Friday, October 16, 2009

அச்சமில்லை அச்சமில்லை

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (50)

மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (7)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (50)

" இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி புண்ணாக்கி வைத்து விட்டார்களே?" என்ற வசனம் காந்தி காலத்திலும் நடந்து இருக்கிறது.  காந்திஜி கூட்டும் பிரார்த்தனை கூட்டத்துக்கு வந்து கொண்டுருக்கும் ஒரு முஸ்லீம் அன்பர், "  பாபுஜி, பாகிஸ்தானில் இருந்து இங்கு ஓடி வந்த இந்துக்களும், சீக்கியர்களும் தங்கள் தலைமையில் 50 மைல் தூரத்திற்க்கு ஊர்வலமாக சகோதரர்களாய் கைகோர்த்து நடந்து வருவதை நான் என்னுடைய மனக்கண்களால் பார்க்கின்றேன்,  ஆஹா என்ன ஒரு அற்புதமான காட்சி அது"  என்றார்.

இது போதாதா காந்திஜிக்கு.

ஏற்கனவே காந்தி விரும்பிக் கொண்டுருந்த திட்டம் அது.  பாகிஸ்தானுக்கு போக வேண்டும்.  அங்குள்ள சூழ்நிலையை தானே நேரில் சென்று காண வேண்டும்.  காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்து சுதந்திரப்போராட்டத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இந்தியாவில் பெரும் பயணம் மேற்கொண்டவர்.  காரணம் பயணம் என்பது நிறைய விசயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும்.

அதுவும் சராசரி மக்கள் பயணிக்கும் பாதையில், அவர்கள் உடன் பயணிக்கும் போது இன்னமும் நம்மை நெருங்கச் செய்யும்.  அதனால் தான் அவர் பிர்லா மாளிகையில் தங்கி இருக்கும் போதே அதிபர் பிர்லாவிடம் கேட்டார்.

"  நான் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் " என்று.
கேட்டது தான் தாமதம்.  அவர் பின்னங்கால் பிடறி தெரிக்க ஓட்டம்பிடித்தார்.  பிறகென்ன அவனவன் கொலை வெறியோடு அலைந்து கொண்டுருக்கும் போது, அவஸ்த்தைகளுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் போது பயணமாவது ஒன்றாவது என்று பிர்லா மனதிற்குள் நிணைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

ஆனால் காந்தி விடுவதாய் இல்லை.  தன்னுடைய மருத்துவரான சுசீலா நய்யாரிடம்  " எல்லா ஏற்பாடுகளையும் கவனித்து முடித்து விட்டு நான்கு நாட்களில் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி வந்து என்னுடைய பிரார்த்தனை கூடடத்தில் கலந்து கொள்  "என்று அனுப்பி விட்டார்.



தன்னுடைய உண்ணாவிரத்தை முடித்துக்கொண்ட போது தான் கொடுத்து இருந்து ஏழு கொள்கைகளில் ஒன்று ஜனவரி 27ம் நாள் குவ்வாத் உல் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி அவஸ்யம் கொண்டாடப்பட வேண்டும் என்பது.


ஆமாம் அடிமை மன்னரும், டெல்லியின் முதல் சுல்தானுமான குத்புதீன் என்பவரது நினைவு நாள் அன்று.

 டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூதியில் வருடம் வருடம் அந்த நிகழ்ச்சிகளை கொண்டாடப்பட வேண்டும் என்பது அவரது ஆசை.  டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூதியில் வருடம் வருடம் அந்த நிகழ்ச்சியை கொண்டாடப்படுவது வழக்கம்.  ஆனால் இப்போது உள்ள கலவர சூழ்நிலையில் அந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதா?  என்று அத்தனை தலைவர்களும் யோசித்துக்கொண்டு இருந்தனர்.


காரணம் பழைமையான   27 இந்து மற்றும் ஜெயின் ஆலயங்களில் இருந்து இடிக்கப்பட்ட பொருட்களில் இருந்து கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த மசூதி தான் இந்தியாவிலேயே பழமையானது.  பிரச்சனையான இடமும் கூட.                                                     Qila – e – Kuhna Mosque
(கலாச்சாரம் என்பது வெறும் செங்கல் அல்லது கட்டிடம் மூலம் புலப்படுவது அல்ல.  இடிப்பதும், உடைப்பதும் உங்களுக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்.  பின்னால் வருகிறவர்களின் கண்ணீர் காவியங்களுக்கு நீங்கள் எழுதி வைத்த முன்னுரை)
ஆனால் காந்திஜியை போன்றே புரிந்து கொள்ளப்படாத நிகழ்ச்சி அன்று நடந்தது. நடந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்வது?

