மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்களுக்கு,
அகரம் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியைக் காணொலிக் காட்சி வழியாகக் (முழுமையாக) கண்டேன். நெகிழ்ச்சியுடன் என் எண்ணத்தைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். அதன் பொருட்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்.
தமிழகத்தில் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப்பருவம் வரைக்கும் பாடங்களைப் பற்றி மாணவர்கள் அக்கறைப்படுவதை விடத் தமிழகத் திரை உலகம் சார்ந்த விசயங்கள், வாசிப்பு, விருப்ப நாயகர்கள், நாயகிகள் தான் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிந்து விடுகின்றார்கள். ஒவ்வொருவரும் தத்தமது வேலை தேடி தனக்கான சொந்த வாழ்க்கையை அடையாளம் காண அலைந்து திரியும் போதும் திரைப்பட உலகம் சொல்லும் கனவு வாழ்க்கை தான் அவர்களின் ஆழ்மனதில் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளதை நான் அறிந்தே வைத்துள்ளேன். திருமண வாழ்க்கைக்குப் பின்பும் கூட இது மாறுவதில்லை.
