Saturday, June 22, 2019

சசிகலா Vs டிடிவி தினகரன்

முப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார்? என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்கள் செல்வன் வாயால் வடை சுட்டும் ஏன் பூஜ்யத்தைப் பெற்றார் என்பதற்கும் நீங்கள் விடை தேடிப் போனால் உங்களுக்குக் கிடைக்கும் உண்மை வியப்பாக இருக்கும்?

அதிகாரத்தின் மேலடுக்கிலிருந்து கொண்டு வருடந்தோறும் தேசியக் கொடி ஏற்ற வாய்ப்பு பெற்றவர்களுக்கும் , அதன் உள்ளே ஒழிந்து கொண்டு சுவைப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மேலே இருப்பவர்களுக்கு அதிகாரிகள் உதவுவார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு அடியாட்கள் தான் உதவுவார்கள்.

இரண்டும் வெவ்வேறு. முன்னது சட்டப்பூர்வமாகத் தெரியும். பின்னது சிக்கினால் சின்னாபின்னம் தான். அப்படித்தான் சசிகலா சிக்கி இன்று கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?

எடப்பாடி முதல்வராக வருவதற்கு அவர் நேரம் காலம் இறைத்த பணம் எந்த அளவுக்கு உதவியதோ அந்த அளவுக்கு அணை போட்டுப் பாதுகாத்துச் சிந்தாமல் சிதறாமல் தண்ணீரைக் கடைமடை வரைக்கும் பாய்ச்ச உதவியவர்களில் முக்கியமானவர்கள் தங்கமணி, வேலுமணி கோஷ்டிகள்.

ஓபிஎஸ் எப்படி உதயகுமாரை நம்புகிறாரோ அவரை விட பத்து மடங்கு இருவரையும் எடப்பாடி நம்புகிறார். காரணம் சாதி பாசம் ஒரு புறம். மற்றொருபுறம் திருடனுக்குத் திருடன் தான் நண்பனாக இருக்க முடியும் என்ற பொதுவிதியும் இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கஜா புயல் தாக்கிய போது வைகோ முதல் பலரும் அமைச்சர் உதயகுமார் செயல்பாடுகளைப் புகழ்ந்து தள்ளினர். திமுகவில் கூட பலரும் பாராட்டிப் பேசினார். அவரும் இரண்டு மூன்று நாட்களாகக் கண் துஞ்சாது அதிகாரிகளுடன் சேர்ந்து களப்பணி ஆற்றினார்.

ஆனால் இப்போது தமிழ்நாட்டின் தலைநகரே காலியாகிவிடும் போல என்று தண்ணீர் பஞ்சம் குறித்து பலரும் குய்யோ முய்யோ என்று கத்தினாலும் வேலுமணி அசைந்து கொடுக்கத் தயாரில்லை. ச்சும்மா தமாஷ் பண்ணாதீர்கள். அதெல்லாம் டூப்பு. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..... என்று கூசாமல் அடித்து விடுகின்றார்.

ஏன் இப்படி?

காரணம் மேலே சொன்ன சசிகலா பாணி தான்.

சசிகலா கடைசிவரைக்கும் கணக்குப் பிள்ளையாகவே இருந்தார். வாங்குவது, மிரட்டுவது, சேர்ப்பது, பாதுகாப்பது, மாற்றுவது என்று தொடர்ந்து ஒவ்வொருவரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். காலம் மாறியது. பெங்களூர் கொண்டு போய்ச் சேர்த்தது.

அதிகாரம் என்றால் என்ன? அதன் நுணுக்கம் எவ்வாறு எங்கங்கு பிரதிபலிக்கும் என்பதனை உணராத அபலையாக இன்று சின்ன அறைக்குள் காரம் போன கடுகு போல வாழ்கிறார். ஆனால் அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள், வளர்த்த பிள்ளைகள் அனைத்தும் பல பதினாறு அடிகள் பாய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் பரபரத்துக் கொண்டிருந்தாலும் எங்கே அடிப்பது? எதன் மூலம் அடிப்பது? யார் மூலம் அடிப்பது? என்று மூன்று கொள்கைக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தகுந்தாற் போல உள்ள அதிகாரிகளை மட்டும் தான் அருகே வைத்துள்ளார்கள். அவர்களும் கூச்சப்படாமல் தண்ணீர் பிரச்சனை குறித்து வாய் திறக்காமல் இருக்கின்றார்கள். மீறிப் போனால் உலகப் பொதுமுறை ஒன்று இருக்கிறதே. அதைச் சொல்லிவிடலாமே?

