Sunday, January 03, 2010

இந்திய உழவும் (RAW) உலக உளவும் (CIA)

உழவு என்ற சொல் மனிதனை நாகரிக வாழ்க்கைக்கு விரைவாக மாற்ற உதவியதாகவும், அதே சமயத்தில் அவனை வேகமாக முன்னேறவும் வைத்தது. ஆனால் உளவு என்ற சொல் மொத்த நாகரிகத்தையும், தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல மொத்த நாடுகளின் மறைமுக விரைவான வீழ்ச்சிக்கும் காரணமாக அன்றும் இன்றும் இருக்கிறது.

மன்னர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்த எந்த மனித கூட்டத்திற்கும் இந்த உளவு அவஸ்யமானதாய் இருக்கவில்லை.  உழவு அதன் தொடர்ச்சியாக உழைப்பு.  ஓய்வு அதன் பிறகு சிறப்பு என்று சிரித்து வாழ்ந்த கூட்டம்.  அவர்கள் வாழ்க்கையில் எந்த பொய்யும் இல்லை.  அடுத்தவரை கண்டு கொள்ள வேண்டிய அவஸ்யமும் தோன்றவில்லை.  வஞ்சகம் இல்லாமல் வாயாற உண்மையை மட்டும் சுவைத்து வாழ்ந்த கூட்டமது.  ஆனால் ஆட்சி, அதிகாரம், அதிகார வர்க்க சார்பாளர்கள் என்று ஒவ்வொன்றாக நாகரிக வாழ்க்கையில் உருவாக, மாற்றம் பெற இந்த உளவு என்ற சொல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.  காலப்போக்கில் ஒவ்வொரு நாடும் இந்த உளவுத்துறை மூலமாகவே வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெற ஆரம்பித்து விட்டது.

" தன்னுடைய வளர்ச்சி முக்கியம்.  அதே சமயத்தில் சார்ந்தவர்களின் வளர்ச்சி முடக்கப்பட வேண்டுமென்பது அதைவிட முக்கியம்"


இன்று எல்லாவிதங்களிலும் மனித நாகரிகம் வளர்ந்து விட்டது என்று நமக்கு நாமே பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டுருக்கும் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும் ஏன் இராணுவத்திற்கு இத்தனை கோடிகளைக் கொண்டு போய் கொட்டுகிறது.  ஏன் தினம் அச்சப்பட்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக சக்திகள் என்பவர்களை மீறியும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த கண்களுக்கு தெரியாத நபர்கள் ஏன் ஆட்சி செலுத்துகிறார்கள்.  இன்றைய பாகிஸ்தான் பரிதாப நாடாக மாற்றம் பெற முக்கிய காரணம் என்ன?

அமெரிக்கா என்பது வெளியே இருந்து பார்க்கும் போது முதலாளித்துவ ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மேல் உடையும் உள்ளே உள்ள வெளியே தெரியாத ஆடையும் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

இலங்கையுடன் சம்மந்தப்பட்ட சில நாடுகளின் உளவுத்துறைகளையும், பிரிவுகளையும் வாசித்து பார்த்துவிடலாமே?  காரணம் இனி வரும் மொத்த இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களும் இந்த உளவு திருவிளையாடலும், உள்ளே உள்ள தமிழர்களின் ஒற்றுமையின்மையும் என்று ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வாழ்ந்த கதையைத் தான் பார்க்க வேண்டும்?

இலங்கை
Civil 
State Intelligence Service (SIS)


Military 
Directorate of Military Intelligence

இந்தியா
National Investigation Agency (NIA) என்ஐஏ


Central Bureau of Investigation (CBI) சிபிஜ


Intelligence Bureau (IB)  ஐபி


Research and Analysis Wing (RAW) ரா

இஸ்ரேல்
ha-Mossad le-Modiin u-le-Tafkidim Myukhadim (Mossad)  மொஸார்ட்

பாகிஸ்தான்
Inter-Services Intelligence (ISI)  ஐஎஸ்ஐ


Military Intelligence (MI) 


Intelligence Bureau (IB) 


Federal Investigation Agency (FIA) 


CIA -POLICE(Special Branch) (CIA)

இங்கிலாந்து
Secret Intelligence Service (SIS or MI6) 


Security Service (colloquially MI5) 


Government Communications Headquarters (GCHQ)

அமெரிக்கா
Central Intelligence Agency (CIA)  சிஜஏ


Defense Intelligence Agency (DIA) 


National Security Agency (NSA) 


Federal Bureau of Investigation (FBI)

சீனா
Ministry of State Security (MSS)

RAW ரா தலைமை அலுவலகம் புதுடெல்லி
அரசியல், வணிகம் என்று தொடங்கி இன்று ஆன்மிகம் மற்றும் தனிமனிதன் வரைக்கும் அத்தனை இடங்களிலும் நீக்கமற வியாபித்துள்ளது.  பில்கேட்ஸ் முதல் அம்பானி வரைக்கும், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரைக்கும், இங்கிலாந்து முதல் இந்தியா வரைக்கும், அமேசான் பழங்குடி போராட்டங்கள் முதல் மாவோயிஸ்ட் வரைக்கும் என்று பல திசைகளிலும் நீங்கள் பட்டியில் இட்டுக்கொண்டே போகலாம்.

