Showing posts with label செய்திகள்.. Show all posts
Showing posts with label செய்திகள்.. Show all posts

Friday, February 08, 2013

டாலர் நகரம் (விமர்சனம்) வீடு சுரேஷ்குமார்



ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகம் இருநூறு பக்கங்களுக்கு மேல்  உள்ளது. தரமான அடர்த்தியான காகிதத்தில்; முழுப் பக்கங்களும் வண்ண புகைப்படங்களுடன் கூடிய அழகான வடிவமைப்புடன், சற்றே பெரிய எழுத்தில் அனைவரும் படிக்க சிரமில்லாமல் நேர்த்தியாக, அழகாக, தரமாக, வந்துள்ளது. தரத்துடன் ஒப்பிடுகையில் விலையும் மிகக்குறைவுதான் சரி விமர்சனத்திற்கு செல்லலாம்.

ஜோதிஜியின் முதல் புத்தக பிரசவம் என்கின்ற எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி அதில் உள்ள விசயங்கள் திருப்பூரின் முழுபிம்பத்தையும் காட்டுகின்றதா…? இந்த புத்தகம் திருப்பூரைக் காட்டுகின்ற கண்ணாடியா...?என்கின்ற கேள்வி உங்களுக்கு எழலாம்..! படித்து முடித்த பிறகு இதே கேள்வி எனக்கும் எழுந்தது!

சுவாரஸ்யமாக போகும் ஒரு நாவல் போல.... தான் காரைக்குடியில் இருந்து ஒரு மஞ்சள் பை, வெள்ளை வேட்டியுடன் இந்த மண்ணில் கால் வைத்ததிலிருந்து, இன்று வரை நடந்த விசயங்களை ஒரு கதை போலவே சொல்கின்றார் ஜோதிஜி.

அதில் ஆங்காங்கே பனியன் நிறுவனங்களைப் பற்றி, நிட்டிங் பற்றி, சாயத் தொழில் பற்றி, பையிங் ஆபிஸ் என்றழைக்கப்படும் புரோக்கர்களின் தில்லு முல்லுகள் பற்றி விரிவாக விவாதிக்கின்றார்,. நான் பையிங் ஆபிஸ் பற்றி எழுதியதை படிக்க... படிக்க.... அத்திப்பழம் நியாபகம் வருகின்றது. வெளியில் பளபளப்பாக இருக்கும் அத்திப்பழத்தை பிய்த்துப் பார்த்தால் ஏராளமான புழு நெளியும். என்னைப் போல் உற்பத்தி துறை சாராதவர்களுக்கு பையிங் ஆபிஸ் என்பது ஒரு மதிப்பு மிக்க இடமாகும் அதைப் பிய்த்து புழுக்களை ஜோதிஜி காட்டிவிட்டார்.

பாலியல் பிரச்சனைகள் பற்றியும் 18மணி நேர உழைப்பு என்று தொழிலாளர்கள் பிரச்சனைகளைப் பற்றி அலசியிருந்தது பாராட்டத்தக்கது. அதில் அவர் நண்பர் ஒருவரே பெண்ணாசையினால் அவதிப்பட்டதையும் நடுத்தெருவிற்கு வந்ததையும் பற்றி கூறியிருந்தார். அது நிறைய பேருக்கு பாடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இடைவிடாத வேலை ஓயாத உழைப்புக்கு மத்தியில் திருப்பூர் மக்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்த சென்னை போன்ற நகரங்களில் உள்ளது போல கடற்கரையோ சுற்றுலா தளங்களோ இங்கு இல்லை.ஒரே ஒரு பூங்கா இருக்கு அதுவும் பெயரளவில்தான் இருக்கின்றது.

மனதில் ஏற்படும் அழுத்தத்தை தீர்க்க மதுக்கடையும், விபச்சாரப் பெண்களை நாடுவதை தவிர இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேறு வடிகால் இல்லை.சிலர் தாங்கள் பணி புரியும் நிறுவனங்களில் உடன் வேலை செய்யும் நபர்களிடமே காம சுகத்தையும் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றார்கள். ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்களே தடம் மாறிச் செல்கின்றார்கள். அதனால் இங்கு எய்ட்ஸ் நோய் நாமக்கல்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பதையும் இந்த புத்தகம் தெளிவு படுத்துகின்றது.

இதில் குறிப்பாக சாயத் தொழிற்சாலை முதலாளிகளின் பேராசையினால் இயற்கைச் சீரழிவு பற்றி சிந்திக்காமல் நடுஇரவில் திருட்டுத்தனமாக சாயக்கழிவுகளை ஆற்றில் விட்டதை தெளிவான ஒரு பார்வையை எடுத்து வைத்திருக்கின்றார். சாயத்தொழிலில் ஈடுபடும் தொழிளார்கள் நலன் பற்றியும், அவர்களுக்கு ஏற்படுகின்ற நோய் பற்றியும் சாப்ட் புளோ என்கின்ற நவீன இயந்திரம் வருகையினால் ஏற்பட்ட தொழிற்புரட்சியும், சாயமேற்றும் சில வகை அமிலங்கள் பற்றியும் தெளிவான குறிப்பிட்டுள்ளார். பயனற்றுப் போன சென்னிமலை அருகில் உள்ள ஒரத்தப்பாளையம் அணையும் விவசாயிகளும் சாய முதலாளிகளும் இரு துருவங்களாக மோதிக்கொள்ளும் சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சில இடங்களில் ஊறுகாய் போல உள்நாட்டுத் தயாரிப்பை பற்றி கூறியுள்ளார். ஆங்கிலம் நன்கு தெரிந்தால் போதும் மூளையை வைத்தே பல கோடிகளை அள்ளியவர்களைப் பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டு பனியன் நிறுவனங்களில் ஆட்களை அழைத்து வந்து வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்கள் பற்றி சில இடங்களில் கூறியுள்ளார்.

அதிகமாக ஜோதிஜி பனியன் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றியும், சாயத் தொழிற்சாலை பற்றியும் மட்டுமே தன் களத்தில் கொண்டு வந்திருக்கின்றார், அது அவர் உலகம் அது ஒரு குறுகிய வட்டம் ஆனால் அதைத்தாண்டி ஒரு பிரம்மாண்டமான உலகம் திருப்பூரில் உள்ளது அதுதான் பிரிண்டிங் தொழில். 

பனியன் துணிகளில் உள்ள அழகாக கார்டூன் பொம்மை படங்கள், பல டிசைன்களைப் பார்த்திருப்பீர்கள், உலக அளவில் பல நாடுகளில் பேசப்படுவது திருப்பூர் பின்னலாடை என்றால் அந்த பின்னலாடையில் பிரிண்டிங் செய்வது என்பது உலகம் முழுவதுமுள்ள ஜவுளி நிறுவனங்களால்  திருப்பூர் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. 

பெங்களூரு, புனே, மும்பை, லூதியானா, அகமதாபாத் போன்ற நகரங்களில் இந்த தொழில் இருந்தாலும் அங்குள்ள நவீன ரக இயந்திரங்களில் குறிப்பிட்ட வகை பிரிண்ட் மட்டுமே அடிக்க முடியும். ஆனால் திருப்பூரில் மட்டும்தான் எளிதாக கையில் அடிக்கக் கூடிய இயந்திரம் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நவீன இயந்திரம் வரை பயன்படுத்தப்படுகின்றது. அது மட்டுமில்லாது திருப்பூரில் அடிக்க முடியாத பிரிண்ட்டை உலகத்தில் வேறெங்கும் அடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரிண்டுகளில் அழகான பாசிகள், முத்துகள், வைப்பது சில்வர் போன்று மினுமினுக்கும் பாயில், பஞ்சு போல் மெத்தென்று இருக்கும் புளோக் பிரிண்ட், டை அன் டை, டிச்சார்ஜ் பிரிண்ட், இரவில் ஒளிரும் ரேடியம் பிரிண்ட், தோல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பயோ பிரிண்ட், என்று இது பனியன் தயாரிப்பு நிறுவனங்களை விட அதிக லாபம் கொழிக்ககூடிய பிரம்மாண்டமான ஒரு தொழில் அதைப் பற்றி ஒரு வரிகள் கூட இல்லை என்பதே இந்த புத்தகத்தில் உள்ள ஒரு குறை! ஜோதிஜி அடுத்த பதிப்பில் இதைச் சேர்க்க வேண்டுகின்றேன்.

இது அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்த சுவையான, படிக்க சுவாரஸ்யமான ஒரு புத்தகம் மற்றும் திருப்பூர் வேலைக்கு வர முயலுகின்றவர்களின் வழிகாட்டியாக திகழும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை என்பதே முதல் பத்தியில் நான் வினவியிருந்த கேள்விக்கான பதில்! 

டாலர் நகரம்

4தமிழ் மீடியா வெளியீடு

விலை : 190.00

டிஸ்கி : திருப்பூர் புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் புத்தகம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, பதிவரில்லாத பலர் வாங்கிச் செல்கின்றனர். திருப்பூரைச் சார்ந்த ஒருவர், அதுவும் எங்கள் நண்பர் எனக்கு தொழில் மற்றும் பதிவுலக வழிகாட்டி ஜோதிஜியின் புத்தகம் பற்றி வாய்வழியாக பாராட்டுகளைக் கேட்கும் போது என்னையே பாராட்டுவது போன்று அகமகிழ்கின்றேன்!




