Wednesday, March 10, 2021

உன் விலை என்ன?

மரண குழியென்பது நாங்கள் விளையாடும் களம். 

மயானம் என்பது நாங்கள் விரும்பும் தளம். 




அகங்காரமென்பது பிறவி தந்த வரம். 

தெருவுக்குத்தான் வந்து நிற்போம் என்பது இயற்கை உருவாக்கிய கொடை. 


ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி 
ஒரு தரம் 
இரண்டு தரம் 
மூன்று தரம். 

பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரி 
ஒரு தரம் 
யோவ் நிறுத்து. 
நீட் போனவுடன் கூவு. சுபம்
.

7 comments:

ஸ்ரீராம். said...

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி?!

KILLERGEE Devakottai said...

வெல்லட்டும்...

Yaathoramani.blogspot.com said...

ஒவ்வொருவருக்கும் சனி ஒவ்வொரு ரூபத்தில் வருவார்...பாவம் விஜயகாந்துக்கு மூன்று பேராக...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல மனிதர்...

ஜோதிஜி said...

ஊருக்கு நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்பது இவர் விசயத்தில் நடக்காமல் போனது துரதிஷ்டம்.

வெங்கட் நாகராஜ் said...

அரசியலுக்கு இவர் சரிபட்டு வரமாட்டார். கூடவே இருக்கும் வீட்டினர் இவரை அரசியலுக்கு இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று தோன்றுவதுண்டு. வேதனை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவரது அரசியல் வாழ்வின் துவக்க காலம் அருமை. அக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு மாற்றுசக்தியாக உருவாகி தடம் பதிப்பார் என எண்ணினேன். தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இப்படியாக நிலை மாறும் என எதிர்பார்க்கவில்லை.