இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைத் துரோகம் நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறியுள்ளது. தப்பித்துப் பிழைத்துக் கொள் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதனை நாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அது எப்போதும் போலவே அதன் வேலையை நடத்திக் கொண்டே தான் இருக்கின்றது.
நாம் தான் அதனைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை.
