எங்கு படிக்கலாம்? எதைப்படிக்கலாம்? கடந்த சில மாதங்களாக இது தான் பத்திரிக்கை உலகில் உச்சரிக்கப்படும் மந்திரம். இந்த மந்திரத்திற்குள் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது.
நல்லது என்றால் எங்கங்கே என்னன்ன வாய்ப்புகள் உள்ளது? என்பது முழுமையாகச் சந்தையில் வெளியே தெரிகின்றது. கெட்டது என்றால் குப்பைகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டு விளம்பரங்கள் மூலம் கவர்ச்சியாகக் காட்டப்படுகின்றது. மாணவர்களுக்குக் குழப்பம். பெற்றோர்களுக்கு மயக்கம்.
••••
இந்த முறை பத்திரிக்கைகளுக்கு பம்பர் லாட்டரி. டபுள் போனஸ். பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ வகுப்புகள் தேர்ச்சி முடிவு வரும் போது ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் விளம்பரம் மட்டுமே தொடர்ந்து வரும். இந்த முறை தேர்தல் இத்துடன் சேர்ந்து வந்து விட்ட காரணத்தால் விளம்பரங்களுக்குப் பஞ்சமே இல்லை. பத்திரிக்கைகளில் பாதிக்குப் பாதி விளம்பரங்கள். அதுவும் முழுப்பக்க விளம்பரங்கள்.
கடந்த ஒரு மாதமாக அதிலும் குறிப்பாகக் கடந்த சில வாரங்களாக வீட்டுக்கு வரும் பத்திரிக்கைகளில் கல்லூரிகள் கொடுக்கும் விளம்பரங்களை மகள்களுடன் உட்கார்ந்து விவாதிப்பதுண்டு. எத்தனை எத்தனை கல்லூரிகள்? புதுப்புது பாடத்திட்டங்கள். நாம் கற்பனையில் நினைத்தே பார்த்திராத அத்தனை கோர்ஸ் களும் வரிசைகட்டி நிற்கின்றது.
கடந்த சில வருடங்களாகத் தொழில்நுட்ப படிப்பு காற்று வாங்கத் தொடங்கியுள்ளது. இப்போது கலைக்கல்லூரிகள் பக்கம் திரும்பியுள்ளது.
•••••
தமிழகத்தில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 479
மொத்த இருக்கைகள் 1, 72 .940
இதுவரையிலும் நிரம்பிய இடங்கள் 45 662 ( 26 சதவிகிதம்),
பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வெறுமனே பத்து சீட்டுகள் கூட நிரம்பாத கல்லூரிகளும் உண்டு. இனி என்ன செய்வார்கள்? என்ன செய்யப் போகின்றார்கள்?
கடந்த பத்து வருடங்களில் இது போன்ற கல்லூரிகளில் படித்து வெளியே வந்த மாணவர்கள் எந்த தரத்தில் இருப்பார்கள். முழு விபரம் அறிய. தமிழகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிகளாவது, கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இதைப் பற்றித்தானே முதன்மையாக பேச வேண்டும்? யாராவது இதுவரையிலும் வாயைத் திறந்து உள்ளார்களா?
*******
மொத்த இருக்கைகள் 1, 72 .940
இதுவரையிலும் நிரம்பிய இடங்கள் 45 662 ( 26 சதவிகிதம்),
பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வெறுமனே பத்து சீட்டுகள் கூட நிரம்பாத கல்லூரிகளும் உண்டு. இனி என்ன செய்வார்கள்? என்ன செய்யப் போகின்றார்கள்?
கடந்த பத்து வருடங்களில் இது போன்ற கல்லூரிகளில் படித்து வெளியே வந்த மாணவர்கள் எந்த தரத்தில் இருப்பார்கள். முழு விபரம் அறிய. தமிழகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிகளாவது, கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இதைப் பற்றித்தானே முதன்மையாக பேச வேண்டும்? யாராவது இதுவரையிலும் வாயைத் திறந்து உள்ளார்களா?