சமூகநீதி, சமஉரிமை, பாரபட்சமில்லாத பங்களிப்பு என்று இன்று அத்தனை வளர்ந்த நாடுகளும் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளுக்கு போதனைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.  ஆனால் அவர்களின் சுயபாதுகாப்பு என்பது அத்தனை பொக்கிஷமாய் போற்றி பாதுகாத்துக்கொண்டு பொய்மையாய் மாயக்கோட்டையாய் அத்தனை கெட்டியாக பாதுகாப்பது ஏன்?

இன்று உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் போய் நின்றாலும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான CIA என்ற வார்த்தை ஒன்று மந்திரம் போல் உசுப்பும்.  அல்லது விழியை மருளச் செய்யும்.  இரண்டே வழிமுறை.  "அடிபணிந்து விடு.  இல்லாவிட்டால் அழிந்து விடு".  கவிழ்த்த ஆட்சிகள், அழித்த தலைவர்கள் என்று தொடங்கி கொசு நுழைய முடியாத இடத்தில் கூட உள்ளே நுழையும் வல்லமை பெற்றவர்கள்.  ஒரே காரணம் அவர்களின் திறமை குறைவு.  ஆனால் விசுவாசமாய் மாற காத்துருப்பவர்கள் அதிகம்.

இஸ்ரேல் மொஸார்ட் முதல் இந்தியாவின் சிபிஜ,ஐ,பி,ரா என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு உளவு நிறுவனம்.  கண்காணிப்பது மட்டுமல்ல, முடிந்தால் கலவரத்தையும் உருவாக்கு.  தொத்தல் நாடுகள் கூட விதிவிலக்கல்ல.

அமெரிக்கர்கள் என்றும் அமெரிக்கர்கள்.  ஆனால் பிற எந்த நாட்டினரும்,  எந்த நாட்டிற்குள் சென்றாலும் பிரிந்து நின்று தன்னை தனியாக காட்டிக்கொள்வதற்கு ஏராளமான காரணிகள் உண்டு.  மதம்,இனம்,பணம்,ஜாதி,ஆசைகள், பலவீனம் என்று தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கும்.

மொத்த அரேபிய தேசமும் ஒன்றாக இணைந்தால்?  ஓரே நுழைவு வாயில் வழியாகத்தான் எண்ணெய் வர்த்தகத்தை அவர்களுக்கு இடையே உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு மூலம் கொண்டு வந்தால் என்ன நடக்கும்?  ஓரு வருடத்திற்குள் எவர் வேண்டுமானாலும் அமெரிக்காவிற்கு விசா இல்லாமல் வரலாம் என்று கடையை விரித்து வைக்கலாம்.

ஒருவர் மற்றொருவருடன் சேராத வரைக்கும், சேர முடியாத காரணிகளை உருவாக்கி வைத்திருக்கும் வரைக்கும் அமெரிக்கா மட்டுமல்ல தற்போது பாவ்லா காட்டிக்கொண்டுருக்கும் எந்த நாடும் வல்லரசு தான்.  இன்றும் என்றும்?  தான் வளர்வது எத்தனை முக்கியமோ அதைப்போல மற்றவர்களை வளர விடாமல் தடுத்து வைத்திருப்பதும், தனக்கு கீழே வைத்துருப்பதும் அத்தனை முக்கியம்.  அதனால் தான் ஒவ்வொரு நாடும் உளவு நிறுவனங்களையும், ஆள்காட்டிகளையும் உருவாக்கி மற்ற நாடுகளை முடிந்தவரைக்கும் உருக்குலைத்துக்கொண்டே இருக்கிறது.

வளர்ச்சி என்பது திறமை என்பதாக இருந்தால் ஏன் மற்ற நாடுகளின் மேல் இத்தனை அக்கறை?  ஆட்சிக்கு வருபவர்கள் என்பவர்கள் அந்த ஐந்து வருடங்கள்.  ஆனால் ஆட்சியாளர்களையும், என்றும் ஆண்டு கொண்டுருக்கும் அதிகார வர்க்கத்தையும் என்றுமே தங்களுடைய பிடியில் வைத்திருக்கும் கார்ப்ரேட் கணவான்களின் ஆசை, விருப்பம்,நோக்கம் என்பதில் தொடங்குவது தான் பல நாடுகள் பாதாளத்தில் போய் விழுவதும், பல வாழ்வுரிமைப் போராட்டங்கள் பள்ளத்தில் தள்ளி மூடப்படுவதும் என்பதில் முடிந்து விடுகின்றது.

நீங்கள் பருகும் ஒரு பாட்டில் கோக், விரும்பி தேய்த்து குளிக்கும் சோப், விரும்பும் வாசனை திரவியங்கள் அத்தனை முகம் தெரியாத உலகத்தை தங்கள் கைபிடிக்குள் வைத்துருக்கும் முதல் நூறு பணக்காரர்களுக்கு உங்களை அறியாமலே அவர்களின் சொத்துக்களையும் ஆசைகளையும் அதிகப்படுத்திக்கொண்டுருக்கிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியுமா?

