Wednesday, December 14, 2022

தமிழக அரசியல் அசிங்கத்தை மிதித்தது போல.....14/12/2022

14/12/2022

இங்கு திரையரங்க சங்கத் தலைவர் திரு. திருப்பூர் சுப்ரமணியம் அவர்களுக்கு சொந்தமான அதி நவீன வசதிகள் அடங்கிய ஏழெட்டு தொகுப்பு போல உள்ள பல திரையரங்கம் மல்டிப்ளெக்ஸ் வளாகம் இங்கே உள்ளது. அதிக விலை. அதிக வசதிகள். மக்கள் விரும்பிச் செல்லும் அளவிற்குப் பராமரிக்கின்றார்கள்.

முக்கியமான விசேட தினங்களில் 24 மணி நேரத்தில் 23 காட்சிகள் நடக்கும். தனிப்பட்ட நபர்கள் பார்ட்டி போல வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

இதில் தான் வைகோ குறித்த ஆவணப்படத்தை அவர் மகன் வெளியிட்டு திமுக முதல் அவர் கட்சி சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.  எவரும் திரையரங்கம் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வைகோ தான் வாழும் காலத்தில் தான் செய்த பாவம் அனைத்திற்கும் தற்போது தன் கண் எதிரே பார்த்து மனதளவில் நிச்சயம் புழுங்கிக் கொண்டு தான் வாழ்வார்.

மதிமுக கட்சி சார்ந்து தமிழகம் எங்கும் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை காப்பாற்ற  அரசியலுக்குத் தொடர்பே இல்லாத மகனைக் கொண்டு வந்தது தொடங்கி இன்று எவரை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினாரோ அவரிடம் கெஞ்சி ராஜ்ய சபா சீட் வாங்கி தன் இறுதிக் காலத்தைக் கூச்சமின்றி வாழும் வைகோ வின் குணாதிசயம் புதிதல்ல.

அவர் தொடக்கம் முதல் யாருக்குமே விசுவாசமாக இருந்தது இல்லை. அவர் பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது. மனதளவில் சாதி வெறியர்.  அதீத கிறிஸ்துவப் பிரியர்.  மனதில் அடி ஆழத்திலிருந்து இந்து மதத்தை வெறுப்பவர். காரணம் இல்லாமல் காரியம் எதையும் செய்யவே மாட்டார்.  தனக்கு சாதகம் என்றால் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். மோடி முன்னால் மட்டையாய் மடங்கி குனிந்து தீர்த்தம் வாங்கி அருந்தி விட்டு தமிழகம் வந்து மோடியே வந்து பார் என்று முழங்குவார். இது அவருடைய அடிப்படை குணாதிசயம்.

கருணாநிதி குறித்த அனைத்து விசயங்களையும் அவர்கள் குடும்பம் குறித்த அத்தனை விதமான அந்தரங்களையும் பொதுவெளியில் அதிகம் கொண்டு வந்தது வைகோ மட்டுமே.

பெரியார் வாதி என்று வெளியே சொல்லிக் கொண்டு தன் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏசுவின் ஊழியர்கள் என்று வெட்கமின்றிச் சொன்ன மனிதர்.  பைபிள் படிக்காமல் என்னால் தூங்கவே முடியாது என்று அறிவித்தவர்.  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சோனியாவின் கைக்கூலியாக ரா உளவு அமைப்பின் கீழ் செயல்பட்டவர். தனக்குத் துணையாக திருமுருகன் காந்தி என்ற அக்மார்க் குற்றவாளியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு போராட்டத்தை நீர்த்துப் போக வைத்தவர்கள். பல இருட்டான விசயங்கள் உண்டு.

இப்போது கடந்த சில தினங்கள் பொது சிவில் சட்டத்தை நோக்கி ராஜ்ய சபா வில் முழக்கம் எழுப்பி இன்னமும் திருந்தாமல் வாழ்கின்ற வை கோபால்சாமி என்ற வைகோ ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டிய கோவில்பட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசிய பேச்சு, கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

கோவில்பட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை/நான் மாட்டுக்காரன் நான் தான் திமுக குடும்ப கும்பலை எதிர்ப்பேன்

சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி என்று தொடங்கி, தொடர்ந்து திருநெல்வேலி சுற்றிலும் கடைசியில் மார்த்தாண்டம் வரைக்கும் முழுமையாக தேசிய கட்சிகளை மட்டுமே ஆதரித்து வரக்கூடிய மனிதர்கள் இன்று வரையிலும் வாழ்கின்ற மக்களுக்கு வைகோ தன் காலத்தில் எதுவும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை. 

கருணா போல கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தன்னை ஆதரிப்பார்கள் என்று கனவு கண்டவர். நடக்கவே இல்லை.  தன் சாதிக் காரர்கள் கூடத் தன்னை நம்பும் அளவுக்கு அவர் வாழவில்லை என்பது தான் நிஜம். தன் சகோதரர் ரவிச்சந்திரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குப் பெட்ரோல் விற்று சேர்த்த தொகை எத்தனை கோடி என்பதனை கட்சி சார்ந்த மற்றும் அவர் ஊர் சார்ந்த அத்தனை மக்களுக்கும் தெரியும்.

விடுதலைப்புலிகளின் இறுதிக் கட்ட அழிவுக்கு இவரும் ஒரு காரணம் என்பது முற்றிலும் உண்மையாகும்.

வைகோ பேச்சின் மூலம் சொல்லக்கூடிய அனைத்துக்கும் பின்னாலும் அவருடைய அப்பட்டமான பச்சை சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே இருக்கும்.

கருணாநிதி இவரை அடக்க உறவாடிக் கெடுத்தார்.  ஆனால் இவரோ பேசியே அழிந்தார்.  

இவர் சென்ற பாதையில் தான் தற்போது திருமாவளவன் சென்று கொண்டு இருக்கின்றார். அழிவு உறுதி. இவரைப் போலவே பேர அரசியல் செய்த பிரேமலதா, மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் அப்புறப்படுத்தி விட்டால் வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பது பாஜக விற்கு நல்லதொரு அடிப்படைத் தளத்தை உருவாக்கி விடும் என்று நம்புகின்றேன்.

கோவில்பட்டி ஊர் சுற்றிலும் உள்ள பகுதிகளில் காங்கிரஸ் கட்சி அடிப்படை வாக்கு சதவிகிதம் இருக்கும் இப்பகுதியில் இனிவரும் காலங்களில் பாஜக விற்கு அடிப்படை கட்டுமானம் உருவாகும் என்றே நம்புகின்றேன். 

கோவில்பட்டியில் அண்ணாமலை அவர்கள் பேசிய பேச்சைக் கீழே இணைத்துள்ளேன்.  

இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் அசிங்கத்தை மிதித்தது போலவே இருக்கப் போகின்றது.  

அதற்கான அடித்தளம் நாளை முதல் தொடங்குகின்றது. 

அண்ணாமலை போன்ற இளைஞர்கள் இனி வரப்போகின்ற தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை அடைந்து கோட்டை கொத்தளத்தை ஆளும் சந்தர்ப்பம் வரும் சமயங்களில் ஓர் இடம் விடாமல் சுத்தம் செய்து மீண்டும் பூஜ்யத்தில் தொடங்குவார்கள் என்றே நம்புகின்றேன்.

 

No comments: