டுமா?  எங்கிருந்து தொடங்கியது? எப்படி தொடங்கப்பட்டது?    

Wednesday, December 02, 2020

2020 பென் டூ பப்ளிஷ் அமேசான் போட்டி

 வலையுலக நண்பர்களே

இந்த வருடம் அமேசான் நடத்தப் போகும் பென் டூ பப்ளிஷ் 2020 போட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது.  வலைபதிவு வழியாக எழுதியவர்கள், எழுதக் கற்றுக் கொண்டவர்கள் வெற்றிகரமாக தனபாலன் அறிவுரையை ஏற்று பலரும் அமேசானில் மின் புத்தகங்களாகக் கடந்த ஒரு வருடமாகப் பதிப்பித்து உள்ளீர்கள். வாழ்த்துகள்.  


Tuesday, December 01, 2020

புனிதமா? கடமையா?

புனிதம் என்ற பெயரில் கடமையை மறந்து செயல்படுவதும், கடமைகளை புனிதமாகப் பார்த்து வாழ்க்கையை குழப்பிக் கொள்ளும் மனிதர்களின் கதையிது.

Monday, November 30, 2020

வைரக்கல்

பிரபல்யங்களைப் பற்றி எழுதுவது ஒரு வினோதமான கலை. நாம் விரும்பியவர்களைப் பற்றி யாராவது ஒருவர் புகழ்ந்து எழுதினால் நமக்கு உவப்பாக இருக்கும். விமர்சித்து எழுதினால் அதில் உள்ள விசயங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து எழுதியவர் எத்தனை சதவிகிதம் உண்மை எழுதியுள்ளார்?. எப்படிப் பொய்யை உண்மையாக மாற்றி உள்ளார்? போன்ற எதனையும் ஆராய மாட்டோம். 

காரணம் நம் மனம்.



Sunday, November 29, 2020

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பக்கால ஆவணங்கள்

 எவையெல்லாம் வரலாறு என்று நம்பவைக்கப்பட்டு நாம் பாடப் புத்தகங்களில் படித்து வந்த அனைத்தும் அது உண்மையல்ல என்பதனை அறியும் போது நமக்கு 50 வயது ஆகின்றது. இப்போது இணையத்தில் பொங்கிக் கொண்டிருப்பவர்கள் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பக்கால ஆவணங்கள் என்ற புத்தகத்தைப் படிக்கப் பரிந்துரை செய்கின்றேன்.


Saturday, November 28, 2020

வேலுப்பிள்ளை பிரபாகரன் 66

 26 நவம்பர் 2020 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள்.  

சென்ற ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்தின் நீதிமன்றம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேல் வைத்திருந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் நீக்கி விட்டது.  இலங்கை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று இலங்கை அரசு ஈழத்தில் பல இடங்களில் அவரின் நினைவு தினம், பிறந்த தினம் விழா கொண்டாட இன்னமும் அனுமதிப்பதில்லை.

Wednesday, November 25, 2020

சசிகலா மற்றும் சோனியா

 சசிகலாவும் சோனியாவும் பல விதங்களில் ஒன்று தான்.

ஒருவர் அதிகாரத்தின் பின்னால் இருந்து ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார். மௌனி ஒருவர் சிக்கிவிட பத்து வருடங்கள் காலம் இழுத்துக் கொண்டே சென்றது.

Tuesday, November 24, 2020

ஒரு மாவட்டம் ஒரு பொருள்

 'One District, One Product' (ODOP) scheme

நாம் நக்கலுக்கும் நையாண்டிக்கும் பெயர் போனவர்கள். கிசுகிசு பேசுவதில் ஆர்வம் மிக்கவர்கள். சினிமா தான் உலகம் என்று நம்பக்கூடியவர்கள். எவன் தலைவன் எவன் தறுதலை? என்பதனைக்கூட உணர மறுப்பவர்கள். வட மாநிலங்களைத் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு கற்பனை வாதங்களை எடுத்து வைப்பவர்கள். எதையும் கட்சி ரீதியாகவே பார்க்க கற்றுக் கொண்டவர்கள். அப்படிப் பார்க்காதவர்கள் முத்திரை குத்தி முட்டுச் சந்துக்குள் நிறுத்த ஆர்வத்துடன் செயல்படுபவர்கள். எதைப் பற்றிப் பேச வேண்டுமோ? அதைத் தவிர மற்ற அனைத்தையும் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் இந்தச் செய்தியை அவசியம் படிக்க வேண்டும்.

Monday, November 23, 2020

சூரரைப் போற்று

அசுரன் படமென்பது எழுத்தாளர் பூமணி எழுதிய கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு சரடு. அதே போல கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அதிலிருந்து எடுக்கப்பட்ட அல்லது அதனை உந்துதலாக வைத்துக் கொண்டு முயன்று பார்த்த ஒரு படம் தான் சூரரைப் போற்று.


Sunday, November 22, 2020

"பரமபதம் விளையாட்டு"

சில்லுண்டிகளுக்கு அரசியல் என்ற பாடத்தில் உள்ள "பரமபதம் விளையாட்டு" புரிய வாய்ப்பில்லை. வெட்டுப்படுவது, உடனே வெட்டுக்குத் தயாராக வைத்து இருப்பது, குறிப்பிட்ட காலம் கடந்து வெட்டத் தயாராக வைத்திருப்பது இந்த மூன்று மூன்றும் மிக முக்கியமானது. 



Saturday, November 21, 2020

ஈபிஎஸ் திருப்பூர் வருகையும் சிறுதொழில் வளர்ச்சியும்

இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகாலை நடைபயிற்சியின் போது சாலையில் நடந்து சென்ற போது அந்தக் காட்சியைப் பார்த்தேன்.  ஒரு மினிவேன். அதில் ஒருவர் சுத்தமான வெள்ளுடை அணிந்தவருடன் ஓர் ஒட்டுநர் ஓர் உதவியாளர் இரண்டு கூலியாட்கள். சாலை முழுக்க கொடிகள் ஊன்றிக் கொண்டிருந்தார்கள். தார்ச் சாலையின் ஓரத்தில் பத்தடிக்கு ஒரு கொடி ஊன்றப்பட்டு அவர்கள் நகர்ந்து கொண்டேயிருந்தார்கள்.  

