Tuesday, March 30, 2021

மதுரை தினகரன் பத்திரிக்கையாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம்

2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது.



Monday, March 29, 2021

தா. கிருஷ்ணன் படுகொலை- நடந்த நிகழ்வுகள்

 2003 மே  21

சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இவரது மனைவி பெயர் பத்மா இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். தா.கி. என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தா.கிருட்டிணன். இருமுறை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ,ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 1996ம் ஆண்டு சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.  2003 மே மாதம் 21ஆம் தேதி காலை நடைபயிற்சியில் இருந்தபோது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


Sunday, March 28, 2021

ஆண்டிமுத்து ராசா அருளிய வாக்குறுதி

இப்போது தான் தமிழக அரசியல் களம் உண்மையான மனிதர்களின் குணங்களை அடையாளம் கண்டுள்ளது. சில தினங்களுக்கு முன் சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய முன்னாள் தொலை தொடர்பு அமைச்சரும் தற்போதைய நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆண்டி முத்து ராசா தன் மனதில் உள்ளதை அப்படியே எடுத்து வைத்தார்.



Friday, March 26, 2021

வெளிமாநில தொழிலாளர்களுக்கு இங்கே குடியிருப்பு கட்டித் தரப்படும்

பத்து கோடி ரூபாய் முதலீடு போட்டு, மாதம் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்று?

தமிழ்ப்பிள்ளைகள் இப்போது ஒன்றை ஆயுதமாக எடுத்து விளாசித் தள்ளிக் கொண்டு இருக்கின்றனர்.

"வெளிமாநில தொழிலாளர்களுக்கு இங்கே குடியிருப்பு கட்டித் தரப்படும்" என்பது பாஜகவின் தேர்தல் அறிக்கை.

எதார்த்த உலகைப் பார்ப்போம்.

1. ஞாயிறு என்பது ஓய்வெடுக்க உருவான நாள். ஆனால் சனி, ஞாயிறு அத்துடன் திங்கள் வரைக்கும் குடித்த மது மயக்கம் தள்ளாட வைக்கும் போது வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு தொழிலாளி விடுமுறை எடுத்தால் முதலாளி என்ன முடிவெடுக்க வேண்டும்??

2. 12 மணிக்கு மதுக்கடைகள் திறக்கின்றார்கள். ஆனால் காலை ஐந்து மணி முதல் அருந்தும் அளவிற்கு மனம் மற்றும் உடல்நிலை இருப்பதை எந்தத் தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இவர்களுக்கு ஆரோக்கியம் இருந்தால் தானே 2026 வரைக்கும் உடம்பு தாங்கும். ஓட்டளிக்க முடியும்??

3. காரைக்குடி அருகே உள்ள நவீன ரக அரசி ஆலைகளில் வட மாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவு பணிபுரிகின்றனர்.  இந்த ஊரைச் சுட்டிக்காட்ட முக்கிய காரணம் திருப்பூர், சிவகாசி, நாமக்கல் போன்ற தொழில் நகரங்களை விடத் தமிழ்நாட்டின் உள் கிராமங்கள் வரைக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் தான் பணிபுரிகின்றார்கள் என்றால் அங்கே பணிபுரிந்தவர்களுக்கு என்ன பிரச்சனை?  1. சம்பளம் குறைவு. 2. வேலை பிடிக்கவில்லை. 3. கௌரவமான வேலை அல்ல. 4. உடல் உழைப்பை விரும்பவில்லை.5 கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். இதில் எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்??.

4. கோடிக்கணக்கில் முதலீடு போட்டவர் தன் முதலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா? ரத்த டெஸ்ட் எடுத்து வேலைக்குச் சேர்க்க வேண்டுமா??

5. 1989 முதல் 2000 வரைக்கும் திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. எத்தனை தொழிலாளர் குடியிருப்பு இங்கே தாய்த்தமிழ் உறவுகளுக்கு இங்கே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது??