ஒரு கோக் நீங்கள் வாங்கும் போது இங்கே உள்ள காளிமார்க் பானத்தின் தொழிற்சாலையின் செங்கல் மெதுமெதுவாக உருவப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதுண்டா?.  அந்நிய மூதலீடு இல்லாமல், வளர்ச்சி அடைந்த நாடுகளின் உதவி இல்லாமல், அவர்களின் விஞ்ஞான கருவிகள் இல்லாமல் நாம் வாழ முடியுமா? என்ற உங்களின் குதர்க்கத்தனமாக கேள்வியும் கேலியும் புரிந்தாலும் அந்த கார்ப்ரேட் கணவான்களின் ஆசைக்காக, தேர்ந்தேடுக்கப்படும் ஜனநாயகவாதிகள், அதிகாரவர்க்கங்கள், ஆள்காட்டிகள், கைகூலிகள், என்று தொடங்கி உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளையும் தங்கள் கண் அசைவில் அவர்கள் வைத்துருக்கும் வித்தையை உங்களால் உணர வாய்ப்பு உள்ளதா?


அரசாங்கத்தின் உளவு என்பது நாட்டின் வளர்ச்சியை விட மற்றவர்களின் வீழ்ச்சியை விரைவு படுத்துவது.  தனி மனித கார்ப்ரேட் கண்வான்களின் அடியாள் பட்டாளங்கள் என்பது உலகமயமாக்கல் என்ற தத்துவத்தை பரப்பி தன் வலைக்குள் வீழ்ந்த நாடுகளை எழ முடியாமல் என்றும் வைத்துருப்பது.  இந்த இரண்டு தண்டவாளத்தில் தான் உலக உருண்டையில் உள்ள 70 சதவிகித நாடுகள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

1948 முதல் கடந்த 60 ஆண்டுகளில், இலங்கையில் இன்றைய சீனா போல் வேறு எந்த வெளிநாடுகளும் இப்போது போல அப்பட்டமாக ஆளுமை செலுத்தவில்லை.  மின்திட்டம், சாலைவசதி,இராணுவ உதவி என்று தொடங்கி காலவரையற்ற கடன் ஒப்பந்தங்கள் வரைக்கும் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  காரணம் என்ன?

அதே போல் நேரு தொடங்கி இன்று மன்மோகன் சிங் வரைக்கும் இன்று போல் இலங்கைக்கு இத்தனை ஆதரவாக இருந்தது இல்லை?

தனிமனிதர்கள் சேர்ந்த கூட்டமென்பது நாடாக நீங்கள் நினைத்தால் அது தவறு.  தகுதியானவர்களின் ஆசைப்படி ஆள நிணைப்பதன் தொடக்கம் தான் ஒரு நாட்டிற்கும் இன்னோரு நாட்டுக்கும் வெளியே தெரியாத, சொல்ல முடியாத, காட்டிக்கொள்ளாத புரிந்துணர்வு.

இத்தனை தமிழர்களை கொன்று குவித்தும் ராஜபக்ஷே மேல் ஏன் இன்று வரைக்கும் எந்த நாடும் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை.  நீங்கள் மேலாதிக்க சக்தி என்றால், உங்கள் மூலம் எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தால் உங்களின் தேவையை அங்கு நிறைவேற்ற காத்துக்கொண்டுருப்பார்கள்.  வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள்.  வா வா என்றழைக்கும் ஆசை சார்ந்த விசயங்கள் என்று ஏராளமான மறைபொருள் உண்டு.

தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட ஆலை, ஊடகம், மென்பொருள் அதிபர்கள் அத்தனை பேர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் மூதலீடு செய்து இருப்பதும், அதற்கான பரஸ்பர நல்லெண்ண உடன்படிக்கைகள், பெற்ற ஆதாயங்கள், இடைத்தரகர்கள் என்று ஏராளமான பட்டியல் உண்டு.  இந்தியா என்ற நாட்டிற்கு இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட இது என்றுமே இந்தியாவிற்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் கூட விரோதியாக மாறிவிடக்கூடாது என்ற உள்ளார்ந்த அர்த்தம் தான் இத்தனை உதவிகளும்.

திம்பு பேச்சு வார்த்தை, ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் என்று மேம்போக்காக நாம் ஊடகத்தில் தலைப்பு செய்திகளில் வாசித்து விட்டு கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறோம்.  ஆனால் அதற்குப் பின்னால் உள்ள அசுரத்தனமான உளவுத்துறையின் உழைப்பும், மிரட்டலும், அச்சப்படுத்துதலும் என்று தொடங்கி மொத்த இலங்கை வாழ்வுரிமை போராட்டங்களை அல்லோகல்லப்படுத்திய விவகாரங்கள் அத்தனை முடைநாற்ற வகையைச் சேர்ந்தது.