திருப்பூரில் புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்.

திரு. ஈஸ்வரன் சீனிவாசன் அலைபேசி எண் 98 94 86 76 43 (காங்கேயம் சாலை)
திரு. வரதராஜன் அலைபேசி எண்  98 422 08 330 (பெருமாநல்லூர் சாலை)
திரு. பிரகாஷ்.. அலைபேசி எண்  97 89 477 979 (அவினாசி சாலை)
திரு. ராஜேஷ் அலைபேசி எண்  98 94 777 278 (பெருமாநல்லூர் சாலை)
திரு கிருஷ்ணகுமார் அலைபேசி எண்  944 26 39 703 (பல்லடம் சாலை)
திரு. மகேஷ்குமார் அலைபேசி எண்  97 89 311 666 ( பல்லடம் சாலை)

Thursday, December 06, 2012

குழந்தைகள் - புரிதலின் தொடக்கம் நேசிப்பு


ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்லும் போதும், சென்ற வந்த பிறகும் அந்த ஊரைப்பற்றி, அங்கு வாழந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும் அதிகம் யோசித்துருக்கின்றேன்.

இந்தியாவில் புனிதம் என்று சுட்டிக்காட்டப்பட்ட இது போன்ற ஊர்கள் அங்குள்ள கோவில்களை வைத்தே வளர்கின்றது. மக்கள் வந்து கொட்டும் வருமானம் அனைத்தும் கோவிலுக்குத்தான் என்றாலும் ஊரின் கட்டமைப்பில் எந்த மாறுதலும் உருவாகிவிடுவதில்லை. உருவானாலும் கூட ஆமை வேகம் தான். குறிப்பிட்ட திருவிழா நாட்களில் கூட செல்பவர்களுக்கு பயமும் பல பாடங்களும் தான் கிடைக்கின்றது. 

இன்று இது போன்ற புனித தலங்களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒரு சுற்றுலா மனோநிலையில் தான் செல்கின்றார்கள். 

தொடக்கத்தில் வாழ்ந்த மனிதர்கள் இது போன்ற தலங்களுக்கு செல்ல நினைத்தாலே தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு உணவு முதல் உறவு வரை உள்ளும் புறமும் பரவச நிலையை உருவாக்கிக் கொண்டு தான சென்றார்கள். பாதயாத்திரை என்பது ஆரோக்கியத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இன்று அனைத்தும் மாறிவிட்டது. மலையில் இருக்கும் சாமியை தரிசிப்பதை விட கேபிள் கார் பயணத்தை அனுபவிக்கச் செல்பவர்கள் தான் அநேகம் பேர்கள்.

மக்களின் வேண்டுதல்களும் மாறியுள்ளது. உடம்புக்கு தேவைப்படும் ஆரோக்கியத்தை மனதுக்கு அமைதி என்பதை பொருளாதாரம் சார்ந்த வேண்டுதல்கள் தான் இன்று அதிகமாகியுள்ளது. நினைத்தவுடன் செல்வது. வேண்டியவுடன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்று துரித உணவகத்தினைப் போலவே இன்று ஆன்மீகம் வளர்ந்துள்ளது.

விருப்பங்களை சுமந்து கொண்டு செல்வதற்குப் பெயர் ஆன்மீகம் அல்ல. அது வியாபாரம். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் என் நோக்கம் ஆன்மீகத்தை தாண்டியும் சில புரிதல்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு இருந்தது. இரட்டையர் என்று தெரிந்ததும் அழைத்து உறவுகளிடம் சொன்னேன். போடா கிறுக்குப் பயலே. உனக்கு எல்லாமே விளையாட்டு தான் என்றார்கள்.

நான் மனதில் வைத்திருந்தபடி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினேன். திருவண்ணாமலைக்கு மாதம் ஒரு முறை செல்லும் பழக்கம் என்பது மாறி வாரம் ஒரு முறை என்பதாக மாறியது.  அலைச்சலும் அவஸ்த்தைகளும் என்றாலும் நமக்கு பிடித்த ஒரு விசயத்தை செய்யும் போது எந்த கஷ்டமும் நமக்கு இயல்பானதாகவே தெரியும்.

அக்காவும் அருகே உள்ள ஊரில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  ஆனால் இது போன்ற விசயங்களில் மற்றவர்களின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் நான் இல்லை.

அறிமுகம் இல்லாத திருவண்ணாமலை என்ற ஊரில் அலைந்து திரிந்து நான் விரும்பியவாறு அமைந்த மருத்துவரின் பெயர் உஷா கல்யாணி. மனித உருவில் வாழும் தெய்வம் என்று தான் போற்றப்பட வேண்டும். அவர் கணவர் இறந்து போன போதிலும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளையும் மிக உயரிய படிப்பில் இதே மருத்துவ துறையில் தான் படித்துக் கொண்டிருந்தனர். இரண்டு மகள்களும் படிப்புக்காக ஒரு பக்கம்., இவர் இங்கேயென்று மாதம் முழுக்க ஓய்வில்லா பணியில் தான் இந்த சேவையை செய்து கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனையிலும் வெற்றிகரமாக முடித்து, தனியார் மருத்துவமனையில் உள்ள ஏற்றுக் கொண்ட கடமைகளை முடித்து தன்னுடைய வீட்டிலும் மருத்துவ சேவை செய்த அவரின் நேர ஒழுங்கும், காசுக்கு ஆசைப்படாத குணாதிசியங்களையும் இன்று நினைத்தால் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது. பலசமயம் என் அவசரத்தின் பொருட்டு அரசு  மருத்துவமனைக்கே சென்று இருக்கின்றேன். பலருடனும் உரையாடி இருக்கின்றேன்.

அவர் வீட்டில் நான் பார்த்தவரைக்கும் வந்த அத்தனை பேர்களும் மிக எளியவர்களாகத்தான் இருந்தார்கள்.  பத்து ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை என்பதான பல மனிதர்களை அங்கே தான் சந்தித்தேன்.

தொடக்கத்தில் அவரை சந்தித்த போது என் விருப்பங்களையும் ஆசைகளையும் சொன்ன போது வினோதமாக பார்த்தார். ஆனால் கடைசியில் இப்படித்தான் சொல்லி எங்களை குழந்தைகளோடு பாராட்டி வழியனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன வாசகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. 

எத்தனையோ விதவிதமான மனிதர்களை என் தொழில் வாழ்க்கையில் சந்தித்துள்ளேன்.  அத்தனையிலும் நீங்க வித்யாசம் என்றார். நான் அவரைப் பற்றி மனதில் வைத்திருந்ததை என்னை புகழ்வதாக ஏற்றுக் கொண்டு அமைதி காத்தேன். காரணம் அவர் குழந்தை பிறப்புக்கு குறித்த நாட்கள், எதிர்பார்த்த நாட்கள் என்று அத்தனையும் கடந்து போயிருந்தது.  நான் சொன்ன நாள் நெருங்கி வந்தது.  அன்று தான் சரியாக இருக்கும் என்று அவருடன் இருந்த குழுவினர் சொன்ன போது தான் உங்க விசயத்தில் மட்டும் நான் ஒவ்வொருமுறையும் பல வினோதங்களைப் பார்க்கின்றேன் என்றார்.

நான் குறிகளை வெறுப்பதும் இல்லை. அதிக அளவு விரும்புவதும் இல்லை. அதை ஒரு ஆலோசனையாகத்தான் எடுத்துக் கொள்கின்றேன். உழைப்புக்கு அப்பாற்பட்ட ஏராளமான விசயங்கள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றது. விஞ்ஞானத்திற்கு புரியாத பல புதிர்கள் பல உள்ளன. நம்புவதும் நம்பாததும் அவரவர் அனுபவங்கள் தரும் பாடங்களே. இதை விவாதிக்க வேண்டிய அவசியமேயில்லை. 

ஆனால் இதை வைத்துக் கொண்டே காலம் தள்ளுபவர்களையும், காசாக்க நினைப்பவர்களையும் நினைக்கும் போது தான் பலருக்கும் தந்தை பெரியார் உதவி புரிகின்றார். திருவண்ணாமலை கோவிலில் கர்ப்பகிரகத்திற்கு மிக அருகில் நடுசாம பூஜை வரைக்கும் பலநாட்கள் இருந்துள்ளேன். உணர்வும், உயிரும் ஒன்றாக கலந்திருந்த அந்த காலத்தையும் கடந்து வந்துள்ளேன். 

ஒரு கிறிஸ்துவ மருத்துமனையில் தான் இருவரும் பிறந்தார்கள்.  ஊரிலிருந்து அம்மா முதல் அத்தனை பேர்களையும் வரவழைத்து இருந்தேன்.  

