கடந்த மூன்று நாட்களாக பிஎஸ்என்எல் சேவை அதளபாதாளத்தில் உள்ளது. இணைப்பு உள்ளது ஆனால் வேகம் இல்லை. பைபர் கணக்கு அனைத்தும் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஆமை போல நகர்கின்றது. காரைக்குடிக்குப் பேச முடியவில்லை. இராஜபாளையத்திலிருந்து அழைத்தவர் குரல் எக்கோ போல அங்கங்கே கேட்கிறது. பிரிபெய்டு ல் பிம் செயலி செயல்படவில்லை. எப்போதும் எனக்கு கோபம் வரும். அதிகாரியை உடனே அழைப்பேன். ஆனால் தற்போது ஓரளவுக்குப் புரியத் தொடங்கிய காரணத்தால் பின்னால் உள்ள காரணங்கள் ஒவ்வொன்றையும் வரிசையாகத் தேடித் தேடி படித்து வருகின்றேன்..