காந்திஜி வெற்றிகரமாக சந்தோசமாக தன்னுடைய பேத்திகள் (கைத்தடிகள்) என்று கூறப்பட்ட அபா காந்தி, மனு காந்தி புடை சூழ மசூதியின் உள்ளே சென்றார்.  அது மட்டுமல்ல.  அந்த இரண்டு பெண்களும் எல்லா இடங்களுக்கும் காந்திஜி உடன் செல்ல அங்கே இருந்தவர்கள் அனுமதித்தது முதல் ஆச்சரியம்.

பதினைந்து தினங்களுக்கு முன்னால் இதே இடத்தில் கிர்பான் என்று வாளுடன், கத்தி போன்ற ஆயுதங்களுடன் அலைந்து திரிந்த முஸ்லீம் சீக்கிய மக்கள் இருவரும் கட்டிப்பிடித்து தங்களுடைய ஆனந்த ஆசீர்வாத பறிமாற்றத்தை பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர் என்பது இரண்டாவது ஆச்சரியம்.

மொத்தத்தில் உள்ள வினோதமான ஆச்சரியம் பக்கத்தில் உள்ள இடங்களில் தேநீர், சிற்றுண்டி வகைகளை இலவசமாக வழங்கி சீக்கியர்கள் வந்து போகின்ற அத்தனை முஸ்லீம் மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதைப் பார்த்த காந்திஜிக்கு பொக்கை வாய் முழுக்க ஒரே சிரிப்பு தான் போங்கள்?

" இதே போல் அணைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்"  என்று கம்பீர உரை நிகழ்த்தினார்.

பிர்லா மந்திருக்கு திரும்பி வந்த காநிதிஜி பின்வருமாறு அன்று இரவு தமது டைரியில் எழுதினார்.


" இந்த குண்டு வெடிப்பில் இருந்து ஆண்டவனது கருணையால் நான் தப்பித்துக்கொண்டேன்.  ஆனால் எப்போது என்னை ஆண்டவன் அழைக்கிறாரோ அப்போது நான் தயாராயிருப்பேன்.  பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நான் டெல்லியை விட்டுப் போகப் போவதாக நினைத்துக்கொண்டு இருக்கின்றேன்.  ஆனால் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை.  யாருக்குத் தெரியும்?  நாளைக்கு என்ன நடக்கும் என்று?"

அதேசமயம் நாதுராம் கோட்ஸே ஒரு முடிவுக்கு வந்து இருந்தான்.

" மொத்தமாக கூட்டமாக சேர்ந்து செயல்பட முடியாது.  நான் ஒருவனே போதும்.  கூட்டணி என்பது எப்போதுமே பிரச்சனை தான்?  அது வீணான சிக்கல்கள் உருவாகும்.  அது போன்ற சிக்கல்கள் இனிமேலும் உருவாகக்கூடாது.  காலம் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.  இறுதி வெற்றி மட்டும் தான் நமக்கு முக்கியம்"  என்று தன்னுடைய கூட்டணி மக்களுடன் கலந்துரையாடினான்.

அனைவரும் நாதுராம் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.  ஆனால் நாதுராம் விரும்பிய ஒரு கைத்துப்பாக்கிக்குத் தான் அதிகம் சிரமப்பட்டனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் அலைந்தனர்.  அவர்கள் விரும்பியபடி அது அவர்களின் கையில் அத்தனை சீக்கிரம் கிடைத்தபாடில்லை,

அவர்களின் நினைவுக்கு கடைசியாக வந்தவர் ஒரு மருத்துவர்.  குவாலியர் நகரில் உள்ள ஹோமியோபதி டாக்டர். தத்தாராய் பர்க்கூர் என்பவர்.

அவர் தீவிரமான ஆர்.எஸ்,எஸ். அனுதாபி.  இவர்கள் மொத்த பேர்களும் அவர் வீட்டை அலைந்து திரிந்து கண்டு பிடித்த நேரம் நடு இரவு தாண்டி பின் இரவு நேரம்.  ஆனால் வந்தவர்களை ஏமாற்ற விரும்பாமல் (பிதா மகன் (?) ) தன்னிடம் உள்ள கருப்பு பெராட்டா தானியங்கி கைத் துப்பாக்கியை கொடுத்தார்.

அது காந்திஜியை கொல்வதற்க்காக உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம்.