Friday, November 20, 2020

ஊர் காதல் | Native Love

SaturdaySeptember 09, 2017 அன்று ஊர் காதல் என்ற பதிவை எழுதினேன். நேற்று வரை இந்தப் பதிவை 80 000 பேர்களுக்கு மேலாகப் படித்து உள்ளனர். 

எப்படி இந்த அளவுக்கு இந்தப் பதிவு பலரின் பார்வைக்குச் சென்றது என்பது இன்று வரையிலும் ஆச்சரியமாகவே உள்ளது. நேற்று வாசித்துப் பார்த்த போது குறை ஒன்றும் தெரியவில்லை. ஊர் சார்ந்த புகைப்படங்களைக் கோர்த்து வேறொரு முறையில் யூ டியூப் ல் பதிவு செய்து உள்ளேன். 

நவீனத் தொழில் நுட்பத்தின் வாயிலாகத் திறக்குறளை ஆராய்ந்து வரும் திண்டுக்கல் ஸ்ரீலஸ்ரீ மகா சந்நிதானமும் மோடிஜியின் தென் மண்டல வெறுப்பாளர் சங்கத் தலைவருமான என் மனம் கவர்ந்த தனபாலன் மகான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சற்று நேரத்திற்கு முன்பு தகவல் வந்து சேர்ந்தது.

புத்திசாலிகளின் திறமைகள் தோற்பது இயல்பு. நல்லதும்கூட. 

ஆணவம் அழியும். அகங்காரம் குறையும். மாற்றம் உருவாகும். மனதில் தன்னம்பிக்கை மலரும். 

ஆனால் மகான் அவர்கள் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். 

திருப்பூர் முழுக்க பண வெறியில் அலையும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருப்பதால் சிறிய இடம் கிடைத்தால் கூட அதில் நான்கு குச்சு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு விடலாமே என்று எண்ணத்தில் உள்ளவர்களால் எந்தப் பக்கமும் போய் அமர்ந்து பேச முடிவதில்லை. 

என் ஜட்டியைத் தவிரப் பெண்கள் நலக்கூட்டணியினர் அனைத்தையும் கைப்பற்றி விட்டனர்.

"ஆளை விட்டால் போதும்" என்ற ஞான மார்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற எளிய தமிழ்ப்பிள்ளைகள் படும் பாடு சொல்லி மாளாது. அதற்கே நான்கு யூ டியூப்களில் பேசி புலம்ப வேண்டியதாக உள்ளது என்பதனையும் தாங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

இப்போது எனக்கென்று எந்தச் சொந்தமும் இல்லை.

என் தனிமையைக்கூட என்னால் அனுபவிக்க முடியாத அளவிற்கு வளர்ந்தவர்கள் வாயடிக்கின்றார்கள்.

வெகுண்டு எழுந்து பழக்கப்பட்டவன் இப்போது மிரண்டு போய் பதுங்கு குழிக்குள் இருந்து பேசிய காரணத்தால் இந்தக் குரல் இப்படி வந்து விட்டது தம்பி.

"என்ன செய்வீர்களோ? எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்பது பேரன் பேத்திகள் வேண்டும்" என்று சொன்ன போது மூவரும் சொன்ன பதில்.......

"நீங்கள் மற்றொரு திருமணம் செய்து அதன் மூலம் உங்கள் சந்ததிகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்" என்கிறார்கள்.

நான் என்ன செய்யட்டும்?

Thursday, November 19, 2020

பண்டிகை கால கொள்ளையர்கள்

நான்கு வருடங்களுக்கு முன்பு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் கடையில் நான் பார்த்த பெண்கள் சார்ந்த ஆயத்த ஆடைகள் ஆச்சரியத்தைத் தந்தது. வண்ணங்கள்,தரம், விலை என்று எல்லாவிதங்களிலும் மிகச் சரியாகவே இருந்தது. நான் எதையும் வாங்கவில்லை.  வீட்டில் வந்து சொன்ன போது நம்ப மறுத்தார்கள்.  வீட்டுக்கு அருகே ட்ரெண்ட்ஸ் திறந்த போது ஆர்வத்துடன் சென்று பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. நம் குலப் பெண்கள் அணியும் வகைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. வீட்டில் கொந்தளிப்பு உருவாக அதன்பிறகு அந்தக் கடை குறித்து வாயைத் திறந்தாலே கசகசா வார்த்தைகள்.



Wednesday, November 18, 2020

காலம் கவனிக்கும்.

கொரானாவிற்கு முன் இந்தச் சம்பவம் நடந்தது.

ஈரோட்டில் உள்ள பெரிய நிறுவனம் தங்கள் நிறுவனத்திலிருந்து (தரைவழியே) குழாய் அமைத்து தங்கள் ஆலையின் கழிவு நீரை ஆற்றில் தொடர்ந்து இரவு நேரத்தில் கலக்க வைத்துக் கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.  பெரிய பத்திரிக்கைள் அவர்களின் மற்ற துணை நிறுவனங்கள் மூலம் வரும் விளம்பரங்கள் வராமல் போய்விடக்கூடும் என்று கண்டும் காணாமல் இருந்தனர்.  அங்கே இருந்த சிறிய பத்திரிக்கை இதனை வெளிச்சத்திற்குக் கொண்ட வந்தது. 

Monday, November 16, 2020

இன்று சூரப்பா... நாளை காத்தப்பா...

தமிழகத்தில் முதல் முறையாக ஓர் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. பாரபட்சமில்லாமல் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். சுருதி சுத்தமாக ஒரே வாசகத்தை திரும்பத் திரும்ப உச்சரிக்கின்றார்கள். வெவ்வேறு விதமான பாணியில் பேசினாலும் கடைசியில் "சூரப்பா வெளியேறு" என்கிறார்கள். தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையாக சூரப்பா தெரிகின்றார். 

