Wednesday, September 30, 2020

செயற்கை நுண்ணறிவு AI - எதை மாற்றப் போகின்றது?

மோடி அரசு செய்த முக்கிய சாதனைகளில் ஒன்று நீட் மூலம் உருவாக்கிய மடை மாற்றம். அதென்ன மடை மாற்றம்?. நீட் வருவதற்கு முன்பு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளையடிக்கின்றார்கள். அதன் நிறுத்த அல்லது மாற்றவே நீட் பரிட்சை என்றார்கள். அதாவது ஒரு எம்பிபிஎஸ் சீட்டுக்கு 70 லட்சம் முதல் 1 கோடி வரைக்கும் வாங்கிக் கொண்டு விற்றார்கள் என்பது குற்றச்சாட்டு. ஆனால் இது இப்போது எப்படி மாறியுள்ளது?

இப்போது தனியார் பள்ளிக்கூடங்களில் 11 ஆம் வகுப்பில் முதல் பிரிவில் (கணக்குப் பிரிவு) சேர வேண்டும் என்று ஒரு மாணவர் நினைத்தால் அவர் கட்டாயம் நீட் பயிற்சியில் சேர வேண்டும். அய்யா நான் இளங்கலை கணக்கு படிக்கப் போகின்றேன் என்றாலும் வாய்ப்பில்லை. நீ என்னமோ படி. அது எங்களுக்கு முக்கியமல்ல. ஆனால் முதல் பிரிவு என்றால் கட்டாயம் நீட் பரிட்சைக்கு உண்டான கட்டணம் அவசியம் கட்ட வேண்டும் என்று வசூலித்து விடுகின்றார்கள். சாதாரண பள்ளிகள் என்றால் தொடக்கத்தில் ரூபாய் 50 000 இத்துடன் மாதம் 1700 ரூபாய். மொத்தம் ரூபாய் 70 000 கொள்ளையடித்து விடுகின்றார்கள். பெருநகரம் முதல் சிறு கிராமங்களுக்கு அருகே உள்ள தனியார் பள்ளிகள் வரைக்கும் இது நிலைமை. பலரும் வேறு வழியே இல்லாமல் இணைய வகுப்பில் கலந்து கொள்கின்றார்கள். அந்தப் பயிற்சியும் சிறப்பானது இல்லை. காசு வசூலிக்க வேண்டும்.

அதற்கு கணக்கு காட்ட வேண்டும் என்கிற ரீதியில். இரண்டு வருடமும் சேர்த்து குறைந்த பட்சம் இரண்டரை லட்சம் இருந்தால் மட்டுமே 12 ஆம் வகுப்பு பாஸ். பணம் கட்டாவிட்டால் அதோகதி தான்.

உத்தேச கணக்காக தமிழகத்தில் தனியார் பள்ளியில் முதல் பிரிவில் படிக்கும் மாணவர்கள் ஒரு லட்சம் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு 700 கோடியை சுருட்டுகின்றார்கள். இதில் கால் பங்கு மாணவர்கள் கூட நீட் பக்கம் செல்வதில்லை. அம்மா பார்த்த கௌரவம், அப்பா கொடுத்த அழுத்தம், அடுத்த வீட்டுக் காரன் காட்டிய கெத்து பல காரணிகள் இதற்குப் பின்னால் உள்ளது. அதற்கு எளிய தமிழ்ப் பிள்ளைகள் பாணியில் சொல்லப்போனால் வெட்டிப் பந்தா என்றும் சொல்லலாம்.

சமீபத்தில் கொரானா காரணத்தால் தமிழக அரசுப் பள்ளிகளில் மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். துல்லியமாகச் சொல்லப் போனால் 13 லட்சம் அருகே வருகின்றது. மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் மதிப்பெண் பட்டியல் இருந்தால் போதும் என்றதும் தனியார்ப் பள்ளியில் படித்தவர்கள், விண்ணப்ப பாரத்திற்கு ரூபாய் 5000 கட்டி விட்டு ஆன் லைன் வகுப்பில் கலந்து கொண்டு இருந்தவர்கள், அதன் பின் ரூபாய் 25 000 கட்டினால் மட்டுமே இணைய வகுப்பு என்றதும் பெரும்பாலான மக்கள் கம்பி நீட்டிவிட்டு அரசுப் பள்ளி பக்கம் வந்து விட்டனர்.

தனியார் மக்கள் பொங்கி எழுந்து விட்டனர். எங்களுக்கு 2000 கோடி நட்டம். அரசு உத்தரவை மாற்ற வேண்டும் என்றனர்.

திரும்பவும் சொல்கிறேன். இதையே எப்பவும் சொல்வேன். அப்பா அம்மா தான் குழந்தைகளுக்கு எல்லாமே. நீங்கள் தான் வழிகாட்டி. உங்கள் மகன் மகள் உயிரோடு இருந்தால் மற்ற விசயங்களைப் பற்றிப் பேசவே முடியும். ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றைப் பேசுவார்கள்.

ஆட்சிக்கு வர நினைப்பவர்கள் வேறொன்றைப் பேசுவார்கள். தமிழகத்தில் பிணம் விழுந்தால் அரசியல் களம் சூடுபிடிக்கும் என்பது பொது விதி. ஆனால் எவரும் உண்மையை மட்டும் பேச மாட்டார்கள் என்பதனை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

நீட் விசயத்தில் உலக சுகாதார மையத்தின் அரசியல் உள்ளதா? இல்லை பாஜக அரசின் லாபி அரசியல் செய்கின்றதா? என்பது மட்டும் பரம ரகசியமாகவே உள்ளது. அதைத் தவிர மற்ற அனைத்தும் இங்கே அனைவரும் பேசுகின்றார்கள்.


()()()


இன்னும் 25 வருடங்களில் உலகம் முழுமையையும் தலைகீழாகப் புரட்டிப் போகும் இரண்டு விசயங்கள். ஒரு பக்கம் வளர்ந்து வரும் சூப்பர் அதி வேகத் துல்லிய செயற்கை நுண்ணறிவு துறை.  மற்றொருபுறம் 5 ஜி தொழில் நுட்பம். எதை இழக்கப் போகின்றோம்? எவற்றையெல்லாம் அடையப் போகின்றோம்? எப்படி நம் வாழ்க்கை மாறப் போகின்றது.


Tuesday, September 29, 2020

நிலம் உங்களுடையது. மண் எங்களுடையது.

எளிய தமிழ்ப்பிள்ளைகளின் சிந்தனை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?

தற்போது சேலத்தில் உள்ள விமானநிலையத்தில் ஒரு விமானம் மட்டும் வந்து போய்க் கொண்டிருப்பதால் மத்திய அரசு சர்வதேச விமான நிலையத்திற்கு அனுமதி வழங்கி அருகே இருந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர்களை வாங்கி (ஆறு கிராமங்கள்) பூர்வாகப் பணி தொடங்கியுள்ளது. நிலத்தை விற்பனை செய்தவர்கள் ஒரு காரியம் செய்தார்கள். அவரவர் நிலத்தில் உள்ள மண் எடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்ய ஆறு முதல் பத்து அடி வரைக்கும் மொத்தமாக அந்தப் பகுதி வரைக்கும் பள்ளமாக மாறி அதுவே தொடர்ந்து சில வாரங்களாக நடக்க விமான நிலையம் சுவர் வரைக்கும் வந்து நின்றுள்ளது.

