Friday, January 25, 2013

திருப்பூர் கேபிகே அழைப்பு.(டாலர் நகரம்)

4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திறக்காக சிலரை பேட்டி கண்டது. அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகின்றேன்.

இது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. எங்கள் வீட்டு சேர சோழ பாண்டிய மன்னர்கள் இன்று வெளியீட்டே ஆக வேண்டும் என் அன்புக் கட்டளை இட்டார்கள். 

பெரியவர்கள் இந்த சுயபுராணத்தை மன்னித்தருள்க.








Wednesday, January 23, 2013

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்



என்னுடைய பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப் பருவம வரையிலும் என் வாழ்க்கையில், என் சிந்தனையில் அதிகம் தாக்கத்தை உருவாக்கியவர் மதிப்பிற்குரிய எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார். திரு. உதயமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

மக்கள் சக்தி இயக்கம் சிவகங்கை மாவட்ட முக்கியப் பொறுப்பில் இருந்த போது மதுரையில் நடந்த மாநாட்டில் ஒரு மணி நேரம் தனிப்பட்ட உரையாடலுடன் இவர் தொடர்பு உருவானது. 

நல்லவற்றை மட்டும் சிந்தித்த, செயலில் காட்டிய, இளைஞர்களின் வாழ்க்கையில் அக்கறை செலுத்திய, தனது வசதியான அமெரிக்கா வாழ்க்கையை விட்டு வெளியே வந்து தமிழகத்திற்காக எண்ணிய இவரது எண்ணங்கள் அனைத்தும் இங்கிருக்கின்றவர்களின் தந்திர மூளைக்கு முன் எடுபடாமல் போனாலும் இன்று வரையிலும் இவர் மேல் உண்மையான அக்கறையும் அன்பும் மரியாதையும் கொண்ட ஏராளமான இளைஞர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்.

மிகப் பெரிய இழப்பு.


தமிழ் மக்களின் குமுகம் புதிய எழுச்சியுடன் வளர வேண்டும் என்று கருதிய
குமுக ஆர்வலரும் எழுத்தாளருமான எம்.எசு. உதயமூர்த்தி  அவர்கள்
மாரடைப்பால் இன்று காலமானார். 

இவர் எழுதிய தன்முன்னேற்ற உதவிநூல்கள்  புகழ்பெற்றவை.

`எண்ணங்கள்`,`உன்னால் முடியும் தம்பி`, 'நீதான் தம்பி முதலமைச்சர்`.

இவருடைய எழுத்துகளை முதன் முதல் ஆனந்தவிகடனில் படித்தேன், 

ஆனால் இவருடைய நூல்களை முழுவதுமாகப் படிக்கவில்லை. 

மிகவும் நல்ல முயற்சிகளை முன்னெடுத்தார், ஆனால் இன்று நம்மிடையே இருந்து  பிரிந்துவிட்டார். 

அவர் புகழ் வாழ்க! அவருடைய நற்தொண்டை மேலும் பரவச் செய்வோம், 

அது நம் கடமை!

குழும மின் அஞ்சலில் திரு. செல்வகுமார்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

இவரது முழக்கமான உன்னால் முடியும் தம்பி என்பது (கமலால்) திரைப்படம் ஆனது இவரது  உரைகளின் வெற்றிக்கு அடையாளம். 

தன்னம்பிக்கை யாளர்கள் அவரது எண்ணங்களை மேலும் பரப்புவதே அவரது தொண்டின் தொடர்ச்சிக்கு அடையாளமாக நிலைக்கும்

திருவள்ளுவன் இலக்குவனார் 


மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் எம்.எஸ். உதயமூர்த்தியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்:

அமெரிக்காவில் ஆற்றிய பணி, வசதியான வாழ்க்கையைத் துறந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்குத் தன்னால் இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.

உன்னால் முடியும் தம்பி என்ற அவரது நூல் 1980-களில் தமிழக இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. உன் திறமைகளை வளர்த்துக் கொள், பொருளாதாரத்தில் முன்னேறு, சமுதாயத்துக்கு தொண்டாற்று என்பதை வலியுறுத்தி இளைஞர்களிடம் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தார்.

எண்ணங்கள், நீதான் தம்பி முதல் அமைச்சர், ஆத்ம தரிசனம் என இவர் எழுதிய 10 நூல்களும் நம்பிக்கை முத்துக்கள். 1988-ல் மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கி நதிநீர் இணைப்பு, கிராம முன்னேற்றம், மதுவிலக்கு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். 

அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மக்கள் சக்தி இயக்கத்தினருக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வைகோ தெரிவித்துள்ளார்

Tuesday, January 15, 2013

திருப்பூர் 2013 புத்தகத் திருவிழா


திருப்பூர், பின்னல் புத்தக அறக்கட்டளை தொடங்கியது முதல், அதன் வேராக இருந்து செயல்பட்ட தி.மு.ராசாமணி, பி.ராமமூர்த்தி இருவருக்கும், எங்கள் இதய அஞ்சலி. உங்கள் நினைவுகளோடு, ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக்க உறுதியேற்கிறோம்.

 "இயந்திர வாழ்க்கையிலிருந்து இதயங்களை மீட்போம் ..." 

என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் & சென்னை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் திருப்பூர் புத்தகக் கண்காட்சி, கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.



