Saturday, January 29, 2022

வெட்டி கடிதாசி சீனு

வணக்கம் சீனி

உனக்கு கடிதம் எழுதத் தொடங்கிய போதே உன் முழுப் பெயர் என்று நீ எழுதியுள்ள சீனிவாசன் பாலகிருஷ்ணன் என்று எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் நீ செய்து கொண்டிருக்கின்ற அயோக்கியத்தனத்திற்கு உன் அப்பன் ஆத்தாளை எல்லாம் ஏன் வைய வேண்டும் என்பதற்காகவே வெறும் சீனி.




ஏற்கனவே ஒரு கடிதம் பாஜக தலைவர் அண்ணாமலையைக் குறித்து வைத்து எழுதினாய் என்றே நினைக்கின்றேன். இப்போது ஒரு கடிதம் வந்து உள்ளது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். நீ எழுதுவாயா? அல்லது அறிவாலயத்தில் எழுதியதை அப்படியே ட்விட்டரில் வலையேற்றுவாயா? கொஞ்சம் தெளிவாக புரிய வைப்பாய் என்று நம்புகிறேன்.

காவிக் கொடி என்பது பரம பவித்திரமான பொக்கிஷம். அதை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும். அவர்களுக்கே அதன் அருமை புரியும். தயவு செய்து அந்தக் கொடியைப் பயன்படுத்தாதே. ஏதோவொரு உப்புமா படக்கம்பெனி போல உன் ஆசைக்கு ஒரு சங்கம் இருப்பது போலத் தெரிகின்றது. அப்படியே வைத்துக் கொள். காரணம் இங்கே அறிவாலயம் வழங்கும் பிச்சைக்காசுக்காகப் பத்திரிக்கையுலகம், அதிகாரவர்க்கம், கொத்தடிமையுலகம் என்று படித்த, படிக்காத, பாமர மக்கள் என்று அத்தனை பக்கத்திலும் இருந்தும் மானத்தை விற்று வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது போல அந்தக் கூட்டத்தில் நீயும் ஒருவனாக இருப்பது குறித்து எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை.



ஆனால் எந்த இடத்திலும் உன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளாதே. அது உனக்கு அவமானம் இல்லாமல் இருக்கலாம். மற்றவர்களிடம் இரந்து வாழ வேண்டிய வாழ்க்கையுடைய உண்மையான பிராமணன் கடுகளவு கூட அடுத்தவனுக்குத் துரோகம் செய்ய மனதால் கூட நினைக்க மாட்டார். ஆனால் நீ பேசுவது அனைத்துக்கும் முரணான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பது உன் தகப்பன் தாய் செய்த பாவம். இந்த ஜென்மத்தில் இப்படித்தான் நாய் பிழைப்பு போல பல இடங்களில் நக்கிப் பிழைக்க வேண்டும் என்று உன் கர்மாவில் இருந்தால் அது குறித்து எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை.



ஆனால் உன் நோக்கம், ஆர்வம், குறி எல்லாம் எங்கள் தலைவர் அண்ணாமலை நோக்கியே இருக்கின்றதே? பாஜக என்ற கட்சியில் அவரும் ஓர் எளிய தொண்டன். அவர் உருவாக்கியுள்ள இன்றைய தாக்கத்தின் விளைவு தான் தமிழக அரசின் அதிகார அச்சாணியே சரியாக ஓடுகின்றது என்றால் உன்னால் நம்ப முடிகின்றதா? அதிகாரிகள் அண்ணாமலை பார்வைக்குச் சென்று விடுமோ? என்று தங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு கையை நீட்டாமல் அல்லது குறைவான இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பது உன்னைப் போன்ற பொறுக்கித் தின்னும் பொறம்போக்குகளுக்குத் தெரியுமா?

மதமாற்றத்தால் ஒரு குழந்தை இறந்துள்ளது? உலகமே வேதனையில் தவிக்கின்றது. இந்தியா முழுக்க அதைப் பற்றியே பேசுகின்றது. அது குறித்துப் பேச உனக்கு என்ன தகுதியிருக்கிறது? எந்த பங்குத்தந்தை உன்னைப் பங்காளியாக மாற்றியிருக்கின்றாரோ? உன் குடும்பத்திலும் பெந்தேகொஸ்தே புகுந்துள்ளதா?



வெளியுலகம் தெரியாத குழந்தைகளுக்குப் பின்னால் இருக்கும் விஷக்கிருமிகள் வசனம் என்ற பெயரில் பாரதப் பிரதமர் அவர்களை அவமரியாதை செய்வது குறித்து உன் வார்த்தைகளில் படித்த போது நீ ஒரு பாதிக் கிறுக்கனாகவே எனக்குத் தெரிகிறாய்? தயவு செய்து நல்ல மன நல மருத்துவரைப் பார்த்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு உண்டான வித்தியாசங்களைப் புரிந்து கொள்.

இனியொரு கடிதம் உன் பெயரில் வரும்பட்சத்தில் இப்போது காரம் குறைவாக வந்துள்ள வார்த்தைகளில் ஆந்திரா மிளகாய் தூவப்பட்ட வார்த்தைகளில் உன்னைப் பாராட்டுவேன் என்று அன்போடு கூறிக் கொள்கிறேன்.

நீ எழுதும் கடிதங்களில் டேக் செய்யும் நபர்களின் பெயர்களைப் பாரத்தேன். நீ பன்றிக்குட்டி என்பது உலகத்திற்கே தெரியும். அவர்களையும் கெடுக்காதே.

வெறியை அடக்கிக் கொண்ட

சின்ன சீனு


No comments: