Saturday, July 03, 2010

வலையை விரித்தது யாரடா?

அந்த நிறுவனம் அமெரிக்காவிற்கு பெண்கள் அணியும் உள்ளாடைகளை (பேண்டீஸ்,ஜட்டி மற்றும் கவர்ச்சிகரமான ஆடைகள்) அனுப்பிக்கொண்டுருந்தார்கள்.  இறக்குமதியாளருக்கும், நிறுவனத்திற்கும் இடையில் ஒரு பாம்பாயைத் சேர்ந்த ஒரு தரகர் இருந்தார்.  இவரிடம் பணி புரிந்தவர் என் சொந்த ஊரைச் சேர்ந்த லெஷ்மணன்.  நிறுவனத்திற்கு அமெரிக்காவில் இருப்பவர்களைப் பற்றியோ அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றியோ முழுமையாகத் தெரியாது.  பல சமயம் இடுகையைப் போலவே தான் இந்த ஏற்றுமதி தொழிலும். மின் அஞ்சல், தொலைபேசி, இதற்கு மேல் வங்கி பரிவர்த்தனைகள். கடல் கடந்து இருந்தாலும் நம்பிக்கை ஒன்றே இணைத்து வைத்து இருக்கும்.   ஏதோ ஒரு வகையில் ஆங்கிலம் தெரியாத நிறுவன நிர்வாகியை தரகருக்குப் பிடித்துப் போய்விட்டது. அவர் எதிர்பார்த்த அத்தனை வசதிகளும் நிறுவனத்தில் இருக்க அவரின் சுய பாதுகாப்பும் அம்சமாய் அமைந்து விட அமெரிக்க ஒப்பந்தம் உறுதியானது. தரகருக்கு ஒவ்வொரு இரவும் ஜாலியான வாழ்க்கை.  காரணம் மூன்று வருட ஓப்பந்தம் கிடைத்த நிறுவனம் கவனித்த கவனிப்பு அது.

ஒரு வருடம் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருந்தார்கள்.  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை அன்று தூத்துக்குடிக்கு 12 லட்சம் ஆடைகள் சென்று கொண்டுருந்தது. ஒரு ஆடையின் அதிகபட்ச எடையே நூறு கிராம் கூட இருக்காது. நிர்வாகிக்கு பாதிக்கு பாதி லாபம். இந்த பாதி லாபத்திற்குப் பின் முள் ஒன்று உண்டு.  ஆனால் அதை அப்போது நிர்வாகியும் உணரவில்லை. உணர வைக்க வேண்டிய தரகருக்கும் அது குறித்த அக்கறையும் இல்லை. மொத்தத்தில் இரு பக்கமும் ஜாலியோ ஜிம்கானா தான். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இன்றைய தொழில் போட்டிகள் இல்லாத உலகம் அது.

எல்லா பக்கமும் பலன் கிடைத்துக் கொண்டுருந்தது. நிறுவனத்தில் மாடிகள் மளமளவென்று ஏறிக் கொண்டு இருந்தது. பகவான் லேசாக கண் விழித்து பார்த்து விட்டு மறுபடியும் உறங்கத் தொடங்கினார்.  அமெரிக்காவில் இருந்து திடீர் என்று ஓலை வந்தது.  

" இந்த தேதி அன்று உங்கள் நிறுவனத்திற்கு எங்கள் தலைமை துணை அதிகாரியோடு எங்களின் வடிவமைப்பு குழுவென்று உங்கள் நிறுவனத்தை பார்வையிட வருகிறார்கள். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஏற்கனவே நாம் போட்டுள்ள ஒப்பந்த வாசகத்தின்படி உங்கள் நிறுவனம் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் என்று நம்புகிறோம். அப்போது மீண்டும் மூன்று வருடத்திற்கான ஒப்பந்தம் அன்றே உறுதிப்படுத்தப்படும்". 

தகவல் கிடைத்த நாள் முதல் நிறுவன நிர்வாகிக்கு தலைகீழ் ஆட்டம் தான். தரகருக்கோ இரவும் பகலும் தூங்கினால் கிர்ர்ர்...... என்பது குறையவே மாட்டேன் என்கிறது.  வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட இரண்டு புத்திசாலிகளும் ஒன்றை மறந்து விட்டார்கள்.  போட்டுள்ள ஒப்பந்தப்படி நிறுவனத்தை தயார் செய்ய மறந்து விட்டார்கள்.