இதையெல்லாம் ராஜதந்திரம் என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி விடுகிறார்கள்.  ராஜாவும் இல்லை.  ராஜ்யமும் இல்லை.  வெறும் தந்திரங்களை வைத்துக்கொண்டே இலங்கை ஆட்சியாளர்கள் இன்று வரைக்கும் வளர்ந்து மொத்த தமிழினத்தை மூடுகுழி போல் ஆக்கிவிட்டார்கள்.  ஆனால் இன்றும் இந்தியாவில் இலங்கை என்பது மிரட்டும் அன்புத்தம்பி.  இந்தியா என்பது பயந்த பெரியண்ணன்.

ஒவ்வொரு நாடும் தன்னுடைய மேலாதிக்கத்தை, பிராந்திய நலத்தை, வணிகம் சார்ந்த எதிர்கால முன்னேற்பாடு திட்டங்களை காரணத்தை பின்னால் வைத்துக்கொண்டு அத்தனை தந்திர வலைகளை வீசிக்கொண்டே முன்னேறி வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்தியா, மறுபக்கம் சீனா.  இடையில் பாகிஸ்தான், ரஷ்யா,அமெரிக்கா என்று நீண்ட பட்டாளங்கள். நரி பஞ்சாயத்து செய்து கொடுத்த அப்பம் போல் கொடுத்துக்கொண்டுருக்கும் இலங்கை இன்னும் சில ஆண்டுகளில் முழிக்குமா? மூழ்கி விடுமா என்று தெரியவில்லை.

42 comments:

ஜோதிஜி said...

புதிய ஆண்டு. புதிய சிந்தனைகள். புதிய மாற்றங்கள். வாழ்க. வளர்க. வருக.

லெமூரியன்... said...

அருமையான இடத்தை தொட்டிருக்கிறீர்கள்...........தோண்ட தோண்ட அசிங்கமாக நிறைய வெளி வரும்........அதிலும் குறிப்பாக மலையாள வேசி மகன்கள் நிறைந்த வேசிக் கூட்டம் தான் இந்திய உளவுத் துறை...சுயப் புத்தி இல்லாமல் சொல் புத்தியும் இல்லாமல் திரிகிற கர்வ கூட்டம் இவர்கள்..........இவர்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்து இன்று தமிழகத்தை மிகப் பெரிய பேராபத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள்.............ஏற்கனவே பாதி தமிழினத்தை இலங்கையில் கொன்றழித்து விட்டார்கள்.........வல்லரசு என்று வெளியே சற்று பயம் கலந்து மார் தட்டி கொண்டாலும்.....ஆசியாவின் உண்மையான வல்லரசு என்னவோ தற்பொழுது இலங்கைதான் என தோன்றுகிறது........பலுசிஸ்தானுக்கு இவர்கள்(இந்தியர்கள்) ஆப்பு வைக்க நினைத்தால்....பாக்கிகள் அழகாக காய் நகர்த்தி இன்று ராமேஸ்வரம் வந்து காத்திருக்கிறார்கள் ஆப்புகளுடன்.............! இதில் முக்கியமான ஒரு விஷயம் நன்றாக புலப்படும் ..........எந்த போர் வந்தாலும் மலையாள தேசத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராத படிக்கே இது வரை காய்கள் நகர்த்த பட்டிருப்பது தெரியும்.......தமிழ் நாட்டில் மட்டும் எதற்கு இத்தனை அணு உலைகள்??? கேரளத்தில் கடல் இல்லையா??? அல்லது அங்கு அணு உலை அமைக்க இடம் இல்லையா???? வரும் காலத்தில் நமக்கென்று தமிழக அமைச்சரவையில் வெளியுறவு கொள்கை வகுக்க ஒரு அமைச்சர் நியமிக்க வேண்டும்...........போர் ஏற்ப்படும் பட்சத்தில்.......நாம் இந்திய அரசை ஆதரிக்க வேண்டுமா இல்லையா என்பதை மத்திய சர்க்காரிடம் கராக சொல்ல தயாராக வேண்டும்........நம்மை தாக்காத வாறு சீனாவிடம் ஒப்பந்தம் போட வேண்டும்........! எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கும் மத்திய சர்க்காருக்கும் கருத்தொற்றுமை எற்ப்படாவிடின் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாக்கெடுப்பு நடத்தி தனி நாடு காண வேண்டும்.........! பின்பு அமெரிக்காவுக்கோ அல்லது சீனாவுக்கோ கூட காலனி நாடாக இருந்து விட்டு போகலாம்...! இந்த வேசி மகன்களுடன் இருப்பதை விட அங்கு நாம் பாது காப்புடனே இருக்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். தங்களின் இடுகை தமிழ் மணத்தில் இரண்டாம் கட்ட ஓட்டிற்காக பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. வெற்றி பெற வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// ஒரு கோக் நீங்கள் வாங்கும் போது இங்கே உள்ள காளிமார்க் பானத்தின் தொழிற்சாலையின் செங்கல் மெதுமெதுவாக உருவப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதுண்டா?. //

சத்தியமான வார்த்தைகள். கோக் குடிப்பதை விட இளனீர், பதனி, மோர் குடிக்கலாம் என்பதை எத்தனைப் பேர் நினைத்துப் பார்க்கின்றனர்.

காளிமார்க் பவண்டோ ருசி இந்த கோக்கிலும், பெப்சியிலும் வருமா என்ன?

