Showing posts with label Saraswathi Vidhyasalai Girls Higher Secondary School. Show all posts
Showing posts with label Saraswathi Vidhyasalai Girls Higher Secondary School. Show all posts

Thursday, December 26, 2019

உயரிய விருது - 2019


2020 ஆம் ஆண்டு எப்படியிருக்குமோ? என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பார்வை, ஏக்கம், ஆசைகள். ஆனால் எனக்குத் தொடக்கமே வித்தியாசமாகத் தொடங்கப் போகின்றது.  .

அக்டோபர் மாதம் என்றாலே மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் தான் நம் நினைவுக்கு வருவார்கள்.  ஒருவர் பிறந்த நாள்.  மற்றொருவருக்கு இறந்த நாள்.  ஆனால் எனக்குக் கடந்த அக்டோபர் மாதம் 16ந் தேதி அதிகாலை வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறப் போகின்றது என்று தெரியாமல் எப்போதும் போலக் காலையில் எழுந்தவுடன் கணினியை உயிர்ப்பித்து வேறெதும் தகவல்கள் வந்துள்ளதா? என்று பார்த்துக் கொண்டிருந்தபோது புதிதாக ஒரு மின் அஞ்சல் வந்து இருந்தது.

மு. பழனியப்பன் என்ற பெயரில் வந்திருந்தது. 

Sunday, November 17, 2019

பிறந்த ஊர் நினைவுகள்

ஒவ்வொரு சமூகமும் தமிழகத்தில் தனக்கென தனித்த அடையாளங்களைக் கொண்டு, வாழ்க்கை முறையை அமைத்துள்ளார்கள். அந்த முறையைக் கொண்டு தான் வாழ்ந்தும் வருகின்றார்கள்.

அதுவே தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றது. நாம் விரும்பலாம். விரும்பாமல் புறக்கணிக்கலாம். கண்டு கொள்ளாமல் தவிர்க்கலாம். ஒவ்வொரு ஊரிலும் இதற்கென வருடம் தோறும் கூடுவார்கள். கூடுகிறார்கள். இன்னமும் இங்கே இப்படித்தான் உள்ளது. புலம் பெயர்ந்து வந்தாலும் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் நாம் தவிர்க்கலாம். எதிர்க் கேள்விகள், நக்கல், நையாண்டிகள் செய்யலாம்.