அம்மா குழந்தைகளை பார்க்கும் வரையிலும் இரட்டையர் என்பதை நம்பவே மாட்டேன் என்றார். அந்த சிறிய இரண்டு உருவங்களை கையில் கொடுத்த போது இதென்ன கொடுமையா இருக்கு? என்று ஆச்சரியப்படார்.  நம்ம வம்சத்திலே இப்படி இரட்டை வந்ததே இல்லையே என்றார்.  எனக்கும் வியப்பு தான். விஞ்ஞானத்தை தாண்டியும் பல உண்மைகள் இருக்கிறது என்பதை உணர்த்திய பாடங்கள் இது. விஞ்ஞானத்தை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொண்டாலும் தவறில்லை.. .

இருவரில் ஒருவர் எடைகுறைவு என்றதும் அப்போது தான்   அவரை பாதுகாக்கப்பட் வேண்டிய கருவிகளின் பழுதை  உணர்ந்தார்கள். அழைத்தவர்கள் வந்தபாடில்லை. நிமிடங்கள் மணிகளானது.  நாட்களாக மாறியது. ஆனால் கடந்து கொண்டேயிருந்தே தவிர அடுத்த மூன்று நாட்களில் அவர்களால் எந்த உருப்படியான முன்னேற்பாடுகளையும் செய்து தரமுடியவில்லை. வருத்தங்களை மீறி அப்போதும் விதியின் கரத்தின் விளையாட்டு பொம்மை போலத் தான் நாங்கள் இருந்தோம்.

எல்லாமே முயற்சிக்கு அப்பாற்பட்டது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து கொண்டேன். 

முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றோம். பல சமயம் ஜெயித்ததும் நம் முயற்சி என்கின்றோம்.  இல்லாவிட்டால்?  ஆனால் நான் எப்போதும் விதி மதியை இரண்டு தண்டவாளங்களாகத்தான் கருதுகின்றேன். அவசர உதவிகள் என்று அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே வந்த போதிலும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காமல் போக ஒருவர் மூச்சு விடவே சிரமப்படத் தொடங்கினார்.

ஆனால் அப்போது கூட உஷா கல்யாணி அசரவில்லை.  அவர் பழக்கத்தில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவர்களை, அவர்கள் வைத்திருக்கும் கருவிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு உதவி புரிந்த போலும் காலம் கடந்த ஞானத்தில் முடிவுகள் பயத்தோடு பார்க்கப்பட்டது. 

இயல்பாக இருந்த என்னிடம் சங்கடப்பட்டு இறுதியாகச் சொன்னார்.

அவர் குழுவினர் எடுத்த முடிவுகளை புறந்தள்ளி உங்கள் அறிவியலை விட என் உணர்வுக்ள் சொல்லும் முடிவே மேலானது என்று தான் திருப்பூருக்கு அழைத்து வந்தேன்.   அன்று அவர் திகைத்துப் பார்த்த பார்வை இன்றும் மனக்கண்ணில் நிழலாடுகின்றது.  பெண் குழந்தைகள், அதுவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு ஊனமானால் உறவுகள் பார்வையில் எப்படியிருக்கும் என்ற எண்ணங்கள் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் என்னை அம்பாகத்தாக்கியது.

இங்கே குடும்ப வாழ்க்கை முடிவுகள் என்பது ஒருவருடன் முடிந்து போவதில்லை. கணவன், மனைவி என்று தொடங்கி ஒரு பட்டாளமே சம்பந்தப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கைகள். அதுவே சரியென்று திணிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர்களின்  உணர்வுகள் மதிக்கப்படுவதேயில்லை. 

காதல் திருமணங்கள் தோல்விக்கு இரண்டு காரணங்கள் 

ஒன்று பணம்  மற்றொன்று உறவுகளிடமிருந்து கிடைக்காத அங்கீகாரம்.  

பணம் இல்லாத போது அடிப்படை வாழ்க்கையே சிதைகின்றது.  அந்த சிதைவு மனபிறழ்வை உருவாக்கி பித்துப் பிடிக்க வைத்து திசை மாற வைக்கின்றது. ஏமாற்றங்களை தாங்க முடியாமல் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டிக் கொண்டு தாங்கள் கொண்ட காதலை நரக வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கின்றார்கள். ஆனால் இங்கு பெண் குழந்தைகள் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால் நான் உறுதியாக இருந்தேன்.

குழந்தைகளை அழைத்து வந்த பிறகு திருப்பூருக்குள்ளும் தேடல் தொடங்கியது.  எடை குறைந்த குழந்தைகள் சந்திக்கும் சவால்களின் முக்கியமானது வலிப்பு நோய். எப்போது வரும்? எதனடிப்படையில் வரும் என்றே தெரியாது.  தனியாக இருந்த மனைவி தடுமாறிய காலங்கள் அது. 

அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால் அறிவுரைக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.  ஆனால் அவரவர் கொண்ட பயத்தின் சாயலை நன்றாகவே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  திடீரென்று அலுவலகத்திற்கு அழைப்பு வரும். பதறிக் கொண்டு ஓட வேண்டியிருக்கும்.  வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் வண்டியில் வைத்துக் கொண்டு அலைந்த பயணங்களை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். உயிர் போய் உயிர் வந்தது என்பார்களே. அத்தனையும் அனுபவித்து இருக்கின்றேன். பெண்களின் தைரியத்தை இது போன்ற இக்கட்டான தருணங்களில் தான் பார்க்க முடியும்.  ஆனால் நம் பெண்களின் தைரியம் என்பது இறுதியில் கண்ணீரில் தான் முடிகின்றது. . 

திருப்பூரில சுக்கூர் என்றொரு குழந்தைகளுக்கென்று பிரபலமான மருத்துவர் இருக்கிறார்.  ஆனால் ஒரு பெரிய பிரச்சனை உண்டு. உடனடி நிவாரண்த்தில் தான் கவனம் செலுத்துவார்.  குழந்தைகள் தாங்குமா என்பதைப் பற்றி பிறகு தான் யோசிப்பார். 

ஆனால் அவரும் பயமுறுத்தினார். ஊனம் உருவாகும் வாய்ப்புகளைத்தான் விவரித்தார்.  என் மனம் ஏற்றுக் கொள்ளவேயில்லை.  காரணம் தலைமுறையில் ஊனமானவர்களே இல்லை. அமைதியாகவே வாழ்ந்து ஆராவாரமற்று தான் இறந்துபோயிருக்கிறார்கள்.  விஞ்ஞானம் சொல்லும் கருத்துக்களை மனதில் உள்வாங்கிக் கொண்டே ஒவ்வொன்றாக பிரித்துப் பார்க்கத் தொடங்கினேன்.  முதலில் குழந்தையின் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் பலமும் வேண்டும். அதன் பிறகே மற்றவற்றை யோசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த மருத்துவரை மனம் தேடத் தொடங்கியது.

தேடலின் இறுதியில் இறுதியாக ஷெரிப் காலணியில் உள்ள சிவகாமி என்ற மருத்துவர் கிடைத்தார். கொண்டு போயிருந்த ஆவணங்களை பரிசோதித்து விட்டு இருவரையும் பார்த்தார். தயங்காமல் கேட்டார். 

"இந்த குழந்தை இதுவரைக்கும் பிழைத்திருப்பதே அதிசயம்" என்றார். 

நான் அமைதியாக இருந்தேன்.

அடுத்த கேள்வி அதைவிட சுவராசியமானது. 

"மேற்கொண்டு எப்படி இவரை வைத்து சமாளிக்கப் போறீங்க?" என்றார்.

மனைவி அழுததை வேடிக்கை பார்த்த என்னை மருத்துவர் வினோதமாக பார்த்தார்.  

"உயிரை விட சம்மதிப்பேன். ஆனால் ஒருவரைக்கூட இழக்க சம்மதிக்க மாட்டேன்" என்ற போது தான் என்னைப் பற்றி முழுமையாக விசாரித்து என் விருப்பப்படி ஒத்துழைக்கத் தொடங்கினார்.

"இயற்கை முறையில் உங்கள் மருத்துவம் இருக்கட்டும். குழந்தைகக்கு உடல் வலு வேண்டும். அதன் பிறகு மற்றதை நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றேன். 

"எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள்.  ஆனால் பொறுமையாய் கடைபிடிப்பதே இல்லை. உடனடி நிவாரணத்தில் தான் இன்றைய உலகமே ஓடிக் கொண்டிருக்கிறது" என்று புலம்பியபடி பால் மற்றும் கோதுமை நிலக்கடலையுடன் சேர்த்து அரைக்க வேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லி அதை கொதிக்க வைத்து பாலாக மாற்றி குழந்தைகக்கு கொடுக்க வேண்டிய விதங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  

"முப்பது நாட்கள் கழித்து வாருங்கள்.  எப்படி குழந்தை இருக்கிறது என்பதை வைத்து தான் மேற்கொண்டு முடிவைச் சொல்வேன்" என்று பயமுறுத்தியே அனுப்பினார். 

அவருக்கு இரண்டு இடங்களில் மருத்துவமனைகள் இருந்தது. ஒரு மாதம் கழித்து மற்றொரு மருத்துவமனையில் அவரைப் பார்க்க நாங்கள் சென்றடைந்த போது கூட்டம் இல்லாமல் தனியாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். இரண்டு பேரையும் அவர் டேபிள் மேல் படுக்க வைத்த போது அவர் கேட்ட கேள்வி "அந்தக்குழந்தை எங்கே?" என்றார்.