உள்ளூர் தொழிற்சங்கத்தில் செல்வாக்கு.  அதிலும் நல்ல பொறுப்பு.  நிர்வாகத்தில் அதிக கண்டிப்பு. எப்போதும் களத்தில் நின்று உழைக்கும் நிர்வாகியின் அயராத உழைப்பு.  எல்லா வகையிலும் தினந்தோறும் இரவு ஒரு மணிநேரம் வரைக்கும் உழைத்துக் கொண்டுருந்த தொழிலாளர்களின் உழைப்பு என ஒவ்வொன்றும் நிறுவனத்தை உறுதியாக வளர்த்துக் கொண்டு இருந்தது.  குறிப்பிட்ட அதே நாளில் கோவை விமான நிலையத்தில் உயர்தர வெளிநாட்டு பென்ஸ் காத்துக் கொண்டுருந்தது.  புகைப்படத்தில் உள்ள துணை தலைமை அதிகாரியை மட்டும் காணவில்லை. உடன் வந்தவர்களுக்கும் குழப்பம். உள்ளுக்குள் பேசி வைத்து இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை. சற்று நேரம் காத்து இருப்பது போல் இருந்து விட்டு  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வேறு வழி எதுவும் தெரியாமல் வந்து இறங்கியவர்களை அழைத்துக்கொண்டு தரகர் வந்து சேர்ந்தார். அந்த வெளிநாட்டு பென்ஸ அலுங்காமல் குலுங்காமல் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தது,  ஆனால் அதற்குள் மொத்த நிறுவனமும் பூகம்பம் போல் குலுங்கி தடுமாறி நின்றது?

வெளிநாட்டு வாகனத்தில் வந்து இறங்க வேண்டிய துணை தலைமை அதிகாரி நிறுவன முகவரியை வைத்துக்கொண்டு விமான நிலைய டாக்ஸி மூலம் ஏற்கனவே நிறுவனத்திற்கு வந்து சேர்ந்து இருந்தார்.  வந்தவர் அலுவலகத்தின் உள்ளே போகாமல் உள்ளே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆராய்ந்து கொண்டுருந்தார்.  500 பேர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவரை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அலுவலகம் என்பது மேல்மாடியில் இருந்தது. இப்படி ஒருவர் வந்து இருக்கிறார் என்பதை காவலாளியும சொல்ல மறந்து விட பகவான் சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தார்.
வந்தவர் நிறுவனத்தில் உள்ள துறை சார்ந்த பகுதிகளை ஒவ்வொன்றாக பார்த்து விட்டு கடைசியில் சென்றது தொழிலாளர்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறைகள் உள்ள பகுதி.  அப்போது தான் அலுவலகத்தில் உள்ளவர்கள் கிடைத்த தகவலின்படி பதறியபடி இவரைத் தொடர ஆரம்பித்தனர். 

ஒரு வேளை கழிப்பறைக்குச் செல்ல விரும்புகிறார் என்றபடி பின்னால் இருந்தவர்கள் " ஐயா சுத்தமான கழிப்பறை மேலே இருக்கிறது.  அங்கே போகலாம்" என்றவர்களை பார்த்து சிரித்தபடியே உள்ளே நுழைந்து பார்த்தவிட்டு மேலே வந்தார்.  எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.  

நிறுவன நிர்வாகியை விட தரகருக்கு உள்ளும் புறமும் ததிகிணந்தோம் நாட்டிய நாடகம் நடந்து கொண்டுருந்தது.  அப்போது தான் தரகருக்கு உள்ளே சற்று பலமாக உரைத்தது.  ஒப்பந்த வாசகங்கள் ஒவ்வொன்றாக ஓடிக் கொண்டுருந்தது.  

கடைசியாக உள்ளே குளிர்சாதன அறைக்கு வந்து நின்றவர் சொன்ன அமெரிக்க ஆங்கிலத்தை தரகர் மொழிபெயர்த்து நிறுவன நிர்வாகியிடம் சொன்னது இது.  

" உன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதி களையும் நீ செய்யவில்லை.  என்னுடைய ஆடைகளைத் தைக்கும் எந்த எந்திரமும் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஒவ்வவொன்றிலும் எண்ணெய் பிசுக்கும் அழுக்கும் தான் மண்டிக் கிடக்கிறது. தொழிலாளர்களின் எவரின் கையிலும் கையுறை இல்லை. உடைந்த ஊசிகள் ஆடைகளுடன் தான் இருக்கிறதே தவிர அதற்கென்று எந்த ஏற்பாடும் இருப்பதாக தெரிய வில்லை.  துணியை வெட்டிக் கொண்டுருப்பவர்கள் பயன்படுத்தும் உயர்ரக அழுத்தம் வரும் மின்சார சாதனங்களுக்கு உரிய பாதுகாப்பு கூட எதுவும் இல்லை. ஒரு வருடமாக இதை தைத்துக் கொண்டுருக்கும் தொழிலாளர்களை சரியான முறையில் வழிநடத்துபவர்களும் எவரும் உள்ளே இல்லை.  எந்திரம் முதல் கழிப்பறை வரை அழுக்கு அசிங்கம் .................

இந்த நிமிடம் முதல் உன்னிடம் உள்ள அத்தனை ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படுகிறது.  தயாரிப்பில் இருக்கும் ஆடைகளும் எங்களுக்குத் தேவையில்லை.  நன்றி. வணக்கம்.  டாடா பைபை..........."