ஆயுதம் கைக்கு வந்தாகி விட்டது.  ஆனால் கூட்டணியில் உள்ள எவருக்கும் இதற்கு முன் சுட்டு பழக்கம் இல்லை.  என்ன செய்வது?  சுட்டுப் பழக வேண்டும்.  மேலும் இந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யுமா? என்று அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது.  டெல்லி வந்தடைந்தனர்.

வந்து இறங்கியதும் சுட்டுப் பழக எந்த இடத்தை தேர்ந்து எடுப்பது? என்று அனைத்து டெல்லி தெருக்களை பார்த்து அலைந்து திரிந்தனர்.  அனைத்து இடங்களில் இடப்பெயர்ச்சியின் காரணமாக


  எங்களை வந்து போட்டோ புடுக்கிறீங்க?  பின்னால பாகிஸ்தானில் இருந்து வர்றவங்க எல்லோரும் ரயில்ல தொத்திக்கிட்டு வர்றாங்க.  அந்தப்பக்கம் போங்க ஜி. (பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் ஒரு சின்ன சாம்பிள்  இது.  ஆனால் ஒரு இடுகை முழுவதும் மொத்த அவலத்தை புகைப்படமாக போட்டால் நாதுராம் உருவான காரணங்கள் புலப்படலாம். )

மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிந்தனர்.  கடைசியாக வேறு வழியே இல்லாமல் அவர்களுக்கு அமைந்த இடம் காந்திஜி தங்கியிருந்த பிர்லா மாளிகையின் அருகே இருந்த காடு போன்ற பகுதி.  ஆள் நடமாட்டம் என்பது
அதிகம் இல்லாமல் இருந்த இடம்.  அவர்களுக்கு வசதியாய் போய் விட்டது.



உள்ளே இருந்த ஒரு மரத்தை தேர்ந்து எடுத்து அதில் ஒரு மனிதன் உருவம் வரைந்து அதில் நாதுராம் இருபது அடி தொலைவில் நின்று கொண்டு சுட்டான்.

டெல்லியின் முதல் மசூதி இது.  அவருக்கு வெற்றிச்சின்னம்.  இன்று வரை அவஸ்த்தை பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு?

ஆச்சரியம்.

இது வரையில் முன் பின் துப்பாக்கியே சுட்டுப் பார்த்து பழகியிருக்காத நாதுராம் கோட்ஸே சுட்ட துப்பாக்கி குண்டுகள் நான்கும் ஒன்றன் பின் ஒன்றாக அந்த வரைந்த படத்தின் மார்பில் சரியாக போய் துளைத்து நின்றது.

" அற்புதம்.  அட்டகாசம்.  மிக நன்றாக சுடுகிறாய் நாதுராம் " என்று பாராட்டினார்கள் அவனுடைய நண்பர்கள் ஆப்தேயும் கார்கேயும்.

ஆமாம்.  காந்திஜி இறப்பதற்கு இன்னும் 72 மணிநேரம் மட்டும் தான்
இருக்கிறது.



குறி தவறவில்லை.  ஆனால் மனித மாண்புகள் பெற்ற அத்தனை குறியீடும் மட்டும் தான் தவறி விட்டது.  இன்று வரைக்கும்?

பினாமிக்கு பின்னால் பெரிய ஆணி



இந்திய பாகிஸ்தான் பிரிந்து போவதற்கு முன்னால் உள்ள இந்திய ஆடையின் அளவு இது.

மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (6)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (49)

ஆன்மீகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அவன் உள்வாங்கியதன் உச்சம் என்பதாக கருதப்படுகிறது.  காரணம் அந்த தனி மனிதனின் வாழ்க்கை நீ வெறும் எச்சம் தான் என்று உணரும் போது தான் அத்தனை பேர்களும் அந்த பயத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள்.  அறிந்தவன் மேன்மேலும் உச்சத்தை அடைகின்றான்.  அடையாதவன் அல்லது விரும்பாதவன் அவஸ்த்தைகளை இனம் பிரிக்கத் தெரியாமல் குழப்பம் அடைகின்றான்.

இல்லை இது தவறானது?

வளர்ந்த விஞ்ஞானமும், நாம் கொண்ட பகுத்தறிவும், அறிவு என்பது மட்டுமே உண்மை என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு ஒரே ஒரு செய்தி?

இறப்பு என்பது உறுதிபடுத்தப்பட்டது?