6. முதல் இருபது வருடங்களின் பணிபுரிந்து, தொழில் திறமை உள்ள தமிழ்ப்பிள்ளைகள் இங்கே இருக்கும்பட்சத்தில் ஏன் வட மாநிலப்பிள்ளைகள் அந்த இடத்தில் எப்படி நுழைந்திருக்க முடியும்?  தமிழ்ப்பிள்ளைகள் இருந்த தொழிலை விட்டு வெளியேறியதற்கு யார் காரணம்? என்ன காரணிகள்??

7. தமிழ்நாட்டில் எந்த இடத்திலாவது நாங்கள் இருக்கின்றோம். நாங்கள் வேலைக்கு வரத் தயாராக இருக்கின்றோம். எங்களை ஏன் புறக்கணிக்கின்றீர்கள்? ஏன் அவர்களை அழைத்து வந்தீர்கள்? என்று தமிழ்ப்பிள்ளைகள் போராட்டம் நடத்திய செய்திகளை எங்கேயாவது வாசித்ததுண்டா? தமிழராக இருக்கும் முதலாளி தமிழ்ப்பிள்ளைகளுக்கு துரோகம் இழைக்கின்றார் என்று உங்களால் சொல்ல முடியுமெனில் நீங்கள் தொழிலுக்குத் தொடர்பில்லாத வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

தொழில் ரீதியாக அனுபவசாலியாக இருப்பவர்கள் கூட தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி ரீதியான கொள்கைக்காக எழுதும் வார்த்தைகள் எனக்கு வியப்பளிக்கவில்லை. 😏காரணம் தமிழ்ப்பிள்ளைகளின் மூளைத்திறன் நான் அறிந்ததே.


Thursday, March 25, 2021

இஸ்லாமியர்களின் காவலர்கள் - திமுக இது உண்மையா? - 3

‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத்தக்கன.

அடிமை இந்தியாவில் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று சுதந்திர இந்தியாவில் தொலைத்துவிட்ட சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம்.

முஸ்லிம் பிரமுகர்களுக்கு திமுகவில் நேர்ந்த அவலங்கள்

அதிமுகவினால் தொடர் தோல்விகளை திமுக சந்தித்த நாட்களில் வெற்றி சட்டமன்ற உறுப்பினராக உலாவந்த ரகுமான்கானை அவர் தொடர்ந்து வென்ற சேப்பாக்கத்தை வழங்காமல் 2006ல் பூங்கா நகரை அவருக்கு ஒதுக்கி உட்கட்சிப் பூசல்களால் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலங்களில் ரகுமான்கான், திமுகவை நியாயப்படுத்திப் பேசி மெஜாரிட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தனது உரை வீச்சால் வென்றார். சட்டமன்ற கதாநாயகன் என்ற பெயரால் அழைக்கப்பட்டவரின் இன்றைய நிலை என்ன-?

K.N. நேருவின் மச்சான் என்பதால் நாடாளுமன்றத் தொகுதி வழங்கி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நெப்போலியனின் தியாகத்தை (?) விட ரகுமான்கான் தியாகம் சாதாரணமானதாக ஆகிவிட்டதா? காரணம் அவர் ஒரு முஸ்லிம்.

முஸ்லிம் லீக்கின் தனித்தன்மையை ஒழித்தது

1962ல் காமராஜ் காலத்தில் உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக முதலிடத்தைப் பெற்றது. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் முஸ்லிம் லீக் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றது. இன்று என்ன நிலை-?

நகரங்களில் கணிசமாக வாழும் முஸ்லிம்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் பரிதாபத்துக்குரிய நிலை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முஸ்லிம்கள் மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி& பேரூராட்சி சேர்மன்களாகவும் பதவி வகித்த முஸ்லிம்களுக்கு திமுக வழங்கியது துரோகமும், ஏமாற்றுமும் தான்.

சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்ற கட்சித் தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து தனது அடிமைகளாக, சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.

