அந்த 42 நாட்கள் - 13
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 3 வரை)
நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் "பின்னலாடை நிறுவனங்களை மூடி ஒத்துழைப்பு தாருங்கள்" என்று அழைப்பு விடுத்தார்.
முதலாளி சமூகம் அதன் பிறகே சற்று அசைந்து கொடுத்தது. எடப்பாடி 144 என்றார். விஜயபாஸ்கர் " நோய்த் தொற்றுள்ளவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் அவரவர் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. அரசின் உத்தரவு. மீறுவது தண்டனைக்குரிய குற்றமென்று" இறுக்கம் காட்டினார். நடக்கப் போகும் விபரீதத்தை உணராத சமூகம் சிலிர்த்தது. பறக்கத் தொடங்கியது. பேருந்துகளை நோக்கிப் பாயத் தொடங்கியது. நிரம்பி வழிந்தது. தனியார் பேருந்து கட்டணக் கொள்ளையர்கள் உருவானார்கள். அரசுப் பேருந்து எண்ணிக்கையை ஏன் குறைந்தார்கள் என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை.
முதலாளி சமூகம் அதன் பிறகே சற்று அசைந்து கொடுத்தது. எடப்பாடி 144 என்றார். விஜயபாஸ்கர் " நோய்த் தொற்றுள்ளவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் அவரவர் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. அரசின் உத்தரவு. மீறுவது தண்டனைக்குரிய குற்றமென்று" இறுக்கம் காட்டினார். நடக்கப் போகும் விபரீதத்தை உணராத சமூகம் சிலிர்த்தது. பறக்கத் தொடங்கியது. பேருந்துகளை நோக்கிப் பாயத் தொடங்கியது. நிரம்பி வழிந்தது. தனியார் பேருந்து கட்டணக் கொள்ளையர்கள் உருவானார்கள். அரசுப் பேருந்து எண்ணிக்கையை ஏன் குறைந்தார்கள் என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை.
