Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

Tuesday, October 26, 2021

இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களின் விபரம்

2009 முதல் 2021 வரை இணைய தளத்தில் செயல்பட்டு வருகின்றேன். தொடக்கத்தில் நண்பர் சீனிவாசன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் இலவச மின் நூல் தளத்தில் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டு வந்தேன்.  கூகுள் ப்ளஸ் ல் விமலாதித்த மாமல்லன் மூலம் அமேசான் அறிமுகம் ஆனது.  அதில் புத்தகமாக வெளியிட்டு வந்தேன்.  



Thursday, September 26, 2013

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

கடந்த ஒரு வருடமாக புத்தகங்கள் எதுவும் வாங்குவதில்லை. வீட்டுக்குள் அங்கங்கே அடைந்து கிடைக்கும் புத்தகங்களை ஒவ்வொரு முறையும் பிரித்து அடுக்கி தூசியை தட்டி வைக்கும் போது உருவாகும் குற்ற உணர்ச்சி அளவில்லாதது. புத்தகங்களை ஆசைப்பட்டு வாங்கிய போது உண்டான ஆர்வம் அதை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை என்ற நொண்டிச்சாக்கில் அடுக்கி வைக்கப்பட்ட பொருளாகவே இருந்து விடுகின்றது.  

ஆனால் இயற்கை, நமது ஆதாரமான விவசாயம், தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தேடத் தொடங்க உள்ளே இருந்த ஒவ்வொரு புத்தகத்திற்கும் மீண்டும் உயிர் வந்தது.  

நான் படித்த சில புத்தகங்களைப் பற்றி இங்கே தருகின்றேன்.

டாலர் நகரம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் மருத்துவர் வெ. ஜீவானந்தம் அவர்கள். 

நிஜ வாழ்க்கையிலும் மிகச் சிறந்த சமூக சேகவர். காந்தியவாதி. ஈரோட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர். தமிழக பசுமை இயக்கம் மற்றும் மருத்துவ துறையில் எளிய மக்களுக்கு விளம்பரம் ஏதுமில்லாது பல சேவைகள் செய்து கொண்டிருப்பவர்.  அவரின் தந்தையும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வெங்கடாஜலம் அவர்கள் இறந்த செய்தி கிடைத்த போது அவரின் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றேன். அப்போது அவர் ஒரு புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்தார்.

1. இயற்கைக்குத் திரும்பும் பாதை

இது மொழிபெயர்ப்பு புத்தகம்.  மொழிபெயர்த்தவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள்.  

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கையின் மேல் மாறாத பற்று கொண்டு, மேலைநாடுகளுக்கு தன் கருத்துக்கள் மூலம் பல மாறுதல்களை உருவாக்கி சாதித்துக் காட்டிய மசானபு ஃபுகோகா எழுதியது.

இவரைத்தான் நம்முடைய இயற்கை வேளாண் அறிஞர் டாக்டர் கோ. நம்மாழ்வார் அவர்கள் தன்னுடைய குருவாக அடையாளம் காட்டுகின்றார்.

இந்த நூலைப் பற்றி  நம்மாழ்வார் கூறியிருப்பது............

எனக்கான என் பாதையை வகுத்துக் கொடுத்த ஞானத் தந்தை மசானபு ஃபுகோகா.  இந்த நூல் பல இரவுகள் என்னை தூங்கவிட்டதில்லை.  இதுவரை நாம் கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்து பெரியதோரு நம்பிக்கையை வழங்கும் வல்லமை கொண்டது இந்த நூல். அயராது சமூகத்திற்கு உழைக்கும் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது. என் தோழர்கள் தமிழில் இதனை வெளியிடுவது கூடுதல் அகமழிச்சியை உண்டாக்குகின்றது.  

நிதானமாக வாசியுங்கள்.  நிறைய நண்பர்களுக்கு பரிசளியுங்கள்.  இந்த நூலை படிப்பதும், பரப்பவதும் என்னைப் பொறுத்தவரை புண்ணியம்.  நானும் நீங்களும் சந்திக்கும் அந்த சந்திப்பில் இயற்கைக்குத் திரும்பும் பாதையைப் பற்றி உரையாடுவோம்.  அதற்காக காத்திருக்கிறேன்.

(தொடர்புக்கு இயல்வாகை பதிப்பகம் 99 65 68 89 020.  805 620 050 53)

2. கோவணாண்டி கடிதங்கள் (விகடன் பிரசுரம்)  

இந்த புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறையும் படிக்கும் போது நடந்த, நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகின்றது. மீண்டும் மீண்டும் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. 

கடித வடிவில் எழுதப்பட்ட ஒவ்வொரு தலைப்பையும் படித்தவுடன் உருவாகும் குற்ற உணர்ச்சி அளவில்லாதது. நாண்டுக்கிட்டு செத்து விடலாம் என்கிற அளவுக்கு நக்கல் நையாண்டியுடன் அரசியல், அதிகாரவர்க்கத்தினரை பார்த்து பல கேள்விகளை எளிய மொழியில் பல உண்மைகளை புட்டுப்புட்டு வைக்கின்றது.

கோவணாண்டி என்ற பெயரில் எழுதுவர் யாரென்று எவருக்கும் தெரியாது. ஆனால் அவர் தன்னைப் பற்றி இவ்வாறு சொல்கின்றார்.