ஒரு மாதத்தில் கிராம நிர்வாக அதிகாரி முதல் மற்ற அரசு நிர்வாகம் அமைதியாக இருந்து இப்போது விமான நிலைய உயரதிகாரி அலற இப்போது தான் முழித்துக் கொண்டு எளிய தமிழ்ப் பிள்ளைகளை விரட்டியடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இனி பள்ளம் முழுக்க மண் போட்டு நிரப்ப வேண்டும். விற்றவர்களுக்கு இரண்டு வருமானம். அமைதியாக இருந்தவர்களுக்கு மற்றொரு வருமானம். சர்வதேச விமானத் தளமாக மாறினால் வளர்ச்சியடைந்தால் எங்களுக்கென்ன? எங்களுக்கு எங்கள் நில மதிப்பு முக்கியம். எங்கள் மண் முக்கியம்.

ஒவ்வொரு கட்சியும் 2021 தேர்தலுக்குப் பத்தாயிரம் கோடி பட்ஜெட் போட்டு இருந்தால் நிச்சயம் ஐம்பதாயிரம் கோடி தயார் செய்து வைத்திருந்தால் மட்டுமே எளிய தமிழ்ப்பிள்கைள் ஓட்டளிக்க முன் வருவார்கள்.

()()()

11 Minutes - With Real Facts

ஜோ பேச்சு| அறிவுரைகள் வழிகாட்டுமா| Is it important Advice| 017| 28 Sep 2020

எப்போதும் இல்லாத அளவிற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக எங்கெங்கு காணினும் அறிவுரை சொல்லும் நபர்கள் அதிகமானது ஏன்? பேசக்கூடியவர்கள் அனைவரும் வென்றவர்களா? அல்லது இந்தப் பேச்சின் மூலம் பணம் பார்ப்பவர்களா?  செயல்பாடுகள் முக்கியம். செயலில் இறங்குவது மிக முக்கியம்..

Monday, September 28, 2020

எப்போது உழைப்பை நிறுத்துவது?

வருகின்ற 1ந் தேதி 10,11,12 மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கப்படும் என்பதற்கு முன் பின் நமது மறத்தமிழன் செங்க்ஸ் அவர்கள் பேசிய பேச்சின் தொகுப்பு.

1. 1ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

2. மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது.

3. சந்தேகம் கேட்க மாணவர்கள் வரலாம்.

4. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும்.

5. கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்கலாம்.

6. பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.

(பின்குறிப்பு - எனக்கு இன்னும் நாலைந்து மாதங்களைக் கடத்துவதற்குள் எத்தனை எலும்பிச்சைபழம் வாங்கி தலையில் தேய்த்துக் கொண்டேயிருப்பது என்று குழப்பமாக உள்ளது)

Sunday, September 27, 2020

எஸ்பிபி - அரசியல் புகழ் Vs திரைப்பட புகழ்

அரசியலில் ஒருவர் எத்தனை வருடங்கள் இருந்தாலும் அவர் நேர்மையாக வாழ்ந்திருந்தாலும் முழுமையான அங்கீகாரம் கிடைக்குமா? என்றால் அது வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும். நல்லது நடந்தால் நாற்பது எதிரிகளும் கெட்டது நடந்தால் நானூறு எதிரிகளும் உருவாகும் களமது. ஆனால் திரைத்துறையில் பணிபுரிய ஊதியம் கொடுத்துக் கூடவே புகழும் அங்கீகாரமும் உங்கள் திறமை பொறுத்து  உண்டு. இந்த இரண்டு துறைகளிலும் உங்களின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை உங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. உச்சபட்ட புகழை அடைந்திருந்தால் நீங்கள் வளர்க்கும் நாயும் ஒரு பிரபல்யமே. 


Saturday, September 26, 2020

SPB - உளப்பூர்வமான அஞ்சலி

எட்டுக் கோடி தமிழர்களில் இன்னமும் பாதிக்குப் பாதி பேர்கள் திறந்தவெளி கழிப்பிடங்களைத்தான் பயன்படுத்துகின்றார்கள். ஆரோக்கியம் சார்ந்த விசயங்களில் அவரவர் பக்தி மற்றும் மூட நம்பிக்கைகள் தான் இன்னமும் இங்கே நிலவுகின்றது. நடுத்தர வாழ்க்கை வரைக்கும் பொருளாதார நிலையில் உயர்ந்துள்ள தமிழினம் இன்னமும் பொது சுகாதார விசயங்களில் எண்ணம் அளவில் உயராமல் தான் இருக்கின்றார்கள்.

https://youtu.be/vUx96kd1bCc


000

கசகசக்கும் போக்குவரத்து நெரிசலில் எரிச்சலுடன் நின்று கொண்டிருந்த போது மகளார் அழைத்துச் சொன்னார்.

"உங்கள் காதலி இறந்து விட்டார்"

"டேய் அந்தப் பொண்ணு பொள்ளாச்சியில் என்னைப் போல ரெட்டப் புள்ள பெத்து நல்லாத்தான் இருக்குது. ஏன்டா அந்தப் பிள்ளையைச் சாகடிக்கிற" என்றேன்.

பச்சை விளக்கு எரிந்த போது மகள் சொன்ன வார்த்தை "எஸ்பிபி இறந்து விட்டார்".

ஆழ்மனம் அழுதாலும் கடந்த ஐம்பது நாட்கள் அவர் அடைந்த துன்பங்களை, பலமுறை இறந்து துன்பத்தோடு உழன்றதைப் பட்டியலிட்டுப் பார்த்துக் கொண்டே போக்குவரத்து நெரிசலில் கரைந்தேன்.

எஸ்பிபி யிடம் செல்வம் செல்வாக்கு இருந்தது.

ஐம்பது நாட்கள் தாக்குப்பிடித்தார்.

ஆனால் வடிவேல் பாலாஜி என்றொரு சின்னஞ்சிறு சின்னத்திரை நடிகர் இறந்த போது இப்படியொரு ஜீவன் இந்த உலகத்தில் இருந்தாரா? என்று என்னைப் போன்ற வெளியுலகம் தெரியாதவர்கள் அதன் பின்னே அவரைப் பற்றி அறிந்து கொள்ள முயன்ற போது அவர் அம்மா கதறுதலுடன் சொன்ன வாசகம் என் மனதில் பட்டுத் தெரித்தது.



"இருந்த பணம் கடன் வாங்கிய தொகை என்று இருபது லட்சத்தைச் செலவு செய்தும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை" என்று கதறிய அவரின் வார்த்தைகள் அந்தச் சின்ன நடிகரைப் பற்றி 1M (பத்து லட்சம்) பலவிதமான தலைப்புகளில் போட்டுச் சம்பாதித்து கல்லாக் கட்டிய யூ டியூப் சேனல் மக்களுக்கும், போதாக்குறைக்கும் பெரிய ஊடக மக்களும் இனி அடையப் போகும் லாபத்தை யோசிக்கத் தோன்றியது.

தென்னிந்தியா மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் அறிவிக்கப்படாத உறுப்பினராக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற இனி வாழப் போகின்ற எஸ்பிபி மரணத்தை வைத்து எத்தனை லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சம்பாதிக்கத் தயாராக இருக்கின்றார்களோ? என்பதனை யோசித்துப் பார்த்தேன்.