Saturday, November 14, 2020

2020 நவம்பர் 14 தீபாவளி

சென்ற வருடம் தீபாவளி திருநாளில் என்ன செய்தோம் என்று நினைவில் இல்லை. மகள் தான் சொன்னார் கைதி படம் போய்ப் பார்த்தோம் என்றார்.  நேற்றும் இன்றும் சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் படங்கள் பார்த்தோம். இரண்டும் அருமை. ஒடிடி தளம் என்பது குடும்ப பட்ஜெட் க்கு வரம்.

2020 முழுக்க எழுத்துப்பணியில் முழுமையாக ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்ட திருப்தி உள்ளது. குரல்வழிப் பதிவுகளாகவும் இந்த வருடம் பலவற்றைப் பதிவு செய்ய வாய்ப்பு அமைந்தது.



Wednesday, November 11, 2020

ஒரு நகரின் கதை - 35 000 கோடி

வந்தேறிகளால் வளர்ந்த நகரம். நாள் தோறும் தேடிவரும் வறியவர்களுக்கு அட்சயப் பாத்திரம். அமுதசுரபி. உழைத்தால் உயரலாம் என்பதற்கு ஆதாரம். ஆவணமாக எழுதப் படவேண்டிய பல பேர்களின் கதைகள் இந்நகருக்குள் உண்டு. வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. 

ஆனாலும் நம்பிக்கையளிக்கும் ஆலமரமிது. 

அது தான் திருப்பூர்.
 

Sunday, November 08, 2020

தரமான மூன்று விருந்துகள்.

செய்தி 1

முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிர்ந்து பேசாத நாகரிகமான அரசியல் தளத்தில் செயல்படக்கூடியவரைப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டென்சன் ஆக்கி விடப் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தென்னரசு அவர்கள் வெற்றி கொண்டான் பேசுவது போலப் பேசியதைப் பார்த்தேன். ஏற்கனவே பெருமாள் பிச்சையை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து வெசாயி தூக்க அது உள்நாட்டுக் குழப்பம் என்றும், மைனாரிட்டி சமூகத்தைக் கோபம் கொள்ளும் அளவிற்கு வாய்த் துடுக்காகப் பேசினார் என்று பத்திரிக்கைகளில் பொத்தாம்பொதுவாக செய்தி வந்தது. ஆனால் மேல்மட்ட நபர்களுக்குத் தான் உண்மை என்னவென்று தெரியும். அது (மணல் வியாபாரப் பங்கு பிரித்தலில் உண்டான குழப்பம்) பரம ரகசியம். 

இவரிடம் ஆவின் துறை சிக்கி சின்னாபின்னாபின்னாப்பட்டுக் கொண்டிருக்கிறது.  நான்கு சந்துக்கு ஒரு தனியார் பால் விற்பனை மையங்கள் 24 மணி நேரமும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆவின் விற்பனை மையங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது.  கடைசியாக வேலம்பாளையத்தில் கண்டு பிடித்தே விட்டேன். பண்டிகை தினங்களில் ஒரு கிலோ நெய் அதிகமாக விற்பனை ஆகும். ஆனால் அதிகமாகக் கடைகளில் இல்லை. 

அரை லிட்டர். 100 மில்லி போன்ற உதிரிப் பாகங்களை வைத்துக் கொண்டு தான் ஒப்பேற்றுகின்றார்கள். ஆவின் ஒரு கிலோ நெய் விலை ரூபாய் 515. ஆனால் அரை கிலோ 265 (இரண்டு வாங்கினால் ரூபாய் 530) நமக்கு ரூபாய் 15 நட்டம். ஆனால் ரிலையன்ஸ் கடைகளில் ஆவின் எப்போதும் தட்டுப்பாடு இல்லாமல் எல்லாவிதமான அளவுகளிலும் கிடைக்கின்றது. ஒரு கிலோ என்பதே ரூபாய் 469. இரண்டு கிலோ வாங்குபவர்களுக்கு ஏறக்குறைய நூறு ரூபாய் மிச்சம். தேர்தல் வரப் போகுது. மிச்சம் சொச்சம்ன்னு நீங்க பேசிட்டு போயிடுவீங்க. பிச்சை பெருமாள் வெளியே போய் பிச்சை எடுக்க முடியுமா? என்று காற்றில் வந்த அசரீரி கேட்டது.

செய்தி 2

தனித் தமிழ் ஆர்வலர்களை இப்பொழுதெல்லாம்  எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. பாவம் அது அவர்களின் விருப்பம் என்றே எடுத்துக் கொள்வதுண்டு. காலநிதி மாறன் 1995க்கு பிறகு தமிழகத்திற்கு புதிய தமிழை அறிமுகப் படுத்தினார். அனிருத் என்பவன் இசையமைப்பாளர் என்ற போர்வையில் தமிழை ஆழக் குழி தோண்டி புதைத்தே விட்டான்.  

தினமும் தினசரிகளில் வரும் விளம்பர வார்த்தைகள் ஊன்றி கவனிப்பதுண்டு. அது மொழியல்ல. விபச்சாரம். நிஜ வாழ்க்கையில் தமிழ் மொழி எப்படியுள்ளது என்பதனை இன்று அசைவச் சந்தையை விரைவில் கைப்பற்றப் போகும் இணைய வர்த்தகம் உணர்த்தியது.

ஹாட்ரிக் விருந்து

ஒரே ஷாட்டில் மூன்று ப்ரெஷ்ஷான சுவையான பொருட்கள்.  ஆண்டிபயாடிக் ப்ரீ.  தரமான கோழிக்கறி, ப்ரெஷ்ஷான இறால்கள் மற்றும் வெள்ளாட்டுக்கறி காம்போ இந்த நம்பமுடியாத விலையில்.  இன்றைக்கு மட்டும் உடனே ஆர்டர் செய்யுங்கள்.

