Monday, February 25, 2013

வெற்றிகொண்டான் விமர்சனம்

இவரை திமுக உடன்பிறப்புகள் இணைய தள (திமுக) வெற்றி கொண்டான் என்று அழைக்கின்றார்கள். 

இவர் திட்டாத ஆட்கள் இல்லை. இவரை திடுக்கிடும் அளவுக்கு திட்டித் தீர்க்காத ஆளுமில்லை. 

இரண்டு பக்கமும் கிராமத்து மஞ்சுவிரட்டு நடக்கும். சில சமயம் வார்த்தைகளின் எல்லைகள் மீறப்படும். வெற்றி கொண்டான் தனது பாணியை மாற்றிக் கொள்வதில்லை. பரஸ்பரம் வறுகடலை போல பொரியல், அவியல், துவையல் என்று கூகுள் ப்ளஸ் ல் களைகட்டும்.  

இரவு நேரம் என்றதும் இவருடைய மூளையில் உள்ள ந்யூரான்களுக்கு சிறப்பான தகுதி வந்து விடும் போல.  விசைப்பலகையில் அவர் அடிக்கும் வார்த்தைகளில் கவுச்சி வாடை எட்டிப்பார்க்கும். நீ ரத்தத்தை பரிசாக தந்தால் நான் என்ன தக்காளி சட்னியா தர முடியும் என்று பரஸ்பரம் வெட்டு குத்து என்று நடப்பதை படிப்பவர்கள் பயத்தோடு பார்க்க வேண்டும். 

என்னை விருமாண்டி கமல் என்று நினைத்துக் கொள்ளாதீர் என்று அவரே எனக்கு சொல்லியுள்ளார். .  

என்னுடைய டாலர் நகரம் புத்தகத்திற்கு இவர் தனது கூகுள் ப்ளஸ் எப்போதும் போல கலாய்த்து, கவனித்து, அக்கறையோடு தனது பாணியில் விமர்சனம் எழுதியுள்ளார். அடிப்படையில் நல்ல ஆத்மா. 

ஆனால் இவரை கோபப்படுத்த வேண்டுமென்றால் கலைஞர் குறித்து உங்கள் மனதில் தோன்றியதை எழுதி இவர் பெயருக்கு டேக் செய்து விட்டு  சற்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பாருங்கள். ருத்ரதாண்டவம் என்பதை படங்களில் பார்த்து இருப்பீர்கள். வார்த்தைகளில் பார்க்க வேண்டுமென்றால் அபி அப்பா கூகுள் ப்ளஸ்க்கு வாங்க. 

இவர் விமர்சனத்தின் மூலம் பாய்ந்து பிராண்டும் நண்பர்களும் எனக்கு நெருங்கிய நண்பர்களே. இவரும் நல்லநண்பரே.  ஆனாலும் என்னையும் பல தடவை குத்திக்காட்டியிருக்கின்றார், ஆனாலும் நம் மீசையில் மண் ஒட்டாத மாதிரி மல்லுக்கட்டி போராடி பார்த்து ஒதுங்கி விடுவேன். ஒரு கட்சியின் உண்மையான தொண்டன் என்றால் எனக்குத் தெரிந்து இவர் தான். கலைஞரின் குடும்ப வாரிசுகள் கூட கலைஞர் மேல் இந்த அளவுக்கு பற்று வைத்திருப்பாரா என்று சந்தேகமே.

நல்ல எழுத்தாற்றல், கவனிப்பு மிக்க இவர் திறமை இவர் மண்டை முழுக்க நிறைந்திருக்கும் திமுக என்ற எழுத்திற்காகவே காணாமல்  போய் விடுகின்றது.  மற்றொரு உடன்பிறப்பிடம் இவரைப் பற்றி சொன்ன போது இவர் உங்கள் புத்தகத்திறகு விமர்சனம் கொடுத்தால் அது நேர்மையாக இருக்கும் என்றார். திமுக தொண்டராக இவர் கலைஞரைப் பற்றி சிலாகித்து எழுதுவதைப் படிக்கும் போது நான் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவதுண்டு. இந்த வார்த்தைகளை படிக்கும்போது கூட அவர் விரல்கள் விசைப்பலகையில் ருத்ரதாண்டவம் ஆடப்போகின்றது

ஒவ்வொருவரின் விமர்சனத்தை மட்டுமே இங்கே வெளியிட்டுக் கொண்டு வரும் எனக்கு இவரை கலாய்க்க வேறு இடம் கிடைக்கவில்லை. 

ஏறக்குறைய இருவருக்கும் சமவயது என்பதால் நன்றி தொல்ஸ்.  


அபி அப்பா டாலர் நகரம் புத்தகத்தின் விமர்சனப் பார்வை

ஜோதிஜி! முழுவதும் படித்து முடித்து விட்டேன். நல்லா இருக்கு புத்தகம். திருப்பூர் பத்தி முழுமையாக புரிஞ்சுக்க உதவும் புத்தகம் என்பதோடு, அங்கே அந்த தொழிலின் வளர்ச்சி, வீழ்ச்சி என இருபக்கமும் புரிந்தது. . 

