Wednesday, December 23, 2009

முதல் யுத்தம்

பிரபாகரன் என்பவரை இந்த நிமிடம் வரைக்கும் வளர்த்தது அவருடைய தன்னம்பிக்கை என்றாலும் அதற்கு மேலும் அவருடைய மூர்க்கத்தனத்தை முழுமையாக ஆளுமை என்று நம்ப வைத்ததிற்கு மறைமுக காரணம் ஜெயவர்த்னே என்றால் அது சற்று கூட மிகையில்லை. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அத்தனை பேரும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்தார்களே தவிர இவரது கால தமிழர் தாக்குதல்கள் என்பதும் ஒப்பிடும் போது குறைவு.  இதுவே தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்பதாகவும், அச்சம் என்ற நிலைமையிலும் அவரை ஆதரிக்க வைத்தது.   இரண்டும் கலந்து நாள்பட பாசமாகவும் மாற்றம் பெறத் தொடங்கியது.
ஒவ்வொரு இலங்கை ஆட்சியளார்களும் உருவாக்கிய குறுக்கு வழிகளை பயன்படுத்திக்கொண்ட சிங்களர்கள் எவரும் இன்று வரையிலும் உலக அளவில் மிகப்பெரிய பங்களிப்புகளை தந்துவிடவில்லை.  இருந்தாலும் ஒப்பீட்டளவு என்று பார்த்தால் மிகக்குறைவு.  இதே நிலைமை தான் அரசாங்கத்திலும். சுதந்திரம் பெற்று இன்று வரையிலும் இலங்கையில் 60 வருடத்தில் எந்த சுயசார்பும் இல்லை.  ஒரு மரபணு சோதனை வசதியோ, நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வசதிகளோ என்று பல விசயங்களையும் உதாரணம் காட்டலாம்.  காரணம் மலையக தமிழர்கள் உருவாக்கிய தேயிலை வருமானம், தென்னை சார்ந்த, இயற்கை கொடையாக கொடுத்த துறைமுக வருமானம் என்பதாகத்தான் இன்று வரையிலும் வளர்ந்துள்ளது.

தமிழர்களை அழிக்க பயன்படுத்திய செலவுகளையும், வாழ்வாதாரங்களை சூறையாட பயன்படுத்திய சிந்தனைகளை ஒரு போதும் தன்னுடைய நாட்டு வளர்ச்சிக்கு இன்று வரையிலும் செலவிடப்படவில்லை.  அதுவும் சந்திரிகா ஆட்சி காலத்தில் பிச்சை எடுக்கும் அளவிற்கும் வந்தது.

மந்தப்புத்தி, குறுக்குவழி, மொத்த ஆட்சியாளர்களிடமிருந்த இனவெறி பார்வை என்று அவர்கள் வளராத வளர்ச்சிக்கு அவர்களே காரணமாக இருக்கின்றனர்.

தொடக்கத்தில் திருகோணமலையை அடிப்படையாகக்கொண்டு ஜெயவர்த்னே அமெரிக்க ஆதரவு நிலை எடுத்தார்.  அதுவே கால மாற்றம் பெற்று ராஜபக்சே சீனா ஆதரவு எடுத்துள்ளார்.  ஆட்சியாளர்கள் சுருட்ட முடிந்த அளவிற்கு உள்ளே உள்ள அடிப்படை சிங்களர்களின் வாழ்க்கைத் தரமும் அந்த அளவிற்கு உயர்ந்த நிலைமைக்கு வந்ததாக சொல்ல முடியாது?

"ஆதரவு கொடு. அவர்களை அழிக்கின்றேன்" என்று வந்த ஒவ்வொருவரும் இருவரையும் தான் அழித்தார்கள்.  ஆனால் தொடக்கம் முதல் யுத்த தர்மம் என்ற பார்வையில் சிங்கள மக்களை பிரபாகரன் கொன்றார் என்றோ தேவையில்லாத பிரச்சனைகளை செய்தார் என்று பார்த்தால் ஓப்பிட்டளவில் குறைவு.  ஆனால் ஆட்சியாளர்கள் இந்த விசயத்தில் மிகத் தெளிவு.