கமல்ஹாசனுக்கு அபிராபி தந்த சுற்றல் வசனம் போல நிர்வாகியை சுற்ற வைத்தது ஆச்சரியமல்ல.  அசராத நிர்வாகி லஷ்மணனிடம் சொன்ன வசனம் தான் மொத்ததிலும் சிறப்பு.

" இவன் என்ன சுத்த மசக்காட்டானா இருப்பான் போல.  கக்கூஸ் போறவனுக்கெல்லாம் நானா போய் நின்னு கழுவிவிட்டுகிட்டு இருக்றது?  இத்தன மொதல போட்டுட்டு கழுவுறதையும் துடைக்றதையும் போய் நானா பார்க்க முடியும்?

உலகத்தில் அமெரிக்காவால் பாதிக்கப்படாத நாடே இல்லை.  அப்படி ஒரு நாடு இருக்குது என்றால் அங்கு எந்த அடிப்படை வளமும் இல்லை என்று அர்த்தம்.  அமெரிக்காவின் சர்வ தேச அரசியல் கொள்கைகள் என்பது வேறு. தொழில் அதிபர்களின் கொள்கைகள் என்பது வேறு.  இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு ஆன்டர்சன் நடத்திய நிறுவனமும் தொங்கலில் விட்ட என்ரான் நிறுவனமும் இங்கு நமக்குத் தேவையில்லாதது.  காரணம் அதன் அத்தனைக்குப் பின்னாலும் நம்முடைய அடிவருடிகள் உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  திருப்பூரில் தொழில் மூலமாக கெட்டு அழிந்தவர்கள் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அமெரிக்கர்களால் அழிந்தவர்கள் குறைவு.  அப்படி அழிந்தவர் இருந்தால் மேற்படி கொழுப்பு என்று அர்த்தம்.  பேசியபடி நடந்து இருக்கமாட்டார்கள். ஆசையினால் அத்தனை அக்கிரமத்தையும் செய்து இருப்பார்கள்.  ஆப்பு கழட்ட முடியாத அளவிற்கு சொருகப்பட்டுருக்கும்.




இரண்டு காரணங்கள்.  அமெரிக்க அரசாங்கம் உருவாக்கும் அணு ஆயுத ஒப்பந்தமாகட்டும் மற்ற தொழில் சார்ந்த எந்த ஒப்பந்தமாகட்டும். எல்லாவற்றிலும் வெளிப்படையான அவர்களின் அணுகுமுறையை நம்மால் எளிதாக கவனிக்க முடியும்.  நான் இப்படித் தான்.  இது தான் எனக்கு வேண்டும்.  உனக்கு என்ன தேவை?  அப்படியா?  இது தான் என்னால் முடியும்?  உனக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா?  சரி இதை வைத்துக் கொள்?  இது தான் இதற்கான சட்டதிட்டம்.  மாறாதே........ நீ மாறினால் நானும் வேறு பக்கம் மாற்றிக் கொள்வேன்.  எளிமையான சட்டதிட்டம். அதற்கு நீங்கள் சுயநலம், பொதுநலம் போன்ற எத்தனை பெயர்களை வைத்துக்கொண்டாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை.


ஆமாய்யா நான் இப்படித்தான்.  நீ என்ன பண்ணுவ?

பிடித்தால் தொடரலாம்.  லாம் என்ன?  தொடர்ந்து தான் ஆக வேண்டும்.  அதிக வாங்கும் திறன் படைத்த அவர்களை விட்டால் வேறு ஆள் ஏது?  இந்தியாவில் உருவாக்கப்படும், உருவாகும் எந்த ஒப்பந்தத்தையும் அரசியலில் உள்ள முதல் தலைகளுக்கே தெரியுமா என்பது முதல் ஆச்சரியம்.  அதிகார வர்க்கத்திற்குள்ளேயே அத்தனை புரிந்துணர்வும் உருவாக்கப்பட்டு கையெழுத்து போடப்படும் சமயத்தில் தான் பத்திரிக்கைகளுக்கே தெரியும்.  இது இந்திய நிலவரம்.  ஆனால் அமெரிக்காவில் கூறு கிழிச்சு தொங்க விட்டு தான் அதிபரிடம் போய்ச் சேரும்.  விதிவிலக்குகளைத் தவிர. 
தொடக்கத்தில் எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் இங்கு மிகப்பெரிய கெடுபிடிகளை உருவாக்க வில்லை என்பதும் முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் சட்டதிட்டங்கள் என்பது ஒரு கத்தி போலத்தான். பொதுநலமும் சுயநலமுமாய் சேர்ந்த சானை தீட்டப்பட்ட கத்தியது.  நீ தயார் செய்யப்போகும் ஆடைக்கான அடக்கவில்லை. உன்னுடைய நடைமுறை செலவீனங்கள். உன்னுடைய லாபம்.  அதற்கு மேல் தொழிலா ளர்களின் நல்வாழ்வு என்று பக்கம் பக்கமாக அடிக்கப்பட்ட ஒப்பந்த நடைமுறை வரைவு சாசனம் உருவாக்கப்பட்டு இருபக்கமும் கையெழுத்து இடப்படும்.  நம்மவர்கள் எப்போதுமே நல நிதி என்பதை நம்முடைய நிதியாக கருதுபவர்கள்.  இறுதியாக பொட்டக்காடுகள் முழுக்க வளைத்துப்போட்டது தான் மிச்சம்.  பத்துவருடம் தொடர்ந்து நடந்து லாபம் பார்க்க வேண்டிய தொழில்களை அப்படியே அள்ளிக்கட்ட வேண்டிய அவசரத்தினால் இறுதியாக அதோகதியாக ஆனது தான் மிச்சமாக இருக்கும்.