மேலும் மஞ்சள் பையுடன் ஒருவர் தன் சொந்த ஊரில் இருந்து போனா கூட மூளை இருந்தா, நல்ல குணாதிசயங்கள் இருந்தா பிழைச்சுக்க இயலும் என்றும் அதற்கு சரியான உதாரணம் நீங்கன்னு தெரிஞ்சுது. 

எழுத்துப்பிழைகள், கோர்வையாக இல்லாமை, சில மிகச்சில  பிழைகள் ... 

உதாரணமாக செயற்கை உரங்கள் என உங்க வயலில் எப்போதும் இருக்கும் யூரியா, பாலிடால், பாக்டம்பாஸ்ன்னு சொல்லியிருக்கீங்களே, அதிலே பாலிடால் உரம் அல்ல பூச்சிக்கொல்லி மருந்து.... இது போன்ற சின்ன சின்ன தவறுகள்.... இதை தவிர்த்து ரொம்ப நல்லா இருக்கு புத்தகம். 

எழுத்துப்பிழை என்பது உங்கள் குத்தம் இல்லை. மீதியெல்லாம் அடுத்தடுத்த புத்தகம் போடும் போது சரியாகிடும்

அது போல புத்தகம் படித்து முடிக்கும் போது "அந்த"தனலெஷ்மி" தியேட்டர் கிட்டே முதன் முதலில் நீங்க குடிவந்த போது புத்தகமும் கையுமா குடோன்ல இருக்கும் போது ஒரு பொண்ணு வந்து பேச்சு கொடுத்ததே... அது தான் நீங்க லவ் பண்ண போகும் பெண் என்று கதை படிக்கும் எல்லாரும் நினைப்பாங்க. சுஜாதா ஒரு முறை சொன்னார். 

கதையில் அல்லது அதை விஷூவலா சொல்லும் போதோ சுவற்றில் இரு கடிகாரத்தை சூம் பண்ணினா அது சம்மந்தமா கதையிலே வரனும். கண்டிப்பா வரனும். சும்மால்லாம் காமிக்க கூடாது. காமிச்சு வாசகனை அது பத்தியே குழம்ப வச்சா கதைல நீங்க சொல்லும் மத்த பாயிண்ட் முக்கியமான இடத்திலே வாசகன் அந்த கடிகாரத்தை பத்தி தான் நினைச்சுகிட்டு இதை கோட்டை விட்டுடுவான், என்றார். 

அது போல அந்த பெண் பாத்திரம் தேவையில்லை என்பது என் கருத்து

அடுத்து ஒரு முக்கால்வாசிக்கு பின்னே நீங்க மிளகாய் மூட்டை மேல் உடகாந்து எழுதினது போல ஒரு காரம். 

காங்கிரசை உங்களுக்கு பிடிக்கலை. அது போல கருணாநிதியை பிடிக்கலை.... ஜெயாவை பிடிக்குது... ஓக்கே... 

அதை நீங்க எழுதும் ஒரு ஆவண பதிப்பில் திணிச்ச மாதிரி இருக்கு. 

ஏன்னா 2 மணி நேர மின்வெட்டால் சாயத்தொழில் எல்லாம் சாகடிக்கப்பட்டது போன ஆட்சியில்ன்னு சொன்ன நீங்க... அடுத்து "ஆட்சி மாற்றம் பின்னரும் அது தொடருது"னு பாலீஷ் போட்டீங்க பாருங்க... அங்க தான் நிக்குறீங்க. 

2 மணி நேர மின்வெட்டு 3 மணி நேரமா ஆகியிருந்துச்சு அல்லது 4 மணி நேரமா ஆச்சுதுன்னா நீங்க இபப்டி பாலீஷ் போட்டது ஓக்கே. ஆனா 18 மணி நேர மின்வெட்டு எப்படில்லா அந்த தொழிலை பாதிச்சுதுன்னு விலாவாரியா ஒரு 4 பக்கம் சொல்லியிருக்க வேண்டாமா? 

ஏன் சொல்லலை? பாசம்.... 

அது போல சிதம்பரம், மன்மோகன்னு பெயரை குறிப்பிட்டு விளாசி தள்ளிய நீங்க ஜெயா அம்மையாரை பத்தி மட்டும் மயிலிறகால் வருடி விட்டுட்டீங்க:-))

அது போல "all under one roof" பாலிசி சரியா தப்பான்னு சரியா நெத்தியடியா சொல்லியிருக்கனும். 

சாலமன் பாப்பையா மாதிரி இவுக இப்படி பாதிக்கப்பட்டாக, அவுக அப்படி பாதிக்கப்பட்டாகன்னு ரெண்டு பக்கமும் பேசிட்டு இருந்தீங்க. காரணம் நீங்க முதலாளியா அல்லது தொழிலாளியா அல்லது இருவருக்குமான பாலமா என உங்களால் உங்களை கணிக்க முடியலை. 

