Sunday, March 31, 2013

அகலிகன்


வணக்கம் 

இது டாலர் நகரம் பற்றி என் பார்வை. 

அகலிகன். சென்னை. 

 “டாலர் நகரம்” அடிப்படையில் பெயரே சரியானதாய் அமைந்துவிட்டிருக்கிறது 

அமெரிக்க டாலரைப்போலவே வெளிப்பார்வைக்கு மிக கவர்ச்சியானதாகவும் பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் டாலருக்குப்பின்னால் பல கோரங்களும், கொடுமைகளும், அத்துமீறல்களும், அவலங்களும், சுரண்டல்களூம் இருப்பதுபோலவே திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சி வெளிப்பார்வைக்கு கவர்ச்சியானதாக இருந்தாலும் அது தன்னுள் பல குறைகளையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டுள்ளது. 

பாலகுமாரனின் வெள்ளைத்தாமரை பேப்பர் வியாபாரத்தை அக்குவேறுறாகவும், நெல்லுச்சோறு நிலக்கடலை வியாபாரத்தை ஆணிவேறாகவும், தண்ணிர்துறை மைலாபூர் தண்ணிதுறை மார்கெட்டையும் என கதாபாத்திரங்களின் தொழில் சார்ந்த விவரங்களையும் விளக்கங்களையும் மிகத்தெளிவாய் முன்வைக்கும். அதுவே அவர் படைப்புக்களின் வெற்றியும்கூட. அந்த வகையில் டாலர் நகரம் ஒரு தொழில் சார்ந்த விவரங்களை மிகத்தெளிவாக முன்வைத்திருக்கிறது. 

(தாங்கள் இதையே கதாபாத்திரங்களை அதிகம் பயன்படுத்தி பல கதைகளாகவும் முயற்சிக்கலாம் அல்லது ஆரம்ப அத்தியாங்கள் பொல் மற்ற அத்தியாங்களிலும் உங்கள் பங்களீப்பு சார்ந்ததுபோலவே விவரித்திருக்கலாம், ஒரு நாவலுக்கான வடிவம் கிடைத்திருக்கும்). கோட்டா சிஸ்டத்தில் பெற்றுள்ள கோட்டாவின் அளவிற்குத்தான், நாட்டிற்குத்தான் ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாய் இந்தியா முழுவதும் பரவிய கோட்டா தரகர்கள் பற்றி கொஞ்சம் அறிந்திருக்கிறேன். 

சில ஏற்றுமதி நிறுவனங்களே தன் தேவைக்கு அதிகமான கோட்டாக்களை பெற்றுவைத்துக்கொண்டு இந்த கோட்டா தரகர்களுடன் கூட்டுகளவாடி லாபம் பார்த்தகதை சில கேள்விபட்டிருக்கிறேன். மற்றபடி தொழில் சார்ந்த தரவுகள் எனக்குள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. 

ஏற்கனவே ஒரு தொழிலில் 15 ஆண்டுகளாக இருப்பதனாலும் இது ஏற்பட்டிருக்கலாம். ஆனால் புதிதாய் தொழில்களை முனையப்போகிறவர்கள் அல்லது புதிதாய் ஓரு துறையில் பணிபுரிய விழைபவர்களை இப்படியான தரவுகள் கவரும் என்பதொடல்லாமல் அவர்களுக்கு இத்தரவுகள் உதவவும் செய்யும். ஆனால் இத்தொழில் சார்ந்த சமூக பிரச்சனைகளை துளியும் மறைகாமல் அரசு மற்றும் அதிகாரிகள் செய்யும் அத்துமீறல்களையும் அலட்சியத்தையும் துணிவுடன் சொல்லியிருப்பது பாரட்டத்தக்கது. 

தொடக்க சில அத்தியாங்களைத்தவிர மற்றவை பெரும்பாலும் தொழில்சார்ந்த மற்றும் நகர்சார்ந்த பிரச்சனைகளை பேசியிருப்பதால் இயல்பாகவே வாசிப்பதில் ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. ( கூடவே அக்கறையில்லா அரசுகளின் கொள்கை முடிவுகளீன்மீதும் கோபமும் வெறுப்பும்). திருப்பூரைச்சுற்றி உருவாகிவரும் புறநகர் பற்றியும் அதன் அடிப்படைவசதியின்மை பற்றியும் ஆதங்கப்பட்டுள்ளீர்கள் ஆனால் உலகெங்கும் அடித்தட்டு மக்கள் எல்லா அரசுகளாலும் புறந்தள்ளப்படுகிறார்கள் என்பது நிதர்சனம். 