ஆனால் இதே இந்த பன்னாட்டு சட்ட திட்டங்கள் இன்று எத்தனை உள்ளது தெரியுமா? 

 ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ்கள், ராப்,     செடக்ஸ்,       எஸ்ஏ8000    என்று தொடங்கி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவர்கள் விரும்பும் அளவிற்கு ஏராளமான சட்டதிட்டங்கள். ஒவ்வொரு தொழிலையையும் மிக சுத்தமாக அவர்கள் விரும்பும் ஒரு மாய வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.  வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடம் தொழில் தொடர்பை உருவாக்க வேண்டுமென்றால் அவர்கள் விரும்பும் அடிப்படை வசதி களுடன் இந்த சான்றிதழ்கள் பெறும் அளவிற்கு ஒவ்வொன்றையும நிறுவனத்திற்குள் உருவாக்கியிருக்க வேண்டும்.  இதையெல்லாம் தடை தாண்டி ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் வென்று வந்தால் இறுதிக்கட்டம் ஒன்று உள்ளது.  தயாரித்த ஆடைகளை குறிப்பிட்ட நிறுவனம் தரம் பார்த்து அவர்கள் சரி என்று சொன்னால் தான் கப்பலில் ஏற்ற முடியும். 

சரி அவர்கள் விரும்பிய அத்தனையும் உருவாக்கியாச்சு. இதற்கென்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான முதலீட்டையும் முடக்கியாச்சு.  தரத்திற்கேற்ற தகுதியான விலையாவது கிடைக்கும் என்கிறீர்களா? 
முதலும் போச்சு.  இப்போது மூச்சும் போய்க் கொண்டுருக்கிறது.

வலையை விரிக்க அனுமதித்ததும் நாமே.  அதில் வலியப்போய் மாட்டிக் கொள்வதும் நாமே.

ஏன் இத்தனை கெடுபிடி?  இத்தனை கெடுபிடிகள் இல்லாவிட்டால் அந்த தரத்தை நம்மால் கொடுக்க முடியாதா? இந்த இடத்தில் தான் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளை பண்டாரமாக மாற்றுவது தொடங்குகிறது?  பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கும் ஒரு கல்லில் இரு மாங்காய் அல்ல.  ஒரு மரமே சாய்ந்து விடும்.

27 comments:

ராம்ஜி_யாஹூ said...

weekly 12 ($30,000) lacs garments to USA.

Unbeleivable, Ben Bernake (FED chairman) will be Happy to see your blog, He is worried when recession would end. You have easily closed the recession.

தமிழ் உதயம் said...

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது தான், எந்த தொழிலும் பால பாடமாக இருப்பது.

ஒருவன், உங்களை வாழ வைக்கிறான் என்றால் - அதற்கு பின் ஆயிரம் காரணங்கள் இருக்கும்.

மேலும்,
குறிப்பிட்ட சிலரை நம்பியே நிறுவனம் நடத்துவது தவறான விஷயம்.

இவர் போனால் நம் நிலை என்னவாகும் என்று, அவர் இருக்கும் போதே ஒரு நிரலை உருவாக்க வேண்டும். அப்போது தான் யார் இருந்தாலும், யார் போனாலும் தாக்கு பிடிக்க முடியும்.

இவை சிறு நிறுவனங்களுக்காக சொல்லப்பட்டவை. திருப்பூர் நிறுவனங்களுக்கு பொருந்துமா என்று தெரியாது. 

Saminathan said...

அருமை..
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !

Unknown said...

சீனாவில் சிறு முதலீட்டர்களுக்கு இருக்கும் தொழில் பாதுகாப்பு இந்தியாவில் இல்லை.. பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகத்தான் இந்திய அரசு இருக்கிறது.. போட்டி நிறைந்த இவ்வுலகில் அவர்கள் கேட்கும் அனைத்தையும் செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது..

மிகவும் சரியான அலசல் பாராட்டுக்கள் ...

வனம் said...

வணக்கம் ஜோதிஜி

\\இவன் என்ன சுத்த மசக்காட்டானா இருப்பான் போல. கக்கூஸ் போறவனுக்கெல்லாம் நானா போய் நின்னு கழுவிவிட்டுகிட்டு இருக்றது? இத்தன மொதல போட்டுட்டு கழுவுறதையும் துடைக்றதையும் போய் நானா பார்க்க முடியும்?\\

இதுதான் இந்தியர்களின் உணர்வுமுறை.