இவர் தான் அவர் என்றோம்.  விக்கித்துப் போய்விட்டார்.  காரணம் ஒரே மாதத்தில் 1.750 கிராம் கூடி மூன்று கிலோவிற்கு அருகே கொண்டு வந்திருந்தோம். இப்போது இருவரும் சமமாக இருந்தனர்.

"நம்ம முடியாத அதிசயத்தை சாதித்து காட்டியிருக்கீங்க" என்று என் கைகளை வாங்கி குலுக்க முற்பட்ட போது மனைவியின் கரத்தை எடுத்து அவர் கையில் வைத்தேன்.

அன்று தான் என் மனைவி என் வேகத்தின் முழுப்பலனை முழுமையாகவும் என் நேசிப்பின் அருமையையும் உணரும் நேரமாக இருந்தது.  

மேலே நாம் பார்த்த அவர் இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா?

"அப்பா.அம்மாவுக்கு சமைக்கவே தெரியல.எதிலும் காரமே இருப்பதில்லை.நாக்குக்கு விளங்கலை"என்கிறார். சாப்பாட்டில் உள்ள காரம் தந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சிரிக்கின்றேன்.

வார்த்தையிலும் வாழ்க்கையிலும் காரஞ்சாரமாகத்தான் வளர்கின்றார்.  .

நடைவண்டி பயணம் தொடரும்.....

தொடர்புடைய பதிவுக்ள்

வாங்க

போங்க

Sunday, October 18, 2009

பிரபலங்களும் பதிவர்களும் கலந்து கொண்ட கண்ணீர் அஞ்சலிக்கூட்டம்

இறுதி கண்ணீர் அஞ்சலியில் கலந்து கொள்ள வந்த உங்களுக்கு இந்த நீள் பதிவு, சாப்பிட்ட தீபாவளி பலகாரத்தை,சிறப்பு திரைப்படத்தை,சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களின் பேட்டியை, செரிக்க வைத்துவிடும். கொண்டுள்ள கண் வழியோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.  வேறு வழி இல்லை

ஹே ராம்.


மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள்
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் முடிவு பதிவு (51)

டெல்லியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜெ.சஞ்சீவிக்கு பம்பாயில் இருந்து ஜிம்மி நகர்வாலா என்கிற துப்பறியும் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் தொலைபேசியில் தெரிவித்த கருத்து இது.

" ஏன்? எப்படி? என்று கேட்காதீர்கள்?  என்னுடைய உள் உணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.  காந்திஜியை கொலை செய்ய மற்றொரு முயற்சி நடக்கப்போகிறது.  இப்போது இங்கு நடந்து கொண்டுருக்கும் சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது மேலும் உறுதிபடுத்துவதாக இருக்கிறது."

தொடக்கம் முதல் அக்கறையில்லாமலே காலத்தை கடத்திக் கொண்டுருந்த சஞ்சீவி என்ற உயர் அதிகாரி "என்னை என்ன செய்ய சொல்கீறீர்கள்? உடுப்புடன் எந்த காவர்களையும் உள்ளே பார்த்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார்.  நான் என்ன செய்ய முடியும்? "என்றார்.

ஆனால் இந்த இரண்டு உயர் அதிகாரிகளுக்கும் தேவையான உண்மையான குற்றவாளிகளின் பெயர், புகைப்படம் போன்ற சகல விபரங்களுடன் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த பூனா டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் யு. எச்.ராணாவின் மேஜையில் தயாராக இருந்தது.  யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல், இத்தனை பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு அன்று தான் பணியில் சேர்ந்து இருந்தார்.

நுழைந்த நாளில் அத்தனை கோப்புகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற விசயங்களில் கவனம் செலுத்திக்கொண்டுருந்தார்?

1948 ஜனவரி 30 காந்திஜியின் கடைசி தினம்.  அன்று அவர் பிரார்த்தனை கூட்டத்தில் பாடிய ஸ்லோகத்தின் பொருள் இது.

"பிறந்தவர்களுக்கு மரணம் உறுதி.  இறந்தவர்கள் மறுபடியும் பிறப்பது உறுதி.  ஆகையினாலே தவிர்கக இயலாதவற்றைப் பற்றி நீ துயரப்படலாகாது"

அன்று மாலை காந்திஜி சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டுருந்தார்.  ஐந்து மணிக்கு கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டியவர் அன்று பேசிக்கொண்டுருந்ததால் நேரம் போவதே தேரியவில்லை.  எதேச்சையாக கடிகாரத்தை பார்த்த போது மணி ஐந்து பத்து.

"நேரமாகி விட்டது.  பிறகு சந்திப்போம்" என்று அவசரமாக கிளம்பினார்.



மறுபடியும் விதியின் விளையாட்டு?

எப்போதும் அருகில் இருக்கும் சுசிலா நய்யார் பாகிஸ்தான் பயண ஏற்பாட்டுக்கு சென்று இருந்தார்.  எப்போதும் அவர் மேல் அக்கறையாக சாதாரண உடையில் காந்திஜியின் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்த டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்குப் பதிலாக இப்போது மற்றொரு அதிகாரி.

யார் காரணம்? காந்திஜியா? நேருவா? ஜின்னா சாகிப்பா? மவுண்ட் பேட்டன் பிரபுவா? கோடு கிழித்த ஆங்கிலேய கணவானா?  பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து வந்த நேற்று கோடியில் புழங்கிய அடுத்த நாள் புழுங்கியவர்களின் அவஸ்த்தை பேரணி இது.  நாதுராம் கோட்ஸே தொடக்கத்தின் மூலம் இது.  காந்திஜியின் இறப்பு நிர்மூலத்தில் இதுவும் ஒரு காரணம்?

அந்த மாலை வேலையில் அவரும் அவசரமாக கலந்து கொள்ள வேண்டிய கூட்டத்திற்காக வெளியே சென்று விட்டார்.

மனுகாந்தி, ஆபாகாந்தி தோளில் கைப்போட்டுக்கொண்டு சென்ற போது பாதையில் இருந்தவர்கள் இரண்டு புறமும் விலகி வழிவிட்டனர்.  அதுவரையில் ஒரு ஓரமாக அத்தனையும் கவனித்துக்கொண்டுருந்த கோட்ஸே ஒரு முடிவுக்கு வந்தவனாக பின்னால் இருந்து சுடுவதை விட முன்னால் நேருக்கு நேர் நின்று சுடுவது எளிது என்று நினைத்து இரண்டே எட்டி முன்னே பாய்ந்து சென்றான்.



வணங்குகிறேன் ஐயா.  வாழ்த்துகிறேன் தாத்தா.  உங்கள் பணியை நீங்கள் முடித்துக்கொள்வதாக தெரியவில்லை.  உங்களை வழி அனுப்ப எனக்கு வேறு வழியும் தெரியவில்லை.  உள்ளே என்னுள் எறியும் தீக்குஎத்தனை மக்களின் விழிநிரைக்கொண்டு ஊற்றி அணைக்க முடியும்? சொல்லாமாலே உணர்த்திய நாதுராம். 

பாதைக்கு நடுவில் நின்றவன் வந்து கொண்டு இருந்த காந்திஜியை பார்த்து "
நமஸ்தே காந்திஜி"  என்றான்

கொண்டு வந்து இருந்த பைபிளில் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து கூப்பிய கரங்களுக்குள் வைத்திருந்தான்.  அவன் காந்திஜியின் காலில் விழுந்து வணங்கப்போகிறான் என்ற பயந்த மனுகாந்தி அவசரமாக " சகோதரரே விலகுங்கள்.  பாபுஜிக்கு ஏற்கனவே பிரார்த்தனைக்கு தாமதமாகிவிட்டது  "என்றார்.

அதே வினாடி நாதுராம் வினாயக கோட்ஸேயின் இடது கரம் மின்னல் வேகத்தில் நீண்டு அவளை முரட்டுத் தனமாக விலக்கித் தள்ளியது.  வலது கரத்தில் இருந்து நீண்ட பெரட்டா துப்பாகியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குண்டுகள் கிளம்பி காந்திஜியின் மார்பில் புதைந்தன.




கோட்ஸேவுக்கு பதில் வணக்கம் தெரிவிகக குனிந்த கரங்கள் அப்படியே இருக்க "ஹே ராம்"  என்று திணறிய காந்திஜி இன்னும் முன்னால் செல்ல முயற்சிக்கின்றவரைப் போல மேலும் ஒரு அடி முன்னால் வைக்க முயற்சித்த உயிரற்ற உடலாகக் கீழே சரிந்தார்.

ஆம் காந்திஜி என்ற அந்த எளிய மனிதரோடு அஹிம்சை, சத்தியம், உண்மை அத்தனையும் சரிந்தது.

ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் என்கிற பத்திரிக்கை முதல் பக்கத்தை காலியாக கருப்புக் கட்டம் போட்டு நடுவில் ஒரே ஒரு பாரா அளவுக்கு செய்தி வெளியிட்டு இருந்தது.

" காந்திஜி எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ அவர்களில் ஒருவனால் கொல்லப்பட்டு விட்டார்.  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்ட அதே வெள்ளிக்கிழமையன்று, 1915 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது சிலுவையேற்றம் நடந்துள்ளது.  ஆண்டவனே, எங்களை மன்னித்து விடு."

