Saturday, June 25, 2011

ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 1

மற்ற துறைகளை விட அரசியலில் அதிர்ஷடமென்பது கொஞ்சம் கூடுதலாகவே தேவைப்படும் சமாச்சாரம். அதுவும் இந்தியாவில் இந்த அதிர்ஷ்ட சமாச்சாரம் தான் முக்கிய இடத்தை வகிக்கின்றது.  கால், அரை, முக்கால், முழு அதிர்ஷ்டம் என்று ஒவ்வொரு வகையாக பிரிந்து கிடந்தாலும் நாம் இப்ப பார்க்கப்போகும் மன்மோகன் சிங் முழுமையான அதிர்ஷ்ட சாலியே, பிரணாப் முகர்ஜிக்கு கீழே வேலை பார்த்தவரு இப்ப அவருக்கே கட்டளை போடும் பிரதமர் பதவி? சோனியாவுக்கு உள்ளேயிருந்த ஆசையை கடவாய்க்குள் அடக்கி வைத்தேயிருக்க வேண்டிய சூழ்நிலை. 

இதை.  என்ன சொல்வீங்க?

மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த விசயம் சோனியாவிற்கு மட்டுமல்ல மொத்த அமெரிக்க தொழிலதிபர்களுக்குமே சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

காரணம் திருவாளர் மன்மோகன் சிங் படித்தவர், பண்பாளர், திறமையானவர் என்பதெல்லாம் விட தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதலை அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பவர்.  சுருக்கமாகச் சொல்லப்போனால் கடைத் தேங்காயை எடுத்து வழியில் பார்க்கும் பிள்ளையாருக்கு உடைக்கும் பக்தி மான்.

அக்மார்க் அமெரிக்கா பக்திமான்.

உலகமே வேறொரு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் ஏன் தனிமைப்பட்டு நிற்கவேண்டும் என்பதை தனது தீர்க்க தரிசன பார்வையில் கண்டு கொண்டு ஆட்சிக்கு வந்த சித்தர்.


இவர் ஆட்சிக்கு வந்த போது இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள கடல்புலிகள் கன்னாபின்னாவென்று வளர்ந்து இருந்தார்கள். இலங்கையில் பெரும்பாலான கடல் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு ஜீவதாரமாக இருந்தவர்கள்.  முக்கியமாக விடுதலைப்புலிகளுக்கு வந்து கொண்டிருக்கும் ஆயுதக்கப்பல்கள் அத்தனையும் நினைத்த நேரத்தில் விரும்பும் இடத்தில் நிறுத்தி தங்கள் பகுதிகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் அளவுக்கு வலுவானவர்களாக கடல்புலிகள் இருந்தார்கள்.  இந்திய உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசாங்கம் இதைத்தான் முக்கியமானதாக எடுத்துக் கொண்டது.

2004 ல் இந்திய கப்பற்படை தலைவராக பதிவியேற்ற அட்மிரல் அருண் பிரகாஷ் தன் முதல் வேலையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கடற்புலிகளை அடக்குவது குறித்த ஆலோசனைகளை இலங்கை கப்பற்படையுடன் பேச்சு வார்த்தை மூலம் பல புதிய திட்டங்களை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது.  இப்போது இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  எந்த நாடாவது இந்தியாவுடன் ஒரு தொழில் ரீதியான ஒப்பந்தம் போட்டு அது செய்தித் தாளில் வருகின்றதென்றால் அதற்குப் பின்னால் ஒரு பெரிய லாபச்செயல் இருக்கிறது என்று அர்த்தம். இரண்டு நாடுகளுக்குமே அந்த லாபம் இருக்கும்.  இது தான் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே.

இப்போது மன்மோகன் சிங் அரசாங்கம் 2004 அக்டோபர் 15ந் தேதியன்று இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது.  அதாவது இலங்கைக்கு 15 கோடி டாலர் கடனாக இந்தியா கொடுப்பதாக அந்த ஒப்பந்தம் கூறியது. இதன் மூலம் இலங்கை இந்தியாவிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். அதன் பிறகு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் சிரில் ஹெராத் தும் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரஞ்சித் இஸ்ஸாரும் அக்டோபர் 18 அன்று சந்தித்தனர். அக்டோபர் 19 பூனைக்குட்டி வெளியே வந்தது.  அது அறிக்கையாக வெளியே வந்த போது பின்வருமாறு இருந்தது.

