Showing posts with label இந்தியாவிற்குள் எப்படி வந்தது? எவ்வாறு பரவியது?. Show all posts
Showing posts with label இந்தியாவிற்குள் எப்படி வந்தது? எவ்வாறு பரவியது?. Show all posts

Tuesday, April 21, 2020

கொரானா வந்த பாதை - இந்தியா வழி கேரளா

அந்த 42 நாட்கள் -  6
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

கொள்ளை நோய்கள், உலக பேரரசுகளைச் சாய்த்துள்ளன, கட்டமைப்புகளை வீழ்த்தியுள்ளன, உலக அரசியலில் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் இந்தக் கொள்ளை நோயால் நடந்தது. கத்தோலிக்க சர்ச்சுகள் தங்களுடைய ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கின,

நோய்த் தொற்றின் போது எதையும் செய்யமுடியாமல் போனதால், சர்ச்சும் மற்ற கட்டமைப்பைப் போல் இன்னொன்று என்கிற உணர்வு மக்களுக்கு வந்தது. “சர்வ ஞான அறிவும்” பெற்ற கடவுள் இருக்கும் போது எப்படி இப்படிப்பட்ட கொள்ளைநோய் மக்களைக் கொல்ல முடியும் என்கிற கேள்வியே மக்களைத் திருச் சபையிலிருந்து விலகி நிற்கச் செய்தது. தொடர்ச்சியாக வலுவிழந்து வந்த கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தை, 16ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற “ப்ரோட்டஸ்டண்ட் சீர்திருத்தம்” மேலும் குறைத்தது.