நல்ல கருத்து
சமூக சிந்தனை
தார்மீக கோபம்
ஒன்று சேர்த்து
எழுதியதில் பரமதிருப்தி.
எழுத உதவிய புத்தகம்
கசங்கிகிடந்தது.
அட.............
தேடிய
பொருத்தமான படங்கள்
கூகுளில் சிரித்தது.
எழுதி
வெட்டி ஒட்டி
மாற்றி.
கோர்த்து
பொருத்தியாகிவிட்டது.
இடுகையை
திரட்டியில் சேர்த்துவிட்டு
எழுத மறந்த
வார்த்தையை
மறுபடியும் உள்நுழைந்து
மறக்காமல் எழுதினேன்.
அம்மா தாயே மகராஜா
மறக்காதீங்க
ஓட்டுப் போடுங்க.....
ஓட்டுப் போடுங்க...