பரிமேலழகர் உரை.

தரமான மூன்று விருந்துகள்.

கிருமிகள் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட தரமான கோழிக்கறியுடன் இறால்கள் மற்றும் வெள்ளாட்டுக்கறி. நம்ப முடியாத விலை. துள்ளத் துடிக்க உயிர்ப்புடன் உண்ணும் போது நீங்கள் உணரும் சுவையில் எங்கள் தரம் புரியும். இதனை அனுபவிக்க இன்றே எங்களை அழைக்கவும்.

--------------

ஏன் திட்டுகின்றாய்? புலம்புகின்றாய்? நிச்சயம் மாற்றம் வரும்? இவர்கள் கொட்டம் நீடிக்காது என்று நண்பர்கள் உரையாடலின் போது சொல்கின்றார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நம்பியூர் நாயகன் கொடுத்த பேட்டியின் சுருக்கமிது.

"ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பள்ளி திறக்கப்பட்ட பின்பு கொரானாவால் பாதிக்கப்பட்டு பிரச்சனை உருவாகியிருக்கிறது என்றால் அது அந்த மாநிலப் பிரச்சனை. தாய்க்கிழவி அரசு அதனைக் கணக்கில் கொள்ளாது. இங்குள்ள சூழல் வைத்தே நாங்களே முடிவு செய்வோம்" என்றார்.

இவர்கள் பள்ளிகளைத் திறக்க துடியடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்? 

என்ன காரணம்?

வருகின்ற திங்கள்கிழமை பள்ளிக்குப் பெற்றோர்கள் வர வேண்டும். கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க இருக்கின்றது என்று பள்ளிக்கூட நிர்வாகம் அழைப்பு அனுப்பி உள்ளனர். ஏற்கனவே 16ந் தேதி பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பு வந்த போது உருவான எதிர்ப்பின் காரணமாக இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது.

இப்போது ஓர் ட்விஸ்ட்.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் என்ன சொல்வார்கள்? இறுதியாக அரசு என்ன முடிவெடுத்து 11ந் தேதி வெளியிடுவார்கள் என்பதற்கு அப்பாற்பட்டு இப்போதே பள்ளிக்கூடங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுக்க சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக ஒவ்வொரு அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குழப்பம் வர வேண்டுமே?

முடிவே செய்யாமல் ஏன் சுத்தம் செய்வதில் இத்தனை அவசரம்?

"ஒரு மாதம் மட்டும் திறக்க அனுமதிங்க. மாணவர்களுக்கு கொரானா நிச்சயம் வந்து விடும். பாதிப்பு உருவாகும். கூச்சல் குழப்பம் வரும். ஒரு மாதத்திற்குள் தனியார்ப் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இதுவரையிலும் கட்டாமல் டபாய்த்துக் கொண்டிருக்கும் பணத்தை நாங்கள் வசூல் செய்து விடுவோம். தேர்தல் நிதி தருவதில் எங்களுக்குப் பிரச்சனையில்லை. அப்புறம் எப்போதும் போல கொரானா காரணத்தைக் காட்டி மீண்டும் மூடி விடலாம்". 

இரண்டாவது அலையில் மாணவர்களின் உயிர்........

மனிதர்களின் கதை 4 - அதிர்ஷடம் மனிதர்களை மாற்றும்

மனிதர்களின் கதை 3 - தொழில் என்பது முதலைகள் வாழுமிடம்

மனிதர்களின் கதை -2 நம்பிக்கைத் துரோகம் நடத்தும் பாடமிது

மனிதர்களின் கதை - 1 உயிரைப் பறித்த சொந்த வீட்டுக் கனவுகள்

Friday, November 06, 2020

அதிர்ஷடம் மனிதர்களை மாற்றும்


மனிதர்களுக்குப் பணம் தரும் நம்பிக்கை வேறு எவற்றுடனும் ஒப்பிடவே முடியாது. சேர்த்த சொத்துகள் புதிய அங்கீகாரத்தை அளிக்கிறது.  வாழ்க்கையை முழுமையாக மாற்றுகின்றது. அறிவில்லாதவர்கள், ஆரோக்கியமில்லாதவர்கள் எனப் பாரபட்சமின்றி இங்கே கவனம் பெறுகின்றார்கள். சமூகம் இவர்களை வெற்றி பெற்றவர்களாகக் கருதுகின்றார்கள். இவர்களின் ஒழுக்கம் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. பெருமைக்குரிய  போற்றக்கூடிய சரித்திர நிகழ்வாகக் கொண்டாடுகின்றார்கள். கொடூர மனம் கொண்டவர்கள் அடையும் அங்கீகாரம் என்பது நல்லவர்களின் வாழ்க்கையை வாழவே முடியாத அளவிற்கு மாற்றி விடுகின்றது.

 

Tuesday, November 03, 2020

தொழில் என்பது முதலைகள் வாழுமிடம்


திறமை, உழைப்பு, தன்னம்பிக்கை இவை மூன்றும் இருந்தால் உறுதியாகத் தொழில் உலகத்தில் மட்டுமல்ல எந்த இடத்திலும் நம்மால் வெல்ல முடியும் என்பது உண்மை. அதைப்போலவே ஒவ்வொரு சமயங்களிலும் மாறிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்கள், சூழல் இவற்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையோடு பொருத்திக் கொண்டு மாற முடியாதவர்கள் தேங்கி நின்று விடுகின்றார்கள்.  

மனிதர்களின் கதை 3 - தொழில் என்பது முதலைகள் வாழுமிடம் |023| Oct 3 2020



Sunday, November 01, 2020

கனடாவில் இருந்து விமர்சனம் (தமிழக அரசியல் வரலாறு)

 Yuhak KaviKindle Tamil Book Readers Club


ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை.

ஆசிரியர் ஜோதிஜி.