நாம் சார்ந்த விடயம் சரியாக இயங்குகிறதா என பார்ப்பது எந்த இந்தியனும் விரும்பாத ஒன்று.
இருக்கும்வரை ஓடுகின்றதா.... , எப்படியாவது ஓடுகின்றதா என்பதுதான் நம்மவர்களின் குறிக்கோள்.

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு!

ஹேமா said...

ஜோதிஜி எனக்குப் புரிதல் அரைகுறையாக இருந்தாலும் உங்கள் பதிவின் தேடலும் அலசலும் அதற்கான நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தையான நேரமும் பாராட்ட வைக்கிறது.படங்களும் கூட !

ஜோதிஜி said...

உங்களின் தொடர் வாசிப்புக்கு நன்றி ராம்ஜி. நீங்கள் சொல்லியுள்ள FED Chairman அந்த நிறுவனம் குறித்த தகவலுக்கு நன்றி. இவருக்கு தமிழ் தெரியுமா? அல்லது நீங்கள் அவருக்கு இதன் உள்ளடகத்தை சொல்வீர்களா? எழுதினால் படிப்பவர்களுக்கு உதவியாய் இருக்கக்கூடும். நம்பமுடியாத எத்தனையோ விசயங்களை இங்கு நிகழ்த்திக் காட்டியவர்கள் இங்குள்ள மண்ணின் மைந்தர்கள். உழைப்பு என்பதை முழுமையாக இங்கு வந்து நுழைந்த பிறகு தான் வளையாமல் வாழ்ந்த என் உடம்பு உணர்ந்து கொண்டது. உயர்ந்தது பெரிய விசயம் அல்ல. படிப்பறிவு இல்லாமல் பட்டறிவு பெற்றவர்கள் உயர்ந்தது தான் மற்றவர்களுக்கு மகத்தான் பாடங்கள். நன்றி ராம்ஜி

நன்றி ரமேஷ். ஒரு அமெரிக்க நிறுவனத்தை மட்டுமே நம்பி இறக்கிய நூறு கோடிக்கு மேல் முதலீடு செய்த பல நிறுவனங்கள் இப்போது முழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த அத்தனை வசதிகளையும் உருவாக்கி விட்டார்கள். ஆனால் அவர்களிடம் கொடுக்க ஒப்பந்தமும் இல்லை. இவர்களிடம் மாற்று வழிகளும் செய்து கொள்ள முடியாத சூழ்நிலை. ஒருவர் எதிர்பார்க்கும் சட்டதிட்டங்கள் அடுத்தவருக்கு பொருந்தாமல் பல சமயம் போய் விடுவதுண்டு.

ஜோதிஜி said...

சாமிநாதன் உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் உழைப்புக்கிடையே வாசிக்கும் இந்த எழுத்துக்கள் ஏதோ ஒரு வகையில் திருப்தியை தந்துள்ளது என்பதே எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. உங்களின் சுருக்கமான பாராட்டுரையே பல இடுகைக்கு இட்டுச் செல்லும்....

ஜோதிஜி said...

செந்தில் ஒவ்வொருவரும் சீனா பற்றி எழுதுங்கள் என்று கேட்ட போது பல முதலாளிகளிடம் பேசினேன். ஏறக்குறைய சீனா தனது மக்களை இன்குபேட்டர் போலவே பாதுகாத்துக் கொண்டுருக்கிறது. பணம் என்பதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும் அரசாங்கமே உருவாக்கி முன் எடுத்துச் செல்கிறது. புரட்சி எப்போது உருவாகிறது? பணம் இல்லாத போது தான் தொடக்க வித்தாக இருக்கிறது. மற்ற உரிமைகள் எல்லாமே அதன் பிறகு தான். அந்த பணத்தை தேட தொழில்கள் அதற்குண்டான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து விட்டால் புரட்சியாவது புழுதியவாவது. தமிழ்நாட்டில் மக்கள் எப்போதும் எதாவது அரசாங்கம் இலவசமாக கொடுத்து விடாதா என்று ஏங்க வைத்து இருப்பதைப் போல அங்குள்ளவர்கள் தொழில் சார்ந்த விடயங்களை எதிர்பார்க்கும் மனோநிலையை உருவாக்கி உள்ளனர்.

ஜோதிஜி said...

இராஜராஜன்

இருக்கும் வரை ஓடுகின்றதா? நல்ல வார்த்தைகள்.....

