Sunday, June 26, 2011

ராஜாதி ராஜா மகிந்த ராஜா


பெரிய அளவிலான மோதல்கள் 2006 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மீளவும் ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவும் அவரது சகோதரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷேவும் குடிமக்களது பாதுகாப்பில் கரிசனை ஏதுவுமின்ற நாட்டின் வடக்கு கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டுருக்கின்றனர்


நியூயார்க்கில் இருந்து செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டு அறிக்கை இது.  இந்த அறிக்கையை மனித உரிமைக் கழகம் வெளியிட்ட போது மகிந்தா முதல் ஆண்டு ஆட்சிக்காலத்தைக் கூட முடித்து இருக்கவில்லை.  மகிந்தா ஆட்சிப் பொறுப்புக்கு உள்ளே வந்ததும் மிகத் தெளிவாக தொடக்கம் முதலே செயல்படத் தொடங்கினார். காரணம் இது வரை ஆண்டுவிட்டுப் போன எந்த பிரதமர்களுக்கும் அதிபர்களுக்கும் இல்லாத அதிர்ஷட வாய்ப்புகளை நிறைவே இருந்தது. ஒவ்வொருவரும் உருவாக்கி விட்டு பாதியில் சென்ற காரியங்களை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு கனகச்சிதமாக செயல்படத் தொடங்கினார்.


தன் மனதில் வைத்திருந்த ஒவ்வொன்றையும் திட்டமிட்டு நடத்தத் தொடங்கினார்.

ராஜபக்ஷேயின் தந்தையின் பெயர் டான் ஆல்வின் ராஜபக்ஷே, சுருக்கமாக டி.ஏ. ராஜபக்ஷே. இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கிய பண்டாரநாயகாவின் வலதுகரம் போல் செயல்பட்டு விவசாய மற்றும் நிலம் துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர். ராஜபக்ஷேவின் பெரியப்பாவும் பிரபல அரசியல்வாதி. தந்தை இறப்புக்குப் பிறகு ராஜபக்க்ஷே 1969 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு சொற்ப வித்யாசத்தில் ஜெயித்து பாராளுமன்றத்திற்குள் தனது 24 வயதில் நுழைந்து. மிக இளம் வயது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றவர். 

ராஜபக்ஷே 1976 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்தவர். குடும்பத்தினரைப் போலவே அரசியல் தந்திரங்களில் கரைதேர்ந்தவர்.  இடையில் 1977 ல் பெற்ற தோல்விக்குப் பிறகு இவரின் அரசியல் வளர்ச்சி அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த 1989 முதல் ஏறுமுகமாகவே இருந்து அதிபர் பதவி வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது.

இவரின் மனைவி பெயர் ஷிராந்தி விக்ரமசிங்கே. 1978 ஆம் ஆண்டு மிஸ் இலங்கையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். உலக அளவிலான பல அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டவர். 1983 மே 13ந் தேதி  துரத்தி காதலித்து வந்த ராஜபக்ஷேவை மணம் முடித்தார்.  ராஜபக்ஷேவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். அதில் ஒருவர் இப்போது அப்பாவைப் போல வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி.

இலங்கையில் ஆண்ட அரசியல்வாதிகள் நடத்திய பாதயாத்திரையைப் போலவே இவரும் 1992 ஆம் ஆண்டு பிரேமதாசாவிற்கு எதிராக நடத்திக் காட்டிய பாதயாத்திரை தான் இவரின் பெயரை இலங்கை முழுக்க பரப்ப உதவியது. 1994 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கே இவரை தனது மந்திரிசபையில் தொழிலாளர் முன்னேற்றத் துறை அமைச்சராக நியமித்தார். தொடர்ந்து மீன்வளத் துறை அமைச்சரானார்.

ஏற்கனவே சந்திரிகாவுக்கு உதவியாய் பாதுகாப்புத் துறையில் இருந்தது அவரது மாமா. ஆனால் அவரால் விடுதலைப்புலிகளின் திட்டங்களையும் புரிந்து கொள்ளத் தெரியாமல் புலிகளின் வீரத்தினால் பெற்ற அடிவாங்கியது போல் இல்லாமல் தனது தம்பி கோத்தபயாவை பாதுகாப்பு செயலாளராக அமர வைத்தார்.

கோத்தபாய மே 1972ல் இலங்கை இராணுவத்தில் இரண்டாம் நிலை லெஃப்டினன்டாக வேலைக்குச் சேர்ந்தவர். இவரின் முழுப்பெயர் ஜார்ஜ் நந்தசேனா கோத்தபய ராஜபக்ஷே.,  1980 ல் ரெஜிமெண்டின் தளபதியாக உயர்ந்தவர். ஓய்வு பெற வேண்டிய இறுதி காலத்தில் ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து இளம் இராணுவ வீரர்களை உருவாக்கிக் கொண்டுருந்தவர். 1992ல் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுருந்தவர்.