சிறு வயது முதல் செய்திகள் மூலம் கேள்விப்பட்ட வரலாற்றை முழுமையாக நூல் வடிவில் படிக்கக் கிடைத்தது. ராஜாஜி யை எனக்கு எழுத்தாளராக மட்டும் தான் தெரியும். முதலமைச்சராக இருந்தார் பெரியாரின் நண்பர் . இந்த இரண்டையும் தவிர அவரது அரசியல் வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாது. அதே போல பக்தவச்சலம் அவர்கள். ஆனால் பக்தவத்சலம் அவர்கள் சில விஷயங்களில் தோல்வி அடைந்து இருந்தாலும் நேர்மையான ஆட்சி தான் 

கொடுத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.



Friday, October 30, 2020

நம்பிக்கைத் துரோகம் நடத்தும் பாடமிது

இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைத் துரோகம் நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறியுள்ளது. தப்பித்துப் பிழைத்துக் கொள் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதனை நாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அது எப்போதும் போலவே அதன் வேலையை நடத்திக் கொண்டே தான் இருக்கின்றது.

நாம் தான் அதனைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை.


Wednesday, October 28, 2020

உயிரைப் பறித்த சொந்த வீட்டுக் கனவுகள்

தங்களுக்கென்று ஓர் சொந்த வீடு என்பது வெறும் கனவல்ல. அது நடுத்தரவர்க்கத்தின் லட்சியம், சமூக அங்கீகாரம். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் மாட்டிக் கொண்டு அவஸ்த்தைப்படுபவர்கள் தான் அதிகம். அவஸ்த்தைப்பட்டு தடம் மாறியவரின் உண்மைக் கதையிது. மனைவியை இழந்து, தொழில் இழந்து, மொத்த வாழ்க்கையையும் இழந்த ஒரு மனிதனின் கதையிது.



 

Tuesday, October 27, 2020

கவனிக்கும் கற்றுக் கொடுக்கும் கண்காணிக்கும்

சில்வியா பிளாத்

" கடவுள் நம்பிக்கைகள், பிற நம்பிக்கைகள் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துவது விடக் காலத்தின் மீது நம்பிக்கை வைப்பது எளிது"

காலம் -

கவனிக்கும்

கற்றுக் கொடுக்கும்

கண்காணிக்கும்

காத்திருக்கச் சொல்லும்

//


Monday, October 26, 2020

என் நம்பிக்கை. என் விருப்பம்.

ஒரு முழம் செவ்வந்திப் பூ ரூபாய் 50, மல்லி, முல்லை ரூபாய் 60. சாதாரண உதிரிப்பூக்கள் முதல் எல்லாவிதமான பூக்களும் ஐம்பது ரூபாய்க்குக் குறைவாக இல்லை. மாவிலை தொடங்கி வாழையிலை வரைக்கும் உண்டான முறை சாரா தொழில்கள் மூலம் அடையும் சாதாரண மனிதர்கள் பெறும் லாபங்கள் ஒரு பக்கம். மதம் சார்ந்த பண்டிகைகள் வரும் போது மக்களின் மகிழ்ச்சியும் ஒன்றிணையும் தன்மையும் துயரங்களை மறந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்வதாகவே ஒவ்வொரு பண்டிகைகளும் உள்ளது.


Saturday, October 24, 2020

ஆவணப் பேச்சுகள்


தொடர்ந்து கனடாவில் வாழும் தமிழரசன் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தால் செப்டம்பர் 7 2020 அன்று யூ டியூப் பக்கம் ஜோ பேச்சு உருவானது.  இதுவரையிலும் 1,702 பேர்கள் 88.7 மணி நேரம் ஜோ பேச்சைக் கேட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் நண்பர் சுவாமி அறிமுகம் செய்து வைத்த காரணத்தால் செய்தியோடை அறிமுகம் ஆனது. ஜோதிஜி பேச்சு என்ற JothiG Pechu Podcast அக்டோபர் 6 2020 அன்று பயணம் தொடங்கியது. மொத்தம் 53 பத்து நிமிடப் பேச்சுகள். இதுவரையிலும் 1000 பேர்கள் கேட்டு உள்ளனர்.  சில தினங்களுக்கு முன் ஆப்பிள் தன் ஐ ட்யூன் வழியாகக் கேட்க அங்கீகாரம் கொடுத்துள்ளது.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களை என் ஓய்வு நேரங்களை ஒழுங்காக செலவழித்துள்ளேன்.

JothiG Pechu Podcast மூலம் இந்தியச் சுதந்திர வரலாற்றை அதன் அடிப்படை விசயங்களை 44 அத்தியாயங்கள் மூலம் முழுமையாகப் பதிவு செய்து முடித்து விட்டேன்.

 

Thursday, October 22, 2020

7.5 - அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ ஒதுக்கீடு

இதனை நீங்கள் எப்படி உச்சரிப்பீர்கள்? ஏழு புள்ளி ஐந்து அல்லது மருத்துவ இட ஒதுக்கீட்டுக்குத்  தமிழக அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள் பலன் பெறும் திட்ட சதவிகிதம் அல்லது ஏழரை.

ஆனால் கடைசி வார்த்தை தான் இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது? ஏன்?

தமிழக சட்ட மன்றத்தில் செப்டம்பர் 15 அன்று இந்தச் சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. 40 நாட்கள் அருகே வரப் போகின்றது. முடிவு தெரியவில்லை? என்ன காரணம்?