விவசாயிகளுக்கு என்றாவது ஒரு நாள் விடிவு வந்து சேர்ந்திடாதா? என்ற ஏக்கத்துடன் அலையும் ஏகலைவன்.

இந்த புத்தகத்தில் கேட்டுள்ள ஒரு கேள்வி.?

ஒவ்வொரு கட்சியிலும் ஏராளமான பிரிவுகள் உண்டு. மருத்துவர் அணி, இளைஞர் அணி என்று.  எந்த கட்சியிலாவது சுற்றுச்சூழல் அணி என்று ஒன்று உள்ளதா?

3. விவசாயிகளைப் பாதுகாப்போம்.

ஈரோட்டைச் சேர்ந்தவரும், பாரதி வாசகர் வட்டம் என்ற அமைப்பை நடத்திவரும் விவசாயி திரு.  சு. சண்முகவேல் எழுதியுள்ளார். 

இந்திய விவசாயத்தைப் பற்றி படித்தவர்கள் பார்வை வேறு விதமாக உள்ளது. கார்ப்பரேட் தனமாக மாற்றி, மேலைநாடுகளில் உள்ளதைப் போல பண்ணை ரீதியான முயற்சியில், நவீன விஞ்ஞானத்தை புகுத்தினால் மட்டுமே இனி உயிர்பெறும் போன்ற வாதத்தை தனது உண்மையான உருப்படியான ஐந்து நிலை செயல்திட்டத்தினை  நூலாசிரியர் கொடுத்துள்ளார்.  

ஒரு விவசாயி விளைவிக்கும் பொருளை கடைசி வரைக்கும் சந்தைப்படுத்தும் நிலையில் என்ன சாத்தியக்கூறுகள், நமக்கான வாய்ப்புகள், அரசாங்கம் செய்ய வேண்டியது, செய்யாமல் இருப்பது போன்ற அனைத்தையும் படங்கள் மூலம் பட்டவர்த்தனமாக எழுதியுள்ளார். ஆதாரப்பூர்வமான சாத்தியக்கூறுகள்.

இவர் சொல்லியுள்ள அனைத்து வழிகளிலும் சாத்தியமானதே.  

ஆனால் நமது விவசாயத்துறையில் உள்ள அதிகாரவர்க்கத்தினரின் தூக்கம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட லாபங்களை வைத்துப் பார்க்கும் போது இது வெறுமனே கனவாகவே போய்விடுமோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

4. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்.

கோ. நம்மாழ்வார். (புத்தகதொடர்புக்கு 944 25 31 699)

இந்த புத்தகத்தை நண்பர்கள் சிலர் பலமுறை என் பார்வைக்கு கொண்டு வந்த போதிலும் பல புத்தகங்களுடன் அடுக்கி வைக்கப்பட்டதாகவே என் பார்வையில் இருந்தது.  

ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.

குறிப்பாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெயரும் புகழையும் சம்பாரித்துக் கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்து அங்கங்கே லேசாக சுட்டிக் காட்டிக் கொண்டே சென்றாலும் இவரைப் பற்றி இணையத்தில் தேடிப் பார்த்த போது 




எம்.எஸ். சுவாமிநாதனுக்கு மட்டும் ஏனிந்த சிறப்பு. இது குறித்து நம்மாழ்வார் இவரின் பின்புலம், கடந்து வந்த பாதை போன்றவற்றை சுட்டிக்காட்டிக் கொண்டே வருகின்றார்?

நம்முடைய இந்திய ஜனநாயக ஆட்சியென்பது குறிப்பிட்ட சில நிறுவனங்களால் நடத்தப்படுவது. இதுபோன்ற நபர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும் என்பதை இந்த புத்தகம் பல இடங்களில் தெளிவாக புரியவைக்கின்றது.

இந்த புத்தகத்தை படித்து முடித்த போது எனக்கு மற்றொன்று மனதில் தோன்றியது.   

குறிப்பாக அமெரிக்கா என்ற நாட்டை எல்லாவகையிலும் நாம் குற்றம் சாட்டுகின்றோம்.ஒவ்வொரு முறையும் அங்கே அதிபர்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றார்கள். சிலர் இரண்டு முறை அதிபர் பதவியை வகிக்கின்றார்கள். 

ஆனால் அந்த நாட்டின் அதிகாரவர்க்கத்தினரின் கொள்கைகள், நோக்கங்கள் என்பது வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் இருந்து அடிக்கப்படவேண்டிய கொள்ளை என்பதாக இருந்தாலும் அது ஒவ்வொரு சமயத்திலும் கவனமாக பத்திரமாக கொள்கை ரீதியாகவே கொண்டு வரப்படுகின்றது என்பது தான் மகத்தான ஆச்சரியமாக  உள்ளது.

அங்கே அரசியல் வேறு .  நாட்டு நலன் என்பது வேறு.  இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. 