சென்னையிலுமேகூட சிங்க்காரச்சென்னை என்ற கான்செப்ட் அடிப்படையில் அன்றாடம் நகரைச்சார்து உழைத்து பிழைக்கும் அப்படியான மக்கள் சென்னைக்கு வெகுதூரம் மிகமிக மோசமான சூழ்நிலையில் குடியமர்த்தப்படுகிறார்கள். உண்மையில் நகரங்கள் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே என சொல்லாமல் சொல்லப்படும் செய்தி இது.  

ஆடை தொழில் சார்ந்த புத்தகமாக இருந்தாலும் மனிதர்களின் மனஉணர்வுகளையும் பதிவு செய்திருப்பது சிறப்பு. (அதிக இடங்களில் இல்லையென்றாலும் சாத்தியப்படக்கூடிய இடங்களில்) அதே சமயம் அன்றைய விவசாயமும் அதன் இயற்கை வழி உர சுழற்சியும் பற்றிய தகவல் இன்றய விவசாய முறைகளையும் விவசாயின் நிலையையும் ஒப்பிட்டு காண்கையில் ரத்தக்கண்ணீர்தான். 

அ. முத்துக்கிருஷ்ணனின் “உழவின் திசைவழியே” என்ற ஆய்வு கட்டுரை ஒரு சிறந்த படைப்பு. முயற்சிக்கவும். கூடங்குளம் அனு உலை தொடர்பான அரசின் அத்தனை பொய் பிரசாரங்களையும் தொலுரித்துக்காட்டும் “கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்” என்ற பெயரில் மக்களுக்கான விழிப்புணர்வு பதிப்பாக வெளிவந்திருப்பதைப்போல் (உயிர்மைபதிப்பகம் அ. முத்துக்கிருஷ்ணன்) சாயமே இது பொய்யடா தொகுப்பும் சாயப்பட்டறை கழிவுகளின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான  மக்கள் பதிப்பாய் வெளியிடக்கூடிய முக்கிய பகுதி.

நான் மிகவும் ரசித்தது.

எல்லா காலங்களிலும் திறமையானவர்களை உதவிசெய்து வழியனுப்புவது மாதவன்போன்ற பள்ளித்தோழர்கள்தான். அந்தவகையில் மாதவன், முருகேஷ் கவர்ந்தார்.

 (நம் ‘+’ ‘-’ களை அறிந்த பால்யகால நட்பு கடைசிவரை உடன்பயனிக்கும்) நம் ஆறாவது வயதில்தான் முதல் முதலாய் பள்ளிக்கு சென்றோம் இன்று 3 வயது எப்படாமுடியும் எனகாத்திருக்கிறார்கள் 

பெற்றோர்கள் கொத்திக்கொள்ள PLAY SCHOOLஸும் வலைவிரித்து காத்திருக்கின்றன. எல்லாவற்றிலும் தன் குழந்தை முதலாவதாய் வரவேண்டுமென ஆசை அத்தனை பெற்றோர்க்கும் உண்டு ஆனால் அதற்கான வயது குழந்தைக்கு இல்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்நிலையில் தன் குழந்தை முதல் ரேங்க் எடுத்திருந்தாலும் ஏற்கனவே முதல் ரேங்க் வாங்கிய குழந்தை இப்ப என்ன ரேங்க் என்ற அக்கறை எல்லா குழந்தைகளுமே குழந்தைகள்தான் என்பது புரிந்த கேள்வி, 

மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது.

பணம் துரத்திப்பறவைகள் மற்றும் காமம் கடந்த ஆட்கள் வேண்டும் அத்தியாயங்கள் மக்களின் வறுமையும் அதன் விளைவான விட்டுக்கொடுத்தல்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்கள் பற்றி மிகமிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடுமை இளமையில் வறுமை. வறுமை காரணமாய் இளமையிலேயே பணிச்சூழலுக்கு தள்ளப்பட்டு அங்கெ தன் குடும்பசூழலிலிருந்து மெல்ல விலகி தன் வாழ்க்கைப்போக்கை தானே தெர்ந்தெடுக்கும் நிலையை ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சி அதன் விளாய்வாய் ஏற்படும் கூடா நட்பு 

இவை சார்ந்த ஆட்களை என் உடனிருந்தவர்களிடமே கண்டிருப்பதால் உங்கள் பதிவுகள் புரிந்துகொள்ளமுடிந்தது.

உண்மையில் எல்லோராலும் படிக்கப்படவேண்டியவை.

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் நன்று... இதில் உள்ள எழுத்துப் பிழைகளை தவிர்த்திருக்கலாம்...

Valmeegy said...

இதெல்லாம் டூ மச், புத்தகம் எப்போ வாங்கினேன்னே சொல்லல, என்ன இதெல்லாம் ?

சும்மா உடமாட்டேன்

" கபாலி, மொட்ட இங்க வாங்கடா "
" வொடனே அகலிகன் வீட்டுக்கு ஒரு ஆட்டோவ அனுப்பு "