இன்றளவும் எந்த நவீன விஞ்ஞானமும் அதை மாற்ற முடியவில்லை.  தள்ளிப்போட வேண்டுமானால் முடியலாம்.  ஆனால் அதைக் கிள்ளி அந்தப்பக்கம் ஒதுக்கிவிட முடியாது?  ஆனால் இந்த இறப்பு என்பது நம்மிடம் வந்து சேரும் போது இயற்கை முறையினாலா? அல்லது உருவாக்கப்பட்ட செயற்கை முறையிலா? என்ற கோட்பாடுகளில் தான் இன்று வரையிலும் அத்தனை நம்பிக்கையாளர்களும் தான் கொண்டுள்ள எண்ணம் சரிதான் என்று உறுதிபடுத்திக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இவன் இப்படித்தான் போவான் என்று அப்பொழுதே தெரியும்

செய்த பாவம் நிம்மதியா விட்டுடுமா?

அடப்பாவி இவனுக்கு இப்படி ஒரு சாவா?  தப்பித்து விட்டானே?

இவருக்கு இப்படி ஒரு சாவா?  சாமிங்றது சத்தியமா இல்லப்பா?

எத்தனை எத்தனை உரையாடல்கள் நம் வாழ்வில்?

காந்திஜியைப் பொறுத்தவரையில் சராசரி மனிதர்களை விட தன்னுடைய வாழ்க்கை முறைகளை மிகுந்த அக்கறையுடன் முடிந்தவரையிலும் ஒழுக்கமாய் உண்மையாய் வாழ்ந்தவர்.  அவருடைய வாழ்க்கை முறை என்பது மற்றவர்களுக்கு ஏற்புடையது அல்ல.  ஏன் தொடக்கத்தில் ஆண்ட தலைவர்கள் கூட எரிச்சல் படத்தான் செய்தனர்.  என்றபோதிலும் அவருடைய இறப்பு என்பதை விதி நோக்கில் பார்த்தால் சற்று வியப்பாகத் தான் இருக்கிறது?

அவருடைய சாவு என்பது குறிப்பிட்ட நாளில் உறுதிபடுத்தப்பட்டது என்றாலும் அவருடைய இறப்புக்கான வழிமுறைகள், முன்னால் நடந்த நிகழ்ச்சிகள், அதன் சார்பான கோர்வை நிகழ்ச்சிகள் அத்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு கனக்கச்சிதமாக அவரை அந்த இடத்திற்குத் தான் அழைத்துச் சென்று உள்ளது.

ஒரு வகையில் அவருடைய சாவுக்கு அவரே தான் காரணம்.  அதிகமாக உள்ள நல்ல எண்ணங்கள் தான் முதன்மையாக இருக்கிறது.  தேடி வந்த அதிகாரிகளின் அக்கறையை வெறுத்ததும், வெறுக்கப்பட்ட மக்களை விழிப்புடன் பார்க்கத் தவறியதும் என்று தொடரும் அத்தனை விசயங்களும் அவருக்கு அவரே போட்டுக்கொண்டு கயிறு.  ஆனால் அதை பாசக்கயிற்றாக பார்த்த விதத்தை விதி என்பதில் கொண்டு வந்து முடிப்பதா?  அவரின் விவேகமற்ற செயல் என்று ஆத்திரப்படுவதா?

கருப்பருக்காகவே உண்மையாய் போராடிய அமெரிக்க அதிபர் ஏன் குண்டு மூலம் உயிர் போனது?

இன்று ராஜபாட்டை போட்டுக்கொண்டுருக்கும் புதிய பொருளாதார தத்துவத்தை தொடக்கப்புள்ளியில் கொண்டு வந்த ராஜிவ் காந்தியின் மரணம் ஏன்?

ஆளுமை என்றால் என்ன என்று தெரியாத தலைவர்கள் மத்தியில் அன்னை இந்திரா காந்தியின் மரணம்?

அரசியல் காலாவதியான கணக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள்?

அழுது புலம்புவதால் ஒன்றுமில்லை என்ற கீதையை பின்பற்றுவதா?

கற்பித்தவன் அயோக்கியன் முட்டாள் என்ற பெரியாரை பின்பற்றுவதா?

இல்லை இது ஒரு விமோசனம்  என்பவர்களை நம்புவதா?

இது ஒரு சராசரி நிகழ்வு.  அடுத்த கடமையில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்க்கையை உண்மையாக வாழ வேண்டும் என்பவர்களை பின்பற்றுவதா?

மொத்தத்தில் மரணம் என்பது ஒரு பெரு விடுதலையாகத் தான் தெரிகிறது.