அமெரிக்காவினால் உருவாக்கப்படும் எண்ணெய் அரசியல் என்பது பல நாடுகள் பாதிக்கப்பட்டு அங்கே விழும் பிணங்கள் குறித்து எந்த அமெரிக்கனும் அலட்டிக் கொள்வதில்லை என்பதைப் போல உலகில் உள்ள அத்தனை நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை எப்படி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போன்ற அவர்களின் திட்டங்களை இந்த புத்தகங்களில் உரையாடல் பகுதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

குறிப்பாக 1952  முதல் நம் நாட்டின் விவசாயம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய மற்றும் ஆப்பிரக்க கண்டங்களின் உள்ள வளரும் நாடுகளின் மரபினி மாற்றப் பயிர்களைத் திணிக்க ஐக்கிய அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிறுவனமானது  US AID , US AGENCY FOR INTERNATIONAL DEVELOPMENT விவசாய உயிர்த் தொழில் நுட்ப ஆதரவுத் திட்டம் 2  ABSP - AGRL. BIO-TECHNOLOGY SUPPORT PROJECT II என்ற பெயரில் நிதி உதவி செய்கின்றது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்  மரபினி மாற்று நெல்லை உருவாக்க பலவித நிதி உதவிகளை பெற்று வருகின்றது.

இதில் இரண்டு நிதி உதவிகள் அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேசனிலிருந்து பெறப்படுகின்றது. மரபினி மாற்றுச் சோளத்தை உருவாக்கவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நிதி பெற்றுள்ளது.

துணுக்குச் செய்திகள் போல, தனித்தனி கட்டுரைகளாக நம்மாழ்வார் எழுதியுள்ளவற்றை படிக்கும் போது நான் இந்தியாவில் அமெரிக்காவின் தயவால் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணமும், நான் உண்ணும் ஒவ்வொரு சோறும் அமெரிக்கா கொடுத்த பிச்சை என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.  

அப்படியென்றால் நம்முடைய இந்தியாவின் வேளாண்மை துறை அமைச்சகம், வேளாண் விஞ்ஞானிகளின் உழைப்பு?????????????

5. உணவு நெருக்கடி  வளர்ந்த நாடுகளின் சுரண்டல்

பாரதி புத்தகாலாயம் வெளியீட்டில் சிறிய புத்தகமாக ஏ. பாக்கியம் அவர்கள் எழுதியது. (மொத்த பக்கம் 23) படித்து முடிக்கும் போது நிச்சயம் இரண்டு நாளைக்கு நமக்குத் தூக்கம் வராது.  விலை பத்து ரூபாய் போட்டுள்ளனர். ஆனால் நிச்சயம் இதன் உண்மையான மதிப்பு இதை விட பலமடங்கு அதிகம்.

நாம் இந்தியாவை நம்ம மன்மோகன் சிங் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைத்து விட்டார் என்று போகிற போக்கில் நிலைத்தகவலாக, பதிவுகளாக எழுதி கடந்து போய்க்கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் உலகம் முழுக்க ஏன் வளர்ந்த நாடுகளில் கூட சிறிய நிறுவனங்கள் எப்படி சந்தையில் இருந்து தூக்கி எறியப்படுகின்றார்கள்? 

யார் கையில் உலகத்தின் கட்டுப்பாடு இருக்கின்றது?

நிறுவனங்களின் பின்புலம் போன்றவற்றை இவர் தான் படித்த ஆங்கில கட்டுகளை ஆதாரமாக வைத்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.  

இது போன்ற விசயங்களை எழுதி, படித்து என்ன ஆகப்போகின்றது என்று எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டும் ஒரு நற்செய்தி.  

நம்முடைய ஆசைகளுக்கு எல்லையே இல்லை.  ஆனால் நம் வாழ்வதற்கு தேவைப்படும் உணவு, அந்த உணவை ஏற்றுக் கொள்ளும் வயிற்றுக்கு ஒரு சிறிய எல்லை மட்டுமே உண்டு.  இந்த வயிற்றின் எல்லையைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருந்தபோதிலும் நாம்  கொண்டுள்ள முறையற்ற ஆசைகளே இங்கே பலரையும் வாழ விடாமல் தவிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

எப்பேற்பட்ட வில்லாதி வில்லனும், திறமைசாலிகளும் இறந்த பின்பு தன்னை குழியில் போட்டு புதைக்கும் போது அதை அவனால் பார்க்க முடியாது.

அதையும் ஒருவர் படமாக எடுத்து இணையத்தில் போட்டு இருந்தார்.

ஆனால் ஒவ்வொரு நாளும் அனுபவிக்க உகந்த நாளே என்று நாம் எத்தனை ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றோம்?

மொத்த நாடுகளும் நமக்கு அடிமை என்று ஆட்டம் போட்ட சர்வாதிகாரிகளும், வியாபாரத்தில் லாபம் தான் குறி என்று வாழ்க்கை முழுக்க பணத்தைத் தேடி ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கும் பிணமான பின்பு இந்த வானத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா?

ஆனால் இயற்கை இடைவிடாது தனது பணியை செய்து கொண்டே தான் இருக்கின்றது.



இது போன்ற புத்தகங்களும், பதிவுகளையும் நம் மூளையில் உள்ள நியூரான் நரம்புகளில் பொதிந்து வைத்திருப்போம். இயற்கை ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்து கொண்டே இருந்தாலும் நாம் உணர்ந்து கொள்ள விரும்புவதில்லை.

நம் ஆசைகளே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. வழி நடத்தவும் செய்கின்றது.

எல்லையில்லா இந்த ஆசைகளைப் பற்றியும், ஆசைகளினால் உருவான வளர்ச்சிகளை, இழந்த அமைதிகளையும் உணர்ந்து கொள்ள இது போன்ற புத்தகங்கள் நமக்கு உணர்த்தும்.

