Saturday, June 26, 2021

ஏன் இந்த மாற்றம்?

மதிப்பிற்குரிய அம்மையாரும் இளவரசர் ராகுல் அவர்களின் தாயாரும் முதல் முறையாக அருள்வாக்கு தந்துள்ளார். "காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தங்களைச் சார்ந்தவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்" என்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தொடர்பாக இதுவரையிலும் உருவான நம்பகத்தன்மை குறித்து கேள்விக்குறிகள் இப்போது இல்லை?.

ஏன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவில்லை என்ற ஆர்வம் வடிந்து விட்டது?
அவர்கள் போட்டார்களா? இவர்கள் ஏன் போட வில்லை என்ற ட்விட்டர் களப்பணிகளும் இல்லை?
ஏன் இந்த மாற்றம்?
காரணம் ஒன்றே ஒன்று தான்.
லாம்பாணி அரசியல், காழ்ப்புணர்வு அரசியல், பதிலுக்குப் பதில் அரசியல், பத்திரிக்கையாளர்கள் புடை சூழச் செய்யும் அரசியல், அறிக்கை அரசியல் என்று எதுவும் பாஜக அரசு கடந்த ஏழு வருடங்களாக செய்ததே இல்லை. இனி செய்யவும் செய்யாது.
காரணம் செயல் முக்கியம் என்பதில் மட்டும் தான் கவனமாக உள்ளது என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருங்கள்.
தடுப்பூசி சார்ந்த, கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை சார்ந்த எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மேல் வைத்துக் குற்றச்சாட்டுகள், அவதூறுகள், எழுதக்கூசும் வார்த்தைகள், வாசகங்கள் அனைத்தும் பேசியவர்கள் இப்போது அமைதியாக களத்தைக் கவனிக்கும் அளவிற்கு ஆச்சரியமான மாற்றங்கள் இப்போது நடந்து கொண்டு வருகின்றது.
எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றும் இதனை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில் மட்டும் தான் கவனமாக இருந்தார்கள். மக்களுக்கு எந்த முறையில் தடுப்பூசியைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதில் தொடக்கம் முதல் ஆர்வம் செலுத்தவே இல்லை.
மத்திய அரசு "நாங்கள் இலவசமாக தடுப்பூசிகளை அனைத்து இந்தியர்களுக்கும் வழங்குகின்றோம். மாநில அரசின் நிதிச் சுமையைக் குறைக்கின்றோம்" என்ற அறிவிப்பினை சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது.
என்ன மாறுதல் நடந்தது? நடந்து கொண்டு இருக்கிறது?
கடந்த திங்கள் அன்று இந்தியா முழுக்க 86 லட்சம் தடுப்பூசிகள்,
செவ்வாயன்று 53 லட்சம்
புதன்கிழமை 64 லட்சம்
மற்றும் நேற்று மாலை 6 மணிக்குள் 55.5 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அரசியல் என்பது மக்கள் நலன் சார்ந்து இருக்க வேண்டுமா? மக்களைக் குழம்ப வைத்துப் பயமுறுத்தித் தொடர்ந்து அரசியல் செய்வதா? என்பதனை நீங்கள் தான் யூகித்துக் கொள்ள வேண்டும். Narendra Modi PMO India
May be an image of 6 people, beard and people standing







2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டாம் தடுப்பூசி போடுவதற்கான நாட்கள் மேலும் அதிகமாகுமோ...?

6 மாதம்...?

வாத்தி கம்மிங்... (அலை 3)

ஸ்ரீராம். said...

சீனத் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட்டு இரண்டு நாடுகள் பேசி இருப்பதாக நேற்று செய்தி பார்த்தேன்.