இங்கே பசிக்கு ருசிக்கும் மிருகங்கள் பலவுண்டு. ஆனால் பல நூறு மிருகங்களின் மொத்தப் பெயர்களையும் தங்களுக்குள் வைத்துக் கொண்டு வாழும் மிருகங்களுக்கு ஒரே ஒரு பெயர் தான்.

அதன் பெயர் மனிதன்.😔

Friday, September 25, 2020

கில்லாடி எடப்பாடி

படைப்புக் கடவுள் தற்போது மிகவும் குழம்பிப் போய் இருப்பதாக நம் சங்கத்துக்குச் செய்தி வந்துள்ளது. அதுவும் தமிழக ஆட்சியாளர்கள் அவர்களுக்குத் துணையாக இருக்கும் அதிகாரிகளுக்குத் தமிழர்கள் அனைவருக்கும் படைத்தது போலத்தானே சராசரி மூளை அதற்குள் நியூரான்கள் வைத்து அனுப்பினோம். இவர்கள் எப்படி கொரானா வைரஸ் நாட்டுக்கு நாடு, நாளுக்கு நாள் மியூட்டேசன் ஆகி வளர்வது போல எப்படி தங்கள் மூளைத்திறனை வளர்த்து நமக்கே சவால் விடுகின்றார்கள் என்று குழம்பிப் போய் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவித்த செய்தி பின்வருமாறு இருந்தது.

காட்சி ஒன்று

"ஏழரை லட்சம் பொறியில் கல்லூரி (அரியர்க்குப் பணம் கட்டிய அனைத்து மாணவர்களும்) தங்கள் ஆல் பாஸ்".

காட்சி இரண்டு

"வாய்ப்பே இல்லை. அவர்கள் போங்காட்டம் ஆடுகின்றார்கள்". (சூப்பர் சூரப்பா)

காட்சி மூன்று

"பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்".

காட்சி நான்கு

"முடிவில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை" (விவசாயி)

காட்சி ஐந்து.

"படவா பிச்சுப்பிடுவேன். ஒழுங்கு மரியாதையாக பரீட்சை நடத்து".

காட்சி ஆறு

"மாணவர்களே உங்கள் வீட்டில் இருங்கள். இணைய தளத்தில் கேள்வித் தாள் இருக்கும். தரவிறக்கம் செய்து கொள்ளவும். வீட்டில் இருந்தபடியே அதற்குப் பதில் எழுதுங்கள். வாட்ஸ்அப் வாயிலாக அனுப்புங்கள். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் பேராசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். இணையத் தொடர்பு இல்லாத தமிழ்ப் பிள்ளைகள் கவலைப்படாதீர்கள். பேராசிரியர்கள் உதவுவார்கள்". சுபம்.

காட்சி ஏழு

டெல்லி கிடுகிடுத்துப் போய் உள்ளது. அடுத்து அமித்ஷா அதற்கடுத்து யோகி என்று எத்தனை பேர்கள் வந்தாலும் தமிழ்நாடு நமக்கு எட்டாக்கனி தான். இவங்கள ஹேண்டில் செய்ய ஐம்பது அண்ணாமலை வந்தாலும் போதாது. பேசாமல் நாம் மேற்கு வங்கம், பீகார், கேரளா முடித்து அப்புறம் இவர்கள் கிட்ட வருவோம் என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று ஜண்டா வெறுத்துப் போய் சொன்னதாகத் தகவல் வந்துள்ளது.

பின்குறிப்பு

ஒத்த பொம்பளை பிள்ளையை பெற்று வச்சுருக்குற தகப்பன் பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு மகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டே வெறுத்துப் போய் என்னை அழைத்தார். "என்ன சார் அக்கிரமம். இவர்களையும் இப்படி வீட்டில் இருந்தே எழுதச் சொன்னா என்ன சார்?" என்று கேட்டார்.

ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன்.

"உங்கள் பெண்ணுக்கு ஓட்டு போடும் வயது வந்துடுச்சா"?

அவர் புரியாமல் "எம்பொண்ணு ஏஜ்அட்டன் ஆயிடுச்சு சார் " என்கிறார்.😁



*********

Murali Dharan 

நமது பாடத்திட்டத்தில் எப்போதுமே பெரிய அளவில் குறைகள் இல்லை. மதிப்பீட்டு முறைகள்தான் ஒவ்வொரு ஆண்டும் எளிமையாக்கிக்கொண்டே போனார்கள். சராசரி மாணவன் 80% வாங்கமுடியும். சிந்திக்கும் திறன் முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டது.பாடம் சொல்லிக் கொடுத்ததை விட மதிப்பீட்டு முறைகளை சொல்லித் தந்தனர். எதை எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும் எந்தப் பாடத்தை விட்டுவிடலாம் என்றே கற்பிக்கப் பட்டது. ஒரு கட்டத்தில் தனியார் பள்ளிகளின் இத்தந்திரங்களை அரசு பள்ளிகளும் பின்பற்ற ஆரம்பித்து விட்டன. நான் கவனித்தவரை கற்பித்தல் நிகழ்வை காண்பதே அரிதாக இருந்தது. எந்த நேரமும் தேர்வு எழுதிக் கொண்டிருப்பார்கள். அல்லது இடைவெளிவிட்டு உட்கார்ந்து படிக்க வைத்துக்கொண்டு இருப்பார்கள். Sin90°=1 என்பதை மனப்பாடம் செய்ய வைப்பார்கள் அது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். அது எப்படி என்பதை சில ஆசிரியர்களேகூட சிந்தித்திருக்க மாட்டார்கள்.

*****

எட்டுக் கோடி தமிழர்களில் இன்னமும் பாதிக்குப் பாதி பேர்கள் திறந்தவெளி கழிப்பிடங்களைத்தான் பயன்படுத்துகின்றார்கள். ஆரோக்கியம் சார்ந்த விசயங்களில் அவரவர் பக்தி மற்றும் மூட நம்பிக்கைகள் தான் இன்னமும் இங்கே நிலவுகின்றது. நடுத்தர வாழ்க்கை வரைக்கும் பொருளாதார நிலையில் உயர்ந்துள்ள தமிழினம் இன்னமும் பொது சுகாதார விசயங்களில் எண்ணம் அளவில் உயராமல் தான் இருக்கின்றார்கள்.

Wednesday, September 23, 2020

ஐபிஎல் 2020

எந்த சாமி மலையேறினாலும் ஏறாவிட்டாலும் இரவு பத்து மணிக்குள் படித்து முடித்து ஆழ்ந்த நித்திரைக்குள் நுழைந்து விடும் மகள் நேற்று ஹாட் ஸ்டாரில் ஐபிஎல் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒன்றை மட்டும் கவனித்தேன். 70 லட்சம் பேர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது தவிர தொலைக்காட்சி முதல் மற்ற வசதிகளின் வழியே பார்த்தவர்களின் எண்ணிக்கை தனி.