காரணம் கடைசியில் நாம் செல்லுமிடமான இங்கே ஒலிக்கும் இந்த பாடலைக் கூட நாம் கேட்க முடியாது. சாம்பலமாக மாறியிருப்போம்.




விதைகள் உறங்குவதில்லை

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை  1

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை   2

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை   3

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை  4


Tuesday, October 16, 2012

புத்தகங்களை நேசிக்காதீர்



இந்த முறை புதுக்கோட்டைக்கு சென்ற போது எனக்காக பல கடமைகள் வரிசையாக காத்திருந்தது. உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய கடமைகள், காலாண்டு விடுமுறையைக் கொண்டாட வந்தவர்களை அழைத்து வர வேண்டியது என்று சொந்த விசயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வேறு இரண்டு முக்கிய கடமைகள் இருந்தது.  25 வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பரை சந்திக்க மற்றும் ஒரு சிற்பபான தனியார் நிர்வகிக்கும் நூலகத்தை பார்க்க வேண்டிய ஆவல்.

ஊரில் பழக்கமான ஒத்த வயது உள்ள நான் கல்லூரிக்குச் சென்ற போது தொழில் நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக்) படித்துக் கொண்டுருந்த நண்பர் தற்போது குன்றக்குடி அருகே உள்ள ஒரு தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் முதல்வராக பணியில் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பு தெரிந்தது.  பள்ளி கல்லூரியில் என்னுடன் படித்த, மற்றும் அறிமுகமான மற்றவர்களின் தற்போதைய நிலைப்பாடுகளை எழுத வந்த பிறகு அதிகம் கவனித்துப் பார்க்கின்றேன். 


ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பிறகு வேறொரு நண்பணிடம் அவரின் அலைபேசி எண் வாங்கி அழைத்த போது ஆச்சரியப்பட்டு போனார். என் நண்பனுக்கு நண்பன். எனக்கு நண்பர். மாலை நேரங்களில் எங்களுடன் படிக்க வரும் போது ஒன்றாக பார்த்து உருவாகிய நட்பு. ஒத்த கருத்து உள்ளவர். தனது கொள்கையில் உறுதிபாட்டுடன் இருந்தவர். எங்களுக்கு விபரம் தெரியாத அப்பொழுதே இறை மறுப்பு கொள்கையில் மிக ஆர்வமாக இருந்தவர். நான் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு காதல் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளேன் என்று அவர் காட்டிய கவிதை கடிதத்தை படித்த போதே எனக்கு பயம் வந்தது. இரண்டு நாட்கள் இவர்கள் பக்கம் தலைவைத்துப் படுக்கவே இல்லை.

காலம் உருவாக்கும் மாற்றங்கள் ஆச்சரியமானது. 

பத்தாவது வரைக்கும் படு மக்காக இருந்தவர் பனிரெண்டாம் வகுப்பில் பட்டையை கிளப்பி ஆச்சரியம் தந்துருக்கிறார். பனிரெண்டு வரைக்கும் நொண்டியடித்தவர் கல்லூரி படிப்பில் கலங்கரை விளக்கம் போல இருந்து அதிர்ச்சியளித்துள்ளார். 

இது போல பலரையும் பார்த்து ஆச்சரியப்பட்டுருக்கேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பனிரெண்டாம் வகுப்பு கணக்கு பாடத்தை அட்டகாசமாக நடத்திக் காட்டிய நண்பன் ஒருவன் இருந்தான்.  ஆனால் விதி செய்த கோலம் அவனால் கல்லூரி வரைக்கும் வர முடியாமல் நெல் அறவை மில்லுக்கு தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்தான். கல்லூரி செல்லும் எங்களை வேதனையுடன் பார்த்துச் சென்ற காட்சி இன்றும் என் மனதில் நிழலாடுகின்றது.

இவர்கள் அனைவரும் நம்மைவிட சூரப்புலியாக கல்லூரிப்பாடங்களில் கலக்குவார்கள் என்று நம்பியவர்கள் அத்தனை பேர்களும் கல்லூரிக்கு வந்த பிறகு கலக்கினார்கள். பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு சோடா சேர்த்து கலக்கினார்கள்.

ஏன் பெற்றோர்கள் பயத்தை உருவாக்கி அதையே ஆயுதமாக்கி வளர்த்தார்கள் என்பதை தற்போது உணர முடிகின்றது. கூடவே தலைமுறை இடைவெளி என்பதும், குழந்தைகள் நம் வாழ்க்கையில் வந்த பிறகு உருவாகும் மாறுதல்களையும் தற்போது உணர முடிகின்றது. 

சுதந்திரம் என்பது கத்தியைப் போன்றது.  கவனமாக கையாள வேண்டும்.

கல்லூரியில் கிடைத்த சுதந்திரம் என்பதன் முழு அருமையை உணராமல் கலக்கியவர்கள் குறுகிய காலத்தில் அழிந்தும் போனார்கள். ஆனால் இதிலும் சில விதிவிலக்குகளை பார்க்க முடிந்தது.  பாடங்களைத் தவிர மற்ற அத்தனை விசயங்களையும் கற்றுக் கொண்டவர் சென்றமுறை காரைக்குடி நகராட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆட்சி மாறியது. வாங்கிப் போட்ட சொத்துக்களுடன் இன்று கௌரவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறார். இன்று வரையிலும் கல்லூரிப் படிப்பில் வைத்திருந்த பாடங்களை எழுதி தேர்ச்சியடையவில்லை. வாழ்வில் சமூகம் எதிர்பார்க்கும் பணத்தில் தேர்ச்சி பெற்று 20 லட்சம் வாகனத்தில் பயணிக்கின்றார். 

இவரைப் போல மற்றொருவர் சாதி அரசியலில் ஆர்வமாக இருந்தார். வளர்ந்தார்.  அதிமுகவில் உள்ள சாதி லாபி இவரையும் வளர்த்தது.  இன்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.  கோடிக்கணக்கான மனைவியின் சொத்துக்களை இழந்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

கல்லூரிக்கு வந்தவன் பாடத்தை படிக்காமல் படிக்க வந்தவர்களை மதம் மாற்றும் வேலையில் இறங்க அத்தனை பேர்களும் அவனைக் கண்டாலே ஓட்டம் பிடித்த கதையும் உண்டு. கடைசியாக அவனை சந்தித்த போது மதவாதிகளால் பாதிக்கப்பட்ட அவன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டான். அவன் பார்த்த கர்த்தர் வேறு. ஆனால் கர்த்தர் எனக்கு காட்டிய மனிதர்கள் வேறு என்பவனிடம் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.

வாழ்க்கை அழகானது. அதே சமயத்தில் கொடுமையானதும் கூட. நாம் அணுகும் விதத்தில் தான் அதன் உண்மையான ரூபங்களை புரிந்து கொள்ள முடியும். 

இது விதிக்கப்பட்ட விதியா?  இல்லை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன நகலா? போன்ற ஆயிரம் கேள்விகளை இன்று வரையிலும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டுருக்கின்றேன்.

கல்லூரியில் நான் கண்ட கேண்டீன் எனக்கு ஆச்சரியமான விசயமாகும்.  உணவகம் என்பது எனது தொடக்க அன்றாட வாழ்க்கையில் சம்மந்தம் இல்லாத ஒன்று.  வீட்டுச்சாப்பாட்டைத் தவிர அவசியமில்லாத வாழ்க்கை வாழ்ந்த எனக்கு கல்லூரியில் இருந்த கேண்டீனும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.  அதைப் போலவே கல்லூரிக்குள் இருந்த நூலகமும்.

ஊருக்குள் நாங்கள் படிக்கும் நூலகத்திற்கும் கல்லூரியில் பார்த்த நூலகத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிந்தது. அழகும், நேர்த்தியும், துறை வாரியான புத்தகங்களும், நூலகம் இருந்த சூழ்நிலையும், இதுவரையிலும் பார்த்தேயிராத பல்வகை தனிப்பட்ட வார, மாத ஆங்கில இதழ்கள் என்று முதல் இரண்டு நாளும் தடவி சுகம் கண்டு வந்து விடுவேன். இது தவிர ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான நூலகமும் இருந்தது.  

எங்கு திரும்பினாலும் புத்தகங்கள்.  எது குறித்தும் புத்தகங்கள் வாங்க முடியும் என்பதே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் பாடங்களுக்குரிய புத்தகங்கள் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்ற வாழ்க்கை மாறி ஒரு விசயத்திற்கு வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக எழுதியிருப்பார்கள் என்பதையே தொடக்கத்தில் நம்பமுடியவில்லை. மனப்பாடம் செய்வது மறந்து மகத்தான் உண்மைகள் ஒவ்வொன்றாக புரியத் தொடங்கியது.

தலையணை அளவு உள்ள அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டு பேரூந்தில் ஊருக்கு வரும் போது ஒலிம்பிக்கில் ஜெயித்து தங்கப்பதக்கம் வாங்கி வரும் பெருமை போல இருந்தது. நம் கையில் இருக்கும் அந்த பெரிய ஆங்கில புத்தகங்களை பார்ப்பவர்களின் பார்வை கூட வித்தியாசமாக இருப்பதாக முதல் வருடம் தோன்றியது.  ஆனால் அதற்குள் முழ்கிய போது நாம் எந்த அளவுக்கு சுருங்கிய நத்தையாகவே பள்ளிப்படிப்பில் வாழ்ந்து வந்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  

கல்லூரி செல்வதற்கு முன் படித்த புத்தகங்கள் அத்தனையும் கதைகள் சார்ந்த புத்தகமாக இருந்த காரணத்தால் கல்லூரியில் இருந்து எடுத்து வரும் புத்தகங்கள் அனைத்தும் தூக்கத்தைத் தான் கொண்டு வந்து சேர்ந்தது. ஆனால் கனவுகள் நம்மை துரத்த அதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கியது.

இது போன்ற பல எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டு நண்பரை அவரின் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரின் வியப்பு எனக்குப் புரிந்தது. வரச் சொல்லியிருந்தார். வருவதாக உறுதியளித்து இருந்தேன். இந்த சமயத்தில் அவரையும் பார்த்து விட வேண்டும் என்பதோடு தற்போதைய கல்வியின் சூழ்நிலையை அருகே சென்று பார்க்கும் ஆவலும் உருவானது. காரணம் நான் படிக்கும் போது பாலிடெக்னிக் என்ற படிப்பு தேவதூதர்கள் படிக்கும் படிப்பாக உயரத்தில் இருந்தது. 