பின்குறிப்புகள் அல்லது எழுத்தில் வராத விசயங்கள்

1. காந்தியின் நோக்கங்கள், கொள்கைகள், தனிப்பட்ட வாழ்வில் கடைசி வரையிலும் கடைபிடித்தவைகள், மகனிடம், பேரனிடம் காட்டிய கண்டிப்பின் விளைவாக இழந்தவைகள், மற்ற நகைச்சுவை சமாச்சாரங்கள்.  ஆனால் மொத்தத்தில் அவர் சராசரி மனிதர்களின் வாழ்க்கையை உணர்த்தக்கூடிய உள்வாங்கக்கூடிய குறியீடு அல்ல.  தவமில்லா பெற்ற வரம்.  அதனால் தான் சாபக் கணக்கில் வரவு வைத்தோம்.

2. ஜின்னா சாகிப் அவர்கள் பாகிஸ்தான் என்ற தன்னுடைய கனவு கைக்கு வந்ததும், புதிய பாகிஸ்தானின் தொடக்க தேசிய கீதத்தை இவர் தான் இயற்ற வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்த ஒரு இந்துக் கவிஞர்.  முதல் 18 மாதங்கள் அந்த கீதம் தான் ஒலித்தது.

3. ஜின்னா சாகிப் தன்னுடைய கடைசி வாழ்நாள் வரைக்கும் வாழ்நாளில் நான் செய்த மகா மிகப் பெரிய தவறு என்பது இந்தியாவை பிளவு படுத்தியது என்று புலம்பிக்கொண்டுருந்தது.

4.  ஜின்னா சாகிப் அவர்களின் தனிப்பட்ட கொள்கைகள், குணாதிசியங்கள், உடம்பு முழுக்க நோய் என்பதைத்தவிர வேறேதும் இல்லா போதும் அவருடைய நோக்கத்திற்காக எடுத்துக்கொண்ட பாதைகள்.

5.  பாகிஸ்தான் என்ற நாட்டில் வாழக்கூடிய மக்கள் "  மதம் என்பதைக் கடந்து மனிதப்பண்புகளுடன் வாழ்ந்தால் தான் கடைசி வரை இந்த நாடு முன்னேற்றம் அடைவதற்குண்டான் வழியாக இருக்கும்.  எதிர்காலத்தில் இப்போது மதம் சார்ந்த பாகிஸ்தானாக இருக்கக்கூடாது? " என்ற நிதர்சன குறீயீட்டை அன்றே அவர் வெளியிட்ட மனசாட்சி குறித்து.

6.  நிஜாம் மற்றும் ஹரிசிங் மன்னர் குறித்து.  அளிக்கப்பட்ட தகவல்கள் நாலில் ஒரு பங்கு மட்டுமே.

7,  கலவரத்தின் போது முஸ்லீம் மற்றும் சீக்கியர்களின் முழுமையான கோரத்தாண்டவம், பின்புலம், தனிப்பட்ட நபர்கள் அடைந்த லாபங்கள், குணாதிசியங்கள், மொத்த மக்கள் அடைந்த துன்பங்கள்.

8, வெகுஜன ஊடகத்தால் இன்று வரையிலும் சரியான முறையில் வெளிவராத வீர் சாவர்க்கர் குறித்த குறிப்புகள்.  கடைசி வரையிலும் அவர் ஒரு அவதாரமாகவே வாழ்ந்தார்.  மதப்பற்று என்பது ஜின்னாவைப் போல அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்த போதிலும், தன்னுடைய கொள்கைகளுக்காக ஜின்னாவைப் போல சாமான்யன் வாழ்க்கையை பாதிக்கப்படச் செய்யவில்லை.  அவரது முக்கிய குறிகோள் முஸ்லீம்களாக இருந்தாலும் தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவரது அழிப்பில் இருந்து தப்பிக்க முடியவில்லை.  ஆங்கிலேயர்கள் உட்பட.


1. இடுகை என்பதும் பதிவு படைப்புகள் என்பதும் தேவைதானா?  என்ன சாதித்து விடப்போகின்றோம்?

தினந்தோறும் நாள்குறிப்பாக உங்கள் டைரியில் எழுதிக்கொள்ளும் போது அது உங்களின் அந்தரங்கம் குறித்ததாக உங்களுக்கு மட்டும் சொந்தமாகி விடுகின்றது.  அதுவே நீங்கள் உள்வாங்கிய விசயங்களை படைப்புகளாக எழுத முற்படும் போது உங்களின் உண்மையான திறமை, ஆளுமையினால் வளர்ந்துக்கொண்ட உங்களின் சிந்தனைகளில் உள்ளே இருப்பது வெறும் வக்கிர எண்ணங்களா? வடிகாலுக்கான விசயங்களா? படிப்பவர்களை சிரிக்க வைத்து அவர்களின் ஆயுளை கூட்டுவதற்காகவா? இல்லை சமூக அக்கறையினால் உருவாகும் சிந்திக்கக்கூடிய விசயமாக இருக்கிறதா? இல்லை புகழ் போதையினாலா என்பதை உணர்த்தி வாசிப்பாளர்களை உள்வாங்க வைத்து விடும்.

2. நன்றாக எழுத வேண்டும் என்று முற்படும் போது?

நீங்கள் வாசிக்கும் அல்லது பார்க்கும் எந்த ஊடகமும் உங்களின் உணர்ச்சிகளை தூண்டாது.  உண்மைகளை தேடி அலையத் தொடங்கும். வசதியான வாழ்க்கை அமையாவிட்டாலும் உண்மையான வாழ்க்கையை உணர்ந்து வாழ உங்களை அமைதிப்படுத்தும்.  வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையை குறை நிறைகளுடன் நேசிக்கத் தூண்டும். எழுதுகின்ற எழுத்து என்பது காசு வாங்காத மன நல மருத்துவர்.

3. விமர்சனம் என்பது? ஏன்?

எழுத வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கும், முயற்சித்துக்கொண்டுருப்பவர்களும், முடியவில்லை என்று அங்காலாய்ப்பில் சலித்துக்கொள்பவர்களும் உள்வாங்கியதை விமர்சித்துப்பாருங்கள்.  என்ன விமர்சனம் என்பதை விட உங்கள் உள்வாங்கிய, உள்வாங்கும் தகுதி என்ன என்பதை அப்பட்டமாக உணர்த்திவிடும்.

நீங்கள் அளிக்கும் ஓட்டு முறை என்பது நீங்கள் உள்வாங்கியது பிடித்தமானது என்பதை உலகறியச் செய்வதற்காக நீங்களும் படியுங்கள் என்று படிப்பவர்களை அதிகப்படுத்தும் முயற்சி. 

இவர்கள் என்னை வளர்த்தவர்கள், வாழ்ந்து கொண்டுருக்கின்ற வாழ்க்கையை எழுத்துலக வாழ்க்கையை வளப்படுத்தியவர்கள்.   விமர்சனம் தந்த காரணத்தால் முக்கியமானவர்கள் அல்ல.  இவர்களின் அத்தனை பேர்களின் இடுகையை சமயம் கிடைக்கும் போதெல்லாம் படித்து என்னுடைய படபடப்பை குறைத்துக்கொள்கிறேன். காரணம் சிரிக்க வைக்கின்றார்கள், சிந்திக்க வைக்கின்றார்கள், குறைகளை சுட்டிக்காட்டுகிறார்கள், போக வேண்டிய பாதையை தங்களுடைய எழுத்தால் குறிப்பால் உணர்த்துகிறார்கள்.  இவர்களைப் போல் நண்பர்களாக இணைந்தவர்கள்,  ரீடரில் ஒற்றை இலக்கத்தில் இருந்த எண் இன்று இரண்டு இலக்கமாக மாறியதற்கு காரணம் அத்தனையும் இவர்கள் தான் முக்கிய காரணம். கண்ணீர் அஞ்சலியில் கலந்து கொள்வதற்கு முன் நீங்கள் இவர்களை  உள்வாங்கிப்பாருங்கள்.  இல்லத்தை பிடிக்காதவர்கள் கூட உங்கள் உள்ளத்தில் இவர்களுக்கு இடம் கிடைக்கக்கூடும்.

1. அதிகபிரசங்கி தனமான தொடக்க எழுத்துக்களை தன்னுடைய காந்திய தன்மையால் கரை சேர்த்தவர். உறவான வழிகாட்டி.

2. எல்லாமே விஞ்ஞானப்பார்வை என்றாலும் என்னுடைய திசைகாட்டி.

3. உறங்கிய சுதந்திர உண்மைகளை நீங்களும் உள்வாங்கலாம் என்று உலகிற்கு உரைத்த உத்தமர் குழு.

4. அப்பொழுதே நன்றாகத்தான் இருக்கும் என்று வழிமொழிந்தவர்

5. விமர்சனங்கள் தேவையில்லை.  அப்பாற்பட்டது என்று அக்கறையின்பால் சொன்ன பெரிய வார்த்தைகள் தந்த ஆசிரியை.

6. அருகில் இருந்தாலும் அமைதியாய் ரசித்துக்கொண்டுருந்தவர்? சத்திய வார்த்தைகளை எப்படி விமர்சிப்பது என்ற தோழி.