ஏழை, பணக்காரன் கோடீஸ்வரன் என்ற வித்தியாசமில்லை. கொரானா, முடக்கம், பணமில்லாத தவிப்பு எதுவும் இதனை பாதிக்கவில்லை. முடிந்தவர்கள் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

தனி சொகுசு பேருந்து. தனி விமானம், போய்ச் சேரும் வரைக்கும், விளையாட்டு மைதானம் சென்று சேரும் வரைக்கும் தங்க முட்டையிடும் வாத்துக்களை பொத்திப் பொத்தி வைத்திருந்து ஆட வைத்தார்கள். "ஆளில்லா கடையில் ஏம்பா டீ ஆத்துற" என்ற வசனத்தைக் கேட்டு நாம் சிரித்து இருப்போம். ஆனால் இவர்கள் தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பி பல்லாயிரம் கோடிகளை அள்ளியுள்ளனர்.

12th League (IPL) மும்பையில் 2019 ல் நடந்த போது புதிய சாதனை நிகழ்ந்தது. Broadcast Audience Research Council கணக்கின்படி 462 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். ஸ்டார் டிவி மட்டுமே 24 சேனல் வழியாக பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்தது. ஆண்களை விடப் பெண்கள் தான் அதிகப் பார்வையாளர்கள். அதாவது மொத்தக் கணக்கின்படி 9.8 மில்லியன். நேற்றைய கணக்கு இன்னமும் வெளிவரவில்லை. தொடர்ந்து இது குறித்து எழுதுவேன்.



கிரிக்கெட்டுக்கு இந்தியாவிற்கு வெளியே ஆதரவு என்பது மிகவும் குறைவு என்ற போதிலும் இதன் முக்கிய சந்தை 132 கோடி இந்திய மக்கள். பாதிக்குப் பாதி கணக்கில் வைத்தாலும் 66 கோடி மக்கள் தங்களை அறியாமல் இந்த வணிக வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றார்கள். இந்த முறையும் ஸ்டார் டிவி குழுமம் தான் நேரிடையான ஒலிபரப்பு உரிமையை எடுத்துள்ளார்கள். தொலைக்காட்சி வழியே ஒரு பக்கம். அவர்களின் ஹாட் ஸ்டார் ஒடிடி தளம் மற்றொருபுறம். கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்பதெல்லாம் பழைய டயலாக். இவர்கள் தின்பது பல கோடி லட்சம் லட்டுகளைத் தின்னப் போகின்றார்கள்.

யார் முதலாளிகள்? எத்தனை கோடி வருமானத்தை எடுக்கப் போகின்றார்கள்? போன்றவற்றை ஆராய்ந்த போது நம் எளிய தமிழ்ப்பிள்ளைகள் இருவர் இருக்கின்றார்கள் என்பதே சங்கத்திற்குப் பெருமையாக உள்ளது.

Kings XI Punjab (KXIP) - Mohit Burman, Ness Wadia,(இவரைத் தெரிந்து கொள்ள பாகிஸ்தான் தந்தை ஜின்னாவில் இருந்து தொடங்க வேண்டும்) Preity ZiPaul.nta (பன் பட்டர் ஜாம் நடிகை ப்ரித்தி ஜிந்தா) and Karan

Rajasthan Royals - Manoj Badale. Lachlan Murdoch, Aditya S Chellaram and Suresh Chellaram.(பிர்லா குழும வாரிசுகள்)

Kolkata Knight Riders - Shah Rukh Khan, Juhi Chawla and her husband Jay Mehta (ஹிந்தி திரைப்பட வெற்றிகரமான ஜோடிகள் ஷாரூக்கான் ஜுகி சாவ்லா தொழில் ஜோடிகளாக மாறியுள்ளனர்)

Sunrisers Hyderabad - Kalanithi Maran (Sun TV Network).எளிய தமிழ்ப்பிள்ளை கலாநிதி மாறன்.

Delhi Capitals - GMR Group (நீங்கள் பார்க்கக்கூடிய இந்திய விமான நிலையங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை டெண்டர் எடுக்கும் பகாசூர நிறுவனம்)

RCB - Royal Challengers Bangalore முதலாளி அய்யா லண்டனில் நீதிமன்ற படிக்கட்டுகளை தினமும் சுத்தம் செய்து கொண்டிருப்பதால் அவர் நிர்வாகத்தில் உள்ள Mahendra Kumar Sharma (current Chairman of USL and Anand Kripalu acts as its Managing Director and Chief Executive Officer)

CSK - N. Srinivasan’s India Cements.முத்தமிழ் அறிஞர் ஆட்சியில் ஒரே நாளில் சிண்டிகேட் அமைத்து சிமெண்ட் விலையை ரூபாய் 300க்கு மேல் விற்று சாதனை புரிந்த எளிய தமிழ்ப்பிள்ளை சீனி மாமா. பக்கத்து மாநிலத்தில் இருந்து குறைவான விலை சிமெண்ட் இங்கே கொண்டு வரக்கூடாது என்று அன்புக்கட்டளையிட்டு அள்ளிய மகான்.

Mumbai Indians Mukesh Ambani and his wife Neeta Ambani (அம்பானி குறித்து தனியாக சொல்ல வேண்டுமா?)

தமிழ்ப்பிள்ளைகள் என்று பார்த்தால்....

ஒன்று. சீனிவாசன். மற்றொருவர் கலாநிதி மாறன்.

வட ஆதிக்கத்தை ஒழிக்க விரைவில் சங்கம் ஏதாவது ஒரு போராட்டத்தை முன்னெடுக்கலாமா? என்று நிரந்தரப் பொதுச்செயலாளர் யோசித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் இந்த வணிகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல விதங்களில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டினால் இவர்கள் என்ன வேறு வகையில் சம்பாதிக்க இளைஞர்களை மடை மாற்றுகின்றார்கள் என்பதற்குக் கீழே கொடுத்துள்ளேன்.

விளையாட்டை ரசிங்க. அதற்குப் பின்னால் உள்ள வணிக வலைபின்னல்களையும் தெரிந்து கொள்ளுங்க. அது உங்களை வழிநடத்தும். புதிய சிந்தனைகள் உருவாக காரணமாகவும் இருக்கக்கூடும்.

••••••••••

தொழில் சமூகமாக உயர்ந்திருந்த தமிழ்ச் சமூகம் இன்று தன் வாழ்க்கை தன் பாதுகாப்பு என்று சின்ன வட்டத்திற்குள் பொருத்திக் கொண்டு பயச் சமூகமாக மாறியது ஏன்?

Tuesday, September 22, 2020

மருத்துவ கனவுக்கு பின்னால் உள்ள சோகங்கள்

இந்தப் பதிவு ஃபேஸ்புக் முழுக்க எங்கெங்கு காணினும் ஒவ்வொருவரும் பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். மருத்துவர் ஒருவர் எழுதியுள்ளார். இதனை அப்படியே வாட்ஸ்அப் வாயிலாக நண்பர் மகளுக்கு அனுப்பி வைத்தேன். அவர் சில வருடங்களுக்கு முன்பிருந்தே நான் படித்தால் மருத்துவருக்குத்தான் படிப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறார். அம்மா பயந்து சாகின்றார். அப்பா வந்தால் மலை போனால் டேஷ் என்று இருக்கின்றார்.

உங்கள் மகளை முழுமையாகப் படித்து முடித்து விட்டு என்னை அழைக்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தேன். மதுரையிலிருந்து மகள் அழைத்தார்.