"உன்னைத் தாக்க எங்களால் முடியாது.  உன் இனத்தை ஒன்றுக்கு ஆயிரமாக தாக்குவோம்".  இதுவே தான் இன்றுவரையிலும். ஆனால் அன்று முதல் இன்று வரையிலும் இந்தியாவிற்கு தனிநாடு என்ற பிரபாகரன் கொள்கைக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அவர்களை தங்களுக்கு சாதமாக எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு நோக்கம் மட்டுமே.   ஏறக்குறைய கருவேப்பிலை போல.

இலங்கை நாட்டின் ஒத்துழைப்பு வேண்டும்.  இலங்கை தமிழர்களை போராட்டங்கள் மூலம் திருப்தி படுத்த வேண்டும்.  இந்த இரண்டுங்கெட்டான் தான் இன்று வரையிலும்.

இது தமிழ்நாட்டில் இன்று வரையிலும் பலரையும் வாழ வைத்துக்கொண்டுருக்கிறது.

ஆனால் இலங்கை என்பது தொடக்கம் முதல் இந்தியா என்ற வல்லரசை பேயரசாகத் தான் பார்த்து வந்து கொண்டுருக்கிறது.  இன்று வரையிலும்.  1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் சண்டையின் போது பாகிஸ்தான் போர் விமானங்கள் எரிபொருளுக்காக இறங்கிச் செல்ல அனுமதித்தது.

1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொள்ளலாம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாவது விதி கூறுகிறது.  ஆனால் அது இன்று மீனவர்களின் விதியை தீர்மானம் செய்கிறது.

1964 ஆம் செய்த சிறீமாவோ சாஸ்திரி ஓப்பந்தம்படி இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்படும் தொழிலாளர்களை அது வரையிலும் பணிபுரிந்த இடத்தில் உள்ள ஊதியம், ஊக்கத்தொகை, ஓய்வுதியத் தொகை, அழைக்கும் வரையிலும் பாதுகாப்பு என்று இருந்ததும் அத்தனையும் அப்பட்டமாக மீறப்பட்டது.

அணிசேரா மாநாட்டில் அமெரிக்காவின் கைக்கூலியாக இருந்த இலங்கை , இந்தியா கொண்டு வந்த அமெரிக்க படையை திருகோணமலையை விட்டு அனுப்பும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் ஜெயவர்த்னே போன்று எந்த நாட்டிலும் எந்த காலகட்டத்திலும் அப்பட்டமான தமிழர் எதிர்ப்பை மிகத் தைரியமாக ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டவர் எவரும் இல்லை. அத்தனை குரோதம், வெறுப்பு, காழ்புணர்ச்சி.  இந்தியா என்பது அவரைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாடு தான்.  கடைசி வரையிலும் எந்த மாற்றமும் இல்லை.
1961 ஆம் ஆண்டு முதிய வயதில் தந்தை செல்வா சிறையில் அடைக்கப்பட்ட போது அறிஞர் அண்ணா வெளியிட்ட அறிக்கையின் இறுதி வாசகம்.

" இந்த அறிக்கை விண்ணப்பம் பகை உணர்ச்சியால் எழுதப்பட்டது அல்ல. துக்கத்தின் மையினால் எழுதப்பட்டது. எனவே இந்த நீண்ட பேரணி மூலம் இனிமேலாவது இலங்கையில் அமைதி திரும்பும் என்று நம்புகிறோம்"

அப்போது அறிஞர் அண்ணா ஐ.நா சபைக்கு மொத்த நிகழ்வுகளையும் தந்தியாக அனுப்பினார்.

1983 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டக்கல்லூரி மாணவர்களும், மற்ற அத்தனை கல்லூரி மாணவர்களும் நடத்திய கண்டன பேரணி காரணமாக டெல்லி வட்ட மேஜை மாநாட்டுக்கு வருகை தந்த ஜெயவர்த்னே தமிழ்நாட்டு வருகையை தவிர்த்து ஓடிப் பறந்தார்.

