ஜெப் Jeff Bezos என்ற வியாபாரி தமிழுக்குச் செய்த தொண்டுள்ளம் பற்றி குறிப்பிட முடியுமா?
இந்திய சுதந்திரத்திற்குப் பின்னால் கடந்த 72 ஆண்டுகளில் மத்தியில் பல ஆட்சிகள் வந்து போய் இப்போது மோடி பிரதமராக இருக்கின்றார். வந்தமர்ந்த கட்சிகளும், இதுவரையிலும் பணிபுரிந்த மத்திய அரசின் அதிகாரிகளும் தமிழை மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மொழியையும் ஒவ்வொரு நிலையிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதில் தான் குறியாக இன்று வரையிலும் உள்ளனர். கட்சிகள், ஆட்சிகள் மாறியுள்ளது. ஆனால் காட்சிகள் மாறவில்லை. இன்று சமஸ்கிருதம் முன்னெடுக்கப்படுகின்றது.
உன்னை அடிமையாக்க விரும்புகிறேன். அதற்கு முன்னால் உன் தாய் மொழியை கொன்று முடித்து விடுகிறேன் என்ற இந்த எதேச்சிகாரப் போக்கில் இருந்து மாநில மொழிகள் தப்பித் தடுமாறி தட்டுண்டு தத்தமது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டே வருகின்றது. ஆங்கிலத்தை பேசத் தெரியாதவர்கள், கற்றுக் கொண்டாலும் சரிவர கையாளாகதவர்கள் கணவான்களாக இருப்பது நம் நாட்டின் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாக இருப்பதால் தமிழர்களுக்கு உலகம் முழுக்க மவுசும் மரியாதையும் உள்ளது.