"என்னம்மா உன் சிந்தனையில் ஏதும் மாற்றம் உண்டா"? என்றேன்.

"இல்லை" என்றார்.

"குழப்பம் வந்துள்ளதா?" என்று கேட்டேன்.

"ஒரு குழப்பமும் இல்லை" என்றார்

"ஏன்?" என்று மீண்டும் கேட்ட போது அவர் சொன்ன பதில் இது.

இப்போது ப்ளஸ் ஒன் உள்ளே நுழைக்கின்றார்.

"எனக்கு ஒரு வாழ்க்கை தான். இந்த வாழ்க்கையை நான் தான் வாழவேண்டும். அதுவும் எனக்குப் பிடித்த மாதிரி தான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். என்னைச் சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். நான் யாருக்காவது உதவி செய்யும் சூழலில் இருக்கவே வாழவே விரும்புகிறேன். நான் ஐடி துறையில் நுழைந்து கணினி முன்னால் நாள் முழுக்க முறைத்துக் கொண்டு லட்சக்கணக்கில் சம்பாதிப்பதை விட, கூண்டுக் கிளி போல மற்ற ஏதோவொரு துறையில் நுழைந்து எனக்குப் பிடிக்காததைப் பிடித்தது போல மாற்றிக் கொண்டு இம்சையுடன் வாழ்வதை விட முயன்று தான் பார்ப்போம். ஒரு முறை தான் முயல்வேன். இல்லாவிட்டால் அடுத்த துறையை அப்போது தேர்ந்தெடுப்பேன். இதற்கு மீண்டும் முயல மாட்டேன். லட்சக்கணக்கான பேர்கள் மோதும் இடத்தில் என் திறமை எனக்கான தகுதி என்ன என்று எனக்குத் தெரிந்தால் தான் நான் கல்லூரியில் சேரும் போது நான் யார் என்பதும் 12 வருடங்கள் நான் என்ன தான் கற்று வந்தேன் என்பதும் எனக்கும் புரியும் அங்கிள்".

"டோண்ட் ஒர்ரி அங்கிள். அவ்வளவு சீக்கிரம் சாக மாட்டேன். நான் இங்கே செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. எங்க அம்மாக்கிட்ட நீங்களே பேசுங்கள்" என்று அலைபேசியை அப்படியே தள்ளிவிட்டார்.

"ஒத்த புள்ள" என்று அம்மா விசும்புகின்றார்.

அப்பா "மீண்டும் ஹனிமூன் போவோம்" என்று மனைவியைக் கலாய்க்கின்றார்.

மகாகவி பாரதி என் நினைவுக்கு வந்தார்.

====

"உன் கழுத்துல அந்த stethoscope மாட்டி ஒரு வாட்டி பாத்துரனும். பாத்துட்டேனா நா நிம்மதியா கண்ணை மூடுவேன்" இந்த மாறி குழந்தைகளிடம் பேசும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு. நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம். அது மட்டுமில்லாமல் இப்போது ஏகப்பட்ட டாக்டர்கள் உள்ளார்கள் தமிழகத்தில். இனிமே புதுசா டாக்டராகி survive பண்றது ரொம்ப கஷ்டம்.

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் 100இற்கு 98,99 வாங்கிய மாணவர்கள் MBBS முதலாம் ஆண்டில் JUST PASS ஆகி தேர்ச்சி பெற முடியாமல் அவ்வளவு பேர் FAIL ஆவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? அப்படி FAIL ஆனவர்கள் , ARREARS உடன் 2ND YEAR செல்ல முடியாது . முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் 2ND YEAR போக முடியும். நீங்கள் நினைப்பது போல MBBS படிப்பு 5 ஆண்டுகள் கிடையாது.

1ST YEAR -1 ஆண்டு

2ND YEAR -1½ ஆண்டுகள்

3RD YEAR -1 ஆண்டு

FINAL YEAR -1 ஆண்டு

HOUSE SURGEON -1 ஆண்டு ,

FAIL ஆகாமல் தேர்ச்சி பெற்றாலே ஆக மொத்தம் ஐந்தே முக்கால் ஆண்டுகள் ஆகி விடும். நடுவுல FAIL ஆனா, 6 ஆண்டுகள், 7 ஆண்டுகள் என நீண்டு கொண்டே போகும். ஒரு MBBS மாணவன் 3RD YEAR படிக்கும் போது, அவனோடு 12படித்த நண்பன் TIER 1 கல்லூரிகளில் B.E , B. TECH இல் சேர்ந்தவன் "மச்சி நா கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆயிட்டேன். மாசம் 50,000 சம்பளம் " என்று போன் பண்ணி சொல்லி depression ஆக்கி விடுவான். " நாம தப்பா MBBS எடுத்துட்டோமோனோ "நினைக்க வைத்து விடுவான்.

ஒரு வழியா MBBS முடிச்சு degree வாங்கியாச்சு. அடுத்து என்ன செய்வது ?

பெரிய மருத்துவமனைகளில் duty doctor ஆக பணியில் சேரலாம். மாசம் 25,000-30,000 கிடைக்கும்.

கிளினிக் ஆரமிச்சா "அவன் வெறும் MBBS டாக்டர், அவன்கிட்ட போவாத. MD டாக்டர் கிட்ட போ" னு ஒரு கேசும் வராது.

சரி. MD படிக்கணும்னா, அதுக்கும் NEET நுழைவுத்தேர்வு இருக்கு. அதுக்கு 2-3 வருஷம் PREPARE பண்ணனும். அதுக்கப்புறம் MD சேர்ந்து 3 வருஷம் படிக்கணும். இதெல்லாம் முடிக்க 35 வயதாகிடும். ( அதற்குள் முடிப்பவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் rare)

அதுக்குள்ள அந்த கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆன என்ஜினீயரிங் நண்பன், 10 வருஷம் நல்லா சம்பாரிச்சு, EMI ல கார் வாங்கிருப்பான். HOME LOAN போட்டு வீடு கட்டிருப்பான். இல்லனா USA/AUSTRALIA ல செட்டில் ஆயிருப்பான். சரி பரவால்ல, லேட் ஆனா என்ன ? அதான் MD முடிச்சாச்சே இனிமே நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கும் னு நீங்க நினைக்கலாம். அங்க தான் ட்விஸ்ட்.

1.அரசு பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யலாம். அப்படி அரசு பணியில் சேர்ந்த மருத்துவர்கள் , ஊதியம் போதவில்லை என்று போராட்டம் நடத்தும்போது, " அதான் கிளினிக் ல நல்லா சம்பாரிக்கிராங்களே. இவனுங்க பாக்குற வேலைக்கு இந்த சமபளம் போதாதா ?" என்று மருத்துவர்களை திட்டியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறவாதீர்கள்

2.கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வேலைக்கு சேரலாம். ஆனால் அங்கே நாம் 12ஆவது முடித்தவுடன் குடுக்கும் பேட்டியில் செய்வதாக சொல்லிய சேவையெல்லாம் செய்ய முடியாது. HOSPITAL POLICIES மற்றும் PROTOCOL களுக்கு கட்டுப்பட்டு தான் வேலை செய்ய முடியும். சுயமாக ஏதும் செய்ய முடியாது.