இதான் நீங்க மழுப்பினதுக்கு காரணம்ன்னு  நினைக்கிறேன்

ஒரு ஒரு தோல்விக்கும் அடுத்து உங்களை காப்பது உங்க கண்ணியமான குணாதிசயம் என்பது கண்கூடா தெரியுது. அதை எப்போதும் கைவிட வேண்டாம். நல்லதே நடக்கும். 

முதல் இன்னிங்ஸ் திருப்பூர்ல முடிஞ்சு ஊருக்கு போய் பாட்டி வீடு வித்த காசிலே வெளிநாடு ஓடிப்போய் மீண்டும் அதே மஞ்சள் பையும் கட்டிய வேட்டியுமாய் ஊருக்கு திரும்ப வந்து மீண்டும் திருப்பூர்... 

ஊஃப்ப்ப்... வெல்டன் ஜோதிஜி... 

என் வாழ்க்கைக்கதை படிச்ச மாதிரி ஒரு உணர்வு.

புத்தக விமர்சனங்கள்


9 comments:

Anonymous said...

சாஸ்திர வியாக்கியனத்துடன் கூடிய சகலாரதனையான விமர்சனம். சமத்துவ சொல் கூடலில் சங்கித இசைபு மீளாத தர்மாதித்துவ விவாதங்களை முன் வைக்கிறது. மின்சார வெட்டுக்கு மகோபுத காரனங்களை சாலுக்கிய சாம்ராட் புலிகேசியின் விவேகத்துடன் விவரனை செய்ததாக சொல்லி அந்த லெளகீக சாமகார சமாளிப்புக்கு “நச்” என்று வைத்தது புளுங்காகித கொட்டு, அந்தக் கொட்டு எனக்கு உச்சி மேல் விழும் வெயிலில் பாரிஜாத மலர்களை தலையில் சூடிக்கொண்டு நீரால் அமலோக்கிய மோரை குடித்தது போலிருந்தது.
தமிழமுதன் ஷ்யாம்.

Anonymous said...

சாஸ்திர வியாக்கியனத்துடன் கூடிய சகலாரதனையான விமர்சனம். சமத்துவ சொல் கூடலில் சங்கித இசைபு மீளாத தர்மாதித்துவ விவாதங்களை முன் வைக்கிறது. மின்சார வெட்டுக்கு மகோபுத காரனங்களை சாலுக்கிய சாம்ராட் புலிகேசியின் விவேகத்துடன் விவரனை செய்ததாக சொல்லி அந்த லெளகீக சாமகார சமாளிப்புக்கு “நச்” என்று வைத்தது புளுங்காகித கொட்டு, அந்தக் கொட்டு எனக்கு உச்சி மேல் விழும் வெயிலில் பாரிஜாத மலர்களை தலையில் சூடிக்கொண்டு நீரால் அமலோக்கிய மோரை குடித்தது போலிருந்தது.
தமிழமுதன் ஷ்யாம்.

Anonymous said...

விழா மலர்களை தரவிரக்கம் செய்யமுடியவில்லை. வேறு ஏதேனும் தளங்களில் அப்லோட் செய்யவும்.

PDF என்றால் docstoc.com scribd.com slideshare.net முயற்சிக்கவும்.

ஜோதிஜி said...

இந்த இணைப்பு உங்களுக்கு உதவும் என்று நம்புகின்றேன்.

1.

https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=c5a10b45d7&view=att&th=13c8eb4b0d1a69a9&attid=0.1&disp=inline&realattid=f_hclczgg90&safe=1&zw&sadssc=1&sadnir=1&saduie=AG9B_P8NRGsgtRrDjm6pWBkgEVz0&sadet=1361842297366&sads=xhLYOaP7DLQBAgxcEzcsjjm2gzs



ஜோதிஜி said...

2

https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=c5a10b45d7&view=att&th=13c8eb4b0d1a69a9&attid=0.2&disp=inline&realattid=f_hclczgj61&safe=1&zw&sadnir=1&saduie=AG9B_P8NRGsgtRrDjm6pWBkgEVz0&sadet=1361842447516&sads=FDbRgEFFnO6upOPzqhfehPjYF_4

ஜோதிஜி said...

3

https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=c5a10b45d7&view=att&th=13c8eb4b0d1a69a9&attid=0.3&disp=inline&realattid=f_hclczgji2&safe=1&zw&sadnir=1&saduie=AG9B_P8NRGsgtRrDjm6pWBkgEVz0&sadet=1361842512095&sads=8PHl9lUSKglo1CkMoezoDjDF7jA

சுடுதண்ணி said...

விழா மலர் -> https://docs.google.com/file/d/0B6N1gpIoT6HoMlhaVUtMREZPRDA/edit?usp=sharing

Anonymous said...

This works.

ஜோதிஜி said...

good