*******
எம்.ஜி.ஆர் தனியார் கல்லூரிகளுக்கான வாசலைத் திறந்து வைக்காமல் போயிருந்தால் இப்போதைய சூழலில் என்னவாயிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கிறேன். நிச்சயம் இவ்வளவு மாணவர்களுக்கு அரசு முழுமையாகக் கல்வி வழங்கியிருக்க முடியுமா? உழுத்துப்போன நிர்வாகத்தில், ஊழல் மிகுந்த அதிகாரவர்க்கம் தன் கடமையைச் சரிவரச் செய்து இருக்க முடியுமா? கல்லூரிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை இவர்கள் உருவாக்கியிருப்பார்களா? போன்ற பல கேள்விகள் வந்து போகின்றது.
••••••
திருப்பூர் மாவட்டத்திற்குள் மட்டும் எத்தனை கல்லூரிகள் என்பதனைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் நிரம்பி வழிகின்றது. பெரும்பாலான பெற்றோர்கள் மகள்களை மகன்களுக்குச் சமமாக பார்க்கும் மனோபாவம் இப்போது வளர்ந்துள்ளது. மாணவியர்களுக்கென்று உள்ள கல்லூரிகள் தாண்டியும் இருபாலரும் படிக்கும் கல்லூரிகளில் ஏராளமான மாணவிகள் சேர ஆர்வமாக இருக்கின்றனர். மாணவியர்களின் கல்வியறிவு தற்போது வேறொரு புதுப் பிரச்சனையை இங்கே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் கவுண்டர் இன சமூக மக்கள் மணமகன் மணமகள் கூடும் கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். அதாவது மேட்ரிமோனியல்.காம் மாதிரி. அதற்கு அவர்கள் தனியாகப் பெயர் ஒன்று வைத்துள்ளனர். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பெண்கள் எவரும் இதனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. காரணம் அவர்கள் எதிர்பார்ப்புக்குரிய ஆண்கள் இல்லை. கூட்டம் நடத்தியவர்கள் நொந்துபோய் முழுமையான தோல்வி என்றார்கள். இன்னும் நாலைந்து வருடங்களில் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் நடக்கப் போகும் காலம் வரப் போகின்றது.
•••••
மாணவர்கள் மாணவியர்கள் பத்திரிக்கைகளில் வரும் கல்லூரி சார்ந்த விளம்பரங்களைப் பாருங்கள். அவர்கள் நடத்தும் கூட்டங்கள், கலந்துரையாடல்களைக் கவனிக்கவும். அவர்கள் சொல்லும் கோர்ஸ் ன் சாதக பாதக அம்சங்களை, எதிர்கால வாய்ப்புகளை உங்களுக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் சோதித்துப் பாருங்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் நீங்கள் படித்த படிப்பு மூலம் நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தால் அதை இன்றைக்கே உங்கள் வீட்டில் உள்ள பரணில் ஒரு சாக்குப் பையில் கட்டி மேலே பத்திரமாக வைத்து விடுங்கள். உங்களின் தனித்திறமைகளைத்தான் இனிவரும் உலகம் எதிர்பார்க்கின்றது என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும்.
முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் சேர விரும்பும் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலருடன் கட்டாயம் பேசுங்கள். அங்கே உள்ள அரசியல், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பணியாற்றும் ஆசிரியர்களின் தரம், லேப் வசதிகள் போன்றவற்றை அங்கு படித்து முடித்து வந்தவர்களிடம் கேட்டால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியக்கூடும்.
••••••
எதை நம்புவது? யாரை நம்புவது? என்பது தற்போதைய சூழலில் குழப்பமாக உள்ளது. சென்னையில் உள்ள பிரபல்யமான மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி என்பது இருநூறு வருடப் பாரம்பரியம் கொண்ட கல்லூரி. எல்லாவகையிலும், எல்லாநிலையிலும் புகழ்பெற்றது. இந்திய அளவில் தரச்சான்று பெற்ற கல்லூரியில் கூட பாலியல் வன்முறை நடக்கின்றது என்பதே அதிர்ச்சியாக உள்ளது.
•••••••••
இந்த மூன்று இணைப்பையும் பார்க்க வேண்டுகிறேன்.
காரணம் கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்து, கடன் வாங்கி செலவளித்து, கனவுகளுடன் வெளியே வரும் போது உங்களை வரவேற்கப் போவது என்ன என்பதன் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகின்றேன்.