இதெல்லாம் திமுக காலத்தில் நடந்த பிரச்சனை. நாங்கள் என்ன செய்ய முடியும்?

வேலுமணி குறித்து அவரின் ஊழல் திருவிளையாடல் குறித்து இதுவரையிலும் எத்தனையே இயக்கங்கள், நபர்கள் காது கிழியக் கத்திப் பார்த்து விட்டார்கள். ம்கும்... பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவர்களது தனி தர்மத்தை விடாது கடைபிடித்து வருகின்றார்கள்.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடுவோம்.

திமுக அப்பாவு கதறிய கதறல் இது. அவர் ஆர்டி மூலமாகப் பெற்ற தகவல் இது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாகத் தெரியவில்லை. காரணம் என்ன? கிடைக்கும் தொகையைப் பங்கு வைத்தால் முழுமையாக வந்து சேராது என்ற ஒரே காரணம் மட்டுமே? அது எப்படி செயலாக்கம் பெறுகின்றது என்பதனை இந்த சிறிய உதாரணம் நமக்குப் புரிய வைக்கும்.
தெருவிளக்கு அனைத்தும் எல்இடி பல்புகள் மாற்றப்பட வேண்டும். மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். எர்த் ஒயர்கள் இல்லாத இடத்தில் அதையும் சரி செய்ய வேண்டும்.
செய்தார்களா?

ஆமாம், எப்படிச் செய்தார்கள்?

ஒரு எல்இடி பல்பு விலை (20 வாட்ஸ் திறன் கொண்ட) 3,550 ரூபாய். ஆனால் இவர்கள் வாங்கிய விலை 14,996 ரூபாய். ஒரு கம்பத்திற்கு எர்த் ஒயர் கொடுக்க ரூபாய் 150 முதல் 250 வரை தான் செலவாகும். ஆனால் இவர்கள் கணக்கு காட்டியுள்ளது 750 ரூபாய். இந்த திட்டத்திற்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை 870 கோடி. செலவளித்ததாக காட்டப்பட்ட தொகை 1800 கோடி. ஆயிரம் கோடிக்கும் மேல் மேலிருந்து கீழ் வரை ஏப்பம் விட்டு இருக்கின்றார்கள்.

அதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாத அதன் சுவையை மட்டுமே நக்கித்தின்ற சசிகலா போலவே இன்றைய அதிமுக அமைச்சர்களை மோடி தண்டிப்பார் என்றால் நீங்கள் நடப்பு அரசியல் புரியாதவர் என்று அர்த்தம்.

அதிகாரம் என்பது எந்த இடத்தில் எப்போது தேவைப்படுமோ அந்த இடத்தில் சரியாகப் பயன்படுத்துவார்கள்.

அதுவரையிலும்?

ஊடகங்கள் விவாத மேடையில் மக்களின் நலனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். சென்னை மக்கள் துடைக்க காகிதத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள்.

Friday, June 21, 2019

கடவுச்சீட்டு

கடந்த சில நாட்களாகவே என் மதி மயங்கிக் கிடக்கின்றது. இது இந்தியாவா? நான் இந்தியாவில் தான் வாழ்கிறேனா? என்று பலமுறை எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன். மகளிடம், மனைவியிடம் இதே விசயத்தை மீண்டும் மீண்டும் சொன்ன போது சரி சரி உங்கள் மோடி புராணம் போதும்? பொத்தவும் என்று உத்தரவிட்டனர்.

காரணம் கோவையில் கடவுச்சீட்டு அலுவலகத்தில் நடந்த சமாச்சாரங்கள்.

மகள் தான் சொன்னார். கடவுச்சீட்டு தேதி முடியப் போகின்றது என்றார். ஆகா இதை வைத்து இந்தத் துறை எப்படிச் செயல்படுகின்றது என்று இணைய தளம் வாயிலாக உள்ளே சென்ற போது பூ மாதிரி வழுக்கிக் கொண்டே சென்றது. எந்த தொந்தரவும் இல்லை. எந்த சிக்கலும் கடைசி வரைக்கும் உருவாகவே இல்லை. அடித்துத் திருத்தி மாற்றி என்று எத்தனை முறை செய்தாலும் அனைத்துக்குமான எளிமையாக இணையதளத்தை அமைத்துள்ளனர்.