நம்பிக்கொண்டுருக்கும் பாசம், உயிராகக் கருதும் உறவுகள், உன்மத்தம் முழுக்க நிரம்பி வழியும் ஆக்ரோசம், அலைந்து அத்தனை பேர்களையும் தன்னுடைய அகங்காரத்தால் அழிக்க நினைக்கும் நபர்கள், தேடித்தேடி அலைந்து சேர்த்த சொத்துக்கள், தன் பெயர் இல்லாத போதும் கூட பினாமி என்ற கோட்டையை உருவாக்கும் உன்னத தலைவர்கள் என்று எவருமே இந்த விமோசனத்தை பார்த்து இன்று வரை பயப்படாமல் வாழ்ந்து கொண்டுருப்பது மகா பெரிய ஆச்சரியமாய் அதிசமாய் இருக்கிறது.



ரொம்ப குசும்பு தான்.  சின்னதா படத்தை போட்டா எங்களுக்குத் தெரியாதா?  இருட்டுக்குள் ஓளிரும் இந்தியா?

பிண ஊர்வலம் போய்க்கொண்டுருக்கும் ஊர்வலத்தில் கூட அடுத்த அதிகார போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வரும் அழகையை மீறி அருவருப்பாகவும் இருக்கிறது.

இதில் மகள், மகன், மனைவி, அம்மா, அப்பா, நட்பு, உறவு என்ற எந்தவித பாகுபாடும் இல்லை.

அன்றாடம் ஊடக செய்திகளை உள்வாங்கிப் பாருங்கள்.  உன்னத உறவுகள் என்ற போர்வையில் உள்ளவர்களின் யோக்கியதை தெரிந்து விடும்?

கடமைகள் என்ற வார்த்தைகள் என்றுமே நமக்கு கலக்கம் என்ற வார்த்தைகளை அறிமுகம் செய்யாது.  கண்ணீரில் கூட கிளிசரின் கண்ணீர் என்று பல வகை கண்ணீர்  இருக்கிறது.  ஆனால் விமோசனம் பெற்றவர் உருவாக்கிய வழி அல்லது வலி என்பது காலம் காலமாக நம்மை கழுவேற்றிக்கொண்டுதானிருக்கிறது.




அண்ணே நீங்க கவலைப்படாதீங்க?  கீழே உள்ள படத்தைப் பாருங்க.  அந்த திட்டம் முடிந்தவுடன் உங்க நலவாழ்வு திட்டம் தான் கையில எடுத்துக்கப் போறோம்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.

கொள்கையாளர்களின் பார்வை என்பதில் எந்த தவறும் இல்லை.

காரணம் அத்தனை வலி நிறைந்த வாழ்க்கை அனுபவம் அது.  அதிகமான வலி என்பது இறுதியில் வன்மத்தை தரும்.  இல்லாவிட்டால் புத்தியை பேதலிக்கச் செய்து விடும்.  வன்மத்திற்கு அறிவாளி, படிப்பாளி, பாமரன் என்ற பாகுபாடு என்பதெல்லாம் இல்லை.  அதனால் ஒரு வகையில் அவர்களின் புத்தி பேதலித்த காரணத்தால் உணர்ந்தவைகளை தரம் பிரிக்கத் தெரியாமல் தராதரம் இல்லாத இந்த செயல்களை செய்து விட்டார்கள் போல?

ஆனால் இன்று காந்தி இல்லை.

இன்றைய நிலைமையில் காந்தியின் கொள்கைகள் என்பது கூண்டுக்கு அருகே சென்று நிற்பவனுக்கு மட்டும் தான்?  காரணம் நீதி வழங்குபவர் கூட பார்க்க முடியாது.  அவருக்குப் பின்னால் இருப்பதால் அவருக்கும் கவலையில்லை.

காந்தி காலத்தில் வாழ்ந்த இயங்கிய இயக்கங்கள் இன்று வரையிலும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

அன்று அவர்கள் கண்களுக்குத் தெரிந்து அத்தனை அயோக்கியத்தனமும் இன்றும் நடந்து கொண்டு தானே இருக்கிறது?

சொல்லப்போனால் இப்போது தான் அதிகமாக நடந்து கொண்டுருக்கிறது.  ஆனால் இந்த இயக்கங்களின் பங்களிப்பு என்பது என்ன?  எவரின் நல்வாழ்வு இவர்களால் முன் நிறுத்தப்படுகிறது?  அடிப்படையில் எந்த வசதியும் இல்லாமல் வாடிக்கொண்டுருக்கும் பாமரன் பரம ஏழையாகத் தானே இன்று வரையிலும் உழன்று கொண்டு இருக்கிறான்?

இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் எந்த மதமாக இருக்கட்டும்.  நாங்கள் உங்களுக்காகத்தான் என்று சொல்லிக்கொண்டு வாழ்பவர்கள் என் சாதித்தார்கள்?  என்ன சாதிக்கப் போகிறார்கள்?

அப்படி என்றால் அன்றைய தினம் காந்தியை சுட்டுக்கொன்று விட்டால் எல்லாமே பழைய நிலைமைக்கு வந்து விடுமா?  நோக்கம் தான் என்ன?

ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வைத்துருக்கும் கணக்கில் வராத சொத்துக்கள் என்பதும், புழங்கிக்கொண்டுருக்கும் பணம் என்பதும் எத்தனை எத்தனை கோடிகள்.  உழைத்து சம்பாரித்து கள்ளப்பணமாக வரிக்கு பயந்து கொண்டு வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் தவறானவர்களாக தெரியவில்லை?  ஆனால் நல்வாழ்வு தொண்டு நிறுவனங்களின்  நோக்கம் என்பது மக்களின் நல்வாழ்க்கை என்றால் நல்ல வாழ்க்கை வாழாமல்  தெருக்கோடிக்கு வந்தவர்களை எப்போது சேர்த்த பணத்தை இவர்களுக்காக செலவழிக்கப் போகிறார்கள்?

மக்கள் வாழும் வாழ்க்கை என்பது வேறு?  தலைவர்கள் கொண்டு வாழும் கொள்கை என்பதும் வேறு?



அன்றும் இன்றும் என்றும்?

நோக்கம் ஒன்று மட்டும் தான்.

நல்வாழ்வு.

தலைவர்களின் குடும்பம் என்பதற்கு மட்டுமா?  மக்களின் குடும்பம் என்பதற்கு மட்டுமா?

அதனால் தான் இதையெல்லாம் மனதிற்குள் உணர்ந்த காந்திஜி ஒரு அளவிற்கு மேல் யோசித்து மண்டை உடைத்துக்கொள்ளக்கூடாது என்பது போல் அவருடைய அடுத்த நிறைவேற்ற வேண்டிய கனவுக்கு காத்துக்கொண்டுருந்தார். ஆனால் கனவில் இருந்தாரே தவிர அவரை நோக்கி வந்து கொண்டுருந்த காலனை கண்டு கொள்ளாமல் தான் வாழ்ந்தார்.

இந்தியா வளர்ந்து கொண்டுருக்கும் நாடு.  வெளியே இருந்து பார்க்கும் போது.  சுதந்திர காலத்தை விட இன்று இந்தியா வளர்ந்த நாடு.  உள்ளே இருந்து பார்க்கும் போது?


உண்மை தான் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அலைபாயும் மொத்தக்கூட்டம் 50 கோடி.  காலில் செருப்பு கூட போட வக்கில்லாமல் வாழும் கூட்டம் 40 கோடி.  அப்படி என்றால் மீதி கணக்கு.  அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்த வாழும் மகாத்மாக்கள்

Thursday, October 15, 2009

விதியோடு விளையாடு

விதியோடு விளையாடு

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (48)
 மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (5)


தாத்தா நீங்க கையை கட்டியபடி வாயையையும் கட்டிக்கொண்டு பேசாம வக்கில் தொழிலையையும் பார்த்துருந்தால் இன்றைக்கு உங்களுடைய வழித்தோன்றல்கள் சந்தோசமாக இருந்துருப்பாங்க.  ஆனா நாங்க இப்படி வாழ்ந்துருப்பமான்னு தெரியாது?



 மகாத்மா காந்தியை கொலை செய்த முதல் முயற்சி முற்றிலும் தோல்வி. தோல்வி என்றால் கூட பரவாயில்லை. கூட்டத்தில் ஒருவன் மதன்லால் பாவா காவல் துறையினரிடம் பிடிபட்டு விட்டான். மற்ற ஆறு பேர்களும் மறைந்து விட்டனர். மதன்லாலை விசாரித்த அதிகாரிகள் அப்போதைய டெல்லி டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.டபிள்யூ.மெஹ்ராவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்று மெஹ்ராவுக்கு கடுமையான ஜுரம். படுக்கையில் இருந்தார். அவர் முழுமூச்சுடன் இந்த விஷயத்தில் இறங்க தீர்மானித்தார்.