இராகவன் நைஜிரியா said...

இந்திய நலன் காக்க நமக்கு மற்றுமொரு இரும்பு மனிதர் தேவை. இன்று இருப்பவர் யாரும் அதற்கு தகுதியானவர்களாக எனக்குத் தெரியவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// இலங்கை இன்னும் சில ஆண்டுகளில் முழிக்குமா? மூழ்கி விடுமா என்று தெரியவில்லை.//

குளோபல் வார்மிங்கில் முழுவதுமாக தண்ணிக்கு அடியில் போயிடும்.

ஜோதிஜி said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

வணக்கம் லெமூரியன்.

இந்த பதிவுக்கு விமர்சனம் வரும் என்று கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை. காரணம் இது ஒரு தொடக்கம். முதன் முறையாக ஒரு நீண்ட விமர்சனம், என்னை பயமுறுத்திய, சிந்திக்க வைத்த, ஆச்சரியப்படுத்திய விமர்சனம் உங்களுடைய இந்த நீண்ட விமர்சனம்.

இந்த அளவிற்கு உங்கள் தெளிந்த நீரோடை போலிருக்கும் அறிவு பார்த்து அசந்து போய்விட்டேன். பயந்து இன்னும் சிறப்பாக் உழைக்க வேண்டும் என்று நிணைத்துள்ளேன்.

காரணம் இனி வரும் சம்பவங்கள் கம்பி போல் நடப்பது போல் அதே சமயத்தில் காலில் குத்திய முள் வலியுடன்.

மறக்க முடியாத அளவிற்கு உங்கள் விமர்சனத்தை நிணைக்க வைத்து விட்டீர்கள்

ஜோதிஜி said...

லெமூரியன் உங்களுக்கு தேவியர் இல்லத்தின் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

இராகவன் நைஜீரியா..


வணக்கம். புத்தாண்டு வாழ்த்துகள். தங்கள் தகவலுக்கு நன்றி.

ஜோதிஜி said...

உண்மை இந்தியாவின் நலன் காக்க ஒரு இரும்பு மனிதர் தேவை. குஜராத்தில் கட்டாய வாக்கு என்று கொண்டு வந்ததைப் போல ஒவ்வொன்றும் நிலையான மனிதர் மூலம் இனிமேலாவது கொஞ்ச நஞ்ச இந்தியாவின் மான மரியாதையையும் காப்பாற்ற எந்த ராஜகுமாரன் வரப்போகிறானோ?

ஜோதிஜி said...

குளோபல் வார்மிங்

இதை படித்து விட்டு இந்த அதிகாலை வேலையில் சப்தமாக சிரித்து விட்டேன. உண்மையும் கூட. மொத்த சாப பூமி, தற்போதைய சாத்தான்கள் வாழும் பூமி.

நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நன்றி இராகவன்

ஜோதிஜி said...

காளிமார்க் பவண்டோ

1. இராகவன் நீங்கள் பல இடுகைகளில் நட்பாக ஜாலியாக எந்த கல்மிசம் இல்லாமல் இதே போல் ஒரே பதிவுக்கு பல ஜாலி விமர்சனங்களை தந்து உள்ளீர்கள்.

2. இந்த இலங்கைத் தொடர் ஆரம்பித்து நீங்கள் தொடர்ச்சியாக படித்துக்கொண்டே (இதே போல் சரித்திரம் அன்று ஆசிரியர் சொல்லி தந்து இருந்தால் நிறைய மதிப்பெண்கள் எடுத்து இருப்பேன்) வந்து இருப்பீர்கள் என்று நம்பிக்கொண்டுருந்தேன். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாழ்த்துக்களுடனும், அற்புத விமர்சனங்களை கொடுத்து மகிழ்ச்சி அடைய வைத்தமைக்கு நன்றி.

நன்றி இராகவன்.

ஜோதிஜி said...

உங்கள் இந்த முதல் விமர்சனம் போல் இன்னும் நாலைந்து நெருங்கிய விரும்பும் நண்பர்கள் தொடர்ச்சியாக படித்துக்கொண்டே வந்து கொண்டுருந்தாலும் அவர்களின் எண்ண ஓட்டத்தை அறிய ஆசை.

காரணம் இந்த ஆண்டு நல்ல விசயங்களுடன் தொடங்கி உள்ளதால் வாரத்தில் இரண்டு பதிவு வந்தால் ஆச்சரியம்.

காரணம் நம்முடைய நாட்டின் உளவுத்துறை பங்களா தேஷ் பிரித்துக்கொடுப்பதில் மிக்க அற்புத பங்களிப்பும், சீனா போர் போது நடந்த அற்புதமற்ற நிகழ்வின் காரணமாக உருவான RAW குறித்து எங்கும் தெளிவான புரிந்துணர்வு சம கால புத்தகங்களில் பதிவு செய்யப்பட வில்லை என்று நிணைக்கின்றேன்?

