Saturday, August 31, 2019

ப சிதம்பரம் எனும் சமுத்திரம்...

முன்னாள் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், தற்போதைய பாரளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர், தமிழக காங்கிரஸ் மூத்த அரசியல்வாதியான ப. சிதம்பரம் கைதுக்குப் பிறகு அவரைப் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வந்து கொண்டேயிருக்கின்றது.  

மூன்று முக்கிய செய்திகள்.

********

ப_சிதம்பரம் எனும் சமுத்திரம்...

இன்னைக்கு ப.சி. குடும்பத்து மேல கைவெச்சத அவ்ளோ சாதாரண நிகழ்வா நினச்சுராதீங்க. ப.சி.யோட கைநீளத்தபத்தி தெரிஞ்சவங்களுக்கு, இது எவ்ளோ பெரிய வரலாற்று சம்பவம்னு தெரியும்.

ரா.ஜெ.மலானி, கபில்சிபல், அபிஷேக் சிங்வி, பிரசாந்த்பூஷன், நாரிமன்னு அத்தன பேரோட மொத்த கிரிமினல் மூளையையும் தாங்குன ஒத்த உருவம்தான் பா.சி. பொருளாதாரத்துல மன்மோகன் என்ற குருவை மிஞ்சிய சிஷ்யன். கிட்டத்தட்ட 3/4 சுப்ரமணிய சுவாமி. எனக்கு தெரிஞ்சு... அரசாங்கத்த தவிர்த்து, இந்திய பிரஜைகள்ல மிகப்பெரிய பேக்ரவுன்ட் இருக்குற ஒரே தனிநபர் பா.சி.தான். (சுப்ரமணிய சுவாமியோட லெவல் வேற )

நேஷனல் ஹெரால்டு கேஸில்... சோனியாவயும் ராகுலையும் மிகச்சாதாரணமா கோர்ட்படி ஏறவைத்த... மொஸாத், சிஐஏ போன்ற சர்வதேச உளவு அமைப்புகளுக்கு, லீகல் அட்வைஸரா இருக்கக்கூடிய தகுதியுள்ள '#சுப்ரமணிய #சுவாமி' ன்ற சாணக்யனுக்கே பா.சி.யின் குட்டியை வளைக்க இவ்ளோநாள் ஆயிருக்குன்னா... பா.சி ன்ற அமைதியான சமுத்திரத்தோட ஆழம்புரியும்.

பெரும்பாலும் கிங் மேக்கராதான் இருப்பார். காங்கிரஸ் கட்சியில் என்ன பிரச்சனைனாலும், பா.சி. யின் தீர்வுதான் வேதவாக்கு. சோனியாவுக்கு இவர் மேல அபாரநம்பிக்கை. அகமதுபடேலும், பாசி.யும் சோனியாவின் இருகாதுகள். இவங்க ரெண்டுபேர் சொல்றது மட்டும்தான் அவங்க காதுல விழும். தமிழக காங் தலைவர்கள், அவங்களாவே பா.சி.யை தங்களுக்கு நிகரான ஒரு எதிரியா கற்பனபண்ணி கம்பு சுத்துவாங்க. அவரு இவங்கள மனுஷஜந்தா கூட மதிக்கமாட்டாரு. பாக்கப்போனா... "போனா போகுது, இந்தப் பயல தமிழ்நாடு காங் தலைவரா போட்டு விடுங்க. அப்பதான அந்த வீணாப்போன பயலுகள சமாளிக்க முடியும்" ன்னு பா.சி தான் தலைமைக்கு சொல்லி இருப்பாரு. மேலும் காங் கட்சியின் மேலிடத்துக்கு, பா.சிக்கு தமிழக காங் தலைவர் பதவி தர்றதுன்றது... சிற்பிய கூப்ட்டு அம்மிக்கல் கொத்தத் சொன்ன கதைதான்.

2009-பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில், பா.சி யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ராஜகண்ணப்பன் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார். உள்துறை அமைச்சராக இருந்த பா.சி-யும் தோல்வி முகத்தோட வீட்டுக்கு போய்டார். ஆனா ஆட்சில இருந்த, அடுத்தும் ஆட்சி அமைக்கபோகும், காங் கட்சியின் பவர்புல்லான மேலிடம், ''அமைச்சரவையில் பா.சி கட்டாயம் இடம் பெறணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யுங்க" ன்னு உத்தரவு போட்டுச்சு. அதுக்கு அப்புறம்தான் 3,354 ஓட்டுல பா.சி வெற்றி பெற்றதா நடுராத்திரில அறிவிச்சாங்க. அப்புறம் பிரணாப் முகர்ஜி மூலம் ஜெ சமாதான படுத்தப்பட்டார். அந்த தேர்தலில் எத்தனையோ, காங் கட்சியின் மிகப்பெரிய தலைகள் வெற்றி பெற்றது, தோற்றது. ஆனால் பெரிதாக யாரையும் கண்டு கொள்ளாத, எண்ணிக்கயை மட்டும் பார்த்த காங் மேலிடம், பா.சி க்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததுலயே, காங்கிரஸில் பா.சி.ன் பவர் என்னன்னு புரியும்.

