5 ஜி ஏலம் முடிந்து அந்த நாளே நான் யாரையும் நேரிடையாகச் சென்று சந்திக்க தேவையில்லாமல் எங்களுக்கான சான்றிதழ் மின்னஞ்சல் வாயிலாக எங்களிடம் வந்து சேர்ந்தது. இது நம்ப முடியாத அதிசயம். என் வாழ்நாளில் இது ஆச்சரியம் என்பது போன்ற அர்த்தத்தில் ஏர்டெல் முதலாளி 2022 மத்திமம் பகுதியில் 5ஜி ஏலத்தில் கலந்து கொண்ட பின்பு ஊடகத்தில் சொன்ன வார்த்தைகளை படித்த பின்பு எனக்கு ஆச்சரியமில்லை. காரணம் நான் மோடி அரசாங்கத்தை விரும்புவதற்குக் காரணம் இந்த வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதம், அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்று பலவற்றை என்னால் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் அந்த ஏலத்தில் முதல் நபராக அதிகத் தொகை கட்டி அதிக அளவு அலைக்கற்றை அளவு பெற்ற மகா ஆத்மா அம்பானி குழுமம். ஏறக்குறைய 88000 கோடி. நான் சென்ற வருடத்தின் இறுதியில் எழுதினேன். திருப்பூரில் 2023 முதல் 90 நாட்களுக்குள் 5 ஜி சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று எழுதியதன் தொடர்பான மேலும் சில தகவல்கள்.