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி

தமிழ் போராளி இயக்கங்களைப் பற்றி உளவு சார்ந்த விசயங்களை இரு நாடுகளும் பறிமாறிக் கொள்வது.

இருநாடுகளையும் பாதிக்கக்கூடிய சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளை கூட்டு நடவடிக்கைகள் மூலம் கண்காணிப்பது.

இதன் தொடர்ச்சியாக இருநாடுகளும் பல விதமாக கூட்டு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வது.

இது தான் அதன் சராம்சம்.

இந்த அறிக்கை வெளியானதும் இந்தியாவின் ராணுவத் தளபதி என்.சி.விஜ்
2004 நவம்பர் 1 அன்று இலங்கை சென்று பத்திரிக்கையாளர்களிடம் சொன்ன வாசகங்கள் இது.

இப்போது இலங்கை அமைதியான காலகட்டத்தில் இருந்த போதிலும் இரண்டு நாடுகளுக்கும் இராணுவ ரீதியான பறிமாற்றம் அவஸ்யம் தேவை.  இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பதும், ஆயுதப்பறி மாற்றமும் முக்கியமாகும். என்றார்.  இலங்கையில் இருந்து அவமானகரமாக இந்திய அமைதிப்படை திரும்பியதற்குப் பிறகு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இருந்து சென்றவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


இந்தியா இராணுவத் தளபதி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது சந்திரிகா டெல்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை 2004 நவம்பர் 3 -7 அன்று சந்தித்தார்.  ஏற்கனவே வாங்கிய தொகையுடன் இப்போது மன் மோகன் சிங் தனது அடுத்த அன்புப்பரிசை அதாவது இலங்கையின் ஊரக வளர்ச்சிக்காக 10 கோடி டாலரை வழங்குவதாக அறிவித்தார். சந்திரிகா இப்போது வந்தது வெறுமனே கடன் வாங்க மட்டுமல்ல. கண்களை உறுத்திக் கொண்டேயிருக்கும் புலிகள் இயக்கத்தை ஒரு கை பார்த்து விட வேண்டும் என்பதன் ஆதாரப்புள்ளியையும் இங்கேயிருந்து தான் தொடங்கி வைத்தார்.  சந்திரிகா கரைத்த விதத்தில் மன் மோகன் சிங் மூலம் அடுத்த அறிக்கை வெளியானது.

இலங்கைக்குத் தேவைப்படும் அனைத்து விதமான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கும்.  வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள விமான தளங்களை இந்தியா சீரமைத்து கொடுக்கும். விடுதலைப்புலிகளின் கடற் போக்குவரத்தையும், கடல்புலிகளின் செயல்பாடுகளையும் இந்தியா கவனித்து இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும். இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து இடப்படும் என்று அந்த அறிக்கை சொன்னது.

ஏன் இரண்டு நாடுகளும் விடுதலைப்புலிகளின் கடல்புலிகளை குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.  அது தான் பிரபாகரன்?  கடல்புலிகள் வலுவாக இருந்த பகுதிகளுக்குள் சிங்கள கப்பற்படை மறந்தும் கூட நுழைந்து விட மாட்டார்கள்?  அவ்வளவு மரியாதை என்றால் நீங்களே யூகித்துக் கொள்ளுங்க.  இதன் சார்ந்த மற்ற விசயங்களை பின்னால் பார்க்கலாம்.


இதே சமயத்தில் அதாவது 2004 மார்ச்சில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா வெளியேறினார்.  ஒவ்வொரு தமிழர்களும் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அளவுக்கு தன் திறமையைக் காட்டிய  தானைத்தலைவன் மகிந்தா ராஜபக்ஷேவும் இப்போது களத்திற்கு வந்து விட்டார்.

11 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

இதுவரை என் அறிவுக்கு எட்டியிறாத எத்தனையோ தகவல்களை உங்கள் கட்டுரைகளிலிருந்து பெற்றுக்கொள்கிறேன், ஜோதிஜி.

லெமூரியன்... said...