உள்ளே நுழைந்து அவர்கள் கேட்ட ரூபாய் 1500 கட்டி முடித்தவுடன் தேதி குறிப்பிட்டு இந்த மணிக்கு வந்து விடவும் என்று முகவரியுடன் மின் அஞ்சல் வழியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவித்தனர். ஈரோடு, கோவையில் இரண்டு இடங்கள், தபால் நிலையம் என்று நமக்குத் தேவையான வழிமுறைகளையும் காட்டுகின்றனர். நமக்கு அருகே உள்ள இடத்தை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.

எந்த இடத்திற்குச் சென்றாலும் அரைமணி நேரம் முன்பே அங்கே சென்று விடுவது என் வாடிக்கை. ஆனால் இங்கே ஒரு மணி நேரம் முன்பே சென்று விட்டேன். வாசலில் நின்ற பெண்மணி குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு அங்கே அமரவும். கால் மணி நேரம் கழித்து நானே அழைக்கின்றேன் என்றார். குரலில் அதிகாரம் இல்லை.

அரசாங்க அலுவலகம் என்றாலே சற்று கலக்கமாக இருக்கும்? என்ன கேட்பார்களோ? எவ்வளவு கேட்பார்களோ? எப்படி நடத்துவார்களோ? என்று. இருபது நிமிடம் முன்னால் சென்ற போது அந்தப் பெண்மணி எங்கே செல்ல வேண்டும்? எங்கே அமர வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? என்று வகுப்பு போல எடுத்தார். கூட்டமே இல்லையே? மக்கள் உள்நாட்டில் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டார்களோ? என்று நினைத்துக் கொண்டே சென்று அமர்ந்தேன்.

நான்கு நபர்கள். நொடிப் பொழுதில் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்தனர். ஆதார் அட்டை, பழைய கடவுச்சீட்டு இரண்டையும் காண்பித்தவுடன் நகல் எடுக்க அறிவுறுத்தினர். அதற்கும் உள்ளே வசதி வைத்துள்ளார்கள். முதல் ஆச்சரியம். மொத்தமே மூன்று நிமிடம்.
மீண்டும் வாங்கி பரிசோதித்து விட்டு அடுத்த நிலைக்கு அனுப்பினார். இங்கு மொத்த நபர்களையும் வழிகாட்ட ஒரு தனியாகப் பெண் ஒருவர் இருந்தார். தடுமாறுபவர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார்.

அடுத்த நிலையில் சென்ற போது அவர்கள் பரிசோதித்து விட்டு ஒரு டோக்கன் சீட்டுக் கொடுத்து அடுத்த நிலைக்கு நகர்த்தினர். மொத்தம் மூன்று நிமிடங்கள்.

டோக்கன் எண் திரையில் தெரிகின்றது. இப்போது முக்கியமான கட்டம். நம் கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு நம்மைப் புகைப்படம் எடுக்கின்றார். இரண்டு கைகளையும் வைத்து ஸ்கேன் செய்கின்றார். இரண்டு கட்டை விரலையும் ஸ்கேன் செய்கின்றார். அதிகபட்சம் ஐந்து நிமிடம்.
அங்கு ஒரு பெண் இருக்கின்றார். அவர் வழிகாட்டுகின்றார்.

இறுதியாக தலைமையாளரிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றார். நம்மைப் பார்த்துவிட்டு, ஆவணங்களைப் பரிசோதித்து விட்டு பழைய கடவுச்சீட்டில் கேன்சல் என்று குத்தி முடித்து, மூன்று நாளில் உங்களுக்கு வந்து சேர்ந்து விடும். வாழ்த்துகள் என்றார்.

தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ஒரே இடத்தில் கூட கூச்சல் இல்லை. சப்தம் இல்லை. அடிதடி இல்லவே இல்லை. ஒரு ஊழியர் கூட ஏட்டிக்குப்போட்டியாக பேசவே இல்லை. அலுவலகம் மிக சுத்தமாக உள்ளது. ஹிந்தி, ஆங்கிலத்துடன் தமிழில் அதுவும் சுத்தமான பிழையில்லாத தெளிவான அழகான தமிழ்மொழியில் எல்லா இடங்களில் பளபளப்பான போர்ட்டில் வாசகங்கள் நம்மை வரவேற்கின்றது.

வழிகாட்டுகின்றது.

நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது கணக்கிட்டுப் பார்த்தேன். அதிகபட்சம் அரைமணி நேரம் இருக்கும். கனவுக்காட்சி போலவே இருந்தது. ஒரே காரணம் டாடா குழுமத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனம்.