திருப்பூர் சார்ந்த நண்பர்கள் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்ட கோடிங் வார்த்தைகளை பயன்படுத்தி திருப்பூர் புத்தக கண்காட்சியை பலருக்கும் சென்று சேர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.



<iframe src="http://files.bannersnack.com/iframe/embed.html?hash=bu9yx00s&wmode=transparent&t=1358237514" width="728" height="90" seamless="seamless" scrolling="no" frameborder="0" allowtransparency="true"></iframe>




பங்கேற்கும் பதிப்பகங்கள் !
01:19  பின்னல் - பாரதி  

அகர வரிசையில்:

1, 2) ஏகம் பதிப்பகம்
3) ஆனந்த நிலையம்
4) அனிதா பதிப்பகம்
5,6) அபெக்ஸ் ஏஜென்சீஸ் (சிடி)
7, 8) ஆசியன் புக் செண்டர்
9, 10) பாலாஜி புத்தக விற்பனையாளர்கள்
11, 12) பாரதி புத்தகாலயம்
13, 14) பஸ்ஸர் சிடி
15) குரோமோசோம் விற்பனையாளர்கள்
16, 17) டி.கே பதிப்பகம்
18) டிஜிட்டல் மீடியா
19, 20) டவ் மல்டி மீடியா
21, 22) ஈஸ்வர் புக் செண்டர்
23, 24) எதிர் வெளியீடு
25) யுரேகா புக்ஸ்
26) கங்காராணி பதிப்பகம்
27) ஹயக்ரீவா பதிப்பகம்
28) இஸ்கான்
29) இஸ்லாமிக் புக் செண்டர்
30) இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட்
31) ஜீவா புத்தகாலயம்
32, 33) காலச்சுவடு
34, 35) கனிமொழி புத்தக விற்பனையாளர்கள்
36, 37) கண்ணப்பன் பதிப்பகம்
38, 39) கார்த்திக் பதிப்பகம்
40, 41) கிழக்கு பதிப்பகம்
42) குமுதம்
43) எல்.கே.எம். பதிப்பகம்
44, 45) லியோ புத்தக விற்பனையாளர்கள்
46) லோட்டஸ் மல்டி மீடியா
47) மகேந்திரா புத்தக விற்பனையாளர்
48, 49) மகேஸ்வரி புத்தக நிலையம்
50, 51) மணியம் பதிப்பகம்
52) மயிலவன் பதிப்பகம்
53, 54) மெர்க்குரி சன் பதிப்பகம்
55, 56) நாதம் கீதம்
57, 58) நியூ சென்சுரி புத்தக நிலையம்
59) நிழல்
60, 61) ஓம் சக்தி புத்தக நிலையம்
62) உதகை உலர் பழங்கள்
63) பாடம் பதிப்பகம்
64) பெரியார் புத்தக நிலையம்
65) பின்னல் புத்தகாலயம்
66) ராஜ ராஜ சோழன் புக்ஸ்
67, 68) ராம்கா புக்ஸ்
69, 70) சாகித்ய அகாதமி
71) சக்தி பதிப்பகம்
72) சாந்து அறிவியல்
73) சஞ்சீவியார் பதிப்பக்ம்
74, 75) சங்கர் பதிப்பகம்
76) சாட் வாட் இன்போ சோல்
77) ஸ்கூல் ரோம்
78) ஸ்கூல் ரோம் சிடி
79) அறிவியல் பூங்கா
80, 81) சீசன்ஸ் பப்ளிசிங்
82) ஸ்ரீ ஜி கல்வி உலகம்
83) சிவா புத்தகாலயம்
84, 85) சிவகுரு பதிப்பகம்
86, 87) சிவம் புக்ஸ்
88) சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்
89) சாப்ட் வியூ
90) ஸ்ரீ பாலகங்கை பதிப்பகம்
91, 92) புத்தக களஞ்சியம்
93) விவேகானந்த சேவாலயம்
94) சுபத்ரா புக்ஸ்
95, 96) சக்ஸஸ் புக் செல்லர்
97, 98) சுதா புக்ஸ்
99, 100) சுரா காலேஜ் ஆப் காம்பெட்டீசன்
101) தமிழினி
102) திருமகள் நிலையம்
103) திக் சாப்ட்
104, 105) டைகர் புக்ஸ்
107) உரிமை பதிப்பகம்
108, 109) வள்ளலார் புத்தகக் கடை
110, 111) விகடன் மீடியா


111 அரங்கங்கள் எந்த வரிசையில் அமையும் என்பது குலுக்கல் செய்தே முடிவு செய்யப்படும. 

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்து அமைந்திருக்கும் கண்காட்சி என்பதால், இந்த ஆண்டின் எல்லா புதிய தலைப்புக்களும், புத்தகங்களும் எதிர்பார்க்கலாம். சிறப்புக் கழிவு 10 சதவீதம் உண்டு. ரூ.250க்கு மேல் புத்தகம் வாங்கினால், திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் அங்கீகாரமும் நிச்சயம்.



விளம்பரக் குழு ஒருங்கிணைப்பாளர் - 94433 57147

தேவியர் இல்லம் திருப்பூர் உங்களை அன்போடு வரவேற்கின்றது.

புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் புத்தகம் கிடைக்கும் .