400 மதிப்பெண்கள் வாங்கினால் தான் நினைத்தே பார்க்க முடியும். பத்தாம் வகுப்பில் ஒரு வருடத்தில் நாலைந்து பேர்கள் தான் 400 மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் தற்போது பாதிக்குப் பாதி பேர்கள் 400 மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்.  வீதிக்கு ஒன்றாக பாலிடெக்னிக் மற்றும் பி.ஈ. படிப்புகள் வந்து விட்டது.  மனதில் பல விசயங்களை அலைமோதிக் கொண்டுருக்க முதலில் உறவுகளுடன் உறவாடச் சென்றேன்.

உறவுகள் என்பது தற்போது அலைபேசி உறவுகளாகத்தான் இருக்கிறது. அக்கா, தங்கை, அம்மா என்ற பாரபட்சம் எதுவுமில்லை. நினைத்தால் அழைக்கலாம். பேசலாம். ஆனால் வீட்டில் இருந்தபடியே பழைய நினைவுகளை அசைபோட்டு அலசி காயபோட்டு சண்டை போட்டு விரும்பியதை கேட்டு வாங்கி தினறு ஊரில் நடந்த நடக்கும் கிசுகிசு சமாச்சாரங்களைக் கேட்பது என்பது ஒரு தனிசுகம்.  

குறிப்பாக நாக்கை சற்று நீளமாக வளர்த்து வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் சாப்பாடு மேல் ஒரு தீராத காதல் உண்டு.  அந்த காதலை இந்த முறை நின்று நிதானமாகவே அனுபவிக்க முடிந்தது.  கொறிக்க ஏகப்பட்ட கிசுகிசுக்களும் கிடைத்தது. சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் தற்போதைய நிலவரம் முதல் செத்துப் போன பல் ஆத்மாக்களைப் பற்றியும் விசாரித்து தெரிந்து கொள்ள முடிந்தது.

வெட்டப்பட்ட மரங்களை, வெகு தூரத்தில் உள்ள உறவுகளை, குழந்தைக்கு தவமிருப்பவர்களை, பெற்ற குழந்தைகளை கவனிக்காமல் பொருந்தா காதலில் குறியாக இருப்பவர்கள் என்று பலதரப்பு மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அலசி பேசி விவாதம் பண்ண முடிந்தது. சட்டி பாத்திரம் போல அந்த சின்ன அறைக்குள் பல சங்கதிகளை உருட்டி விளையாட முடிந்தது.

உடன் பிறந்தவர்கள் என்றாலும் வாழும் இடமும், வாழ்க்கைச் சூழலும் அவர்களுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்து விடுகின்றது.  வளராத மனமும், தெரிந்து கொள்ள விரும்பாத உலக நடப்புகளும் ஒன்று சோர்ந்து நமக்கு புதிய உருவத்தை அறிமுகம் செய்து வைக்கின்றது.

உனக்கு ஏன்டா தேவையில்லாத இந்த வேலை? என்று கேள்விகள் நம்மை வரும் போதே நாமும் பல கேள்விகளை கேட்டு விட முடியும்.  ஆனால் அது போன்ற சமயங்களில் அமைதி காப்பதே நாம் பெற்ற அனுபவங்கள் கற்றுத் தந்த பாடமாக இருப்பதால் அத்தனைக்கும் பொறுமை காத்து விடு மனமே என்று கட்டளையுடன் உறவாட முடிந்தது.

ஆனால் நகர வாழ்க்கை என்பது அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாகவும் கிராமம் சார்ந்த நகர வாழ்க்கை என்பது அளவோடு ஆசைப்படு என்பதாக இரு வேறு தளங்களில் இயங்குவதாக என் கண்களுக்கு தெரிகின்றது.

வீட்டில் அப்பா அம்மா புத்தகங்கள் எதுவும் படிப்பவர்கள் இல்லை.  அப்பா நான் பார்த்த கடைசி காலம் வரைக்கும் தினமணி தவிர வேறு எதையும் தொட்டுப் பார்த்ததே இல்லை.  ஆனால் நானும் சரி உடன்பிறந்தவர்களும் சரி ஒரு துண்டு பேப்பரைக்கூட விட்டு வைப்பதில்லை.  பொட்டலம் மடித்து வரும் அழுக்கு காகிதம் கூட எங்களுக்கு வாசிக்க உதவிய தாள்கள் தான். 

இந்த விசயத்தில் தான் வீட்டில் அணைவரும் ஒரே மாதிரியாக இன்று வரைக்கும் இருக்கின்றோம். படிப்பதில் மட்டும் ஆர்வம் குறையவே இல்லை.  ஆனால் படித்த விசயங்களை அசைபோடுவது முதல் ஆழ்ந்து யோசிப்பது வரைக்கும் பலவிதங்களில் மாறுதல்கள் தெரிகின்றது.

படிப்பது என்பது படங்கள் பார்ப்பது போல பொழுதுபோக்கு என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  அதுவொரு தொடர் வேலையல்ல.  பொழுதே போகாத சமயங்களில் படிக்க வேண்டிய புத்தகக்ஙள என்பதாகத்தான் இந்த வாசிப்பு அனுபவத்தை குறிப்பிடுகிறார்கள்.

