பிறந்த குழந்தைக்கான ஆடைகள் எடுக்க "விலை குறைவாக இருக்கும்" என்ற பெண்களிடம் பெயர் பெற்ற ஜவுளிக்கடைக்குத்தான் தான் போக வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றி உள்ளே சென்று ஆடைகளின் விலையைப் பார்த்த போது சிரித்துவிட்டுத் திரும்ப வெளியே அழைத்து வந்து விட்டேன். இரண்டு ஜட்டியுடன் கூடிய இரண்டு குழந்தை சட்டைக்கு ரூ 500 போட்டு தள்ளுபடி என்று ரூ 400 போட்டு இருந்தனர். லாபத்துடன் கூடிய அதிகபட்ச விலை ரூ 120 என்பது இந்த அளவுக்கு விலை வைக்கக் காரணம் அங்குள்ள செலவீனங்கள். பண்டிகை தினங்கள், முக்கிய கொண்டாட்ட நாட்கள் தவிர பெரும்பாலான ஜவுளிக்கடைகளின் வியாபார லாபத்தை ஈடுகட்டப் பலவிதங்களில் சமாளித்து சந்தையில் நிற்க வேண்டிய தேவையுள்ளது.