1. நீட் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் கபடி ஆடிக்கொண்டிருப்பதைத் தடுக்க வேண்டும். அதிமுகவிற்கு இன்னமும் கிராம ஓட்டுச் சதவிகிதம் அப்படியே தான் உள்ளது.  கிராமப்புற மாணவர்கள் அரசுப்பள்ளியில் படித்தாலும் மருத்துவத்துறை சார்ந்த கனவு காண்பது அரிது. இன்றைய சூழலில் படிப்படியாக அந்த எண்ணம் அரசு பள்ளிக்கூட மாணவர்களிடம் பல்வேறு விதங்களில் விதைக்கப்பட்டாலும் நீட் குறித்து ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட எதிர்மறை சிந்தனைகளாலும், நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த புரிதலற்ற தன்மையினாலும், கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களுக்குத் தொடர்பு இல்லாத தன்மையினாலும்,  நீட் பரிட்சைக்கு முன்னும் பின்னும் நடக்கும் அலோங்கோல காட்சிகள் உருவாக்கிய தாக்கத்தினாலும் நாம் இந்தப் பக்கமே போகத் தேவையில்லை என்பதாகத்தான் பெரும்பாலான கிராமப்புற அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மனத்தில் அச்சம் இன்னமும் விலகாமல் உள்ளது. வெற்றி பெறக்கூடியவர்களும் முதல் முறை எழுதி வெல்பவர்கள் குறைவு. இதற்கு மேலாகத் தனிப்பட்ட முறையில் கோச்சிங் சென்டர் செல்லாமல் எழுதி வெல்பவர்களும் மிகவும் குறைவு என்ற பல காரணிகள் இதற்குப் பின்னால் உள்ளது.  

2. மொத்தத்தில் நம்பிக்கையை விதைப்பவர்களும் யாருமில்லை. தமிழக அரசுக்கும் அதற்காகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் கவலையில்லை. அப்படியே செய்யக்கூடிய முயற்சிகளையும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்துச் செல்வதும் இல்லை. ஒரு பக்கம் வழியிருந்தால் பத்துப் பேர்களாவது வெல்ல முடியும். எட்டுத் திசைகளையும் மூடி வைத்த பின்பு கடைசி ஆயுதமாக விவசாயி இந்த ஏழரையைக் கொண்டு வந்தார்.

3. இந்த ஏழரை கிராமப்புற மாணவர்கள் மேல் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டது அல்ல. ஏற்கனவே தண்டச் செலவாக வருடந்தோறும் 300 முதல் 350 கோடி வரை அரசுப் பள்ளிக்கூட மாணவர்களை தனியார் பள்ளியில் அரசே பணம் கட்டி சேர்க்கும் அசிங்கங்கள் இங்கே வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஏழரைக்குள் அப்படி தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் சலுகை உண்டு என்ற சிறப்பு விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.  என்ன காரணம்? ஆண்டவனுக்குத் தான் தெரியும்?

4. இப்போது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது. ஆனால் ஆளுநருக்கு யார் உத்தரவு கொடுப்பார்கள் என்பதனை இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள். அவர்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களைச் சந்திப்பதாக எண்ணமும் இல்லை என்பதாகத்தான் தெரிகின்றது. என்ன செய்யலாம் என்று யோசித்து அடுத்த ஆயுதமாக அனுமதி வழங்கும் வரை கலந்தாய்வுக் கூட்டத்தை நிறுத்தி வைக்கின்றோம் என்று வாணவேடிக்கையை நிகழ்ச்சியுள்ளனர்.

5. இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? தமிழக சட்டமன்றத் தேர்தல் மிக அருகில் வர இருக்கும் நிலையில் பேரங்கள் என்பது வெளியே தெரிந்து தெரியாமல் எல்லாப் பக்கங்களிலும் பலவிதமான காய்கள் நகர்த்தப்படும். காரியம் சாதிக்க விரும்புபவர்கள் ஒவ்வொரு சூழலையும் தங்களுக்குச் சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். அரசியலில் சூழல் முக்கியம். தவறவிட்டால் மீண்டு எழ அடுத்த ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். பாஜக என்ன எதிர்பார்க்கக்கூடும்?

6. பத்து சதவிகித இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மதிய நேரத்தில் உடனே ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி அடுத்த நாளே அரசு ஆணையாக வெளியிடப்பட்டு உடனே அமுலுக்கும் வந்துவிட்டது. ஆனால் தமிழகம் இங்கு வாய்ப்பு இல்லை என்று கதவைச் சார்த்தி வைத்துள்ளது. வாய் மொழி உத்தரவாகச் சான்றிதழ் வழங்கக்கூடாது என்பது தான் இன்று வரையிலும் இங்கே உள்ளது. எங்களுக்கும் வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார்கள். இப்போது வைத்துச் செய்யக் காத்திருந்த நேரம் இப்போது கிடைத்துள்ளது. இது தவிரக் கூட்டணி பேரங்கள் என்பது தனிப் பாதையில் செல்லக்கூடியது. ஆட்சி அமையும் பட்சத்தில் என்ன வேண்டும் என்பதும், தேர்தலின் போது என்ன எதிர்பார்க்கின்றோம் என்பது போன்ற பல விசயங்கள் ஊடகங்களுக்கு நிச்சயம் தெரிந்து இருந்த போதிலும் எந்தப் பக்கமும் வலிக்காத மாதிரியே வேறு விவகாரங்களை வைத்தே விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

7. விவசாயிக்கு என்ன லாபம்? எதிர்க்கட்சிகள் நீட் குறித்து இனி பேச முடியாது. நாங்கள் சட்டம் கொண்டு வந்து விட்டோம். நிச்சயம் கிராமப்புற மாணவர்கள் 300 முதல் 350 மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று ஓங்கி அடிக்க முடியும்.  பாருங்கள் இதற்கும் காரணம் பாஜக என்று தான் திசைகாட்டியைத் திருப்பி தொடர்ந்து அரசியல் களத்தைச் சூடாகவே வைத்திருக்க முடியும். காரணம் அரசியலில் ஒரு விசயத்திற்கு தீர்வு கிடைத்து விட்டது என்பது முக்கியமல்ல. நாங்கள் இலக்கை அடைந்து விட்டோம் என்பது முக்கியம் என்றாலும்  அதைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கக் கூடிய சூழலை உருவாக்கத் தெரிய வேண்டும் என்பது மிக முக்கியம். அது தான் இங்கே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஆளுநர் ஒப்புதல் அளித்தால் நாங்கள் வென்றோம்

ஒப்புதல் அளிக்காவிட்டால் பாஜக அரசு காரணம்

எதிர்க்கட்சிகள் இது போன்ற திட்டங்களை அவர்கள் ஆட்சியில் கொண்டு வந்தார்களா?