இலங்கை நல்வாழ்வு என்ற நோக்கத்தில் உணர்ச்சி வேகத்தில் முதன் முதலில் தீக்குளித்தவர் 21.6.1984 அன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஷாஜகான் (மதுரை மாவட்டம் நத்தம் என்ற ஊரில் பிறந்தவர்).  வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (கருணாகரன்) அடுத்து சென்னையில் இருந்த இலங்கை தூதரகம் முன்பு தீக்குளித்து கடைசியாக போராடி காப்பாற்றினார்கள்.

இதே ஆண்டில் எம்.ஜி.ஆர் பொது வேலைநிறுத்தம், கண்டன பேரணி, அமெரிக்க தூதரகத்தில் மகஜர் அளித்தல் என்று முடிந்தது. கலைஞர் கருணாநிதி எதிர்கட்சி தலைவர் பதவியை துறந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இதே ஆண்டில் ராஜினமா செய்தார்.

எம்.ஜி.ஆர் அளித்த பொருள் உதவியும், பழ. நெடுமாறன் அளித்த ஒத்துழைப்பும் விடுதலைப் புலிகளை சுய சார்பு நிலைமைக்கு கொண்டு வர உதவியது.  இந்திரா காந்தி அளித்த ஆயுதப்பயிற்சி என்பது பிரபாகரன் வேண்டா வெறுப்பாக பயன்படுத்திக்கொண்ட விசயங்கள்.  காரணம் தொடக்கம் முதலே தன்னை மட்டும், தன் கொள்கைகளையும் மட்டுமே நம்பியவர்.  இந்தியாவை தொடக்கம் முதலே சந்தேகக் கண்ணோடு பார்த்தவர்.

ஆனால் பிரபாகரனை பொறுத்தவரையிலும் இந்தியாவை, தமிழ்நாட்டை எந்த பார்வையில் பார்த்து இருந்தாலும் அவருடைய முக்கிய வளர்ச்சியில் இன்று வரையிலும் இருப்பவர்கள் பழ. நெடுமாறன், திராவிடர் கழகம்.  ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு கூட மற்றவர்களைப் போல தங்களுடைய நாக்கு தடம் புரள இவர்கள் அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர் சட்டத்திற்கு உட்பட்டு, தன்னால் செய்ய முடிந்ததை எவையெல்லாம் செய்தாரோ, அதே போல் இவர்கள் சட்டத்தின் படியும் சட்ட புறவாசல் வழியாகவும் தங்களுடைய ஈழ ஆதரவை பிரபாகரன் ஆதரிப்பு மூலம் வஞ்சகம் இல்லாமல் காட்டினார்கள். தொடக்க காலத்தில் திராவிடர் கழக வெளியீட்டு புத்தகங்கள் ஒவ்வொன்றும் காலப்பெட்டகம்.

இந்த ஒரு இடத்தில் தான் பிரபாகரனுக்கும் மற்றவர்களுக்கு உள்ள பெரிதான வித்யாசங்கள் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. ஆனால் பிரபாகரன் போல் உமா மகேஸ்வரன் கூட புகழ்பெற்ற சிறை உடைப்பு சமாச்சாரங்களை நடத்தி உள்ளே இருந்தவர்களை வெளியே கொண்டு வந்ததும் நிகழ்ந்தது.  இந்தியாவின் தலையீடும், இவர்கள் உருவாக்கிய குயுக்தியும் மொத்த பிரச்சனையும் உருவாக்கியது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.  அது தான் மாத்தையா வரை பலர் சாவதற்கும் காரணமாக இருந்தது.