இந்திரா காந்தி கொலைக்கு பதிலாக கொன்று குவிக்க பட்ட சீக்கியர்களுக்கு
பயந்து சோனியா செய்த சித்து வேலையே மன்மோகன் சிங் பிரதமர் பதவி...
ஆனால் மன்மோகன் சீக்கிய இனத்திற்கு அவப்பெயரை தேடி தரும் வேசி மகனாகவே
வேலைகள் செய்து கொண்டிருக்கிறான்...
இந்திய உளவுத துறை ஏற்கனவே மலையாள வேசி மகன்களால் நிரம்பி வழிகிறது....
நான் ஏற்கனவே உங்களுக்கு இட்ட பின்னூட்டம் போலவே...
தமிழகம் இந்தியாவோடு இருக்க வேண்டுமா என ஐ நா அமைப்புகுட்பட்ட சட்டதிற்கேற்ப வாக்கெடுப்பு நடத்தி
உலகிற்கு நாம் யார் நமது தேவை என்ன என்பதை விளக்க வேண்டும்...
தேவை பட்டால் சீனாவோடு அணு ஆயுத தாக்குதல் நடத்தமாட்டோம் என்ற ஒப்பந்தம் போட்டு நமது தாய் நாட்டை காக்கும் பணியை ஏற்க வேண்டும்
மேலும் இந்தியாவோடோ அல்லது உலகின் வேறெந்த நாட்டுடுனோ போர் ஏற்படும்பொழுது நமது சென்னை துறைமுகைதை பயன்படுத்த சீனாவிற்கு அனுமதி கொடுக்க வேண்டும்...
பதிலுக்கு நமது அணு மின் நிலையங்களை சீனா தாக்கத வாறு ஒப்பந்தம் இடவேண்டும்...
மேலும் சீனாவிடம் திரிகோணமலையை எடுத்துகொள்ள அனுமதித்து தனி ஈழம் அமைக்க சாத்தியம் உண்டா எனவும் சோதித்து பார்க்க வேண்டும்...
இந்தியா வேசி மகன்களால் நிறைந்த நாடு...
நமக்குள்ளயே காட்டி கொடுத்தும் கூடி கொடுத்தும் வாழும் வேசி மகன்கள் நிறைந்த பாவப் பட்ட பூமி இது ..
இங்கு நாம் பிழைக்க வேண்டும் நமது இனம் தலைதொங்க வேண்டுமானால் நாமும் மற்றைய இனங்களை போல(மலயாளிகள மற்றும் வட இந்தியர்களை போல) காட்டி கொடுக்கவும் கூட்டி கொடுக்கவும் பழக வேண்டும்

ஜோதிஜி said...

மிக்க நன்றி சத்ரியன் ரத்னவேல் அய்யா. தொடர் வாசிப்புக்கும் உங்களுடைய கருத்துக்களுக்கும்.

லெமூரியன் பொங்கிட்டீங்க? சமீபத்தில் வந்த ஒரு குழும மின் அஞ்சலை உங்களுக்கு பதிலாக தருகின்றேன்.

ஜோதிஜி said...

தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்! கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்.

முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும் இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி! கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும் நானுமே இதற்குக் காரணம்!

தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்! உறிகிறார்கள்! நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன் மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!

மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே! நமது மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை அவர்கள் நடத்தும் விதம் அடிமையினும் கேடு கெட்டது! ஆனால் நாமோ தமிழகத்தில் அவர்களின் நிறுவனங்களுக்குச் சென்று பொருள் வாங்கி, சாயா குடித்து கொழுக்க வைக்கிறோம்! சிந்தியுங்கள்

என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.
‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ஜோதிஜி said...

அவர்கள்:

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

Unknown said...

கடைசி குரூப் போட்டோவுல புத்தர் மாதிரியே போஸ் கொடுக்கறாங்களே, அதைத்தான் என்னால தாங்க முடியலை :-(

ராஜ நடராஜன் said...

நுண் தகவல்கள் எங்கிருந்து பிடிக்கிறீங்க?அசத்தல்.

Anonymous said...

Dear Tamilians, Keralites occupy this position because of their hardwork, talent and their will to go anywhere, work anywhere. Why dont you learn some of the positive qualities from your neighbours instead of always quarrelling and fighting with others for unreasonable causes! Learn fro your mistakes.

Anand said...

@ Anaony

Are people does not work hard?

Anand said...

@ Anony.
Sorry.
Are the people from other states do not work hard. Malayali are more cunning.