2005 ல் ஆட்சிக்கு வந்த அண்ணணுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவரை மகிந்தா பாதுகாப்புச் செயலாளராக அமர வைத்தார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல ஆட்சியின் தொடக்கத்திலேயே அட்டகாசமாக ஒவ்வொன்றையும் செயல்படுத்த தொடங்கினர்.

மகிந்தா ராஜபக்ஷே ஆட்சியில் அமர்ந்ததும் முதன் செய்த முத்ல் வேலை பாதுகாப்பு மற்றும் நிதித்துறை தன் கையில் வைத்துக் கொண்டது.  அடுத்து யாழ்பாணத் தளபதி சரத் பொன்சேகாவை ராணுவ தளபதியாக்கியது. பொன்சேகா 1970 ல் தரைப்படை வீரராக சிம்ஹா ரெஜிமெண்டில் வேலைக்குச் சேர்ந்தவர்.. 1950 டிசம்பர் 18ல் பிறந்தவர். சந்திரிகா ஆட்சியில் விடுதலைப்புலிகளுடன் நடந்த பல போரில் முக்கிய பங்கு வகித்தவர்.  விடுதலைப்புலிகளின் வீரச்செறிந்த யாழ்பாணத்தில் நடைபெற்ற சமரில் சிக்கி காப்பற்றப்பட்டவர். வடக்குப் பகுதிக்கு தலைமையக தலைவராக செயலாற்றியவர். மகிந்தா ஆட்சிக்கு வந்த சீஃப் ஆஃப் ஸ்டாப் பதவியில் இருந்த போது இவருக்கு முன்னால் வரிசையில் இருந்தவர்களை தள்ளிவிட்டு இவரை மகிந்தா ராணுவ தளபதியாக கொண்டு வந்தார். இவருக்கு அந்த தகுதி இருந்தது என்பதோடு இவரின் கடந்த கால அனுபவங்கள் தனக்கு தேவைப்படும் என்பதோடு தம்பி கோத்தபாயவுடன் ஒன்றாக பணியாற்றிவர் என்ற முறையில் மகிந்தா இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னால் கொண்டு வந்தார். கடைசியாக இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் செய்யும் சம்பிராதய கடமையான இந்தியாவை வந்து பார்த்து குசலம் விசாரித்தது. 


மகிந்த ராஜபக்ஷே, கோத்தபயா ராஜபக்ஷே, சரத்பொன்சேகா.

பிரபாகரன் இதுவரையில் எதிர்பார்ககாத தந்திரம், முரட்டுத்தனம், களமாடிய அனுபவ பெற்ற இந்த புதிய மூவர் கூட்டணி உருவானது

பிரபாகரன் யோசித்த புதியவரான மகிந்தாவுக்கு என்ன தெரியும்? என்ன சாதிக்க முடியும்? என்ற நோக்கம் இங்கிருந்து தான் அடிபடத் தொடங்கியது.  இதற்கு மேலாக மகிந்தாவுக்கு முக்கிய ஆதரவு கொடுத்துக் கொண்டுருப்பது சிங்கள இனவாத கட்சியான ஜேவிபி.. ராஜபக்ஷேவால் அவர்களை பகைத்துக் கொள்ள முடியுமா?  நாட்டின் அமைதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.  தன்னுடைய மாமாவிடம் கற்றுக் கொண்டதை, முன்னால் போட்டுக் கொள்ளும் துண்டை சரிசெய்தபடி உள்ளே அலட்டிக் கொண்டுருப்பவர்களை கணக்கு எடுக்கத் தொடங்கினர்.

இப்போது இவர்கள் கண்களில் முதலில் தென்பட்டது இலங்கை பாராளுமன்றத்திற்குள் வந்து மக்கள் சேவை செய்து கொண்டுருக்கும் தமிழர்களின் ஜனநாயக காவல்ர்கள். 

வேட்டை நாய் போல வேட்டையாடத் தொடங்கினர். 


