Showing posts with label மோடி அரசாங்கம் கொரானாவிற்கு உருவாக்கிய திட்டங்கள்.. Show all posts
Showing posts with label மோடி அரசாங்கம் கொரானாவிற்கு உருவாக்கிய திட்டங்கள்.. Show all posts

Sunday, April 26, 2020

மத்திய அரசின் (கொரானா) திட்டங்கள்


அந்த 42 நாட்கள் -  15
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

நேற்று எடப்பாடி கைகூப்பிக் கையேந்தினார். இன்று மோடி "நிதி உதவி தாருங்கள்" என்று கேட்டுள்ளார். தமிழகத்தில் இப்போது வரையிலும் பேரமைதி தான் மிச்சம். ஆனால் நடிகர் அட்சய குமார் 25 கோடி அளிக்கிறேன் என்று தொடங்கி வைத்துள்ளார். மற்றொருபுறம் ஆர்பிஐ உபரி நிதியை கை வைத்தது தவறு என்று அர்ச்சனையும் வந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசியலில் எதிர்க்கட்சி, எதிர்க்கட்சிகள், எதிர்க்கும் கட்சிகள், விமர்சிக்கும் கட்சிகள் என்று ஏராளமுண்டு. இவர்கள் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். எடப்பாடி பந்தைக் கோல் நோக்கிப் போட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கூடவே "மக்கள் கஷ்டப்படுவார்கள். நிதியுதவி 5000 ஆகச் சேர்த்துக் கொடுங்கள்" என்று அறிவுரை சொல்கின்றார்கள்.