Friday, October 30, 2020

நம்பிக்கைத் துரோகம் நடத்தும் பாடமிது

இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைத் துரோகம் நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறியுள்ளது. தப்பித்துப் பிழைத்துக் கொள் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதனை நாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அது எப்போதும் போலவே அதன் வேலையை நடத்திக் கொண்டே தான் இருக்கின்றது.

நாம் தான் அதனைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை.


Wednesday, October 28, 2020

உயிரைப் பறித்த சொந்த வீட்டுக் கனவுகள்

தங்களுக்கென்று ஓர் சொந்த வீடு என்பது வெறும் கனவல்ல. அது நடுத்தரவர்க்கத்தின் லட்சியம், சமூக அங்கீகாரம். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் மாட்டிக் கொண்டு அவஸ்த்தைப்படுபவர்கள் தான் அதிகம். அவஸ்த்தைப்பட்டு தடம் மாறியவரின் உண்மைக் கதையிது. மனைவியை இழந்து, தொழில் இழந்து, மொத்த வாழ்க்கையையும் இழந்த ஒரு மனிதனின் கதையிது.



 

Tuesday, October 27, 2020

கவனிக்கும் கற்றுக் கொடுக்கும் கண்காணிக்கும்

சில்வியா பிளாத்

" கடவுள் நம்பிக்கைகள், பிற நம்பிக்கைகள் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துவது விடக் காலத்தின் மீது நம்பிக்கை வைப்பது எளிது"

காலம் -

கவனிக்கும்

கற்றுக் கொடுக்கும்

கண்காணிக்கும்

காத்திருக்கச் சொல்லும்

//