7. இலங்கை குறித்து எழுதியே ஆகவேண்டும் என்று சிந்திக்க சொல்லி தந்தவர்கள் 1, வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்கையை மாணவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டுருப்பவர்.   2. பக்கத்து ஊரை பரவசமாக சொன்னவர். அவலத்தை உணர்த்தியதால் பல நாட்கள் தூக்கம் கெடுத்தவர்.
8. அலட்டிக்கொள்ளாமல் ஆச்சரியப்படுத்தியவர் இவர்.

9. கந்தா போற்றி,

10.  முன்னோக்கி உங்களை அழைத்துச் செல்பவர்

11.  பதிவும் சரி இயக்கும் படமும் சரி அளிக்கும் விமர்சனமும் சரி நமக்கு பாடம்.

12. வாழும் நிகழ்காலத்தை உணர்த்தியவர்.

13. சீக்கிரம் உரிக்க மாட்டார்.  உரித்தால் சிரிக்க வேண்டும் அல்லது அழ வேண்டும்.

14. அடுத்த ப்ளைட் பிடித்து வந்து ஆட்டோகிராப் கேட்பாரோ?


16.  வாழும் வாழ்க்கையும் செய்யும் தொழிலும் பகுத்தறிவு பாதை.

17. வலைதள சூட்சமத்தை சொல்லித்தந்த குரு.


19. தமிழ் சொல்லித்தாருங்கள் என்றவர்.

20. நான் எழுதக் காரணமாக இருந்த பிரபல்யம்.

21. என் தகுதியை உணர்த்திய பிரபல்யம்.

22. பேசிய பிரபல்யம்.

23. எழுத வேண்டும் என்ற சக்தியை அளிப்பது.

24.  திருந்தாமல் திசை தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கையை அக்கறைபடுத்தியவர்கள். ஆளுமை செய்து கொண்டுருப்பவர்கள்.

ஆனால் படைப்பு என்பதை ஒரு நாள் அத்தனை பேர்களும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று படைத்துக்கொண்டுருப்பவர்.



ஜோதிகணேசன். தேவியர் இல்லம்.  திருப்பூர்.

வணங்குகிறேன்.  வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.  வளர்க நலமுடன்.

Friday, October 16, 2009

அச்சமில்லை அச்சமில்லை

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (50)

மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (7)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (50)

" இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி புண்ணாக்கி வைத்து விட்டார்களே?" என்ற வசனம் காந்தி காலத்திலும் நடந்து இருக்கிறது.  காந்திஜி கூட்டும் பிரார்த்தனை கூட்டத்துக்கு வந்து கொண்டுருக்கும் ஒரு முஸ்லீம் அன்பர், "  பாபுஜி, பாகிஸ்தானில் இருந்து இங்கு ஓடி வந்த இந்துக்களும், சீக்கியர்களும் தங்கள் தலைமையில் 50 மைல் தூரத்திற்க்கு ஊர்வலமாக சகோதரர்களாய் கைகோர்த்து நடந்து வருவதை நான் என்னுடைய மனக்கண்களால் பார்க்கின்றேன்,  ஆஹா என்ன ஒரு அற்புதமான காட்சி அது"  என்றார்.

இது போதாதா காந்திஜிக்கு.

ஏற்கனவே காந்தி விரும்பிக் கொண்டுருந்த திட்டம் அது.  பாகிஸ்தானுக்கு போக வேண்டும்.  அங்குள்ள சூழ்நிலையை தானே நேரில் சென்று காண வேண்டும்.  காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்து சுதந்திரப்போராட்டத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இந்தியாவில் பெரும் பயணம் மேற்கொண்டவர்.  காரணம் பயணம் என்பது நிறைய விசயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும்.

அதுவும் சராசரி மக்கள் பயணிக்கும் பாதையில், அவர்கள் உடன் பயணிக்கும் போது இன்னமும் நம்மை நெருங்கச் செய்யும்.  அதனால் தான் அவர் பிர்லா மாளிகையில் தங்கி இருக்கும் போதே அதிபர் பிர்லாவிடம் கேட்டார்.

"  நான் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் " என்று.
கேட்டது தான் தாமதம்.  அவர் பின்னங்கால் பிடறி தெரிக்க ஓட்டம்பிடித்தார்.  பிறகென்ன அவனவன் கொலை வெறியோடு அலைந்து கொண்டுருக்கும் போது, அவஸ்த்தைகளுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் போது பயணமாவது ஒன்றாவது என்று பிர்லா மனதிற்குள் நிணைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

ஆனால் காந்தி விடுவதாய் இல்லை.  தன்னுடைய மருத்துவரான சுசீலா நய்யாரிடம்  " எல்லா ஏற்பாடுகளையும் கவனித்து முடித்து விட்டு நான்கு நாட்களில் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி வந்து என்னுடைய பிரார்த்தனை கூடடத்தில் கலந்து கொள்  "என்று அனுப்பி விட்டார்.



தன்னுடைய உண்ணாவிரத்தை முடித்துக்கொண்ட போது தான் கொடுத்து இருந்து ஏழு கொள்கைகளில் ஒன்று ஜனவரி 27ம் நாள் குவ்வாத் உல் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி அவஸ்யம் கொண்டாடப்பட வேண்டும் என்பது.


ஆமாம் அடிமை மன்னரும், டெல்லியின் முதல் சுல்தானுமான குத்புதீன் என்பவரது நினைவு நாள் அன்று.

 டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூதியில் வருடம் வருடம் அந்த நிகழ்ச்சிகளை கொண்டாடப்பட வேண்டும் என்பது அவரது ஆசை.  டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூதியில் வருடம் வருடம் அந்த நிகழ்ச்சியை கொண்டாடப்படுவது வழக்கம்.  ஆனால் இப்போது உள்ள கலவர சூழ்நிலையில் அந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதா?  என்று அத்தனை தலைவர்களும் யோசித்துக்கொண்டு இருந்தனர்.


காரணம் பழைமையான   27 இந்து மற்றும் ஜெயின் ஆலயங்களில் இருந்து இடிக்கப்பட்ட பொருட்களில் இருந்து கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த மசூதி தான் இந்தியாவிலேயே பழமையானது.  பிரச்சனையான இடமும் கூட.                                                     Qila – e – Kuhna Mosque
(கலாச்சாரம் என்பது வெறும் செங்கல் அல்லது கட்டிடம் மூலம் புலப்படுவது அல்ல.  இடிப்பதும், உடைப்பதும் உங்களுக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்.  பின்னால் வருகிறவர்களின் கண்ணீர் காவியங்களுக்கு நீங்கள் எழுதி வைத்த முன்னுரை)
ஆனால் காந்திஜியை போன்றே புரிந்து கொள்ளப்படாத நிகழ்ச்சி அன்று நடந்தது. நடந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்வது?

காந்திஜி வெற்றிகரமாக சந்தோசமாக தன்னுடைய பேத்திகள் (கைத்தடிகள்) என்று கூறப்பட்ட அபா காந்தி, மனு காந்தி புடை சூழ மசூதியின் உள்ளே சென்றார்.  அது மட்டுமல்ல.  அந்த இரண்டு பெண்களும் எல்லா இடங்களுக்கும் காந்திஜி உடன் செல்ல அங்கே இருந்தவர்கள் அனுமதித்தது முதல் ஆச்சரியம்.

பதினைந்து தினங்களுக்கு முன்னால் இதே இடத்தில் கிர்பான் என்று வாளுடன், கத்தி போன்ற ஆயுதங்களுடன் அலைந்து திரிந்த முஸ்லீம் சீக்கிய மக்கள் இருவரும் கட்டிப்பிடித்து தங்களுடைய ஆனந்த ஆசீர்வாத பறிமாற்றத்தை பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர் என்பது இரண்டாவது ஆச்சரியம்.

மொத்தத்தில் உள்ள வினோதமான ஆச்சரியம் பக்கத்தில் உள்ள இடங்களில் தேநீர், சிற்றுண்டி வகைகளை இலவசமாக வழங்கி சீக்கியர்கள் வந்து போகின்ற அத்தனை முஸ்லீம் மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதைப் பார்த்த காந்திஜிக்கு பொக்கை வாய் முழுக்க ஒரே சிரிப்பு தான் போங்கள்?

" இதே போல் அணைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்"  என்று கம்பீர உரை நிகழ்த்தினார்.

பிர்லா மந்திருக்கு திரும்பி வந்த காநிதிஜி பின்வருமாறு அன்று இரவு தமது டைரியில் எழுதினார்.


" இந்த குண்டு வெடிப்பில் இருந்து ஆண்டவனது கருணையால் நான் தப்பித்துக்கொண்டேன்.  ஆனால் எப்போது என்னை ஆண்டவன் அழைக்கிறாரோ அப்போது நான் தயாராயிருப்பேன்.  பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நான் டெல்லியை விட்டுப் போகப் போவதாக நினைத்துக்கொண்டு இருக்கின்றேன்.  ஆனால் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை.  யாருக்குத் தெரியும்?  நாளைக்கு என்ன நடக்கும் என்று?"