3.இன்றைய கால கட்டத்தில் சொந்தமா இடம் வாங்கி, கிளினிக் கட்டுவது ரொம்ப சிரமம். அப்படியே புதுசா கட்டினாலும், நோயாளிகள் வர மாட்டார்கள். ஒன்னு அரசு மருத்துவமனைக்கு போவார்கள். இல்லைனா, கார்ப்பரேட் மருத்துவமனை, இல்லைனா அதே ஊரில் ரொம்ப வருஷமா வைத்தியம் பார்க்கும் சீனியர் டாக்டரிடம் தான் போவார்கள். கிளினிக்கில் கூட்டம் வர எப்படியும் 5-10 வருடங்கள் ஆகி விடும் . கிளினிக்கில் வெற்றி பெற, புத்தக அறிவு மட்டும் போதாது, நோயாளிகளின் நாடி துடிப்பை பார்த்தால் மட்டும் போதாது. அவர்களின் மன ஓட்டத்தை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படியே எல்லாம் செஞ்சாலும், கடைசியா அவர்கள் ஒரு வார்த்தை வைத்திருப்பார்கள். அதான் "கைராசி" அது இல்லைனு முத்திரை குத்திட்டாங்கன்னா அவ்ளோ தான். கிளினிக் ல ஒக்காந்து ஈ தான் ஓட்டனும்.

அவ்வளவு ஏன் ? சாதாரண மக்களுக்கு கொரோனா இறப்பு சதவீதம் 2% . டாக்டர்களின் இறப்பு சதவீதம் 15%.  எனவே பெற்றோர்களே, நீங்கள் நினைப்பது போல மருத்துவ படிப்பும், மருத்துவர்கள் வாழ்வும் அவ்வளவு சுலபம் அல்ல. உங்கள் ஆசைகளை உங்கள் பிள்ளைகள் மீது தினிக்காதீர்கள். " என் மீது நீங்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேணா என்று தெரியவில்லை " என்று NEET தேர்வுக்கு முதல் நாள் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவச்செல்வங்கள் இறப்பது மிகவும் வேதனையான விஷயம்.

வீட்டிலேயே உட்கார்ந்து 2 ஆண்டுகளாக NEET தேர்வுக்கு படிப்பதெல்லாம் மிகப்பெரிய மன அழுத்தத்தை அளிக்க கூடியவை. MBBS கிடைக்கலைனா, Genetic engineering, Robotics, Microbiology, Embryology, Agri போன்ற படிப்புகளில் சேர்த்து விடுங்கள். அவை தான் எதிரகாலத்தில் மிகவும் most wanted படிப்புகளாக இருக்கப்போகிறது.  பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா என்று தோளில் கோட் போட்டு பாடும் முரளி, வானத்தை போல பிரபுதேவா போன்ற டாக்டர் கேரக்டர்களை மனதிலிருந்து எடுத்து விடுங்கள். ஆதித்ய வர்மா/அர்ஜுன் ரெட்டிய நினைச்சுகோங்க. அதான் இன்றைய நிலை.

Dr. பிரகாஷ் மூர்த்தி MBBS, MD


நுழைவுத்தேர்வு ஃபோபியா |Entrance exam phobia


Monday, September 21, 2020

பாட்லா ஹவுஸ் (இந்தி)

தமிழ்த் திரைப்பட உலகில் மார்க்கெட் இழந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, தன் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள, தன்னை கில்லியாகக் காட்டிக் கொள்ள எடுக்கும் அவதாரம் தான் காவல்துறை அதிகாரி வேடம். கடைசியில் "நான் போலீஸ் அல்ல பொறுக்கி" என்ற பஞ்ச் டயலாக்கோடு முடிப்பார்கள். அதிகபட்சமாகத் தர்மத்தை நிலைநாட்டுவார்கள். பார்ப்பவர்கள் "மிஸ்டர் கேனயன்" என்ற பட்டம் பெற்று திரையரங்கை விட்டு வெளியே வருவார்கள். ஆனால் பாட்லா ஹவுஸ் (இந்தி) அமேசான் தளத்தில் (தமிழ் ஆங்கிலம் சப் டைட்டில் உள்ளது) படத்தைப் பார்த்த போது வியந்து போய் மகள்களுக்கு பரிந்துரைத்தேன்.



Sunday, September 20, 2020

இணைய விளையாட்டு-ஒரு லட்சம் போச்சு - On line Games for childrens


தற்போது ஒரு மகன் மகள் இருக்கும் குடும்பத்தில் கட்டுப்பாடுகள் எதையும் பெற்றோர்களால் உருவாக்க முடியவில்லை. தொழில் நுட்ப உலகம் அம்மா, அம்மா, மகள், மகள் என்று அனைவரையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துள்ளது. வேறு வழியே இல்லை. பெற்றோர்கள் தான் புரிந்து செயல்பட வேண்டும். ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகள் நேரம், காலம், மனம் போன்ற அனைத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. வங்கியில் இருக்கும் பணத்தையும் குழந்தைகள் சூறையாடப்படும் அளவிற்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.  




Saturday, September 19, 2020

சத்து மாவு

ஆரோக்கியம் என்ற வார்த்தை இன்று சந்தையில் சக்கைப்போடு போடும் வணிக தந்திரம். கொரானா காலத்திற்குப் பின் "உங்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்க" என்று அனைத்துப் பொருட்களிலும் விளம்பரம் வந்து கொண்டேயிருக்கிறது. உங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம். எளிய முறையில் உண்மையான ஆரோக்கியத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெற சத்து மாவு செய்து தினமும் இரு வேளைகள் சாப்பிட்டுப் பாருங்கள். 

குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து உலர வைத்து அதன் பிறகு டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.


Friday, September 18, 2020

ஆழ்ந்த தூக்கம் ஆயுள் அதிகம்


எளிய தமிழ்ப்பிள்ளைகளின் சிந்தனை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?

தற்போது சேலத்தில் உள்ள விமானநிலையத்தில் ஒரு விமானம் மட்டும் வந்து போய்க் கொண்டிருப்பதால் மத்திய அரசு சர்வதேச விமான நிலையத்திற்கு அனுமதி வழங்கி அருகே இருந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர்களை வாங்கி (ஆறு கிராமங்கள்) பூர்வாகப் பணி தொடங்கியுள்ளது. நிலத்தை விற்பனை செய்தவர்கள் ஒரு காரியம் செய்தார்கள். அவரவர் நிலத்தில் உள்ள மண் எடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்ய ஆறு முதல் பத்து அடி வரைக்கும் மொத்தமாக அந்தப் பகுதி வரைக்கும் பள்ளமாக மாறி அதுவே தொடர்ந்து சில வாரங்களாக நடக்க விமான நிலையம் சுவர் வரைக்கும் வந்து நின்றுள்ளது.

ஒரு மாதத்தில் கிராம நிர்வாக அதிகாரி முதல் மற்ற அரசு நிர்வாகம் அமைதியாக இருந்து இப்போது விமான நிலைய உயரதிகாரி அலற இப்போது தான் முழித்துக் கொண்டு எளிய தமிழ்ப் பிள்ளைகளை விரட்டியடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இனி பள்ளம் முழுக்க மண் போட்டு நிரப்ப வேண்டும். விற்றவர்களுக்கு இரண்டு வருமானம். அமைதியாக இருந்தவர்களுக்கு மற்றொரு வருமானம். சர்வதேச விமானத் தளமாக மாறினால் வளர்ச்சியடைந்தால் எங்களுக்கென்ன? எங்களுக்கு எங்கள் நில மதிப்பு முக்கியம். எங்கள் மண் முக்கியம்.