முதல் இணைப்பு (அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்பிற்கான கல்லூரிகளின் பட்டியல்)
TNEA 2018 College Cutoff Marks
Anna University Counselling 2018 Cutoff Marks
இனி ஒவ்வொரு மாணவருக்கும் கல்லூரி பட்டப்படிப்பு தேவையா? பட்டப்படிப்பு முடிந்து வரும் மாணவர்களின் திறமை (தமிழக கல்விச்சூழலில்) எப்படியுள்ளது? அவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியும்? என்ன வாய்ப்புள்ளது? இதனைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பு உதவக்கூடும்.
"உலகில் 6-ல் ஒரு பங்கு மக்கள்தொகை இருக்கும் இந்தியாவை, வெறும் ஆறாயிரத்துக்கும் குறைவான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளே ஆள்கிறார்கள். இந்த ஆறாயிரம் என்பதுகூட தோராய மதிப்பீடுதான். 130 கோடி இந்திய மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடத்தில் நம்முடைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, வெறும் 130-க்கும் குறைவான உயரதிகாரிகள், முக்கியமான அரசுத் துறைச் செயலர்கள்தான் தீர்மானிக்கின்றனர் என்பதுதான் உண்மை.
ஐஏஎஸ் கனவு என்றால், மாவட்ட ஆட்சியர் என்பதுடன் சுருங்கிவிடக் கூடாது. பிரதமர் அலுவலகச் செயலர், முதன்மைச் செயலர், மாநிலத்தின் தலைமைச் செயலர் என்று விரிய வேண்டும். இந்த இடங்களில் எல்லாம் தமிழ் இளைஞர்கள் சென்று அமர வேண்டும். இது சுறா வேட்டைக் கனவுதான். நம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டு, திட்டமிட்டு, அயராது உழைத்தால் அது இயலாத காரியம் அல்ல. அதேநேரம், `தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இல்லை' என்று சொல்வீர்களேயானால், இலக்கை அடைவது சிரமம்தான்.
சுறா வேட்டைக்குச் செல்பவர்கள் கடலுக்குள் வெறும் கையோடு செல்ல முடியுமா? அதேபோல, வாசிப்பு இல்லாமல் போட்டித் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும்? இந்த தேர்வுக்கு நமக்கு வழிகாட்டுவது வாசிப்புதான். அதில் ஒன்று பத்திரிகை வாசிப்பு. தினமும் குறைந்தது ஒரு தமிழ் நாளிதழ், ஓர் ஆங்கில நாளிதழையாவது இரண்டு மணி நேரத்துக்கு வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் உண்டாக்கிக்கொள்ளுங்கள். வாரம் ஒரு புத்தகத்தையேனும் படிக்கத் திட்டமிடுங்கள்" என்றார்.
சமஸ் (இந்து தமிழ் திசை)
ஐஏஎஸ் கனவு என்றால், மாவட்ட ஆட்சியர் என்பதுடன் சுருங்கிவிடக் கூடாது. பிரதமர் அலுவலகச் செயலர், முதன்மைச் செயலர், மாநிலத்தின் தலைமைச் செயலர் என்று விரிய வேண்டும். இந்த இடங்களில் எல்லாம் தமிழ் இளைஞர்கள் சென்று அமர வேண்டும். இது சுறா வேட்டைக் கனவுதான். நம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டு, திட்டமிட்டு, அயராது உழைத்தால் அது இயலாத காரியம் அல்ல. அதேநேரம், `தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இல்லை' என்று சொல்வீர்களேயானால், இலக்கை அடைவது சிரமம்தான்.
சுறா வேட்டைக்குச் செல்பவர்கள் கடலுக்குள் வெறும் கையோடு செல்ல முடியுமா? அதேபோல, வாசிப்பு இல்லாமல் போட்டித் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும்? இந்த தேர்வுக்கு நமக்கு வழிகாட்டுவது வாசிப்புதான். அதில் ஒன்று பத்திரிகை வாசிப்பு. தினமும் குறைந்தது ஒரு தமிழ் நாளிதழ், ஓர் ஆங்கில நாளிதழையாவது இரண்டு மணி நேரத்துக்கு வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் உண்டாக்கிக்கொள்ளுங்கள். வாரம் ஒரு புத்தகத்தையேனும் படிக்கத் திட்டமிடுங்கள்" என்றார்.
சமஸ் (இந்து தமிழ் திசை)





