Showing posts with label அமேசான் மின்னூல். Show all posts
Showing posts with label அமேசான் மின்னூல். Show all posts

Friday, August 14, 2020

அந்த 42 நாட்கள்

சம்பவம் நடந்த போது, சம்பவம் நடத்த களத்திலிருந்து போன்ற வார்த்தைகள் ஊடகங்கள் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது நம் மனநிலை எப்படியிருக்கும்?


Saturday, February 15, 2020

அ என்றால் அரசியல்

பணத்துக்கும், பதவிக்கும் விலை போன அந்த அமைச்சரா பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கப் போகிறார்? அவரா சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சமரசமின்றி உழைக்கப் போகிறார்? நாணயத்துடனும், நன்னடத்தையுடனும் பணியாற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கு அந்த அமைச்சரா அறிவுறுத்தப் போகிறார்? ஜனநாயக மாண்புகளையும், ஜாதி - மத பேதமற்ற கொள்கைகளையும் அவரா உயர்த்திப் பிடிக்கப் போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த அமைச்சரா புரையோடிக் கிடக்கும் ஊழலை ஒழிக்கும் புருஷோத்தமராக உருவெடுக்கப் போகிறார்?

"நாணயம், நேர்மை என்றெல்லாம் ஒரு சில விஷயங்கள் முன்னொரு காலத்தில் இருந்ததாமே' என்று எதிர்காலத் தலைமுறையினர் வியப்புடன் பேசிக்கொண்டிப்பார்கள்.

அதற்கான முன்னோட்டத்தைத்தான் தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமூகத்தின் அடிமட்டத்தில் கூட ஊழல் புரையோடிப் போயிருப்பதும், அதை எவரும் ஒரு பொருட்டாகக் கூடக் கருதாததுமே அதற்கு சான்று.

Wrapper Design - Ganesh. Mayiladuthurai

Monday, February 10, 2020

Amazon 2025

நானும் பிடிவாதக் கொள்கை கொண்டு வாழ்ந்தவன் தான். உள்நாட்டுப் பொருட்கள், உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பது என்ற எண்ணத்தை இரண்டு வருடத்திற்கு முன்பு தான் மாற்றினேன். ஏன்?

24 மாதங்களுக்கு முன்பு அமேசான் அறிமுகம் ஆனது. இன்று அமேசான் என்னை முழுமையாக மாற்றியுள்ளது. அப்போது கிண்டில் என்பது எனக்கு அறிமுகம் ஆகவில்லை.

இன்று வரையிலும் அமேசான் (இந்தியா) நட்டத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போது 2025 இலக்கை அடிப்படையாகக் கொண்டு 7000 கோடியை இங்கே முதலீடு செய்யப் போகின்றது.

Friday, December 27, 2019

மனத்தடை நீங்கட்டும். இலவசமாக வாசிக்க 5 முதலாளிகளின் கதை.

நேர் வழி, அகலக் கால் விரிக்காத குணம், கடுமையான உழைப்பு, கொடுக்கல் வாங்கலில் வெளிப்படைத் தன்மை, சீரான முன்னேற்றம், தொழில் நுட்பம் புரியவில்லை விடு, தெரிந்ததைத் தெளிவாகச் செய்யும் அறிவு, அத்தனைக்கும் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருத்தல், அதைப் பாதுகாத்தல், எல்லாவற்றிக்கும் மேல் போதுமென்ற மனம் இது இருந்தால் போதும் இந்த முதலாளி போல் வெற்றி பெறலாம் தொழிலில் மட்டுமல்ல வாழ்விலும் தான்.