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நம்மவர்களைப் போல உழைப்பதற்கு ஆளே இல்லை. இது தமிழர்களுக்கே உண்டான தனித்திறமை. ஆனால் அந்த உழைப்பை எங்கே கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்பது தனி மனிதனுக்கும் புரிய மாட்டேன் என்கிறது. கொண்டு போய் சேர்க்க வேண்டிய அரசாங்கத்திற்கும் அக்கறை இல்லாமல் இருக்கிறது. கேரள நண்பர்கள் குறிப்பட்ட காலத்திற்குள் பாதையை கண்டு பிடித்து விடுவார்கள். வட இந்திய மக்கள் மொத்தமும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் தமிழர்கள் அப்போது கூட யோசிப்பது இல்லை. யோசித்தவர்களையும் எவரும் வாழ வைப்பதும் இல்லை. தொடக்கத்தில் இங்கு ஒவ்வொருவருக்கும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருப்பார்கள் எனில் இன்று சீனா பங்களா தேஷ் வந்து இருக்குமா என்பது சந்தேகம்.

ஜோதிஜி said...

நன்றி பாரா

ஹேமா புரிந்தவர்களுக்கு எழுத்துக்கள் பிடித்துப் போவது பெரிய ஆச்சரியமல்ல. எழுதும் எழுத்துக்கள் தொழிலுக்கு சம்மந்தம் இல்லாதவர்களுக்கு புரிய வைப்பதே எழுதுபவனுக்கு சவாலான விஷயம். உங்கள் தொடர்வாசிப்புக்கு நன்றி. ஆனால் உங்களைப் போன்றவர்கள் கேள்வியாக கேட்கும் பல விசயங்கள் என்னையே எனக்கு உணர்த்தும். காரணம் எப்படி எழுத வேண்டும் என்பதை இன்னும் நான் கற்றுக் கொண்டே இருப்பதால்.

ஒன்று சேர் said...

இங்கு வந்து பார்த்து ஒழுங்கு சொல்வதற்கு முன்னர் அந்த மசக்காட்டான் நாடு என்ன ஒழுக்கமா? என என் போன்ற மறு மொழியிடுபவர்கள் கேட்டு விடுவதற்கு முன்னால் எச்சரிக்கையாக ஆண்டர்சனையும், என்ரானையும் போகிற போக்கில் சுட்டிக்காண்பித்து அதற்கும் கூட நமது நாட்டு அடிவருடிகள்தான் காரணம் என்ற பதிவு அற்புதம். நாமே வலை விரித்து நாமே விழாமல் தரத்தோடு நமது மக்களுக்காக உருவாக்கலாமே என்பது RESSISION க்கு ஒரு மறுமொழி நண்பர் கூறியது போல் எளிதான தீர்வை முத்தாய்ப்பாய் முடித்திருப்பதும் சிறப்பு. பல "வலை" களின் காரணமாக திருப்பூர் ரயில் நிலைய இறக்கம் தொடங்கி காதர்பேட்டை சுற்றி ஏற்றுமதி செகண்ட்ஸ் என்று சொல்லப்படும் கடைக்கு கடை குவியல்களைப் பார்த்தால் எத்தனை மரங்கள் வளர்வதற்கு முன்னால் விழுந்ததோ என இந்த தொழிலில் அடிபட்டவர்களால் மட்டுமே உணர முடியும். மற்றவர்களுக்கு ஏற்றுமதி தரம் எளிய விலையில் கிடைக்கிறது என்றுமட்டுமே தெரியும். மாற்றாக நமக்காகவே தரமுடன் உருவாக்கினால் நாம் எங்கோ சென்றுவிடலாம் - வாழ்த்துக்கள் /சித்திரகுப்தன்

nerkuppai thumbi said...

மற்றும் ஒரு நல்ல பதிவு.

அமெரிக்கா வணிக முறையினால் பல ஏற்றுமதியாழர்க்கு பல முறை எதிர்பாராத சமயத்தில் இழப்பு என்ற தொனி ஒலிக்கிறது என நான் கருதுகிறேன்.
"தொழிலாளர்கள் நல வசதிகள் போன்ற விஷயங்கள் கூட அவர்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறும்; ஆனால் அவற்றை நம்மவர் கருத்தோடு கடைபிடிப்பது இல்லை; ஆகவே இழப்பு: ஒன்று தொழிலாளர்களுக்கு சரியான வசதி; இரண்டு: ரிபீட் ஆர்டர்; மூன்று : அதனால் தொழிலாளர்களுக்கு பணி./ கூலி". என்பது தான் சரியான inference என்று நான் கருதுகிறேன்.
அதாவது , அதிக லாபம் என நாம் கருதுவது தவறு ; அந்த அதிக பணம் நாம் செய்ய வேண்டிய பணிகளுக்காக, - இந்த இடத்தில், தொழிலாளர் வசதி. இந்திய தொழில் முதலாளிகள் அதிக லாபம் எனக் கருதும் தொழில்களில் இதே அணுகுமுறை இருப்பதால் தான் நீண்ட கால விளைவுகளை -உதாரணம்: கழிவு பொருள் சுத்தம் செய்தல் முதலியன. - குறுகிய கால லாபங்கள் நீண்ட கால இழப்புகளை மறைத்துவிடுகின்றன

வடுவூர் குமார் said...