பல பக்கம். பல விசயங்கள். வலிக்காமல் தொடர்ந்து குத்துவது  என்பது சிலருக்கு கை வந்த கலை. 

விவசாயி எளிய விவசாயி அல்ல. கார்ப்பரேட் விவசாயி. லாபம் பெறுவதை விட வேறு எவரும் பேரம் பேசும் சூழலை அனுமதிக்க விடாமல் தன் லாபத்தில் குறியாக இருப்பவரை நீங்கள் வேறு எந்தப் பெயர் சொல்லி அழைப்பீர்கள்?

தூண்டுதல் | Self Motivation

தாழ்வு மனப்பான்மை | Inferiority Complex Vs Superiority Complex

விலகி நில்லுங்கள் | Stay Away

கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்த கொரோனா

ஏன் இங்கே இத்தனை கற்பழிப்புகள்? | Why so many rapes here?

Tuesday, October 20, 2020

கனத்த தோல் கொண்ட தமிழகக் கல்வித்துறை அமைச்சகத்திற்கு


கனத்த தோல் கொண்ட தமிழகக் கல்வித்துறை அமைச்சகத்திற்கு

2020 பெருந்தொற்று என்பது மறுக்க முடியாத உண்மை. பள்ளிக்கூடம் திறக்கப்பட்டால் நிச்சயம் பாதிப்பு உருவாகி பரவும் கூடவே அது மரணங்களை அதிகப்படுத்தும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதனைக் காரணமாக வைத்துக் கொண்டு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய மறப்பது நியாயமா? 


Saturday, October 17, 2020

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தான் இப்போது தமிழகத்தின் எம்.என். நம்பியார். இந்தச் சமயத்தில் ஒன்று இரண்டு எம்ஜிஆர் இல்லை. எந்தப்பக்கம் பார்த்தாலும் பல நூறு எம்ஜிஆர் கள் முளைத்து உள்ளனர். நேற்று வந்த காளான்கள் முதல் நாளை வரப் போகும் தேர்தலில் தன் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக இன்ஸ்டண்ட் வியாதியஸ்தர்களும் இதற்குள் அடக்கம்.

சரி நாம் நம்பியார் தவறானவர் என்றே இப்போதே ஒரு முடிவுக்கு வந்து விடுவோம்.

Friday, October 16, 2020

சாதிக்கப் போகும் ஸ்வர்ணலதா - கடிதம்

நாம் சில ஆவணங்களைப் பத்திரப்படுத்த இப்போது எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் சிலவற்றைப் பொதுவெளியில் வைப்பது நல்லது. காரணம் இது எனக்கு கிடைத்த அங்கீகாரம் அல்ல.  

இந்தக் கடிதத்திற்குப் பின்னால் ஒரு சிறிய கதை உள்ளது.

நண்பர் கிரி மூலம் அறிமுகம் ஆனவர் நண்பர் (இப்போது வளைகுடா நாட்டில் இருக்கின்றார்) 

Tuesday, October 13, 2020

தமிழக கல்வித்துறை

தென் இந்திய  மாநிலங்களில் உள்ள கல்வித்துறை எப்படிச் செயல்படுகின்றது?  என்பதற்கும்  நம் தமிழ்ப்பிள்ளைகள் நிர்வாகத்தில் நடக்கும் தமிழ்நாட்டு நிர்வாகத்திற்கும் உண்டான அடிப்படை விசயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாமே  தலைகீழ் மாற்றம். கேரளாவில் மத்திய அரசின் அனைத்து கல்வி சார்ந்த நிதிகளை, திட்டங்களை அப்படியே பெற்று விடுகின்றார்கள். மத்திய மனித வளத்துறை இப்போது கல்வி அமைச்சகமாக மாறியுள்ள நிர்வாகம் என்ன எதிர்பார்க்கின்றார்களோ அதனை நிறைவேற்றி கூடுதலாக கல்வி  மாவட்டங்களைப் பிரித்து அதிகமாகவும் வாங்கி விடுகின்றார்கள். 


Monday, October 12, 2020

Jo Pechu - விலகி நில்லுங்கள் - Stay Away

நாம் ஒரு படைப்பை எளிதாக உருவாக்க முடியும். ஆனால் நம் படைப்பு வெற்றி என்பது அதனை உள்வாங்குபவர்கள் அளிக்கும் விமர்சனம் தான் அதற்கு மகுடம் சூட்டும். நான் எப்போதும் "வலையுலக சுஜாதா" என்று கொண்டாடும் முரளி அளித்த விமர்சனமிது.

***

Thursday, October 08, 2020

சமூகத்தை உங்கள் பார்வையில் பதிவு செய்யுங்கள்

மதம்,சாதி,கட்சி என்பதற்குள் நின்று ஆடவேண்டிய களம் ஃபேஸ்புக். கூட்டம் அதிகம். உணர்தல் குறைவு. அழுத்தம் தாங்கமுடியாது என்பவர்கள் இன்னமும் வலைபதிவுகளை விட்டு வெளியே வரவில்லை. யூ டியூப் சமாச்சாரம் ஆழ்கடலில் இருட்டுக்குள் நின்று பவளப்பாறையைக் கண்டடைவது போன்றது. நடிகர், நடிகைகள், இது தவிர சட்டமன்றத் தேர்தல் அருகே வந்து கொண்டிருப்பதால் அதகளமாக களமாக மாறியுள்ளது. (நடிகையின் மச்சம் மறைந்த மாயம்?. சட்டமன்றத் தேர்தலில் வெல்லப்போவதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் சேர்த்த சொத்துக்கள்)

கவர்ச்சித் தலைப்புகள் தலைதெறிக்க நம்மைப் போன்றவர்களை ஓட வைக்கின்றது. அது தான் பலரையும் ஓடி வரவும் வைக்கின்றது.

