Thursday, June 03, 2021

ஜுன் 3 சிந்தனைகள்...

ஊழல் என்பது பெருந்தொற்று.

ஊழல் என்பது பரவக்கூடியது.

ஊழல் சமூகத்தைச் சீர்குலைக்கும்.



ஊழல் என்றால் திருடன்.

ஊழல் என்றால் கொடூர வாதி

ஊழல் என்றால் சுயநலம் மிக்கவன்.

இணைய கொத்தடிமைகள் அருமையானவர்கள்

ஊழலை உருவாக்கியவன் முட்டாள்.

ஊழலைப் போற்றுபவன் அயோக்கியன்.

ஊழலை வணங்குபவன் காட்டுமிராண்டி.


ஊழல் சமூகநீதியைக் கெடுக்கும்

ஊழல் சமத்துவத்தைக் குலைக்கும்

ஊழல் சகோதரத்துவத்தை மாற்றும்.


ஊழல் செய்தவன் கடமையைச் செய்ய மாட்டான். 

ஊழல் செய்தவன் கட்டுப்பாடுகளை விரும்ப மாட்டான். 

ஊழல் செய்தவன் கண்ணியமற்ற வாழ்க்கை வாழ்வான்.


ஊழல் சமூக சங்கிலியை உடைக்கும்.

ஊழல் பக்கவிளைவுகளை உருவாக்கும்.

ஊழல் பயங்கரமான பேதங்களை உருவாக்கும்.


ஊழல் மேல் பற்று கொண்டவன் சாதியத்தை வளர்ப்பான்.

ஊழல் மேல் ஆர்வம் கொண்டவன் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிப்பான்.

ஊழல் மேல் அக்கறை கொண்டவன் வார்த்தை ஜாலங்களில் வாழ்க்கையைக் கழிப்பான்.


ஊழல் குறித்து எழுதினால் முட்டாளாகப் பார்க்கப்படுவீர்கள்.

ஊழல் குறித்துப் பேசினால் முடக்கப்படுவீர்கள்.

ஊழலுக்கு எதிராக செயப்பாட்டால் தனித்த முத்திரை குத்தி ஒதுக்கப்படுவீர்கள்.


குடும்பத்திற்குள் ஊழல் இருந்தால் தனி மனித பிரச்சனை.

நிறுவனத்தில் ஊழல் இருந்தால் தொழில் சார்ந்த பிரச்சனை.

நாட்டின் தலைவனிடம் ஊழல் இருந்தால் மூன்று தலைமுறைகளுக்கான பிரச்சனை.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாசிசம் - நாசிசம் பற்றி சரியான பார்வை...!

ஸ்ரீராம். said...

அருமை.