வலியோடு வாழ்ந்தவர்கள் செய்த ஒவ்வொன்றும் அதிரடி தான்.  சந்தேகம் இல்லை. பெற்ற வலிகளும் அதிகம் தான்.  படித்தவர், படிக்காதவர், சம்மந்தம் இருந்தவர், இல்லாதவர் என்று அத்தனை பேர்களும் இலங்கை ஆட்சியாளர்களின் பார்வையில் அழிய வேண்டியவர்கள்.  இதுவரையிலும் நடத்தப்பட்ட தனி மனித படுகொலைகள் மொத்தமாக காரண காரியங்களோடு பார்க்க வேண்டியதை பின்னால் பார்க்கலாம்?

இந்த நோக்கம் ஒன்றே பிரபாகரன் கொண்டுருந்த கொடூர குணத்தை மக்கள் அங்கிகரிக்கத் தொடங்கினார்கள்.  அவரின் பார்வையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடப்பட காரணமாக இருக்கும் ஆட்சியாளர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்.  அதே சமயத்தில் தன்னுடைய தனித்தன்மையையும், தங்களுடைய வளர்ச்சியையும் முன்னிலைபடுத்த வேண்டிய அக்கறையில் ஒவ்வொரு அடியும் மிகக் கவனமாக எடுத்துச் செல்ல வேண்டியதை முழுமையாக உணர்ந்து நகர்ந்தார்.
குடும்பம் என்று உருவான போதும் கூட அவருடைய எண்ணங்களில் எந்த மாற்றமும் உருவாகவில்லை.  குழந்தைகள் வந்த போதும் கூட அவருடைய திட்டமிடுதலில் எந்த குறைபாடும் காண இயலவில்லை.  வெறி என்பதே ஊறி, உணர்ந்து, உள்வாங்கி, ஒரு தனி மனிதராக வரி வசூல் முதல் உள் கட்டமைப்பு வரைக்கும் இயக்கம் தொடங்கிய முதல் ஏழு ஆண்டுகளுக்குள் சாதிக்க முடிந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

காரணம் இது வரையிலும் பதுங்கு தாக்கு என்ற கொரில்லா முறை மாறி முறைப்படி இராணுவ ரீதியான தாக்குதல்களும், இலங்கை தமிழர் போராட்டத்தில் முதல் யுத்தம் என்ற முறைப்படியான யுத்தம் இனி தொடங்கப்போவதும், இன்னும் இரண்டு வருடத்திற்குள் திம்பு பேச்சு வார்த்தை, ராஜிவ் காந்தி தலையிடல், ராஜிவ் காந்தி படுகொலை என்று தொடரப்போகிறது.

இந்தியா உள்ளே நுழைய சகோதர யுத்தங்களும், ரத்தச்சுவடுகளும் தனிப் பாதையில் பயணிப்பதும், விடுதலைப்புலிகளின் மொத்த கட்டுமாணம், ஆளுமை, வியப்பு, பயம், அச்சம் என்று இனி ஒருங்கே பயணிக்கப் போகிறோம்?

4 comments:

geethappriyan said...

பல அரிய தகவல்கள் இடுகை வழியாய் தரும் நீங்கள் அயராமல் எழுத்துப்பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்.
தமிழ்மணப்பட்டையை கவனிக்கவும் வாக்களிக்கமுடியவில்லை.தமிலிஷில் வாக்களித்துவிட்டேன்.

ஜோதிஜி said...

நன்றி கார்த்திகேயன்.

Jeyapalan said...

// இந்தியா என்பது அவரைப் (JR) பொறுத்தவரையிலும் தமிழ்நாடு தான் //

இது ஒரு சுவாரசியமான உண்மை. :-)
90% மான இலங்கை மக்களுக்கு இந்தப் புரிதல் தான் இருந்தது என்பது ஒரு விசித்திரமான உண்மை.
காந்தி, நேரு, இந்திரா, போன்ற பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களாகவே கருதப்பட்டன. இலங்கையின் தமிழர்களுக்கு இவர்களும் இந்தியாவும் தமிழ் நாடே. அதே உணர்வே சிங்களவர்களுக்கும்.

ஜோதிஜி said...

நன்றி செயபால்

இன்று வரையிலும் இலங்கையில் உள்ள வெளியுறவுத் துறை அதிகாரிகள் இப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.