ராஜீவ் காலத்தில் இருந்து, நேரு குடும்பத்தை பின்புலத்தில் இருந்து, பாதி இயக்குவதே பா.சி.தான். (சஞ்சய் தவிர்த்து, மொத்த இந்திரா குடும்பமும் வெந்தும் வேகாத கேஸ்தான்) வீட்டுக்கு வாங்குற காய் கறியிலிருந்து நாட்டு பட்ஜெட் கணக்கு வரைக்கும் சொந்தமூளை கணக்குதான். ஆயிரகணக்கான பக்கத்த, எந்திரன் 'சிட்டி பாபு'வ விட்டு தேடினாலும், ஒரு தப்பான கணக்க கண்டுபிடிக்க முடியாது. அத்தனை துல்லியம். இப்பகூட மகனின் குளறுபடிகள் தான் மாட்டி விட்டிருக்கு.

'சிபிஐ', 'அமலாக்கத் துறை'ன்ற அதிகார வர்க்கம் வேணும்னா.. 'கும்கி'க்களா இருக்கலாம். ஆனா... இதுவரை அந்த 'கும்கி'களுக்கு பா.சி.ன்ற காட்டுக் கொம்பன் மேல கைவெக்குற தைரியம் வந்ததில்ல. காரணம்... ஒருவேள கைவெச்சு மிஸ்ஸாகி, கொம்பன் தப்பிச்சுட்டாாா... 😮 கும்கிகளின் சோலி முடிஞ்சது. குழி தோண்டி புதைச்சுட்டுதான், கொம்பன் மறுவேல பார்க்கும். ஆனா... இப்ப கும்கி மேல உக்காந்திருக்குற, #மோடி ன்ற ஒத்தபாகனுக்கு ஈடு குடுக்கணும்னா... நாலஞ்சு கொம்பன் சேரணும். அதனாலதான் பா.சி. கொம்பன் அடக்கி வாசிக்குது.

எல்லா வழிகளையும் அடைச்சிட்டு, பக்காவா ஸ்கெட்ச் போட்டு காங்கிரஸோட ரெட்காயின தூக்கியாச்சி. இந்த பொன்னான நொடியிலிருந்து காங்கிரஸின் நிஜஅழிவு ஆரம்பம் !!! 

••••••••

ஒரு வீரன் எப்போது தன் எதிரியின் பலத்தை அறிந்து மதிக்கிறானோ அப்போதே அவன் வெற்றி ஆரம்ப்மாகிறது. சிதம்பரம் சாதாரண எதிரியல்ல, அவர் குருவும், கொம்பன் சுப்ரமனியன் சாமியே அசைக்க முடியாத ஆலமரம். அவசரப்படாத மோடி கைவைத்தது அந்த கொம்பாதி கொம்பனின் மீது.

இதில் மோடி தோற்பாரே யானால் சிதம்பரம் வீறுகொண்டு எழுவார், வீழ்வாரேயானால் தற்கொலை கூட சாத்தியம். ஏனெனில் அவர் பரம்பரை அண்ணமாலையை தோற்றுவித்த பரம்பரை. மானம் கெட்டபின், மதி கெட்டு வாழ அந்த ராஜ கௌரவம் இடம் கொடுக்காது..

வலது கை சிதம்பரத்திற்கு பின்பு இடது கை அகமது பட்டேல்..

அடுத்து வதரா..

செஸ் ஆட்ட்த்தில் கடைசியில் தான் நிர்மூலமாக்கப்பட்ட ராஜாவாகிய சோனியா..

இது செமி ஃபைனல், இதில் வெற்றி பெற்றால் சோனியா நாட்டைவிட்டு ஓடலாம். இந்தக்குறி அந்த ஃபைனல் இலக்கின் ஆரம்பமே..

இப்பேர்பட்ட ஒரு ராஜதந்திரிகம் இந்தியாவிற்கு பயன்படாமல் போனது விதியே...