ஒவ்வொரு கட்சியும் 2021 தேர்தலுக்குப் பத்தாயிரம் கோடி பட்ஜெட் போட்டு இருந்தால் நிச்சயம் ஐம்பதாயிரம் கோடி தயார் செய்து வைத்திருந்தால் மட்டுமே எளிய தமிழ்ப்பிள்கைள் ஓட்டளிக்க முன் வருவார்கள்.

()()()

பெரிய திரை (சினிமா) சின்னத்திரை (டிவி) கடந்து இப்போது தொடு திரைக்கு (செல்போன்) வந்து நின்று "செல் நோண்டி" சமூகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நள்ளிரவு வரை இணைய மேய்ச்சல் எதிர்காலத்தில் தரப்போகும் பரிசு......


Wednesday, September 16, 2020

365 நாளும் அசைவமும் பிரியாணியும் - Sep 15|-06

ஊண் உணவு, மச்சம், கறி இறுதியாக அசைவம் என்று(ம்) அழைக்கப்படுகின்றது. சங்ககாலம் முதல் தமிழர்களின் வாழ்வியலில் கறி விருந்து என்பது இயல்பானதாகவே இருந்தது. இன்று வரைக்கும் தென் மாவட்டங்களில் காது குத்து முதல் கருமாதி வரைக்கும் கிடா விருந்து என்பது இல்லாவிட்டால் வெட்டுக்குத்தில் முடிவது இயல்பான ஒன்று. காரணம் எல்லாப் பயல்களும் கறிப்பயல்கள். மொத்தத்தில் தமிழகத்தில் எப்போதும் விருந்து என்றாலே அது கறி விருந்து என்பது தான். பெரும்பான்மையினர் மத வேறுபாடு இன்று நீக்கமற நிறைந்திருந்தது. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் அர்த்தமும் இருந்தது.

ஆனால் இன்று?

கறி என்பதும் மாட்டுக்கறி என்பது வரைக்கும் வந்து அது அரசியலாக மாற்றப்பட்டு அதுவே இன்று முன்னெடுக்கப்பட்டு வந்து கொண்டுமிருக்கிறது. அசைவம் என்பது எலைட் சமூகம் என்பது போலவே பார்க்கப்படுவதும் அசைவம் என்பது தீண்டத்தாகதது போலவும் மாற்றப்பட்டு ஒரு புறமும் மற்றொரு புறமும் மூன்று வேளையும் அசைவ வெறியர்களையும் தமிழகம் உருவாக்கியுள்ளது.

தினமும் பிரியாணி தின்பவர்களை எனக்குத் தெரியும். அதே போல ஒரு துண்டு கருவாடு இல்லாமல் இருந்தால் அதற்குப் பெயர் சாப்பாடு இல்லை என்று மனைவியுடன் சண்டைபோடுபவர்களையும் அறிவேன்.

இவர்களை விடக் கடைகளில் பொறுக்கித் தின்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நான் இருக்கும் நான்கு கிலோ மீட்டருக்குள் 40 பிரியாணிக் கடை வளர்ந்தது இப்படித்தான். இந்த மக்களிடம் அன்னமும் ஒடுங்கினால் ஐம்பொறிகளும் பாதிப்பாகும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

அதென்ன ஐம்பொறிகள்?

ஜோ பேச்சு - 365 நாளும் அசைவம் ப்ளஸ் பிரியாணி



Monday, September 14, 2020

#NEET|#JO PECHU|#அப்பா அம்மாக்கள் திருந்துங்கள்|Sep 13|- 05





ஒவ்வொரு வீட்டிலும் அம்மா தான் முதல் ஆசிரியர். அப்பா தான் முதல் வழிகாட்டி. இவர்கள் தான் ஒரு மாணவன் மாணவியரின் முதல் இருபது ஆண்டு கால வாழ்க்கையில் சிந்தனை செயல் என்று அனைத்து விசயங்களிலும் இருக்கின்றார்கள்.

இவர்கள் இந்தக் கடமையிலிருந்து தவறும் போது பாதை மாறும் போது மகன் மகள் நிச்சயம் தோல்வி அடைகின்றார் என்பதனை விட மன ரீதியான மாறுதல் அடைகின்றார். அது அவர்களின் குடும்பத்தை மட்டுமல்ல எதிர்காலத்தில் சமூகத்தையும் பாதிக்கும் என்பதே உண்மை.

மனநலம் சரியில்லாதவர்கள் எனில் அவர்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்று அர்த்தம் அல்ல. சமூகத்தில் போராடத் துணிவில்லாத அளவிற்குப் பொத்திப் பொத்தி வளர்த்து அவர்களைச் செயல்பட முடியாதவர்களாகவும் அப்பா அம்மாக்கள் மாற்றிவிடக் கூடாது.

இதில் கவனம் செலுத்தினால் போதும். தற்கொலை போன்ற எண்ணங்கள் வர வாய்ப்பே இல்லை.





Sunday, September 13, 2020

மோடி தான் காரணம்


திருப்பூரில் நான் நேரில் சந்தித்த, பழகிய, தொடர்பில் இருந்த மிக உன்னதமான மனிதர். கட்சி கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவர். உண்மை, நேர்மை, அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்.கடைசி வரைக்கும் தன்னால் முடிந்தவரைக்கும் மக்கள் பணியில் இருந்தவர்.

கொரானா தொடங்கிய மார்ச், ஏப்ரல் மாதங்களில் நான் நடைபயிற்சி சென்று வரும் பாதையில் குமார் நகரில் இருந்த காபி கடையில் காலையில் பார்ப்பேன். அப்பொழுதே அவரைச் சுற்றி சில நண்பர்கள் இருந்தனர். அன்றே அவரிடம் கேட்டேன். இந்த சமயங்களில் வீட்டில் இருக்கலாமே? என்று. சிரித்துக் கொண்டார்.

திருப்பூரில் நான் பார்த்த சிறப்பான மனிதர்களில் ஒருவர். கொரானா தொற்று நோய் காரணமாக நேற்று கோவையில் காலமானார்.

கண்ணீர் அஞ்சலி.


Saturday, September 12, 2020

ஜோ பேச்சு -கில்லாடி மாணவர்கள் -Sep 12 2020

நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதற்கும் மேலை நாகரிகம் எப்படியுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள்.



Wednesday, September 09, 2020

அங்கீகாரம் வரும். பொறுமை வேண்டும்.


நீண்ட பதிவு. மனதிடம் இல்லாத மாற்றுப் பாதையில் சொல்லவும். 



Tuesday, September 08, 2020

ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை (Book -1921-2020 Tamil Nad...


அப்பா, தாத்தா வாழ்ந்த காலங்கள், அவர்களின் சொந்தங்களுடன் எடுத்த புகைப்படங்களைக் கல்லூரி படிக்கும் போது பார்த்துள்ளேன். வித்தியாசமான எண்ணங்களை உருவாக்கியது. ஆனால் அந்தத் தலைமுறை நினைவுகளைப் பெரிது படுத்திக் கொள்ளவில்லை. அம்மாவிடம் பழைய புகைப்படங்களைக் கொண்டு போய் காட்டினாலும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பிறந்தவர்கள் பிறந்த அந்த நொடி முதல் படிப்படியான வளர்ச்சி வரைக்கும் காட்சி வடிவில் ஆவணப்படுத்தும் அளவிற்கு நவீனத் தொழில் நுட்பம் நமக்கு வசதிகளைத் தந்துள்ளது.

நண்பர் நீங்களே வீடியோ பேசி எனக்கு அனுப்பி வையுங்கள் என்றார்.  இதனை மகள் தான் எடுத்தார்.  எடுக்கும் சமயத்தில் எத்தனை எத்தனை பிரச்சனைகள்?  பால்காரர் முதல் பக்கத்து வீட்டுக்காரர் மாடிக்கு வருவது வரைக்கும் அடுத்தடுத்து பல சிரிப்பான சமாச்சாரங்கள் நடந்தது.  கடைசியாக முழுமையாகப் பேசி முடித்த போது மற்றொரு மகள் பின்னால் வந்து ஓ... வென்று கத்த அதுவும் அவுட்.  இப்படியே நாலைந்து முறை முயன்று கடைசியில் இதனை எடுத்து முடித்தோம்.

ஆனால் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை.  இணையம் ஒத்துழைக்க மறுக்க கடைசியில் எடுத்ததை ஏன் வீணாக்க வேண்டும் என்று இங்கு பதிவேற்றம் செய்துள்ளேன்.

சமீபத்தில் வெளியான தமிழக அரசியல் வரலாறு புத்தகமான ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரைக்கும் என்ற மின்னூலுக்கு அறிமுக உரையாக, அறிமுகப்படுத்தும் விதமாக இதனைப் பேசியுள்ளேன்.

அடுத்த பத்தாண்டுகளில் நம் முக மாற்றத்தை உணர்ந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.






Monday, September 07, 2020

பிரணாப் குமார் முகர்ஜி

மறைந்த வசந்த் குமார் மறைவிற்குப் பின்பு சமூக வலைதளத்தில் ஏதாவது ஓர் இடத்தில் அவரைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டவர்கள் யாராவது எழுதுவார்களா? என்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். ஆனால் என் பார்வையில் அப்படியொரு தகவல் கண்ணில்படவே இல்லை. 

99 சதவிகிதம் அவரைப் பற்றி உண்மையான நேர்மையான அருமையான அஞ்சலி செய்திகள் தான் கண்ணில்பட்டது. அவர் அரசியல்வாதி, தொழில் அதிபர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வகித்தவர். 400 கோடிக்கும் மேல் என் சொத்து உள்ளது என்று கம்பீரமாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தவர். இதற்கு மேலாக அம்பானி அதானி என்று பேசிக்கொண்டிருக்கும் தமிழர்களின் மத்தியில் தன் முனைப்பை ஏற்படுத்திக் காட்டியவர்களின் முக்கியமானவராகவே தெரிகின்றார்.

Saturday, September 05, 2020

மோடிக்கு சில கேள்விகள்

ஏழை எளிய தமிழ்ப்பிள்ளைகள் நடத்தும் எங்கள் சங்கத்தில் கோடிக்கணக்காக வங்கியிருப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகம் முழுக்க பல புத்திசாலி ஆலோசகர்கள் இருக்கின்றார்கள் என்பதனை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகின்றோம். உலக அளவில் போட்டியிட்டின்றி (அதாங்க பொதுக்குழு, செயற்குழு தேர்ந்தெடுத்து)தலைமை ஆலோசகராக நேற்று முதல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த எளிய விழாவில் எங்கள் ஆருயிர் அண்ணன் ட்ரம்ப் தலைமையில் நடந்த எளிய விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டே Sriram Narayanan ராம் அவர்களை வருக வருக என்று வரவேற்கின்றோம்.



Friday, September 04, 2020

திருப்பூரின் வேலை, வணிகம், தொழிலின் இன்றைய நிலை- பேட்டி 2


வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்~2

வளர்ச்சி என்பதனை நீங்கள் எப்படி பார்ப்பீர்களோ? எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வார்த்தையுடன் கொஞ்சம் மசாலா அயிட்டங்களைச் சேர்த்துப் பார்ப்பதுண்டு. வளர்ச்சி என்றால் அதன் மறுபெயர் மாற்றம் தானே? மாற்றத்தின் விளைவுகள் என்ன? அதன் தாக்கம் என்ன? இவற்றைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. நாம் வளர்ச்சி என்பதனை நம் குடும்பத்தை வைத்து அளவிடுகின்றோம். நம் அரசின் கொள்கைகள் நம் வாழ்க்கையை நேரிடையாக மறைமுகமாகப் பாதிப்பை உருவாக்குகின்றது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறீர்கள்? நான் அரசாங்கத்தின் கொள்கை எப்படி வெல்கின்றது? என்பதனை நான் ஒவ்வொரு முறையும் என் பிறந்த ஊருக்குச் செல்லும் போது நான் சந்திக்கும் கிராமத்து நண்பரிடம் கேட்பேன்.



•••••••••






Wednesday, September 02, 2020

முதல் பேட்டி

கடந்த 11 ஆண்டுகளில் இணையம் வழியாக நான் பெற்ற சொத்து ஒன்று உள்ளது. பல தரப்பினரும் என் தொடர்பில் உள்ளார்கள். கட்சியில் நேரிடையாகத் தொடர்புள்ளவர்கள், குறிப்பிட்ட கட்சியின் கொள்கைகளை அதி தீவிரமாக ஆதரிப்பவர்கள், மாற்று அரசியலை விரும்புகின்றவர்கள், மூன்று மதங்களில் உள்ளவர்கள், ரசிகர்களாகவே வாழ வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், அதற்கு மேலாக அவர்களைக் கடவுளாகப் பார்ப்பவர்கள், சாதிக்கட்சி, மத ரீதியான கட்சிகள் என்று எல்லா நிலையிலும் யாரோ ஒருவர் என் தொடர்பில் இருக்கின்றார்கள். இது இயல்பாக படிப்படியாக உருவானது.

Tuesday, September 01, 2020

கல்லூரி மாணவர்களின் கடவுள் எடப்பாடியார்

 கடந்த மூன்று ஆண்டுகளில் அம்மா கொடுத்த நிர்ப்பந்தம், அப்பா உருவாக்கிய கட்டாயம், பக்கத்து வீட்டுக்காரன் மகன் படித்து முடித்த பின்பு காட்டிய கெத்து, கடைசியாக ஏதாவது ஒன்றைப் படித்துத் தானே ஆக வேண்டும் போன்ற பல காரணங்களால் உறவுக்கூட்டத்தில் உள்ள (குறைந்தது 10 பேர்கள்) பொறியியல் பாடத்தில் வைத்திருந்த அரியர் பேப்பர்கள் 6 முதல் 19. சிலர் எழுதும் எண்ணத்தில் இல்லை. வீட்டில் இம்சை தாங்க முடியவில்லை என்ற எண்ணத்தில் பணம் கட்டுவதோடு சரி. ஒவ்வொரு முறையும் இப்படியே காசு உயர்கல்வித்துறைக்குச் சென்று கொண்டேயிருந்தது.