நண்பர் அறிமுகப்படுத்திய ஒரு எழுத்தாளர் அலைபேசியில் என்னிடம் பேசிய வார்த்தைகள் இன்னமும் மனதில் நெருஞ்சி முள் போலவே குத்திக் கொண்டே இருக்கிறது.

"வீட்டில் 30,000 புத்தகத்திற்கு மேல் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் புத்தகமாகத்தான் இருக்கும்.  பெரும்பாலும் வெளியே கிடைக்காத குறிப்புகள் எடுப்பதற்காக வைத்திருக்கும் புத்தகங்கள் அது.  ஆனால் என் மனைவிக்கு அது குறித்த புரிதல்கள் இல்லை.  எவராவது வந்து பேசும் போது என் கணவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் இது தான் என்று புலம்புவார்.  இதை வைத்து அடுப்பு கூட எறிக்க முடியாது என்று தனது ஆத்திரத்தை கொட்டுவார்.  அமைதியாகவே இருந்து விடுவேன் " என்றார்.

புத்தகங்களை நேசிப்பவர்களின் வாழ்க்கை சொல்லும் அனுபவங்கள் பல. நான்  சந்திக்க சென்ற நண்பரும் புத்தகங்களை நேசித்தவர் தான்.

அவர் தன்னுடைய மாணவர்களுக்கு தன்னுடைய புத்தக நேசிப்பை எப்படி புரியவைத்துள்ளார் என்பதை பார்க்கும் ஆவல் இருந்தது.  குன்றக்குடிக்கு பயணித்தேன்.

மீதி அடுத்த பதிவில்..........

Tuesday, August 21, 2012

பழைய குப்பைகள்


ஊரில் வாழ்ந்த வீடென்பது தோட்டமும் மரங்களுமாய் இருந்த காரணத்தால் எப்போதும் குப்பைகளுக்கு பஞ்சமில்லை, உதிர்ந்த இலைகளும், உதிர்ந்து போக காத்திருக்கும் இலைகளும் சேர்ந்து அடிக்கும் காற்றில் வீட்டை நோக்கி பறந்து வந்து கொண்டேயிருக்கும், திடீரென்று அடிக்கும் காற்றில் எங்கோயோ சுழன்று கொண்டுருக்கும் தூசிகள் எதிர்பாரா விருந்தாளியாய் வீட்டை ஆக்ரமிக்கும், எப்போதும் தூசிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையாகத் தான் இருந்தது,

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் முறை வைத்து கூட்டி பெருக்கிக் கொண்டேயிருந்தாலும் ஏதோவொரு ரூபத்தில் வீட்டுக்குள் ஏதோவொரு இடத்தில் குப்பைகள் இருந்து கொண்டேயிருக்கும்ஏன் இப்படி வீடே குப்பையாய் இருக்கிறது? என்று கேட்கத் தோன்றாது, காரணம் அவற்றை இயல்பான வாழ்க்கையாக எடுத்துக் கொண்ட காரணத்தால் கூட இருக்கலாம்,

விசேட தினங்களில் தான் வீட்டுக்கு புது சுவாசம் வரும், அது வரைக்கும் அந்த தூசிக்குள் தான் நமது சுவாசக்காற்று அலைமோதும், வெளியுலகம் தெரியாத மனதில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை, பெரிதான ஏக்கமும் இல்லைஆனால் காலமாற்றத்தில் நாம் கண்ட ஒவ்வொரு சுத்தமான வீட்டை பார்க்கும் போதெல்லாம் நாமும் இப்படி இருக்க வேண்டும் என்பதாக நினைத்துக் கொண்டே அது முடியாமல் தான் இன்று வரைக்கும் வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கிறது,


எப்போதும் நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதிறகுள் இன்று வரை இருந்து கொண்டேயிருக்கிறது,  வீட்டுக்குள் இருக்கும் சின்ன ஒட்டடைகளை பார்த்து விட்டாலே போதும் நேரம் காலம் தெரியாமல் உடனே குச்சியை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்ய தொடங்கி விடுவதுண்டு, ஆனால் ஓட்டடைகளை சுத்தம் செய்யத் தொடங்கினால கடைசியில் அடுக்கி வைத்துள்ள அத்தனை மூட்டைகளையும் கலைக்க வேண்டியதாக இருக்கும், எதையும் வெளியே தூக்கி போட முடியாமல் கடைசியில் வீட்டுக்குள் பிரச்சனை தான் உருவாகும்வீடு முழுக்க முக்கால்வாசி புத்தகங்களாக அடைந்து கிடைக்கும் போது எதை ஒதுக்கி எதை நீக்குவது என்ற குழப்பத்தில் மீண்டும் ஒவ்வொரு மூட்டைகளும் இருந்த இடத்திற்கே சென்றுவிடும்,

ஆறாவது படிக்கும் போது வாசிக்கத் தொடங்கிய வாழ்க்கையில் கல்லூரி படிப்பு படித்து முடித்த போது தான் காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கும் பழக்கம் உருவானதுகாசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவது என்பது காசை பிடித்த கேடு என்பது வீட்டில் உள்ளவர்களின் தராக மந்திரம்ஆனால் புத்தக காதல் என்பது இன்று வரை மாறவில்லைஎன்ன கற்றுக் கொண்டோம்? இதனால் என்ன பிரயோஜனம்? என்று எதைப்பற்றியும் யோசிப்பதில்லை, வாசிக்க வேண்டும் என்பது மட்டும் கொள்கையாக இருந்ததுஒவ்வொரு காலகட்டத்திலும் வைத்திருந்த கொள்கைகள் மாறியிருக்கிறது, ஆனால் இந்த புத்தக வாசிப்பு என்ற கொள்கை மட்டும் தான் இன்று வரை மாறாமல் அப்படியே இருக்கிறது,