•••••••••••••••••

வாஜ்பாய் காலத்தில் ‘என்ரான்’ என்கிற பிரசித்தி பெற்ற நிறுவனம் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தன் ஆலையை நிறுவுவதற்காக முனைந்தது. ஆனால் உள்ளூர் பிரச்னை காரணமாக அவர்களால் அந்த ஆலையை நிறுவ முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையால் கோபமடைந்த என்ரான் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மேல் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கின்படி அவர்கள் நஷ்ட ஈடாகக் கேட்ட தொகை 38000 கோடி ரூபாய்.

வாஜ்பாய் அரசு ஹரீஷ் சால்வேயை இந்தியாவின் சார்பில் வாதிட இந்த வழக்கிற்காக நியமித்தது. இவரைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்போது இந்திய குல்பூஷன் ஜாதவிற்காக ICJ இல் வாதிட்டு ஓரளவு நல்ல பலனையும் கண்டிருப்பவர்.

இப்போது நம் என்ரான் கதையில் ஒரு திருப்பம். அதாவது இந்தியாவிற்கு எதிராக என்ரான் நிறுவனம் வாதிட நியமித்தது.. வேறு யாருமில்லை ஜெண்டில்மேன்.. நம் ப.சிதம்பரத்தைதான். நம் தேசத்திற்கு எதிராக என்ரான் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதிட ஒப்புக் கொண்டவர் இதே மஹானுபாவர்தான்..!

சில காலங்களுக்குப் பிறகு..சோனியாவின் UPA ஆட்சியைப் பிடித்தது. ப.சிதம்பரம் கேபினெட் மினிஸ்டரானதால்.. என்ரான் கம்பெனிக்காக அவரால் வாதிட முடியாமல் போனது. ஆனாலும் இவரே அந்த நிறுவனத்தின் லீகல் அட்வைஸராகத் தொடர்ந்தார். அதனால் தனக்கு ஏற்றபடி வழக்கையும் தன் சௌகரியத்திற்கு மாற்றவும் இவருக்கு பதவியும், அதிகாரமும், சாதுர்யமும், சந்தர்பமும் இருந்தது.

இதற்கெல்லாம் மேலாக உடனடியாக ப.சிதம்பரம் செய்த காரியங்கள்..

🚩ஹரிஷ் ஸால்வேயை என்ரான் வழக்கில் இந்தியாவிற்காக வாதிடுவதை தடுத்தார். அவர் வெளியேற்றப்பட்டார். அவருடைய இடத்திற்கு காவார் குரோஷி என்பவரை நியமித்தார்.

🚩இந்த காவார் குரோஷி யாரென்று தெரிகிறதா..? இவர் ஒரு பாகிஸ்தான் வக்கீல் தற்போது குல்தீப் ஜாதவிற்கு எதிராக ICJ இல் வாதிடுபவர். இவரைத்தான் ஹரிஷ் சால்வேக்கு மாற்றாக ப.சிதம்பரம் நியமித்தார்.

🚩அந்த வழக்கின் முடிவு அனைவரும் அறிந்ததே. இந்தியா வழக்கில் தோற்றது. மீதம் சரித்திரமானது. காங்கிரஸ் என்னும் கட்சி நம் கற்பனைக்கு எட்டாத அளவு, நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தீமை நிறைந்தது. 

•••••••••••••••

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திமுக மீது சுமத்தப்பட்ட 2ஜி ஊழல் புகாருக்கு பெரும் பின்னணியாக இருந்தவரே சிதம்பரம்தான். 2ஜி விவகாரத்துல அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி பிரணாப் முகர்ஜி மூலமா கலைஞருக்கே நெருக்கடி கொடுத்தது சிதம்பரம்தான். ‘ராஜினாமா செய்யச் சொல்லிடுங்க. பிரச்சினை பெரிசாகாம பாத்துக்கலாம்’ என்று கலைஞரிடம் பிரணாப்பை விட்டு பேச வைத்து அதன் பின்னர் ஆ.ராசாவை கைது செய்தது மட்டுமில்லாமல், கனிமொழியையும் இந்த வழக்கில் பிணைத்தவர் சிதம்பரம்தான்.

இந்த ஊழல் புகார்களால் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் வரைக்கும் வாங்கிக் கொண்டதற்குக் காரணமும் சிதம்பரம்தான். அறிவாலயத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே,மாடியில் இருக்கும் கலைஞர் டிவியில் ரெய்டு நடத்தி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தியது சிபிஐ.

இதுபற்றியெல்லாம் அப்போது திமுக முக்கியப் புள்ளி ஒருவர் உள்துறை அமைச்சராக சிபிஐயை கையில் வைத்திருந்த சிதம்பரத்துக்கு போன் போட்டு, ‘ஏன் இப்படி பண்றீங்க? தலைவர் ரொம்ப வேதனையில இருக்காரு’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ப.சிதம்பரம், ‘இது கட்சி, அது ஆட்சி’ என்று கூட்டணிப் பேச்சையும், சிபிஐ ரெய்டையும் ஒப்பிட்டுப் பதில் கொடுத்திருக்கிறார். சிதம்பரத்தின் வார்த்தைகள் அப்படியே கலைஞருக்கு கொண்டு செல்லப்பட்டபோது கொதித்துவிட்டார் அவர்.