எழுதும் எழுத்துக்கள் தொழிலுக்கு சம்மந்தம் இல்லாதவர்களுக்கு புரிய வைப்பதே எழுதுபவனுக்கு சவாலான விஷயம்.
நான் இந்த‌ நிலை ஆனாலும் முழுவ‌துமாக‌ ப‌டித்தேன்.

seethag said...

பல்வேறு உபயோகமில்லாத பதிவுகளுக்கு நடுவில் உங்கள் பதிவு மிகவும் நன்றாகவும் விழிப்புணர்வு ஏற்ப்படும் நோக்கத்துடனும் உள்ளது.இங்கே ஆஸ்திரேலியாவில் பிபிசியின் ஒரு நிகழ்ச்சியைக்காட்டினார்கள், எநக்கு மிகவும் வருத்தம்க்வும் ஒருவிதத்தில் வெட்ட்க்கமாகவும் இருந்த்ததால் பார்க்காமல் தவிர்த்துவிட்டேன்.http://en.wikipedia.org/wiki/Blood,_Sweat_and_T-shirts இதுதான் ஏற்றுமதி ஆடையாளர்களைபற்றீய ஒரு தொலைக்காட்ட்சி நிகழ்ச்சி.இந்தியவில் டெல்லியில் நடப்பதைக்காட்டியுள்ளார்கள்.
நீங்கள் சொல்வதுபோல் தனிமனித உழைப்பால் தான் நம்மக்கள் உயர்ந்து உள்ளார்கள்.அராசாங்கம் செய்யும் இடறுகளையும் மீறி ஜெயிப்பவர்க்களை வணங்கவேண்டும்.

ராஜ நடராஜன் said...

இன்று ஆடை சார்ந்த நான்கு பதிவுகளை பொறுமையாக படித்து விட்டு இங்கே பின்னூட்டமிடுகிறேன்.

கிட்டத்தட்ட 50 அங்காடிகள் இருக்கும் ஒரு மாலில் கடிகாரம்,செருப்பு,மின் விளையாட்டுப் பொருட்கள்,உணவு விடுதி,ஜெர்மன் சூட்,சூட்கேஸ் என்ற கடைகள் தவிர 30ம்க்கும் மேற்பட்டவை ஆடைகளுக்கானவை.அதிலும் நிறைத்துக் கொள்பவை சீனா,துருக்கிய ஆடைகளே.ரேமண்ட்ஸ் மட்டும் ஒரே ஒரு கடை.

பொருளின் விலையில் சீனா முந்திக்கொள்கிறது.தரத்தில் இந்திய ஆடைகளே சிறநதவை.விலையில் சீனாவே சிறந்தது.

நீங்கள் கூறும் அமெரிக்க ஒப்பந்தங்கள் மாதிரி வளைகுடாக்கள் கவலைப்படுவது இல்லை என நினைக்கிறேன்.வியாபார லாபமே முக்கிய குறிக்கோள்.மேலும் பொருள் சேதமில்லாமல் வந்தடைய வேண்டும். ஆனால் பெரும் நிறுவனங்களின் பின்ணணியில் அமெரிக்கர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.மொழி லாவகம் இருந்தால் அமெரிக்ககாரர்களுடன் வியாபாரம் செய்வதும் எளிதென்றே நினைக்கின்றேன்.

ஜோதிஜி said...

சித்ரகுப்தன் நீங்கள் குறிப்பிட்டுள்ள காதர்பேட்டை பகுதிகளில் மற்ற வேலை விசயமாக செல்லும் போது நீங்கள் என்ன எழுதி இருக்கீறீர்களோ அதையே தான் நானும் யோசித்து உள்ளேன். எத்தனை தாலி அறுந்த வாழ்க்கை இங்கு வந்து சேர்ந்ததோ. இது போல முடிந்த நிறுவனங்களில் எடுக்கும் சாமான்கள் மற்றும் எந்திரங்களை விற்கும் பகுதி இங்கு ஒரு இடம் உள்ளது. நீங்கள் எழுதியதும் அதுவும் பற்றி கூட எழுதலாம் போல. நன்றி.

ஜோதிஜி said...

நெற்குப்பை தும்பி வருகைக்கும் உங்கள் கருத்துரைக்கும் நன்றி.

வடுவூர் குமார் மிகுந்த மகிழ்ச்சி.

திரு எழுத ஆரம்பித்தது முதல் இன்று வரைக்கும் நான் வைத்திருந்த அதே கருத்தைத்தான் நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். இந்தியாவைப் பொறுத்தவரையிலும் தனி நபர்கள் தங்களுடைய உழைப்பாலும் பல்வேறு பிரச்சனைகளையையும் தாண்டித் தான் தங்களை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜோதிஜி said...

உங்கள் கருத்தில் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக பேசலாம்.

எதைப்பற்றி எழுதலாம் எப்படி எழுதலாம் என்று ஒவ்வொரு முறையும் யோசித்துக் கொண்டே இருக்க வரக்கூடிய ஒவ்வொரு விமர்சனங்களும் பல விசயங்களை யோசிக்க வைத்துக்கொண்டுருக்கிறது.

