ராசு சொன்னான்.
ஜெயக்குமார் ஒன்றியமாம்.
முத்துக்குமார் நகரமாம்,
சோனைமுத்து மாவட்டத்துக்கு
கைத்தடியாம்,
பட்டினியா பள்ளிக்கூட
வந்தவனுங்க
இப்ப
காபி குடிக்கக்கூட ஸ்கார்பியோவாம்.
அஞ்சு பாடத்லேயும்
கூட்டினா
அம்பது மார்க்கு கூட தேறாது,
சீக்கிரம்
அமைச்சரா வந்துடுவானுங்க.
இவனுங்கள உதைச்ச
சண்முகம் ஆசிரியர்
நடையா
நடந்துக்கிட்டுருக்காராம்.
பென்ஷன் வாங்க சிபாரிசு கடிதம் கேட்டு.
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை,