ஒரு முக்கியமான மக்கள் சேவையில் தொழில் நுட்பமும், தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய நிர்வாகமும் ஒன்று சேர்ந்தால் சாதாரண பொதுமக்களும் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்பதனை அன்று தான் முதல் முதலாகப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

கடந்த பாஜக ஆட்சியில் மோடி நாடு நாடாகச் சுற்றிக் கொண்டு இருக்கின்றார். இங்கே தங்குவதே இல்லை. வெளியுறவு அமைச்சரையும் அழைத்துக் கொண்டு செல்வதே இல்லை என்று குறையாய் பலரும் குறைபட்டுக் கொண்டார்கள். ஆனால் மோடி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை இங்கேயே இரும்மா? இங்குள்ள வேலையைக் கவனித்துக் கொள்ளம்மா? என்று விட்டு விட்டுச் சென்று இருப்பார் போல.

சிறுநீரகம் பழுதுபட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து தற்போது ஓய்வில் இருக்கும் அம்மா சுஷ்மா அவர்களே நீடூழி வாழ்க. என் வாழ்நாளுக்குள் ஒரு அரசு நிறுவனம் எப்படிச் செயல்பட வேண்டும்? அத்துடன் தனியார் உள்ளே நுழைந்து கைகோர்க்கும் பட்சத்தில் நிச்சயம் நல்ல நிர்வாகத்தையும், வெளிப்படையான விரைவு சேவைகளையும் வழங்க முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள்.

என் வாழ்நாளுக்கும் இப்படி ஒரு வாய்ப்பை, ஆச்சரியத்தைப் பார்க்க வாய்ப்பு கொடுத்து உணர்த்தியமைக்கு நன்றி. நன்றி. 


Wednesday, June 19, 2019

மணி மணி வேலுமணி


முப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார்? என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்கள் செல்வன் வாயால் வடை சுட்டும் ஏன் பூஜ்யத்தைப் பெற்றார் என்பதற்கும் நீங்கள் விடை தேடிப் போனால் உங்களுக்குக் கிடைக்கும் உண்மை வியப்பாக இருக்கும்?

அதிகாரத்தின் மேலடுக்கிலிருந்து கொண்டு வருடந்தோறும் தேசியக் கொடி ஏற்ற வாய்ப்பு பெற்றவர்களுக்கும் , அதன் உள்ளே ஒழிந்து கொண்டு சுவைப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மேலே இருப்பவர்களுக்கு அதிகாரிகள் உதவுவார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு அடியாட்கள் தான் உதவுவார்கள்.

இரண்டும் வெவ்வேறு. முன்னது சட்டப்பூர்வமாகத் தெரியும். பின்னது சிக்கினால் சின்னாபின்னம் தான். அப்படித்தான் சசிகலா சிக்கி இன்று கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?

எடப்பாடி முதல்வராக வருவதற்கு அவர் நேரம் காலம் இறைத்த பணம் எந்த அளவுக்கு உதவியதோ அந்த அளவுக்கு அணை போட்டுப் பாதுகாத்துச் சிந்தாமல் சிதறாமல் தண்ணீரைக் கடைமடை வரைக்கும் பாய்ச்ச உதவியவர்களில் முக்கியமானவர்கள் தங்கமணி, வேலுமணி கோஷ்டிகள்.

ஓபிஎஸ் எப்படி உதயகுமாரை நம்புகிறாரோ அவரை விட பத்து மடங்கு இருவரையும் எடப்பாடி நம்புகிறார். காரணம் சாதி பாசம் ஒரு புறம். மற்றொருபுறம் திருடனுக்குத் திருடன் தான் நண்பனாக இருக்க முடியும் என்ற பொதுவிதியும் இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கஜா புயல் தாக்கிய போது வைகோ முதல் பலரும் அமைச்சர் உதயகுமார் செயல்பாடுகளைப் புகழ்ந்து தள்ளினர். திமுகவில் கூட பலரும் பாராட்டிப் பேசினார். அவரும் இரண்டு மூன்று நாட்களாகக் கண் துஞ்சாது அதிகாரிகளுடன் சேர்ந்து களப்பணி ஆற்றினார்.

ஆனால் இப்போது தமிழ்நாட்டின் தலைநகரே காலியாகிவிடும் போல என்று தண்ணீர் பஞ்சம் குறித்து பலரும் குய்யோ முய்யோ என்று கத்தினாலும் வேலுமணி அசைந்து கொடுக்கத் தயாரில்லை. ச்சும்மா தமாஷ் பண்ணாதீர்கள். அதெல்லாம் டூப்பு. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..... என்று கூசாமல் அடித்து விடுகின்றார்.