மொழி லாவகம்.......... நானும் கூட பல சமயத்தில் இதைப்பற்றி யோசித்து உள்ளேன். ஆனால் அது இந்த துறையில் அடிபட்டு போகின்றது. ஏதோ ஒரு தலைப்பில் இதைப்பற்றி விரிவாக பேசலாம். நன்றி நடா ( நன்றி ஹேமா)

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான பகிர்வு , தொழிலாளி நலம், சுத்தம் போன்றவைகள் இதே அமெரிக்க முதலாளி , சீனா , பாகிஸ்தான் போன்ற தேசங்களில் கவனிப்பதில்லை என தான் நினைக்கிறேன் ( பாகிஸ்தான் போனால் விமானநிலயதிலேயே கை குலக்கல் !!!!!).
//உலகத்தில் அமெரிக்காவால் பாதிக்கப்படாத நாடே இல்லை. அப்படி ஒரு நாடு இருக்குது என்றால் அங்கு எந்த அடிப்படை வளமும் இல்லை என்று அர்த்தம். அமெரிக்காவின் சர்வ தேச அரசியல் கொள்கைகள் என்பது வேறு. தொழில் அதிபர்களின் கொள்கைகள் என்பது வேறு//

ரொம்ப சரியான வரிகள் ...சாதரணமாக நிறைய நல்ல குடிமகன்களை ( சிலேடை அல்ல ) பார்க்கலாம், நல்ல பத்திரிகைகள், நிறைய சுதந்திரம், நல்ல கருத்துக்கள் .... ஆனால் அவர்கள் அயல்நட்டு கொள்கை, எப்போதுமே மரத்தை சாய்த்து விடும் .

ஜோதிஜி said...

சுந்தர் பாகிஸ்தான் குறித்து சொல்லிய குலுக்கல் படித்து விட்டு ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டுருந்தேன்.

லெமூரியன்... said...

ஹ்ம்ம்....சற்று மாறுபட்ட கருத்து எனக்கு இதில் உண்டு...ஆனால் எந்த அளவிற்கு அது உண்மை என எனக்கு தெரியவில்லை....அமெரிக்க நிறுவனங்களை பொறுத்த வரை அவர்கள் ஒப்பந்தம் போடுகிற நிறுவனத்திடம் இவ்வகை அடிப்படை உரிமைகள் நன்றாக நிறைவற்றபடுகின்றனவா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆடித் செய்து உறுதி செய்கிறார்கள்...அவர்களை பொறுத்த வரை அவர்களுக்கு வேலை செய்யும் தொழிலாளியும் கூட ஒரு அமெரிக்க தொழிலாளி மாதிரியே நடத்த படவேண்டுமேனே நினைக்கிறார்கள்...நான் வேலைபார்த்த அமெரிக்க கார் கம்பனியில் 8 மணிநேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட உள்ளே இருக்க கூடாது என்பது தீவிரமாக அவர்களால் கடைபிடிக்க படும் முறை...! எனக்கு தெரிந்து வியட்நாமிலும் மற்றும் தாய்லாந்திலும் உள்ள நைக்கி மற்றும் பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனகளுக்கு அந்நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யும் நிருவனகளும் இதே நடைமுறையை கடைபிடிக்கின்றன...! இருந்தாலும் உங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்..!

ஜோதிஜி said...

உண்மை லெமூரியன். நீங்கள் சொன்னது தான் முற்றிலும் உண்மை. நான் சொல்ல வந்ததும் அதுவே. ஆனால் இங்கு தொடக்கத்தில் எந்தவொரு நிறுவனங்களும் நீங்கள் சொல்கிறபடி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சோதிப்பது நடைமுறையில் இல்லை. இருந்தாலும் குறிப்பிட்ட நிறுவனங்களிலும் கொடுத்து அவர்கள் அதன் கொடுக்கும் கணக்கை வைத்து எளிதாக ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இங்குள்ளவர்கள் வந்தவர்களை ஒரு கணக்கில் வைத்துக் கொள்ள பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.

மாற்றுக்கருத்து இருந்தால் அவஸ்யம் தெரிவியுங்கள். எப்போதும் அது பலருக்கும் உதவியாய் இருக்கும். நீண்ட பதில் பின்னோட்டம் அளிக்க காரணமே அது தான்.

Thenammai Lakshmanan said...

அமெரிக்காவின் சர்வ தேச அரசியல் கொள்கைகள் என்பது வேறு. தொழில் அதிபர்களின் கொள்கைகள் என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.//


எதைச் சொன்னா்லும் நல்ல தெளிவாய் சொல்கிறீர்கள் ஜோதிஜி...மிக விரும்பிப் படிக்கிறேன்..இவ்வளவு இருக்கா திருப்பூரில்..ம்ம்ம்

ad said...

Super...

Unknown said...

உண்மைதான் நண்பரே