2ஜி ஊழல் மூலம் திமுகவை தமிழக அரசியலில் இருந்தே ஓரங்கட்டிவிட்டு காங்கிரசை பலப்படுத்தி தான் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்ற திட்டமும் சிதம்பரத்துக்கு இருந்தது. ஆனால் சிதம்பரத்தின் திட்டப்படி திமுக வீழ்ந்ததே தவிர, காங்கிரஸ் வளரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தின் தாயார் மறைந்துவிட்டார். தனது நீண்ட நெடிய பொதுவாழ்வில் அரசியல் மாச்சரியங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு எதிர்முகாமைச் சேர்ந்தவர்களின் இறப்புக்கு கூட அஞ்சலி செலுத்துவதும் இரங்கல் வெளியிடுவதும் கலைஞரின் வழக்கம். ஆனால் ப.சிதம்பரத்தின் தாயார் மறைவுக்கு கலைஞர் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. வீட்டில் சிலர், ‘நாங்க போய் பார்த்துட்டு வந்துடட்டுமா’ என்று கலைஞரிடம் கேட்டுப் பார்த்ததற்கு, ‘வெட்கம் , சூடு , சொரணை இல்லாதவன் தான் அங்க போவான்’ என்று பதில் சொன்னார் கலைஞர். மறப்போம், மன்னிப்போம்னு எப்போதும் சொல்கிற கலைஞரே அந்த அளவுக்கு பதில் சொன்னார் என்றால்... கடைசி காலத்தில் அரசியல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் கலைஞர் அனுபவித்த வேதனைகளுக்கு சிதம்பரம் எவ்வளவு தூரம் காரணமா இருந்திருப்பார்னு பார்த்துக்கங்க.

கலைஞரே மன்னிக்க முடியாத சிதம்பரத்தை நாங்க எப்படி மன்னிப்போம்’ என்கிறார்கள் கலைஞரின் குடும்ப வட்டாரத்தில். இந்த சூழலில்தான் சிதம்பரம் விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘அவர் சட்ட வல்லுநர். தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படினு அவருக்குத் தெரியும்’ என்று பூடகமாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார்.

காட்சி வடிவில்.......

P. Chidambaram Denies Allegations In INX Media Case, Says He Was Not Running Away | Breaking


வாசிக்க.........



தெற்கிலிருந்து ஓரு சூரியன்

'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..! |Vijayabaskar ...

நடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019

என் டீச்சர் தான் எனக்கு முதல் ஹீரோயின் - ராட்சசி இ...

தமிழக ரயில்வே துறையில் வட இந்தியர்கள்? ஏன்? எப்படி...

மோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்?

இந்திய ரயில்வே துறையில் (நடந்த - நடக்கும்) மாற்றங்...

நரசிம்மராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)





8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிதம்பர ரகசியம் தொடர்கிறதே..திரைக்குப் பின்னால் இவ்வளவு அரசியலா?

KILLERGEE Devakottai said...

அருமையான கட்டுரை நண்பரே...

//சிதம்பரம் வீழ்வாரேயானால் தற்கொலை கூட சாத்தியம். ஏனெனில் அவர் பரம்பரை அண்ணமாலையை தோற்றுவித்த பரம்பரை. மானம் கெட்டபின், மதி கெட்டு வாழ அந்த ராஜ கௌரவம் இடம் கொடுக்காது//

இதுதான் அடுத்த நிகழ்வு நண்பரே.

bakki said...

சென்ற மற்றும் இந்த கட்டுரைகள் நல்ல வார்த்தை அலங்காரம்

திண்டுக்கல் தனபாலன் said...

பணம் செய்யும் விளையாட்டுகள் தான் எத்தனை...?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கட்டுரை. பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

திகைக்க வைக்கும் முன்கதை.

செந்தில்குமார் said...

மிக சரியான கருத்து கொம்பன் கும்கிகளிடம் C கும்கிகளும் இந்த கொம்பன் போலதான்) காலம் பதில் சொல்லும் காத்திருப்போம் இந்த கட்டுரையும் செல்வேந்திரன் அவர்கள் வாசிப்பு குறித்த கட்டுரையும் எனது நன்பர்கள் மற்றும் குடும்ப குழுவில் பகிர்ந்துள்ளேன்

ஜோதிஜி said...

நன்றி செந்தில்.