அதேசமயம் நாதுராம் கோட்ஸே ஒரு முடிவுக்கு வந்து இருந்தான்.

" மொத்தமாக கூட்டமாக சேர்ந்து செயல்பட முடியாது.  நான் ஒருவனே போதும்.  கூட்டணி என்பது எப்போதுமே பிரச்சனை தான்?  அது வீணான சிக்கல்கள் உருவாகும்.  அது போன்ற சிக்கல்கள் இனிமேலும் உருவாகக்கூடாது.  காலம் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.  இறுதி வெற்றி மட்டும் தான் நமக்கு முக்கியம்"  என்று தன்னுடைய கூட்டணி மக்களுடன் கலந்துரையாடினான்.

அனைவரும் நாதுராம் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.  ஆனால் நாதுராம் விரும்பிய ஒரு கைத்துப்பாக்கிக்குத் தான் அதிகம் சிரமப்பட்டனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் அலைந்தனர்.  அவர்கள் விரும்பியபடி அது அவர்களின் கையில் அத்தனை சீக்கிரம் கிடைத்தபாடில்லை,

அவர்களின் நினைவுக்கு கடைசியாக வந்தவர் ஒரு மருத்துவர்.  குவாலியர் நகரில் உள்ள ஹோமியோபதி டாக்டர். தத்தாராய் பர்க்கூர் என்பவர்.

அவர் தீவிரமான ஆர்.எஸ்,எஸ். அனுதாபி.  இவர்கள் மொத்த பேர்களும் அவர் வீட்டை அலைந்து திரிந்து கண்டு பிடித்த நேரம் நடு இரவு தாண்டி பின் இரவு நேரம்.  ஆனால் வந்தவர்களை ஏமாற்ற விரும்பாமல் (பிதா மகன் (?) ) தன்னிடம் உள்ள கருப்பு பெராட்டா தானியங்கி கைத் துப்பாக்கியை கொடுத்தார்.

அது காந்திஜியை கொல்வதற்க்காக உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம்.

ஆயுதம் கைக்கு வந்தாகி விட்டது.  ஆனால் கூட்டணியில் உள்ள எவருக்கும் இதற்கு முன் சுட்டு பழக்கம் இல்லை.  என்ன செய்வது?  சுட்டுப் பழக வேண்டும்.  மேலும் இந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யுமா? என்று அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது.  டெல்லி வந்தடைந்தனர்.

வந்து இறங்கியதும் சுட்டுப் பழக எந்த இடத்தை தேர்ந்து எடுப்பது? என்று அனைத்து டெல்லி தெருக்களை பார்த்து அலைந்து திரிந்தனர்.  அனைத்து இடங்களில் இடப்பெயர்ச்சியின் காரணமாக


  எங்களை வந்து போட்டோ புடுக்கிறீங்க?  பின்னால பாகிஸ்தானில் இருந்து வர்றவங்க எல்லோரும் ரயில்ல தொத்திக்கிட்டு வர்றாங்க.  அந்தப்பக்கம் போங்க ஜி. (பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் ஒரு சின்ன சாம்பிள்  இது.  ஆனால் ஒரு இடுகை முழுவதும் மொத்த அவலத்தை புகைப்படமாக போட்டால் நாதுராம் உருவான காரணங்கள் புலப்படலாம். )

மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிந்தனர்.  கடைசியாக வேறு வழியே இல்லாமல் அவர்களுக்கு அமைந்த இடம் காந்திஜி தங்கியிருந்த பிர்லா மாளிகையின் அருகே இருந்த காடு போன்ற பகுதி.  ஆள் நடமாட்டம் என்பது
அதிகம் இல்லாமல் இருந்த இடம்.  அவர்களுக்கு வசதியாய் போய் விட்டது.



உள்ளே இருந்த ஒரு மரத்தை தேர்ந்து எடுத்து அதில் ஒரு மனிதன் உருவம் வரைந்து அதில் நாதுராம் இருபது அடி தொலைவில் நின்று கொண்டு சுட்டான்.

டெல்லியின் முதல் மசூதி இது.  அவருக்கு வெற்றிச்சின்னம்.  இன்று வரை அவஸ்த்தை பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு?

ஆச்சரியம்.

இது வரையில் முன் பின் துப்பாக்கியே சுட்டுப் பார்த்து பழகியிருக்காத நாதுராம் கோட்ஸே சுட்ட துப்பாக்கி குண்டுகள் நான்கும் ஒன்றன் பின் ஒன்றாக அந்த வரைந்த படத்தின் மார்பில் சரியாக போய் துளைத்து நின்றது.

" அற்புதம்.  அட்டகாசம்.  மிக நன்றாக சுடுகிறாய் நாதுராம் " என்று பாராட்டினார்கள் அவனுடைய நண்பர்கள் ஆப்தேயும் கார்கேயும்.

ஆமாம்.  காந்திஜி இறப்பதற்கு இன்னும் 72 மணிநேரம் மட்டும் தான்
இருக்கிறது.



குறி தவறவில்லை.  ஆனால் மனித மாண்புகள் பெற்ற அத்தனை குறியீடும் மட்டும் தான் தவறி விட்டது.  இன்று வரைக்கும்?

பினாமிக்கு பின்னால் பெரிய ஆணி



இந்திய பாகிஸ்தான் பிரிந்து போவதற்கு முன்னால் உள்ள இந்திய ஆடையின் அளவு இது.

மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (6)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (49)

ஆன்மீகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அவன் உள்வாங்கியதன் உச்சம் என்பதாக கருதப்படுகிறது.  காரணம் அந்த தனி மனிதனின் வாழ்க்கை நீ வெறும் எச்சம் தான் என்று உணரும் போது தான் அத்தனை பேர்களும் அந்த பயத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள்.  அறிந்தவன் மேன்மேலும் உச்சத்தை அடைகின்றான்.  அடையாதவன் அல்லது விரும்பாதவன் அவஸ்த்தைகளை இனம் பிரிக்கத் தெரியாமல் குழப்பம் அடைகின்றான்.

இல்லை இது தவறானது?

வளர்ந்த விஞ்ஞானமும், நாம் கொண்ட பகுத்தறிவும், அறிவு என்பது மட்டுமே உண்மை என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு ஒரே ஒரு செய்தி?

இறப்பு என்பது உறுதிபடுத்தப்பட்டது?

இன்றளவும் எந்த நவீன விஞ்ஞானமும் அதை மாற்ற முடியவில்லை.  தள்ளிப்போட வேண்டுமானால் முடியலாம்.  ஆனால் அதைக் கிள்ளி அந்தப்பக்கம் ஒதுக்கிவிட முடியாது?  ஆனால் இந்த இறப்பு என்பது நம்மிடம் வந்து சேரும் போது இயற்கை முறையினாலா? அல்லது உருவாக்கப்பட்ட செயற்கை முறையிலா? என்ற கோட்பாடுகளில் தான் இன்று வரையிலும் அத்தனை நம்பிக்கையாளர்களும் தான் கொண்டுள்ள எண்ணம் சரிதான் என்று உறுதிபடுத்திக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இவன் இப்படித்தான் போவான் என்று அப்பொழுதே தெரியும்

செய்த பாவம் நிம்மதியா விட்டுடுமா?

அடப்பாவி இவனுக்கு இப்படி ஒரு சாவா?  தப்பித்து விட்டானே?

இவருக்கு இப்படி ஒரு சாவா?  சாமிங்றது சத்தியமா இல்லப்பா?

எத்தனை எத்தனை உரையாடல்கள் நம் வாழ்வில்?

காந்திஜியைப் பொறுத்தவரையில் சராசரி மனிதர்களை விட தன்னுடைய வாழ்க்கை முறைகளை மிகுந்த அக்கறையுடன் முடிந்தவரையிலும் ஒழுக்கமாய் உண்மையாய் வாழ்ந்தவர்.  அவருடைய வாழ்க்கை முறை என்பது மற்றவர்களுக்கு ஏற்புடையது அல்ல.  ஏன் தொடக்கத்தில் ஆண்ட தலைவர்கள் கூட எரிச்சல் படத்தான் செய்தனர்.  என்றபோதிலும் அவருடைய இறப்பு என்பதை விதி நோக்கில் பார்த்தால் சற்று வியப்பாகத் தான் இருக்கிறது?

அவருடைய சாவு என்பது குறிப்பிட்ட நாளில் உறுதிபடுத்தப்பட்டது என்றாலும் அவருடைய இறப்புக்கான வழிமுறைகள், முன்னால் நடந்த நிகழ்ச்சிகள், அதன் சார்பான கோர்வை நிகழ்ச்சிகள் அத்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு கனக்கச்சிதமாக அவரை அந்த இடத்திற்குத் தான் அழைத்துச் சென்று உள்ளது.

ஒரு வகையில் அவருடைய சாவுக்கு அவரே தான் காரணம்.  அதிகமாக உள்ள நல்ல எண்ணங்கள் தான் முதன்மையாக இருக்கிறது.  தேடி வந்த அதிகாரிகளின் அக்கறையை வெறுத்ததும், வெறுக்கப்பட்ட மக்களை விழிப்புடன் பார்க்கத் தவறியதும் என்று தொடரும் அத்தனை விசயங்களும் அவருக்கு அவரே போட்டுக்கொண்டு கயிறு.  ஆனால் அதை பாசக்கயிற்றாக பார்த்த விதத்தை விதி என்பதில் கொண்டு வந்து முடிப்பதா?  அவரின் விவேகமற்ற செயல் என்று ஆத்திரப்படுவதா?