திடீர் தொழில் நுட்ப வல்லுநராக உருமாறியுள்ள மகளார் அவர்களை ஒரு புண்ணியவான் Ramachandra Krishnamoorthy  கொடுத்த அறிவுரையை வேதாவாக்காக பற்றிக் கொண்டு எனக்கு இனி ஒரு யூ டியூப் செய்து முடிக்க முன் பணம் இவ்வளவு தேவை என்று கறார் காட்டுவதால் கொரானா பயத்தின் காரணமாகப் பலவிதங்களில் வெளியே அலைய வேண்டிய பயணத்தைக் குறைத்துக் கொண்டிருப்பதைப் போல மகளைச் சமாளிக்க முடியாமல் என் பர்ஸ் வேகமாகக் காலியாகிவிடுகின்றது. என் வேகம் அவருக்கு லாபம்.

கடவுள் இந்த ஏழை எளிய தமிழ்ப்பிள்ளையின் மேல் கருணை காட்டி ஆஸ்திரேலியாவிலிருந்து Swamy Madike ஒருவரைப் பேச வைத்து வழிகாட்டி இந்தப் பக்கம் திருப்பினார். நானே ராஜா நானே மந்திரி. என் வேகத்திற்கு உகந்த எளிய தொழில் நுட்பம்.

மேலை நாட்டுக் கிறிஸ்துமஸ் என்பது திருப்பூருக்கு வசந்த காலம். ஆனால் முழுமையான கொரானா பயம் விலகாத காரணத்தாலும், அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டம் தரும் அச்சம், தனியார் மருத்துவமனைகள் செய்யும் "பணச் சேவை"கள் அனைத்தும் பயணத்தை, வேலைகளைக் குறைத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்கிற நிலையில் முடங்க வைத்துள்ளது. அலைபேசி உரையாடல் வழியே அனைத்தையும் முடித்து ஆக வேண்டிய நிலைக்கு வாழ்க்கை மாற்றியுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்னால் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கிய இந்த ஆங்கிலப் பொக்கிஷப் புதையலை (புத்தகப் பட்டியலைக் கீழே கொடுத்துள்ளேன்) மகள்களுக்கு அறிமுகம் செய்து வைத்த போது மீள் வாசிப்பு செய்து பார்த்தேன். பத்து நிமிடமாகத் தொடர் வாசிப்பாக இதனை இளையர்களுக்குக் கொடுத்தே ஆக வேண்டும் என்று இன்று முதல் தொடங்கியுள்ளேன்.

மாநிலத்தில் தர்மயுத்தம் நிலைமை நாளை மதியம் தெரியும்.

மத்தியில் அக்கா தம்பி பாசத்தின் அடுத்த நிலை விரைவில் தெரியும்.

நடப்பதைப் பற்றி உண்மைகளைப் பேசினால் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் காந்தி பெயர் கொண்டவர்களுக்கு காந்திக்கும் உண்டான வித்தியாசங்களை இந்தப் பேச்சு மூலம் பலவிதமாக உங்களால் உள்வாங்க முடியும். சுவாரசியமாக கிராமத்து மொழியில். 

மறைக்கப்பட்ட இந்தியச் சுதந்திர வரலாற்றின் அடி முதல் நுனி முதல் ஐந்து ஐந்து பேச்சாக ஒரு நாள் இடைவெளி விட்டு இந்தத் தளத்தில் வெளிவரும். ஒவ்வொன்றும் பத்து நிமிடப் பேச்சு.

இதில் Follow Button உள்ளது. எத்தனை நாட்களுக்குத் தான் அரசியல் விவாதங்களைத் தொடர்ந்து கேட்டுக் கண்காணித்துக் கவலைப்பட்டு மன அழுத்தம் உருவாகி, மீளமுடியாமல் ஆரோக்கியம் இழந்து.....

சரித்திரம் இங்கே அனைவரையும் பதிவு செய்யும்.

காலச்சக்கரம் நிகழ்வுகளை மறைக்காது. ஒழித்து வைக்கவும் விடாது.

என் கடன் பணி செய்து கிடப்பதே. Passion என்பது நம் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. மன அழுத்தத்தைத் தீர்க்கும் மாமருந்து.

இந்தியச் சுதந்திரம்:- மறைக்கப்பட்ட உண்மைகள் - Hidden truth details about India's Independece Story 1-2-3-4-5

https://anchor.fm/jothig


Wednesday, October 07, 2020

திருப்பூர் மொழி பேச்சு வடிவில்

ஆனந்த ரங்கம் பிள்ளை டைரிக் குறிப்புகள் புத்தக வடிவில் வந்துள்ளது. இப்போது பதினோராம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் ஒரு பாடமாக வந்துள்ளது. நேற்று மகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பல ஆச்சரியங்களை உள்வாங்க முடிந்தது. ஏறக்குறைய தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 25 வருடங்கள் அவர் எழுதியது தான் தென்னிந்திய வரலாற்றின் பதினெட்டாம் நூற்றாண்டின் முழுமையான சித்திரத்தை ஓரளவுக்கு உள்வாங்க முடிகின்றது. ஆனால் இன்று நாம் பெற்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள் என்பதனை பதிவு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. 

ஆனந்தரங்கம் பிள்ளை அடுத்த 300 வருடத்திற்குப் பின்பு பேசப்படுவோம் என்று நினைத்து எழுதியிருக்க மாட்டார். அவர் தன் சுயத் திருப்திக்காகவே, மன உளைச்சலை போக்குவதற்காகவே எழுதியிருப்பார் என்றே நினைக்கிறேன். 

பேச்சுக்கலையை விரும்புபவர்களுக்கு நிச்சயம் இதன் பலனளிக்கும். ஆப்பிள் ஐ போன் வரைக்கும் இந்தப் பேச்சு சென்று சேர்கின்றது இதன் தனித்தன்மை.😇

திருப்பூர் மொழி

https://anchor.fm/jothig