ஏன் இப்படி?

காரணம் மேலே சொன்ன சசிகலா பாணி தான்.

சசிகலா கடைசிவரைக்கும் கணக்குப் பிள்ளையாகவே இருந்தார். வாங்குவது, மிரட்டுவது, சேர்ப்பது, பாதுகாப்பது, மாற்றுவது என்று தொடர்ந்து ஒவ்வொருவரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். காலம் மாறியது. பெங்களூர் கொண்டு போய்ச் சேர்த்தது.

அதிகாரம் என்றால் என்ன? அதன் நுணுக்கம் எவ்வாறு எங்கங்கு பிரதிபலிக்கும் என்பதனை உணராத அபலையாக இன்று சின்ன அறைக்குள் காரம் போன கடுகு போல வாழ்கிறார். ஆனால் அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள், வளர்த்த பிள்ளைகள் அனைத்தும் பல பதினாறு அடிகள் பாய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் பரபரத்துக் கொண்டிருந்தாலும் எங்கே அடிப்பது? எதன் மூலம் அடிப்பது? யார் மூலம் அடிப்பது? என்று மூன்று கொள்கைக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தகுந்தாற் போல உள்ள அதிகாரிகளை மட்டும் தான் அருகே வைத்துள்ளார்கள். அவர்களும் கூச்சப்படாமல் தண்ணீர் பிரச்சனை குறித்து வாய் திறக்காமல் இருக்கின்றார்கள். மீறிப் போனால் உலகப் பொதுமுறை ஒன்று இருக்கிறதே. அதைச் சொல்லிவிடலாமே?

இதெல்லாம் திமுக காலத்தில் நடந்த பிரச்சனை. நாங்கள் என்ன செய்ய முடியும்?

வேலுமணி குறித்து அவரின் ஊழல் திருவிளையாடல் குறித்து இதுவரையிலும் எத்தனையே இயக்கங்கள், நபர்கள் காது கிழியக் கத்திப் பார்த்து விட்டார்கள். ம்கும்... பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவர்களது தனி தர்மத்தை விடாது கடைபிடித்து வருகின்றார்கள்.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடுவோம்.

திமுக அப்பாவு கதறிய கதறல் இது. அவர் ஆர்டி மூலமாகப் பெற்ற தகவல் இது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாகத் தெரியவில்லை. காரணம் என்ன? கிடைக்கும் தொகையைப் பங்கு வைத்தால் முழுமையாக வந்து சேராது என்ற ஒரே காரணம் மட்டுமே? அது எப்படி செயலாக்கம் பெறுகின்றது என்பதனை இந்த சிறிய உதாரணம் நமக்குப் புரிய வைக்கும்.
தெருவிளக்கு அனைத்தும் எல்இடி பல்புகள் மாற்றப்பட வேண்டும். மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். எர்த் ஒயர்கள் இல்லாத இடத்தில் அதையும் சரி செய்ய வேண்டும்.
செய்தார்களா?

ஆமாம், எப்படிச் செய்தார்கள்?

ஒரு எல்இடி பல்பு விலை (20 வாட்ஸ் திறன் கொண்ட) 3,550 ரூபாய். ஆனால் இவர்கள் வாங்கிய விலை 14,996 ரூபாய். ஒரு கம்பத்திற்கு எர்த் ஒயர் கொடுக்க ரூபாய் 150 முதல் 250 வரை தான் செலவாகும். ஆனால் இவர்கள் கணக்கு காட்டியுள்ளது 750 ரூபாய். இந்த திட்டத்திற்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை 870 கோடி. செலவளித்ததாக காட்டப்பட்ட தொகை 1800 கோடி. ஆயிரம் கோடிக்கும் மேல் மேலிருந்து கீழ் வரை ஏப்பம் விட்டு இருக்கின்றார்கள்.

அதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாத அதன் சுவையை மட்டுமே நக்கித்தின்ற சசிகலா போலவே இன்றைய அதிமுக அமைச்சர்களை மோடி தண்டிப்பார் என்றால் நீங்கள் நடப்பு அரசியல் புரியாதவர் என்று அர்த்தம்.

அதிகாரம் என்பது எந்த இடத்தில் எப்போது தேவைப்படுமோ அந்த இடத்தில் சரியாகப் பயன்படுத்துவார்கள்.

அதுவரையிலும்?

ஊடகங்கள் விவாத மேடையில் மக்களின் நலனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். சென்னை மக்கள் துடைக்க காகிதத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள்.