முஸ்லிம் லீக் பல துண்டுகளாக உடைந்தது

1977 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து 1978 தொடங்கி 1988வரை தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக் 1989 தேர்தலில் ஆ.க.அ. அப்துஸ் ஸமது மற்றும் அ. அப்துல் லத்தீப் என்று உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்புக் கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.

அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(!)

கலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ? அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார்.

‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(!) மதவெறியை நியாயப்படுத்தினார்.

கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை என்றார்.

தொகுதிகளைக் கொடுத்துப் பறிக்கும் கருணாநிதி

2006ல் நாடாளுமன்றச் சட்டமன்றத் தேர்தலில் லீக்கிற்கு ஒரு தொகுதிக்கு மேல் கொடுக்க முடியாது என்ற நிலையில் தமுமுகவின் தலைவர்கள் கலைஞரிடம் பேசிய பிறகு மூன்று சன்னு என்று எதுகை மோனையுடன் கூறி மூன்று தொகுதியும் உதயசூரியன் சின்னம் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் பாளையங்கோட்டை தொகுதியைப் பறித்து டி.பி.எம் மைதீன் கான் வசம் ஒப்படைத்தார் கலைஞர்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம் பற்றி லீக்கின் மாநிலப் பொதுக்குழுவில் அதன் தலைவர் பேரா.காதர் மொய்தீன் வேட்பாளராகவும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்ய, அவை செய்தித்தாள்களிலும் வந்தது.

இந்நிலையில் இரண்டே நாட்களில் பேரா.காதர் மொய்தீனை அழைத்து மிரட்டிய கலைஞரும், துரைமுருகனும் வேட்பாளர் காதர்மொய்தீன் இல்லை, துரை முருகனின் தொழில் நண்பர் துபாய் அப்துல் ரகுமான், என்றும், உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்பார், ஏணி சின்னம் அங்கு போணி ஆகாது என்று கூறி அவமானப்படுத்தினார். கூனிக் குறுகி கருணாநிதி சொன்னதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை காதர்மொய்தீன் அவர்களுக்கு. ஏனென்றால், எதிர்த்தால் துபாய் அப்துல் ரகுமான் தலைமையில் ஒரு புதிய லீக் உதயமாகிவிடும் என்ற அச்சம்தான்.

வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில், தொகுதிகள் பெறுவது பற்றி விவாதிப்பதற்காக நாகூரில் கூடியது முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு. இதில் மூன்று தொகுதிகளைப் பெறுவது என்றும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எப்போதும் போலத் தனது சிறுபான்மை பிரிவான லீக்கை மீண்டும், மூன்று தொகுதிகளுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கும் பணிய வைத்தது.

இச்சூழ்நிலையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு பிரச்சனையில் கொடுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றைப் பிடுங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துவிட்டது.

அதனை எதிர்த்து மாநில மகளிர் அணித் தலைவியும், அப்துல் ஸமது சாகிப் அவர்களின் மகளுமான பாத்திமா முஸபர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கடுமையாக திமுகவை விமர்சித்தும், லீக் தலைவரை மாற்ற வேண்டும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு பல தரப்புகளிலிருந்தும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் எப்போதும் முஸ்லிம் லீக்கை பிரித்தும், உடைத்துமே வரலாறு படைத்த கலைஞர் முதல்முறையாக முஸ்லிம் லீகில் திருப்பூர் அல்தாப்பை அவரே தலைவர், அவரே தொண்டராய் உள்ள கட்சியான தமிழ் மாநில தேசிய லீக்கை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இணைப்பு விழா நடத்தினார். இது சமுதாயத்திலும், அரசியல் அரங்கிலும், பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் பிறகு தான் தெரிந்தது இதில் இருக்கும் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சி.

