ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பொருளை வாங்கச் செல்லும் போது மன உளைச்சலுடன் மகிழ்ச்சியையும் தொலைத்து விட வேண்டியுள்ளது. இரும்பு சமாச்சாரங்களைத் தவிர பெரும்பாலான பொருட்களின் நிதி மூலம் ரிஷி மூலம் ஓரளவிற்கு தெரிந்து இருப்பதால் விற்பவர் எந்த அளவிற்கு தெளிவாக வியாபாரம் செய்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
அவர் பேசி முடித்ததும் எத்தனை சதவிகித கொள்ளை லாபம் என்று மனதிற்குள் படமாய் தெரிந்து விடும்..
இங்கு தொடக்கத்தில ரிலையன்ஸ் ப்ரெஷ் அவினாசி சாலையில் திறந்த போது மிகுந்த ஆர்வமாய குடும்பத் துடன் உள்ளே நுழைந்தோம். முழுக்க குளீருட்டப்பட்ட வசதியுடன், தேர்ந்தெ டுக்க எளிதான வகையில்,. என்னு டைய அவசரத்திற்கும் ஈடு கொடுப் பதாய் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து மெதுவாக அந்த பட்டியல் சீட்டைப் பார்த்த போது உள்ளே ஓடிக் கொண்டுருந்த மொத்த மொள்ளமாரித்தனமும் தெரிந்தது.
ரிலையன்ஸ் நேரிடைப்பார்வையில் உள்ள கோதுமை மாவு, டீத்தூள்ள தவிர அத்தனையும் நாகரிக கொள்ளை விலை. இது போக சிறப்புக் கழிவு, அட்டை வசதி என்று அவர்களின் உறிஞ்சும் தந்திரம் புரிந்து அன்றோடு நிறுத்திக் கொண்டோம்.
ஒவ்வொரு வார கடைசியிலும் சிறப்புத் தள்ளுபடி என்று குறுஞ்செய்தியும் மின் அஞ்சலும் வரும். ஆனால் வாழ்க்கைக்கு தேவையில்லாத அத்தனை நாகரிக பொருட்களையும் தலையில் வைத்து கட்டிவிட அவர்கள் செய்யும் அத்தனை ஏற்பாடுகளையும் பார்த்த போது மொத்தமாகவே புறக்கணித்தே விட்டோம்.
தொடக்கத்தில் உள்ளே நுழைந்த போது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. மானத்தை மறைக்க தேவையில்லாத உடைகளும், பிசகி விழுந் தால் குறுத்தெலும்பு உடைந்து விடக்கூடிய ஹை ஹீல்ஸ் செருப்புமாய் நிறைய யுவதிகள் அக்கறை யாய் ஒவ்வொரு பொருட் களையும் தள்ளு வண்டியில் அள்ளிக் குவித்துக் கொண்டு இருப்பாரகள்.
அரிசி, பருப்பு, பொடி வகைகள்,எண்ணெய்கள்,காய்கறிகள் இவை மட்டுமே உள்ளே நுழையும் நடுத்தர மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான சாமான்கள். மீதி உள்ள 70 சதவிகிதம் பன்னாட்டு நிறுவனங்களின் விலை கொழுத்த ஆடம்பர சமாச்சாரங்கள். வெளிநாட்டில் இருந்து வந்த பெண்மணி உள்ளே நுழைந்து விலையை யூரோவில் பெருக்கி பார்த்து விட்டு பெருங்குரல் எடுத்து கத்தாத குறை தான். அவசரமாய் வெளியே அழைத்து வந்து விட்டேன்.
முகம் துடைக்கும் சிறிய கைத்தறி துண்டுகளை மூன்றாக கட்டி வைத்து அதற்கு ஒரு அலங்காரம் செய்து ரூபாய் 79 என்று போட்டு இருந்ததை பார்த்த போது இதையும் வாங்க ஆள் இருப்பார்கள் என்ற அவர்களின் நம்பிக்கை தான் தெரிந்தது..
தொடக்கத்தில் எல்லோருமே பயந்தார்கள். சிறு வியாபாரிகள் வாழ்வில் மண் விழுந்து விடுமோ என்று? இந்த ஆரோக்கிய போட்டியை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினாலும் இவர்கள் கட்டும் மாயவலை என்பது மெதுமெது வாக நம்முடைய குரல்வளையை நெறிக்கத்தான் செய்கிறது.
தொழில் நகரங்களில் வாழும் மக்களில் நடுத்தர வர்க்கம் என்பவர்கள் பல விதங்களிலும் சிறப்பாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். நேற்று எதிர்பாரத விதமாக உள்ளே சென்ற போது வாங்க வந்தவர்கள் மூன்று பேர்கள். எடுத்துக் கொடுக்க இருந்தவர்கள் பத்து பேர்கள். உள்ளே இருந்தவர் மிகுந்த கவலையாய் சொல்லிய விஷயம்.
" ஏற்கனவே கூட்டம் இல்லாத காரணத்தால் மோர் என்ற வணிக அங்காடியை மூடி விட்டார்கள். இதையும் விரைவில் மூடி விடுவார்கள் என்றே பயந்து கொண்டே தான் ஒவ்வொரு நாளும் வருகின்றோம்."
"விலை என்பது வாங்குபவர்களுக்கு வசதியாய் இருக்க வேண்டும். தரம் என்பது அடுத்த முறையும் வரவழைக்க வேண்டும்"
இன்றைய ஆடை உலகின் அவஸ்த்தைகளும் இங்கிருந்து தான் தொடங்கு கிறது. ..
இன்று திருப்பூரில் பழைய பெருச்சாளிகள் பழங்கதைகளையே நினைத்துக் கொண்டு வங்கிக்கு பயந்து கொண்டு வாழும் வறட்டுக் கௌரவ வாழ்க்கை தான் சிறு தொழில்களிலும் கால் பதிக்கும் ரிலையன்ஸ்க்கும் எதிர்காலத்தில் பரிசாக கிடைக்கும். ஏற்கனவே ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க அனுபவம் பலருக்கும் பல பாடங்களைத் தந்தது என்பதை இங்கு குறிப்பிடலாம்?
இதுவரையிலும் என்னுடன் தொடர்ந்து பயணித்து வந்து, ஆடை உலகத்தின் நீள அகலங்களை வாசித்தவர்களுக்கு ஒலி ஒளி அனுபவமாக ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் செயல்பாடுகளை தனித்தனியாக கோப்பாக தரலாம் என்று நினைத்து உள்ளேன்.
உங்கள் புரிதல்களை தெரியப்படுத்துங்கள்.