படக்கதைகளில் தொடங்கி, கதைக்கு மாறி, சதைக்கு திரும்பி இன்று கட்டுரைகளில் வந்து நிற்கின்றது, வாசிக்கும் விசயங்கள் தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டுருக்கிறதே தவிர புத்தகங்கள் வாங்குவது இன்று வரை நின்றபாடில்லைஇடையிடையே வேலைப்பளூவின் காரணமாக வாங்கி வரும் புத்தகங்களை படிக்க முடியாமல் மூலையில் கிடந்தாலும் அடுத்த வாரம் கால்கள் இயல்பாக புத்தக கடைக்குச் சென்று விடுகின்றதுபடிக்காமலேயே புத்தகங்கள் இருக்கின்றேதே என்று மனம் கேட்பதில்லை, அடுத்த வார புத்தகமும் வீட்டில் வந்து விழும்ஆனால் மொத்தமாக மெனக்கெட்டு ஒருநாள் உட்கார்ந்து படிக்கத் தொடங்கும் போது கொடுத்த காசுக்கு பிரஜோனமில்லையே என்ற அங்கலாய்ப்பு மனதிற்குள் இருந்தாலும் அதுவும் மாறிவிடும்அப்புறம் எப்போதும் போல ஏதோவொரு குப்பை பத்திரிக்கையை தலைப்பு பார்த்து காசு கொடுத்து வாங்கி வந்து திட்டிக் கொண்டே தூக்கி எறிந்து விடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,

நூலகத்திற்குள் சென்றால் எவர் கையில் எந்த புத்தகம் இருக்கிறது என்பதை கண்டு பிடிப்பதே ஒரு பெரிய சவாலான வேலையாக இருக்கிறது.  அந்த புத்தகத்தை எடுத்து எப்போது படித்து முடித்து வைப்பார் என்பதை கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்நம்மைப் போல மற்றொருவரும் கவனித்துக் கொண்டுருப்பார். இத்தனை தொந்தரவுகளையும் தாண்டி அந்த புத்தகத்தை கையில் எடுக்கும் போது சார் வேலை நேரம் முடிந்து விட்டதுபூட்டப் போகின்றோம் என்று நூலகர் பக்கத்தில் வந்து சொல்லும் போது மனம் வெறுத்துப் போய்விடும்இந்த பஞ்சாயத்துக்கு பயந்து கொண்டே வாரமானால் நூறு ரூபாயை ஒதுக்கி வைத்து விடுவதுண்டுஅந்த வாரத்தில் படிக்காத புத்தகங்களை மறுவாரத்தில் பார்க்கும் போது படிக்கத் தோன்றாதுஇப்படியே கடந்து வந்த பாதையில் என்ன சாதித்தோம் என்று யோசித்துப் பார்த்தால் குழப்பம் தான் அதிகம் மிஞ்சுகின்றது,

தொடக்கத்தில் படித்த வாரபத்திரிக்கையில் முக்கியமான கட்டுரைகள், அற்புதமான துணுக்குத் செய்திகள் என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து படித்து முடித்ததும் கத்திரித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது, அதற்கென்று ஒரு கோப்பு உருவாக்கி துறை வாரியாக பிரித்து வைத்துக் கொள்வதுண்டுஇது எதற்காக இப்படி செய்கின்றோம் என்பது தெரியாமலே பல வருடங்கள் செய்து கொண்டே வந்துருக்கின்றேன்நாமும் எழுதப் போகின்றோம் என்று நினைத்துப் பார்த்ததே இல்லைஆனால் சேகரித்த தாள்களை திடீர் என்று கிடைக்கும் விடுமுறை தினத்தில் ஆர்வமாக ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கும் போது என்சைக்ளோபீடியா போல நம் மனக்கண்ணில் பல பிம்பங்கள் விரியும்பல மனிதர்களின் மேல் வைத்திருந்த அபிமானங்களும் மாறும்நம்மை குருடர்களாக, செவிடர்களாக, பைத்தியங்களாக நினைத்துக் கொண்டு பத்திரிக்கையில் அவரவர் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப கொடுத்த பேட்டிகளை படித்து முடிக்கும் போது இவர் மேல் நாம் இத்தனை அக்கறை கொண்டுருந்தோமா? என்று நமக்கே வெட்கமாக இருக்கும்,

ஆரம்பத்தில் விரும்பிய நடிகை, நடிகர்கள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாறிய பிம்பங்கள் நமக்கு பல பாடங்களை உணர்த்தும், வட நாட்டில் எவருக்கோ இரண்டாம் தாரமாகவோ அல்லது மறைந்து வாழும் வாழ்க்கையென்ற வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் அந்த நடிகையின் மேல் நாம் கொண்டுருநத அக்கறை இப்போது நமக்கும் கேலியாய் பார்த்து சிரிக்கும்என்ன செய்வதுமாற்றம் என்பது மாறாதது தானே