மட்டக்களப்பு நாடளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 24 2005 ல் நள்ளிரவு மட்டக்களப்பில் கிறிஸ்து பிறப்பு நாள் வழிபாட்டில் கலந்து கொண்டுருந்த போது உள்ளே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு முதல் பலியை தொடங்கி வைத்தனர்.  இவருக்கு அடுத்து  வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் பாராளுமன்ற வேலைக்காக செல்லும் வழியில் ஏப்ரல் 7 2006 சுட்டுக் கொல்லப்பட்ட போது ஒரு பகுதி முடிவுக்கு வந்தது.  நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு பட்டியலில் இருந்த ஆறுமுகம் செந்தில்நாதன்,  யாழ்பாண நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், அம்பாறை நாடாளமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திர நேரு என்று தொடங்கி இவர்களின் வேட்டையாடல் தொடர்ந்து கொண்டுருந்தது. இந்த கண்க்கில் முக்கியமான ஒரு நபர் உண்டு. 


புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் அதிகம் படிக்கப்பட்டுக் கொண்டுருந்த புலிகள் ஆதரவு இணையதளத்தை நடத்திக் கொண்டுருந்த பத்திரிக்கையாளர் தர்மரத்தினம் என்ற தராகி சிவராம்.  ஒவ்வொருவரையும் சுற்றி  வளைத்து உள்வட்டம் வெளிவட்டம் ஒவ்வொன்றின் கணக்குகளையும் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டுருந்தனர்.   வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள ஊடக மக்களை மிரட்டலில் தொடங்கி ஆள் கடத்தல் வரைக்கும் நடந்தேற இதற்கிடையே இராணுவத்தினருடன் சேர்ந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிர் அணியில் இருந்த ஆயுத குழுக்களும் ஆள் காட்டி வேலைகளை செய்து கொண்டுருந்தனர். மேலைநாடுகளின் அழுத்தம் மெதுவாக மேலே வரத் தொடங்கியது.

கோத்தபயாவின் தத்துவம் மிக எளிமையானது.  எதிரிகள் முக்கியம்.  அதைவிட எதிரிகளுக்கு உதவிக் கொண்டுருப்பவர்கள் அதை விட முக்கியம். 

அதையே தொடக்கத்திலேயே கோத்தபயா தெளிவாக செய்ய மனித உரிமைக் கழகம் அறிக்கை விடும் அளவிற்கு வந்து நின்றது.  தனது முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல தன்னுடைய கடமைகளை ஒவ்வொன்றாக ரசித்து ருசித்து கோத்தபயா செய்து கொண்டுவர உள்ளேயிருந்த பத்திரிக்கைகள் கூட மௌனிக்கத் தொடங்கியது.

இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் சிவலோக பதவி.

நார்வே தூதுவர் எரிக் சோல்கைம் பிரபாகரனுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஜெனிவாவில் நடத்தப்படும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதாக விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது.  விடுதலைப்புலிகளின் அறிவிப்புக்கு மகிந்தா அரசு வேறொரு வகையில் பரிசு கொடுத்தது.  விடுதலைப்புலிகளின் மேஜர் கபிலன் சுட்டுக் கொல்லப்பட்டதோடு விடுதலைப்புலிகளின் நடத்திக் கொண்டுருந்த புனர்வாழ்வு கழகத்தின் 3 ஊழியர்களையும் அரசுபடைகளுடன் செயல்பட்டுக் கொண்டுருந்த ஆயுதபடைகள் கடத்திச் சென்றனர். பேசியபடி ஜெனிவா மாநாட்டில் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்றக்கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி கூச்சலிட அணைத்துக்கட்சி கூட்டம் மகிந்தாவால் கூட்டப்பட்டது. பாராளுமன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்க மட்டும் அழைப்பு கொடுக்காமல் சிங்கள இனவாத கட்சிகளை வைத்து கூட்டத்தை நடத்தி கும்மி தட்டி முடித்து வைத்தார்.

கூட்டத்தின் கூக்குரலாக எழுந்த அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் பஞ்சாயத்து செய்து கொண்டுருக்கும் நார்வேயை நீக்க வேண்டும் என்பதோடு முடிவுக்கு வந்தது. மற்றொரு அதிர்ஷ்ட வாய்ப்பு மகிந்தா காதுக்கு செய்தியாக வர அடுத்த கட்ட நகர்வுகள் அப்போது தான் உண்மையிலேயே நகரத் தொடங்கியது.. சரத் பொன்சேகா கொடுத்த தகவலான கருணா உதவியோடு விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியும் என்று முடிவாக காரியங்கள் நடந்தேறத் தொடங்கியது.  

2 comments:

லெமூரியன்... said...

அதென்னமோ நமது தமிழக பாரம்பரியத்தில் மட்டும்தான் துரோக வரலாறுகள் அதிகம் கொண்டதாக இருக்கிறது...
என்னத்த சொல்ல....

தாராபுரத்தான் said...

என்னத்த சொல்ல.......