நமது நாட்டை விரும்பும், இறையாண்மை இருக்கிறது என்று இன்று வரையிலும் நம்பிக்கொண்டுருக்கும் ஒரு தனி மனிதன் , எதிர்காலத்தில் ஆவணமாக இருக்க வேண்டிய இந்த அறிவு குறித்த சமாச்சாரங்கள் அவஸ்யம் இந்த பதிவில் பதிய வேண்டும் என்று உறுதியாய் இருக்கின்றேன்.

காரணம் இப்போதே சில நல்லவர்கள் தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டும் என்று தங்கள் "நல்ல சிந்தனைகளை" வெளிகாட்டிக்கொண்டுருக்கும் " தருணமிது" என்பதால்?????????????

தமிழ் உதயம் said...

மொத்த அரேபிய தேசமும் ஒன்றாக இணைந்தால்?

ஒருவர் மற்றொருவருடன் சேராத வரைக்கும், சேர முடியாத காரணிகளை உருவாக்கி வைத்திருக்கும் வரைக்கும் அமெரிக்கா மட்டுமல்ல தற்போது பாவ்லா காட்டிக்கொண்டுருக்கும் எந்த நாடும் வல்லரசு தான்.

உலகத்தை தங்கள் கைபிடிக்குள் வைத்துருக்கும் முதல் நூறு பணக்காரர்களுக்கு உங்களை அறியாமலே அவர்களின் சொத்துக்களையும் ஆசைகளையும் அதிகப்படுத்திக்கொண்டுருக்கிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியுமா?

எல்லாவற்றுக்கும் தனிப்பட்ட சுயநலம் தான் காரணம். பெரிய நாடுகளின் வளர்ச்சி சிறிய நாடுகளை சிதைக்க.. பெரிய நிறுவனங்களின் பல சிறு நிறுவனங்களை அழிக்க.. பெப்ஸி, கோக்கை விட மிக ஆபத்தான அம்சம், ஆலுக்காஸின் வளர்ச்சி, மக்கள் சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக தங்களின் மிகப் பெரிய எதிர்காலத்தை தொலைத்து கொண்டு இருக்கிறார். ஒருவனின் அழிவில் தான் இன்னொருவனின் வளம் ஆரம்பம் என்று நம்பும் உலகம் வேறு எப்படி இருக்கும்

Unknown said...

சிறப்பான பதிவுகள் ... தல .... நான் என்றுன் உங்கள் ரசிகன் ... உங்கள் பணி தொடரட்டும் ... வாழ்த்துக்கள் !!!

ஜீவன்சிவம் said...

மிகவும் சரியாக உங்கள் உணர்வுகளை பதிவு செய்திருகிறீர்கள். இலங்கையில் ஏற்பட்டது போல் இந்தியாவில் உள்ள தமிழனுக்கு ஏற்பட்டாலும்
லாப நட்ட கணக்குகளை மனதில் வைத்து தான் அறிக்கைகள் வெளிவருமே அன்றி உண்மையில் தமிழனுக்காய் குரல் கொடுக்க இங்கு யாரும் கிடையாது என்பது தான் உண்மை. வெறும் அறிக்கைகளையும் நீலி கண்ணீரையும் நம்பி இன்று நேற்றல்ல ஆயிரம் ஆண்டுகளாய் நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம்.

கண்ணகி said...

தமிழ்மண பரிந்துரைக்கு வாழ்த்துக்கள்.புத்தண்டு வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக தங்களின் மிகப் பெரிய எதிர்காலத்தை தொலைத்து கொண்டு இருக்கிறார். ஒருவனின் அழிவில் தான் இன்னொருவனின் வளம் ஆரம்பம் என்று நம்பும் உலகம் வேறு எப்படி இருக்கும்


அடேங்கப்பா எத்தனை ஆழமான சிந்தனைகள். ஏற்கனவே நீங்கள் தந்த விமர்சனம் இன்னமும் உள்ளே சுழன்று கொண்டு இருக்கிறது?

வெற்றி பெற்றவனின் அநியாயங்கள் தெரிவதில்லை
தோற்றவனின் நியாயங்கள் புரிந்து கொள்ளப்படுவதில்லை.

ஜோதிஜி said...

நான் என்றுன் உங்கள் ரசிகன்

நன்றி நண்பா. வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

லாப நட்ட கணக்குகளை மனதில் வைத்து தான் அறிக்கைகள் வெளிவருமே அன்றி உண்மையில் தமிழனுக்காய் குரல் கொடுக்க இங்கு யாரும் கிடையாது என்பது தான் உண்மை. வெறும் அறிக்கைகளையும் நீலி கண்ணீரையும் நம்பி இன்று நேற்றல்ல ஆயிரம் ஆண்டுகளாய் நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம்


நன்றி சுரேஷ். நிதர்சனமான உண்மை. நீங்கள் இந்த இடுகையின் தொடக்கத்தில் தமிழனின் தனிப்பட்ட குணாதிசியங்கள் குறித்து பத்து தலைப்பில் எழுதி இருந்ததை படித்து இருப்பீர்கள் என்று நிணைக்கின்றேன்.

அதில் ஒன்று தான் தமிழ்மணம் இரண்டாவது ஓட்டெடுப்புக்கு வந்துள்ள தமிழ்மொழி குறித்து ஈரவெங்காயம்.

நன்றி.

ஜோதிஜி said...

நன்றி கண்ணகி. அன்று தங்கள் இடுகையில் தமிழ் மணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரவெங்காயத்தை உங்கள் இடுகையில் இணைத்து மரியாதை செய்து இருந்தீர்கள். மிக்க நன்றி.

பின்னோக்கி said...

உளவில் இவ்வளவு துறைகள் இருப்பதே எனக்கு ஒரு தகவல். மிகவும் சுவாரசியமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். வந்துவிட்டேன். சேர்ந்துவிட்டேன். ஆவலுடன் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

ஜோதிஜி said...

இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை / இது கடந்த வருடம் இலங்கை தமிழினத்தின் மொத்த வாழ்க்கையின் சாரம். அவர்களை, மொத்த நிகழ்வுகளை குறித்து உங்கள் தலைப்பை வைத்து தொடங்கிய இந்த தொடரில் இணைந்த பின்னோக்கி வருக.

சிபிஐ என்றால் ஒன்று என்று அணைவரும் நிணைப்பதுண்டு. ஆனால் அதிலும் பொருளாதாரம் சார்ந்த குற்றங்கள், வங்கி, ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் என்று ஒவ்வொன்றுக்கும் என்று உப பிரிவு போய்க்கொண்டு இருக்கிறது.

நன்றி பின்னோக்கி

Anonymous said...

//...........தோண்ட தோண்ட அசிங்கமாக நிறைய வெளி வரும்........அதிலும் குறிப்பாக மலையாள வேசி மகன்கள் நிறைந்த வேசிக் கூட்டம் தான் இந்திய உளவுத் துறை...சுயப் புத்தி இல்லாமல் சொல் புத்தியும் இல்லாமல் திரிகிற கர்வ கூட்டம் இவர்கள்..........இவர்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்து இன்று தமிழகத்தை மிகப் பெரிய பேராபத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள்.............ஏற்கனவே பாதி தமிழினத்தை இலங்கையில் கொன்றழித்து விட்டார்கள்.........வல்லரசு என்று வெளியே சற்று பயம் கலந்து மார் தட்டி கொண்டாலும்.....ஆசியாவின் உண்மையான வல்லரசு என்னவோ தற்பொழுது இலங்கைதான் என தோன்றுகிறது........பலுசிஸ்தானுக்கு இவர்கள்(இந்தியர்கள்) ஆப்பு வைக்க நினைத்தால்....பாக்கிகள் அழகாக காய் நகர்த்தி இன்று ராமேஸ்வரம் வந்து காத்திருக்கிறார்கள் //

இவர்களை வேசிமகன்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது வேசிகளுக்கு அவமானம்.
உலகின் புராதன தொழிலில் இருபவர்களை இந்த நாய்களுடன் சேர்க்கக்கூடாது. (சே, இது நாய்க்கு அசிங்கம்)

உலகிலேயே தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளுடனும் மோசமான உறவைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.

அதுவும்
இதற்க்கு காரணம் "ரோ" என்பது உலகறிந்த உண்மை.

இன்னும் எவ்வளவோ இந்த அடிவருடி நாய்களை பற்றி எழுத ஆசை. ஆனால் பிறகு............

Unknown said...

உலக அரசியலில் உளவுத்துறைகளின் பங்களிப்பு மறுக்க இயலாத்து. உங்களின் எல்லா கருத்துக்களையும் எற்றுக்கொள்ள இயலவில்லை என்றாலும், பொரும்பான்மை மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்தும் என்ற வகையில் உஙகளின் முயற்சிக்கு பாரட்டுக்கள்.

Unknown said...

================================
//...........தோண்ட தோண்ட அசிங்கமாக நிறைய வெளி வரும்........அதிலும் குறிப்பாக மலையாள வேசி மகன்கள் நிறைந்த வேசிக் கூட்டம் தான் இந்திய உளவுத் துறை...சுயப் புத்தி இல்லாமல் சொல் புத்தியும் இல்லாமல் திரிகிற கர்வ கூட்டம் இவர்கள்..........இவர்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்து இன்று தமிழகத்தை மிகப் பெரிய பேராபத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள்.............ஏற்கனவே பாதி தமிழினத்தை இலங்கையில் கொன்றழித்து விட்டார்கள்.........வல்லரசு என்று வெளியே சற்று பயம் கலந்து மார் தட்டி கொண்டாலும்.....ஆசியாவின் உண்மையான வல்லரசு என்னவோ தற்பொழுது இலங்கைதான் என தோன்றுகிறது........பலுசிஸ்தானுக்கு இவர்கள்(இந்தியர்கள்) ஆப்பு வைக்க நினைத்தால்....பாக்கிகள் அழகாக காய் நகர்த்தி இன்று ராமேஸ்வரம் வந்து காத்திருக்கிறார்கள் //
இவர்களை வேசிமகன்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது வேசிகளுக்கு அவமானம்.
உலகின் புராதன தொழிலில் இருபவர்களை இந்த நாய்களுடன் சேர்க்கக்கூடாது. (சே, இது நாய்க்கு அசிங்கம்)

உலகிலேயே தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளுடனும் மோசமான உறவைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.