 ஆனால் அவர் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து முட்டுக்கட்டை உருவானது. அப்போதைய டெல்லி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜெ.சஞ்சீவி ஒரு அரசியல் சார்புள்ள அதிகாரி. "நான் ரிடையர் ஆவதற்குள் என் காரில் கொடி பறக்க வேண்டும் " என்று பெரும்முயற்சிக்கு (?) பிறகு இந்த பதவியை பெற்றவர். ஆனால் எந்த பொறுப்பையும் முறைப்படி செய்யாமல் எல்லாவற்றையும் தனக்கு கீழே உள்ள மெஹ்ராவிடம் ஒப்படைத்து விட்டு அலங்கார பதவி போல் அற்புதமாக வாழ்ந்தவர்.

ஆனால் மெஹ்ரா மனதிற்குள் ஆச்சரியக்குறி, கேள்விக்குறி இருந்தபோதிலும் அத்தனையும் மீறி தினந்தோறு காந்தியின் பிரார்த்தனை நடக்கும் பிர்லா மாளிகைக்கு சென்று முடிந்தவரையிலும் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டார். அதே மறுநாள் காந்தியை சந்தித்து, கலவர மக்கள் கோபம், கட்டுக்கடங்காத கூட்டம், தனிப்பட்ட இயக்கங்களின் வெறி எல்லாவற்றையும் மேம்போக்காக சொல்லி "பாதுகாப்பை அதிகரிக்க எண்ணுகிறேன் " என்றார் காந்திஜிக்கு கோபம் வந்து விட்டது. " எனது பிரார்த்தனை கூட்டத்திற்க்கு காவல்துறை பாதுகாப்பா? கோயில்களில் நீங்கள் பாதுகாப்புக்கு காவல்துறை அனுப்புவீர்களா? என்றார்.

"பாபுஜி, கோயில்களில் குண்டு வீசுவதற்கு எவரும் இருப்பதில்லையே " என்றார் மெஹ்ரா " நான் இதற்கு ஒப்புக்கொள்ள முடியாது. என் பேச்சை மீறி நீங்கள் ஏதாவது செய்தால் நான் டெல்லியை விட்டு சென்றுவிடுவேன். உங்கள் மீது புகார் செய்வேன் " பொருமித்தீர்த்துவிட்டார் காந்திஜி "பாபுஜி, உங்கள் அனுமதி இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன். ஆனால் தினந்தோறும் நான் இங்கு வருவதற்கு நீங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும் " " தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் நீங்கள் வரலாம். ஆனால் சீருடையில் அல்ல " என்றார் காந்தி.

 விதியோடு விளையாடு? தினந்தோறும் வந்து கலந்து கொண்டார்.



சட்டைப்பையில் வைத்திருக்கும் கைத்துப்பாக்கியில் அவரின் விரல்கள் தயார் நிலையில் இருந்தது. துப்பாக்கி சுடுவதில் மகா கெட்டிகாரரும் கூட. மேலும் காந்திஜிக்கு கொடுத்த வாக்கை மீறி 35 திறமையான காவலர்களை சாதரண உடையில் தினந்தோறும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். மிகக்குறைவான கால அவகாசத்தில் கூட நாதுராம் கோட்ஸே, நண்பன் ஆப்தே அவர்களை கண்டு பிடித்து கைது செய்து இருக்கமுடியும். "நான் பார்த்துக்கொள்கிறேன் " என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சஞ்சீவீ செய்ய வேண்டியதெல்லாம் பம்பாய் போலீஸை அழைத்து, பத்திரிக்கையின் பெயரையும், ஆசிரியரை, நண்பர்களையும் சொல்லி இருந்தாலே போதுமானது. ஆனால் அவ்வாறு செய்யாமல் இரண்டு காவலர்களை பம்பாய்க்கு அனுப்பி வைத்தார்.