1999ல் பாஜகவோடு கலைஞர் கூட்டணி வைத்தபோது லத்தீப் சாகிப்பிடம் இருந்து வெளியேறி தமிழ் மாநில தேசிய லீக் தொடங்கி திமுக, பாஜக கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்தாப் செய்த துரோகத்திற்கு எந்த நன்றிக் கடனும் செலுத்தாமல், 2001&2006, இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஏமாற்றி வந்தார். இம்முறை எப்படியேனும் ஒரு தொகுதியை திமுகவில் தருவது என்றும், திருப்பூர் அல்தாப்பை தன்னோடு திமுகவில் இணைத்துக் கொள்வது என்றும் முடிவாகியிருந்தது.

முஸ்லிம் லீக்கிற்கு மூன்று தொகுதியை, கொடுத்து ஒன்றைப் பறித்த அதிருப்தியையும் சரிக்கட்ட மிகச்சிறந்த ராஜதந்திரச் சூழ்ச்சி செய்தார் கலைஞர். அது ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று அல்தாப்புக்கான நன்றிக் கடன் தொகுதி தருவது. இன்னொன்று முஸ்லிம்களிடம் நிலவும் தொகுதி பறிப்பு அதிருப்தியைச் சரி செய்வது. இதற்கான முடிவுதான் முஸ்லிம்லீக்கில், தமிழ் மாநில தேசிய லீக்கை இணைத்து, பறித்த தொகுதியைத் திருப்பி கொடுப்பது போல் அந்தத் தொகுதியை திருப்பூர் அல்தாப்புக்கு கொடுக்க வைத்தது.

ஒரு நேரத்தில் ராஜாஜி பற்றி அறிஞர் அண்ணா சொன்னார். உடம்பெல்லாம் மூளை, மூளையெல்லாம் சிந்தனை, சிந்தனையெல்லாம் வஞ்சனை என்று. இது ராஜாஜிக்குப் பொருந்தியதோ இல்லையோ கலைஞருக்கு அப்படியே பொருந்தும் வாசகம்.

Tuesday, March 23, 2021

இஸ்லாமியர்களின் காவலர்கள் - திமுக இது உண்மையா? - 2

 அப்துல் ஸமத் அவர்களின் 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதின் அவர்கள் அதனைத் தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.


Monday, March 22, 2021

இஸ்லாமியர்களின் காவலர்கள் - திமுக இது உண்மையா?

நாங்கள் தான் இஸ்லாமியர்களின் காவலர்கள் என்று தொடர்ந்து திமுக சொல்லி வருகின்றார்கள்? இது உண்மையா?

TMMK-ப.அப்துல் சமது கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு என்று நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க சில அம்சங்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.



Sunday, March 21, 2021

தமிழக அரசியல் "சுயநல அரசியல்" என்பதாக எப்போது மாறியது?

தமிழக அரசியல் "சுயநல அரசியல்" என்பதாக எப்போது மாறியது? யாரால் மாற்றப்பட்டது?

தமிழகத்தில் 1970-ஆம் ஆண்டுகளில் அரசியலிலும், கட்சி அமைப்பிலும் முதன்மை சக்தியாகத் திமுக திகழ்ந்தது. தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்களில் திமுக 184 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்தது. திமுகவிற்கு அதிக செல்வாக்கு பலத்தை ஏற்படுத்தியது. ஆட்சி அதிகார பலம் மட்டுமல்ல, வலுவான அமைப்புப் பலத்தையும் திமுக  கொண்டிருந்தது. 



Saturday, March 20, 2021

வணிக சிந்தனை - பயமா? பாவமா?

நம்ப முடிகின்றதா? 

நம்மவர்கள் பொருந்தாமல் கோட் போட்டு நிற்கும் தருணம் மனதில் வந்து போகின்றது. 

Friday, March 19, 2021

பாஜக அரசு எளிய தமிழ்ப்பிள்ளைகளின் விவசாயத்திற்காக ஏதேனும் செய்து உள்ளார்களா?

பாரதப்பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு எளிய தமிழ்ப்பிள்ளைகளின் விவசாயத்திற்காக ஏதேனும் செய்து உள்ளார்களா?