கருப்பருக்காகவே உண்மையாய் போராடிய அமெரிக்க அதிபர் ஏன் குண்டு மூலம் உயிர் போனது?

இன்று ராஜபாட்டை போட்டுக்கொண்டுருக்கும் புதிய பொருளாதார தத்துவத்தை தொடக்கப்புள்ளியில் கொண்டு வந்த ராஜிவ் காந்தியின் மரணம் ஏன்?

ஆளுமை என்றால் என்ன என்று தெரியாத தலைவர்கள் மத்தியில் அன்னை இந்திரா காந்தியின் மரணம்?

அரசியல் காலாவதியான கணக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள்?

அழுது புலம்புவதால் ஒன்றுமில்லை என்ற கீதையை பின்பற்றுவதா?

கற்பித்தவன் அயோக்கியன் முட்டாள் என்ற பெரியாரை பின்பற்றுவதா?

இல்லை இது ஒரு விமோசனம்  என்பவர்களை நம்புவதா?

இது ஒரு சராசரி நிகழ்வு.  அடுத்த கடமையில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்க்கையை உண்மையாக வாழ வேண்டும் என்பவர்களை பின்பற்றுவதா?

மொத்தத்தில் மரணம் என்பது ஒரு பெரு விடுதலையாகத் தான் தெரிகிறது.

நம்பிக்கொண்டுருக்கும் பாசம், உயிராகக் கருதும் உறவுகள், உன்மத்தம் முழுக்க நிரம்பி வழியும் ஆக்ரோசம், அலைந்து அத்தனை பேர்களையும் தன்னுடைய அகங்காரத்தால் அழிக்க நினைக்கும் நபர்கள், தேடித்தேடி அலைந்து சேர்த்த சொத்துக்கள், தன் பெயர் இல்லாத போதும் கூட பினாமி என்ற கோட்டையை உருவாக்கும் உன்னத தலைவர்கள் என்று எவருமே இந்த விமோசனத்தை பார்த்து இன்று வரை பயப்படாமல் வாழ்ந்து கொண்டுருப்பது மகா பெரிய ஆச்சரியமாய் அதிசமாய் இருக்கிறது.



ரொம்ப குசும்பு தான்.  சின்னதா படத்தை போட்டா எங்களுக்குத் தெரியாதா?  இருட்டுக்குள் ஓளிரும் இந்தியா?

பிண ஊர்வலம் போய்க்கொண்டுருக்கும் ஊர்வலத்தில் கூட அடுத்த அதிகார போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வரும் அழகையை மீறி அருவருப்பாகவும் இருக்கிறது.

இதில் மகள், மகன், மனைவி, அம்மா, அப்பா, நட்பு, உறவு என்ற எந்தவித பாகுபாடும் இல்லை.

அன்றாடம் ஊடக செய்திகளை உள்வாங்கிப் பாருங்கள்.  உன்னத உறவுகள் என்ற போர்வையில் உள்ளவர்களின் யோக்கியதை தெரிந்து விடும்?

கடமைகள் என்ற வார்த்தைகள் என்றுமே நமக்கு கலக்கம் என்ற வார்த்தைகளை அறிமுகம் செய்யாது.  கண்ணீரில் கூட கிளிசரின் கண்ணீர் என்று பல வகை கண்ணீர்  இருக்கிறது.  ஆனால் விமோசனம் பெற்றவர் உருவாக்கிய வழி அல்லது வலி என்பது காலம் காலமாக நம்மை கழுவேற்றிக்கொண்டுதானிருக்கிறது.




அண்ணே நீங்க கவலைப்படாதீங்க?  கீழே உள்ள படத்தைப் பாருங்க.  அந்த திட்டம் முடிந்தவுடன் உங்க நலவாழ்வு திட்டம் தான் கையில எடுத்துக்கப் போறோம்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.

கொள்கையாளர்களின் பார்வை என்பதில் எந்த தவறும் இல்லை.

காரணம் அத்தனை வலி நிறைந்த வாழ்க்கை அனுபவம் அது.  அதிகமான வலி என்பது இறுதியில் வன்மத்தை தரும்.  இல்லாவிட்டால் புத்தியை பேதலிக்கச் செய்து விடும்.  வன்மத்திற்கு அறிவாளி, படிப்பாளி, பாமரன் என்ற பாகுபாடு என்பதெல்லாம் இல்லை.  அதனால் ஒரு வகையில் அவர்களின் புத்தி பேதலித்த காரணத்தால் உணர்ந்தவைகளை தரம் பிரிக்கத் தெரியாமல் தராதரம் இல்லாத இந்த செயல்களை செய்து விட்டார்கள் போல?

ஆனால் இன்று காந்தி இல்லை.

இன்றைய நிலைமையில் காந்தியின் கொள்கைகள் என்பது கூண்டுக்கு அருகே சென்று நிற்பவனுக்கு மட்டும் தான்?  காரணம் நீதி வழங்குபவர் கூட பார்க்க முடியாது.  அவருக்குப் பின்னால் இருப்பதால் அவருக்கும் கவலையில்லை.

காந்தி காலத்தில் வாழ்ந்த இயங்கிய இயக்கங்கள் இன்று வரையிலும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

அன்று அவர்கள் கண்களுக்குத் தெரிந்து அத்தனை அயோக்கியத்தனமும் இன்றும் நடந்து கொண்டு தானே இருக்கிறது?

சொல்லப்போனால் இப்போது தான் அதிகமாக நடந்து கொண்டுருக்கிறது.  ஆனால் இந்த இயக்கங்களின் பங்களிப்பு என்பது என்ன?  எவரின் நல்வாழ்வு இவர்களால் முன் நிறுத்தப்படுகிறது?  அடிப்படையில் எந்த வசதியும் இல்லாமல் வாடிக்கொண்டுருக்கும் பாமரன் பரம ஏழையாகத் தானே இன்று வரையிலும் உழன்று கொண்டு இருக்கிறான்?

இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் எந்த மதமாக இருக்கட்டும்.  நாங்கள் உங்களுக்காகத்தான் என்று சொல்லிக்கொண்டு வாழ்பவர்கள் என் சாதித்தார்கள்?  என்ன சாதிக்கப் போகிறார்கள்?

அப்படி என்றால் அன்றைய தினம் காந்தியை சுட்டுக்கொன்று விட்டால் எல்லாமே பழைய நிலைமைக்கு வந்து விடுமா?  நோக்கம் தான் என்ன?

ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வைத்துருக்கும் கணக்கில் வராத சொத்துக்கள் என்பதும், புழங்கிக்கொண்டுருக்கும் பணம் என்பதும் எத்தனை எத்தனை கோடிகள்.  உழைத்து சம்பாரித்து கள்ளப்பணமாக வரிக்கு பயந்து கொண்டு வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் தவறானவர்களாக தெரியவில்லை?  ஆனால் நல்வாழ்வு தொண்டு நிறுவனங்களின்  நோக்கம் என்பது மக்களின் நல்வாழ்க்கை என்றால் நல்ல வாழ்க்கை வாழாமல்  தெருக்கோடிக்கு வந்தவர்களை எப்போது சேர்த்த பணத்தை இவர்களுக்காக செலவழிக்கப் போகிறார்கள்?

மக்கள் வாழும் வாழ்க்கை என்பது வேறு?  தலைவர்கள் கொண்டு வாழும் கொள்கை என்பதும் வேறு?



அன்றும் இன்றும் என்றும்?

நோக்கம் ஒன்று மட்டும் தான்.

நல்வாழ்வு.

தலைவர்களின் குடும்பம் என்பதற்கு மட்டுமா?  மக்களின் குடும்பம் என்பதற்கு மட்டுமா?

அதனால் தான் இதையெல்லாம் மனதிற்குள் உணர்ந்த காந்திஜி ஒரு அளவிற்கு மேல் யோசித்து மண்டை உடைத்துக்கொள்ளக்கூடாது என்பது போல் அவருடைய அடுத்த நிறைவேற்ற வேண்டிய கனவுக்கு காத்துக்கொண்டுருந்தார். ஆனால் கனவில் இருந்தாரே தவிர அவரை நோக்கி வந்து கொண்டுருந்த காலனை கண்டு கொள்ளாமல் தான் வாழ்ந்தார்.

இந்தியா வளர்ந்து கொண்டுருக்கும் நாடு.  வெளியே இருந்து பார்க்கும் போது.  சுதந்திர காலத்தை விட இன்று இந்தியா வளர்ந்த நாடு.  உள்ளே இருந்து பார்க்கும் போது?


உண்மை தான் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அலைபாயும் மொத்தக்கூட்டம் 50 கோடி.  காலில் செருப்பு கூட போட வக்கில்லாமல் வாழும் கூட்டம் 40 கோடி.  அப்படி என்றால் மீதி கணக்கு.  அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்த வாழும் மகாத்மாக்கள்