சென்றவர்கள் கொண்டு செல்ல வேண்டிய எந்த முக்கியமான கோப்புகளையும் எடுத்துச் செல்லவில்லை(?). மேலும் இது குறித்து துப்பறியும் பிரிவு டெபுடி கமிஷனர் நகர்வாலாவிடம் அவர்கள் தெரிவிக்கவில்லை. பம்பாய் காவல்துறை அதிகாரிக்கு (ஜிம்மி நகர்வாலா) மொத்தமும் ஆச்சரியமாய் இருந்தது. வந்த இரு காவலர்களில் ஒருவர் சீக்கியர். மேலும் அவர்கள் அன்றைய பம்பாய் தீவிரவாதி என்று கருதப்பட்ட சீக்கியர் ஹோட்டலில் தங்கியிருந்ததும் அவருக்கு பிடிக்கவில்லை. ஒன்றும் சொல்லாமல் அவர்கள் இருவரையும் டெல்லிக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

பம்பாய் திரும்பி அந்த இரண்டு காவலர்களும் "முறைப்படி" அத்தனை விஷயங்களையும் தெரிவித்து விட்டோம் என்றனர். மதன்லால் இரண்டாம் நாள் வாக்குமூலத்தில் (54 பக்கம்) அத்தனையும் படம் வரைந்து பாகம் குறித்து கொடுத்து விட்டான். ஆனால் அதிகாரி சஞ்சீவி தானும் ஆர்வம் காட்டாமல், ஆர்வம் காட்ட வந்த மற்றொரு மூத்த அதிகாரியையும் அடக்கி விட்டார். மற்றொரு அதிகாரி பூனா குற்றப்பிரிவின் டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் யு.எச்.ராணா என்பவர்.

குற்றவாளிகள் அனைவருமே அவரது எல்லைக்குட்பட்டவர்கள். ஆனால் அவரோ கிடைத்த விபரங்கள் எல்லாவற்றையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் பூனாவிற்கு சுற்று வழியில் செல்லும் (மிக மெதுவாக) பாசஞ்சர் ரயிலில் ஏறி 48 மணி நேரம் கழித்து பூனா வந்தடைந்தார். பம்பாய் டெபுடி கமிஷனர் நகர்வாலா தன்னுடைய தீவிரமான நடவடிக்கையின் காரணமாக விஷ்ணு கார்க்கரேயைப் பற்றிய விவரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாட்கே என்பவனும் இதில் சம்மந்தம் உள்ளவன் என்பதை புரிந்து கொண்டார். இந்த இடத்தில் ஒரு ஆச்சரிய விதியின் திருவிளையாடல்?

 மொத்த விபரங்களை எடுத்துக்கொண்டு கார்கே வீட்டுக்கு சென்றபோது " 20 நாட்களுக்கு முன் வௌியே சென்றவன் இன்னமும் வரவில்லை " என்றனர் அருகில் இருந்தவர்கள். ஆனால் அதிகாரிகள் வந்து போன மறுநாள் கார்கே வீட்டுக்கு வந்தவன், முன் கதவை பூட்டி விட்டு பின்புற அறையில் எப்போதும் போல இருந்து கொண்டு புல்லட் புரூப் சட்டையை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தான். ஆனால் அதற்குப்பிறகு ஒரு தடவை கூட எந்த அதிகாரியும் கார்கே வீட்டுக்கு மறுபடியும் வந்து சோதிக்கவில்லை(?).


ஆயுதங்கள் சோதனையின் போது கார்கே வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி சேதாய்க்கு குறிப்பு கோப்பு சென்றது. அதைப்பார்த்து "ஏன் இன்னமும் கார்கே கைது செய்யப்படவில்லை " என்று அவர் அனுப்பிய கோப்பு வெற்றிகரமாக பல துறைகள் வாயிலாக கடந்து ஆமாம் இருபது நாட்கள் கடந்து சம்மந்தப்பட்ட துறைக்கு வந்தது(?)

"மதன்லால் பாவா வாக்குமூலப்படி இந்து மகாசபைத் தலைவர் வீர் சாவர்க்கரே இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. அவரைக் கைது செய்ய அனுமதி கொடுங்கள் " என்று நகர்வாலா, மொரார்ஜி தேசாய் அவர்களிடம் கேட்டார். "உனக்கென்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? மாகாணம் முழுவதும் தீப்பற்றி எரிவதை நீ பார்க்க விரும்புகிறாயா? " என்று கோபத்துடன் கேட்டார் மொரார்ஜி தேசாய்.



 பெரும்புதூர் பொட்டல்காட்டில் கிடைக்காத குறிப்புகளைக் கொண்டே முன்னாள் அதிகாரி கார்த்திகேயன் ஒரு கள்ளிக்காட்டு இதிகாசமே படைக்கமுடிந்த தனி மனித ஆளுமைப்பண்பு கொண்ட புனித பூமியான இந்த இந்தியாவில், காட்டு மலரை நுகர முடியாத அல்லது நெருங்க முடியாத அதிகார வர்க்கமும் கொண்ட புதிரான பூமியும் இது தான்.