Thursday, March 18, 2021

நான் ஏன் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கின்றேன்?

தினமும் நான்கு பேர்களாவது இந்தக் கேள்வியை ஏதோவொரு வழியில் என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்? ஏன் Face Book பூட்டி வைத்துள்ளீர்கள்? ஏன் பகிர்தலுக்கான வாய்ப்புகளை வழங்காமல் இருக்கின்றீர்கள்?


Wednesday, March 17, 2021

வெளியுறவுத்துறையும் ரயில்வே துறையும்.

பிச்சுவா பக்கிரியும், பிளேடு பொறுக்கிகளும் உள்ள இந்திய அரசியல் களத்தில் இவர்களைப் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்து, சுதந்திரமாக பணியாற்ற அனுமதித்த பாரதப் பிரதமர் மோடிஜி Narendra Modiஅவர்களுக்கு ஒவ்வொரு விபரம் தெரிந்த  தமிழ்ப்பிள்ளைகளும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.


Monday, March 15, 2021

நிலையான கோடீஸ்வர சூட்சும ரகசியத்தின் உண்மைக்கதை

நாம் எல்லோரும் கோடீஸ்வரராக வாழ ஆசைப்படுகின்றோம். சிலர் அடைந்தும் விடுகின்றார்கள். ஆனால் எத்தனை பேர்கள் அதனை தக்க வைத்துக் கொள்கின்றார்கள். அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றார்கள்? 


இதுவொரு உண்மைக்கதை. #JothiG​ #JoPechu​ #JoPechuU​

Wednesday, March 10, 2021

உன் விலை என்ன?

மரண குழியென்பது நாங்கள் விளையாடும் களம். 

மயானம் என்பது நாங்கள் விரும்பும் தளம். 


Sunday, March 07, 2021

எலும்புத் துண்டுகளுக்காக வாழும் ஜீவன்கள்

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் செய்த மகத்தான சாதனையாக நான் பார்ப்பது இங்குள்ள தேசிய கட்சியில் கீழே உள்ள அல்லக்கைகள் முதல் மேலே உள்ள நொள்ளக்கைகள் வரைக்கும் தாங்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டும் ஜீவன்களாக மாற்றி வைத்திருப்பதைச் சொல்லலாம்.  

பாஜக கூட விதிவிலக்கல்ல. 



Saturday, March 06, 2021

சுனில் கனுகோலு (Sunil Kanugolu)

 சுனில் கனுகோலு (Sunil Kanugolu)

என்ற பெயரை எங்கேயாவது கேட்டு இருக்கிறீர்களா? அவர் புகைப்படத்தையாவது பார்த்து இருக்கிறீர்களா?


Friday, March 05, 2021

திருட்டு வங்கியை வழிக்கு கொண்டு வந்தவரின் கதை

அன்று முதல் இன்று வரை கமல் மேல் எனக்கு கொஞ்சம் பொறாமையுண்டு.


Tuesday, March 02, 2021

வைகோ மகன் துரை வையாபுரி

கடந்த சில நாட்களில் அதிகாலையில் நான் நடந்து செல்லும் போது பார்த்த, சாலையோரங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளில் குறிப்பாக மதிமுக கட்சியினர் துரை வையாபுரி (வைகோ மகன்) படத்தைப் பெரிதாகப் போட்டு சங்கே முழங்கு என்று எழுதியிருந்ததைப் பார்த்த போது முதலில் எனக்கு நம்பிக்கை வரவே இல்லை. காரணம் அந்தத் தம்பி வித்தியாசமான ஆத்மா.  

Monday, March 01, 2021

நவீன உலகில் வாழ தேர்ந்தெடுக்கப் பழகிக் கொள்

"என் உயிர் உள்ளவரை கடைசி மூச்சு இருக்கும் வரையிலும் பாஜக வை தொடர்ந்து எதிர்ப்பேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன்" என்று எங்கள் அய்யா ப.சி அவர்கள் இன்று பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளதைப் பார்த்தேன்.