அதுவும்
இதற்க்கு காரணம் "ரோ" என்பது உலகறிந்த உண்மை.

இன்னும் எவ்வளவோ இந்த அடிவருடி நாய்களை பற்றி எழுத ஆசை. ஆனால் பிறகு............
===============================================


திறமையான, ஒருவர் பிரதமர் பத்விக்கு வந்தால் மலையாளிகள் மட்டுமல்ல எவரும் இப்படி செய்ய முடியாது ஆனால் சுயந்லமிகளிடம் அதிகாரமும் , பொம்மை பிரதமரும் இருக்கும்பொது, .......
ந்மது அரசாங்கம் செத்த சிங்கமாக இருக்கும்பொது நாய்கக்ளும் எலிகளும் மிதிக்கதான் செய்யும்

ஜோதிஜி said...

உலகிலேயே தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளுடனும் மோசமான உறவைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.


சற்று மாறுதலாக சிந்திக்கலாம்,

எல்லாமே இருந்தும் வீணாய் போனதற்கு காரணம் என்ன?

ஜோதிஜி said...

உங்களின் எல்லா கருத்துக்களையும் எற்றுக்கொள்ள இயலவில்லை என்றாலும்

தெளிவாக புரிந்துணர்வை உருவாக்கி இருக்கலாமே, மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்து இருக்குமே?

ஜோதிஜி said...

ஆனால் பிறகு............

சட்டம் தனது கடமையைச் செய்யுமா?

சுடுதண்ணி said...

மிக அருமையான பதிவு.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
தலைப்பை மிகவும் ரசித்தேன் :). காளிமார்க் பவண்டோ தான் நான் இன்றும் விரும்புவது.

உலகின் பெரும்பான்மையான பொருளாதாரத்தை இராணுவங்களும், உளவு நிறுவனங்களுமே முழுங்கி விடுகின்றன. உளவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் உலகமே இயங்குகிறது. எல்லைப் பிரச்சனை முதல் நோய்க்கிருமிகளைப் பரப்புவது வரை...

அகிலத்தை அடக்கி ஆளும் பேராசை தான் இப்படி மனித உலகத்தை அன்றும், இன்றும் ஆட்டி வைக்கிறது :(.

தொடர்ந்து எழுதுங்கள் :)

சுடுதண்ணி said...

இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் எங்கும் அரசியல், அரசியலில் கட்டுப்பாட்டில் தான் சர்வமும்.

ஜோதிஜி said...

தலைப்பை மிகவும் ரசித்தேன் :).

எழுத காரணமாக இருந்தவர்கள் பல பேர்கள். எழுதியதை ஆதரித்தவர்கள் இன்னும் பல பேர்கள். இந்த இடுகையை உருவாக்கி என்னுடைய எழுத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தியவர்கள் இன்னும் அநேக பேர்கள்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் இடுகை குறித்த மொத்த தொழில் நுட்ப சமாச்சாரங்கள் கற்றுக்கொண்டுருப்பதும், இன்று முதல் தொடரப்போகும் அத்தனை தலைப்புகளுக்கும் மொத்த பொறுப்பானவர் நீங்கள் தான்.

மேலும் பல விதங்களிலும் நெருக்க உறவாய் ஆகி வேறு விட்டீர்களே?

நன்றி தமிழுக்கு அரசன்.

ஜோதிஜி said...

அரசியலில் கட்டுப்பாட்டில் தான் சர்வமும்.

நாம் அவர்களை குறை சொல்வதாகவே இருக்கட்டும். படித்தவர்களின் எத்தனை பேர்களுக்கு உண்மையான அரசியல் ஆர்வம், புரிந்து கொள்ளும் அக்கறை, திறமை இருக்கிறது.

??????

மிகப்பெரிய வெற்றிடம்.

Priya said...

//வஞ்சகம் இல்லாமல் வாயாற உண்மையை மட்டும் சுவைத்து வாழ்ந்த கூட்டமது. ஆனால் ஆட்சி, அதிகாரம், அதிகார வர்க்க சார்பாளர்கள் என்று ஒவ்வொன்றாக நாகரிக வாழ்க்கையில் உருவாக, மாற்றம் பெற இந்த உளவு என்ற சொல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.//.....எவ்வளவு உண்மை இது!

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

வருக ப்ரியா வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

ஜோதிஜி தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

நன்றி கவிதாயினி தேனம்மை.

geethappriyan said...

அடேங்கப்பா?
எவ்வளவு அறிய தகவல்களை அருமையாக தொகுத்ட்து தந்துள்ளீர்கள், மிக சிறப்பான ஒரு இடுகை என்று இதை சொல்லுவேன். வாக்களித்துவிட்டேன்.தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

நன்றி அறிவுத்தேடல். அவசரமாய் அன்றே ஆருடம் சொன்னீர்கள்?

Anonymous said...

மிகவும் அற்புத வரைவு,வாழ்த்துக்கள் அய்யா manian

ttpian said...

YES! Bharatha maatha will PAY HEAVY PRICE for her step motherly treatment towards Tamil community